கந்தர்வன் எழுதிய இந்தக் கதையின் சுட்டி நண்பர் திருமலைராஜனுக்காக. மதமாற்றத்தைப் பற்றி பெரிய கவலைகளும் கோபமும் உள்ளவர் அவர்.
மரியம்மா டீச்சர் போன்றவர்களை (ஓரிருவரே) நானே பார்த்திருக்கிறேன். கந்தர்வனின் தத்ரூபமான சித்தரிப்பால் இவரை, இவரது மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. டீச்சரை அவர் “வில்லியாக” சித்தரிக்கவில்லை, ஆனால் அவரது அதீத நம்பிக்கையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். திறமையாக எழுதப்பட்ட கதைதான், ஆனால் என் anthology-யில் வராது.
ஆனால் நான் படித்த பள்ளிகளில் – கிருஸ்துவ பள்ளிகளில் கூட – மத மாற்றத்துக்கான அழுத்தம் இருந்ததில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். சின்ன அளவில் – தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ என்று சில சமயம் காலை ப்ரேயரின்போது பாட வைப்பது, எப்போதாவது பைபிள் கிளாஸ் நடத்துவது என்று சில விஷயங்கள் உண்டு. நான் படித்த கிருஸ்துவ பள்ளிகள்: செய்யூரில் ஒரு பள்ளி (பேர் நினைவில்லை), தாம்பரம் கார்லி பள்ளி, செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளி.