கணேஷ்-வசந்த் கதை – நில்லுங்கள் ராஜாவே

sujathaசிறந்த கணேஷ்-வசந்த் சாகசக் கதைகளுள் ஒன்று. அதுவும் எழுதப்பட்ட காலத்தில் – ஒரு முப்பது வருஷத்துக்கு – முன் படித்த பதின்ம வயதினர் நிச்சயமாக இம்ப்ரஸ் ஆகி இருப்பார்கள்.

nillungal_rajaveஅட்டகாசமாக ஆரம்பிக்கிறது. நான்தான் தொழிலதிபர் விட்டல் என்று ஒருவன் விட்டல் வீட்டிலும் அலுவலகத்திலும் கலாட்டா செய்கிறான். அவனுக்கு விட்டலின் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் விட்டல் குடும்பத்தினர், அவன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், வீட்டு நாய் கூட அவன் விட்டல் இல்லை என்கிறார்கள். கைது செய்யப்படுபவனுக்கு கணேஷும் வசந்தும் ஆஜராகிறார்கள். ஜாமீன் வாங்கித் தருகிறார்கள். ஹோட்டல் அறையில் தங்கச் செல்பவன் திரும்ப வரவேயில்லை.

காணவில்லை விளம்பரத்திலிருந்து அவன் விட்டல் இல்லை, ஐசிஎஃப்பில் வேலை செய்யும் ராஜா என்று கண்டுபிடிக்கிறார்கள். ராஜாவுக்கோ தான் விட்டல் என்று சாதித்தது, ஜாமீனில் வெளிவந்தது எதுவும் தெரியவில்லை. யார் நீங்கள் என்று கணேஷ்-வசந்தைக் கேட்கிறான்.

இதற்கு மேல் கதையைப் பற்றி எழுதுவதாக இல்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

பல வருஷங்களுக்குப் பின் இந்தப் பதிவுக்காக மீண்டும் படித்துப் பார்த்தேன், நல்ல சாகசக் கதை என்பது மீண்டும் உறுதிப்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் முடிச்சு, கணேஷும் வசந்தும் மர்மங்களை அவிழ்க்கும் விதம் பிரமாதமாக இருந்தது, இப்போது சர்வசாதாரணமாக இருக்கிறது. வாத்தியார் முடிச்சை ரிச்சர்ட் காண்டன் எழுதிய Manchurian Candidate (1959) நாவலிலிருந்து லவட்டிவிட்டாரோ என்று தோன்றியது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் கதைகள், சுஜாதா பக்கம்