(இது ஒரு மீள் பதிவு. முன்பு கூட்டாஞ்சோறு தளத்தில் வந்தது.)
தான் வாழும் சூழ்நிலையின் பாதிப்பினால் ஒரு எழுத்தாளருடைய மொத்த கொள்கையும் உருவாகலாம் என்பதற்க்கு அய்ன் ராண்ட் ஒரு தலைச்சிறந்த உதாரணம். ரஷ்யாவின் கொள்கைகள் மேலிருந்த வெறுப்பு objectivism என்னும் தத்துவ சிந்தனையில் முடிந்தது. அவருடைய எழுத்தின் உக்கிரம் சுதந்திரமாக இயங்கமுடியாத சூழ்நிலையை புறக்கணிப்பதிலும், தனி மனிதர்களின் வாழ்வின் குறிக்கோள் தங்களை சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பதிலும் தான் மையம் கொண்டிருந்த்த்து. Atlas Shrugged, The Fountain Head போன்ற நாவல்கள் இந்த கொள்கையை பறைச்சாற்றும் தத்துவ நூலகள் போல அமைந்துள்ளது.
இந்தியா போன்ற சமுதாய முன்னேற்ற மைய நோக்கை கொள்கையாகக் கொண்ட அரசாங்கத்தின் கீழுள்ள சமூகத்தில் வாழும் நமக்கு இது போன்ற அய்ன் ராண்ட் நாவல்கள் ஏற்புடையாதாக இருப்பதில்லை. அதனால் இவருடைய கொள்கைகளை புரிந்து கொள்வதற்க்கும் சிரமமாக இருக்கலாம். மேலும் புரியாத கொள்கைகளை கொண்ட இந்த நாவல்களை படிப்பதற்கும் சிரமமாக இருக்கலாம்.
அவருடைய கொள்கைகளை அறிந்து கொள்வதற்கும், சரி வர புரிந்து கொள்வதற்க்கும் ஆன்த்தம் ஒரு primer ஆக விளங்குகிறது. இது அய்ன் ராண்டின் மிக எளிமையான நாவல். ஒரு கற்பனை சோசியலிச சமுதாயத்தை அறிமுகப்படுத்தி, தனி நபர் என்பவரின் அடையாளம் இழக்கபட்ட மற்றும் தனிநபர் என்ற ஒரு அடையாள்மே இல்லாத அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒரு தனி நபரை அடையாளம் அடைய செயவதே கதையின் மையக் கரு. மேலும் Collectivism vs Individualism எனபதை அடிபபடை வாதமாகக் கொண்டு பின்னப்பட்ட நாவல்.
இலக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, ஆன்த்தம் நாவலில் ஒட்டுமொத்த சமுதாய இயந்திரத்தை எதிர்த்து தனிநபரின் சிறப்பை சாதுர்யமாக உயர்த்தி சொல்வது அய்ன் ராண்டின் சிறப்பு. இயந்திர தனமாக மக்கள் செலுத்தப்படுகிறார்கள். இயந்திரத்தனமாக பிறப்பது முதல், படிப்பது, பொழுதுபோக்குவது, வேலை நிர்ணயிக்கப்படுவது, ஏன் சிந்தனை (உயிர் வாழ்விற்கு தேவைப்படும் அடிப்படை சிந்தனை மட்டுமே) செய்வதுகூட இயந்திர தனமாகத்தான். இப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமைப்பில் தனி நபர் சார்ந்த முன்னேற்றம் குற்றமாக கருதப்படும் பொழுது அந்த குற்றத்தில் சுய பிரஞ்கையுடன் ஈடுபடலாம் என்கிறார். மேலும் அது தான் தனி நபர் தர்மம் என்கிறார்.
படிப்பதற்கு அய்ன் ராண்டின் கொள்கைகள் நம்பிக்கையும் எழுச்சியும் ஊட்டுவதாக இருந்தாலும், சராசரி மனிதர்களே அதிகமாகக் கொண்ட சமுதாயத்தில் வாழும் இப்படிப்பட்ட சராசரி மனிதர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு இந்தக் கொள்கைகள் சாத்தியமானதா என்பது நமக்கு எப்பொழுதும் எழும் கேள்வி. அய்ன் ராண்ட் இந்த சராசரி மனிதர்களை பற்றி கவலையில்லை என்று தான் ஒரு முகவுறையில் சொல்கிறார். (கவலையில்லை என்றால் அவர்களுக்கு என்ன தீர்வு என்ன என்பது புரியவில்லை. தீர்வைப் பற்றி கவலை பட வேண்டிய அவசியம் தனி மனிதனுக்கு இல்லை என்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.). மேலும் அவருடைய சிந்தனை எல்லாம் அறிவுஜீவிகள் பற்றியே என்றும் இது அறிவுஜீவிகளின் உலகம் மட்டுமே என்பதும் சற்று நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் அய்ன் ராண்ட் பற்றி எழுதியுள்ளது கீழே உள்ள சுட்டிகளில் பார்க்கலாம்.
Ayn Rand 1
Ayn Rand 2
Ayn Rand 3
Ayn Rand 4
அய்ன் ராண்ட் பற்றி மேலும் இங்கே பார்க்கலாம்.