ராஷோமோன் திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். (பார்க்கவில்லை என்றால் கட்டாயம் பார்த்துவிடுங்கள், உலகின் டாப் டென் படங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் ராஷோமோன் இடம் பெறும்) இயக்குனர் அகிரா குரோசாவா அந்தத் திரைப்படத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஒரு cult figureதான்.
திரைப்படம் ரயனோசுகே அகுடகாவா எழுதிய இரண்டு சிறுகதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. ஒன்றின் பெயர் ராஷோமோன். ரொம்ப நாளைக்கு அது இரண்டு சிறுகதைகளின் இணைப்பு என்று தெரியாது. ராஷோமோன் சிறுகதையை மட்டும் படித்துவிட்டு இதிலிருந்து குரோசாவா எப்படி திரைப்படத்தை உருவாக்கினார் என்று வியந்து கொண்டிருந்தேன். In the Grove சிறுகதை திரைப்படத்தின் கதையையும், ராஷோமோன் திரைப்படம் கதையின் ஒரு தளத்தையும் தருகிறது.
அகுடகாவா இளவயதிலேயே – 35 வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அகுடகாவாவின் பலம் அவரது வேர்கள்தான் என்று தோன்றுகிறது. நான் படித்த வரையில் அவரது கதைகள் சில பல நூறு வருஷங்களுக்கு முன்னால் நடக்கின்றன. அனேகமாக பெரிய அந்தஸ்து இல்லாதவர்கள்தான் கதை மாந்தர்கள். திடீரென்று ஒரு வீச்சு. In the Grove சிறுகதையில் மனைவி கணவனைக் கொல்லச் சொல்லும் இடம்; பிணங்களின் தலைமுடியைத் திருடும் கிழவி; விளையாட்டாகச் சொன்ன பொய் நிஜமாகவே நடந்ததா இல்லையா என்ற கேள்வி; செய்தி சொல்லப் போகும் நரி; என்று பல இடங்களைச் சொல்லலாம். அவையே அவரது கதைகளை உயர்த்துகின்றன. ஆனால் என் கண்ணில் எவையும் படிக்க வேண்டியவை அல்ல. உளவியல் கூறுகளை வலிந்து புகுத்துகிறார் என்று தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருந்தால் இந்த rough edges எல்லாம் போயிருக்கலாம்.
நான் படித்த தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருந்தன. In the Grove சிறுகதை ஒரு rough draft போலத்தான் இருந்தது. அதில் ராஷோமான் திரைப்படத்தை கண்டது குரொசாவாவின் சாதனை என்றுதான் தோன்றுகிறது. ராஷோமான் நல்ல் பின்புலச் சித்தரிப்பு, ஆனால் அவ்வளவு மட்டுமே. Yam Gruel, Martyr, Kesa and Morito ஆகியவை படிக்கக் கூடிய, சுமாரான சிறுகதைகள். Dragon நல்ல சிறுகதை. குளத்திலிருந்து ஒரு ட்ராகன் எழும் என்று கிளப்பிவிடும் புரளி உண்மை ஆகிறதா?
அகுடகாவா புத்தகப் பித்தர்களுக்கு மட்டும்தான். திரைப்படத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்வேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்