முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங் அறிவாளி, நல்ல நிர்வாகி, தனிப்பட்ட முறையில் மிக நேர்மையானவர் என்பதை அவரது எதிரிகள் கூட ஒத்துக் கொள்வார்கள். பல திறமைகள் இருந்தும் அவர் 2009-2014 காலகட்டத்தில் – 2G ஊழல், நிலக்கரி ஊழல் என்று பல – கேவலப்பட்டார், நாடே அவரை கரித்துக் கொட்டியது என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவரது ஆளுமையை 2004-2008 காலகட்டத்தில் அவரது ஊடக ஆலோசகராக பணியாற்றிய சஞ்சயா பாரு அவரது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார்.
பாரு வசதியான மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா ஆந்திர மாநில அரசில் உயர் அதிகாரி, பல பெரும் தலைகளோடு கனெக்ஷன் உண்டு. எகனாமிக் டைம்ஸ் ஆசிரியராக பணி புரிந்தவரை சிங் 2004-இல் தன் ஊடக ஆலோசகராக பணி புரியுமாறு அழைத்திருக்கிறார்.
2004-இல் சிங் அவரே சொல்லிக் கொண்ட மாதிரி ஒரு “Accidental Prime Minister”. சோனியாவால் பிரதமராக பதவி ஏற்க முடியவில்லை, இரண்டாம் நிலை தலைவர்களில் இவர்தான் பிரனாப் முகர்ஜியை விட, அர்ஜுன் சிங்கை விட சரிப்படுவார் என்று இவரை பிரதமர் ஆக்கி இருக்கிறார். சிங்கும் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார், சோனியாவின் விருப்பப்படியே நடக்க முயற்சிக்கிறார். ஆனால் வெளியுறவுக் கொள்கைகளில் மட்டும் தன் முத்திரையைப் பதிக்க முயற்சிக்கிறார். அமெரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தம் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2009-இல் சிங் “நேக் ஆத்மி” என்று பலரும் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டிருக்கின்றனர்.
ஆனால் சிங் தன் பிரதமர் பணியை மிகவும் குறுகியதாகவே வரையறுத்துக் கொண்டிருக்கிறார். 2009-இல் அவர் லோக்சபாவுக்குப் போட்டியிட வேண்டும் என்று பாரு, அவரது மனைவி உட்பட பலரும் வற்புறுத்தி இருக்கிறார்கள். சிங் அதற்காக முயற்சித்த மாதிரியே தெரியவில்லை. அப்படி அவர் போட்டி இட்டிருந்தால் அது அவரது legitimacy-ஐ வலுப்படுத்தி இருக்கும். மந்திரிகள் ஊழல் செய்தாலும் அவர்களை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் தனக்கில்லை; அது சோனியாவின், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பொறுப்பு என்று நினைத்திருக்கிறார். பாருவுக்கே இரண்டாம் முறை பிரதமர் ஆனபோது முதலில் மீண்டும் வேலைக்கு வா என்று அழைத்திருக்கிறார், பிறகு சோனியா எதிர்ப்பினால் ஜகா வாங்கி இருக்கிறார். ஒரு பிரதமர் தன் உதவியாளராக யாரை நியமிக்கலாம் என்ற அதிகாரத்தைக் கூட செயல்படுத்தவில்லை என்றால் அவரால் என்ன முடிவு எடுக்க முடியும்? சோனியா “All power and no responsibility” என்ற நிலையிலும் சிங் “All responsibility and no power” என்ற நிலையிலும் ஐந்து வருஷத்தை ஓட்டி இருக்கிறார்கள். முதல் முறை வெளியுறவுக் கொள்கையிலாவது தன் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று முயற்சித்தவர் இரண்டாம் முறை சும்மா உட்கார்ந்துவிட்டு வந்திருக்கிறார்.
பாருவின் புத்தகம் இந்தத் தேர்தலில் சிங்கின் இமேஜை இன்னும் கொஞ்சம் கீழே தள்ளி இருக்கிறது. ஆனால் பாருவே சொன்ன மாதிரி பாரு மன்மோஹன் சிங் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிறார். இத்தனை தவறுகள் இருந்தாலும் அவர் ஒரு நல்ல பிரதமரே, முதல் முறை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுத் துறைகளில் சாதித்திருக்கிறார் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால் இதில் தெரியும் சிங் தனக்குக் கொடுக்கப்படும் கடமைகளை திறமையாக நிறைவேற்றக் கூடியவர். ஆனால் யாராவது கொடுக்க வேண்டும், அவராகவே அதை வரையறுத்துக் கொள்ள மாட்டார். தலைமைப் பண்பு என்பது அவரிடம் இல்லை. இது என் ஏரியா, நீ உள்ளே வராதே என்று சொல்லும் மனோதிடம் அவருக்கு இல்லை. அவர் ஒரு சிறந்த follower, ஆனால் நல்ல leader இல்லை. சோனியா அவரது ஆளுமையை சரியாகவே கணித்திருக்கிறார்.
புத்தகத்தின் பெரிய பிரச்சினை சுவாரசியக் குறைவு. சிங்கைப் பற்றி விவரிப்பது புத்தகத்தில் அறுபது சதவிகிதம்தான் இருக்கும். இருப்பதே 200 பக்கம், அதில் ஒரு நூறு பக்கமாவது பாருவின் இளமைப் பருவம், யாருக்கு எந்த ரூம் என்ற சண்டை, protocol பிரச்சினைகள் என்றெல்லாம் போகிறது.
நம் ஊரில் தலைவர்கள் பற்றி ஆவணப்படுத்தும் முயற்சிகள், நடுநிலையான ஆராய்ச்சிகள் மிகக் குறைவு. தலைவர்கள் பற்றி வந்தால் வாராது போல வந்த மாமணி இவர் என்று உணர்ச்சிவசப்படும் hagiographies-தான் வெளிவருகின்றன. இது குறைகள் உள்ள புத்தகம்தான், ஆனால் hagiography அல்ல. இது போன்ற புத்தகங்கள் தேவை. அமெரிக்காவில் அனேகமாக ஒவ்வொரு ஜனாதிபதியைப் பற்றியும் இப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய வெளிவரும். சில புத்தகங்களில் சாய்வு நிலை தெரியும். உதாரணமாக ஆர்தர் ஷ்லெஸ்ஸிங்கர் ஜூனியருக்குகென்னடி மீது பெரும் ஈர்ப்பு உண்டு, ஆனால் அவர் எழுதிய 1000 Days புத்தகம் கென்னடியின் புகழ் மாலை இல்லை. நம்மூரில் சர்வபள்ளி கோபால், ராமச்சந்திர குஹா, ராஜ்மோஹன் காந்தி தவிர வேறு யாரும் இப்படி எழுதுவதில்லை.
படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்க மாட்டேன். இது இந்திய அரசியலில், தலைமைப் பண்பு பற்றி புரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக மட்டுமே.
என் பதிவுகளைப் பற்றி எனக்கு ஒரு மனக்குறை உண்டு. பல வேறு காரணங்களால் (நேரக்குறை, வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர்த்த முடியாது என்ற முடிவு…) என்னால் பொதுவாக புத்தக அறிமுகம் என்ற நிலையைத் தாண்ட முடிவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் நான் பொதுவாக அகலமாக உழுகிறேன். ஆழமாக உழ ஆளில்லை என்பதுதான் உண்மை நிலை.
அந்த மனக்குறையை பொதுவாக விசுவின் பதிவுகள் தீர்த்து வைக்கின்றன. விசுவின் பதிவுகள் பொதுவாக செறிவானவை, நல்ல ஆழமாகவே உழுகிறார். விஷ்ணுபுரத்தைப் பற்றி இன்னும் நினைவு கூரக் கூடிய பதிவுகளை எழுதினார், இப்போது கொற்றவைக்கு வந்திருக்கிறார். ஓவர் டு விசு!
முதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்க தொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை – நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் – வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்’ ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]
விஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! 🙂 :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.
மூன்று வாவிகள்:
சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.
கொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.
கோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.
மூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த் எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]
காப்பியத்தின் மையம்: தென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.
உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.
மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.
சிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்
முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
அலமரல் அசைவிளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!
சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.
சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.
****
உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.
****
கொற்றவையும் விஷ்ணுபுரமும் :
சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
காலம் என்று ஒன்று உண்டம்மா
என்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,
பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?
என்பதும் கொற்றவைக்கான வரிகள்.
சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.
விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.
ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.
கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.
சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்
என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.
****
காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.
******
பின்குறிப்பு :
[1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.
[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.]
[3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.
ஜடாயு:
[வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.
[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?
தாரை:
மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.
[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.
[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.
….
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
…..
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
……..
‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
……
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்;…59
வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்.
அமெரிக்காவில் பள்ளிகளில் சின்ன வயதுக் குழந்தைகளைக் கூட என்று எதையாவது எழுத வைப்பார்கள். இது என் பத்து வயதுப் பெண் க்ரியா எழுதிய கதை.
There once was a boy named Derek. Derek was 12 years old. He was a very brave boy and he wasn’t scared of anything at all. He lived in a city called Goldenrod. The next day was the Goldenrod’s twenty year anniversary. The folks of Goldenrod were planning a big party. Derek was too excited to sleep. His mom told him that it was time to sleep and if he didn’t the monsters will scare him.
Derek turned off the light and took a small flashlight. Derek quietly looked under his bed and saw three monsters under his bed. Derek wasn’t scared at all, but the monsters were.
One monster yelled “Ahhhh! A human!”
“Quiet down!” whispered Derek “I’m not scary. I won’t hurt you. Let me introduce myself. My name is Derek”
There was a green monster with a light green stomach. He says “H-hi. M-my name is Bambi. You seem very nice.”
Then a purple monster shaped like an onion with wings said “Hi! My name is Max! Everyone tells me I’m hyper!”
“Shh!” whispered another monster. “My name is Gambi. I have a question though. How come you’re not scared of us?”
“I don’t know.” said Derek.
“Gambi, don’t question it. Don’t you like someone who isn’t scared of us?” said Max.
“Whatever” said Gambi.
“I’m planning to have a party on Friday night. Can I show you to the people who come? Maybe some of them will like you and you can make new friends.”
“No! What if they don’t like us? Said Bambi
“Don’t worry about that. They’ll love you.”
They talked for the whole night and discussed about the party. It was already 9:00 a.m. when they stopped. Derek quickly got ready for the festival. Derek met his friend Annie and told her about what happened last night. He asked if Annie could help him with the preparations. Annie said of course she would help. Annie invited everyone and Derek decorated his house.
Annie said “ Okay! Let’s let everyone inside now”
Derek opened the door and met a huge crowd of people barge in. Annie invited all the girls into Derek’s room. Derek turned off the lights and was ready to show the monsters. The monsters were very worried about how his friends would react when they saw the monsters. Derek and Annie heard them trembling. Everyone was nervous.
“Come out guys.” whispered Derek. ”They don’t bite.”
The monsters shined brightly in the dark. The girls started giggling. Even the monsters were surprised by this reaction.
“Do they like us?” asked Max.” I think they do.”
The girls thought the monsters were adorable! They wanted to hug them.
“Yay! They like them!” screamed Annie” I am not surprised at their thinking they’re adorable. They’re so huggable!”
“Okay. The girls like them but I’m not so sure about the boys. I hope they react well” Derek said worriedly.” Well, we have to try.”
Derek called all the boys at the party to his room. He turned off the lights and told the monsters to come out. The monsters waddled out. The boys just stared at the monsters looking surprised. The monsters stared back worriedly.
“Well, what do you think?” said Derek. “Do you think they’re cute or something? Are they cool?”
The boys too thought the monsters were adorable. The monsters were so cute and looked so happy. After meeting all the guests, the monsters went out into the party and introduced themselves to everyone.
Max, Bambi, and Gambi were so excited to meet everyone. Derek heard Max screaming and jumping up and down after having a bit of sugar.
“Derek said “Wow! This turned out much better than I thought.” Everyone loved the monsters!”
When everyone got home, all the kids in Goldenrod looked under their bed. They too wanted to see a little monster and make friends with them. By this time, the monsters had heard about how the kids of Goldenrod loved the monsters hiding under their beds. They were all trying to squeeze under the beds. The kids and the monsters became very good friends. The monsters followed the kids and they were like little pets!
The kids of Goldenrod had assumed that something was bad even before trying it. They all realized their mistake. They had assumed that monsters were scary and got scared even before they met one. They never made a silly mistake like that again in their lives. They were all grateful to Derek for teaching them that lesson.
இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருத்தி மேம்படுத்தலாம். விற்கலாம். முழுக் கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம். அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம். இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை.
ஆனால், அவ்வாறு பயன்படுத்தும்போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுக வல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்க வல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.
இதெல்லாம் யாரோ ஒருவர் போட்டதை கட்-பேஸ்ட் செய்தது. என் பதிவுகளுக்கு இதை விட அதிக உரிமைகளைத் தர விரும்புகிறேன். ஆனால் அதற்கு என்ன உரிமத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. நீங்கள் இந்தத் தளத்தின் பதிவுகளைப் பகிர்வதும் பயன்படுத்துவதும் அடுத்தவர் பகிர்வதையும் பயன்படுத்துவதையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை. மூலச்சுட்டிக்கு இணைப்பு கொடுப்பது கூட வேண்டுகோள்தான். அப்படி செய்தால் எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கும்.
