ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஒரிஜினல் நாவலை எழுதிய விகாஸ் ஸ்வரூப்

(திருத்தப்பட்ட மீள்பதிப்பு)

யார் இந்த விகாஸ் ஸ்வரூப்? ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஒரிஜினல் நாவலை எழுதியவர் இவர்தான். Q and A என்ற பேரில் வந்தது. படத்தில் கதையின் framework-ஐ மாற்றவில்லை, ஆனால் கேள்விகள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல ஹீரோ வாழ்க்கையும் மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோ (பேர் ராம் முஹம்மது தாமஸ்) அத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்கிறார். ஸ்பான்சருக்கு அறிவித்தபடி பணம் கொடுக்க முடியாத நிலை. போலீசில் போட்டுக் கொடுக்கிறார்கள். சிறு வயதில் ஹீரோ காப்பாற்றிய பெண் இப்போது வக்கீலாக வளர்ந்து அவனைக் காப்பாற்றுகிறாள். இதில் அண்ணன் எல்லாம் கிடையாது, ஆனால் ஒரு உயிர் நண்பன் உண்டு. காதலும் உண்டு.

நாவல் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நல்ல framework-ஐ பிடித்துக் கொண்டார். அதை வைத்து ஒரு சுமாரான, போர் அடிக்காத நாவல் எழுதி இருக்கிறார். நீண்ட பயணத்தின் போது படிக்கக் கூடிய நாவல்.

இன்னொரு நாவலும் எழுதி இருக்கிறார். Six Suspects. பல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட இன்னொரு போர் அடிக்காத நாவல். வில்லன் பெரிய தொழிலதிபர். உத்தரப் பிரதேசத்தின் உள்துறை மந்திரியின் மகன். மந்திரி உண்மையில் ஒரு தாதா. ஒரு பார்ட்டியில் ஒரு பெண்ணைக் கொன்று விடுகிறார். பணம், செல்வாக்கு இவற்றால் விடுதலை ஆகி விடுகிறார். அதைக் கொண்டாட ஒரு பார்ட்டி, அதில் அவரை யாரோ சுட்டுவிடுகிரார்கள். ஆறு பேர் மேல் சந்தேகம். இதுதான் கதை. ஆறு பேரில் ஒருவரான அந்தமான் தீவிலிருந்து வரும் ஓங்கே இனத்தை சேர்ந்த எகெடி நன்றாக வந்திருந்தது. மகாத்மா காந்தியின் ஆவி அவ்வப்போது ஒருவரைப் பிடித்துக் கொள்கிறது. மந்திரியின் காரக்டர் எப்போதும் தொலைபேசிக் கொண்டே இருக்கிறார்.

சமீபத்திய புத்தகமான Accidental Apprentice மோசமாக இருக்கிறது. அதே framework-தான். கம்பெனி தலைவருக்கான “இண்டர்வ்யூ” – கதையின் நாயகி ஆறு/ஏழு சோதனைகளை சந்திக்கிறாள். இண்டர்வ்யூ நடத்தும் விதம் நம்ப முடியாத அளவுக்கு செயற்கையாக இருக்கிறது. சோதனைகளும் அப்படியே…

விகாஸ் ஸ்வரூப்புக்கு ஒரு நல்ல framework-ஐ தேர்ந்தெடுப்பது சுலபமாக இருக்கிறது. கதைக்கு ஒரு அடிப்படை சட்டம் கிடைத்ததும் ஓரளவு மெக்கானிக்கலாக அந்த சட்டத்தின் மீது கதையை டெவலப் செய்கிறார். கதையின் முடிச்சுகள் சுலபமாக, கொஞ்சம் சினிமாத்தனமாக அவிழ்கின்றன.

படித்தே ஆக வேண்டியவர் இல்லை, இருந்தாலும் படிக்கலாம். குறிப்பாக நீண்ட பயணங்களின்போது.

தொடர்புடைய பதிவுகள்
ஸ்லம்டாக் மில்லியனர் விமர்சனம்
ஏழாம் உலகம், ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள்

டின்டின்

tintin_charactersடின்டின் காமிக்ஸை ரசித்துப் படிக்கும் வயது எட்டு ஒன்பது வயதுதான். ஆனால் இன்றும் நான் அவற்றைப் படிப்பதுண்டு. அந்த சித்திரங்களின் பரம ரசிகன் நான்.

டின்டின் கதைகள் மேலோட்டமானவைதான். அதுவும் Duex ex machina (அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள்) இந்த மாதிரி எங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. தப்பிக்கவே முடியாத அபாயம் என்று வந்தால் அடுத்தபடி ஒரு அதிசயத் தற்செயல் நிகழ்ச்சி, பிழைத்துவிடுவான். எல்லா கதைகளும் – அதுவும் காலத்தால் முற்பட்ட கதைகள் – ஒரு நாட்டை ஸ்டீரியோடைப் செய்கின்றனதான். Tintin in Congo ஒரு நல்ல உதாரணம். காலனீய மனப்பான்மை நன்றாகவே தெரியும். கறுப்பர்கள் நாகரீகம் அற்ற பழங்குடிகள், ஐரோப்பியர்கள், அதுவும் மிஷனரிகள் நல்லவர்கள் என்ற மாதிரி நிறைய வரும். ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் படித்தால் நன்றாக இருக்கும். அன்றைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி (கம்யூனிச ரஷியா, ஜப்பான் சீனாவை ஆக்கிரமிப்பது, எண்ணெய் கம்பெனிகளின் அரசியல், தென்னமரிக்க நாடுகளின் “புரட்சிகள்”) ஐரோப்பிய பொது புத்தி என்ன நினைத்திருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய எல்லா புத்தகங்களும் தரமானவை, படிக்கக் கூடியவை.

நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் Tintin in America, Cigars of the Pharaoh, Blue Lotus, Broken Ear, Black Island, King Ottokar’s Sceptre, Crab with the Golden Claws, Shooting Star, Secret of the Unicorn, Red Rackham’s Treasure, Land of Black Gold, Destination Moon, Explorers on the Moon, Calculus Affair, Red Sea Sharks, மற்றும் Tintin in Tibet. ஒன்றிரண்டு புத்தகங்கள்தான் படிக்க முடியுமென்றால், Tintin in America, Blue Lotus, Explorers on the Moon மற்றும் Tintin in Tibet-ஐ பரிந்துரைக்கிறேன்.

hergeகாலத்தால் முந்தைய புத்தகங்கள் கறுப்பு வெள்ளையாக வரையப்பட்டவை, பிற்காலத்தில் வண்ணம் சேர்க்கப்பட்டது. பல கதைகளை இணையத்தில் படிக்க முடிகிறது.

