சாமிநாதையரைப் பற்றி நம்மில் அனேகருக்குத் தெரியும். ஆனால் அவர் மட்டுமே எல்லா பழைய தமிழ் இலக்கியங்களையும் அச்சில் கொண்டு வந்துவிடவில்லை. ரொம்ப சிம்பிளான கேள்வி – திருக்குறளை முதன் முதலாக அச்சில் பதித்தது யார்? எப்போது? குறளும் ஓலைச்சுவடியில் மட்டும்தானே இருந்திருக்க வேண்டும்? அதை யாரோ – அச்சில் ஏற்றி இருக்க வேண்டும் இல்லையா? யார் அச்சேற்றியது என்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆறுமுக நாவலர் பதித்திருக்கிறார், ஆனால் அவர்தான் முதலில் பதித்தவரா? திருக்குறளை முதலில் பதித்தவர் ஏன் உ.வே.சா. அளவுக்கு கொண்டாடப்படவில்லை? உ.வே.சா.வின் புகழ் மற்றவர்களை மங்கடித்துவிட்டதா? எனக்குத் தெரிந்து
சி.வை. தாமோதரம் பிள்ளையை ஏறக்குறைய உ.வே.சா.வுக்கு இணையாகச் சொல்லலாம். மற்றவர்கள் யார் யார்?
தமிழ்ச் சுடர்மணிகள் புத்தகத்தில், வையாபுரிப் பிள்ளையின் வார்த்தைகளில்:
ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்துவிட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்றுவிட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தஙகள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், ராஜகோபாலப் பிள்ளை முதலானவர்கள் ராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவக சிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள்.
உ.வே.சா.வின் என் சரித்திரத்தில் பார்த்தபடி – கல்லூரி மாணவர்களுக்கு என்ன பாடம் வைக்கப்படுகிறதோ அதை உடனே அச்சிட்டு வெளியிடுவது லாபகரமான தொழிலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. சீவகசிந்தாமணியில் ஒரு பகுதி இப்படி உ.வே.சா. பதிப்பிற்கு முன் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. வித்வான் தியாகராஜ செட்டியாரே அந்தப் பாடத்தை நடத்த கொஞ்சம் திணறினாராம். அதனால் அப்படி சில நூல்கள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்தப் பதிப்பாளர்கள் யார்யாரென்று தெரிய இன்று வாய்ப்பு குறைவு. தியாகராஜ செட்டியாரே திணறினார் என்றால் உரை இல்லாமல் மூலம் மட்டுமே பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ் இலக்கியங்களை பதித்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரிந்த வரையில் கீழே பட்டியல் போட்டிருக்கிறேன். உ.வே.சா.வின் என் சரித்திரம், தாமோதரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு ஒன்று (எழுதியவர் பேர் நினைவில்லை), சீனி. வேங்கடசாமி எழுதிய ‘19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்‘, விக்கிபீடியா, மற்றும் அங்கும் இங்கும் பார்த்த கட்டுரைகளிலிருந்து தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். நான் ஆய்வாளன் அல்லன். தவறுகள் இருக்க வாய்ப்புண்டு, உங்கள் கண்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அதை விட முக்கியமாக உங்களுக்கு மேலும் விஷயம் தெரிந்தால் கட்டாயமாகச் சொல்லுங்கள்!