ஆனால் இவை அனைத்தும் நான் எழுதும் பதிவுகளுக்கு மட்டும்தான். அடுத்தவர் எழுதும் பதிவுகளில் யார் ஆசிரியர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது, எதிர்காலத்திலும் குறிப்பிடப்படும். அவர்களே வெளிப்படையாக அனுமதித்தால் ஒழிய அந்தப் பதிவுகளைப் பயன்படுத்த அவர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.
மஹாபாரத செம்பதிப்புகள், மொழிபெயர்ப்புகள், அதை மூலமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளைப் பற்றி பட்டியல் போட்டபோதிலிருந்தே உறுபங்கம் எங்காவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். archive.org தளத்தில் ஒரு scanned காப்பிதான் கிடைத்தது. ஆனால் சரியாக scan ஆகவில்லை, பல எழுத்துப் பிழைகள். படிக்கவே முடியவில்லை. கடைசியில் நானே தம் கட்டி பிழைகளை எனக்குத் தெரிந்த வரையில் திருத்தினேன். ஆர்வம் உள்ள எல்லாருக்கும் உதவியாக இருக்குமே என்று இங்கே பதித்திருக்கிறேன்.
இது செம்பதிப்பு எல்லாம் கிடையாது. (எனக்குத் தெரிந்த வரையில்) பிழை திருத்தல் மட்டுமே.
உறுபங்கம் நடிக்கப்பட்டால் powerful ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. வெறும் வசனங்களை வைத்துக் கொண்டே போர்க்களக் காட்சிகளை காட்டிவிடுகிறார். ஆனால் கடைசி சொட்டு வரை மெலோட்ராமாவாக பிழிந்து தள்ளிவிடுகிறார். நாடக மரபின்படி இறப்பை மேடையில் காட்டக் கூடாதாம். பாசர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. துரியோதனனின் இறப்பைக் காட்டாவிட்டால் நாடகத்தின் power குறைவாகத்தான் இருக்கும்.
பாரத் ஏக் கோஜ் தொடரில் சில நிமிஷங்கள் இந்த நாடகம் காட்டப்படுகிறது. ஓம் புரி துரியோதனனாக நடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவில் கிட்டத்தட்ட மூன்றாவது நிமிஷத்திலிருந்து இந்த நாடகத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
Urubhanga
The Broken Thighs
Bhasa
Introduction:
The great battle of the Kauravas and the Pandavas culminated in the duel between the gigantic Bhima and Duryodhana, the champion of the Kauravas. They fought with maces. Bhima was all but defeated when with a mighty effort he struck a foul blow and broke Duryodhana’s thighs. This play is the tragedy of Duryodhana’s defeat and death.
In the Mahabharata there Is a section called Gadayuddha Parva. Duryodhana challenges the Pandavas to a single combat. Yudhishtra agrees, but Krishna says he has made a mistake. Nobody can defeat Duryodhana In an honest fight. Bhima defies Duryodhana. Baladeva comes to see the fight and the two champions fall upon each other.
After a digression the story goes on. All repair to Samantapanchaka. Bhima and Duryodhana face each other; the princes make a circle round them. The champions abuse each other and fall to with their maces. Duryodhana breaks Bhima’s coat-of-mail. Krishna tells Arjuna that Bhima cannot win by honest fighting. Then Arjuna slaps his left thigh, so that Bhima sees him. Bhima smashes Duryodhana’s thighs. Bhima scorns the fallen warrior and mishandles him. Yudhishtra restrains Bhima and speaks solicitous words to Duryodhana. Baladeva blames Bhima for breaking the law of fighting. Krishna holds him back and argues the point. Baladeva is not convinced; he praises Duryodhana and promises Bhima a bad reputation. He takes himself off.
Krishna approves what has happened and congratulates the king on regaining the realm. Warriors praise Bhima. Krishna advises them to go home and reviles Duryodhana. Duryodhana raises himself half-way up and abuses Krishna for his cunning. Krishna answers with repeated reproaches. Duryodhana congratulates himself that he has had the greatest loss on earth and will now go to heaven. Heaven indicates its concurrence. All are depressed at this, but Krishna assures them that their powerful opponents could not have been killed In lawful warfare and dismisses them to their homes. They go to the camp. Krishna is sent to Hastinapura to conciliate Gandhari. Krishna endeavors to console Dhritarashtra and Gandhari and then returns. When the remaining Kurus hear what has happened they seek out Duryodhana. Asvatthama swears he will destroy the Pandavas. At Duryodhana’s command Kripa brings a vessel of water and Asvatthama is consecrated to the command of the army. The three Kurus leave Duryodhana and depart. The next section is called Sauptika Parva and describes the night attack on the Pandava camp. At the end of it Duryodhana expresses his satisfaction and goes to heaven.
It will be obvious on reading this play that our dramatist represents the story in a very different way from that in the epic.
First we may note a feature of the construction of the play. There is only one act with as many as sixty-six verses, but this is introduced by an interlude or introductory scene (Vishkambhaka), in which three soldiers, reciting verses in turn, give us a description of battle, of the battleground, and of innumerable corpses. Then they tell us of the fight with maces between Bhima and Duryodhana, that Bhima is struck down, and Duryodhana taunts him. Then that Krishna makes a secret sign, striking his own thigh; that Bhima with a mighty effort and with both his arms hurls the mace on his opponent’s thighs. Bhima is led away by the Pandavas and Balarama is very angry.
This long description of what is happening reminds us of the three priests describing the sacrifice in The Five Nights, and, to a lesser degree, of the descriptions of the fight in the same play.
Baladeva opens the next scene, and Duryodhana crawls in with both thighs broken. Baladeva threatens vengeance, but Duryodhana, the wicked prince, shows a saintly resignation.
Then the dramatist brings on to the field of battle the old blind king Dhritarashtra and his devoted wife Gandhari, who according to the epic story, were miles away at Hastinapura. With them come two queens of the fallen prince and his little son. There is a poignant passage, with the boy attempting to climb on his father’s knees. All this has been invented. Duryodhana preaches reconciliation to his son and looks for death.
Asvatthama, the son of the old preceptor Drona, enters and declares he will slay the Pandavas. Duryodhana attempts to dissuade him, but he swears he will do it by a raid at night. Baladeva bears witness to the oath. Asvatthama declares Durjaya the heir to the kingdom. (By the compact the realm should go to the Pandavas and Asvatthama was made commander in the epic.) Then Duryodhana is satisfied.
There is nothing about a son of Duryodhana in the epic. Duryodhana has a vision of his ancestors, which recalls the old king’s death in the same play, and he dies. They cover him with a cloth.
As we have seen, Duryodhana in the epic died after the night raid, and between his wounding and his death showed a much fiercer spirit.
This death on the stage is remarkable. It has been introduced deliberately, though not in place according to the story, to round off the tragedy. It is against the canons of orthodox Sanskrit dramaturgy. Whoever be the author, we have here a tragedy written for the Indian stage.
Does it date from a time before the convention was fixed, or does it represent a defiance of that convention at a later date? If the play were ancient, it might be expected that later editors would try their hands in adding descriptive verses of their own. This might account for minor inconsistencies.
Compare also the death of Vali in “The Consecration”.
Dramatis Personae (In order of appearance)
Stage Manager
Assistant to the manager
Three Soldiers of Duryodhana’s army, who describe the battlefield and then the duel with maces.
Baladeva or Balarama, the wielder of the Plough (Halayudha), elder brother of Krishna.
Duryodhana, eldest of the hundred sons of the blind king Dhritarashtra, leader of the Kurus.
Dhritarashtra, the old blind king.
Gandhari, his wife, who wore a bandage on her eyes.
Malavi, one of Duryodhana’s Queens.
Pauravi, another of Duryodhana’s Queens.
Durjaya, Duryodhana’s young son.
Asvatthama, son of the old preceptor Drona
Prologue
[Enter the Stage Manager]
Stage-manager: May the Lord Kesava ferry you over a flood of enemies, as he ferried Arjuna over the torrent of his foes, a torrent gravelly with blades and shafts, with Bhishma and Drona as the guiding banks; wherein the King of Sind represents the river water, Gandhara’s king a whirlpool, and Magadhas’ king a wave; a stream with Drona’s son as alligator, with Kripa as a crocodile, and with Duryodhana as the tearing current. With these words, my lords and gentlemen, I have to announce to you…
But what is that? I thought I heard a noise just as I was to make my announcement. Well, I must see what it is.
[Voices behind the scene]: Oh! Here we are, here we are!
Manager: Good. I understand.
[Enter an Assistant.] Assistant: Where do these people come from, Master ?
Officers are rushing to and fro, touchstones of each other’s valor, ready to sacrifice their, persons in the van of battle for the sake of heaven. Their limbs are jagged with a hundred arrows and javelins, their bodies chiseled by the tusks of raging elephants.
Manager: Don’t you understand, my lad? Duryodhana is the sole survivor on the side of Dhritarashtra bereft of a hundred sons and wisdom. On Yudhishtra’s side only the Pandavas and Janardana remain. Kurukshetra’s plains are strewn with the corpses of kings. Here is a picture crammed with soldiers and kings, horses and elephants slain in battle; the drawing seems confused. The combat of Bhima and Suyodhana begins. Their warriors have entered the one house of death for lords of men.
[Exeunt]
End of the Prologue
Interlude
Samantapanchaka, the place in Kurukshetra where Parasurama (Rama with the axe) is said to have slain, the Kshatriya race
[Enter three soldiers.]
All together: Oh! here we are, here we are!
First Soldier: We have arrived at the hermitage called battle, the home of hostility and touchstone of valor. This is the abode of pride and glory. This is where warriors assemble to be chosen as bridegrooms by the nymphs of heaven. This is the place of manly prowess, a hero’s couch for the death of kings, a burnt sacrifice of lives, a prince’s bridge to heaven.
Second Soldier: You speak truly. The ground is rugged with heaps of elephants’ corpses like huge boulders. On every side are vultures’ nests. Chariots are empty of their champions. Kings of the earth have gone to heaven; yet such deeds have they done face to face in the battle, where all are busy with death, that they are not killed, though slain long since.
Third Soldier: It is even so. The battle rite proceeds; a sacrifice, where warriors fall as victims, and roars, as of lions, supply the sacred chanting. In that rite, lit with the fire of hostility, sacrificial posts are seen in the trunks of elephants, sacrificial grass in the litter of arrows, the wood stack in the pile of slaughtered tuskers and in the floating banners, the celestial cars.
First Soldier: Look you on this other side. Kings lie heaped upon the battleground bereft of life by each other’s shafts, and these birds with blood-stained beaks loosen the ornaments from their bodies.
Second Soldier: An elephant arrayed and ready for battle is overthrown by the force of a shower of arrows and sinks down with armor broken, like a royal arsenal, with bows and arrows.
Third Soldier: Here’s another thing, look you. As women-folk help a daughter’s husband down from the car, so do eager jackals drag down the dead warrior from the front of the chariot with his jeweled quiver, and a necklace of skulls made of garlands fallen from the top of banner poles.
All together: Oh! How frightful is this battleground, Samantapanchaka. The ground is soaked with the blood of horses, men, and elephants, wounded and slain. There is a confused mass of torn mail, skins, umbrellas, javelins, arrows, spears, and armor mixed with headless trunks, and a litter of every sort of weapon – pikes and darts, spears and cross-bolts, spikes and maces, hammers, boars, lances, arrows, swords, and clubs.
First Soldier: Here, indeed. Rivers of blood are crossed by bridges of elephants’ corpses. Steeds draw chariots devoid of princes, whence the charioteers have fallen. When heads are severed, trunks rush on by force of habit. Maddened elephants without a rider are wandering everywhere.
Second Soldier: Again, see this. Vultures with tawny eyes, with beaks as sharp as goads, and huge long wings outspread, gleam in the sky like fans, with bits of flesh for coral.
Third Soldier: The earth shows clearly all around in the pitiless rays of the sun slaughtered warriors and kings, elephants and chargers; it seems to support a host of fallen stars, covered as it is with darts and lances, arrows, javelins, and swords.
First Soldier: Even in such a plight warriors do not lose their splendor but look magnificent. For here kings’ faces, free from fear, represent a still lotus of the land; their eyes turned up once for ever are the swarming bees, then dark red lips supply a multitude of shoots; their knitted brows portray the curving filaments; raised aloft on arrow stalks in the van of battle they sleep unstirred by the sun of valor.
Second Soldier: Death prevails over even such warriors as these. It is impossible for less fortunate men to support the power of a king.
Third Soldier: What, then does death prevail over warriors?
First Soldier: No doubt of it.
Second Soldier: Nay, say not so. It was Arjuna today that perforce did introduce to Death those proud and insolent kings with arrows remaining from his fierce fight with Siva, Arjuna twanging his bow in the van of battle, with the string blackened by the smoke of the Khandava forest, that bow that destroyed the sworn confederates, sacrificed the life of demons in impenetrable armor, and removed the distress of heaven.
