இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் எழுதிய பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு Asymptote என்ற இலக்கிய இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்று தெரிந்தது. மொழிபெயர்த்த சுசித்ரா ராமச்சந்திரனுக்கு ஒரு ஜே!
விருதுக்கான சிறுகதையைத் தேர்ந்தெடுத்த பிரின்சடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் பெல்லோசின் வார்த்தைகளில்:
I have absolutely no doubt that the prize itself must go to the charming, wonderful, unusual story of “Periyamma’s Words” by the Tamil writer B. Jeyamohan in Suchitra Ramachandran’s translation. It tells of how an illiterate old lady from South India was taught some basic English before being sent to live in the USA—with word definitions being given out of traditional Indian stories in contrast and conjunction with classical stories from the West. By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed.
என் கண்ணோட்டத்தில் பெரியம்மாவின் சொற்களை விட பல சிறப்பான சிறுகதைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். (இதுவும் நல்ல சிறுகதைதான்) அவையும் மொழிபெயர்க்கப்பட்டால் ஜெயமோகனின் வீச்சு இன்னும் பெருக வாய்ப்பிருக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது.
எனக்கு பல வருஷங்களாகவே ஒரு மனக்குறை உண்டு. தமிழின் நல்ல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாததாலேயே பிற மொழி வாசகர்களை அடைவதில்லை, அதனால் தமிழ் எழுத்தாளர்களின் சாதனைகள் வெளியே தெரிவதில்லை. இதிலே சாஹித்ய அகாடமி விருது தந்தால் வாங்கமாட்டேன், பத்மஸ்ரீ விருது தந்தால் மறுத்துவிடுவேன் என்று குழந்தை மாதிரி அசட்டுப் பிடிவாதம் பிடிக்கும் ஆளுமைகள் வேறு. விருதுகள் எழுத்தாளரை பிற மொழி வாசகரிடம் கொண்டு சேர்க்கும் என்ற அற்ப விஷயத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை என்று கொஞ்சம் மனவருத்தம் உண்டு. அப்படி வருத்தப்பவடுதோடு நிறுத்திக் கொள்ளாமல் முனைந்து மொழிபெயர்த்திருக்கும் சுசித்ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் மேலும் மேலும் நல்ல மொழிபெயர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
ஒரிஜினல் சிறுகதை இங்கே. சுசித்ராவின் மொழிபெயர்ப்பு இங்கே.
பின்குறிப்பு: தைவான் சென்றிருக்கும் என் நண்பன் ஒருவனிடம் Asymptote பத்திரிகை கிடைத்தால் இரண்டு வாங்கி வா என்று சொல்லி இருந்தேன். இது அச்சுப் பத்திரிகையே இல்லையாம், இணையத்தில் மட்டும்தான் வருகிறதாம். 😦
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்
ஜெயமோகனின் சர்வதேசப் பரிசு பெற்ற பெரியம்மாவின் சொற்கள் என்னும் சிறுகதையை வாசித்துப் பார்த்தேன். இந்த சாதாரணமான கதைக்கே சர்வதேசப் பரிசு கிடைக்கிறதென்றால் போட்டிக்கு வந்திருக்கும் மற்ற கதைகளின் தரம் எப்படி இருந்திருக்கும். தமிழில் எவ்வளவு முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவையெல்லாம் மொழி பெயர்க்கப் படாததினாலேயே எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை என்பது எத்தனை வேதணையானது. தமிழில் வருகிற ஆக்கங்களை எல்லாம் உடனுக்குடன் மொழி பெயர்த்து சர்வதேச வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு போவதற்ற்கு தமிழ் வளர்சித் துறை ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்யலாம்.
LikeLike
ஜெயமோகனின் பெரியம்மாவின் சொற்கள் ஒரு சிறந்த கதை என்பதில் சந்தேகமில்லை. அதைவிட சிறந்த கதைகள் இருப்பது உண்மைதான் என்றாலும், ஒரு மொழிபெயர்ப்பாளர், தான் அதிகபட்ச சாத்தியத்தோடு எந்தக் கதையைப் பிறமொழியல் கொண்டுசேர்க்க வேண்டுமோ அதைத்தான் செய்யவேண்டும். அந்த வகையில் இந்தக் கதை மொழியாக்கம் பெற்றிருக்கிறது எனலாம்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் வருமளவிற்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் வருவது சிரமமாயிருக்கிறது. இல்லையேல் நானே ஜெயமோகனின் பல கதைகளை இந்நேரம் மொழிபெர்த்திருப்பேன்.
