ஜெயமோகன் எழுதிய 100 கரோனா சிறுகதைகளை இங்கும் அங்குமாகத்தான் படிக்க முடிந்தது. படித்த சில சிறுகதைகளால் மீண்டும் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சம் மீண்டிருக்கிறது. பார்ப்போம்.
எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதைகளில் ஒன்று சாவி. மனிதனை பிற விலங்குகளிலிருந்து பிரிப்பது எது? என்னைப் பொறுத்த வரையில் அது அறிவுத்தேடல் மட்டுமே. அதுவும் உடனடிப் பயன் எதுவும் இல்லாத அறிவுத்தேடல் மட்டுமே. (இலக்கியம், இசை, கலை எல்லாம் இரண்டாம் படியில்தான் இருக்கின்றன.)
ஏன் எவரெஸ்டின் மீது ஏற வேண்டும்? Because it is there. ஏன் கடலின் ஆழம் வரை போக வேண்டும்? Because it is there. ஏன் நிலாவில் நடக்க வேண்டும்? Because it is there. ஏன் ஆர்க்கிமிடீஸ் வட்டத்தின் பரப்பளவு என்ன என்று ஆராய்ந்து தன் ஃபார்முலாவை நிறுவ வேண்டும்? Because. ஏன் டாலமியும் கோப்பர்நிகஸும் பூமி சூரியனை சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியை சுற்றுகிறதா என்று ஆராய வேண்டும்? Because. ஏன் எண்ணற்ற கணித ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நேரத்தை – இல்லை வாழ்வையே – Squaring the Circle போன்ற பயனற்ற ஆராய்ச்சிகளில் செலவிட வேண்டும்? Because. ஏன் ஆய்லர் கோனிக்ஸ்பர்கின் பாலங்கள் எல்லாவற்றையும் ஒரே சுற்றில் சுற்றி வர முடியுமா என்று ஆராய வேண்டும்? ஒரு பாலத்தில் ஒரு முறை நடந்தால் என்ன இரண்டு முறை நடந்தால் என்ன? Because. ஏன் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 1+1=2 என்று நிறுவ நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள புத்தகத்தை எழுத வேண்டும்? Because. ஏன் மனித இனத்தையே, பூமியையே அழிக்கக் கூடிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்? Because.
சாவி சிறுகதை அதைத்தன் காட்டுகிறது. (அறிவுத்தேடல் என்றால் என்ன விளக்க இலக்கியம்தான் வர வேண்டி இருக்கிறது.) குரங்கு ஸ்க்ரூவை இறுக்கும் காட்சி கவிதை.
“நீ இங்கியே இருடே மக்கா…” என்றான். “இங்க எல்லா துக்கமும் உண்டு பாத்துக்க. அங்க வானத்திலே உனக்கு அந்த துக்கமொண்ணும் இல்லை. ஆனா இந்த சந்தோசம் அங்க இல்ல கேட்டியா?”
என்று அரிகிருஷ்ணன் சொல்லுவது முற்றிலும் உண்மை. இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!
மனக்குகை ஓவியங்கள் என்ற புதுமைப்பித்தன் சிறுகதையில் கடவுளை நிராகரித்து நெருப்பை ஊதும் இடத்தை நினைவுபடுத்தியது.
கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்
கதையை படிக்க சொல்லி எழுதிய வியாக்கியானம் அருமை.
LikeLike
நன்றி சௌகந்தி!
LikeLike
Superb story. I read all the 100 as and when he wrote and was making a mental rank and this would qualify in to 25
LikeLike
அருணா, எத்தனையோ நாள் கழித்து உங்களைப் பார்ப்பது பெருமகிழ்ச்சி! எங்கே இருக்கிறீர்கள் இப்போது?
LikeLike