All Together: Aha! a sound. Is it thunder in the clouds? Are mountains being powdered by a flight of thunderbolts? Or is the earth being torn asunder by convulsions reverberating with tumultuous roar? Or is it the roaring of the sea, seething with a multitude of billows lashed into wild fury by the wind and breaking against the caves in the cliff of Mandara? Well, let us see.
First Soldier: Ah! here has begun the duel with maces between the middle Pandava, Bhimasena, furious at the dragging of Draupadi by the hair, and the emperor Duryodhana enraged at the slaughter of a hundred brothers. Dvaipayana, Halayudha, Krishna, Vidura, and the other worshipful chiefs of the Kuru and Yadu races are looking on.
Second Soldier: Bhima’s chest, broad as a slab of burnished gold, is struck a violent blow. Duryodhana’s muscular shoulders, hard as the trunk of Indra’s elephant, are torn open. Weapons cling betwixt and beside their two arms. And with it all there goes up the din made by the violent strokes of the maces.
Third Soldier: Here is the Emperor. His crest is quivering with a skillful shake, his face and eyes are swollen with rage, his body dwarfed as he approaches crouching, and his hands held high aloft. The mace uplifted in his right hand and soaked with his enemy’s blood shines like Indra’s thunderbolt resting on the highest peaks of Mount Kailasa.
First Soldier: Behold the Pandava with limbs besmeared with blood from mighty blows. The blood gushes from his broken forehead, the points of each shoulder are shattered; his huge chest is drenched in gore running in streams from his wounds. Sorely wounded and bleeding from strokes of the mace, Bhima shines like the mountain Meru with its boulders dyed by streams red with minerals.
Second Soldier: He hurls the dreadful mace. He roars as he leaps aside; he quickly lifts his arm and parries the other’s stroke. He takes a forward step and strikes without remission. The king is well trained, but Bhima is the stronger.
Third Soldier: Bhima now, matchless in battles, huge as a mountain, with a deep cut on his head drenching his limbs with blood, sinks on the earth like Golden Peak, the king of mountains, struck by a thunderbolt, and running with ruddy ores dislodged. Seeing Bhima falling, his limbs loosened by a blow of the mace, Vyasa stands amazed, his face upturned resting on a single finger.
Second Soldier: Yudhishtra is dismayed, Vidura is blinded with tears.
Third Soldier: Arjuna is fingering the Gandiva bow, Krishna is gazing at the sky.
All Together: Balarama, a spectator of the battle, from love of his pupil brandishes his plough.
First Soldier: Here the Emperor, abiding place of valor, his crest flashing with many a jewel, endowed with pride and dignity with majesty and fortitude, speaks a word in mockery. “Fear not, Bhima, no hero smites a foe prostrate in battle.”
Second Soldier: Now seeing Bhimasena ridiculed, Krishna makes a secret sign striking his own thigh.
Third Soldier: That sign has comforted the Wind God’s son. Knitting a frown on his forehead, wiping away the sweat, then grasping his mace ‘Chitrangada’ with both hands, with strength renewed by the Wind God, who saw his son prostrate, he rises once more from the ground roaring like a bull-lion.
First Soldier: Oh! the duel with maces has begun again. The son of Pandu rubs his palms upon the ground, bites his lips with intense force, roars with furious rage and with a swift long sweep of both his arms, forgetting love of righteousness, forsaking rules of war, but following Krishna’s sign he hurls the mace on Duryodhana’s thighs.
All Together: Alas! the Emperor has fallen.
Third Soldier: Seeing the Kuru king falling with limbs bled white, the blessed Vyasa has risen to the sky. Lightly covering his eyes Balarama shuts out the view. Bhima sees the Wielder of the Plough has shut his eyes in anger on Duryodhana’s behalf, and at Vyasa’s bidding is led away by the startled Pandavas in their hands enlaced, while Krishna supports his steps.
First Soldier: Why Balarama with eyes closed in anger, has perceived the flight of Bhimasena and conies this very way. Here he is, his lovely crest in disarray, his eyes dilated red with rage, he draws up a little way the garland bitten by bees. Dragging the garments hanging loose on his dark body he looks like a moon with a halo descended to the ground.
Second Soldier: Come let us attend on the Emperor.
The other two: Very well, a good suggestion.
[Exeunt]
End of Interlude
[Enter Baladeva]
Baladeva: Ho, ye kings! this is not right. Unmindful of my plough that is death to the force of foes, recking nothing, in his pride, of me or the violation of the law of battle, he hurled that mace on Duryodhana’s thighs in the forefront of the fight bringing him low with the fortune of his house. Duryodhana, live on a little while, till today on the broad chest of Bhima, ripely wet with sweat and blood, I make my plough groan as it furrows heavily through that field. To that ploughshare still cling remains of Saubha. It was a hook for the high rampart of the great Asura city, a guide to Yamuna’s waters, appeased by the oblations of countless foes’ lives.
[Voice behind the scene]: Be merciful, blessed Wielder of the Plough, be merciful.
Baladeva: Even in this plight the wretched Duryodhana follows me. He is glorious, his lustre smeared wet with blood, the sandal paste of battle. Arms dusty white from crawling on the ground, he has taken an infant’s role. He is like Vasuki set loose from the mountain by gods and demons, after the churning of the ocean was complete; abandoned and exhausted it drags its coils in the ocean waters.
[Enter Duryodhana with both thighs broken.] Duryodhana: Here, alas, am I, both thighs crushed with a mace-blow by Bhima, who has broken the law of fighting, crawling on the ground with my two arms I drag along my body half extinct. Be merciful, blessed Wielder of the Plough, be merciful. For the first time, today my head falls at thy feet, myself fallen on the earth. Quench thy wrath. Victory to the funeral clouds of the Kuru race. An end has come to our hostility, to the reason of the war, and to ourselves.
Baladeva: O Duryodhana, live on a little while.
Duryodhana: What are you going to do?
Baladeva: Listen, to thy warriors slain in battle with chariots, elephants, and horses and faring to heaven, I will give the sons of Pandu, their bodies furrowed by my ploughshare hurled upon them, their hearts and shoulders torn asunder by pestle blows.
Duryodhana: Nay, say not so, Bhima has fulfilled his vow, my hundred brothers have gone to heaven, myself have come to such a pass, Balarama. What can war do now?
Baladeva: He tricked you before my eyes. That has made me angry.
Duryodhana: You think that I was tricked?
Baladeva: No doubt of it.
Duryodhana: Alas! My life it seems is the price I pay. Bhima had the wit to extricate himself from the dreadful house of lac all ablaze. In the battle in Kubera’s abode he matched the onrush of mountain rocks. He it was that took the life of Hidimba, the lord of giants. If you think that Bhima has vanquished me today by a trick, why, Balarama, he has not beaten me.
Baladeva: Having tricked you in the fight is Bhimasena to survive?
Duryodhana: What, was I tricked by Bhimasena?
Baladeva: Why, what brought you to this plight?
Duryodhana: Hearken! He that defied Indra and likewise stole his coral tree, he that for a whim slept a thousand celestial years in the ocean waters, ’twas he, Hari, the darling of the world, with his innate love of battle, that suddenly entered into Bhima’s sharp mace and gave me over to death.
[Voice behind the scene]: Out of the way, sirs, out of the way.
Baladeva: Ah! Here comes his majesty Dhritarashtra led by Gandhari and Durjaya, and the ladies of the palace are with him. His heart is overcome with grief. He is a mine of fortitude, the sight of his eyes distributed among a hundred sons. Upstanding in his dignity, his long arms are like the golden pillars of the sacrifice. At his birth the gods misdoubted them of protecting heaven and smote his eyes with a handful of malignant darkness.
[Enter Dhritarashtra with Gandhari, two Queens and Durjaya.]
Dhritarashtra: My son, where are you?
Gandhari: My child, where are you?
Queens: Where are you, my lord?
Dhritarashtra: Alas! Today when I heard of my son struck down in the battle by a trick, my blind face was made still blinder by the tears streaming in my eyes.
Gandhari: Are you still there?
Duryodhana: Still bound to life, unhappy that I am.
Queens: Oh! Majesty, alas!
Duryodhana: Woe is me, even my queens are wailing. Before that I hardly felt the pain of the mace’s blow, but now I have it fully, when my women-folk come into the field with their tresses exposed to view.
Dhritarashtra: Gandhari, can you see that champion of our house, Duryodhana?
Gandhari: Majesty, I do not see him.
Dhritarashtra: What, not see him? Now am I cursed by fate that I cannot see my son at the time of need. Proud of begetting a hundred sons, wise and brave, splendid in pride and valor, destruction to the enemies’ ranks, does Dhritarashtra not deserve to have a funeral oblation scattered on the ground by one of his sons at least?
Gandhari: Suyodhana, my child, answer me, and his unhappy majesty bereaved of a hundred sons.
Baladeva: Ah! Queen Gandhari! Her eyes never yearned to see the faces of her sons and grandsons, but now her fortitude is exhausted by grief at Duryodhana’s downfall. She wears the bandage on her eyes symbol of devotion to her lord, but now it is ceaselessly wetted with her tears.
Dhritarashtra: Duryodhana, my son, sovereign commander of eighteen divisions, where are you?
Duryodhana: A fine sovereign today!
Dhritarashtra: Eldest of five score brothers, answer me.
Duryodhana: I’ll tell you another story! How this business shames me!
Dhritarashtra: Come, my son, and greet me.
Duryodhana: Here I come. [Makes as if to rise but falls again.] Alas! This is a second blow. Alack! Today when Bhimasena seized me by the hair and hurled his mace, he did not rob me of my thighs alone, but also of the salutation to my father’s feet.
Gandhari: Here, my daughters.
Queens: We are here, lady.
Gandhari: Seek out your husband.
Queens: I go, unhappy.
Dhritarashtra: Who is it leading me, pulling the hem of my robe?
Durjaya: ‘Tis I, grandpa, Durjaya.
Dhritarashtra: Go and look for your father, Durjaya.
Durjaya: I am so tired.
Dhritarashtra: Run along, you can rest on your father’s knees.
Durjaya: I am off, grandpa. [Approaching.] Daddy, where are you?
Duryodhana: Oh, he has come too. Come what may, my love for my boy is close to my heart, and now it burns me! For, Innocent of sorrows, eager to rest on my knees, what will Durjaya say when he sees me vanquished?
Durjaya: Here is the king, sitting on the ground.
Duryodhana: Why have you come, my son?
Durjaya: You were away so long.
Duryodhana: Ah me! Even in this plight my heart burns with love of my boy.
Durjaya: I’ll sit on your lap. [Tries to climb on to his knees.]
Duryodhana: [Preventing him.] Oh Durjaya, Durjaya, alas! This crescent moon, delight of my eyes and heart’s delight, by change of circumstance becomes a burning fire.
Durjaya: Why won’t you let me sit on your lap?
Duryodhana: My son, give up thy wonted seat. Sit anywhere, but from today, thou canst sit no more where thou wast wont to sit.
Durjaya: Why, where are you going?
Duryodhana: I’ll follow my hundred brothers.
Durjaya: Take me with you.
Duryodhana: Go, my son, and talk to Bhima.
Durjaya: Come, father, they are looking for you.
Duryodhana: Who are?
Durjaya: Granny and grandpa and all the ladies.
Duryodhana: Go, my son, I cannot come.
Durjaya: I’ll take you.
Duryodhana: You are too young, my son.
Durjaya: [Stepping round] Ladies, the king is here.
Queens: Woe, woe, the king!
Dhritarashtra: Where is the king?
Gandhari: Where is my child ?
Durjaya: He’s here sitting on the ground.
Dhritarashtra: Alas, is this the king? In stature he was like a golden pillar, the sole overlord of kings in the world, and now my miserable son lies on the ground no better than the broken bolt of a door.
Gandhari: Suyodhana, my child, are you tired?
Duryodhana: I am your ladyship’s son.
Dhritarashtra: Who is that?
Gandhari: Tis I, great king, that gave thee fearless sons.
Duryodhana: Now today I feel that I am born indeed. Come, father, there is now no need of anxiety.
Dhritarashtra: Why should I be anxious, son? Thy hundred brothers puffed up with strength and courage, consecrated for the sacrifice of battle, were already slain; with thy single death all is dead. [Falls.]
Duryodhana: Alas, the king has fallen. Oh, father, do console the queen.
Dhritarashtra: What consolation can I give, my son?
Duryodhana: Why, say that I was slain facing the foe. For my sake, father restrain your grief. At thy feet alone I bow my crest, without thought of the blazing fire within I depart for heaven, as proudly as I was born.
Dhritarashtra: I am an old man, blind from birth, with no desire for life. Bitter grief for my sons curbs my will, overspreads my soul and overwhelms me.
Baladeva: Alas! He has lost all hope for Duryodhana, his eyes are ever closed. I have no heart to announce myself in his exalted presence.
Duryodhana: I would ask a favor from your ladyship.
Gandhari: Speak out, my son.
Duryodhana: With folded hands I ask, if I have earned any merit, be thou my mother in another life.
Gandhari: ‘Tis my own wish you have expressed.