டின் டின் உருவான பின்புலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் தீவிர டின் டின் விரும்பிகளுக்கு மைக்கேல் ஃபார் எழுதிய Tintin Companion புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

கீழே புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்புகள்.

Tintin in the Land of the Soviets (1929–30) முதல் புத்தகம். இந்தப் புத்தகம் இது வரை வண்ணம் சேர்த்து வெளியிடப்படவில்லை. கம்யூனிசத்திற்கு பத்து வருஷம் முன்னால்தான் மாறிய ரஷியாவைப் பற்றி அன்று மற்ற ஐரோப்பிய நாடுகளில் என்ன நினைத்திருப்பார்கள் என்று ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.

Tintin in the Congo (1930–31) இன்று politically incorrect ஆகத் தெரியலாம். ஆனால் ஆஃப்ரிக்கர்கள் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள் என்பது அந்தக் காலத்து பொது புத்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

Tintin in America (1931–32) இந்தப் புத்தகத்திலிருந்து இந்த சீரிஸைப் படித்தால் போதும் என்று நான் நினைக்கிறேன். டின்டின் கதைகளின் ஃபார்முலா சரியாக உருவாகிவிட்டது. இதில் அமெரிக்காவில் சிகாகோவின் மாஃபியா, செவ்விந்தியர்கள், எண்ணெய்க் கிணறுகள், ரயில்கள் என்று எல்லாவற்றையும் கோட்டுச் சித்திரமாகக் காட்டுகிறார்.

Cigars of the Pharaoh (1932–34) புத்தகத்தில்தான் துப்பறியும் “நிபுணர்கள்” தாம்ப்சன் மற்றும் தாம்சன் அறிமுகம் ஆகிறார்கள். இந்தியா எத்தனை தூரம் ஸ்டீரியோடைப் (யானைகள், மாய மந்திரப் பக்கிரிகள், ராஜாக்கள்) ஆகிறது என்பதை நான் ரசித்தேன்.

Blue Lotus (1934–35) புத்தகத்தில் ஓபியம் விற்கும் கும்பல் ஒன்றை சீனாவில் எதிர்க்கும் டின்டின். ஜப்பானியர்களை ஆக்கிரமிப்பு சக்தியாக சித்தரித்திருப்பது உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது.

Broken Ear (1935–37) பல சமகால சம்பவங்களை கோடிட்டுக் காட்டுகிறது. எண்ணெய்க் கம்பெனிகளான ஷெல் ஆயில் மற்றும் ஸ்டாண்டர்ட் ஆயில் பொலிவியாவுக்கும் பராகுவேக்கும் இடையில் ஒரு போரைக் கிளப்பியது, சர் பேசில் ஜஹராஃப் என்ற ஆயுத விற்பனையாளன் இரண்டு தரப்புக்கும் ஆயுதங்களை விற்பது எல்லாம் குறிப்பிடப்படுகிறது.

Black Island (1937–18) லாக் நெஸ் மான்ஸ்டர் பின்புலத்தில் எழுதப்பட்டது. ஸ்காட்லாந்துக்கு அருகே ஒரு தீவில் இருக்கும் ஒரு கொரில்லா – ஏதோ பயங்கர மிருகம் என்று அக்கம்பக்கத்தில் பீதியைக் கிளப்புகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் வில்லன்கள்…

King Ottokar’s Sceptre (1938–39) இன்னும் ஒரு சிறந்த புத்தகம். ஒரு தென்கிழக்கு ஐரோப்பிய நாடு, அதை ஆக்கிரமிக்கும் நினைக்கும் பக்கத்து நாடு; ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமிக்கும் தருணத்தில் எழுதப்பட்ட புத்தகம்.

Crab with the Golden Claws (1940–41) காப்டன் ஹடாக் இந்தப் புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகிறார். ஓபியம் கடத்தலைத் துப்பறியும் டின்டின் கப்பல், படகு, விமானம், சஹாரா பாலைவனம் என்று அலைகிறான்.

Shooting Star (1941–42) வண்ணப் படங்களோடு வெளியான முதல் புத்தகம் இதுதான். ஆர்க்டிக் பகுதியில் எங்கோ ஒரு பெரிய விண்கல் விழுகிறது. அதைப் பற்றி ஆராய டின்டின் குழு செல்கிறது.

Secret of the Unicorn (1942–43) கேப்டன் ஹடாக்கின் முப்பாட்டன் ஒரு பொக்கிஷத்தைப் பற்றிய ரகசியமாக எழுதி வைத்திருக்கும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். ஹடாக் பிற்காலத்தில் வாழும் மார்லின்ஸ்பைக் மாளிகை இந்தப் புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகிறது. இதன் தொடர்ச்சியான Red Rackham’s Treasure (1943) புத்தகத்தில் பொக்கிஷத்தைத் தேடிப் போகிறார்கள். கால்குலஸ் அறிமுகம் ஆவது இந்தப் புத்தகத்தில்தான்.

Seven Crystal Balls (1943–46) புத்தகம் எகிப்திய பிரமிட்களில் நுழைந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் மீது ஒரு சாபம் இருந்தது என்ற நம்பிக்கையை பெருவின் இன்கா நாகரீகத்துக்கு கொண்டு செல்கிறது. ஏழு ஆராய்ச்சியாளர்கள் கோமாவில் விழுகிறார்கள். கால்குலஸ் பெருவுக்கு கடத்தப்படுகிறார். இதன் தொடர்ச்சியான Prisoners of the Sun (1946–48) புத்தகத்தில் கால்குலசை மீட்க டின்டின்னும் ஹடாக்கும் பெரு செல்கிறார்கள். அங்கே அவர்களை பலி கொடுக்கப் போகும்போது கிரகணம் வரப்போவதை தங்கள் வேண்டுகோளுக்கு சூரியனே பணிகிறது என்கிற மாதிரி காட்டி தப்பிக்கிறார்கள்.

Land of Black Gold (1948–50) ஒரு பெட்ரோலிய அரபு நாட்டின் ஷேக்குக்கு உதவி செய்யும் டின்டின்.

