- மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
- தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
- சாயாவனம் – சா. கந்தசாமி சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
- மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.
- கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
- கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
- கீறல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
- புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
- பொய்த்தேவு – க.நா. சுப்ரமணியம்
- கோவேறுகழுதைகள் – இமையம் படித்ததில்லை.
‘கீறல்கள்’ என்றிருக்க வேண்டும். ஐசக் அருமைராஜன் சமூகக் கிறல்களைப் பற்றி இந்த நாவலில் விரிவாகப் பேசுகிறார்.
LikeLike
இப்போ தான கோபல்ல கிராமம் படிச்சு முடிச்சேன்..ச்சே என்ன அருமையான புத்தகம்…நான் இப்போ கி.ரா.வின் ரசிகன் 🙂
கோபல்ல கிராமம் – ஊரை சுத்தி பாத்து வந்த பிரமை
LikeLike
ஜீவி, இப்போது திருத்திவிட்டேன்.
சுரேஷ், கோபல்ல கிராமம் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!
LikeLike