Duryodhana: Malavi, listen. My forehead was shattered by blows of a mace inflicted during a duel. On my breast there is no space for a necklace, such streams of blood are gushing forth. My two arms, look, are well adorned with wounds as golden bracelets. Thy husband fell in battle facing the foe. Why dost thou weep, warrior-lady?
Malavi: I’m but a woman, your wedded wife, and so I weep.
Duryodhana: Pauravi, listen. We have performed the desired sacrifices enjoined by scripture, and supported our kinsmen. The beloved five score brothers vanquished the foe. Our dependents were never deceived in us. The kings of eighteen armies were sore pressed in the battle. Think of my glory with pride. Wives of such men do not weep.
Pauravi: My mind is all made up where I shall go, and so I weep no more.
Duryodhana: Durjaya, you listen too.
Dhritarashtra: Gandhari, what is he going to say?
Gandhari: My own very thought.
Duryodhana: You must obey the Pandavas like myself. Follow the directions of the lady mother Kunti, Abhimanyu’s mother and Draupadi you must honor like your own mother. Look you, my son, grieve no more, but remember your father Duryodhana, of glorious splendor and a heart fired with pride, fell in battle face to face with an equal foe. Then you must touch Yudhishtra’s mighty arm, the right arm in its linen, and join the sons of Pandu to give me the last oblation uttering my name.
Baladeva: Ah! Hostility has melted to remorse. What, some noise it seems. All is still, with never a roll of the battle drums ; arrows and mail are cast aside with the chowries and umbrellas of state. Charioteers and warriors lie dead. Who is this then twanging his bow and filling the sky with flocks of frightened crows?
[Voice behind the scenes]: As a priest selects a great Horse-Sacrifice, so do I come to this crowded battle rite, that first I entered with Duryodhana spanning his bow.
Baladeva: Ah! hither comes Asvatthama, the preceptor’s son. Large eyes as clear as lotus petals fully blown, long arms outstretched as fair as posts of gold, as he eagerly draws his dread bow, he is like Mount Meru all ablaze with a rainbow resting on its peak.
[Enter Asvatthama.] Asvatthama: [Repeats the verse,’ As a priest,’ ] Oh, hearken to me, ye kings renowned in war, though few survive and life is slowly ebbing with every breath, though your bodies be mutilated by those crocodiles, the weapons upraised when the two oceans of opposing forces flowed together in the battle-storm, hearken, I say, to me. ‘Twas the Kuru king had his thighs shattered by fraud, not I. ‘Twas the son of the charioteer had a sword that broke and failed, not I. Here to-day I stand alone. Drona’s son on the field of victory, with sword drawn in eagerness. But to me too what boots the glory of battle without tHe praise of victory?
[Steps round]
Nay, not so. The Kuru King, ornament of the Kuru race, was tricked when I was busy with funeral oblations to my father. Who will believe it? For, Waiting on his word stood the sovereigns of eleven armies, with folded hands held high, mounted on cars and elephants, with bows as other hands; fighting in the fray was Bhishma, with his mail coat licked by Parasurama’s arrows and my father; ’tis manifest the hero Duryodhana was defeated by destiny. Now where is Gandhari’s son?
[Steps and looks around]
Ah, here is the king of the Kurus, he has crossed the ocean of war and lies amid a rampart of broken chariots and the corpses of men, elephants, and horses. Here he is, with the netted beams of his hair fallen disheveled from his crest, with limbs bleeding from blows of the mace lie sits on the stony seat, his last home, and sinks like the westering sun plunging into twilight.
[Going up to him]
Oh king of the Kurus, what is this?
Duryodhana: Oh son of my preceptor, the result of insatiable ambition.
Asvatthama: King of the Kuru, I am about to abandon the root of righteousness.
Duryodhana: What will you do?
Asvatthama: Listen. Krishna is ready for the fight, riding on Garuda’s back with his four dread arms, with his disc and bow aloft. But I will wipe out with a network of shafts the sons of Pandu with him, like a picture where the drawing Is confused.
Duryodhana: Nay, say not so. The whole host of anointed kings now lies in the lap of mother earth. Karna has gone to heaven. Shantanu’s son has fallen. My five score brethren have been slain in the van of battle facing the foe and I am brought to this plight. Preceptor’s son, unstring thy bow.
Asvatthama: O King of the heroes, when the Pandava in the fight today seized thy hair and struck thee with his mace he broke thy spirit along with thy two thighs.
Duryodhana: Say not so. Kings have pride incarnate. For pride’s sake I accepted war. Look you, my preceptor’s son, how Draupadi aforetime was dragged, at the gambling match by tresses grasped and twisted in my hand; how young Abhimanyu, still a boy, was slain in battle, how the Pandavas on the pretext of the dicing had to dwell In the forest with wild beasts; reflect on this, it is little that those chiefs have done to break my spirit.
Asvatthama: I take an oath by everything. By your Highness and by my own soul I swear, and by the heaven of the brave, I will make a raid by night and destroy the Pandavas in the fight.
Baladeva: Uttered by the preceptor’s son, that should come to pass.
Asvatthama: The worshipful Balarama.
Dhritarashtra: Alas, there was a witness to these crooked words.
Asvatthama: Durjaya, come here. Be thou king, though unanointed, at the bidding of a priest, of a kingdom inherited through the valor of thy sire, a conqueror by the might of his arms.
Duryodhana: Ah my heart’s desire is now fulfilled. My life is slipping away. Here are my revered ancestors Shantanu and the others. There rise my hundred brothers with Karna at their head. Here too is angry Abhimanyu seated on Indra’s elephant, scolding me. See his side locks and how Mahendra supports him in his palm. Urvasi and these other nymphs have come for me. Here are the great oceans manifest. There are the great rivers, Ganges and the rest. Death has sent an aerial car, the wain of heroes, drawn by a thousand swans to fetch me. Here I come. [Expires. They cover him with a cloth.]
Dhritarashtra: I’ll depart for the penance groves so rich in pious folk. Out on a realm made valueless by the loss of my sons.
Asvatthama: Now do I depart, my bowman’s hand uplifted for the slaughter of the sleepers. May the Gods destroy all my enemies and protect the earth.
மனித இனத்தின் அதிசயங்களுக்கு எல்லையே இல்லை. அதிலும் சில மனிதர்களின் மூளையின் wiring வேறு மாதிரி இருக்கிறது. அது தரும் sense of wonder விவரிக்க முடியாதது.
இருந்தாலும் விவரிக்கத்தானே இந்தப் பதிவுகள்! இப்படி சொல்கிறேனே, என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் எத்தனை முயன்றாலும் அவர்களின் வீச்சை நெருங்க முடியாது. வேறு விதமான வளர்ப்பும் பயிற்சியும் படிப்பும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் என்னால் கண்ணதாசன் மாதிரி பாட்டு எழுத முடியலாம்; கல்கி மாதிரி கதைகள் எழுத முடியலாம்; இன்னும் எக்கச்சக்கமாக உழைத்தால் காந்தியையும் ஜெயமோகனையும் கூட தொட முடியலாம். (நான் தஞ்சை ராமையாதாஸ் தரத்தில் கூட எழுதப் போவதில்லை என்பது வேறு விஷயம்). ஆனால் எந்த நாளும் ராமானுஜனை நெருங்கக் கூட முடியாது.
முதன்முதலாக ராமானுஜனின் ஒரு பேப்பரைப் படிக்கும்போது எனக்கு பதினெட்டு வயது இருக்கலாம். ஒன்றுமே புரியவில்லை. என் கணித அறிவு பதினேழு பதினெட்டு வயதுக்குப் பிறகு அதிகரிக்கவில்லை, அதனால் இன்றும் புரியாது என்றுதான் நினைக்கிறேன். Partitions என்ற கருத்தைத் தவிர வேறு எதுவும் புரியாது, அதிலும் அவரது தேற்றங்கள் புரியப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.
ராமானுஜனின் வாழ்க்கை ஒரு அதிசய romanceதான். எங்கோ ஈரோடில் பிறந்து, கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து, மிக அடிப்படையான கணிதத்தை மட்டுமே கற்று, அன்றைய நவீன கணிதத்தின் பெரும் பகுதியைத் தானே உருவாக்கி, தான் உருவாக்கியது என்ன என்று புரிந்துக் கொள்ளக்கூட சக்தி இல்லாத மனிதர்கள் நடுவே உழன்று, ஏதோ சாப்பாட்டுக்கு வழி செய்யுங்கள், நான் பாட்டுக்கு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எல்லாரிடமும் கெஞ்சி, அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். அன்றைய முக்கிய கணித ஆராய்ச்சியாளர்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் தன் திறமையின் சான்றாக அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டிருக்கும் தேற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லை. சில தேற்றங்கள் தவறு! ஏதோ கிறுக்கன் எழுதிய பொய்யான கடிதங்கள் என்று எல்லாரும் தூக்கிப் போட்டுக் கொண்டிருக்க ஹார்டி மட்டும் இவை தவறான தேற்றங்களாக இருக்கலாம், ஆனால் இவற்றை யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது என்று உணர்கிறார். இங்கிலாந்துக்கு வந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து ராமானுஜனை அங்கே அழைத்து வருகிறார். ஆனால் இந்தியாவில் ஒரு ஆச்சார பிராமணக் குடும்பத்தில் பிறந்த ராமானுஜனுக்கு அங்கே கணிதத்தில் மூழ்கி இருக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் நரகமாக இருக்கிறது. முதல் உலக்ப் போர் ஆரம்பித்துவிட்டதால் நரகம் நாலைந்து வருஷம் நீடிக்கிறது. ராமானுஜனின் உடல்நிலை கெடுகிறது, 32 வயதில் இறப்பு.
இதைக் கதையாக எழுதினால் கொஞ்சம் கூட நம்பகத்தன்மை இல்லை என்று நானே அலுத்துக் கொள்வேன்.
ரகமி எழுதினால் கூட இந்த romance-ஐக் கெடுக்க முடியாது. ராபர்ட் கனிகெலோ சிறந்த முறையில் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார். ஆனால் ஆய்வு அங்கங்கே கொஞ்சம் dry ஆகிவிடுகிறது.
இது ராமானுஜனின் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கான புத்தகம் இல்லை. அதனால் எல்லாரும் தைரியமாகப் படிக்கலாம்.
ராமானுஜன் மாதிரி மனிதர்கள் பிறக்கிறார்கள். உருவாவதில்லை. அதைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகங்கள் உதவுகின்றன.
சைவ தூஷணப் பரிகாரம் எல்லாம் இன்று எழுதப்பட்டால் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். ஆனால் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ்ப் புத்தகம் என்றால் எனக்கு புரட்டிப் பார்க்க வேண்டும் என்றாவது தோன்றும். அப்படித்தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன்.
நாவலர் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். தமிழறிஞர், ராமலிங்க அடிகளோடு அருட்பா-மருட்பா என்று அடித்துக் கொண்டவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் எழுதிய புத்தகங்களில் முதன்முதலாகப் படித்தது இதுதான். pdf கோப்பாகத்தான் படித்தேன். 1956-இல் எட்டாம் பதிப்பாக வந்ததாம்.
அன்றைய பாதிரிகள் சைவத்தை இழிவாகப் பேசுவதால் கோபம் கொண்டு அவர்கள் வாதங்களை பைபிளை வைத்தே மறுத்திருக்கிறார்.
என்னைக் கவர்ந்தவற்றில் முதல் அம்சம் நாவலரின் நடை. நல்ல தமிழ். அதுவும் மேடையில் பேசும் பாணியில் எழுதுவதுதான் இவர் ஸ்டைல் போலிருக்கிறது. திரு.வி.க. ரா.பி. சேதுப்பிள்ளை, ஏன் இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்ட திராவிடக் கழகப் பேச்சாளர்களுக்குக் கூட இவர்தான் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம் லாஜிக். இந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரை இருக்கிறது. யாரோ சைவப் பிரகாசசமாசீயர் என்பவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தை “சிவனே சொல்லியாயிற்று சைவம்தான் சிறந்த மதம், பாதிரியே சும்மா கிட” என்று சுருக்கமாக விவரிக்கலாம். நாவலரின் மூளையோ கொஞ்சம் நவீன காலத்தது. நான் விக்ரகத்தை புனிதமானது என்று கருதினால் பைபிள் Ark, ஜெருசலத்தின் கோவில்கள் ஆகியவை புனிதமானவை என்று சொல்கின்றனவே, இது புனிதமான இடம், செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வா என்று மோசசிடம் இறைவன் ஆணையிடவில்லையா, ஏபல்-கெய்ன் காலத்திலிருந்து கடவுளுக்கு படையல் வைப்பதில்லையா, எனக்கு பிரசாதம் என்றால் உனக்கு ஞானஸ்னான அப்பம் இருக்கிறதே என்றெல்லாம் மாற்றுக் கேள்விகள் எழுப்புகிறார். சைவர்களிடம் பாதிரிகள் கண்டுபிடிக்கும் “அநாகரீக, இன்னும் பக்குவப்படாத காலத்து காட்டுமிராண்டிப் பழக்கவழக்கங்கள்” அத்தனையும் பைபிளில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன என்று நிறுவுகிறார்.