எழுதிய ஆண்டு | நூல் | எழுதியவர் | பதிப்பு ஆண்டு | பதித்தவர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை | தொல்காப்பியர் | 1847 | மழவை மகாலிங்கய்யர் | |
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம்: சொல்லதிகாரம், சேனாவரையர் உரை | தொல்காப்பியர் | 1868 | சி.வை. தாமோதரம் பிள்ளை | 1858-இல் சாமுவெல் பிள்ளை முழு தொல்காப்பியத்தையும் – உரைகள் இன்றி – பதிப்பித்தார் என்கிறார் ச.வே.சுப்ரமணியன். |
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம்: பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை | தொல்காப்பியர் | 1885 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை | தொல்காப்பியர் | 1891 | சி.வை. தாமோதரம் பிள்ளை | மழவை மகாலிங்கய்யர் 1847-இல் இதை முதன்முறையாகப் பதித்திருக்கிறார் |
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம்: சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை | தொல்காப்பியர் | 1892 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம் | தொல்காப்பியர் | 1885 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
2ஆம் நூற்றாண்டு? | தொல்காப்பியம் – சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், இளம்பூரணர் உரை | தொல்காப்பியர் | 1868 | சோடசாவதானம் சுப்பராய செட்டியார் | |
? | நற்றிணை | பலர் | 1915 | பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் | எட்டுத்தொகை |
? | குறுந்தொகை | பலர் | 1915 | திருமாளிகை சௌரிப் பெருமாள் அரங்கன் | எட்டுத்தொகை |
? | ஐங்குறுநூறு | அம்மூவனார், ஓதலாந்தையார், ஓரம்போகியார், கபிலர், பேயனார் | 1903 | உ.வே. சாமிநாதய்யர் | எட்டுத்தொகை |
2-ஆம் நூற்றாண்டு | பதிற்றுப்பத்து | அரிசில் கிழார், கபிலர், பரணர் மற்றும் பலர் | 1904 | உ.வே. சாமிநாதய்யர் | எட்டுத்தொகை |
? | பரிபாடல் | பலர் | 1918 | உ.வே. சாமிநாதய்யர் | எட்டுத்தொகை |
2ஆம் நூற்றாண்டு? | கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை | இளநாகர், கபிலர், பெருங்கடுங்கோன், நல்லந்துவர், நல்லுருத்திரர் | 1887 | சி.வை. தாமோதரம் பிள்ளை | எட்டுத்தொகை |
2-ஆம் நூற்றாண்டு? | அகநானூறு | பலர் | 1923 | ரா. ராகவையங்கார் | எட்டுத்தொகை |
2-ஆம் நூற்றாண்டு? | புறநானூறு | பலர் | 1894 | உ.வே. சாமிநாதய்யர் | எட்டுத்தொகை |
2-ஆம் நூற்றாண்டு? | திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | 1834 | சரவணப் பெருமாள் ஐயர் | 1857, ஆறுமுக நாவலர். ஆனால் உ.வே.சா.வின் 1889 பதிப்பே (பத்துப்பாட்டு) கவனம் பெற்றது. |
2-ஆம் நூற்றாண்டு? | பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | சிறுபாணாற்றுப்படை | நத்தத்தனார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | முல்லைப்பாட்டு | நப்பூதனார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | நெடுநல்வாடை | நக்கீரர் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு? | மலைபடுகடாம் | பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் | 1889 | உ.வே. சாமிநாதய்யர் | பத்துப்பாட்டு |