Destination Moon (1950–52) இதன் தொடர்ச்சியான Explorers on the Moon (1952–53) புத்தகத்தில் நிலாவுக்குப் போகிறார்கள். என்னுடைய ஃபேவரிட் புத்தகம் இதுதான். வார்த்தை விளையாட்டு கலக்கலாக இருக்கும்.

Calculus Affair (1954-56) புத்தகத்தில் கால்குலஸ் கடத்தப்படுகிறார், அவரை மீட்கிறார்கள். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஜோல்யான் வாக் அறிமுகம் ஆவது இதில்தான்.

Red Sea Sharks (1956-58) புத்தகத்தில் ராஸ்டாபொபுலோஸ் மீண்டும் வருகிறான். அடிமை வியாபாரம் செய்யும் அவன் முகமூடியைக் கழற்றுகிறார்கள், ஆனால் அவன் தப்பிவிடுகிறான்.

Tintin in Tibet (1958-59) புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நேபாளம் அருகே விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் சாங்கை ஒரு yeti- பனி மனிதன் – காப்பாற்றுகிறது/கிறான். வழக்கமான சாலையில் படுத்துக் கிடக்கும் மாடு போக்குவரத்தை நிறுத்துவது போன்ற காட்சிகளும் உண்டு.

Castafiore Emerald (1961–62) புத்தகத்தில் வில்லன்களே கிடையாது!

Flight 714 (1966–67) மீண்டும் ராஸ்டாபொபுலோஸ். வேற்று கிரகவாசிகள் வேறு.

Tintin and the Picaros (1975–76) புத்தகத்தில் டின் டினின் ஆடை மாறுகிறது! பெல்பாட்டம் அணிந்து வருகிறான். தென்னமெரிக்காவில் வழக்கம் போல புரட்சிகள்…

Tintin and Alph-Art (1986) – முழுமை பெறாத புத்தகம். ஒரு வழியாக ராஸ்டாபொபுலோஸ் இதில் இறக்கிறான்…

Tintin and the Lake of Sharks டின்டின் சீரிசில் இடம் பெறாத, ஒரு திரைப்படத்துக்காக எழுதப்பட்ட கதை. சுமாராக இருக்கும்.

இவற்றைத் தவிர Le Thermozero என்று ஒரு கதையை ஆரம்பித்து நிறுத்திவிட்டாராம்.

சமீபத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில கதைகளை ஒன்றிணைத்து திரைப்படமாகவும் வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

தமிழ் புத்தகங்களின் விற்பனை

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக தமிழ்ப் புத்தகங்களின் வியாபாரம் என்பது அரசு நூலகங்களை நம்பியே இருக்கிறது. எனக்கு தெரிந்த எழுத்தாளர்கள், பேசிப் பழகக் கூடிய ஒரே (முன்னாள்) விற்பனையாளரான திலீப்குமார் எல்லாரும் இதை மாற்றி மாற்றி உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு பதிப்பு போட்டால் 1200 பிரதிகள் அச்சடிப்பார்களாம். நூலகங்கள் வாங்கினால் 600 பிரதிகள் விற்றுவிடுவாமாம். ஓரளவு பேர் வாங்கிய புத்தகமாக இருந்தால் மிச்சம் 600 பிரதிகளை விற்க இரண்டு மூன்று வருஷங்கள் ஆகலாம். வானதி பதிப்பகம் வெளியிட்ட பொன்னியின் செல்வன், ராஜாஜியின் எளிமைப்படுத்தப்பட்ட ராமாயண/மகாபாரதம், சில பல சாண்டில்யன் நாவல்கள் தவிர வேறு எதுவும் பத்து பதிப்புகள் கூட வந்து நான் பார்த்ததில்லை. புத்தகம் போட்டே சொத்தை அழித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் ஐநூறு பிரதிகளை முன்பதிவு செய்து விற்கவே படாதபாடு பட்டிருக்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு இருபது வருஷங்களுக்கு முன் பிரபலம் அடையத் தொடங்கியது. கல்கி, சுஜாதா என்று சிலரது புத்தகங்கள் விற்கும். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் செகந்தராபாத்தில் வாழ்ந்த காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வருஷாவருஷம் புத்தகக் கண்காட்சி நடத்துவார். எனக்குத் தெரிந்து விற்பனை எல்லாம் பிரமாதமாக இருந்ததில்லை. இதில் பத்து வருஷமாக நூலகங்கள் புத்தகங்களை வாங்குவதை நிறுத்திவிட்டார்களாம். (இப்போதாவது நிலைமை மாறி இருந்தால் சந்தோஷம்.) ஒப்பீட்டுக்காக இதையும் சொல்கிறேன் – கன்னட நண்பன் ஒருவன் பைரப்பாவின் புத்தகங்கள் சில (குறிப்பாக ஆவரணா) வருஷத்துக்கு பத்து பதிப்பு வரை போகின்றன என்று சொன்னான். கேட்கவே வயிற்றெரிச்சலாக இருந்தது.

badri_seshadriஇரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரியை சந்தித்தேன். அவர் சரியான மார்க்கெடிங் இருந்தால் தமிழ்ப் புத்தகங்களை 50000 பிரதிகள் வரைக்கும் கூட விற்கலாம் என்று சொன்னார். அவரால் அந்த இலக்கை அடைய முடிந்ததோ இல்லையோ, கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒருவர் நினைப்பதே தமிழ் புத்தகப் பதிப்பாளர்கள் உலகில் அதிசயம்தான். ஆனால் ஏழரைக் கோடி தமிழர்களில் 0.1 சதவிகிதம் பேர் புத்தகம் வாங்கினால் கூட 75000 பிரதி விற்க வேண்டும். இதெல்லாம் என்று மாறுமோ தெரியவில்லை. (வீட்டில் புத்தகம் வைக்க இடம் இல்லாததால் நானும் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டேன் என்பதை குற்ற உணர்வோடு பதிவு செய்கிறேன்.)

haran_prasannaகிழக்கு பதிப்பகத்தில் உயர் அதிகாரியாக பணி புரியும் ஹரன் பிரசன்னா புத்தக விற்பனை குறித்து தன்னுடைய impressions-ஐ இங்கே எழுதி இருக்கிறார். அவரது சில எண்ணங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆயிஷா புகழ் இரா. நடராசனின் புத்தகங்கள் 20000-30000 பிரதிகள் விற்கின்றனவாம். தமிழின் சூப்பர்ஸ்டார் என்று நான் நினைக்கும் சுஜாதாவின் பிரபலமான புத்தகங்களே வருஷத்துக்கு 6000 பிரதி விற்றால் அதிகமாம். அதிகமாக விற்கும் புத்தகம்? பொன்னியின் செல்வன் – வருஷத்துக்கு லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று அனுமானிக்கிறார். கல்கியின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று யூகிக்கிறேன். கல்கிக்கு அடுத்தபடி வைரமுத்துவின் புத்தகங்கள் விற்கின்றன என்று அவர் கருதுகிறார், எத்தனையோ மாணிக்கங்கள் இருக்க வைரமுத்துவை எல்லாம் யார் வாங்குகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவரது வார்த்தைகளில்:

இன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும்.

