அசோகமித்திரனின் “யுத்தங்களுக்கிடையில்”

asokamithranபுத்தகம் புத்தக கண்காட்சியில் வாங்கியது. கடலூர் சீனுவிற்கும், சாமிற்கும் தெரியும் நான் அ.மியின் முதன்மை வாசகி என்று. கண்டிப்பாக வாங்கிருங்க என்றார்கள். நர்மதாவில் போய் கேட்டோம். சிப்பந்திக்கு அப்படி ஒரு புத்தகம் இருப்பதே தெரியவில்லை. அவரை விடாமல் தொடர்ந்து ஒரு வழியாக வாங்கினோம். இவ்வாரம் சொல்வனத்தில் வந்திருக்கும் நேர்காணலில் நாவல்கள் பற்றி அ.மி இப்படி சொல்கிறார்:

நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு. அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது

arunaநாவல் சார்ந்த வடிவத்தைப் பற்றிய அ.மியின் கருத்து அவர் எழுதும் நாவல்களில் பிரதிபலிக்கிறது. இந்த நாவல் 159 பக்கங்களில் அடங்கி விடுகிறது. விலை 60 ரூபாய்.

ஒரே குடும்பத்தின் கதையை வேறு வேறு உறுப்பினர்களே திரும்பத் திரும்ப நினைவு கூறும் தொடர் உத்தியில் சொல்லப்படும் நாவல். எளிதாக புரிய வைக்க வேண்டும் என்றால் தமிழில் ஆய்த எழுத்து சினிமாவில் பயன்படுத்தியது போன்ற உத்தி. முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அ.மி விட்டுச் செல்லும் ரொட்டித் துண்டின் தடத்தை பின் தொடர்ந்தால் சட்டென்று நமக்கும் புரிந்து விடுகிறது. உறவுகளின் நூல். ஒரு கிராமத்தில் படிப்பை மட்டுமே நம்பி பிழைக்கும், ரொம்ப சாமர்த்தியம் எல்லாம் இல்லாத 16 குழந்தைகள் பிறந்த, 8 குழந்தைகளே தங்கிய ஒரு கீழ் மத்திய தர பிராமண குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களின் மிகச் சாதாரணமான வாழ்க்கையை, பெரிதான உணர்ச்சி வெளிப்பாடுகளோ, மானுட தரிசனங்களோ எல்லாம் இல்லாமல் நினைவு கூர்கிறார்கள்.

வேறு ஒரு பேட்டியில் ஒரு கட்டத்தில் அ.மி.யின் அடக்கமான பதில்களில் பொறுமையிழந்து ஒரு நண்பர், “எழுத்து என்பது ஆன்மீகமான தேடல் அல்லவா?” என்று உணர்ச்சியுடன் கேட்டார். சற்றே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அ.மி

எனக்கு இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம் எப்படித் தேடறது

என்று சிரிக்காமல் சொன்னார். கேள்வி கேட்ட நண்பர் உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

Yuddhangalukkidaiyilஅவர் சித்தரிக்கும் வாழ்க்கையும் அதில் வரும் கதாபாத்திரங்களும் இந்த கருத்தையே முன் வைக்கிறார்கள். தம் வாழ்க்கையைப் பற்றி பிழைத்துக் கிடைக்கும் நோக்கில் மட்டுமே அணுகும் மனிதர்கள், சாதரணர்கள். அ.மி இப்புத்தகத்தின் முன்னுரையில் சொல்வது போல் இவ்வாழ்வும் யுத்தம்தான்.

ஆனாலும், தன் மேல் திருடன் என்ற பழி வந்து விடுமோ என்று பயந்து மூலையில் அமர்ந்து உயிரை விடும் இரண்டாவது அண்ணா, தன் கல்யாணத்தால் வீட்டை விட்டு வெளியேறும் மூத்தார் பையனுக்கு சொத்துக்களை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாதுகாக்கும், தன் அண்ணன் மகனை தத்தெடுத்து அவனுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கும் இளம் விதவை சீதா, தன் மகனை இழந்த நொடியில் தன் துஷ்ட அம்மாவின், அவள் இழப்பின் வலியை ஒரு நொடி நேரம் நினைக்கும் ராமேசன், தன் தம்பியை ஊருக்கு கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ராகவன், மொழியும், மனிதர்களும் அன்னியமான ஊரில் சென்றடைந்து அங்கே எளிய நட்பையும், பிழைக்க தையலையும், ஊறுகாய் போடும் வழிகளையும் எல்லாம் சத்தமில்லாமல் கண்டடையும் பெண்கள், தன் தம்பிகளுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து அவர்களை வழி நடத்தும் பாலு என பிழைப்பிற்காக புலம் பெயரும், இவ்வாழ்வில் பிழைப்பைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் அதிலும் சின்ன சின்ன லட்சியங்களை சுமக்கும், அதை லட்சியம் போன்ற வார்த்தைகளால் எல்லாம் நினைக்காத ஒரு தலைமுறையின் உழைப்பின், தியாகத்தின், பொறுப்பின் கதை.

நம் அனைவரின் வாழ்க்கையையும் திரும்பி பார்த்தால் நம் முந்தைய தலைமுறைக்காரர்களுக்கு இதே போல் ஒரு கதை இருப்பது நிச்சயம். அந்த வாழ்க்கையின் கதையை அவர்கள் மிகச் சாதாரணமாக தாண்டியும் செல்வார்கள். நாவலில் நுண்விவரங்களெல்லாம் பெரிதாக கிடையாது. அவர் வரைந்து காட்டுவது ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம். அதன் உள்ளே இருக்கும் அடர்த்தியான வாழ்க்கை நம் கற்பனைக்கே விடப்படுகிறது. சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நிறைய. அ.மியின் மெல்லிய, கூரிய நகைச்சுவை அவதானிப்புகள் நாவல் நெடுக.

