உ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல…

சாமிநாதையரைப் பற்றி நம்மில் அனேகருக்குத் தெரியும். ஆனால் அவர் மட்டுமே எல்லா பழைய தமிழ் இலக்கியங்களையும் அச்சில் கொண்டு வந்துவிடவில்லை. ரொம்ப சிம்பிளான கேள்வி – திருக்குறளை முதன் முதலாக அச்சில் பதித்தது யார்? எப்போது? குறளும் ஓலைச்சுவடியில் மட்டும்தானே இருந்திருக்க வேண்டும்? அதை யாரோ – அச்சில் ஏற்றி இருக்க வேண்டும் இல்லையா? யார் அச்சேற்றியது என்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆறுமுக நாவலர் பதித்திருக்கிறார், ஆனால் அவர்தான் முதலில் பதித்தவரா? திருக்குறளை முதலில் பதித்தவர் ஏன் உ.வே.சா. அளவுக்கு கொண்டாடப்படவில்லை? உ.வே.சா.வின் புகழ் மற்றவர்களை மங்கடித்துவிட்டதா? எனக்குத் தெரிந்து சி.வை. தாமோதரம் பிள்ளையை ஏறக்குறைய உ.வே.சா.வுக்கு இணையாகச் சொல்லலாம். மற்றவர்கள் யார் யார்?

தமிழ்ச் சுடர்மணிகள் புத்தகத்தில், வையாபுரிப் பிள்ளையின் வார்த்தைகளில்:

ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்துவிட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்றுவிட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தஙகள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், ராஜகோபாலப் பிள்ளை முதலானவர்கள் ராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவக சிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள்.

உ.வே.சா.வின் என் சரித்திரத்தில் பார்த்தபடி – கல்லூரி மாணவர்களுக்கு என்ன பாடம் வைக்கப்படுகிறதோ அதை உடனே அச்சிட்டு வெளியிடுவது லாபகரமான தொழிலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. சீவகசிந்தாமணியில் ஒரு பகுதி இப்படி உ.வே.சா. பதிப்பிற்கு முன் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. வித்வான் தியாகராஜ செட்டியாரே அந்தப் பாடத்தை நடத்த கொஞ்சம் திணறினாராம். அதனால் அப்படி சில நூல்கள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்தப் பதிப்பாளர்கள் யார்யாரென்று தெரிய இன்று வாய்ப்பு குறைவு. தியாகராஜ செட்டியாரே திணறினார் என்றால் உரை இல்லாமல் மூலம் மட்டுமே பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களை பதித்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரிந்த வரையில் கீழே பட்டியல் போட்டிருக்கிறேன். உ.வே.சா.வின் என் சரித்திரம், தாமோதரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு ஒன்று (எழுதியவர் பேர் நினைவில்லை), சீனி. வேங்கடசாமி எழுதிய ‘19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்‘, விக்கிபீடியா, மற்றும் அங்கும் இங்கும் பார்த்த கட்டுரைகளிலிருந்து தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். நான் ஆய்வாளன் அல்லன். தவறுகள் இருக்க வாய்ப்புண்டு, உங்கள் கண்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.  அதை விட முக்கியமாக உங்களுக்கு மேலும் விஷயம் தெரிந்தால் கட்டாயமாகச் சொல்லுங்கள்!

