விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம்)

“வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்

சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுரம்  நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.

ஓய்வெனும் மரணம்
இரவெனும் இடைவெளி
ஒரு நூறு பாதங்கள் ஊன்றி
வானாகிக் கவிழ்ந்து
வெளியில் தலைதூக்கி
எண்ணற்ற முலை நுனிகளால்
அமுதூட்டும் கருணை.

தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன.

இந்திய காவிய மரபின் வளமைகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் ஆசிரியர். இந்திய காவிய மரபைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதி ‘skip’.

தொடரும்…

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம்)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு
விஷ்ணுபுரம் – தத்துவம்

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

5 thoughts on “விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

  1. விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு.

    பக்கங்கள் பல எழுத வேண்டிய படைப்பாற்றல் அது. விஷ்ணுபுரத்தின் விவரிப்பு முதல் பிரளயம் வரை கவியின் தாக்கம் மிக அலாதியானது. வரிகளில் விளங்காததை கவிதையில் விளக்குவது அற்புதமானது.

    நிறைய எதிர்பார்தது இணைப்பை சொடுக்கினேன். ஏமாற்றிவிட்டீர்களே நண்பரே.

    Like

  2. @ஜெகதீஸ்வரன், மிக சமீபத்தில்தான் தமிழ் செவ்வியலாக்கங்களை வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்..சங்க இலக்கியத்திலும், கம்ப ராமாயணத்திலும் ஒரு 20% ஆவது புரிந்துகொள்ள எப்படியும் மூன்று வருடங்களாவது தேவை..தற்போதைக்கு கவித்துவம், காவிய மரபு பற்றி அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இந்தப் பகுதி எழுதுவது கடினம் நண்பரே. இதை படித்து வேறு யாராவது முயற்சிப்பார்கள் என்று எண்ணிதான் பதித்தேன்.

    சில தொடர்புடைய சுட்டிகள் கீழே

    விஷ்ணுபுரத்தின் கவிதை பற்றிய கடிதம் : http://www.jeyamohan.in/?p=829
    விஷ்ணுபுரத்தின் செவ்வியல் : http://www.jeyamohan.in/?p=486

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.