முன்னும் பின்னுமாக சொல்லப்படுவதால் கொஞ்சம் கவனத்துடன் படித்தால்தான் நன்றாக புரியும். ஆனால் புத்தகத்தில் பெயர்கள் சில இடங்களில் தப்பாக அச்சிடப்பட்டிருப்பது முதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எடிட்டிங் இன்னும் நன்றாக அடுத்த பதிப்பிலாவது செய்யலாம்.

சிறு நாவல், கடகடவென்று படித்து விடலாம் தான். ஆனால் எல்லா அ.மியின் எழுத்துக்களையும் போல கூர்ந்து படித்தலும், மற்றொருமுறையும் படித்தலும்தான் அவர் சொல்லாமல் விடும் அனைத்தையும் உள்வாங்க உதவும்.


ஆர்வியின் குறிப்பு: அருணாவின் விவரிப்பைப் படிக்கும்போது எனக்கு என் அப்பா தலைமுறைக் குடும்பங்கள் – குறிப்பாக என் பெரியப்பா நினைவு வருகிறது. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பதிவுகள், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகம் பற்றி நண்பர் ரெங்கசுப்ரமணி
புத்தகம் பற்றி ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார் – அம்ஷன்குமாரும் ஆய்த எழுத்து திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடுவதும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும் என்று சொல்வதும் ஆச்சரியம்!

2014 சென்னை புத்தகக் கண்காட்சியில் அருணா

2011ல்தான் முதலில் புத்தகத் திருவிழாவிற்குப் போனேன். ஆர்வி படுத்தியதால் அதைப் பற்றி சுமாரான பதிவொன்றும் எழுதினேன். போன வருடம் வளைகுடாப் பகுதியில் இருந்ததால் போக முடியவில்லை, இம்முறை சதாப்தியில் டிக்கெட் முன்பதிவு செய்து நானும் அனுவும், நண்பர்களுக்கும் தகவல் சொல்லி கண்காட்சியின் கடைசி வீக்கெண்டில் போனோம். ரியாதிலிருந்து வந்திருந்த கோபியும், சாமும், சென்னை என்ற நரகத்திற்கு சாம்பிளாக இருக்கும் சென்ட்ரலுக்கு வந்திருந்தார்கள். நேராக கண்காட்சிக்கே 12 மணிக்கெல்லாம் போய்விட்டோம். மதியமாதலால் கூட்டம் அதிகம் இல்லை. அரங்கிற்கு நுழையும் போதே எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனும், ஈரோடு பாரதி புத்தகாலய இளங்கோவும் எதிர்பட்டார்கள். பேச்சு, கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள், புத்தக விலையேற்றம், ஜெயமோகனின் வெண்முரசு என்று போனது. மிக நாட்களாக பதிவில் இல்லாத கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை இந்த முறை தமிழினி பதிப்பித்திருக்கிறது என்றார்.

சந்தியா பதிப்பகம்தான் முதலில் சென்றோம். வண்ணதாசனின் அறிமுகத்தை படித்ததிலிருந்து நான் வாங்க வேண்டும் என்று எண்ணிய, தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் வாங்கினேன். மலையாளத்தில் இதைப்பற்றி வந்திருக்கும் பரிணயம் என்ற படத்தை பல வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். மிக நல்ல படம். தாத்ரிக்குட்டி தன் காலத்தை மீறிய பெண்ணியவாதி என்றே நான் நினைக்கிறேன். யூமா. வாசுகியின் மற்றுமொரு மொழிபெயர்ப்பான ரோமாபுரி யாத்திரையை சாம் மிக பலமாக சிபாரிசு செய்தார், ஜெ.மோ பரித்துரைத்த பா.சரவணனின் கலிங்கத்துப் பரணி உரையையும் வாங்கினேன். சந்தியாவில் வாங்கியவை

  • ஒரு சிறு இசை – வண்ணதாசனின் சமீபத்திய சிறுகதை தொகுப்பு
  • என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ் கவிதை தொகுப்பு
  • தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் – மலையாள மூலம் ஆலங்கோடு பாலகிருஷ்ணன், தமிழில் யூமா. வாசுகி
  • கலிங்கத்துப் பரணி – டாக்டர் பா.சரவணன்
  • ரோமாபுரி யாத்திரை – மலையாள மூலம் பாரேம்மாக்கல் கோவர்ணதோர், தமிழில் – யூமா வாசுகி
  • ஆலய பிரவேச உரிமை – பி.சிதம்பரம் பிள்ளை, தமிழில் பேராசிரியர் சிவ. முருகேசன்
  • செவ்வி – நேர்காணல்கள் – பேரா. தொ. பரமசிவன்
  • நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா
  • நினைவு அலைகள் – டாக்டர் தி.சே.செள. ராஜன்
  • தமிழ் நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் (தொகுப்பு) – ஏ.கே.செட்டியார்

நானும் அனுவும் வேறு வேறு புத்தகங்களையே வாங்குவது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தோம். அனு பெரும்பாலும் கட்டுரை தொகுப்புகளும், கவிதை தொகுப்புகளும் வாங்கினார்.

பின்னர் வம்சி சென்றோம். லட்சுமணப் பெருமாளின் எழுத்துக்களைப் பற்றி நிறைய நண்பர்கள் சொன்னாலும் இதுவரை படித்ததில்லை. அவரின் முழுக் கதை தொகுப்பை வாங்கினேன். வெகு நாட்களாக ஆசைப்பட்ட சுமித்ராவும். வம்சியில் 300 ரூபாயில் விற்கும் அறத்திற்குக் கூட hard copy cover போடாமல் இருப்பது ரொம்ப டூ மச்.

வம்சியில் வாங்கியவை:

  • லட்சுமண பெருமாள் கதைகள்
  • அறம் – ஜெயமோகன்
  • மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன – பாரததேவி
  • சுமித்ரா – மலையாளத்தில் கல்பற்றா நாராயணன், தமிழில் கே.வி. ஷைலஜா
  • கடைகளின் வரிசை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுதிறது என்றார் சாம். இதில் கண்டிப்பாக Murphy’s law உள்ளது. சந்தியா, தமிழினி எல்லாம் வரிசையின் கடைசியில். கூட்டம் கூடக் கூட நிற்க முடியாத சூடும் வெக்கையும்.

    எழுத்து பதிப்பகத்தில் வெள்ளையானை வாங்கினோம். 400 ரூபாயாக இருந்தாலும் மிக நல்ல பதிப்பு. வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு வருவதற்குள் கவிதை கருத்தரங்கு ஆரம்பித்து விட்டது. வெளியில் ஓலை கொட்டகையின் கீழ் அமர்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்து கவிதைக்கு இவ்வளவு ரசிகர்களா தமிழில் என ஒரு நிமிடம் துணுக்குற்றதென்னவோ உண்மை. அரங்கில் அடித்த வெயிலில் இருந்து விடுபட்டு கூட்டிவந்திருக்கும் வயதான அம்மா, அப்பா, சிறு பிள்ளைகளுக்கு பால் ஐஸ் வாங்கித்தந்து உட்கார வைக்க, சுயம் காதலியுடன் அமெரிக்க கார்ன் சாப்பிட ஏதுவான இடம் இது என்று உணர்ந்த வாசகப் பரப்பை தமிழ் பெற்றிருக்கிறது என்று புரிந்த போது சிறிது ஆசுவாசம் ஏற்பட்டது. மேடையில் எக்கசக்க பெண் கவிதாயினிகள் நடுவில் வண்ணதாசன், மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா, சாம்ராஜும். பெரும்பாலான பெண் கவிதாயினிகள் மிக நீண்ட கவிதைகளை கமா, புல்ஸ்டாப் போன்ற தொந்தரவுகள் இன்றி படித்துக் கொண்டேஏஏஏ போனார்கள், ஈழக் கவிதாயினிகளும். சுவிட்சர்லாண்டிலிருந்து வந்திருந்தவர் தன் புறச்சூழலிற்கு எந்த வித தொடர்பும் இல்லாமல் அவர் அக உலகத்திற்குள்ளேயே நீண்ட கவிதைகளைப் படித்தார். கவிஞர் பிருந்தாவின் ஒரு கவிதை பரவாயில்லை ரகமாக இருந்தது. மனுஷ்யபுத்திரனின் கவிதை (அது கவிதையா எனத் தெரியவில்லை) கூட்டத்தை கொஞ்சம் எழுப்பியது. மேடையில் படிக்கக் கூடிய கவிதைகளுக்கு தேவையான brevityயையும், நேர்த்தியான வாசிப்பையும் நிகழ்த்தியவர் வண்ணதாசன் மட்டுமே. அவர் நிஜமாகவே கவிஞர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாமின் முறைக்காக நானும் கோபியும் காத்திருந்தோம். மற்றொரு கவிதாயினி வந்து பீறிடும் விந்து, நடுங்கும் தொடைகள் என்று படிக்க ஆரம்பித்து, கை தட்டியே ஆக வேண்டும் என்று கூட்டத்தை வேறு வற்புறுத்தினார். நட்பிற்காக நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைதான் ஆனாலும் இதற்கு மேல் முடியாது என்று முடிவெடுத்து நானும் கோபியும் வெளிநடப்பு செய்தோம். பெண்ணிய உடல்சார் அரசியல், ஈழம் போன்றவைகளைப் பற்றி இனியும் பேச வேண்டுமா என நினைக்கும் ஒரு தரப்பு உள்ளது. அது என் தரப்பு அல்ல. அவை நம் சமகாலத்தின் மிக முக்கிய பேசுப் பொருள்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் மிக அரதப்பழசான மொழியில், குரலில், சென்றடைபவர்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி எழுதப்படும் இவை நீண்ட ஏக்கத்தையே அளிக்கின்றன. இவர்கள் எல்லாம் தனிமனித சமுதாய அரசியலை, புது வார்ப்பில் கலை ஆக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ள அம்பையையும், ஷோபா சக்தியையும் ஒரு முறை படித்து விட்டு வருவது நல்லது.

    தமிழினியில் மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தமிழினி வசந்தகுமார் எல்லாரும் இருந்தனர். சு. வேணுகோபாலின் கூந்தப்பனை வாங்க வேண்டும் என்று எடுத்தேன். வசந்தகுமார் அவர்கள் பால்கனிகள், ஆட்டமும் வாங்குங்கள் என்றார். நாஞ்சில் நாடன் அவரின் சிற்றிலக்கியங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். தமிழினியில் வாங்கியவை:

    • சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில் நாடன்
    • மணல் கடிகை – எம். கோபாலகிருஷ்ணன்
    • பெயரற்றது – சயந்தன்
    • நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி
    • கூந்தப்பனை, ஆட்டம், பால்கனிகள் – சு. வேணுகோபால்

    கோபியின் நண்பர் கவிஞர் ராஜ சுந்தரராஜன் அவர்களை தமிழினியில் சந்தித்தோம். அனு அவருடைய நாடோடித் தடம் வாங்கினார். கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் எது என்பதற்கு நிறைய பேர் கண்மணி குணசேகரனின் வந்தாரங்குடியையும், அ.மியின் யுத்தங்களுக்கிடையேயையும் சொன்னார்கள். வந்தாரங்குடி பதித்து வரவில்லை. நர்மதாவில் யுத்தங்களுக்கிடையே வாங்கினோம்.

    மேலும் சுற்றி உயிர்மையில் ஆடு ஜீவிதமும், அடையாளத்தில் ஆர். சூடாமணியின் நாகலிங்க மரம், மருதாவில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பையும் மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாடுக் கதைகள் (தமிழில் ஸ்ரீராம்) வாங்கினோம்.