என்னைப் பொறுத்த வரையில் நடைக்காகவே புத்தகத்தைப் படிக்கலாம். pdf கோப்பை இணைத்திருக்கிறேன்..
ஐரோப்பாவின் இருண்ட காலம் (Dark Ages) என்று அறியப்படும் காலத்தில் அன்றைய அறிஞர்கள் மண்டையைக் குழப்பிக் கொண்டு யோசித்த ஒரு கேள்வி உண்டாம் – ஒரு குண்டூசியின் தலைப் பகுதியில் எத்தனை தேவதைகளால் நிற்க முடியும்? அறிஞர் – சீச்சீ பேரறிஞர் – அதுவும் பத்தவில்லை மஹா மஹா மஹா பேரறிஞர் – அபு ஆசியா எழுதி இருக்கும் “ஹிந்து வேதங்களில் இஸ்லாம்” என்ற சின்னப் புத்தகத்தைப் படித்து சிரித்துக் கொண்டிருந்தபோது அந்த கேள்விதான் அடிக்கடி நினைவு வந்தது. புத்தகமே பிரமாதம் என்றாலும் முன்னுரையை எழுதி இருக்கும் கமாலுதீன் மதனி அபு ஆசியாவையே மிஞ்சிவிட்டார். அபு ஆசியாவின் நிரூபணங்களை எல்லா ஹிந்து சகோதரர்களிடமும் சேர்க்க வேண்டும், அப்படி சேர்த்துவிட்டால் போதும், எல்லா ஹிந்துக்களும் உடனே இஸ்லாமுக்கு மாறிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் ஜனகராஜ்-ஆர்.எஸ். சிவாஜி மாதிரி “சார், நீங்க எங்கியோ போய்ட்டீங்க! நோ சில்லி ஃபீலிங்ஸ்!” என்று பேசிக் கொள்வார்களோ என்னமோ!
அடடடடா! என்ன ஆராய்ச்சி! பகவத் கீதையில் “நான் பல பேர்களால் அறியப்படுகிறேன்” என்று கிருஷ்ணன் தெரியாத்தனமாக சொல்லிவிட்டதால், கிருஷ்ணனே ஒரு இறைத் தூதர், வேதங்களை எழுதியவர்கள் எல்லாம் இறைத் தூதர்கள், முகமது நபியே நான்தான் கடைசி இறைத் தூதன் என்று சொல்லி இருக்கிறார், அதனால் அவர்தான் கல்கி அவதாரம் (இந்த கல்கி பாபா என்று ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தாரே, அவருக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ), கல்கி பகவான் குதிரையில் வருவார், முகமது நபி புராக் என்ற குதிரையில் ஏறி ஜெருசலேம் போனார், அந்த ஒரு ஆதாரமே போதுமே என்ற ரேஞ்சில் நிறைய எழுதி இருக்கிறார். புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். ஏதோ மற்ற மதத்து நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அதற்காகப் பாராட்ட வேண்டியதுதான். (ஆனால் பிரம்மாவுக்கு மூன்று தலை என்று எழுதிவிட்டார். அருணாசலேஸ்வரர் ஒரு தலையை கொய்தால் இவரும் ஒரு தலையைக் கொய்கிறார்!)
எனக்கு ஹிந்து தொன்மங்கள் பற்றி நிறையத் தெரியும் என்று கொஞ்சம் கர்வம் இருந்தது. நூஹ் நபி நூஹ் நபி என்கிறார், யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை விஷ்(நூஹ்)வைச் சொல்கிறாரா? இப்படி என் இறுமாப்பை அழித்துவிட்டாரே!
சுட்டி கொடுத்த ஜெயமோகன், சிவேந்திரன் இருவருக்கும் நன்றி!
ஸ்ரீ விஜயா தியேட்டரில் உள்ள சோடா கடையில் வேலை பார்க்கும் சத்தி என்கிற சக்திவேல், இடைவெளி நேரத்தில் சோடா நிரப்பி, விற்று, கழுவி என ஆரம்பித்து அடுத்ததாக வெளியிடப்படும் படத்திற்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டும் வேலை வரை செய்து அங்கேயே வாழ்ந்து வருபவன். சத்தியோடு அவனுடைய நெருங்கிய நண்பன் நடேசன், கணேசன், பூதன் என மற்ற பையன்களும் அந்த தியேட்டரின் வளாகத்திற்க்கு உள்ளே உள்ள டீக்கடை, சைக்கிள் நிறுத்தும் இடம், டிக்கெட் கவுன்டர்களில் சொல்லப்படும் வேலைகளை செய்து அங்கேயே தங்கி வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நண்பகல் ஆட்டம் தொடங்குவதோடு ஆரம்பம் ஆகி இரண்டாம் ஆட்டம் முடிந்து சோடா கடை மூடும் வரை ஓடிக் கொண்டேயிருக்கிறது. அந்த வாழ்க்கையின் ஒரு கால பகுதியை அதில் சம்பந்தப்பட்ட மனிதர்களை, அவர்களுக்கிடையே உள்ள உறவுகளை சத்தியின் வழியே சொல்கிறது பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ நாவல்.
விளிம்பு நிலை என்று சொல்லத் தக்க வறுமையில் இருக்கும் வாழ்க்கையிலும் மற்ற எவரைப் போலவே கிடைக்கும் நேரங்களில் அந்த வாழ்க்கையின் உள்ளே எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கும் மனிதர்களாக தான் அவர்கள் உள்ளனர். கிடைக்கும் சொற்ப பணத்தில் சாப்பாட்டை குறைத்துக் கொண்டு போதை மாத்திரைகளையும், கஞ்சாவையும் புகைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தையை பார்க்கும் போது உண்டாகும் விளையாட்டு தனமும், பசியாறிய பிறகு கிணற்றில் சென்று விழுந்து கும்மாளமிடுவதும் என எங்கும் காணகிடைக்கும் மனிதர்களின் அதே ஆசைகளும் உணர்வுகளும் அவர்களுக்கும் உள்ளது, அவைகளை வாய்ப்பு கிடைக்கும் பொழுது அனுபவித்தும் கொள்கிறார்கள்.
இடையில் குஷ்டரோகம் பிடித்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் சத்தியின் அப்பா அவனைக் காண வருகிறார். தன்னைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாத சத்தி, தன் தந்தை ஒரு பிச்சைகாரன் என்பது வெளியே தெரிந்துவிடுமோ என்கிற பயத்திலும், எரிச்சலிலும் திட்டி அனுப்பி விடுகிறான். அவர் கை வைக்காமல் கொண்டு வந்த சோற்றை தின்னாமல், அவர் கொடுத்த காசை மட்டும் வாங்கிக் கொண்டு இனிமேல் தியேட்டருக்கு வரக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறான். நடேசனின் பாட்டி – அப்பாவின் தாயார் – அவனுக்கு சமைத்து எடுத்து வருகிறார். அதை சாப்பிட்டு விட்டு செலவிற்க்கு காசு தர முடியாது, போய் அப்பனிடம் வாங்கி கொள்ளுமாறு விரட்டி விடுகிறான். அதை பார்க்க பொறுக்காமல் சத்தி பாட்டிக்கு தன் பணத்தை கொடுத்து விடுகிறான்.
தினமும் தியேட்டர் கலெக்ஷனில் கமிஷன் வாங்கி போகும் படக் கம்பெனிகாரன் ஒரு நாள் சத்திக்கு மதுவும், மிக்சரும் கொடுத்து உடலுறவு கொள்கிறான். “அண்ணே..அண்ணே..” என்பதை தவிர சத்தி எதுவும் சொல் இயலவில்லை. பிறகு அதுவே படக்காரனுக்கு பழக்கமாகி விடுகிறது.
ஒருவரிலிருந்து மற்றவர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எடுத்துக் கொள்ளும் ஆதாயங்கள் நாவல் முழுவதும் கதையோட்டமாக வருகிறது. தியேட்டர் தண்ணி தொட்டியிலிருந்து சோடாக்காரர் தன் கடைக்கு தெரியாமல் திருடிக் கொள்ளும் தண்ணீர், காசில்லாமல் குடித்த கலருக்காக டிக்கெட் வாங்காமல் சோடாகடை காரருக்கு தெரிந்தவர்களை அனுப்பும் மானேஜர், எம்ஜியார் படத்திற்க்கு கூட்டம் அதிகமாகும் சமயத்தில் முன்னரே டிக்கெட்டை வாங்கி பிளாக்கில் விற்கும் சத்தி, நடேசன் மற்றும் கூட்டாளிகள், இரண்டாம் ஆட்டத்தில் தூங்கி கொண்டிருப்பவனின் புதிய செருப்பை பையன்களும், சோடாகடைகாரருமாக திருடி கடைக்குள் ஒளித்து வைத்து கொள்வது என தினப்படி விஷயங்களாக அவை நடைபெறுகின்றன. இவை எதிலும் குற்றவுணர்வோ, தன்னிரக்கமோ, நியாயபடுத்துதல்களோ எதுவும் இல்லை.
சோடா கடைகாரருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நிலப் பிரச்சனை நடக்கிறது. மற்றவன் காட்டில் தடம் போடுவதற்கு சம்மதிக்காததால் சோடா கடைகாரருக்கு இடைஞ்சல். இரவோடு இரவாக வேலையாட்களை வைத்து சண்டைக்காரனின் இடம் வழியே தடம் போட்டு விடலாம் என திட்டமிடுகிறார். அப்போது பிரச்சனை ஏற்பட்டால் அடி கொடுக்கவும், வாங்கவும் தியேட்டர் பையன்களுக்கு வீட்டில் தண்ணியும் , சாப்பாடும் போட்டு காவலுக்கு கூட்டி செல்கிறார்.
ஒரு நாள் இரவு சோடா கடைக்கு உள்ளே யாரோ நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நாசப்படுத்தி விடுகிறார்கள். யாரென தெரியாமல் அடுத்த நாள் அவர் எல்லோரையும் பிடித்து அடிக்கிறார். சத்தியும் மதியம் அரை தூக்கத்தில் போய் அடி வாங்குகிறான், அப்போது தான் வேலைக்கு வருகிற வாட்ச்மேன் கிழவனும் அடி வாங்குகிறான். இறுதியில் பூதன் தான் அங்கிருந்து ஓடிப் போவதற்கு முன் இதை செய்திருக்க வேண்டும் என எல்லோரும் கண்டுபிடிக்கிறார்கள். விரக்தியில் நடேசனும் இல்லாமல் – நடேசன் தடம் போன போது நடந்த சண்டையில் இறந்திருக்கலாம் என யூகிக்கலாம் – சத்தி தியேட்டரை விட்டுக் கிளம்புகிறான். சோடா கடைகாரர் திரும்ப வரும்படி கூப்பிடுகிறார், வேண்டாம் என்று நினைத்தாலும் மறுபடியும் சத்தி தியேட்டரை நோக்கி போகிறான்.
ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகமறியா மனிதர்களின் கதைகளுக்கு மாதிரியாக இந்த நாவலின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு விரிவான சித்தரிப்பும், உளப்போராட்டங்களும் நாவலில் சொல்லப்படவில்லை. அந்த தியேட்டரின் வாடிக்கையாக வந்து போகும் பார்வையாளர்களை குறித்தும் பெரிதாக சொல்லப்படவில்லை. இவை வாசிப்பதற்கு ஒரு போதாமை உணர்வை கொடுக்கிறது.
நிழல் முற்றத்தின் சிறப்பாக தோன்றியது என்னவென்றால் அதில் காட்டப்படும் வாழ்க்கை வாசிப்பவருக்காக வாழ்ந்து காட்டப்படவில்லை. அதில் உள்ள மகிழ்ச்சியும், துயரங்களும், கோபங்களும் மிக இயல்பாக எல்லா நிலையிலும் உள்ள மனிதர்களுக்கிடையில் நடப்பவைகளாகவே உள்ளன. கதை மாந்தர்கள் எவரும் தங்களுடைய நிலையை எண்ணி தன்னிரக்கத்துடன் பேசிக்கொண்டும், சமூக அவலங்களை பார்த்து விரக்தியுடன் புலம்பிக் கொண்டும் அவ்வாழ்க்கைக்கு வெளியே நிற்கவில்லை. அதில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு உள்ளே மட்டுமே அவர்கள் வாழ்கிறார்கள், யதார்தத்தை போல. அவ்விதத்தில் எனக்கு இந்த நாவல் அதிகம் அறியப்படாத வாழ்க்கையை, உலகை ஒரு துளியேனும் நேர்மையுடன் காட்டியது என்றுதான் கூற வேண்டும்.
நான் இமையத்தின் எழுத்தை இது வரை படித்ததில்லை. அவரது கட்டுரையைப் படிக்கும்போது இவை எனக்குப் பிடித்த மாதிரி – உபதேசம் இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறதுஇருந்தது. ஆனால் தன் படைப்புகளை இத்தனை தீர்க்கமாக அணுகி இத்தனை சாரத்துடன் எழுதி இருப்பது என்னைக் கவர்ந்தது. கலையம்சம் இருக்குமோ இல்லையோ நல்ல ஆவணமாக இருக்கும் என்று தோன்றியது.
