Gimpel the Fool எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. ஆனால் அது ஏன் பிடித்திருக்கிறது என்று என்னால் தெளிவாக சொல்ல முடிந்ததே இல்லை. அது தொன்மக் கதைகளின் சாயல் கொண்டிருப்பதாலா? நானும் ஓரளவு அப்பாவி, கிம்பலில் என்னையே காண்கிறேனா? நானே அப்பாவிதான் என்றாலும் கிம்பல் மீது நடத்தப்படும் குரூரமான pranks-இல் நானும் பங்கு பெற்றிருக்க முடியும் என்று உணர்வதாலா? எத்தனைதான் ஏமாந்தாலும் கிம்பலின் அடிப்படை நல்ல குணம் மாறாமல் இருப்பதாலா? ஒரு கோணத்தில் பார்த்தால் மிகவும் சிம்பிளான, குழந்தைக் கதைதான். ஆனால் எங்கோ சென்று இது என் இதயத்தை தொடுகிறது!
எழுதியவர் 1978-இல் நோபல் பரிசு வென்ற ஐசக் பாஷவிஸ் சிங்கர். 1945-இல் எழுதப்பட்டது. சிங்கர் யூதர். போலந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். யிட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் 1976-இல் நோபல் பரிசு வென்ற சால் பெல்லோ!
சிறுகதையை இணைத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், எழுத்துக்கள்
தொடர்புடைய சுட்டி: எழுத்தாளர் பாவண்ணன் இந்த சிறுகதையை அலசுகிறார்.
One thought on “ஏப்ரல் 1 சிறுகதை: Gimpel the Fool”