    மத்தியானம் பார்த்த சுமாரான மைதானம் சாப்பாட்டு குப்பைகளால் நிறைக்கப்பட்டு கால் வைக்க இடமில்லாமல் இருந்தது. சுஜாதா சொல்வதைப் போல தமிழர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வந்ததின் முதல் கடமையான சாப்பாட்டில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார்கள்.

    மறு நாள் காலச்சுவடு போனோம். ட்ராஸ்கி மருதுவின் கோட்டோவியத்தில் தமிழ் பொதுவெளியில் பங்கேற்ற பெண்களின் ஓவியக் காலண்டர் சிறப்பாக இருந்தது. காலச்சுவட்டில் வாங்கியவை:

    • பூக்குழி – பெருமாள் முருகன்
    • உப்பிட்டவரை – ஆ.சிவசுப்பிரமணியன்
    • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே: சினிமா கட்டுரைகள் – தியோடர் பாஸ்கரன்
    • காயசண்டிகை, பட்சியன் சரிதம் – இளங்கோ கிருஷ்ணன் கவிதை தொகுப்பு
    • சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை, கவிதை தொகுப்பு
    • மதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் சுகுமாரன்
    • ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி, தமிழில் குளச்சல் மு. யூசுப்
    • மீஸான் கற்கள் – மலையாள மூலம் புனத்தில் குஞ்ஞப்துல்லா, தமிழில் குளச்சல் மு. யூசுப்
    • வெல்லிங்டன் – சுகுமாரன்
    • திருடன் – மணியம்பிள்ளை

    வண்ணதாசன், கலாப்ரியா, சந்தியா நடராஜன், நாஞ்சில் நாடன், கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், தமிழினி வசந்தகுமார், ராஜசுந்தரராஜன், சொல்வனம் ரவிசங்கர், தினமணி சிவகுமார், நட்பாஸ் ஆகியவர்களுடனும் கண்காட்சிக்கு வந்திருந்த நண்பர்கள் சீனு, அரவிந்த், தனசேகர் ஆகியோருடனும் புத்தகங்களைப் பற்றி மட்டுமே 2 நாட்கள் பேசியதும், வாங்கிய புத்தகங்களை ஒரு வாரமாக எடுத்து எடுத்து பார்த்து சந்தோஷப்படுவதும் ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கும் பொழுது கிடைக்காத சந்தோஷங்கள்.

    சந்தியா நடராஜனுடனான நீண்ட உரையாடல் சுவாரசியமாக இருந்தது. ரவிசங்கர் பிரக்ஞையில் அம்பையுடன் சேர்ந்து வேலை செய்ததைப் பற்றி சொன்ன அதே மூச்சில் நீங்களும் எழுதிக் கொடுங்க என்றார். கேலி பண்ணுகிறாரா என்று கூர்ந்து பார்த்தேன். சீரியசாகவே சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ் எழுத்து சூழலை நினைத்து சட்டென்று எனக்கு கவலை வந்தது. கடைக டையாக எங்களைக் கூட்டிப் போய் இல்லை என்று பதிப்பகத்தார் சொன்னால் அவர்களிடம் பேசி கிளம்பும் முன் வேண்டிய புத்தகம் அனைத்தும் வாங்க உதவிய சாமுடன் புத்தகம் வாங்கக் கிளம்புவதே அலாதியான அனுபவம். கண்டிப்பா படிக்க வேண்டிய புத்தகம் அருணா இது, தமிழ்ல வந்திருக்கிற முக்கியமான புத்தகம் என்றே பெரும்பாலும் அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களுக்கு முன்னுரையாக சொல்வார். அவர் அப்புத்தகத்தை ஏற்கனவே படித்தும் இருப்பார்.

    2011ல் வாங்கியவைக்கான பட்டியல் சிலிகான் ஷெல்ப் வலைத்தளத்தில் கொடுத்திருக்கிறேன். அதில் யுகத்தின் முடிவில் மட்டுமே இன்னும் படிக்கவில்லை. பருவம் முழுமையாகப் படிக்க ஒரு sabbaticalக்காக காத்திருக்கிறது. அது கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கிறது. புத்தக அலமாரியில் வைக்காமல் ஹாலில் உள்ள மேஜையின் கீழ் இறைத்து வைத்திருக்கிறேன். படித்து விட்டே உள்ளே எடுத்து வைக்க வேண்டும் என்று. முழுமுதல் சோம்பேறியான என்னால் முடியாது என்றாலும் குறைந்தது ஒரு சிறு அறிமுகமாவது படிக்கும் புத்தகங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். Insha allah.

    தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பக்கம்

Aruna’s Thanjavur Trip

புத்தகங்களைப் பற்றிதான் இந்தத் தளத்தில் என்றாலும் இன்று ஒரு விதிவிலக்கு – அருணா தஞ்சாவூர் பக்கம் சுற்றிவிட்டு வந்த அனுபவங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்.

Aruna’s Thanjavur Trip

Traveling within India was one of the high priorities of my current stay in India. From the moment I landed here I have been looking for people to travel with for the wrong company can make the whole experience sour. So when I met Senthil in Chennai at the book fair and floated the idea of a trip within Tamil Nadu and he seemed to have a fairly good idea of its history and geography and was also willing to do the trip, I was pretty thrilled. We talked for a bit and decided on a Thanjavur trip. Both of us being Tamil literature junkies interested in the state’s history and architecture lead directly to a trip that one of our favorite author Jeyamohan had done earlier called “Thanjai Dharisanam” and had written about it. Since his trip involved exploring the various Chola temple architecture and also explore the historically important Chola sites we decided to sort of stay faithful to that journey and added a few other stops that piqued our interest. We figured out the chronological order to see the various archeological sites and temples so as not to be underwhelmed by some early sites if seen after a much developed later temple. Fond memories of the characters from childhood adventure novel Ponniyin Selvan which was also a somewhat fictionalized account of the Chola history was a further bonus.

I and Senthil agreed on a date and on my return from Chennai and booked the train tickets. Even though it was booked almost a month in advance both legs of my journey were waitlisted and I was hoping to get lucky. As most people know me know, luck is my eternal enemy and true to form it didn’t favor me this time either. I was still hoping that something would shake up. Thanks to timely and wise counsel from my sister and a friend, I booked literally the last ticket on a bus the day before the departure. My memory of bus travels in India date back about 2 decades and I was pleasantly surprised to find a long sleeper seat in an air conditioned bus. The ride was pretty comfortable except for about 2 hours near Trichy. The impact of a huge bus trying to negotiate those non roads while you are lying down is not for the faint hearted or bone structured.

Senthil came to the bus stop with the driver and the car and we checked in at TTDC, Thanjavur but had to wait for a couple of hours outside since the check in was only at 7’0 clock. Instead of waiting we decided to take a walk. When I visited Chennai last December for the music season used to think that it would be anyone’s idea of heaven with all the great music and dance flowing non-stop and great food to be had at all the venues. That is till you step out and experience the garbage and filth on the street. Mountains of garbage at every turn would make you believe that this would be anyone’s idea of a perfect hell too. If that’s the status of the civic status on Chennai, then less said the better it is about Thanjavur.

Kudumiyan Malai

Once we got into the room we quickly showered and got out as soon as we can and started driving to Kudumiyan Malai our 1st stop for the day. Kudumiyan Malai is about 60 Kms from Thanjavur in Pudukottai district and it took us about 2 hours to make the trip. Senthil and I had finalized the trip after our 1st meeting. We figured we would discuss the plan a bit closer to our trip and then every time he called or texted to discuss the trip, I was buried in an avalanche of work and we hardly connected with each other. I am sure both of us were a little bit apprehensive about an intense 4 day trip with a stranger. That all changed the moment we entered the Kudumiyan Malai and started gawking eagerly at the 10th century Chola sculptures.

The temple was built by the Cholas in the 10th Century and later renovated by Pandyas in 13th Century and Vijayanagara Kings in the 15th Century. The temple begins with the entrance to the presiding deity Shikhagirishwarar (Kudumiyan). The outer Praharam has 2 beautiful but somewhat smiling and harmless looking Dwarapalakas (gatekeepers) and that may be reason why a tribe of monkeys were having a grand time playing on one’s lap. Also seen here is a very detailed sculpture of Rathi riding an Annapakshi and Manmathan with a bow on either sides.

This is followed by a Vasantha Mandapam which has a row of beautiful sculptures on either side. Noteworthy are the Vishnu and Lakshmi riding on the shoulder of Garuda, two sculptures of horse riding warriors trampling their enemies, 10 headed Ravana, a few small sculptures of Bhooda Ganas and two rishis paying obeisance to a beautiful women.The master pieces are however a sculpture of a Hiranyavadha and Shiva in Urdhva Thandava. The sculptures depicting a ferocious Narasimha (half man-half lion) tearing up Hiranya in his vice grip and Shiva with his right leg up in Thandava motion get all the details and the expressions right.

Vasantha Mandapam is followed by the inner sanctum. This is still a fully functional temple and the annual festival had just ended the previous day. The inner sanctum looked like a storm had just hit with all the remnants of the previous day’s festivities strewn about and I had to control my OCD which was nagging me to pick up a broom and give it a thorough cleaning.

The Kudumiyan temple was a later addition and the original cave temple is called Melakkoil and is of 7th century origin. This temple is at the back of the Kudumiyan temple and a man sitting and chatting with his friends in the Vasantha Mandapam, escorted us there. Before we get to the cave temple we passed the 1000 pillared Mandapam at the entrance which however houses only 645 pillars. This Mandapam also houses the temple for Parvathi and has a functioning hall which is still used by the villagers for functions.

Past this is the original cave temple. To the left of the cave temple sits Idampuri Vinayaka and to his right, musical notes are inscribed in stone. The inscriptions are arranged in seven sections. As per the staff, these are the first record to mention the solfa notes. The cave temple is virtually dark and one can see the huge Shivalinga flanked by 2 beautiful, Dwarapalakas. The staff told us that these Dwarapalakas are actually referred as Chinna and Periya Marudhu. One can only assume that the later day Pandiya’s association with the temple may have resulted in the Dwarapalakas being named as Marudus. These are very stylish Dwarapalakas unlike any we had seen before with one hand on hip.

Above the cave temple is a depiction of Shiva and Parvati on a Rishaba Vaghana flanked by 63 Nayanmars carved on the side of the hill. We thanked our guide and set out for our next stop Muvar Kovil and Muchukuntram.

Muvar Koil

We found the Muvar Kovil pretty easily. It is in the village of Kodumbalur which is about 35 Kms from Pudukkottai. This site was buried and was excavated by ASI in 1976. This is an ASI site (Archealogical Survey of India) and there was an onsite staff who explained the history of the place briefly and we bought the tickets from him which at Rs. 10 was so cheap that it may not even cover the cost of the beautiful paper it was printed on. Throughout the trip we found that all sites maintained by ASI had very courteous and well informed staff. There was no one at the site except us and even in the sweltering heat, the lonely site and the surrounding fields transported us back in time.

Muvar temple was built by Bhuti Vikrama Kesari who was the Irukuvel Chief of the Kodumbalur clan. He is believed to be the contemporary and an ally of Sundara Chola in the period of 9-10th century AD. Bhuti Vikrama Kesari’s mother Anupama was a Chola Princess and his daughter Vanathi was the wife of Rajaraja Chola. Muvar Kovil is called as such for 3 identical shrines built in a row in the temple complex. The shrine in the middle is dedicated to the king and 2 on either side for his wives Katralipirattiyar and Varaguna. Today, only 2 of the original shrines have survived along with the base remnants of the 3rd shrine. In front of these shrines we can see evidence of 16 base structures which were built for the Parivara Devatas (subsidiary deities). The shrines are bare now and do not house any of the original sculptures. There is a row of small carvings of multiple Bhoota Ganas on the 3rd shrine which form a Bhoota Regai. These Bhoota Ganas are simply adorable. The center shrine Gopuram has a Shiva and Parvati sculpture and Shiva is looking down at Parvati adoringly. We found a life sized and much more beautiful version of this same posture at Gangaikonda Cholapuram later in our trip. The sculptures here are pretty stark and simple without much detail but with clean lines.

The ASI staff informed us that the sculptures at this site used to be displayed here but for reasons of safety have been removed from this site and are at display at the museum at Tiruchinear the Main Guard Gate. Research indicates that some of these sculptures include that of Jyestha, Sukanya with her bovine headed-son, Kali with loose locks and Subramanya on a peacock.

Muchukundram

We relaxed a little under the shade and watched some merry birds before we set out to Muchukundram also called as MudhalKundram which was little further down the road. This is again an ASI site built by Parandhaka Chola in 9th Century and now being used by goat grazers. This site has a single temple with a Nandi in front and a shrine for Shiva. The back of the temple has another smaller shrine with a 6 faced Muruga sculpture. The shrine and the sculptures are very similar to the Muvar temple in its classic lines and represent the simplicity of the early Chola sculptures.

Sittannavasal

We retraced our steps and turned around to go to Sittannavasal. We had a enquire a little bit for directions and after being in the West for over a decade, the fact that we can randomly stop the car and people will earnestly help you with the directions is something I immensely enjoy. It’s like suddenly strangers are part of your journey and they have an active interest in getting you to your destination. Never mind that sometimes they give you totally wrong directions and we had to chase our own tails. But they totally mean to give you the right direction and I appreciate that I guess.

We stopped in a small village for lunch, Senthil and our driver ate lunch in a shack. Despite being teased mercilessly as being an NRI wuss by Senthil, I was not going to risk eating or drinking in a random place. This was my 1st big trip and I didn’t want to end up sick and ruining it. We had anyways had an excellent breakfast at SriKrishna at Thanjavur which writer Gopalakrishnan had recommended highly. It was so great that we made it our regular breakfast joint for the next few days.

The sun was beating up by the time we reached Sittannavasal. I have always dreamt of visiting Sittannavasal and was quite kicked to be there. Senthil had some childhood memories of visiting it with his school. We climbed up towards the Arivar Koil which is said to be built in 7-9th Century AD. The façade of the temple is recent. I was stuck by how small and simple it was. The temple has an Ardha Mandapam (hall) and a Garbagraham just behind it (sanctum sanctorum). The Garbagraham is a small inner chamber which houses sculpted images of 3 Thirthankaras. The ceiling has a carved Dharma Chakra.

Southern wall of the Ardhamandapa has a sculpture of Parasvathanatha. Ardhamandapa has the central fresco painting on the ceiling which depicts the important Jain religious scene called Samava-Sarana. The paintings are all highly damaged and we could see glimpses of bulls, elephants, anna pakshi and gods. The columns to the left has Apsaras (dancing women) with lotus and another column has a mural of a couple with a beautiful umbrella. The colors on the paintings are pretty much gone and most of them have a greying yellow tinge. The blues and greens were peeping out from some paintings. Photography is now prohibited in the Arivar Koil.

We started walking towards the Eladipattam which has been a Jain shelter since 1st century BC. It is called so because of the seven holes that serves as steps to ascend the shelter. Reasonably strenuous climb up the rock hillock lead us to the shelter were 17 polished beds are carved on the floor under a low hanging roof. One side of the bed is raised a little bit and was purportedly used as stone beds by the Jain monks. The Brahmi inscriptions on these rock beds date back to 3rd Century BCE. I have read a lot about these Jain stone beds and had visualized rock beds carved out of large stones and was a little disappointed at first to see these shallow beds. The stone beds have also been subjected to liberal doses of vandalism with some geniuses wanting to encrypt their life’s achievements on it. We rested on the shades of the shelter to look out at the surrounding fields. Even today the loneliness of the place so far removed from the rest of the world is stark. To realize that more than 2000 years back people seeking wisdom and knowledge decided to literally carve a niche for themselves here and to traverse the same path today conjures up indescribable feelings. It almost felt like a violation to try and peer through that isolation.

We started climbing down in the most unbearable heat and saw a couple who had climbed the hill to sit under a slightly hidden lone tree, cuddling and chatting. Couldn’t help but wonder what kind of society drives it’s young to literally climb mountains so that they can eek out a private space for themselves under the smoldering heat.

Our next stop was Nartha Malai. Our driver informed us that it was the annual car festival day and going there might not be very fruitful. So we decided to make a trip to Thirumayam Fort which is about 20Kms from Pudukottai. This fort is also called Oomaiyan Fort (he was the brother of Kattabomman) and was built in 1678 by Ragunatha Sethupathy. Top of the fort has a gun barrel and the fort itself is surrounded by moats. It was Mid April and a few kids were visiting the fort in the middle of the day without a care for the impending exams which was quite refreshing a scene. We decided to get back to the room and figured that if we rested a bit then we can go to the Brahadeeshwarar Temple and see it in the night and then again go again the next day in the morning.

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோ செந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை. யாருக்காவது என்ன பிரச்சினை என்று தெரிந்தால் சொல்லுங்கள்.