அவர் கனவு கை கூடவேண்டும் என்று நானும் கனவு காண்கிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

உலகின் முதல் இலக்கியம் – கில்கமேஷ் தொன்மம்

gilgamesh_enkidu_slaying_the_divine_bullகிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய (கிறிஸ்து பிறப்பதற்கு பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்) சுமேரியாவின் களிமண் சிலேட்டுகளில் கில்கமேஷ் தொன்மத்தின் சில பகுதிகள் கிடைக்கின்றன. அதற்கு முன் எத்தனை நூற்றாண்டு வாய்வழியாக இந்தத் தொன்மம் பேசப்பட்டதோ தெரியவில்லை. அவை மீண்டும் மீண்டும் பிரதி எடுக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ஸீரிய அரசனான அஷூர்பானிபாலின் நூலகத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதி ஒன்றில் முழுக் கதையும் கிடைத்ததாம்.

எத்தனை பழையது என்று பார்த்தால்: ரிக் வேதம் கிட்டத்தட்ட கி.மு. 1500-1200 காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று யூகிக்கிறார்கள். டோரா (யூத பைபிள்) அல்லது பழைய ஏற்பாடு கி.மு. 500 வாக்கில் எழுதப்பட்டது என்று யூகிக்கிறார்கள். பார்சிகளின் ஜெண்ட்-அவெஸ்தாவும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில்தான் எழுதப்பட்டது என்கிறார்கள். சீனாவின் “Four Classics” கி.மு. நான்காம்/மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாம். தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாம்.

எகிப்திய நாகரீகம்தான் மிகப் பழையது என்பார்கள். ஆனால் கில்கமேஷ் கதையையே ஆதி காவியம் என்று கொண்டாடுவதால் நமக்கு கிடைத்திருக்கும் எகிப்திய கதைகள் இதற்கு அப்புறம்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கில்கமேஷின் கதை மிகவும் எளிமையானது. பலசாலி அரசன் கில்கமேஷ் உருக் நகரத்தை ஆள்கிறான். அவனை எதிர்க்க யாருமில்லாததால் எல்லார் வீட்டு பெண்களிடமும் தான் இஷ்டப்பட்டபோது போய் வருகிறான். அவனுக்குப் போட்டியாக எங்கிடு என்ற காட்டு மனிதனை கடவுள்கள் உருவாக்குகிறார்கள். பெண்ணையே பார்த்திராத அவனை ஒரு தாசியின் மூலம் நகரத்துக்கு அழைத்து வருகிறார்கள். கில்கமேஷும் எங்கிடுவும் முதலில் போரிடுகிறார்கள், பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள். ஹம்பாபா என்ற ராட்சதனை வெல்கிறார்கள். இஷ்டார் என்ற பெண் கடவுள் கில்கமேஷ் மீது மோகம் கொள்கிறாள். ஆனால் கில்கமேஷ் மறுக்கிறான். ஒரு பெரும் எருதை கில்கமேஷ் மீது இஷ்டார் ஏவுகிறாள். நண்பர்கள் அதைக் கொன்று விடுகிறார்கள். கோபம் கொள்ளும் கடவுளர் இரு நண்பர்களில் ஒருவர் இறக்கட்டும் என்று சபிக்கிறார்கள். எங்கிடு இறக்கிறான். நண்பனின் சாவைக் கண்டு அஞ்சும் கில்கமேஷ் சாவை வென்ற ஒரே மனிதனான உட்னாபிஷ்டிமைத் தேடிச் செல்கிறான், சாவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தோல்விதான். கடைசியில் அவன் இறப்பதோடு கதை முடிகிறது. (உட்னாபிஷ்டிம் சுமேரிய நோவா. பெருவெள்ளம் உலகை மூழ்கடிக்கும்போது தப்பிய மூதாதை.)

இதில் எத்தனை motif-கள் இந்திய, யூத, கிரேக்கத் தொன்மங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன? உட்னாபிஷ்டிம், நோவா, டியூகாலியன், மனு எல்லாரும் பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த மூதாதைகள்தான். எங்கிடுவை நகரத்துக்கு அழைத்து வருவது ரிஷ்யசிருங்கரை நினைவுபடுத்துகிறது. நசிகேதனைத்தான் கில்கமேஷில் பார்க்கிறோம். ஆவிகள் வாழும் பாதாள உலகத்துக்கு (underworld) சென்று திரும்பும் கிரேக்க வீரர்கள் நிறைய உண்டு. எல்லா ஊரிலும் இந்த motif-கள் இருப்பதைப் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது.

சுலபமான மொழியில் படிக்க இங்கே. சுமேரிய சிலேட்டுகளின் மொழிபெயர்ப்பைப் படிக்க இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

அசோகமித்ரன் என்ற ஆளுமை

asokamithranஅசோகமித்ரனின் எழுத்தைப் படித்தவர்கள் ஏதாவது ஒரு கதையிலாவது, ஏதாவது ஒரு இடத்திலாவது, “வாத்யாரே, நீ மேதை!” என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அவர் தமிழில் நோபல் பரிசு தரத்தில் எழுதிய ஒருவர் என்பதெல்லாம் தெரிந்ததுதான். என்னைப் பொறுத்த வரையில் அவர் தமிழின் மூன்று ஜீனியஸ் எழுத்தாளர்களில் ஒருவர். (மற்றவர்கள் – புதுமைப்பித்தன், ஜெயமோகன்).

