வி.எஸ். திருமலை என்பவர் எழுதிய அடுத்த வீட்டுப் பெண் என்ற கதையை டோண்டு ராகவன் தளத்தில் படித்தேன். ட்ரங்க் கால் புக் செய்வது, ஃபோன் பேசும்போது எத்தனை நிமிஷம் ஆகிறது என்று ஒரு கண் வைத்துக் கொண்டே பேசுவது, கடிதம் எழுதுவது, ஃபோனில் கத்திப் பேசுவது, இருநூறு ரூபாய் இன்க்ரிமென்ட் மாதிரி ஒரு காலகட்டத்தை நினைவுபடுத்திய கதை. பத்திரிகையில் வந்ததோ என்னமோ தெரியாது, ஆனால் ஒரு காலத்தில் சாவி, துமிலன், நாடோடி, பாக்கியம் ராமசாமி, கடுகு மாதிரி பெரிய கைகள் எழுதி பத்திரிகைகளில் வரும் நல்ல நகைச்சுவைச் சிறுகதைகளை நினைவுபடுத்தியது.
திருமலை டோண்டுவின் உறவினராம். இப்போது இறந்துவிட்டாராம்.
படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கதை சுட்டிகள்
தொடர்புடைய சுட்டிகள்:
டோண்டு ராகவனின் தளத்தில் அடுத்த வீட்டுப் பெண் சிறுகதை
வி.எஸ். திருமலையின் இன்னொரு சிறுகதை
திருமலையின் மற்றும் ஒரு சிறுகதை
இன்னும் ஒரு கதை – மாயக்குதிரை
மற்றொரு கதை – கிருஷ்ணன் பொம்மை
அதிசயச் சாமியார்
மிக்க நன்றி ஆர்.வி. அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
LikeLike