எழுதிய ஆண்டு நூல் எழுதியவர் பதிப்பு ஆண்டு பதித்தவர் குறிப்புகள்
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1847 மழவை மகாலிங்கய்யர்
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: சொல்லதிகாரம், சேனாவரையர் உரை தொல்காப்பியர் 1868 சி.வை. தாமோதரம் பிள்ளை 1858-இல் சாமுவெல் பிள்ளை முழு தொல்காப்பியத்தையும் – உரைகள் இன்றி – பதிப்பித்தார் என்கிறார் ச.வே.சுப்ரமணியன்.
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1885 சி.வை. தாமோதரம் பிள்ளை
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1891 சி.வை. தாமோதரம் பிள்ளை மழவை மகாலிங்கய்யர் 1847-இல் இதை முதன்முறையாகப் பதித்திருக்கிறார்
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம்: சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியர் 1892 சி.வை. தாமோதரம் பிள்ளை
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம் தொல்காப்பியர் 1885 சி.வை. தாமோதரம் பிள்ளை
2ஆம் நூற்றாண்டு? தொல்காப்பியம் – சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், இளம்பூரணர் உரை தொல்காப்பியர் 1868 சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
? நற்றிணை பலர் 1915 பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எட்டுத்தொகை
? குறுந்தொகை பலர் 1915 திருமாளிகை சௌரிப் பெருமாள் அரங்கன் எட்டுத்தொகை
? ஐங்குறுநூறு அம்மூவனார், ஓதலாந்தையார், ஓரம்போகியார், கபிலர், பேயனார் 1903 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு பதிற்றுப்பத்து அரிசில் கிழார், கபிலர், பரணர் மற்றும் பலர் 1904 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
? பரிபாடல் பலர் 1918 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
2ஆம் நூற்றாண்டு? கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை இளநாகர், கபிலர், பெருங்கடுங்கோன், நல்லந்துவர், நல்லுருத்திரர் 1887 சி.வை. தாமோதரம் பிள்ளை எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு? அகநானூறு பலர் 1923 ரா. ராகவையங்கார் எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு? புறநானூறு பலர் 1894 உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை
2-ஆம் நூற்றாண்டு? திருமுருகாற்றுப்படை நக்கீரர் 1834 சரவணப் பெருமாள் ஐயர் 1857, ஆறுமுக நாவலர். ஆனால் உ.வே.சா.வின் 1889 பதிப்பே (பத்துப்பாட்டு) கவனம் பெற்றது.
2-ஆம் நூற்றாண்டு? பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? முல்லைப்பாட்டு நப்பூதனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? குறிஞ்சிப்பாட்டு கபிலர் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? நெடுநல்வாடை நக்கீரர் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு? மலைபடுகடாம் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் 1889 உ.வே. சாமிநாதய்யர் பத்துப்பாட்டு
2-ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் 1892 உ.வே. சாமிநாதய்யர் ஐம்பெரும் காப்பியங்கள்
2-ஆம் நூற்றாண்டு மணிமேகலை சீத்தலைச்சாத்தனார் 1897 உ.வே. சாமிநாதய்யர் ஐம்பெரும் காப்பியங்கள்
4-ஆம் நூற்றாண்டு ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் பதினெண்கீழ்க்கணக்கு
5ஆம் நூற்றாண்டு ஐந்திணை எழுபது மூவாதியார் பதினெண்கீழ்க்கணக்கு
5ஆம் நூற்றாண்டு? திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார் ரா. ராகவையங்கார்? பதினெண்கீழ்க்கணக்கு
5-ஆம் நூற்றாண்டு? திரிகடுகம் நல்லாதனார் பதினெண்கீழ்க்கணக்கு
5-ஆம் நூற்றாண்டு? ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார் 1893 செல்வகேசவராய முதலியார் பதினெண்கீழ்க்கணக்கு
5-ஆம் நூற்றாண்டு? முத்தொள்ளாயிரம் பெயர் தெரியவில்லை 1905 ரா. ராகவையங்கார்
6-ஆம் நூற்றாண்டு திருக்குறள் திருவள்ளுவர் 1861 ஆறுமுக நாவலர்?
6-ஆம் நூற்றாண்டு திருக்குறள் – மணக்குடவர் உரை திருவள்ளுவர், மணக்குடவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை
6-9-ஆம் நூற்றாண்டுகள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்கள்
7-ஆம் நூற்றாண்டு இறையனார் அகப்பொருள், நக்கீரர் உரை இறையனார் 1883 சி.வை. தாமோதரம் பிள்ளை
