ஜீகன்பால்க் (Ziegenbalg) என்ற டென்மார்க் பாதிரியார்தான் தமிழில் முதல் புத்தகத்தை அச்சிட்டவர் – 1715 வாக்கில் – என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (வேறென்ன புத்தகம், புதிய ஏற்பாடுதான்) ஆனால் ஹென்றிக் ஹென்றிகஸ் (Henrique Henriques) என்ற போர்ச்சுகீசிய பாதிரியார்தான் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை 1578-இலேயே வெளியிட்டாராம். 24 பக்கங்கள் உள்ள புத்தகமாம், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளாம். இன்றைய கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லத்தில் போர்ச்சுகீசிய அச்சு எந்திரங்களை வைத்து இது அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில புத்தகங்களையும் அச்ச்சடித்திருக்கிறார். ஹென்றிகஸ் ஆமென் என்று சொல்வதற்கு பதில் ஓம் என்று சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தாராம்! அக்பர் டெல்லியிலும், நாயக்கர்கள் மதுரையிலும் தஞ்சையிலும் ஆட்சி செய்து வந்த காலம். ஹிந்துவில் சுவாரசியமான கட்டுரை ஒன்று கிடைக்கிறது.
மேலே உள்ள படத்தில் எனக்குப் புரிந்தது கடைசி மூன்று வரிகள் மட்டுமே – “பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்”
ஜீகன்பால்க் 1706-இல் தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறார். தமிழிலே புத்தகங்கள் அச்சடித்தால்தான் மத மாற்றத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நினைத்திருக்கிறார். உண்மையில் மத மாற்றத்தை விட தமிழ் கற்பதில்தான் அதிக நேரம் செலவிட்டாராம். அச்சு எந்திரம் ஒன்றை வரவழைத்து, தமிழுக்காக முதல் typeface உருவாக்கி, புதிய ஏற்பாட்டை அச்சடித்திருக்கிறார். மேல் விவரங்களுக்கு எஸ். முத்தையா எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்கலாம். (படத்தில் இருப்பதில் என்னால் சில எழுத்துக்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது.)
தொகுக்கப்பட்ட பக்கம்: References
தொடர்புடைய சுட்டிகள்:
முதல் தமிழ் புத்தகம்
ஜீகன்பால்க் பற்றி எஸ். முத்தையா
FYI https://groups.google.com/forum/#!searchin/mintamil/Ziegenbalg%7Csort:date
LikeLike
வாசன் பிள்ளை, சீகன்பால்க் பற்றி நல்ல தொகுப்பு, நன்றி!
LikeLike