நோபல் பரிசு 2019

இரண்டு மூன்று மாதங்களாக எழுத முடியவில்லை. சரி ஓடுகிற வரையில் ஓடட்டும் என்று திரும்பி ஆரம்பிக்கிறேன்.

‘என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா’ பாணி கால தாமதமான பதிவு.

இந்த முறை இரண்டு வருஷங்களுக்கான நோபல் பரிசை அறிவித்திருக்கிறார்கள். 2018-இல் நோபல் பரிசை அறிவிக்கவில்லை. அதனால் 2018-க்கும் 2019-க்குமான நோபல் பரிசை அறிவித்திருக்கிறார்கள்.

2018-க்கான பரிசை வென்றிருப்பவர் போலந்தை சேர்ந்த ஓல்கா டோகர்ஜுக். நாவல்கள், கவிதைகள் எழுதி இருக்கிறார். பரிசுக்கு முன்னால் நான் கேள்விப்பட்டதில்லை. யாராவது படித்திருந்தால் எழுதுங்கள்.

2019-க்கான பரிசை வென்றிருப்பவர் செர்பியாவை சேர்ந்த பீட்டர் ஹாண்ட்கே. பரிசுக்கு முன்னால் நான் கேள்விப்பட்டதில்லை. யாராவது படித்திருந்தால் எழுதுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்