7-8-ஆம் நூற்றாண்டுகள் தேவாரம் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்
? திருமந்திரம் திருமூலர்
8-ஆம் நூற்றாண்டு இனியவை நாற்பது பூதஞ்சேதனார் ரா. ராகவையங்கார்? பதினெண்கீழ்க்கணக்கு
? நாலடியார் களத்தூர் வேதகிரி முதலியார்? பதினெண்கீழ்க்கணக்கு
? நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் பதினெண்கீழ்க்கணக்கு
? இன்னா நாற்பது கபிலர் பதினெண்கீழ்க்கணக்கு
? களவழி நாற்பது பொய்கையார் பதினெண்கீழ்க்கணக்கு
? கார் நாற்பது கண்ணங்கூத்தனார் பதினெண்கீழ்க்கணக்கு
? திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார் பதினெண்கீழ்க்கணக்கு
? பழமொழி நானூறு முன்றுரையர் 1917 செல்வகேசவராய முதலியார் பதினெண்கீழ்க்கணக்கு
? சிறுபஞ்சமூலம் காரியாசான் பதினெண்கீழ்க்கணக்கு
? முதுமொழிக்காஞ்சி மதுரை கூடலூர் கிழார் 1919 செல்வகேசவராய முதலியார் பதினெண்கீழ்க்கணக்கு
? ஏலாதி கணிமேதாவியார் பதினெண்கீழ்க்கணக்கு
? கைந்நிலை புல்லங்காடனார் பதினெண்கீழ்க்கணக்கு
? இன்னிலை வ.உ. சிதம்பரம் பிள்ளை பதினெண்கீழ்க்கணக்கு நூலா இல்லையா என்று தெரியவில்லை.
8-ஆம் நூற்றாண்டு திவாகர நிகண்டு திவாகர முனிவர் தாண்டவராய முதலியார்
9-ஆம் நூற்றாண்டு நந்திக் கலம்பகம் பெயர் தெரியவில்லை
9-ஆம் நூற்றாண்டு திருவாசகம் மாணிக்கவாசகர் ஆறுமுக நாவலர்https://siliconshelf.wordpress.com/2014/10/26/ஆறுமுக-நாவலர்/?
9-ஆம் நூற்றாண்டு புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார் தாண்டவராய முதலியார்
10-ஆம் நூற்றாண்டு சீவக சிந்தாமணி திருத்தக்க தேவர் உ.வே. சாமிநாதய்யர் ஐம்பெரும் காப்பியங்கள்
10-ஆம் நூற்றாண்டு குண்டலகேசி ஐம்பெரும் காப்பியங்கள்
? வளையாபதி ஐம்பெரும் காப்பியங்கள், சில பாடல்களே கிடைத்திருக்கின்றன
? சூளாமணி 1889 சி.வை. தாமோதரம் பிள்ளை ஐஞ்சிறு காப்பியங்கள்
10-ஆம் நூற்றாண்டு நீலகேசி தோலாமொழித் தேவர் அ. சக்ரவர்த்தி நாயனார் ஐஞ்சிறு காப்பியங்கள்
11-ஆம் நூற்றாண்டு வீரசோழியம், பெருந்தேவனார் உரை புத்தமித்திரர் 1881 சி.வை. தாமோதரம் பிள்ளை
12-ஆம் நூற்றாண்டு கலிங்கத்துப்பரணி ஜெயங்கொண்டார்
12-ஆம் நூற்றாண்டு ஆத்திசூடி ஔவையார் ஆறுமுக நாவலர்
12-ஆம் நூற்றாண்டு கொன்றை வேந்தன் ஔவையார் ஆறுமுக நாவலர்
12-ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் சேக்கிழார் 1884 ஆறுமுக நாவலர்?
11ஆம் நூற்றாண்டு யாப்பருங்கலக் காரிகை அமுதசாகரர் களத்தூர் வேதகிரி முதலியார்
12-ஆம் நூற்றாண்டு கம்பராமாயணம் கம்பர்
13-ஆம் நூற்றாண்டு நன்னூல் பவணந்தி முனிவர் தாண்டவராய முதலியார்
13-ஆம் நூற்றாண்டு நளவெண்பா புகழேந்திப் புலவர்
13-ஆம் நூற்றாண்டு தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் 1893 தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை சண்முகம் பிள்ளை
14-ஆம் நூற்றாண்டு கந்த புராணம் கச்சியப்ப சிவாசாரியார் 1883 ஆறுமுக நாவலர்? நாவலருக்கு முன் வேறு யாராவது பதித்தார்களா என்று தெரியவில்லை
15-ஆம் நூற்றாண்டு வில்லிபாரதம் வில்லிபுத்தூரார் ஆறுமுக நாவலர்?
15-ஆம் நூற்றாண்டு திருப்புகழ் அருணகிரிநாதர் 1895 சுப்ரமணியப் பிள்ளை 1885-இல் ஆறுமுக நாவலர் பதித்தார் என்றும் படித்தேன்.
16-ஆம் நூற்றாண்டு? திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவர் ஆறுமுக நாவலர்?
16-ஆம் நூற்றாண்டு நைடதம் அதிவீரராம பாண்டியர் களத்தூர் வேதகிரி முதலியார்
16-ஆம் நூற்றாண்டு சூடாமணி நிகண்டு மண்டலபுருஷர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
17-ஆம் நூற்றாண்டு? முக்கூடற்பள்ளு
17-ஆம் நூற்றாண்டு? பிரபுலிங்கலீலை சிவப்பிரகாச சுவாமிகள் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் 1867-இல் ஆறுமுக நாவலர் பதித்திருக்கிறார்.
17-ஆம் நூற்றாண்டு நீதிநெறி விளக்கம் குமரகுருபரர் 1853 சி.வை. தாமோதரம் பிள்ளை
18-ஆம் நூற்றாண்டு குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்ப கவிராயர்
18-ஆம் நூற்றாண்டு திருத்தணிகைப் புராணம் கச்சியப்ப முனிவர் 1883 சி.வை. தாமோதரம் பிள்ளை
18ஆம் நூற்றாண்டு இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் 1889 சி.வை. தாமோதரம் பிள்ளை