அவரது ஆளுமையையும் அவரது எழுத்திலிருந்தே யூகிக்கலாம். வாழ்வின் உணர்ச்சிகரமான, நாடகீய தருணங்களை ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசிப்பாளர் மாதிரி உணர்ச்சியே இல்லாத நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதுவார். அந்தத் தருணங்களை வெளியிலிருந்து பார்த்து ஆவணப்படுத்துபவர் போன்ற தொனியில்தான் அவரது கதைகள் இருக்கின்றன. அவர் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்திருக்கிறது. எழுத்துக்காக ஜெமினி ஸ்டுடியோ வேலையை விட்டார். காகிதம் வாங்கப் பணம் இல்லாமல் அச்சடித்த காகிதங்களின் பின்பக்கம் எல்லாம் நுணுக்கி நுணுக்கி எழுதுவாராம். அப்பளம் விற்றிருக்கிறாராம். சாவி அலுவலகத்தில் எடுபிடியாக பணியாற்றி இருக்கிறாராம். ஆனால் இதையெல்லாம் பேசும்போது யாரோ மூன்றாம் மனிதனுக்கு வந்த பிரச்சினை மாதிரி தொனியில்தான் பேசுவார்.

அசோகமித்ரனின் பேட்டி காலச்சுவடு பத்திரிகையில் வந்திருக்கிறது. அவரது ஆளுமை ரத்தினச் சுருக்கமாக இந்த வரிகளில் வெளிப்படுகிறது.

தேவிபாரதி+சுகுமாரன்: தண்ணீரில் வரக்கூடிய சாயா, டீச்சர், மானசரோவரில் வரக்கூடிய ஜம்பகம் எல்லோருமே மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சக்தியின் குறியீடு போல் தோன்றுகிறது.
அசோகமித்ரனின் பதில்: எனக்கு நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்களாக அதிகப்படியான அர்த் தத்தை ஏற்றிவிடுகிறீர்கள். அவை எல்லாம் வெறும் கதைகள், ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை.

அவரது ஆளுமையின் இன்னொரு சுவாரசியமான பக்கம் அவரது ரசனை. 1930, 31இல் பிறந்தவர். சிறு வயதில் அவருக்குப் பிடித்துப் போன சினிமாக்கள், கதைகள் மீது அவருக்கு இன்னும் ஒரு soft corner உண்டு. அவருக்குப் பிடித்த சினிமாக்களில் கத்திச் சண்டை போடும் வீரர்கள் இருக்க வேண்டும். அதுவும் தமிழ் சினிமாவாக இருக்க வேண்டும். சர்வாதிகாரி (1950) திரைப்படத்தைப் பற்றி பேசும்போது என்னதான் எர்ரால் ஃப்ளின், ரொனால்ட் கோல்மன் சண்டைகளைப் பார்த்தாலும் எம்ஜிஆரும் நம்பியாரும் தமிழ் பேசிக் கொண்டு வாள் வீசும்போதுதான் திருப்தியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். கல்கியின் தியாகபூமியை தனக்குப் பிடித்த பத்து தமிழ் நாவல்களில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேட்டியிலும் வரிந்து கட்டிக் கொண்டு கல்கியின் எழுத்தின் நல்ல கூறுகளை முன் வைக்கிறார். அதே நேரத்தில் அவற்றின் தரம் என்னவென்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். இது அவருக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாரும் அப்படித்தான். பள்ளிப் பிராயத்தில் ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுதும் படித்த ஜே.ஆர். ரங்கராஜுவின் “ராஜாம்பாள்” நாவலைப் பற்றி கல்கி விலாவாரியாக எழுதி இருக்கிறார். க.நா.சு.வுக்கும் ராஜாம்பாள் பிடித்தமான நாவல். எனக்கும் இரும்புக்கை மாயாவி, பி.ஜி. உட்ஹவுஸ், அலிஸ்டர் மக்ளீன் மாதிரி நான் ஆரம்ப காலத்தில் விரும்பிப் படித்த நாவல்களின் மீது ஒரு soft corner உண்டு. ரசனைக்கும் தரத்துக்கும் நடுவே உள்ள இந்த இடைவெளி is just fascinating!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

யானையை உணர முயலும் குருட்டுத்தனம்

அமெரிக்காவில் கார் லைசன்ஸ் தேர்வுக்குப் போனபோது சொதப்பிவிட்டேன். காரை விட்டு இறங்கும்போது தேர்வாளர் நான் நல்ல பாம்பைப் பார்த்திருக்கிறேனா என்று கேட்டார். பார்ப்பதாவது, நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிடித்து அடித்திருக்கிறோம் என்று சொன்னேன். சிறு வயதில் வயல்களில் உள்ள கிணறுகளில் குளிக்கப் போவோம், செங்கல் சுவர்களில் பாம்புகள் இருப்பது சாதாரணம், பாம்பு எங்களைப் பார்த்து பயந்து ஓடுவதும், நாங்கள் பாம்பைப் பார்த்து பயந்து ஓடுவதும் அவ்வப்போது நடக்கும், சில தைரியசாலிகள் சட்டையை கையில் சுற்றிக் கொண்டு பாம்பைப் பிடித்து மேலே கொண்டு வருவார்கள், மாட்டிக் கொண்ட பாம்பை கல்லால் அடிக்க எல்லாரும் முன்வருவோம் என்றெல்லாம் விளக்கினேன். நான் சொன்ன கதை இந்தியாவைப் பற்றிய அவரது exotic பிம்பத்தை வலுப்படுத்தி இருக்க வேண்டும். லைசன்ஸ் கொடுத்துவிட்டார். 🙂 கரடியைப் பார்த்த கலிஃபோர்னியர்கள் உண்டு, கலிஃபோர்னியா ஒரு exotic இடம் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

chimamanda_adichieஒரு நாட்டு மக்களைப் பற்றிய எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றன? நேரடி அனுபவம், சொல்லித் தெரிந்து கொள்வது, புத்தகங்கள், திரைப்படங்கள் மூலம்தான். அவை ஒரே ஒரு பிம்பத்தை மேலும் மேலும் வலியுறுத்தினால் என்னாகும்? அதன் அபாயத்தைப் பற்றி நைஜீரிய எழுத்தாளர் சிமமண்டா அடிசி இங்கே சிறப்பாக விளக்கி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அடிசி Purple Hibiscus (2003), Half of a Yellow Sun, The Thing Around Your Neck (2009) மற்றும் Americanah (2013) என்று நான்கு புத்தகங்களை எழுதி இருக்கிறார். Half of a Yellow Sun பற்றி முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்துப் பார்க்க வேண்டும்.

