ஒரே ஒரு இரண்டு தமிழ்ப்படங்கள் இது வரை சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கின்றன. ஒன்று கஞ்சிவரம் (திருத்திய கோபிக்கு நன்றி!) இன்னொன்று சிவகுமார், ராதா, ஜெயபாரதி நடித்து கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம். மூலக்கதை இ.பா.வுடையது.
எளிமையான கதைக்கருதான். ஆசாரசீலர், வேதாந்த சிம்மம் வேம்பு ஐயரின் மகன் டெல்லியில் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணந்து கொள்கிறான். வேம்பு மகன் வீட்டுக்கு வரலாம், மருமகள் காலெடுத்து வைக்கக்கூடாது என்கிறார். ஆனால் மகன் மணவாழ்வு முறிவடைந்தது என்று கேட்டதும் அதிர்ச்சியில் தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது. தன் அம்மாவுக்காக தான் மிகவும் விரும்பிய, தன்னை விரும்பிய தன் முதல் மனைவி அவயத்தை தள்ளி வைத்து வேறு மணம் புரிந்து கொண்டதின் குற்ற உணர்ச்சிதான் அது, தான் செய்த தவறு தன் மகன் தலையில் விடிந்திருக்கிறது என்பது மெதுவாக எல்லாருக்கும் தெரிய வருகிறது.
இ.பா. சிறப்பாக எழுதியிருக்கிறார். அவர் உணர்ச்சிகரமான ஒரு கதையை எழுதுவார் என்று நான் நினைத்ததில்லை. அவருடைய hallmark cynicism எதுவும் இல்லாத கதை. அதுவே இந்தக் கதைக்கு ஒரு special charm-ஐத் தருகிறது. அதுவும் என்னை மிகவும் கவர்ந்தது அந்த அம்மா பாத்திரம்தான். அந்தப் பாத்திரத்தில் எத்தனை சொல்லப்படாத கதைகள்? இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்தும் வேம்புவின் மனதில் அவயம்தான் வியாபித்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ளும்போது எப்படி உணர்ந்திருப்பாள்? ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அது ஊருக்கே தெளிவாகத் தெரியும்போது எப்படி உணர்ந்திருப்பாள்?
சிறுகதை 1968-இல் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர் வட்டம் அப்போது பதிப்பித்ததாம். இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார்.
I wrote Utchi Veyil in 1968, soon after my father’s death. Happening in Kumbakonam, my native town, this was my first long story based outside Delhi. The novella was published by Vacakar Vattam, an innovative publishing concern in the sixties that was, perhaps, ahead of its time. The story, when published along with five more novellas of up and coming writers like me, won critical acclaim as ‘a totally different piece of fiction portraying the distinctive cultural flavour of Tanjavur district.’ I thoroughly enjoyed writing this short novel, as it had some autobiographical references.
திரைப்படமும் சிறப்பாக வந்திருக்கிறது. ராதா, சிவகுமார், ஜெயபாரதி எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இலவசமாக இங்கே பார்க்கலாம்.
உச்சி வெயில் சிறுகதையை நான் ஒரு தொகுப்பில்தான் படித்தேன். இந்தத் தொகுப்பில் விட அதிகமாக என்னைக் கவர்ந்த, ஒரு இ.பா. trademark சிறுகதை உண்டு – “ஒரு இனிய மாலைப்பொழுது“. பேராசிரியரின் மனைவி வெகுநாள் கழித்து சந்தித்த தன் கல்லூரித் தோழியையும் அவள் கணவனையும் விருந்துக்கு அழைத்திருக்கிறாள். தோழியின் கணவன் மர வியாபாரி. பேராசிரியரும் மர வியாபாரியும் பேசிக் கொள்வது க்ளாசிக். அபத்தத்தின் உச்சம். இருவருக்கும் பேச பொதுவாக விஷயமே இல்லை, இவர் கவிதையைப் பற்றிப் பேச, அவர் டைனிங் டேபிளில் அடக்கவிலை என்ன இருக்கும் என்று யூகிக்கிறார். தஞ்சாவூர் குசும்பு என்பார்கள், அது இ.பா.விடம் நிறையவே இருக்கிறது! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார்.
I wrote ‘A Pleasant Evening’ to tease my wife. She had invited her former classmate and her husband, a stiff-collared, blue-blooded bureaucrat for dinner. In my story I made him a timber merchant. I found conversation between me and him was tough and heavygoing and, as the evening began to fade, the rest was silence!
இந்தத் தொகுப்பில் இருக்கும் “பயணம்” சிறுகதை டிபிகல் இ.பா. அம்மாவின் பிணம், ஆனால் லாஜிஸ்டிக்ஸ் பற்றியே கதை. இ.பா.வே சொல்வது –
‘The Journey’, was written soon after my mother’s death in Delhi in 1969. Of course, I am not a ‘fingering slave’ ‘to peep’ and fictionalise ‘over my mother’s grave’, as Wordsworth would say, but I could not have helped an intrinsic part of me, detaching itself from my sorrowing self, to watch and observe others, who had arrived at the funeral to play the role, expected of them.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த மூன்று சிறுகதைகளும் கிடைக்கின்றன. (High Noon and Other Stories)
இவற்றைத் தவிரவும் மூன்று சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உண்டு. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் சிறுகதை ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. இதை ஏன் பரிந்துரைக்கிறார் என்று என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. சுமைகள் சிறுகதையின் நாயகன் அழகற்றவன். ஒரு அழகியை மணக்கிறார்ன். அவள் ஒரு பணக்காரனோடு தொடர்பு வைத்துக் கொள்வதை வெளிப்படையாக சொல்லி விவாகரத்து வாங்குகிறான். தீர்ப்பு சிறுகதையிலோ இளமையில் இருந்த அழகு போனதை அழகை பூஜிக்கும் இருவர் எப்படி அணுகுகிறார்கள் என்று கற்பனை செய்திருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டி: மறுபக்கம் திரைப்படம் பார்க்க