விவரம் தெரிந்தவர்கள் கட்டாயம் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்

பிடித்த கவிதை – டென்னிசனின் யுலீசஸ்

நல்ல நாளிலேயே கவிதை என்றால் ஓடுபவன். பதின்ம வயதில்தான் இந்தக் கவிதையை முதல் முறையாகப் படித்தேன், இதுவோ அரைக்கிழங்களுக்கான கவிதை. அப்போதெல்லாம் பொறுமை அதிகம், என்னவோ டென்னிசன் டென்னிசன் என்கிறார்களே படித்துத்தான் பார்ப்போம் என்றுதான் தம் கட்டிப் படித்தேன். கடைசி பாராவைப் படிக்கும்போதுதான் ஆஹா! என்று உணர்ந்தேன். இன்றும் பிடித்த வரிகள்தான். இப்போது நானே அரைக்கிழமாகிவிட்டதால் இன்னும் பிடிக்கிறது.

The lights begin to twinkle from the rocks:
The long day wanes: the slow moon climbs: the deep
Moans round with many voices. Come, my friends,
‘T is not too late to seek a newer world.
Push off, and sitting well in order smite
The sounding furrows; for my purpose holds
To sail beyond the sunset, and the baths
Of all the western stars, until I die.
It may be that the gulfs will wash us down:
It may be we shall touch the Happy Isles,
And see the great Achilles, whom we knew.
Tho’ much is taken, much abides; and tho’
We are not now that strength which in old days
Moved earth and heaven, that which we are, we are;
One equal temper of heroic hearts,
Made weak by time and fate, but strong in will
To strive, to seek, to find, and not to yield.

முழுக்கவிதையும் கீழே.


It little profits that an idle king,
By this still hearth, among these barren crags,
Match’d with an aged wife, I mete and dole
Unequal laws unto a savage race,
That hoard, and sleep, and feed, and know not me.
I cannot rest from travel: I will drink
Life to the lees: All times I have enjoy’d
Greatly, have suffer’d greatly, both with those
That loved me, and alone, on shore, and when
Thro’ scudding drifts the rainy Hyades
Vext the dim sea: I am become a name;
For always roaming with a hungry heart
Much have I seen and known; cities of men
And manners, climates, councils, governments,
Myself not least, but honour’d of them all;
And drunk delight of battle with my peers,
Far on the ringing plains of windy Troy.
I am a part of all that I have met;
Yet all experience is an arch wherethro’
Gleams that untravell’d world whose margin fades
For ever and forever when I move.
How dull it is to pause, to make an end,
To rust unburnish’d, not to shine in use!
As tho’ to breathe were life! Life piled on life
Were all too little, and of one to me
Little remains: but every hour is saved
From that eternal silence, something more,
A bringer of new things; and vile it were
For some three suns to store and hoard myself,
And this gray spirit yearning in desire
To follow knowledge like a sinking star,
Beyond the utmost bound of human thought.

This is my son, mine own Telemachus,
To whom I leave the sceptre and the isle,—
Well-loved of me, discerning to fulfil
This labour, by slow prudence to make mild
A rugged people, and thro’ soft degrees
Subdue them to the useful and the good.
Most blameless is he, centred in the sphere
Of common duties, decent not to fail
In offices of tenderness, and pay
Meet adoration to my household gods,
When I am gone. He works his work, I mine.

There lies the port; the vessel puffs her sail:
There gloom the dark, broad seas. My mariners,
Souls that have toil’d, and wrought, and thought with me—
That ever with a frolic welcome took
The thunder and the sunshine, and opposed
Free hearts, free foreheads—you and I are old;
Old age hath yet his honour and his toil;
Death closes all: but something ere the end,
Some work of noble note, may yet be done,
Not unbecoming men that strove with Gods.
The lights begin to twinkle from the rocks:
The long day wanes: the slow moon climbs: the deep
Moans round with many voices. Come, my friends,
‘T is not too late to seek a newer world.
Push off, and sitting well in order smite
The sounding furrows; for my purpose holds
To sail beyond the sunset, and the baths
Of all the western stars, until I die.
It may be that the gulfs will wash us down:
It may be we shall touch the Happy Isles,
And see the great Achilles, whom we knew.
Tho’ much is taken, much abides; and tho’
We are not now that strength which in old days
Moved earth and heaven, that which we are, we are;
One equal temper of heroic hearts,
Made weak by time and fate, but strong in will
To strive, to seek, to find, and not to yield.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

பிடித்த பாரதி கவிதை – ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி
மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி
மானவன் தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது என்னே!