அடிசி நாடுகளைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனால் அது மதம், ஜாதி, மாநிலம் என்று எந்தக் குழுவுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஒரு ஒற்றைப்படை பிம்பம் உருவாகிவிட்டால் அதை வலியுறுத்தும் செய்திகளை மட்டும் நம் மனம் கவனிக்கிறது. Sterotyping bias! நண்பர் ஒருவர் எல்லா முஸ்லிம்களும் சட்டைப்பையில் வெடிகுண்டோடுதான் அலைகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: அடிசியின் சிறுகதை – இதைத்தான் Half of a Yellow Sun நாவலாக விரிவுபடுத்தினாராம்.

பித்து

பக் குங்குரு பாந்து மீரா நாச்சி ரே என்று தொடங்கும் ஒரு மீரா பஜன் உண்டு. அதைக் கேட்கும்போதெல்லாம் இப்படி ஒரு பித்துப் பிடித்த நிலை எப்படி உருவாகிறது என்று மனதுக்குள் ஒரு இழை ஓடிக் கொண்டே இருக்கும்.

விஷ் கா ப்யாலா ராணாஜி நே பேஜா பீவத் மீரா ஹாஜி ரே! என்று எப்படி வாழ முடிந்தது? கண்ணனைக் கோவிலில் கும்பிட்டால் என்ன அரண்மனையில் வணங்கினால் என்ன? விஷத்தை அருந்தவும் தயார், ஆனால் கண்ணன் விக்ரகம் முன்னால் பாடாமல் இருக்க மாட்டேன் என்று என்ன ஒரு அசட்டுப் பிடிவாதம்? அப்பா, அம்மா, கணவன், குடும்பம் எதுவும் வேண்டாம் என்று இது என்ன பித்து நிலை? எதைத் தேடினாள்? என்ன கிடைத்தது? எனக்கு கொஞ்சமும் புரிவதில்லை. புரியாத விஷயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்று இத்தனை எளிமையாக தன் உறுதியை வெளிப்படுத்தும் நயத்தை, மெட்டின் இனிமையை, எம்.எஸ்ஸின் குரலை ரசித்துவிட்டு நகர்ந்துவிடத்தான் முயற்சி செய்கிறேன், ஆனாலும் சில சமயம் மண்டை காய்ந்து போகிறது.

andalஅதையும் மிஞ்சும் கிறுக்குத்தனம் நம்மூர் ஆண்டாளிடம்தான்.

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் காண் மன்மதனே!

என்றெல்லாம் ஒரு பெண்ணுக்குத் தோன்றுமா? கண்ணன் கர்ப்பக்கிரகத்திலிருந்து இறங்கி வந்து தன்னை மணப்பான் என்று உண்மையிலேயே அந்தப் பெண் நினைத்திருந்தாளா? ஏதாவது hallucinatory நோயா? பெரியாழ்வார் ஏதோ கண்ணனைக் குழந்தையாக நினைத்து நாலு பாட்டு பாடினேன், என் பெண் இப்படி கிறுக்காகிவிட்டாளே என்று துக்கித்திருக்க மாட்டாரா? கண்ணனை சபித்திருக்க மாட்டாரா? தன் பெண் காலத்தால் அழியாத கவிதை எழுதி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் கொஞ்சம் துக்கம் குறைந்திருக்குமா?

thulukka_nacchiyarமீராவுக்காவது வழிபடும் தெய்வம், நீண்ட பாரம்பரியம் என்று நிறைய இருக்கிறது. ஆண்டாள் கண்ணனை மணக்க வேண்டும் என்று வெறியோடு இருந்திருக்கிறாள். ஆனால் ஒரு விக்ரகத்தை – பொம்மையை – இழக்க முடியாமல் ரங்கநாதர் பின்னால் அலைந்த துலுக்க நாச்சியாரை எப்படிப் புரிந்து கொள்வது?

எனக்கு தர்க்க ரீதியாக சிந்திப்பதுதான் இயல்பாக வருகிறது. இது மாதிரி உணரும், இது போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் அதிருஷ்டம் எனக்கில்லை. என் சிறு வயதில் என் அம்மா கோவில், சாமி என்று மணிக்கணக்காக விக்ரகத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பாள். அதனால் சாமி, பூஜை என்று அலையும் சில மாமா மாமிகளை பார்த்திருக்கிறேன். நடிக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது. வெளியே சொன்னால் அம்மா சோறு போடமாட்டாள் என்று கம்மென்று இருப்பேன். கண்ணன் என் தெய்வம், கண்ணன் என் காதலன், கண்ணன் என் விளையாட்டு பொம்மை என்ற எண்ணங்களிலேயே பித்துப் பிடித்துப் போகிறவர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எனக்குப் பிடிபடுவதெல்லாம் ஓவியம் வரைய வேண்டுமென்று தன் 40 வருஷ வாழ்க்கையை விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கும் ஸ்ட்ரிக்லாண்ட் வரைதான்.

jeyamohanஆனால் ஜெயமோகன் தற்போது எழுதி வரும் மகாபாரதத் தொடர்நீலம் – இது மாதிரி பித்து நிலையை கொஞ்சம் புரிய வைக்கிறது. நீருக்கு வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்கும் பாறையைப் போல. எனக்கு பிடிபடுவது மேலே தெரியும் சின்ன இடம்தான். ஆனால் கீழே பூதாகாரமான பாறை இருக்கிறது என்ற பிரக்ஞையாவது இருக்கிறது. ராதையின் பாத்திரப் படைப்பு, பர்சானபுரியின் பிச்சி என்ற பட்டம் அற்புதமாக இருக்கிறது.

