நாஞ்சில் நாடனுடைய ஒரு பிரமாதமான பேட்டி. அவரது ஆளுமையை நன்றாக வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்ட விருப்பமாக இருக்கிறது. ஏதோ இந்தக் கணத்தில் தேர்ந்தெடுத்த மேற்கோள் கீழே.
Of late, எனக்கு அந்த நம்பிக்கை வலுவா இருக்கு. எனக்கு ஏதோ ஒரு guiding force இருக்கு. இப்ப வாழ்கைல, கடந்த ஒரு பத்து வருஷம், இருபது வருஷம், எனக்கு சோத்துக்குப் பஞ்சம் இல்ல. துணிமணிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனா எப்பவுமே பண நெருக்கடி இருந்திருக்கு. இந்த வீடு கட்டிக் குடிவந்ததுக்கப்புறம் – என் பையன் பெரும் பணம் செலவு பண்ணிக் கட்டியிருக்கான் – பின்னாடி வரக்கூடிய செலவுகள் இருக்கே, குடிநீர் இணைப்பு எடுக்கணும், அதுக்கு மோட்டர் வாங்கணும், ப்ளம்பர் 8000 கேட்கிறானோ,10000 கேட்கிறானோ! நான் ஐநூறு ரூபாய் நோட்டுப் பார்த்தே பல நாள் ஆச்சு. அதுக்காக பஸ்ல போகும்போது, கண்டக்டர்கிட்டப் பார்த்ததில்லையான்னு கேட்கக்கூடாது. இது ரெண்டு விதமா மனித மனதை இயக்குது. உங்களைத் தோற்றுப் போகச் செய்யும். தோல்வி மனப்பான்மையைப் பெருக்கும். உங்கள வலுவிழக்கச் செய்யும். நான், by nature, diehard species. வடிவேலு சொல்வாரில்லையா, எத்தனை வாட்டி அடிச்சாலும் அழமாட்டேங்கிறான்னு மறுபடி அடிச்சாங்க. ரொம்ப நல்லவன்டா இவன். அந்த ஜோக் மாதிரித்தான் இது.
கட்டாயம் படியுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்