கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்தா என்று போக விரும்பினாலும் நிருபமாவின் பிடிவாதத்தால் இந்தப் பிணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் ஒரு லோ கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரனைப் பிடிக்கிறார்கள். அவன் பெரிய பணக்காரன். வாழ்க்கையில் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். அவன்தான் கொலை செய்தவன் என்று சந்தேகித்தாலும் எந்த ஆதாரமும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்? “எதையும் ஒரு முறை” செய்து பார்ப்பான் என்று கணேஷ் தன் டீமை சமாதானப்படுத்துவதோடு கதை முடிகிறது.
கதையில் ஒன்றுமே இல்லை. விபசாரி, நீலப்பட references அந்தக் கால வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி இருக்கலாம். அதற்காக வலிந்து புகுத்தி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கடைசி வரி நல்ல impact உடையதுதான். ஆனால் கதையோடு முழுதாக ஒட்டவில்லை.
இதே போல கரு உள்ள இன்னொரு கதை – பேர் பாலமோ என்னவோ சரியாக நினைவில்லை – எழுதி இருக்கிறார் என்று நினைவு.
தவிர்க்கலாம். கணேஷ்-வசந்த் என்ற பேர் இல்லாவிட்டால் யாரும் இதை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை எழுபது ரூபாய்.
நட்பாஸ் தன் எண்ணங்களை இங்கே பதித்திருக்கிறார்.