பொருளடக்கத்திற்கு தாவுக

அ.கா. பெருமாளின் “சுண்ணாம்பு கேட்ட இசக்கி”

by மேல் அக்டோபர் 15, 2011

படிக்க விரும்பும் டாப் 15 தமிழ் புத்தகங்களில் சுண்ணாம்பு கேட்ட இசக்கியும் ஒன்று. நண்பர் ராஜனிடம் கிடைத்தது.

சு.கே. இசக்கியில் தெளிவாகத் தெரிவது அ.கா. பெருமாளின் உழைப்பு. தணியாத ஆர்வம். தமிழர்களின் – குறிப்பாக நாஞ்சில் நாட்டு பழக்கங்களை, சடங்குகளை, கதைப் பாடல்களை, தெய்வங்கள் பற்றிய தொன்மங்களை, கலைகளைப் பற்றிய விவரங்களை கையிலிருந்து பணம் செலவழித்தாவது பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற வெறி. கர்ப்பிணியின் பிணத்தை அறுத்து குழந்தையை வெளியே எடுக்கும் முறை சில சாதியினரில் உண்டாம். அது உண்மைதானா, பார்க்க முடியுமா என்று மனிதர் அலைந்து திரிந்து கடைசியில் பக்கத்தில் நின்று பார்த்தே விட்டார்.

இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டின் செல்வங்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படிப்பட்ட சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது பெரிய போராட்டமாக இருப்பது தமிழர்களின் துரதிருஷ்டம். ஒரு பத்மஸ்ரீயாவது இத்தனை நாளில் கிடைத்திருக்க வேண்டாமா?

எனக்கு அதிகமாக எழுதப் பிடிக்கவில்லை. அவரது ஆர்வமும் உழைப்பும் நிறைவைத் தந்தது. அந்த நிறைவை விவரிக்க முடியும் என்று தோன்றவில்லை. கட்டாயம் வாங்கிப் படியுங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அ.கா. பெருமாள் தொகுத்த சில நாட்டார் தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

தொடர்புள்ள சுட்டி: சுரேஷ் கண்ணனின் பதிவு

4 மறுமொழிகள்
  1. சிறப்பான அறிமுகம் ஆர்.வி. நண்பர் சுரேஷ் கண்ணனின் வாசிப்பனுபவம் இங்கே…

    http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_8015.html

  2. இவருடைய தாணுமாலயன், திருவட்டாறு ஆலயங்கள் புத்தகங்கள் படித்திருக்கிறேன். சுண்ணாம்பு கேட்ட இசக்கி இனிமேல் தான் வாங்கவேண்டும்.

  3. ஸ்ரீனிவாஸ், ரதன்வேல், சு.கே. இசக்கி பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி! சுட்டியை இப்போது இணைத்துவிட்டேன். கோபி, மற்ற புத்தகங்களை நான் படித்ததில்லை.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s