பிறகு அவர் தளத்தைக் கண்டுபிடித்து அங்கே சில சிறுகதைகளைப் படித்தேன். Subtlety என்பது கொஞ்சமும் இல்லாவிட்டாலும் நிச்சயமாக இலக்கியம்தான். அவரை நான் தலித்திய எழுத்தாளர் என்றெல்லாம் வரையறுக்கமாட்டேன். நல்ல எழுத்தாளர், முக்கியமான எழுத்தாளர், தலித் பின்புலத்தில், தலித் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் இலக்கியவாதி என்றே வரையறுப்பேன்.
பேராசை என்ற சிறுகதை ஒரு ஆஃப்ரிக்க (சூடான்?) சிறுகதையை (பெயர் நினைவு வரவில்லை) நினைவுபடுத்தியது. சிறு பெண் வயதான மாப்பிள்ளையின் கிராமத்தில் தினமும் தண்ணீர் எடுக்க மைல் கணக்கில் நடக்க வேண்டாம் என்று அவனை மணக்க சம்மதிப்பாள். யாராவது படித்திருக்கிறீர்களா? கதையின் பெயர் நினைவு வருகிறதா?
இமையம் தன்னை தி.மு.க. தொண்டர் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். இவ்வளவு தெளிவாக சிந்திக்கக் கூடியவர், அதை எழுத்தில் கொண்டுவரக் கூடியவர் தி.மு.க.காரர் என்பது ஆச்சரியப்படுத்தியது. கலைஞருக்குத் தெரிந்தால் அவரே வடிவேலு குரலில் “இன்னுமா நம்மள நம்பறாங்க?” என்று சொல்லிக் கொள்வார்!
இந்தக் கட்டுரை இமையத்தால் 04.03.2013ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமயில என்னெப் பெத்தியே மாதாவே
உன் வெள்ளி வயித்திலியும் நான் கருவா தரிச்சதும்
பச்ச கற்பூரமெல்லாம் தீஞ்சதும்
அன்னிக்கி இந்தக் கருவக் கலச்சியிருந்தா
எனக்கு இன்னிக்கி இந்தக் கலகம் வந்து நேராது
அந்தக் கருவ சிசுவாக்கி இந்தப் பொல்லாத சீமையில
என்னெக் களங்கப்பட வச்சியம்மா…
இந்தப் பாடல் செடல் நாவலில் வருகிறது. இப்பாடலை செடல்தான் பாடினாள். அதனால் அவளுக்கு மட்டும்தான் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. என்னுடைய மூன்று நாவல்களில் வரும் பெண்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும். அப்பெண்களுக்கும் இது பொருந்துவதாகவும் கொள்ளமுடியும். அதே போன்று இப்பாடல் நான் எழுதிய சிறுகதைகளில் வரும் பெண்களுக்கும் பொருந்தும். அவர்கள் பாடியதாகவும் கொள்ள முடியும்.
கோவேறு கழுதைகள்(1994), ஆறுமுகம்(1999), செடல்(2006) ஆகிய மூன்று நாவல்களும், மண்பாரம்(2004), வீடியோ மாரியம்மன்(2008) கொலைச்சேவல்(2013) ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளையும் ‘பெத்தவன்‘ என்கிற நெடுங்கதையையும் எழுதியிருக்கிறேன். மூன்று தொகுப்பிலும் சேர்த்து 43 கதைகள். மூன்று நாவல்களும் மூன்று பெண்களின் வாழ்வையே பேசுகிறது. 43 சிறுகதைகளில் 36 கதைகளில் பெண்கள் – அவர்களுடைய வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இது ஆச்சரியமான நிகழ்வு. எனக்கே நம்புவதற்கு வியப்பாக இருக்கிறது. என் நாவல்களில், என் சிறுகதைகளில் பெண்களாகவே நிறைந்திருக்கிறார்கள்.
நான் எழுதிய பெண்கள் என்ற கட்டுரையை எழுதுவதற்காக நான் எழுதிய பெண்களை சென்று பார்த்தேன். அதாவது அந்த கதைகளை படித்தேன். கதை எழுதுவதற்காக அல்ல. கட்டுரை எழுதுவதற்காக. கதை எழுதுவது வேறு. கட்டுரை எழுதுவது வேறு. ஒரு கட்டுரையாளனாக எனது பெண்களை பார்த்தபோதுதான் பல உண்மைகள் எனக்கே தெரிந்தது. என்னுடைய பெண்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. பெண் உடல், பெண் அரசியல், உடல் அரசியல், பெண் மொழி, பெண் முன்னேற்றம், பெண் இருப்பு, பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர்களோ, தத்துவ விசாரங்களில் ஈடுபடுபவர்களோ அல்ல. பெரிய அழகிகளும் அல்ல. சமூகம் சார்ந்து பேசக்கூடிய சிந்தனாவாதிகளோ, புரட்சிப் பெண்களோ அல்ல. ‘ஆணாதிக்கம் ஒழிக, பெண்மை வாழ்க‘ என்றோ ‘தாய்மையைத் தவிர்ப்போம் பெண்மையைக் காப்போம்‘ என்றோ கோஷமிடாதவர்கள். என்னுடைய பெண்கள் வாயாலும் வயிற்றாலும் உருவானவர்கள், அதே மாதிரி வாயாலும் வயிற்றாலும் வாழ்பவர்கள். வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக் கொண்டே இருப்பவர்கள். என்னுடைய பெண்களுக்கு கனவுகள் கூட வருவதில்லை. மீறி வந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. நமக்கும் அதுதான் வாழ்க்கை.
என்னுடைய பெண்கள் லட்சியப் பெண்களோ, புதுமைப் பெண்களோ அல்ல. சராசரிக்கும் கீழே உள்ளவர்கள். உயர்ந்த சாதி இல்லை. உயர்ந்த பண்புகள் இல்லை. சொத்து இல்லை. நகைகள் இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அழகாகவும் இல்லை. குடும்ப பாதுகாப்பு, கணவன், குழந்தைகள் என்ற பாதுகாப்பு கூட அற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விதவைகள். கிழவிகள், நாகரீகமற்ற கிராமத்துப் பெண்கள். இவர்கள் எப்படி கதையானார்கள், தமிழ் சமூகத்தின் அடையாளமானார்கள்? அதுவும் பெண்கள்? தமிழ்ச் சமூகம், இந்திய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப் பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான பெண்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக இருக்கக்கூடியவர்கள் எப்படி தமிழ் சமூகம் மதிக்கும் கதையானார்கள்? தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள்?
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் அல்ல. சிலப்பதிகாரத்தில் “பத்தினி பெண்டீர் அல்லோம்“ என்று மாதவிக்கு அவளுடைய தாய் சித்திராபதி கூறுவாள். அத்தகைய பெண்கள்தான் நான் எழுதிய பெண்கள். சமூகத்திற்காக சமூகம் உருவாக்கிய பெண்கள். அதாவது பொதுச் சொத்து. சமூகத்திற்காக – சமூகத்தால் பலி கொடுக்கப்பட்ட பெண்கள். சமூகத்தின் உழைப்பிற்காகவும், சமூகத்தின் உல்லாசத்திற்காகவும், சமூகத்தின் நம்பிக்கைகளுக்காகவும் பலியிடப்பட்ட பெண்கள். இப்பெண்கள்தான் இன்று தமிழ்ச் சமூக வாழ்க்கையாக, தமிழின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக இருக்கிறார்கள்.
பெண்களைப் பற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பமல்ல. தேர்வல்ல. நான் பெண்களுக்காக பரிந்து பேசுபவனும் அல்ல. நிஜத்தில் நான் ஒரு ஆணாதிக்கவாதிதான். தமிழ்–இந்திய சமூகம் ஆண்களுக்கு என்று வரையறுத்துள்ள அத்தனை குணங்களும் என்னிடத்திலும் இருக்கின்றன. சற்று கூடுதலாகவும். பிறகு எப்படி பெண்களைப் பற்றி எழுதுகிறேன்? கல்யாணத்திற்கோ, பிற விசேசங்களுக்கோ என்னை அழைத்தபோது – கல்யாணத்திற்கு முன் ‘நீ வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் நடந்த பிறகு ‘குடும்பத்தோடு வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் ஆகாத வரை நான் ‘காலிப்பயல்‘. கல்யாணமானதும் நான் குடும்பஸ்தன். குடும்பம், குடும்பஸ்தன் என்ற சொல் – பெண்ணோடு ஆண் சேர்ந்த பிறகுதான் வருகிறது. பெண் வெறும் பெண்ணல்ல. குடும்பம். அதனால் நான் பெண்களை அல்ல குடும்பங்களை எழுதியிருக்கிறேன். பெண்கள்தான் படைப்புக்கான ஊற்றுக்கண். நிலம்.
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும், தெருவும் கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக் கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக் கூடியவர்கள், பாடக் கூடியவர்கள். பேசக் கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப் போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக் கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசை தீர வாழத் துடிப்பவர்கள். என்னுடைய பெண்களில் ஒருத்தி கூட தற்கொலை செய்து கொண்டவர்கள் அல்ல. அந்த எண்ணம் என்னுடைய எந்த பெண்ணின் மனதிலும் வந்ததே இல்லை. ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியத்தைத் தவிர. மாதாமாதம் உதிரத்தைப் பார்க்கிறவர்கள் பெண்கள். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் உதிரத்தைப் பார்க்கிறவர்கள். ஆனால் தன் குழந்தையின் கையில் ஒரு துளி ரத்தத்தை கண்டதும் துடித்துப் போகிறவர்களும் பெண்கள்தான். இந்த துடிப்பு – வசீகரம் – அழகுதான் பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. அதே மாதிரி பெண் தன்னை விட்டு அந்நியப்பட்டுவிடுவாளோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு கணவனும் வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். அந்த அச்சத்தை போக்கத்தான் சமூக ஒழுக்க, நீதி, நெறி, அறப் பண்புகளை எல்லாம் பெண்ணை மையப்படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது. பெண் ஓடிவிடுவாளோ என்ற தனி மனித அச்சம், சமூக அச்சம்தான் – என்னைப் பெண்களைப் பற்றி எழுத வைக்கிறது. முன்பின் தெரியாத ஒரு ஆணோடு வாழ்வதற்குப் போகிறாள் ஒரு பெண். பதினாறு பதினேழு வயதிலேயே ஒரு பெண்ணால் குழந்தையை பிரசவிக்க முடிகிறது. எவ்வளவு பெரிய தைரியம் இது, துணிச்சல் இது? இந்த தைரியத்தில், துணிச்சலில் நூறில் ஒரு பங்கு கூட ஆணிடம் இல்லை.
நம்முடைய புராண, இதிகாச, ஐதீகக் கதைகள், நீதிக் கதைகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வாய்மொழிக் கதைகள், எல்லாமும் ஏன் பெண்ணுக்கான ஒழுக்கத்தை, அறத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றன? பத்தினி சொன்னால் மழை வரும், பத்தினி சொன்னால் மாநகரம் எரியும், பத்தினி கட்டளையிட்டால் பஞ்சபூதங்களும் கை கட்டி நிற்கும், பத்தினி சொன்னால் வானத்து மழையே நின்றுவிடும், கற்பில் குறைபாடு இருந்தால் மழையே வராது என்றும் எதற்காக சொன்னார்கள்? பெண் வலிமையானவள். மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும். அதனால் அவளை வெல்ல முடியாது. அதனால் ஆண்கள் தந்திரம் செய்தார்கள். அந்த தந்திரங்கள்தான் நம்முடைய புராண, இதிகாச, காப்பிய, ஐதீக, நீதிக் கதைகள், சமூக ஒழுக்கங்கள்.
தாய் வழிச் சமூக அமைப்பிலேயே பெண்ணுக்கு தீயை, மழையை, காற்றை தன் ஏவலுக்கு உட்படுத்தும் ஆற்றல் இருந்தது என்று நம்பப்பட்டது. காப்பிய காலத்திலும் அதே நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கற்பு உள்ள பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று வரையறுத்தது.
‘மாநகர் உள்ளீர் மழை தரும் இவள்‘ என்று மணிமேகலை சொல்கிறது.
‘வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு’
என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை‘ என்று வள்ளுவர் சொல்கிறார்.
என்னுடைய பெண்கள் மழையை வரவழைக்கிறவர்களோ – மழையை நிறுத்துகிறவர்களோ, மழை வராமல் இருப்பதற்கான காரணத்தைத் செய்கிறவர்களோ அல்ல. ‘இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டு போச்சி‘ என்ற வகையறாக்கள். ஒரு வகையில் சாமி குத்தம் செய்யாதவர்கள்.
