பொருளடக்கத்திற்கு தாவுக

சுந்தர ராமசாமியின் “நினைவோடை – ஜீவா”

by மேல் April 25, 2011

சுந்தர ராமசாமி சில ஆளுமைகளை – கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, எழுத்தாளர்கள் க.நா.சு., சி.சு. செல்லப்பா, நண்பர் கிருஷ்ணன் நம்பி மற்றும் சிலரைப் பற்றிய தன் நினைவுகளை நினைவோடை என்ற சீரிஸில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எல்லாம் சின்ன சின்ன புத்தகங்கள், சுலபமாக ஒரு இருபது முப்பது நிமிஷத்தில் படித்துவிடலாம். இவை எதுவும் வாழ்க்கை வரலாறு இல்லை. சுந்தர ராமசாமிக்கு அவர்களோடு இருந்த தொடர்பு, சுராவின் கண்ணில் இவர்கள் என்றுதான் இருக்கிறது.

ஜீவாவைப் பற்றி என் தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஓரளவு தலைவர்கள், சமகால தமிழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ள எனக்கே கூட ஜீவா ஒரு பேர்தான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என்ன சாதித்தார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டாரா என்பது கூடத் தெரியாது. சுரா ஜீவாவின் ஆளுமையை சுலபமாகக் காட்டிவிடுகிறார்.

ஜீவாவின் பங்களிப்பு ஒரு தொழிற்சங்கவாதி என்றோ, அறிவுஜீவி என்றெல்லாம் இல்லை. அவர் ஒரு people person. எல்லாருடனும் கலந்து பழகுபவர். பேச்சாளர். அதுவும் அன்றைக்கு மக்கள் மனதை கவரக் கூடிய விதத்தில் பேசுவதில் வல்லவர்கள் – அண்ணாதுரை, கருணாநிதி, ம.பொ.சி. என்று பலர் இருந்தார்கள். இவர் அவர்களிலேயே சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். கூட்டத்தை கவரக்கூடிய charisma உள்ளவர். தான் சித்தாந்தத்தை கரைத்துக் குடித்தவன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. எப்பேர்ப்பட்டவனுக்கும் ஏதோ தெரிந்திருக்கும், அதைப் பற்றி பேச வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். வரட்டு சித்தாந்தத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். உண்மையிலேயே இவரை மாதிரி ஆளுக்காகத்தான் ஓட்டு விழும். மனிதர்களின் இதயத்தை தொடக்கூடியவர். நல்ல மனிதர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஆனால் இவர் மாதிரி ஆட்களின் பங்களிப்பு வெகு விரைவில் மறந்துவிடும். அவரைப் பார்த்துப் பேசி பழகி பேச்சைக் கேட்டவர்களுக்குத்தான் நினைவிருக்கும். அவரது legacy என்று சொல்ல அந்த நினைவுகளைத் தவிர வேறு எதுவுமில்லை. அந்த நினைவுகளைத்தான் சுரா பதிவு செய்திருக்கிறார்.

சுரா கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்திருக்கிறார். அதற்கு ஜீவா ஒரு முக்கிய காரணம். சின்ன வயது சுராவுக்கு ஜீவா ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியோடு கசப்பு ஏற்பட்ட பிறகும் ஜீவா இவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். கடைசி வரை நல்ல உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை சிறந்த, ஆனால் சிம்பிளான கோட்டோவியம் மாதிரி இங்கே காட்டி இருக்கிறார்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நாற்பது ரூபாய். புத்தகத்தின் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.

ஜீவாவைப் பற்றி ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு வர வேண்டும். அதற்கு தகுதியானவர் அவர் என்று அவரைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கே தெளிவாகத் தெரிகிறது. இப்போதைக்கு இதையாவது படியுங்கள்!

பக்சின் குறிப்பை இங்கே படிக்கலாம்.

பிற்சேர்க்கை: கே. ஜீவபாரதி ஜீவா எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்திருக்கிறார். அதைப் படித்தபோது ஜீவா அலங்காரப் பேச்சு, எதுகை மொகனை, இவற்றை எல்லாம் நம்பியவர் இல்லை என்று தெரிகிறது. விவரங்களைச் சேகரித்து நிறைய பேசி இருக்கிறார். புத்திசாலித்தனமாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுகளுக்கு இன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்னையில் ட்ராம் சர்வீஸ் நின்றபோது தொழிலாளர்கள் பட்ட பாடு என்பதில் இன்றைய மனிதர்களுக்கு என்ன இருக்கிறது?

கருத்துத் தெரிவிக்கவும்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s