நீர்ச்சுனைக்கணம் மின்னுற்றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்சடை கருமேகங்கள் எல்லாம்
கனகம் ஒத்துச் சுடர் கொண்டுலாவ
தேர்ச்சி கொண்டு பல்சாத்திரம் கற்றும்
தெவிட்டொணாத நல்லின்பக் கருவாம்
வேர்ச்சுடர் பரமாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

பாரதிதாசன் பாரதியின் – இல்லை இல்லை ஐயரின் – பரமபக்தர் என்பது தெரிந்ததே. பாண்டிச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற கவிதையை எழுதி இருக்கிறார். கவிதை எப்படிப் பிறந்தது என்று பாரதிதாசன் விவரிக்கிறார்.

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக்களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் உரைத்தார்

தேன்போற் கவி ஒன்று செப்புக நீர் என்று
பல நண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார்: அதற்கு நம் ஐயர்
என் கவிதான் நன்றாய் இருந்திடினும் சங்கத்தார்
புன்கவி என்றே சொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
உங்களுக்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்
அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே” என்று
அழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார் இசையோடு பாடினார்

காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு.


பாரதியின் கவிதை:

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கடலோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவகம் – ஆகிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை இடிக்கும் தலை இமயம் – எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

பாரதி செய்த அலப்பறை

நான் சின்ன வயதில் கிராமங்களில் வளர்ந்தவன். அங்கே எல்லாம் டெண்டு கொட்டாய்தான். சேர், பெஞ்ச், தரை டிக்கெட். அப்பா/அம்மாவோடு திரைப்படம் பார்க்கப் போனால் சேர் டிக்கெட். நண்பர்களோடு போனால் தரை டிக்கெட், இருபது பைசா இருந்தால் கலர் வேறு குடிக்கலாம். தரை டிக்கெட் விலை 35 பைசாவிலிருந்து 40 பைசாவுக்கு ஏறியபோது விலைவாசி உயர்வு எப்படி எல்லாம் வாழ்க்கையை பாதிக்கிறது என்று ஒன்பது பத்து வயதுப் பையன்கள் நிறைய பேசி இருக்கிறோம்.

அங்கே வரும் திரைப்படங்களில் – அனேகமாக, 50-60களின் திரைப்படங்கள் – ராஜா-ராணி திரைப்படங்கள் நிறைய உண்டு. க்ளைமாக்சில் வில்லன்/வில்லி யாருக்காவது விஷம் கொடுக்க முயற்சி செய்தால் ஏதோ குழப்பம் நடந்து அவர்களே குடித்துவிடுவார்கள். தவறவே தவறாது. அப்படி ஒரு காட்சி வந்தால் நண்பர்கள் எல்லாம் ‘ஐயய்யோ’ mode-க்கு போய்விடுவோம். பின்னே என்ன, விஷத்தை குடித்தோமா, செத்தோமா, படத்தை முடித்தோமா என்றில்லாமல் ஐந்து நிமிஷம் வசனம் பேசிவிட்டுத்தான் சாவார்கள்.

1910களிலேயே இப்படித்தான் போலிருக்கிறது. பாரதி நாடகம் பார்க்கும்போது செய்த அலப்பறையை பாரதிதாசன் விவரிக்கிறார்.

ஒரு நாள் நம் பாரதியார் நண்பரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார் அங்கே
ஒரு மன்னன் விஷமருந்தி மயக்கத்தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம் அன்னோன்
இருந்த இடந்தனிலிருந்தே எழுந்துலாவி
“என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே
வருகுதையோ” எனும் பாட்டைப் பாடலானான்

வாய் பதைத்து பாரதியார் கூவுகின்றார்
மயக்கம் வந்தால் படுத்துக்கொள்ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்!
தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்

சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!
மயக்கம் வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்
மயக்கவிஷம் உண்டது போல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான் தூங்கிவிட்டால்
முடிவு நன்றாயிருந்திருக்கும் சிரமம் போம்!

அனேகமாக இந்த நாடகம் வி.ஏ. தியாகராஜ செட்டியார் எழுதிய அதிரூப அமராவதியாக இருக்க வேண்டும். அதில்தான் இப்படி ஒரு பாடல் வரும் என்று நினைவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

முக்கூடற்பள்ளு

பள்ளியில் படித்த செய்யுள்களில் இன்னும் நினைவிருக்கும் ஒன்று.

