இந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருதை தெலுகு மொழிக்காகப் பெற்றிருப்பவர் ஓல்கா (லலிதகுமாரி). அவரைப் பற்றி கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரை கீழே.
சாகித்ய அக்காதமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா
பிரபல தெலுங்கு பெண் எழுத்தாளர் ஒல்கா அவர்களுக்கு “விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்கு சாகித்ய அக்காதமி அவார்ட் கிடைத்துள்ளது. அவருடைய இயற் பெயர் P. லலிதகுமாரி. தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணிய வாதத்தின் கண்ணோட்டத்தை சீர்தூக்கி நிறுத்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். 1950 நவம்பர், 27 ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடித்த பிறகு தெனாலியில், வி.எஸ்.ஆர். கல்லூரியில் தெலுங்கு லெக்சரர் ஆக பணி புரிந்திருக்கிறார். கதைகளுடன் நாவல்களையும் எழுதி இருக்கிறார்.
திரை உலகிலும் காலடி பதித்து இருக்கிறார். உஷாகிரண் நிறுவனத்தில் கதைப் பிரிவில் வேலை பார்த்து, மூன்று படங்களை தயாரித்து விருதுகளையும் பெற்று இருக்கிறார்.
அவர் எழுதிய “ஸ்வேச்சா” என்ற நாவல் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
1991 லிருந்து 1997 வரையில் Asmita Resource Centre for Women நிறுவனத்திற்கு தலைவியாக இருந்திருக்கிறார். தற்பொழுது முக்கியச் செயலாளர் ஆக இருக்கிறார். 1990ல் தெலுங்கு பல்கலைக்கழகம் இவருக்கு “சிறந்த பெண் எழுத்தாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்து உள்ளது. 2014ல் Loknayak Foundation இலக்கிய விருது பெற்றிருக்கிறார்.
தமிழ் வாசகர்களுக்கு அவருடைய படைப்புகளை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு.
இது வரையில் தமிழில் வெளிவந்த ஒல்காவின் படைப்புகள்
- மீட்சி (சாகித்ய அக்காதமி விருது பெற்ற தெலுங்கு நாவல்)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் (திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்தது.
- சுஜாதா
- ஒரு பெண்ணின் கதை
இவற்றை பதிப்பித்த பாரதி புத்தகாலயம்( 7, Elango Salai, Teynampet,, Chennai, Tamil Nadu 600018, India Phone:+91 44 2433 2424) அவர்களுக்கு எனது நன்றி என்றும் உரியது.
தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பக்கம்