2-ஆம் நூற்றாண்டு | சிலப்பதிகாரம் | இளங்கோ அடிகள் | 1892 | உ.வே. சாமிநாதய்யர் | ஐம்பெரும் காப்பியங்கள் |
2-ஆம் நூற்றாண்டு | மணிமேகலை | சீத்தலைச்சாத்தனார் | 1897 | உ.வே. சாமிநாதய்யர் | ஐம்பெரும் காப்பியங்கள் |
4-ஆம் நூற்றாண்டு | ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
5ஆம் நூற்றாண்டு | ஐந்திணை எழுபது | மூவாதியார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
5ஆம் நூற்றாண்டு? | திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் | ரா. ராகவையங்கார்? | பதினெண்கீழ்க்கணக்கு | |
5-ஆம் நூற்றாண்டு? | திரிகடுகம் | நல்லாதனார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
5-ஆம் நூற்றாண்டு? | ஆசாரக்கோவை | பெருவாயின் முள்ளியார் | 1893 | செல்வகேசவராய முதலியார் | பதினெண்கீழ்க்கணக்கு |
5-ஆம் நூற்றாண்டு? | முத்தொள்ளாயிரம் | பெயர் தெரியவில்லை | 1905 | ரா. ராகவையங்கார் | |
6-ஆம் நூற்றாண்டு | திருக்குறள் | திருவள்ளுவர் | 1861 | ஆறுமுக நாவலர்? | |
6-ஆம் நூற்றாண்டு | திருக்குறள் – மணக்குடவர் உரை | திருவள்ளுவர், மணக்குடவர் | வ.உ. சிதம்பரம் பிள்ளை | ||
6-9-ஆம் நூற்றாண்டுகள் | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் | ஆழ்வார்கள் | |||
7-ஆம் நூற்றாண்டு | இறையனார் அகப்பொருள், நக்கீரர் உரை | இறையனார் | 1883 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
7-8-ஆம் நூற்றாண்டுகள் | தேவாரம் | அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் | |||
? | திருமந்திரம் | திருமூலர் | |||
8-ஆம் நூற்றாண்டு | இனியவை நாற்பது | பூதஞ்சேதனார் | ரா. ராகவையங்கார்? | பதினெண்கீழ்க்கணக்கு | |
? | நாலடியார் | களத்தூர் வேதகிரி முதலியார்? | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | நான்மணிக்கடிகை | விளம்பி நாகனார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | இன்னா நாற்பது | கபிலர் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | களவழி நாற்பது | பொய்கையார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | கார் நாற்பது | கண்ணங்கூத்தனார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | பழமொழி நானூறு | முன்றுரையர் | 1917 | செல்வகேசவராய முதலியார் | பதினெண்கீழ்க்கணக்கு |
? | சிறுபஞ்சமூலம் | காரியாசான் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | முதுமொழிக்காஞ்சி | மதுரை கூடலூர் கிழார் | 1919 | செல்வகேசவராய முதலியார் | பதினெண்கீழ்க்கணக்கு |
? | ஏலாதி | கணிமேதாவியார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | கைந்நிலை | புல்லங்காடனார் | பதினெண்கீழ்க்கணக்கு | ||
? | இன்னிலை | வ.உ. சிதம்பரம் பிள்ளை | பதினெண்கீழ்க்கணக்கு நூலா இல்லையா என்று தெரியவில்லை. | ||
8-ஆம் நூற்றாண்டு | திவாகர நிகண்டு | திவாகர முனிவர் | தாண்டவராய முதலியார் | ||
9-ஆம் நூற்றாண்டு | நந்திக் கலம்பகம் | பெயர் தெரியவில்லை | |||
9-ஆம் நூற்றாண்டு | திருவாசகம் | மாணிக்கவாசகர் | ஆறுமுக நாவலர்https://siliconshelf.wordpress.com/2014/10/26/ஆறுமுக-நாவலர்/? | ||