பெரியம்மாவின சொற்கள் குறித்து நான் எப்போதோ எழுதியது:
http://kesavamanitp.blogspot.in/2015/11/3.html
LikeLike
ஜெயமோகனின் பெரியம்மாவின் சொற்கள் ஒரு சிறந்த கதை என்பதில் சந்தேகமில்லை. அதைவிட சிறந்த கதைகள் இருப்பது உண்மைதான் என்றாலும், ஒரு மொழிபெயர்ப்பாளர், தான் அதிகபட்ச சாத்தியத்தோடு எந்தக் கதையைப் பிறமொழியல் கொண்டுசேர்க்க வேண்டுமோ அதைத்தான் செய்யவேண்டும். அந்த வகையில் இந்தக் கதை மொழியாக்கம் பெற்றிருக்கிறது எனலாம்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் வருமளவிற்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் வருவது சிரமமாயிருக்கிறது. இல்லையேல் நானே ஜெயமோகனின் பல கதைகளை இந்நேரம் மொழிபெர்த்திருப்பேன்.
பெரியம்மாவின சொற்கள் குறித்து நான் எப்போதோ எழுதியது:
http://kesavamanitp.blogspot.in/2015/11/3.html
LikeLike
என்னைப் பொறுத்த வரை, ஜெயமோகனின் மிகப்பெரிய இலக்கிய சாதனை என்ன? வரலாற்றியல், பொருளியல், சமுதாயவியல் சார்ந்த இலக்கியத் திறானாய்வு (மின்னும் அவரது கட்டுரைகள்; பழைய கதை நவீன காவியமாக மிளிரும் ‘வெண் முரசு’; இதை எல்லாம் யாராவது மொழி பெயர்த்து “கொணர்ந்தங்கு சேர்த்தால்” நோபல் பரிசுதான்!
LikeLike
ஜெயமோகனின் பெரியம்மாவின் சொற்கள் அருமையான கதை என்பதில் சந்தேகமில்லை. அதைவிடவும் சிறந்த அவருடைய கதைகள் பல உள்ளன. இருந்தும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு கதையைக் கொண்டுசெல்லும் போது, அதனை அதன் முழுவீச்சோடு கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், அதற்கு ஏற்றதாக பெரியம்மாவின் சொற்கள் அமைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
தற்போது வியாச பாரதத்தை ஆங்கிலத்திலிருந்த தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு எளிமையாக அமையும் மொழியாக்கம் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செல்கையில் தடுமாறுகிறது. இல்லையேல் இந்நேரம் ஜெயமோகனின் பல கதைகள் ஆங்கிலமாயிருக்கும்.
https://kesavamanitp.blogspot.in/2017/07/blog-post.html
LikeLike
சுஜாதா, அவர் கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப் படுவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. நான் சிறந்த சில சிறுகதைகளை தமிழ் பேசும் ஆனால் படிக்கத்தெரியாத எனது மகள் மற்றும் மருமகன்களுக்காக மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். நாளடைவில் அது தமிழ் தெரியாத சிலரையும் சென்றடைந்தது. கு ப ரா வின் விடியும் மற்றும் அண்ணாவின் செவ்வாழை இன்று பல நாடுகளில் படிக்கப் பட்டுள்ளது. எனது மொழி பெயர்ப்பை இங்கே படிக்கலாம். (www.kaveripak.com).
ஜெயமோகன் அவர்களுக்கு ‘வெண்முரசை’ மொழிபெயர்க்கட்டுமா என்று கேட்டு இரண்டு முறை மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் வரவில்லை. என்னை விட மிக அதிக திறமை படைத்தவர்கள் அவருடைய வெண்முரசை மொழிபெயர்க்க கூடும். ஆங்கில மொழிபெயர்ப்பினால் அந்த கதை நெடுங்கதை நாவல் முதலியவை உலக அளவிலான வாசகர்களை சென்றடைய வாய்ப்பு கிட்டுகிறது.
ரமேஷ்
http://www.kaveripak.com
LikeLike