தமிழகத்தின் விடுதலைப் போராட்டத் தலைவர்கள், வீரர்கள் என்று ஒரு நாலைந்து பேர்தான் பொதுப் பிரக்ஞையில் இருக்கிறார்கள். வ.உ.சி., பாரதியார், ராஜாஜி, காமராஜ். மிஞ்சிப் போனால் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், சத்யமூர்த்தி, ஈ.வெ.ரா. (பின்னாளில் ஈ.வெ.ரா. வெள்ளைக்காரன் ஆட்சிதான் பெஸ்ட் என்று அழிச்சாட்டியம் செய்தது வேறு விஷயம்.)
ஆனால் குறைந்த பட்சம் இரண்டாம் நிலையிலாவது வைக்கப்பட வேண்டிய இன்னொரு தலைவர் ஜார்ஜ் ஜோசஃப். அது எப்படி அவரைப் போன்ற ஒரு ஆளுமை இன்று முழுவதுமே மறக்கப்பட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. என் சிறு வயதில் நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. எந்தப் பாடப் புத்தகத்திலும் அவரைப் பற்றி ஒரு வரி கூட வந்ததில்லை. வைக்கம் வீரர் என்று ஈ.வெ.ரா.தான் பேசப்பட்டாரே தவிர ஜார்ஜ் ஜோசஃபின் பங்களிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்பட்டு நான் கேட்டதில்லை. ஒரு வேளை அவர் மலையாளி என்பதாலா? குறைந்த பட்சம் கேரளத்திலாவது அவர் நினைவு கூரப்படுகிறாரா? இல்லை அவர் மலையாளிகளுக்கு பாண்டியா?
ஜார்ஜ் ஜோசஃப் பற்றி அவருடைய பேரனான ஜார்ஜ் ஜோசஃப் எழுதி இருக்கிறாராம். (George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist) அதைப் படிக்க வேண்டும் என்று ஆவல். புத்தகம் அச்சில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. சில பகுதிகளை இந்தத் தளத்தில் படிக்கலாம். படித்த வரை சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
யாராவது படித்திருக்கிறீர்களா? மதுரைக்காரர்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் கட்டாயம் பதில் எழுதுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலை இயக்கம்
2 thoughts on “படிக்க விரும்பும் புத்தகம் – ஜார்ஜ் ஜோசஃபின் வாழ்க்கை வரலாறு”