Citizenship Amendment Bill

சாதாரணமாக நான் சிலிகன் ஷெல்ஃபில் அரசியல், சமகால நிகழ்வுகளைத் தவிர்ப்பேன். ஏனோ இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

Citizenship Amendment Bill-ஐ நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். முஸ்லிம் அல்லாதவர்கள் பாகிஸ்தானில் அரசியல் சட்டப்படி இரண்டாம் நிலை குடிமகன்கள்தான். அவர்களுக்கு இந்தியாவில் இடம் கொடுக்கப்படுவது எல்லா விதத்திலும் சரியே.

சிலர் இது மத அடிப்படையில் உருவாக்கப்ப்பட்ட சட்டமாயிற்றே, அரசியல் சட்டப்படி செல்லாது என்கிறார்கள். நான் நிபுணன் அல்லன். ஆனால் அரசியல் சட்டம் இந்தியக் குடிமகன்களிடம் மத அடிப்படையில் பாகுபாடு இல்லை என்கிறது, இந்தியக் குடிமகன்கள் அல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அதனால் இது சட்டப்படி சரியே என்று தோன்றுகிறது.

ஃபேஸ்புக்கில் நண்பர் ஜடாயு இந்த திட்டத்தை

laudable humanitarian law that provides succor to Hindus and other minorities persecuted and driven away from neighboring Islamic countries

என்று பாராட்டி இருந்தார். சரியாகத்தான் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு பின்னூட்டம் ஒன்றில் பாகிஸ்தானில் அஹமதியா முஸ்லிம்களும் அடக்கப்படுகிறார்கள், அவர்களுக்கும் குடியுரிமை தரலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ஜடாயுவின் பதில்:

Regarding Ahmaddiyas, why the *&$% should India worry about them? What have they got to do with India? If one Muslim group kills another Mulsim group somewhere in the world, how the &*$% does it matter to India?

சட்டம் மனித நேய அடிப்படையில் உருவானது, ஆனால் சனியன் பிடித்த அஹமதியாக்கள் அழிந்து போகட்டுமே என்கிறார். இந்த இரண்டு நிலைகளுக்கும் இருக்கும் முரண்பாடு அவருக்கே புரியவில்லையா, அவரை அவரே ஏமாற்றிக் கொள்கிறாரா? அஹமதியாக்களுக்கு humanitarian consideration எதுவும் இல்லையா? அவர்கள் என்ன கால்நடைகளா? கால்நடைகளுக்கும் கீழே என்று ஜடாயு நினைத்தாலும் நினைக்கலாம், அவருக்கு கோமாதா குலமாதா.

Persecuted minorities-க்காக மனித நேய அடிப்படையில் கொண்டு வரப்படும் சட்டமா இல்லை ஹிந்துக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி தனது ஓட்டு வங்கியை பெரிதாக்கிக் கொள்ளப் போடப்படும் திட்டமா? இரண்டும்தான் என்று தோன்றுகிறது.

ஓட்டு வங்கிக்கான திட்டமாகவே இருந்தாலும் சரி, அஹமதியாக்களை கண்டு கொள்ளாவிட்டாலும் சரி, நான் இதை வரவேற்கிறேன். பாதிக்கப்படுபவர்களில் அஹமதியா போன்ற முஸ்லிம் உட்பிரிவினர் சிறிய எண்ணிக்கையே என்று கணிக்கிறேன். நூற்றுக்கு 95 பேருக்கு உதவியாக இருக்கும் எந்தத் திட்டமும் வரவேற்கப்பட வேண்டியதே. நாளை மனிதாபிமான அடிப்படையில் வேறு அரசோ அல்லது பா.ஜ.க. அரசே கூடவோ இரண்டாம் நிலை குடிமகன்களாக நடத்தப்படும் அஹமதியாக்களை, இலங்கை தமிழர்களை, திபேத்திய பௌத்தர்களை, இரானிய பஹாய்களை,  ஐரோப்பாவின் ஜிப்சிகளை, ரோஹிங்யா முஸ்லிம்களையும் வரவேற்கும். பா.ஜ.க. அரசையே பாருங்கள், அவர்களது தேர்தல் manifesto-வில் ஹிந்துக்களை மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார்களாம், ஆனால் இப்போது இந்த சட்டம் ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்களை அனுமதிக்கிறது.

அமெரிக்காவில் கறுப்பர்கள் அடிமைகள் இல்லை என்று ஆன பிறகும் சட்டப்படியே பல அடக்குமுறைகளை அனுபவித்தார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் அவர் செனட்டராக இருந்தபோது 1957-58 வாக்கில் கறுப்பர்களுக்கு ஆதரவான, ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். பல குறைகள் உள்ள சட்டம். அதை எதிர்த்தவர்கள் பலரும் இது பேருக்குத்தான் சட்டம், நடைமுறையில் உதவாது என்று குறை கூறினார்கள். He famously said

Once you break the virginity it’s easier next time.

முதல் படி எடுத்து வைத்திருக்கிறோம், இன்னும் பல படிகளை எதிர்காலத்தில் எடுக்க இது உந்துதலாக அமையட்டும். நமக்கும் it should be easier next time.

பின்குறிப்பு 1: பாகிஸ்தானில் மைனாரிட்டிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது என்று பலரும் சொல்கிறார்கள். நானும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பதிவுக்காக விக்கிபீடியாவில் பாகிஸ்தானில் சென்சஸ் விவரங்களைப் பார்த்தேன். பதிவில் ஒவ்வொரு சென்சஸிற்கான முழு விவரங்களும் இல்லை. ஆனால் 1951-இல் அன்றைய மேற்கு பாகிஸ்தானில் 2.6% முஸ்லிம் அல்லாதவர்கள் இருந்திருக்கிறார்கள். 1998-இல் இது 3.75% ஆக அதிகரித்திருக்கிறது!  (இன்றைக்கான விவரம் இல்லை.) பாகிஸ்தானில் மைனாரிட்டிகளின் எண்ணிக்கை குறைவது உண்மைதானா இல்லை வெறும் புரளியா?

பின்குறிப்பு 2: அஹமதியாக்கள் பாகிஸ்தானின் அரசியல் சட்டப்படியே முஸ்லிம்கள் அல்லவாம், அவர்களை மைனாரிட்டிகள் என்று தனியாகவே கணக்கெடுக்கிறார்களாம்.

பின்குறிப்பு 3: அரசியல் சட்டப்படி பங்களாதேஷில் மத அடிப்படையில் வேறுபாடு பார்க்க முடியாதாம் – விக்கிபீடியாவில் இருந்து: Bangladesh is a Muslim Majority nation with Islam as its state religion of the country professed by the majority and freedom of religion is guaranteed by its constitution in which it gives equal rights to all citizens irrespective of religion. நடைமுறையில் எப்படியோ, சட்டப்படியாவது அனைவரும் சமம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம். லிண்டன் ஜான்சனைத்தான் மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு