2021-இல் படித்த, மீண்டும் படித்த நல்ல படைப்புகளின் பட்டியல்.
இரண்டு புத்தகங்களை கட்டாயம் வாங்கிப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒன்று பிங்கலி சூரண்ணா எழுதிய ப்ரபாவதி ப்ரத்யும்னமு, டேவிட் ஷுல்மன் மற்றும் வெல்செரு நாராயணராவ் மொழிபெயர்ப்பு. இன்னொன்று நாஞ்சில் எழுதிய மிதவை. அடுத்த முறை நாஞ்சிலைப் பார்க்கும்போது அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தேசம்.