இரண்டு நாட்களுக்கு முன் என் அத்திம்பேர் (பிராமண வழக்கில் அத்தை கணவர்) டி.ஆர். கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.
நான் எனது பதின்ம வயதுகளில் என் அத்தை வீட்டில் தங்கிப் படித்தவன். என் அத்தையோடு எப்போதும் ஒரு ஸ்பெஷல் பந்தம் உண்டு. என் அத்தையின் குடும்பத்தை என் இரண்டாவது குடும்பம் என்றே சொல்லலாம். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தால் பம்மிப் பதுங்குவேன்(வோம்). வளர வளர பயம் எல்லாம் போய்விட்டது, உரிமையோடு நிறைய எதிர்த்துப் பேசி இருக்கிறேன். அவருக்கும் நான் சொன்னால் மட்டும் தப்பாகவே தெரியாது. அவரது கனத்த குரலை மறக்கவே முடியாது. எத்தனையோ தூரத்தில் வசித்தாலும் அத்தை குடும்பம்தான் உறவினர் குடும்பம், சென்னை போகும்போதெல்லாம் தவறாமல் சென்று பார்க்கும் உறவினர்கள். இன்று அத்தையின் அருகில் இருக்க முடியவில்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கிறது.
அவருக்கும் கோவிட். தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டாராம். Post-covid complications அதிகரித்து இறந்திருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் இன்னும் இரண்டு வருஷம் இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை, பயன்பட வாய்ப்பிருக்கிறது. போட்டுத் தொலையுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்