நான் உருவாக்கிய பெண்களில் ஒருத்தி கோவேறுகழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியம். வண்ணாத்தி. அவள் மூலமாகத்தான் ஊர் துணிகள் வெளுக்கப்படுகின்றது. அவளுடைய உதவியால்தான் ஊரில் குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்த குழந்தைகளின் பீத்துணி, மூத்திரத் துணி அலசப்படுகிறது. பிள்ளை பெற்ற பெண்ணின் தீட்டுத்துணியை அவள்தான் அலசித்தர வேண்டும். பிள்ளை பெற்ற பெண்களுக்கு மார் கட்டிக்கொண்டால் அவள்தான் வைத்தியம் செய்ய வேண்டும். பிள்ளைக்கு பால் கொடுக்க தாய்க்கு சுரக்கவில்லை என்றால் வண்ணாத்தியின் மார்பகத்தில்தான் பிள்ளை பால் குடிக்க வேண்டும். பெண் பிள்ளை வயசுக்கு வந்தால் சடங்கு முடியும்வரை நாள்தோறும் தீட்டுத்துணியை எடுத்துக்கொண்டு போய் அலச வேண்டும். ஊரில் யார் செத்தாலும் முதலில் அவள்தான் போக வேண்டும். எழவு சொல்ல, வாய்க்கரிசி தூக்க, பாடை கட்ட, குடம் உடைக்க, பால் தெளிக்க என்று அவள்தான் போக வேண்டும். அறுவடை காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் களம் தூற்றப் போக வேண்டும். இரவில் ஒவ்வொரு வீட்டுக்கும் சோறு எடுக்க போக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திருட்டுப் பிள்ளை வாங்கும் பெண்களின் கருவை கலைக்கவும் ஆரோக்கியம் வேண்டும். ஊர் ஆண்கள் செய்யும் பாலியல் தொல்லைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் மகள் மேரி எதிர்கொள்ளும் வன்புணர்ச்சியையும் அவள் சகித்துக்கொள்கிறாள்.
ஆரோக்கியத்தை யார் உருவாக்கினார்கள்? சமூகம். ஊரின் நலனுக்காக – பொதுச் சொத்தாக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட, பலி கொடுக்கப்பட்ட பெண். அவளைத் தெரியாமல் அந்த ஊரில் யாராவது இருக்க முடியுமா? ஆண்களே இல்லையா, ஆண்கள் வேலையே செய்யவில்லையா என்று கேட்கலாம். நாவலில் ஆண்கள் இருக்கிறார்கள். தாய் ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டியாடுகள் மாதிரி. ஆரோக்கியத்தின் பின்னால் சவுரி. மேரியின் பின்னால் அவளுடைய புருசன். மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் கையைக் கட்டிக்கொண்டு சின்ன சேலத்திற்கு ஓடுகிறான் ஜோசப்.
கோவேறுகழுதைகள் நாவலில் ஆரோக்கியம் மட்டும்தான் சமூகம் பலி கொடுத்த பெண் என்று சொல்ல முடியாது. ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – எல்லாருமே தனது உல்லாசத்திற்காக சமூகம் – பலி கொடுத்த சமூகத்தின் பொதுச் சொத்தாக்கிய பெண்கள். பாலியல் தொழிலாளிகள். இந்த நாவலில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆள் பிடித்து வரும் தரகர்கள், பெண்களை வைத்து தொழில் செய்யும் ஏஜெண்ட்டுகள், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலையும் ஆண்கள் இருக்கிறார்கள். எல்லாருமே தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா என்ற பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் நிழல்கள். ஆண்கள் காற்றிலாடும் மரங்களாக இருக்கிறார்கள். பெண்கள் சூறைக்காற்று. என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். எப்படி இருக்கிறார்கள்? பெண்களுடைய ஏவல் ஆட்களாக, எடுபிடிகளாக. என்னுடைய பெண்கள் உழைக்கிறவர்கள், உழைப்பையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அதனால் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். உழைப்பு அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கிறது.
நகரமயமாதல் – பெண்களை ஒரு வகையில் சுதந்திரமானவர்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் பெண்களை இரட்டை உழைப்புக்கு ஆளாக்குகிறது. கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் பெண்களுக்கு குறைந்த சம்பளம் தரப்படுகிறது. பெண்களை வேலைக்கு எடுப்பதே குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்பதற்காகத்தான். அதிக உழைப்பு. குறைந்த சம்பளம். பெண்கள் என்றால் போராட்டமும் வராது. பாலியல் சீண்டலும் செய்யலாம். ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய பெண்களில் ஒருத்தி கூட பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வக்கிரத்திற்க்கு ஆளாகாதவள் என்று யாரையும் அடையாளம் காட்ட முடியாது. இது நகரமயமாதல் பெண்களுக்கு தந்த வெகுமதி. இதைத்தான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் போற்றுகிறோம். அதிவேக வளர்ச்சி அதிவேக சீரழிவு.
பாலியல் தொழிலாளி ஆவதுதான் என் வாழ்வின் லட்சியம், கனவு என்று சொன்ன பெண் யாரு? ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? இது யாருடைய விருப்பத் தேர்வு?
சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன? உருவாக்கப்படுகின்றன? இவையெல்லாம் ஏன் ஆண்களுக்கு பெருந்துவதில்லை? யோனியை வெல்லும் திறன் உலகில் எந்த ஆணிடமும் இல்லை. பெண்ணின் உடலை வெல்ல முடியாது என்கிற உண்மையை மறைப்பதற்காக ஆணின் இயலாமையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுக்க நெறிதான் – கற்பு. காலத்திற்கு காலம் சமூகம் மாறுகிறது. வாழ்வியல் முறைகள் மாறுகின்றன. ஆனால் பெண்ணுக்கென்று உருவாக்கப்பட்ட கற்பு நெறி – என்பது மட்டும் மாறவே இல்லை. நம்முடைய சமூகம் பெண்ணின் பெருமையை, முழுமையை அவளுடைய கன்னித்திரையில் வைத்திருக்கிறது. கன்னித்திரையை புதுப்பித்துக் கொள்வதின் வழியாக தங்களுடைய புனிதத்தன்மையை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதில் இன்றைய நவீன பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். கன்னித்திரையை மீட்டுத் தருவதற்கான மருத்துவ மனைகளும் பெருகிவிட்டன.
ஆண்கள் என்ற புனிதர்கள், உத்தமர்கள், இறை தூதர்கள் கன்னித்திரையின் ஒழுக்கத்தையே பெண்ணின் ஒழுக்கமாக, கற்பு நெறியாக உருவாக்கிய புனிதத்திற்கு எதிரானவர்கள் என்னுடைய பெண்கள். அவர்களுடைய வாழ்க்கையில் கற்பு நெறி என்று ஒன்றும் இல்லை. புனிதம் என்று ஒன்றும் இல்லை. கன்னித்திரையை புதுப்பித்துக் கொண்டு தங்களுடைய பெண்மையின் புனிதத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. சமூக எதார்த்தத்தின் முகம் கொடூரமானது, குரூரமானது என்பதை என்னுடைய பெண்கள் காட்டுகிறார்கள். அதோடு சமூகத்தின் பித்துக்குளித்தனத்தையும்.
கோவேறுகழுதைகள் நாவலின் ஆரோக்கியம் ஒரு கிராமத்தின் சொத்தாக, ஒரு கிராமத்திற்காக மட்டுமே பலியிடப்பட்டவளாக இருக்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – ஒரு நகரத்தின் சொத்தாக, பலியிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
செடல் நாவலில் வரும் செடல், பாஞ்சாலி, லட்சுமி ஆகியோர் கிராமம், நகரம் என்ற எல்லையை மீறி பல ஜில்லாவிற்கும் பொதுவாக, பல ஜில்லாவுக்குமாக பலி கொடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். செடலுக்கு முப்பது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. அதே மாதிரி பாஞ்சாலிக்கும் இருபது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. இருவருமே கிராம தெய்வத்திற்கு பொட்டு கட்டிவிடப்பட்டவர்கள். பொட்டு கட்டிவிடப்பட்ட கோவில்களில் ஆடுவதோடு ஜில்லா விட்டு ஜில்லா சென்று தெருக் கூத்து ஆடுகிற ஆட்டத்தினால் பல ஜில்லாவிலும் புகழ் பெற்ற பெண்களாக இருக்கிறார்கள். இன்று குறவன் குறத்தி ஆட்டத்தில் ஆடுகிற பெண்கள் குறித்து பொது சமூகத்தின் மனநிலை என்ன? ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராக தெருக்கூத்து ஆடச் சென்றவர்கள் பாஞ்சாலியும் செடலும். சமூகம் அவர்களை எப்படி பார்த்திருக்கும்? எப்படி நடத்தியிருக்கும்? எப்படி அதை இப்பெண்கள் சகித்துக் கொண்டார்கள்? சங்க இலக்கியம் வர்ணித்த ‘ஆடற் மகளிர்‘ இனத்தின் கடைசி வாரிசுகள்தான் பாஞ்சாலியும், செடலும்.
ஒரு கிராமத்தின் தேவைக்காக பலியிடப்பட்ட பெண் ஆரோக்கியம். நகரத்தின் தேவைக்காக பலியிடப்பட்டவர்கள் தனபாக்கியம், வசந்தா, சின்னப்பொண்ணு, அபிதா. சமூகத்தின் சாதிய, சமய நம்பிக்கைகளுக்காக, கலாச்சார பண்பாட்டுக் கூறுகளுக்காக பலியிடப்பட்ட செடலும் பாஞ்சாலியும். வண்ணாத்தி இல்லாமல் இருக்க முடியுமா? காமச் செயல்பாடுகள்தானே ஆணின் வீரத்திற்கு எடுத்துக்காட்டு. அது இல்லாமல் எப்படி? சமூகம் என்றால் சாதி வேண்டும், சமயம் வேண்டும், நம்பிக்கைகள், அறம், நீதி வேண்டும். சமூகத்தின் இந்த மூன்று தேவைகளுக்காகவும் உருவாக்கப்பட்டவர்கள்தான். செடல், பாஞ்சாலி நான் உங்களுக்கு காட்டிய ஆரோக்கியம், தனபாக்கியம், சின்னப்பொண்ணு, அபிதா, வசந்தா. மாற்றிக்கூறினால் பொது உழைப்பிற்கு ஆரோக்கியம், பொது உல்லாசத்திற்கு தனபாக்கியம், பொது நம்பிக்கைக்கு செடல். இப்பெண்களின் வாழ்க்கையை தீர்மானித்தது – சம்பந்தப்பட்ட பெண்கள் அல்ல. அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் கூட அல்ல. சமூகம்.
என்னுடைய நாவல்களில் வரக் கூடிய பெண்கள்தான் பொது சொத்தாக, ஊர் அறிந்தவர்களாக, சமூகத்திற்காக சமூகத்தால் பலியிடப்பட்டவர்கள் என்றால் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளில் வரக்கூடிய பெண்களின் வாழ்க்கையையும் சமூகமே தீர்மானிக்கிறது.
திருட்டுப்போன பொண்ணு – சாமக் கோடாங்கி இனத்தை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்த இனத்தில் பெண்கள் வயதுக்கு வந்தால் உடனே ஊர் மந்தையில் குச்சில் கட்டி தங்கவைத்து, இருபது நாட்கள் கழித்து சடங்கு முடித்துத்தான் பெண்ணை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவார்கள். குச்சிலில் பெண் தங்கியிருக்கும்போது – பெண்ணுக்குரிய தாய்மாமன்கள், முறை மாமன்கள் – அவர்களுக்கிடையே பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று போட்டியிருந்தால் பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய் தாலி கட்டி விடுவார்கள். அவ்வாறு தாலி கட்டிவிட்டால் பெண்ணை பெற்றவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது. சேர வேண்டியவனுக்கு சேர்ந்துவிட்டது சொத்து – என்று சாதி பஞ்சாயத்தில் தீர்ப்பாகிவிடும். அந்த மாதிரி எதுவும் நடக்கக் கூடாது என்று காவல் இருப்பார்கள். காவலை மீறி பெண்கள் திருட்டுப் போவது வழக்கம். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள். அதில் ஒரு பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று கடும் போட்டி. அதனால் இரவோடு இரவாக ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். விடிந்து பார்த்தபோதுதான் தெரிந்தது – தூக்கிக் கொண்டு வரவேண்டிய பெண் ஒன்று, தூக்கிக் கொண்டு வந்த பெண் ஒன்று. பெண் மாறிவிட்டது. ஊர்ப் பஞ்சாயத்துக்கு, சாதி பஞ்சாயத்துக்கு பயந்துக்கொண்டு எட்டு நாள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்துவிட்டு பெண்ணை அனுப்பி விடுகிறார்கள். திரும்பி வந்த பெண்ணுக்கு – அதாவது திருட்டுப் போன பொண்ணுக்குக் கல்யாணம் நடக்கவில்லை. காரணம் திருட்டுப் போன பொண்ணு என்பதால் கல்யாணம் நடக்காமலேயே கிழவியாகிவிடுகிறாள். கல்யாணம் நடக்காமல் வீட்டிலேயே இருந்துவிட்டதால் தெருவிலிருக்கும் குமரி பிள்ளைகளுக்கு அவள்தான் துணை. விளையாட்டுத் தோழி. பிள்ளைக்காரிகளுக்கு பிள்ளை வைத்திருக்கிற ஆள். கிழவிகளுக்கு கதை கேட்கிற ஆள் – என்று கிழவியாகிவிடுகிறாள். திருட்டுப் போன காரணத்தினால் அந்த ஊருக்கு மட்டுமல்ல. சுற்றுவட்டார ஊர்களுக்கும் தெரிந்த பெண்ணாக – பெயர் பெற்ற பெண்ணாக இருக்கிறார்கள். அவளுடைய வாழ்க்கையை யார் தீர்மானித்தது? திருட்டுப் போனதால் அவளைக் கல்யாணம் கட்டிக் கொள்ளத்தான் யாரும் வரவில்லை. ஆனால் திருட்டுக் காதல் செய்யவும், திருட்டுப் பிள்ளை கொடுக்கவும் ஊர் உலகத்து ஆண்கள் எல்லாம் வந்தார்கள் என்பது முக்கியமானது.