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே
கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே
மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே
போற்று திருமாலழகர்க்கேற்ற மாம்பண்ணைச்
சேரிப் பள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஏட்டுச்சுவடியிலிருந்து புத்தகமாகப் பதித்தவரும் யார் என்று தெரியவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல் என்ற ஊரில் பண்ணையாரிடம் வேலை செய்யும் பள்ளன், அவனது இரு மனைவிகள் வாழ்வை, உழவுத் தொழிலை விவரிக்கிறதாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

அசுரன் – பாட்ஷாவின் மறுவடிவம்

என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா வகை பதிவு. அது சரி அவார்டா கொடுக்கறாங்க என்ற தளத்தில் பழைய சினிமாவுக்கு மட்டுமே இரண்டு மூன்று வருஷம் விமரிசனம் எழுதி இருக்கிறேனே! இந்தத் திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் மட்டுமே கழிந்திருக்கின்றன…

வெக்கை குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது என்று கேள்விப்பட்டதாலும், வெற்றிமாறன்+தனுஷ் திரைப்படம் என்பதாலும் நானும் என் மனைவியும் திரை அரங்கிலே போய்ப் பார்த்தோம்.

திரைப்படம், நாவல் இரண்டுக்குமான தளமே வேறு.

நாவலின் அடிநாதம் அன்பு, பாசம், பிரியம். அப்பாவுக்கும் மகனுக்கும் அண்ணனுக்கும் தம்பிக்கும் சித்தப்பாவுக்கும் மகனுக்கும் அத்தைக்கும் மருமகனுக்கும் பங்காளிகளுக்குள்ளும் சாதி சனத்துக்கும் இடையே இருக்கும் அழிந்து போகாத அன்பு. ஒரு வன்முறை சம்பவத்தை முன்னால் வைத்து அதன் பின்புலமாக அன்பை காட்டுவதுதான் பூமணியின் சாதனை.

திரைக்கதை பல காலமாக பார்த்த பாட்ஷா திரைப்படத்தின் உல்டாதான். பாட்ஷாவே ஒரு ஹிந்தி திரைப்படத்தின் – ஹம் – உல்டா. ஹம் திரைப்படமும் ஏதாவது திரைப்படத்தின் உல்டாவாகத்த்தான் இருக்க வேண்டும். நாயகன் பெரிய ஹீரோவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. இதில் இயக்குனரின் சமூகப் பிரக்ஞை தெரியவேண்டும் என்பதற்காக கீழ்வெண்மணி, வெக்கை எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் “மாஸ்” காட்டாமல், ஒரே ஆள் இருபது முப்பது பேரை அடிப்பதாகக் காட்டாமல், பூமணியின் கதையையே படமாக எடுத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை.

கொரோனா நேரம், நெட்ஃப்ளிக்சிலோ இல்லை அமேசான் ப்ரைமிலோ இருக்கும். கண்ட குப்பைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்(றேன்), இதை நிச்சயமாகப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

சாண்டில்யனின் “மூங்கில் கோட்டை”

மூங்கில் கோட்டை உண்மையில் தனிப்பதிவுக்கு தேவை இல்லாத புத்தகம். சாண்டில்யனைப் பற்றி எழுதும்போது ஒரு வரி எழுதினால் போதும். தனிப்பதிவாக எழுத ஒரே காரணம்தான் – ஜெயமோகன் தன் வரலாற்று மிகுபுனைவு நாவல் பட்டியலில் இதைக் குறிப்பிட்டிருப்பது. அவர் தனது பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை.

மூங்கில் கோட்டையில் உள்ள வரலாறு தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பியதுதான். அதைப் பற்றி கோவூர் கிழார் என்ற புலவர் பாடி இருக்கிறார். அதை அடிப்படையாக வைத்து ஒரு உப்புசப்பில்லாத கதையை எழுதி இருக்கிறார்.