அருணாவின் வார்த்தைகளில்:

ஊட்டி முகாமிற்காக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. மற்றும் தி.ஜா.வின் படைப்புகளை படிக்கும் முயற்சியில், ஜெ.மோவின் பரிந்துரை சிறுகதைகளை முதலில் படிக்கலாம் என்று எடுத்தேன். முன்னரே அனுப்பிய இந்த சுட்டியில் இன்று மேலும் ஒரு 15 சிறுகதைக்கு மேலேயே இணையத்தில் கிடைத்தது. அழியாச்சுடர் ராம் விட்டு போனவைகளை சீக்கிரமே ஏற்றுவார் என நம்புவோம். நான் பெரும்பாலும் அழியாச்சுடர், openreadingroom மற்றும் சுல்தானின் வலைத்தளங்களில் (நாஞ்சில்நாடன், வண்ணதாசன்) இருந்தே எடுத்தேன். உங்களுக்கு வேறேதேனும் தெரியுமானால் சொல்லுங்கள். தேடிப் பார்க்கலாம்.

அ. மாதவையா – கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]
சுப்ரமணிய பாரதிரயில்வே ஸ்தானம்
புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு]
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
கயிற்றரவு
செல்லம்மாள்
சிற்பியின் நரகம்
கபாடபுரம்
ஒரு நாள் கழிந்தது
அன்றிரவு
சாமியாரும் குழந்தையும் சீடையும்
காலனும் கிழவியும்
சாப விமோசனம்
வேதாளம் சொன்ன கதை
பால்வண்ணம் பிள்ளை
மௌனி [மௌனியின் கதைகள்]
அழியாச்சுடர்
பிரபஞ்ச கானம்
மாறுதல்
கு.ப. ராஜகோபாலன் [கு.ப. ராஜகோபாலன் கதைகள்]