அணையும் நெருப்பு கதையில் வரும் பெண்ணின் பெயர் சந்தோசம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ஒரு பையனைக் காதலித்ததால் அவளுடைய காதலை பள்ளிக்கூட சுவர், வாட்டர் டேங்க் என்று பையன்கள் எழுதி விடுவதால் – சந்தோசத்தின் காதல் விசயம் பத்து இருபது ஊர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் சந்தோசத்திற்கு அவசரமாக கல்யாணம் நடக்கிறது. மாப்பிள்ளை போலீஸ்காரர். இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கிறது. பன்னிரெண்டாவது வருசத்தில் ஒரு விபத்தில் சந்தோசத்தின் புருசன் இறக்க கருணை அடிப்படையில் வேலை கேட்டு – புருசன் வேலை செய்த காவல் நிலையத்திற்கு போகிறாள். அங்கிருக்கும் ஆய்வாளர் உதவுகிறார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் எழுத, ஒவ்வொரு அலுவலகமாக, ஒவ்வொரு ஊராக செல்ல உதவுகிறார். இரண்டாண்டு கடக்கிறது. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்கும் காதல் ஏற்படுகிறது. வேலை கிடைக்கிற நேரத்தில் ஆய்வாளரின் மனைவி சந்தோசத்தின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். ஆய்வாளரை கைது செய்யக் கோரி பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்கிறார்கள். சாலை மறியல் என்பதால் செய்தித்தாள், தொலைக்காட்சிகள் வருகின்றன. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்குமான காதல் – உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஊடகத்தால் சந்தோசம் விபச்சாரியாக்கப்படுகிறாள். ஆய்வாளரின் மனைவி பத்தினியாக்கப்படுகிறாள். சந்தோசத்தின் காதல் ஏன் பள்ளியின் சுவர்களில் எழுதப்படுகிறது? முப்பது வயதில் ஏற்பட்ட காதல் ஏன் உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது? உலகம் முழுவதும் அறியப்பட்ட பெண்.
வரம் என்ற கதையில் வரும் பெரியநாயகம். தான் பெற்ற ஒரே பிள்ளையும் சாக வேண்டும் என்று குலத்தெய்வத்திடம் வேண்டுகிறாள். பெரியநாயகத்தின் மகள் +2வில் கடைசி பரீட்சை எழுதப் போனவள் சொந்த பெரியப்பா மகனோடு ஓடிப்போய்விடுகிறாள். விசயம் ஊர் உலகத்திற்கே தெரிந்துவிடுகிறது. அப்போது குலதெய்வத்திடம் வேண்டுகிறாள். ‘இன்னம் எட்டாம் நாளுக்குள்ளார அவ சாவணும். இல்லன்னா ஒம் மூஞ்சியில சாணிய கரச்சி ஊத்திப்புடுவன்‘ என்று சாமிக்கு உத்தரவு போடுகிறாள். சாமியின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றுகிற பெண் – பெரியநாயகம்.
பொன்னம்மாவின் குடும்பக் கதையில் வரும் பொன்னம்மா. ஒரு குடும்பம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போகிறது. அப்படிப் போகும்போது குலதெய்வத்தை ஒரு கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு போகிறார்கள். ஒரு ஊரில் நிலை பெறுகிறார்கள். குலசாமியை குடி வைக்கிறார்கள். குடும்பம் பெருகுகிறது. குலசாமியின் புகழ் பரவுகிறது. படிப்படியாக குடும்பம் பல குடும்பமாகி, பல ஊர், பல தேசம் என்று சிதறுகிறது. ஒரே ஒரு பெண் மட்டும் எஞ்சுகிறாள். அவள்தான் பொன்னம்மா. அனாதையாகிவிட்டதால் இரவும் பகலும் கோவிலைக் கூட்டிக் கொண்டு கிடக்கிறாள். இரவில் சாமி வந்து பொன்னம்மாவோடு படுத்துக்கொள்கிறது. அவள் புருசனோடு படுத்திருந்தாலும், புருசனை விலக்கி விட்டுவிட்டு குள்ளக்கருப்பு சாமி அவளோடு படுத்துக்கொள்ளும். சாமியோடு படுத்துக்கொள்கிற பெண் – பொன்னம்மா.
பெத்தவன் கதையில் வரும் பாக்கியம் – அவளுடைய காதலை பல ஊர் பேசுகிறது. பல ஊர் பஞ்சாயத்து பேசுகிறது. சாதி பேசுகிறது. கட்சி பேசுகிறது. பாக்கியத்தின் காதலை – வாழ்வை யார் தீர்மானிக்கிறார்கள்? பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா? வழியிலேயே கொலை செய்யப்பட்டாளா? தெரியாது.
சத்தியக்கட்டு கதையில் வரும் பொன்னருவி தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண். உயர்ச்சாதிக்காரனால் காதலிக்கப்பட்டு கர்ப்பமாகிறாள். எட்டு மாதம். கல்யாணம் செய்து கொள்ள கேட்கிறாள். உயர்ச்சாதிக்காரனின் வாரிசு தாழ்த்தப்பட்ட இனத்தின் பெண்ணின் வயிற்றில் வளருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் உயர்ச்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவில் வாழ முடியுமா? முடியாது. அப்படியிருக்கும்போது அவள் எப்படி உயர்ச்சாதிக்காரனோடு இணைந்து வாழ்வது? அதனால் ஒரு குளத்தில் மூழ்கடித்து கொல்லப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சாதிக்காரி செத்ததால் அந்த குளம் தீட்டுக்குளம் என்றாகி, ஆடுமாடுகள்கூட அந்தக் குளத்தில் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுகின்றன. போலீஸ், கோர்ட், வழக்குக்குப் பயந்துகொண்டு பொன்னருவி – சாமியாக்கப்படுகிறாள். பொன்னருவி சாமி. கல்யாணமாகாத பெண்களுக்கு கல்யாண வரம் கொடுக்கும் சாமி. பிள்ளையில்லாத பெண்களுக்கு பிள்ளை வரம் கொடுக்கும் சாமி. பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்க வரம் கொடுக்கும் சாமி. ஒவ்வொரு வருசமும் பொன்னருவி சாமிக்கு திருவிழா நடக்கிறது. அவள் கொலை செய்யப்பட்ட குளம் மட்டும் இன்றும் தீட்டுக்குளம். பொட்டைக்குளம். பறச்சிக்குளம்.
தமிழகத்தில் பெண் தெய்வங்களாக உள்ள எல்லா சாமிகளுமே ஒரு காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களே. உயர்ச்சாதிக்காரனை காதலித்த தாழ்த்தப்பட்ட பெண்கள் – தாழ்த்தப்பட்ட இனத்து ஆண்களை காதலித்த உயர்குலத்துப் பெண்கள் கொல்லப்பட்டனர். சாமிகளாக்கப்பட்டனர். சாதியின் பெருமைக்காக, சாதியின் பெருமையை காக்கக் கொலை செய்யப்பட்ட பெண்கள்தான் மாரியம்மன், தீப்பாஞ்சம்மன், செங்கேணியம்மன். சீலைக்காரி அம்மன். மானங்காத்தாள் – என்று ஒரு சாமி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்து ஆணை காதலித்த உயர்குலத்து பெண் கல்யாணி. அவளுடைய காதலை வீடும், ஊரும், சாதியும் எதிர்க்கிறது. ஊர் கொல்வதற்கு முன் நீயாகவே செத்துவிடு என்று சொல்கிறார்கள். அதை ஏற்று தானாகவே செங்கல் சூளைக்குள் இறங்கி மாண்ட பெண் கல்யாணி. சாதிப் பெருமையை காப்பதற்காக செங்கல் சூளையில் உயிர்விட்டாள். சாதியின் மானத்தைக் காப்பாற்றினாள். அதனால் அந்த பெண்ணுக்கு – அதாவது சாமிக்கு மானங்காத்தாள் என்று பெயர். இந்தியத் தொன்மம் என்பது இவர்கள்தான். இப்படியான பெண்களில் கண்ணகி – கொற்றவை என்கிற தொன்மமும் அடங்கும்.
ஆரோக்கியம், மேரி, தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா, செடல், பாஞ்சாலி, திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா, பாக்கியம் – பொன்னருவி, கோகிலா இத்தனை பெண்களில் – ஒருத்தி கூட தன்னுடைய வாழ்வை – விருப்பத்தை தானே முடிவு செய்தவர்கள் அல்ல. மாறாக ஊர் முடிவெடுக்கிறது – உலகம் முடிவெடுக்கிறது. திருட்டுப்போன பொண்ணை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? தெரியாது. பெத்தவன் கதையில் பாக்கியத்தின் காதலன் யார்? தெரியாது. இப்பெண்கள் தங்களுக்கு விதித்த வாழ்க்கையை முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் – அதாவது சமூகம் ஏன் தீர்மானித்தது என்று ஒருபோதும் கேள்வி கேட்காதவர்கள். ஆனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு ஈடுபாட்டுடன் – முழு அர்த்தத்தோடு வாழ்ந்தவர்கள். தாங்கள் வாழ்வது இழிவானது என்றோ, கேவலமானது என்றோ வெறுப்புடன் அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையை குறை கூறியதில்லை. குற்றம் சாட்டியதில்லை. ஆசை கொண்ட மனங்களுக்குத்தான் இக்குணங்கள் இருக்கும். என்னுடைய பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுடைய மொழியைப் பேசினார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இப்பெண்கள் என்னிடம் கண்ணீராகவும் சொற்களாகவும், ஒப்பாரிப் பாடலாகவும் தந்தார்கள். அதைத்தான் நான் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் தந்திருக்கிறேன்.
அணையும் நெருப்பு – சந்தோசம் விதவை. ஒரு கதையும் இரண்டு மனிதர்களும் கதையில் வரும் குள்ளம்மாள், பழம்புளி வீடு கதையில் வரும் பஞ்சவர்ணம், அவரவர் பாடு கதையில் வரும் தீபாவின் அம்மா, உயிர்நாடி கதையில் வரும் தங்கம்மா, அன்னக்கிளியும் பன்றிக்கறியும் கதையில் வரும் பழனியம்மா, விடியாத இரவு பழனியம்மா, தொடரும் கதையில் வரும் சின்னம்மா, அம்மாவின் இடம் கதையில் வரும் அம்மா, நிஜமும் பொய்யும் கதையில் வரும் மொட்டையம்மாள், பயணம் கதையில் வரும் லோகாம்பாள், அம்மா கதையில் வரும் பெண், நாளை கதையில் வரும் பெண், கொலைச்சேவல் கதையில் வரும் கோகிலா இவர்கள் அனைவரும் விதவைகளே. இப்படி எல்லாருமே விதவைகளாக இருக்கிறார்கள். கணவன் இல்லாததை ஒரு குறையாக, பெரிய இழப்பாக கருதாதவர்கள். முடங்கிப் போகாதவர்கள். சகிப்புத் தன்மையை தங்களுக்கான பொக்கீசமாக, ஆபரணமாக ஏற்றுக்கொண்டவர்கள்.
சமூகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கும்போது – சமூகத்தால் இழிவு செய்யப்படுகிற பெண்களையே நான் உருவாக்கி இருக்கிறேன். ஆரோக்கியம் ஒரு பெண் அல்ல. ஒர கிராமத்தின் மொத்த வாழ்க்கை. செடல் நம் சமூகத்தின் மிகப் பெரிய நம்பிக்கைகள். தனபாக்கியம், திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா – இது எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. இவர்கள் சமூகத்தின் நடப்புகளாக, சமூகத்தின் நிகழ்வுகளாக இருந்தவர்கள். இவர்கள்தான் தமிழ் சமூகம் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் எப்படி வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள். தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய பெண்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் இப்பெண்கள் போராடுகிறார்கள்.
நான் ஒரு பெண்ணின் கதையை எழுதவில்லை. ஒரு குடும்பத்தின் கதையை எழுதவில்லை. ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும்? யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள்? ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – ஒரு நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூகம் எப்படியிருந்தது என்பதை சொல்லவே – கதை எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல.
ஒரு நிலப்பரப்பை, குறிப்பிட்ட காலத்தை, அக்கால சமூக நடவடிக்கையை சொற்களுக்குள் சேமித்து வைக்க இப்பெண்கள் எனக்கு உதவினார்கள். வழிகாட்டியாக இருந்தார்கள். கண்ணாடியாக இருந்தார்கள்.