சேர வீரன் இளமாறனை சேர மன்னனை தப்புவிக்க நெடுஞ்செழியனின் ஆசிரியரும், ஆனால் சேர மன்னனை விடுவிக்க விரும்புபவருமான கோவூர் கிழார் ரகசியமாக அழைக்கிறார். என்ன நடக்கும்? கோவூர் கிழாரின் வீட்டில் இளமாறன் ஒரு அழகியை சந்திக்கிறான். ரகசிய அழைப்பாயிற்றே, அடுத்தது என்ன? வந்த இரவே நெடுஞ்செழியனை இளமாறன் சந்தித்து வாட்போர் வேறு புரிகிறான். அழகி யார்? வழக்கமாக நெடுஞ்செழியனின் மகளாக இருக்க வேண்டும், ஆனால் நெடுஞ்செழியனுக்கு இருபது வயதுதான், அதனால் சகோதரி. அடுத்தது என்ன? அழகியும் வீரனும் மதுரையை விட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் சித்தர் என்ற நெடுஞ்செழியனின் இன்னொரு ஆசிரியரிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்தான் போர்த்திட்டங்களை வகுத்து சேரமானைத் தோற்கடித்தவர். அவருக்கு சேரமானிடம் பகை என்று பின்னால் வருகிறது. சேரமானை பகைக்கும் அவர் என்ன செய்வார்? கரெக்ட், அவரே சேரமானை விடுவிக்க முயற்சி செய்யும் இளமாறனைக் கொண்டுபோய் சேரமான் சிறை இருக்கும் மூங்கில் கோட்டைக்கு அருகில் விட்டுவிடுகிறார். பகைவனுக்கருளும் நன்னெஞ்சு அவருக்கு. இதற்குள் முக்கால்வாசி புத்தகம் முடிந்துவிடுகிறது. பிறகு இளமாறன் கோட்டைக்குள் புகுந்து மன்னனைத் தப்புவித்து (எப்படி என்றெல்லாம் சாண்டில்யன பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.) ஆனால் தான் மாட்டிக் கொள்கிறான். இதற்குள் இன்னொரு திடுக்கிடும் திருப்பம் – சித்தர்தான் இளமாறனின் அப்பா!

இதைவிட நல்ல கதைகளை சாண்டில்யன் எழுதி இருக்கிறார். ஏதோ சிறு வயதில் ஜெயமோகனுக்குப் பிடித்திருந்திருக்கும், அவ்வளவுதான். தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

சாண்டில்யனின் “ராஜமுத்திரை”

சாண்டில்யனின் ராஜமுத்திரை சிறு வயதில் (எட்டு, ஒன்பது வயதில்) என்னைக் கவர்ந்த நாவல். செண்டாயுதத்தின் விவரிப்பு இன்றும் நினைவிருக்கிறது. இப்போதும் படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவலே. தமிழுக்கு நல்ல சரித்திர நாவல். வணிக நாவல்களின், வாரப்பத்திரிகை தொடர்கதைகளின் பொற்காலத்தில் எழுதப்பட்ட நாவல். குமுதத்தில் தொடராக வந்தது.

சாண்டில்யனை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டது என்பதால் கதை (ரத்தினச்) சுருக்கம்: சேர மன்னன் உதயரவி மீண்டெழுந்து வரும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பாண்டிய நாட்டை ஒடுக்க முத்துக்களை களவாடுகிறான். அது அப்படியே சுதி ஏறி இளவரசி முத்துக்குமரியையும் சிறைப்பிடிக்கிறான். சுந்தரபாண்டியனின் தம்பி வீரபாண்டியனின் தலைமையில் அவன் காதலி இளநங்கை, நட்பு நாட்டு இளவரசன் இந்திரபானு முத்தையும் இளவரசியையும் மீட்கின்றனர், வீரரவி போரில் இறக்கிறான். வீரரவியின் களவுச் செயலை கண்டிக்கும் சேரநாட்டு குருநாதர் பரதபட்டன் என்று ஒரு பாத்திரம், பட்டன் போரில் முழு மனதாக ஈடுபடாதது சேரர்களை பலவீனப்படுத்திவிடுகிறது.

மீள்வாசிப்பில் வழக்கமான பலங்களும் பலவீனங்களும் தெரிகின்றன. திடுக்கிடும் திருப்பங்களைத் தர வேண்டும் என்ற விழைவு பல இடங்களில் செயற்கையாக முடிகிறது. உதாரணமாக சேரநாட்டு கோட்டை அதிபன் மகள் குறிஞ்சி பாண்டியருக்காக உளவறிகிறாள், பாண்டியர் படையில் உபதளபதியாகவே ஆகிறாள். ஏன்? வீரபாண்டியன் கண்ணில் மட்டும் கரெக்டாக பாதையில் கிடக்கும் கோடரி தென்படுகிறது. இந்திரபானு நினைத்தால் எதிரி அரண்மனைக்குப் போய்விடமுடிகிறது. ஸ்பீட்ப்ரேக்கர் போல காதல்/காம வர்ணனைகள் அவ்வப்போது எரிச்சலையே மூட்டுகின்றன. அதே நேரத்தில் மிகச் சரளமாக செல்லும் கதை ஓட்டம். நல்ல சாகசக் கதை. பதின்ம வயதில் படிக்க ஏற்றது. உண்மையைச் சொல்லப் போனால் சாண்டில்யன் மூலம் தெரிந்து கொண்ட வரலாறுதான் பள்ளிக் காலத்தில் தேர்வுகளுக்குப் பிறகும் நினைவிருந்தது. இதைப் படித்துத்தான் முத்துதான் பாண்டியரின் சொத்து, அதை வாங்க அன்றைய ரோமானியர் பெரும் பணம் கொடுத்தனர், சோழ அரசு பலவீனமானபோது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் வலிமைப்படுத்தினான் என்று தெரிந்துகொண்டேன்.

