அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து இன்னும் ஒரு சிறுகதை.
எனக்கு மிகவும் பிடித்த கு.ப.ரா. சிறுகதை கனகாம்பரம்தான். நேரடியாக எழுதப்பட்ட கதைதான். ஆனாலும் மனிதர்களின் அந்தராத்மாவை நுட்பமாக படம் பிடித்துக் காட்டிவிடுகிறார்.
கு.ப.ரா.வின் சில சிறுகதைகள் மட்டுமே உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. அவர் எழுதிய நல்ல சிறுகதைகளின் எண்ணிக்கை குறைவே. ஆனாலும் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளரே; அதற்கு காரணம் அவரது உச்சத்தைத் தொட்ட சிறுகதைகளின் தரம் மட்டுமல்ல; அவரது சிறுகதைகளின் ambience-உம் கூடத்தான். ஒரு மாபெரும் சமூக மாற்றம் – ஐரோப்பிய விழுமியங்களை நாம் அறிந்து கொள்ளும், ஏற்றுக் கொள்ளும், நமது மத்திய தர வர்க்கமும் அதன் விழுமியங்களும் உருவாகும் தருணம் – நடக்கும் தருணத்தில் அவர் எழுதினார். பழைய விழுமியங்களை கைகழுவிவிட்டு தான் ஒரு புரட்சிக்காரன் என்று காட்டிக் கொள்ளும் ஆர்வம், அதே நேரத்தில் ரத்தத்தில் ஊறிய பழைய விழுமியங்களை உண்மையாக கைவிட முடியாத மனநிலையைக் காட்ட விரும்பினார். அது இந்த சிறுகதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. எனக்கு அவரே அந்த மாதிரி இரண்டும்கெட்டான் நிலையில்தான் இருந்தார் என்றே தோன்றுகிறது. காமத்தை பின்புலமாக வைத்து பல கதைகள் எழுதினாலும், அவருடைய உள்மனதில் platonic, உன்னத காதல் என்ற ஒரு பிம்பம் இருந்திருக்க வேண்டும். (நூருன்னிசா கதை, ஏமாற்றம் அளித்த காணாமலே காதல் சிறுகதைத் தொகுப்பு)
எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆச்சரியம் இது ஜெயமோகனின் பெரிய லிஸ்டில் கூட இடம் பெறவில்லை. என் anthology-யில் இடம் பெறும்.
அலையன்ஸ் பதிப்பகம் கு.ப.ரா.வின் எல்லா எழுத்துகளையும் – மொழிபெயர்ப்புகள் உட்பட – தொகுத்து வெளியிட்டிருக்கிறது.
One thought on “கு.ப.ரா.வின் “கனகாம்பரம்””