தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
கவிதை என்றால் அலர்ஜி என்று அவ்வப்போது சொல்லிக் அலட்டிக் கொண்டாலும் சில கவிதைகள் மனத்தைக் கவரத்தான் செய்கின்றன. “தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று” என்ற வரிகளில் அற்ப சிரமங்களை எல்லாம் தாண்டியவன் நான் என்கிறாரே, அந்த dismissive attitude-தான் இதை உச்சத்துக்கு கொண்டு போகிறது.
எனக்கு இது ஒரு inspiring கவிதை. செக்குமாடு மாதிரி வாழ்க்கை ஆகிவிடத்தான் செய்கிறது. இந்தக் கவிதையைப் படிக்கும்போதெல்லாம் அப்படி ஆகிவிட்டோமா என்று சுயபரிசோதனை செய்து கொள்கிறேன்.
இந்த வரிகளின் உணர்ச்சியை வேறு மொழிகளில் – குறிப்பாக ஆங்கிலத்தில் – கொண்டு வரவே முடியாது என்று தோன்றுகிறது. படிப்பவர்களுக்கு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பு என்று ஏதாவது பட்டால் சொல்லுங்கள், தமிழ் படிக்கத் தெரியாத என் பெண்களுக்கும் காட்ட வேண்டும்…
நல்ல கவிதை.
LikeLike
எனக்குப் பிடித்த பாரதியார் கவிதை உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி, ரத்னவேல்!
LikeLike
Orkut, Facebook, Blogs எனப் பலர் இக்கவிதை வரிகளை Status Message-ஆக வைத்திருப்பதைக் காணலாம்..
LikeLike
Sorry unable to type tamil.We are very close through Bharathi.Thedi…Soru nitham……..is my favourite of Bharathi.
LikeLike
தங்கமணி, இருவருக்கும் ஒரே பாரதி பாடல் பிடித்திருப்பது மகிழ்ச்சி!
LikeLike
inda kavithayai itharku mun nan padithathu illai nallathoor vaippalithatharku nantri
LikeLike
சாதாரண மனிதர்களை பாரதி புறந்தள்ளி விடுகிறாறோ என்று தான் இதுவரை இதை புரிந்து கொண்டிருந்தேன்-
அந்த சாதாரணங்களில் நான் அடக்கம் என்பதால்.
தான் அற்ப சிரமங்களை கடந்தவன் என்பதை அவர் வலியுறுத்துகிறார் என்ற புதிய புரிதலால்
பாரதி என் மதிப்பில் வானளவு உயர்கிறார்.
பாரதி பற்றியோ அவர் ஏழுத்தையோ எத்தனை படித்தாலும் “போதுமெனும் பொன் செய்யும் மனது “உண்டானது இல்லை.
ஒரு சூரியன் ,ஒரு நிலவு ஒரே ஒரு பாரதி!
LikeLike
இந்திரா, பாரதியார் “அற்ப சிரமங்களை கடந்தவன்” என்று நீங்கள் சொல்லி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது…
LikeLike