9-ஆம் நூற்றாண்டு | புறப்பொருள் வெண்பா மாலை | ஐயனாரிதனார் | தாண்டவராய முதலியார் | ||
10-ஆம் நூற்றாண்டு | சீவக சிந்தாமணி | திருத்தக்க தேவர் | உ.வே. சாமிநாதய்யர் | ஐம்பெரும் காப்பியங்கள் | |
10-ஆம் நூற்றாண்டு | குண்டலகேசி | ஐம்பெரும் காப்பியங்கள் | |||
? | வளையாபதி | ஐம்பெரும் காப்பியங்கள், சில பாடல்களே கிடைத்திருக்கின்றன | |||
? | சூளாமணி | 1889 | சி.வை. தாமோதரம் பிள்ளை | ஐஞ்சிறு காப்பியங்கள் | |
10-ஆம் நூற்றாண்டு | நீலகேசி | தோலாமொழித் தேவர் | அ. சக்ரவர்த்தி நாயனார் | ஐஞ்சிறு காப்பியங்கள் | |
11-ஆம் நூற்றாண்டு | வீரசோழியம், பெருந்தேவனார் உரை | புத்தமித்திரர் | 1881 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
12-ஆம் நூற்றாண்டு | கலிங்கத்துப்பரணி | ஜெயங்கொண்டார் | |||
12-ஆம் நூற்றாண்டு | ஆத்திசூடி | ஔவையார் | ஆறுமுக நாவலர் | ||
12-ஆம் நூற்றாண்டு | கொன்றை வேந்தன் | ஔவையார் | ஆறுமுக நாவலர் | ||
12-ஆம் நூற்றாண்டு | பெரிய புராணம் | சேக்கிழார் | 1884 | ஆறுமுக நாவலர்? | |
11ஆம் நூற்றாண்டு | யாப்பருங்கலக் காரிகை | அமுதசாகரர் | களத்தூர் வேதகிரி முதலியார் | ||
12-ஆம் நூற்றாண்டு | கம்பராமாயணம் | கம்பர் | |||
13-ஆம் நூற்றாண்டு | நன்னூல் | பவணந்தி முனிவர் | தாண்டவராய முதலியார் | ||
13-ஆம் நூற்றாண்டு | நளவெண்பா | புகழேந்திப் புலவர் | |||
13-ஆம் நூற்றாண்டு | தஞ்சைவாணன் கோவை | பொய்யாமொழிப் புலவர் | 1893 | தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை சண்முகம் பிள்ளை | |
14-ஆம் நூற்றாண்டு | கந்த புராணம் | கச்சியப்ப சிவாசாரியார் | 1883 | ஆறுமுக நாவலர்? | நாவலருக்கு முன் வேறு யாராவது பதித்தார்களா என்று தெரியவில்லை |
15-ஆம் நூற்றாண்டு | வில்லிபாரதம் | வில்லிபுத்தூரார் | ஆறுமுக நாவலர்? | ||
15-ஆம் நூற்றாண்டு | திருப்புகழ் | அருணகிரிநாதர் | 1895 | சுப்ரமணியப் பிள்ளை | 1885-இல் ஆறுமுக நாவலர் பதித்தார் என்றும் படித்தேன். |
16-ஆம் நூற்றாண்டு? | திருவிளையாடல் புராணம் | பரஞ்சோதி முனிவர் | ஆறுமுக நாவலர்? | ||
16-ஆம் நூற்றாண்டு | நைடதம் | அதிவீரராம பாண்டியர் | களத்தூர் வேதகிரி முதலியார் | ||
16-ஆம் நூற்றாண்டு | சூடாமணி நிகண்டு | மண்டலபுருஷர் | திருத்தணிகை விசாகப் பெருமாளையர் | ||
17-ஆம் நூற்றாண்டு? | முக்கூடற்பள்ளு | ||||
17-ஆம் நூற்றாண்டு? | பிரபுலிங்கலீலை | சிவப்பிரகாச சுவாமிகள் | திருத்தணிகை விசாகப் பெருமாளையர் | 1867-இல் ஆறுமுக நாவலர் பதித்திருக்கிறார். | |
17-ஆம் நூற்றாண்டு | நீதிநெறி விளக்கம் | குமரகுருபரர் | 1853 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
18-ஆம் நூற்றாண்டு | குற்றாலக் குறவஞ்சி | திரிகூட ராசப்ப கவிராயர் | |||
18-ஆம் நூற்றாண்டு | திருத்தணிகைப் புராணம் | கச்சியப்ப முனிவர் | 1883 | சி.வை. தாமோதரம் பிள்ளை | |
18ஆம் நூற்றாண்டு | இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் | 1889 | சி.வை. தாமோதரம் பிள்ளை |
விவரம் தெரிந்தவர்கள் கட்டாயம் சொல்லுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்