ஜெயமோகன் இதை சரித்திர வணிக நாவல்களின் இரண்டாம் வரிசையில் வைக்கிறார். நானும் அதில்தான் வைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

இந்திய விடுதலையின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த அட்லி

க்ளமெண்ட் அட்லி 1945-1951 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் சிறந்த பிரதமர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் லேபர் கட்சித் தலைவர், பொதுவாக லேபர் கட்சியினர் காலனிய ஆதிக்கம் தவறு என்று நினைப்பவர்கள். அட்லியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிற்கு விடுதலை தந்தே ஆக வேண்டும் என்று கருதினார் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. அவரது சுயசரிதை அதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது. To put it uncharitably, தான் பிரதமரானதும் இந்தியாவை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டும் என்று கருதினார் என்றும் சொல்லலாம்.

அட்லியின் சுயசரிதையைப் – As It Happened – படிக்கும்போது நான் வியந்த விஷயம், என் takeaway, ஒன்றுதான். இந்தியா ஆங்கிலேயருக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெரிகிறது. 250-300 பக்க சுயசரிதையில் காந்தி ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்படுகிறார். இத்தனைக்கும் அட்லி 1920களிலிருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். 1927-இன் சைமன் கமிஷனின் உறுப்பினராக இந்தியா வந்திருக்கிறார். அவர் துணைப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 1942-இன் Quit India இயக்கம், 1943-இன் பெரும் பஞ்சம் போன்றவை கூட அவர் கண்ணில் படவில்லை. நேரு அவர் கண்ணில் காமன்வெல்த் நாடு ஒன்றின் பிரதமராக ஆன பிறகுதான் அவருக்கு தென்பட்டிருக்கிறார். படித்த, மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த, இடதுசாரி சார்புடைய, காலனிய ஆதிக்கத்தை தவறு என்று நினைக்கும், சைமன் கமிஷனுக்காக இந்தியாவிற்கு சுற்றிப் பார்க்க வந்த லேபர் கட்சி தலைவருக்கு துணைப்பிரதமராகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் கூட இந்தியாவைப் பற்றிய பிரக்ஞை இவ்வளவுதான் என்றால் சாதாரண ஆங்கிலேயனுக்கு என்ன அக்கறை இருந்திருக்கும்?

அட்லி இளமையிலேயே இடதுசாரி சார்பு நிலை எடுத்திருக்கிறார். அப்போதுதான் ஆரம்பித்திருந்த லேபர் கட்சியில் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக கட்சியில் வளர்ந்திருக்கிறார். கட்சி பலம் பெறுவதில் வழக்கமான பிரச்சினைகள். அவற்றை தாண்டி கட்சியின் தலைவராக பரிணமித்திருக்கிறார். சர்ச்சில் எல்லா கட்சிகளையும் சேர்த்து இரண்டாம் உலகப் போரில் தேசிய அரசை அமைத்தபோது துணைப் பிரதமராக இருந்திருக்கிறார். உலகப்போரிற்கு பிறகு நடந்த தேர்தலில் சர்ச்சிலை தோற்கடித்து பிரதமராகி இருக்கிறார். வெற்றிக்கு பெரும் விலை கொடுத்த இங்கிலாந்தை மீட்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

சர்ச்சிலின் தலைமைப் பண்புகளை விதந்தோதுகிறார். போர்க்காலத்தில் அவரை விட சிறந்த தலைவர் இருந்திருக்க முடியாது என்று கருதுகிறார்.

இந்தப் புத்தகத்தை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேயர்களுக்க் பெரும் தலைவலியாக இருந்தார்கள் என்ற பிம்பத்தை இது உடைக்கிறது. எங்கேயோ தொலைதூரத்துப் பிரச்சினை என்றுதான் சராசரி ஆங்கிலேயன் கருதி இருப்பான் என்று தெளிவாகத் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்