இத்தனைக்கும் இது வரையில் வந்தவற்றில் நீலம் மட்டுமே எனக்கு கொஞ்சம் சுமாரான பகுதி. எனக்கு அரைகுறையாகவே பிடிபடும் இந்தப் பித்து நிலை என்னை இந்தப் பகுதியோடு முழுமையாக ஒட்டவிடாமல் செய்கிறது. முன்னால் வந்த வண்ணக்கடல், மழைப்பாடல், வெண்முரசு எல்லாவற்றிலும் நான் முழுகிப் போயிருக்கிறேன். பீஷ்மரும் துரோணரும் பீமனும் சகுனியும் எனக்கு எப்போதுமே நான் அடிக்கடி போக முடியும் உலகத்தின் மனிதர்கள். அவர்களை இன்னும் அருகில் பார்த்தது போல இருந்தது. இந்தக் கண்ணனோ எனக்கு அந்நியமானவன். எல்லாரையும் கஞ்சா அடித்தது போன்ற ஒரு நிலையில் ஆழ்த்துகிறான். ஜெயமோகன் கண்ணனுக்கும் எனக்கும் உள்ள தூரத்தை அதிகரித்திருக்கிறார்.

வண்ணக்கடலும் மழைப்பாடலும் வெண்முரசும் சிறந்த படைப்புகள்தான். ஆனால் யயாதியும் ரெண்டாமூழமும் பர்வாவும் அதே ரேஞ்சில் உள்ள படைப்புகள். நீலம் மாதிரி ஒரு படைப்பைப் பார்ப்பதரிது. தனித்துவம் நிறைந்த படைப்பு. (unique) என்னை மாதிரி ஆட்கள் கவித்துவமான உரைநடை என்று சொல்வார்கள். கவிதைகளைப் புரிந்து கொள்பவர்கள் உரைநடையில் எழுதப்படும் கவிதை என்பார்கள் என்று நினைக்கிறேன். கவிதைக்கும் எனக்கு ரொம்ப தூரம், அதனால்தான் என்னால் முழுதாக ஒன்ற முடியவில்லையோ என்னவோ. ஒன்ற முடிகிறதோ இல்லையோ, தவற விடாதீர்கள், கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், ஜெயமோகன் பக்கம்

பைரப்பாவும் நானும்

bhyrappa_at_akka_2

பைரப்பா சமீபத்தில் ஒரு கன்னட மாநாட்டுக்காக அமெரிக்கா வந்திருந்தார். நண்பர் ராஜன் என்னை எதற்கும் ஒரு உரை தயாரித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். நேரப் பிரச்சினையால் மாநாட்டில் அந்த உரையை ஆற்ற முடியவில்லை. அது கீழே.

என் மீது அவரது நாவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரது நாவல்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.

I think I read my first Bhyrappa book around 10 years back – Daatu. I have seen a Tamil translation in the local library for a while. But I have not heard of Bhyrappa then. One day I just picked it up despite reservations about its thickness. I started reading it in the evening, and didn’t put it down until I finished it.

When I closed the book, two thoughts were uppermost in my mind. One was that I am unlucky that I am not a Kannadiga. I wished – wish – that I could read the book in the original Kannada instead of a translation; I wished that I had read this genius before. The second was that I am lucky that I am not a Kannadiga. If I were one, I would have read his books long back instead of looking forward to reading more books by this genius. As one gets older, it gets harder and harder to be impressed by a “new” author, but Bhyrappa is one of those forces that would come clear through at any age.

Daatu was just amazing for me. I am middle-aged, I have lived in villages and cities, and I have observed casteism firsthand, I have been a victim of casteism, I have made casteist remarks myself, what new insight can anyone provide me about caste? That too with such simple characters; the Gowda who thinks that his caste is best; the brahmin who has a semi-hidden relationship with the dalit; the illegitimate dalit son, the brahmin daughter who marries the Gowda’s son; stereotypes, cliches, actually. But behind that simplicity lies elegance and brilliant craftsmanship. Here is a master, who by drawing just a few lines, tells you all about the caste phenomenon that has been an integral part of our lives for thousands of years. The ancient prejudices; the reinforcement of such prejudices in our times; the difficulty of breaking such prejudices and stepping out.

Then I came to know that Bhyrappa wrote the stories for two of my all time favorite movies – Vamsa Vriksha & Tabbaliyu Neenade Magane. Srothri has always been one of my favorite characters. When I first saw Vamsa Vriksha, I kept asking myself what I would have done if I had faced a similar situation. Again, such a simple question – what do you do if the principles you have lived by are not “complete”? If they cannot help you solve the current, burning problem? I leave it as an exercise to the reader to compare the approach of Praneshacharya of Samskara vs Srothri.

I have always been obsessed with Mahabharatha. Bhishma, Drona, Karna, Bhima, Krishna are not just legends to me, they are real. What can such an obsessed person say about Parva? It is one of the best retellings of Mahabharatha, and my words cannot do justice to this magnificent work. I would just make one tangential point – I think Pavannan’s translation in Tamil  did justice to Bhyrappa’s genius. There is only one question I would like to ask of Bhyrappa. What have you got against Kripa? Why did you make him such a laughingstock?

And there is Saakshi. The scene where the money is burnt has few equals in literature.

Bhyrappa does have an eye for humor – Gangamma in Gruhabhanga is a great example.  All of have met Gangammas in various garbs in our lives. But next time I meet one, I am sure, I would be able to laugh a little more. The Kandi vaidhya who can walk through forests in the middle of the night – is he truly brave or a coward who cannot face consequences of his actions?

I recognize that literary critics may point out that Bhyrappa adapts a straightforward way of writing and is not a subtle story-teller and put forward this as a weakness. I completely disagree. You don’t criticize Michaelangelo and Da Vinci for not using impressionist techniques. The true connoisseur takes their works and figures out what makes them great. It is the critic who has to adapt to the geniuses, and not the other way round.

I have heard from my Kannadiga friends that Bhyrappa is an extremely popular author in Kannada and his books sell like hot cakes. I am told that it is hard to sell even 1000 copies of a work of fiction in Tamil.  Clearly, the Kannadigas have good taste!

