இந்த சீரிஸின் முதல் பதிவில் தமிழின் முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி என்று சொல்லி இருந்தேன். படிப்பதை விடுங்கள், நான் இந்த சீரிசை எழுத ஆரம்பிக்கும் வரை இந்த நாவலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. மேலும் சில தகவல்கள்.
1895-இல் இலங்கை (திரிகோணமலை) எழுத்தாளரான த. சரவணமுத்துப் பிள்ளை என்பவர் மோகனாங்கி என்ற ஒரு நாவலை எழுதினாராம். இது மதுரை-தஞ்சையில் சொக்கநாத நாயக்கர் ஆட்சியை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட நாவலாம். பிள்ளை சென்னை மாநிலக் கல்லூரியில் சரித்திர ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாராம். அப்போது கிடைத்த தகவல்களை வைத்தே இந்த நாவலை எழுதினார் என்று தெரிகிறது.
சோ. சிவபாதசுந்தரம் இதைப் பற்றி 1972-இல் “தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்” என்ற பேரில் ஒரு ஆய்வுப் புத்தகம் எழுதி இருக்கிறாராம்.
இந்நாவலில் வரலாற்றுச் சூழல் ஓரளவு இடம்பெற்ற போதும் சொக்கநாதன், மோகனாங்கி ஆகியோருக்கிடையிலான காதல் நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான சூழ்ச்சிகளும் சீர்திருத்தக் கருத்துக்களும் மேலோங்கி நிற்கின்றன. நாவல் என்ற பெயருடன் வெளிவந்த போதும் நாவலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டு விளங்கவில்லை. ஆசிரியரால் கையாளப்பட்ட நடை சிற்சில இடங்களில் எளிமையும் பேச்சுவழக்குச் சொற்களும் காணப்பட்டாலும் நாவலிற் பெரும்பகுதி வாசகர் எளிதிற் புரிந்து கொள்ள முடியாத கடின சந்தி விகாரங்களுடன் கூடிய சிக்கல் நிறைந்த நீண்ட வசனங்களையும் கடினமான சொல்லாட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
என்று கலாநிதி க.அருணாசலம் சொல்கிறாராம். யார் இந்த கலாநிதி க. அருணாசலம்? யாருக்குத் தெரியும்? நாவலைப் படித்திருக்கிறார், அதுவே பெரிய விஷயம். 🙂
மேலும் சுட்டிகள்:
ஸ்ரீதரனின் பதிவு
மோகனாங்கி பற்றிய விக்கி குறிப்பு
மின்னூல் – சில்லையூர் செல்வராசன் எழுதிய “ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி” (1967)
சீரிஸின் முந்தைய பகுதிகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்: 1. கல்கி பாணி, 2. கல்கியின் வாரிசுகள், 3. படிக்க விரும்புபவை
4. பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், 5. பாலகுமாரனின் சரித்திரக் கதைகள்
நன்றிகள்
LikeLike
ராம்ஜி மனமுடைந்து கேட்கிறேன். யாருக்கு நன்றி ? எதுக்கு நன்றி?
LikeLike
தனது துக்கத்தைப் பகிர்ந்ததற்காய் ஜெமோவுக்கு நன்றிகள்))))
LikeLike
நன்றி
LikeLike
very nice……thanks
LikeLike
ப்ரிஷில்யா, நல்ல வேளை ஜெயமோகன் நீங்கள் நன்றி சொன்னதை பார்க்கவில்லை. 🙂
LikeLike