பி.ஜி. வுட்ஹவுஸ் ஒரு புத்தக முன்னுரையில் விமர்சகர்கள் தான் போன நாவலில் அதே பாத்திரங்களுக்கு பேரை மட்டும் மாற்றி மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருப்பதாக விமர்சித்ததாகவும், அந்த விமர்சனத்தைத் தான் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முறை அதே பாத்திரங்களை பேரைக் கூட மாற்றாமல் அரைத்த மாவை அரைத்திருப்பவதாகவும் எழுதி இருப்பார். நா.பா.வின் புத்தகங்களும் அப்படித்தான். அதே பாத்திரங்கள் அதே சூழல்களில் மீண்டும் மீண்டும் வேறு வேறு பேர்களில் வருகிறார்கள். பொன் விலங்கின் சத்தியமூர்த்தி, பாரதி, மோகினி, குமரப்பன், கண்ணாயிரம், பூபதி, கல்லூரி முதல்வர் எல்லாரும் குறிஞ்சி மலரிலும், மூலக்கனலிலும் சமுதாய வீதியிலும் வந்தவர்கள்தான். இன்றைக்கு எதைக் கண்டு பொங்கலாம், சமுதாயத்தின் குறைகளைச் சாடலாம் என்று சிந்திப்பவர்கள்தான்.
பொன்விலங்கு 700 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைச்சுருக்கத்துக்கு 7 வரி கூட தேவைப்படாது. வழக்கம் போல சமுதாயச் சிறுமைகளைக் கொண்டு பொங்கிக் கொண்டே இருக்கும் ஹீரோ சத்தியமூர்த்தி, அவனைக் கூட இல்லை, அவன் பாதங்களைப் பார்த்ததும் காதல்வசப்படும் பாரதி, அவனால் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து காப்பாற்றப்பட்டு பின்னர் அவனைக் காதலிக்கும், அவன் காதலிக்கும் தாசி குலப் பெண் ஆட்டக்காரி மோகினி, கொஞ்சம் ஈகோ உள்ள, ஆனால் திறமையாளர்களைத் தேடிப் பிடித்து தன் கல்லூரியில் வேலை தரும் பணக்காரர் பூபதி, காதலுக்கு எதிரியாக வரும் ஜமீந்தார், கல்லூரி மாணவர்களிடையே அவன் பாப்புலாரிடியைக் கண்டு அசூயைப்படும் கல்லூரி பிரின்சிபால் என்று சொன்னாலே கதை எப்படிப் போகும் என்று யூகித்துக் கொள்ளலாம். ஜமீந்தார், மற்றும் அவரது மதியூக மந்திரி கண்ணாயிரம் சூழ்ச்சியால் சத்தியமூர்த்தி மோகினி மேல் சந்தேகப்படுகிறான், மோகினி தற்கொலை, சத்தியமூர்த்தி ஜெர்மனிக்குப் போவதோடு கதை முடிந்துவிடுகிறது.
கதை எழுதப்பட்ட காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றவுடன் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவுகள் கலையத் தொடங்கிவிட்டன. அப்போது இப்படிப்பட்ட லட்சியவாத வெளிப்படுத்துதல் செயற்கையாக இருந்தாலும் அது அந்தப் பொற்காலம் போச்சே என்று புலம்புபவர்களிடம், லட்சியவாதம் உள்ள இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கும். இன்றைக்கும் நா.பா.வை படிக்கச் சொல்பவர்களுக்கு ஒரு நாற்பது வயதாவது இருக்கும். ஐமபது வயதுக்காரரான ஜெயமோகன் இதை சிறந்த வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். 🙂
ஜெயமோகன் சிபாரிசு செய்த நா.பா. நாவல்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டேன். (ராணி மங்கம்மாள், மணிபல்லவம், சமுதாய வீதி, குறிஞ்சி மலர், பொன்விலங்கு) இதற்கு மேல் நான் படிக்க விரும்புவது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது அதற்கு எழுந்த எதிர்ப்பைப் பின்புலமாக வைத்து அவர் எழுதிய ஒரு நாவலும் (என்ன பேர் என்று யாருக்காவது நினைவு வருகிறதா? ஹீரோயின் பேர் கண்ணுக்கினியாள், ஒரு சைக்கிள் கடை அண்ணாச்சி முக்கிய பாத்திரம்), மூவரை வென்றான் என்ற சிறுகதைத் தொகுப்பும் மட்டுமே. சிறு வயதில் இவை இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன.
நா.பா. பெரிய கனவுகள் கண்டு அதில் ஒரு சிறு பகுதியைக் கூட செயல்படுத்த முடியாமல் போனவர். மணிபல்லவம் போன்ற பெரிய கனவுகளுக்காக அவரைப் பாராட்டினாலும் ஒரு எழுத்தாளராக அவரை நிராகரிக்கத்தான் வேண்டி இருக்கிறது. அவரது சிறந்த நாவலாக நான் கருதுவது ராணி மங்கம்மாளைத்தான். ஆனால் குறிஞ்சி மலர்தான் மிகவும் பாப்புலரான நாவலாக இருக்க வேண்டும்.
நா.பா.வின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவரிடம் எந்த போலித்தனமும் இல்லை. அவர் உண்மையிலேயே லட்சியவாதத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அவர் படைப்புலகம் எதிர்பார்த்தபடியே நடக்கும் ஃபார்முலா பாத்திரங்களால் நிறைந்தது. செயற்கையான சம்பவங்கள், பாய்ஸ் கம்பெனி நாடகம் போன்ற கதைப்பின்னல் ஆகியவற்றை அவரால் தாண்ட முடியாதது துரதிருஷ்டமே.
தொடர்புடைய சுட்டிகள்:
சென்னை லைப்ரரி தளத்தில் நா.பா.வின் நூல்கள்
ராணி மங்கம்மாள்
மணிபல்லவம்
சமுதாய வீதி
குறிஞ்சி மலர்
Hello R.V,
Though I read பொன் விலங்கு several decades back during high school days.
As my father happen to be Tamil teacher and recently someone in my school alumus remembered my father and correlates பொன் விலங்கு. I surfed the net to confirm few things and landed your pages on பொன் விலங்கு .
You were asking the name of the novel where அண்ணாச்சி, கண்ணுக்கினியாள், it is சத்திய வெள்ளம்
தோலிலே பரிவட்டம்
தொங்கும் தரைமட்டம்
இதுதான் மாவட்டம் 😂🤣 nice நா.பா’s work 👏
LikeLike
Hello R.V, I read பொன் விலங்கு several decades back during high school days.
As my father happen to be Tamil teacher and recently someone in my school alumus remembered my father and correlates பொன் விலங்கு. I surfed the net to confirm few things and landed your pages on பொன் விலங்கு .
You were asking the name of the novel where அண்ணாச்சி, கண்ணுக்கினியாள், it is சத்திய வெள்ளம்
தோளிலே பரிவட்டம்
தொங்கும் தரைமட்டம்
இதுதான் மாவட்டம் 😂🤣 nice நா.பா’s work 👏
LikeLike