I hope that Gyanpeeth Award committee, The Padma Vibushan/Padhmabhushan committees, and the Nobel prize committee honor themselves by honoring Bhyrappa soon.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

பாவண்ணனின் பரிந்துரைகள்

நண்பர் செல்வராஜ் அனுப்பிய குறிப்பு:

paavannanபாவண்ணனின் டாப் 10 மற்றும் முக்கிய நாவல்கள் (வலைத்தளம் மற்றும் பேட்டிகள் )

டாப் 10 (2001) (forumhub.com)

  1. பொய்த்தேவு
  2. ஒரு புளிய மரத்தின் கதை
  3. மோகமுள்
  4. நித்யகன்னி
  5. வாடிவாசல்
  6. சாயாவனம்
  7. பிறகு
  8. ஜே ஜே சில குறிப்புகள்
  9. கூனன் தோப்பு
  10. சதுரங்க குதிரைகள்
  11. விஷ்ணுபுரம்

முக்கிய நாவல்கள் (திண்ணை பேட்டி மற்றும் தீராநதி பேட்டி ஜனவரி 2013)

  1. தலைமுறைகள்
  2. கோபல்ல கிராமம்
  3. காடு
  4. ஏழாம் உலகம்
  5. நெடுங்குருதி
  6. யாமம்
  7. மாதொருபாகன்
  8. மணல் கடிகை
  9. கூகை
  10. காவல் கோட்டம்
  11. ஆழிசூழ் உலகு
  12. யாரும் யாருடனும் இல்லை
  13. நெடுஞ்சாலை
  14. முறிமருந்து
  15. சிலுவைராஜ் சரித்திரம்

தொகுக்கப்பட்ட பக்கம்: பாவண்ணன் பக்கம், பரிந்துரைகள்

உலக கன்னட மாநாட்டில் பைரப்பா

bhyrappa_at_akka_2இன்று எஸ்.எல். பைரப்பாவை சந்திக்கும், அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உலக கன்னட மாநாட்டுக்கு வந்திருந்தார். கன்னடத்தில்தான் பேசினார், ஆனால் முக்கால்வாசி புரிந்தது. அப்படிப்பட்ட எளிமையான கன்னடத்தில்தான் பேச வேண்டும் என்று முந்தைய நாள் ஒரு உரையில் சொன்னாராம். எங்கள் கூட்டத்தில் கன்னடம் தெரிந்த ஒரே மனிதர் நித்யவதி, முழுமையான மொழிபெயர்ப்பை எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது வரைக்கு இதை ட்ரெய்லர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில் முடி கொட்டிவிட்டாலும் எனக்கு இருப்பதை விட அதிகமாகவே இருக்கிறது.

அவருடன் கலந்துரையாட ஒரு நானூறு பேராவது வந்திருப்பார்கள். இது வரையில் ஜெயமோகன் போன்ற சிறந்த பேச்சாளரின் கூட்டத்திற்குக் கூட நூறு பேர் வந்திருந்தால் ஜாஸ்தி என்று நினைக்கும்போது கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்தது.

எனக்கு புரிந்த வரையில் கீழே.

பைரப்பா சிறுவனாக இருக்கும்போது அவரது அண்ணா, மற்றும் அக்கா இருவரும் ஒரே நாளில் ப்ளேக் நோயால் இறந்திருக்கிறார்கள். அவருடைய அம்மாவும் ப்ளேகில் அடுத்த இரண்டு வருஷத்தில் இறந்துவிட்டார். அந்த பாதிப்பினால்தானோ என்னவோ பைரப்பாவை சிறு வயதிலேயே கடோபநிஷத் கவர்ந்திருக்கிறது. கடோபநிஷத்தில்தான் நசிகேதன் யமனிடம் சாவு என்றால் என்ன என்று கேட்கிறான். அவரது மனம் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இண்டர்மீடியட்டில் நல்ல மதிப்பெண் பெற்று தத்துவக் கல்வியில் பி.ஏ. பயில விரும்பி இருக்கிறார். அவரது மதிப்பெண்களைப் பார்த்த கல்லூரி முதல்வர் “Philosophy bakes no bread, வேறு ஏதாவது படி” என்று அறிவுறுத்தி இருக்கிறார். இவர் விடாப்பிடியாக “If philosophy bakes no bread, I will open a bakery and earn my bread!” என்று பிடிவாதமாக தத்துவம் படித்திருக்கிறார். பிறகு எம்.ஏ., பிஹெச்.டி என்று போயிருக்கிறார். வேதங்களே அடிப்படை, அவற்றின் சாரமாக உபநிஷதங்கள், அவற்றின் சாரமாக போதாயணரின் பிரம்ம சூத்திரம், அவற்றுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற பல ஆசார்யர்களின் வியாக்கியானங்கள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்களில் மூழ்கி எழுந்திருக்கிறார். ஆனால் அந்தத் தத்துவங்கள் இலக்கியம் மூலமாக ராமாயணமும் மகாபாரதமும் விளக்குவதே மனதில் படிகிறது, தன் வழியும் இலக்கியத்தின் மூலம், கதைகளின் மூலம் தத்துவ சாரத்தை காட்டுவதே என்று உணர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

aavaranaaவம்சவிருக்‌ஷாவை (1965) தன் முதல் முக்கிய நாவலாகக் குறிப்பிட்டார். க்ருஹபங்கா, பர்வா, அன்வேஷனே, தப்பலியு நீனடே மகனே போன்ற நாவல்களைக் குறிப்பிட்டார். ஆவரணா குறித்து நீண்ட நேரம் பேசினார். ஹிந்து மதத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடும் சுதந்திரம் இருக்கிறது, “அன்னிய” மதங்களில் – குறிப்பாக இஸ்லாமில் கடவுளை முஹம்மது காட்டும் வழியில் மட்டுமே வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு fanaticism-த்துக்கு கொண்டு செல்கிறது/செல்லக் கூடியது என்றார். ஆவரணாவில் எந்தத் தவறான தகவலும் இருப்பதாக இது வரை எந்த விமர்சகரும் குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். தான் ஹிந்து மதத்தில் உள்ள பிரச்சினைகளைப் பல நாவல்களில் பேசி இருப்பதாகவும் அப்போதெல்லாம் அவரை மத விரோதி என்று எவரும் சொன்னதில்லை என்பதை உணர்த்தினார். தனக்கு சரி என்று பட்டதை எழுத குண்டுகள் தாக்கி சாகவும் தயார் என்று குறிப்பிட்டார். தான் பா.ஜ.க.காரன் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.

பிறகு கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார். பல இடங்களில் சிரிக்க வைத்தார். சரித்திரம் என்பது உண்மையைச் சொல்ல வேண்டும், ஔரங்கசீப் கோவிலை இடித்தான் என்றால் அதை மறைக்கக் கூடாது, இதை இந்திரா காந்தி அரசில் ஒரு பாடப் புத்தகக் கமிட்டியில் தான் வற்புறுத்தியதற்காக தன்னை கமிட்டியிலிருந்தே தூக்கிவிட்டார்கள் என்று சொன்னபோது கூட்டம் கை தட்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்