சுஜாதா தேர்ந்தெடுத்த அவரது படைப்புகள்

sujatha1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் ஒரு கேள்வி:

படிகள்: நாங்கள் அல்லது இன்னொருவர் உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன்.

சுஜாதா: பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும்.

  • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
  • ஜன்னல் (கசடதபற)
  • காணிக்கை (கல்கி)
  • செல்வம் (கலைமகள்)
  • முரண் (சுதேசமித்திரன்)
  • நகரம் (தினமணிக்கதிர்)
  • எதிர்வீடு (கணையாழி)
  • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
  • வீடு (தினமணிக்கதிர்)
  • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
  • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்)
  • பார்வை (தினமணிக்கதிர்)

இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியத் தரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.

இந்த சிறுகதைகளுக்கான மின்பிரதிகள் கிடைக்குமா? குறிப்பாக ‘தனிமை கொண்டு’. சுட்டிகள் கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்