பல ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘On Golden Pond’

சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அதன் மூலக்கதையை, மூல நாடகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி தோன்ற வைத்த திரைப்படம் On Golden Pond (1981). எர்னெஸ்ட் தாம்ப்ஸன் 1979-இல் எழுதி வெற்றி பெற்ற நாடகம், இரண்டே வருடங்களில் திரைப்படமாக்கப்பட்டது. தாம்ப்ஸனே திரைக்கதையையும் எழுதினார். ஹென்றி ஃபோண்டா நாயகனாகவும் காதரின் ஹெப்பர்ன் நாயகியாகவும் நடித்தனர். ஹென்றி ஃபோண்டாவின் மகள் ஜேன் ஃபோண்டாவே திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தார். அந்த வருடத்துக்கான சிறந்த திரைப்படம், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த திரைக்கதைக்கான விருதுகளை தட்டிச் சென்றது. ஜேன் ஃபோண்டா சிறந்த குணசித்திர நடிகைக்கான nominate செய்யப்பட்டார்.

ஜேன் ஃபோண்டா தன் அப்பா நடிக்க வேண்டும் என்பதற்காகவே நாடகத்தின் திரைப்படமாக்கும் உரிமையை வாங்கினாராம். நாடகத்தில் சித்தரிக்கப்படும் தந்தை-மகள் உறவு ஹென்றி-ஜேன் ஃபோண்டாக்களின் நிஜ உலக உறவை பிரதிபலிக்கிறதாம்.

சிறந்த திரைப்படம், கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மூலக்கதையைப் படிக்காவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, புத்தகத்துக்கும் திரைப்படத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதில்லை. அல்லது, திரைப்படம் கதையை அப்படியே எடுத்திருப்பதால் படித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. முதல் வகைக்கு உதாரணமாக, சேதன் பகத் எழுதிய ‘Five Point Something‘-க்கும் ‘3 Idiots‘ திரைப்படத்துக்கும் உள்ள தொடர்பை யோசித்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். On Golden Pond இரண்டாவது வகை.

நல்ல நாடகம்தான், நான் குறை சொல்லவில்லை, படிக்காதீர்கள் என்ற தவிர்த்துரை அல்ல. ஆனால் திரைப்படம் தரும் அனுபவம் புத்தகத்தை விட பிரமாதமானது. ஹென்றி ஃபோண்டா ஒரு cantankerous கிழவனாக – Norman Thayer – எல்லாரையும் தூக்கி சாப்பிடும் நடிப்பு. அப்படி ஒரு dominant performance கூட ஹெப்பர்னின் நடிப்பை பின் தள்ளிவிட முடியவில்லை, கிழவனை நன்றாகப் புரிந்து கொண்ட, அவரது எல்லா குறைகளோடும் நிறைகளோடும் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் மனைவியாக அசத்தி இருக்கிறார். தேயர் தன் மனைவி அப்படி தன் நிறைகுறைகளோடு தன்னை ஏற்றுக் கொண்டவர் என்பதை உணர்ந்திருக்கிறார். தன் பெற்றோரைப் பற்றி – குறிப்பாக அப்பாவைப் பற்றி பல மனக்குறைகள் உள்ள பெண்ணாக ஜேன் ஃபோண்டா, 13 வயது சிறுவன் பில்லியாக நடிப்பவர், ஒரே காட்சியில் வந்தாலும் தபால்காரர் சார்லி வேடத்தில் நடிப்பவர், பெண்ணின் காதலனான பில்லியாக நடிப்பவர் எல்லாரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மிக சிம்பிளான கதை. கிழவன்-கிழவி-மகள். கிழவன் தன் பொறுப்பில் விடப்படும் 13 வயது சிறுவனோடு மீன் பிடிக்கிறான் – அதில் ஏற்படும் bond கிழவனுக்கு வாழ்வில் மீண்டும் கொஞ்சம் பிடிப்பைக் கொடுக்கிறது. அவ்வளவுதான்.

சுஜாதா, இ.பா. போன்றவர்கள் சிறந்த நாடகங்களின் தரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் எர்னஸ்ட் தாம்ப்சன் நாடக எழுத்தாளராக பெரும் புகழ் பெற்றவர் அல்லர். இரண்டாம் நிலை நாடக எழுத்தாளர்தான்.

என் பெற்றோர்களிடமும் இதைத்தான் புரிய வைகக் முயற்சிக்கிறேன். அன்றாட வாழ்வைத் தாண்டி ஏதாவது இருந்தால்தான் வாழ்வில் பிடிப்பு இருக்கும் என்று. நான் (இன்னும்) கிழவனாகும்போது நானே புரிந்து கொள்வேனோ என்னவோ தெரியவில்லை. 🙂

புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்

1 thoughts on “பல ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘On Golden Pond’

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.