சிறிது வெளிச்சம்
விடியுமா
ஆற்றாமை
பண்ணைச் செங்கான்
ந. பிச்சமூர்த்தி [ந. பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]
காவல்
அடகு
விதை நெல்
ஒரு நாள்
தாய்
ஞானப்பால்
எம்.எஸ். கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]
மீன் சாமியார்
பொன் மணல்
சி.சு. செல்லப்பா
சரசாவின் பொம்மை
வெள்ளை
க.நா. சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா] – தெய்வ ஜனனம்
லா.ச. ராமாமிருதம் [லா.ச.ரா. கதைகள். வானதி]
பாற்கடல்
பச்சைக் கனவு
ஜனனி
புற்று
ராஜகுமாரி
அபூர்வ ராகம்
தெளிவத்தை ஜோசப் (ஈழ எழுத்தாளர்) – மீன்கள்
வ.அ. ராசரத்தினம் (ஈழ எழுத்தாளர்) – தோணி
எஸ். பொன்னுத்துரை (ஈழ எழுத்தாளர்) [ஆண்மை – மித்ர வெளியீடு]
அணி
ஆண்மை
கு. அழகிரிசாமி [கு. அழகிரிசாமி கதைகள் – சாகித்ய அகாதமி வெளியீடு]
அன்பளிப்பு
ராஜா வந்திருக்கிறார்
அழகம்மாள்
இருவர் கண்ட ஒரே கனவு
பெரிய மனுஷி
பாலம்மாள் கதை
சிரிக்கவில்லை
தரிசனம்
தி. ஜானகிராமன் [தி. ஜானகிராமன் படைப்புகள், ஐந்திணை]
தீர்மானம்
சிலிர்ப்பு
பாயசம்
பரதேசி வந்தான்
கடன் தீர்ந்தது
கோதாவரிக் குண்டு
தாத்தாவும் பேரனும்
மாப்பிள்ளைத் தோழன்
கி. ராஜநாராயணன் [கி. ராஜநாராயணன் கதைகள், அகரம்]
கன்னிமை
பேதை
கோமதி
கறிவேப்பிலைகள்
நாற்காலி
புவனம்
அரும்பு
நிலைநிறுத்தல்
மு. தளையசிங்கம் (ஈழ எழுத்தாளர்)
தொழுகை
ரத்தம்
கோட்டை
சுந்தர ராமசாமி [காகங்கள், சுரா கதைகள் – காலச்சுவடு]
ஜன்னல்
வாழ்வும் வசந்தமும்
பிரசாதம்
பல்லக்குத் தூக்கிகள்
ரத்னாபாயின் ஆங்கிலம்
கோயில் காளையும் உழவு மாடும்
காகங்கள்
கொந்தளிப்பு
அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள், கவிதா ]
விமோசனம்
காத்திருத்தல்
காட்சி
பறவை வேட்டை
குழந்தைகள்
காலமும் ஐந்து குழந்தைகளும்
புலிக்கலைஞன்
காந்தி
பிரயாணம்
பார்வை
மாறுதல்
குகை ஓவியங்கள்
பிரமிள் (ஈழ எழுத்தாளர்) [பிரமிள் படைப்புகள், அடையாளம் வெளியீடு]
காடன் கண்டது
நீலம்
சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா…, க்ரியா] – யானையின் சாவு
வல்லிக்கண்ணன் – சிவப்புக்கல் மூக்குத்தி
எம்.வி. வெங்கட்ராம்பைத்தியக்காரப் பிள்ளை
ந. முத்துசாமி
நீர்மை
செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
படுகளம்
பிற்பகல்
அ. முத்துலிங்கம் (ஈழ எழுத்தாளர்) [அ. முத்துலிங்கம் கதைகள், தமிழினி]
கறுப்பு அணில்
ரி
கொழுத்தாடு பிடிப்பேன்
ஒட்டகம்
ராகு காலம்
பூமாதேவி
சா. கந்தசாமி [சா. கந்தசாமி கதைகள், கவிதா]
தக்கையின் மீது நான்கு கண்கள்
ஹிரண்யவதம்
சாந்தகுமாரி
ஆதவன்
ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
முதலில் இரவு வரும்
சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்
லேடி
ஜி. நாகராஜன் [ஜி. நாகராஜன் படைப்புகள், காலச்சுவடு]
டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
யாரோ முட்டாள் சொன்ன கதை
கிருஷ்ணன் நம்பி [கிருஷ்ணன் நம்பி கதைகள்]
மருமகள் வாக்கு
தங்க ஒரு
சத்திரத்து வாசலில்
ஆர். சூடாமணி – டாக்டரம்மா அறை
இந்திரா பார்த்தசாரதி
குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
ஒரு கப் காப்பி
ஆ. மாதவன் [ஆ. மாதவன் கதைகள், தமிழினி]
நாயனம்
பூனை
பதினாலு முறி
புறா முட்டை
தண்ணீர்
அன்னக்கிளி
சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகள், உயிர்மை]
நகரம்
குதிரை
மாஞ்சு
ஓர் உத்தம தினம்
நிபந்தனை
விலை
எல்டொரோடா
ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள், கவிதா]
யாருக்காக அழுதான்?
குருபீடம்
எங்கோ யாரோ யாருக்காகவோ
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
முன்நிலவும் பின்பனியும்
அக்கினிப் பிரவேசம்
இறந்த காலங்கள்
சு. சமுத்திரம்
திரிசங்கு நரகம்
மானுடத்தின் நாணயங்கள்
பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்
தோப்பில் முகம்மது மீரான்
வட்டக் கண்ணாடி
சுருட்டுப்பா
அனந்தசயனம் காலனி
மா. அரங்கநாதன்
சித்தி
மெய்கண்டார் நிலையம்
வண்ணதாசன் [வண்ணதாசன் கதைகள்]
தனுமை
நிலை
சமவெளி
தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
போய்க் கொண்டிருப்பவள்
வடிகால்
வண்ணநிலவன் [வண்ணநிலவன் கதைகள்]
எஸ்தர்
பலாப்பழம்
துன்பக் கேணி
மிருகம்
நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன் கதைகள், தமிழினி]
பாம்பு
வனம்
மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
பாலம்
சாலப் பரிந்து
அ. யேசுராஜா (ஈழ எழுத்தாளர்) [தொலைவும் இருப்பும், அலை வெளியீடு] – ஓர் இதயம் வெறுமை கொள்கிறது
பூமணி [பூமணி கதைகள், ராஜராஜன் பதிப்பகம்]
நொறுங்கல்
தகனம்
கரு
பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள், கவிதா]
மனசு
கருணையினால்தான்
அப்பாவின் வேட்டி
ராஜேந்திர சோழன் [ராஜேந்திர சோழன் கதைகள், தமிழினி]
பாசிகள்
புற்றில் உறையும் பாம்புகள்
வெளிப்பாடுகள்
திலீப்குமார் [திலீப்குமார் கதைகள், க்ரியா]
தீர்வு
மூங்கில் குருத்து
கடிதம்
அக்ரஹாரத்தில் பூனை
சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள், காலச்சுவடு]
விரித்த கூந்தல்
பிம்பங்கள்
விமலாதித்த மாமல்லன்சிறுமி கொண்டு வந்த மலர்
அம்பை [வீட்டின் மூலையில் ஓர் சமையலறை, க்ரியா]
அம்மா ஒரு கொலை செய்தாள்
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
கறுப்புக் குதிரைச் சதுக்கம்
கந்தர்வன் [கந்தர்வன் கதைகள், வம்சி புக்ஸ்]
சாசனம்
காளிப்புள்ளே
கதை தேசம்
பத்தினி
உயிர்
மங்களநாதர்
கோபிகிருஷ்ணன்
மொழி அதிர்ச்சி
காணி நிலம் வேண்டும்
ச. தமிழ்ச்செல்வன் [ச. தமிழ்ச்செல்வன் கதைகள், கலைஞன்]
வெயிலொடு போய்
வாளின் தனிமை
ரஞ்சகுமார் (ஈழ எழுத்தாளர்) [மோகவாசல் – யதார்த்தா, யாழ்ப்பாணம்]
கவரக்கொயாக்கள்
கோளறு பதிகம்
கோசலை
சட்டநாதன் (ஈழ எழுத்தாளர்) [சட்டநாதன் கதைகள் – சவுத் ஏசியன் புக்ஸ்]
மாற்றம்
நகர்வு
திசேரா (ஈழ எழுத்தாளர்) – நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்
உமா வரதராஜன் (ஈழ எழுத்தாளர்) – அரசனின் வருகை
விக்ரமாதித்யன் [திரிபு, வஉசி நூலகம்] – திரிபு
எக்பர்ட் சச்சிதானந்தம்
நுகம்
பிலிப்பு
பாவண்ணன்
பேசுதல்
முள்
சுப்ரபாரதிமணியன்
ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
உறைவிடங்கள்
கோணங்கி [மதினிமார்கள் கதை – அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]
மதினிமார்கள் கதை
கோப்பம்மாள்
கம்மங்கதிர்
கருப்பன் போன பாதை
கறுத்த பசு
தாத்தாவின் பேனா
மலையின் நிழல்
கறுப்பு ரயில்
ஜெயமோகன் [ஜெயமோகன் கதைகள், உயிர்மை]
திசைகளின் நடுவே
போதி
படுகை
மாடன் மோட்சம்
கடைசி முகம்
முடிவின்மைக்கு அப்பால்
எஸ். ராமகிருஷ்ணன் [எஸ். ராமகிருஷ்ணன் கதைகள், கிழக்கு]
தாவரங்களின் உரையாடல்
வேனல் தெரு
பறவைகளின் சாலை
எம். யுவன் [ஒளிவிலகல் – காலச்சுவடு, ஏற்கனவே – உயிர்மை பதிப்பகம்]
தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
ஒளிவிலகல்
ஊர்சுற்றிக் கலைஞன்
அவரவர் கதை
நார்ட்டன் துரையின் மாற்றம்
கடல் கொண்ட நிலம்
பிரேம் ரமேஷ்
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்
மூன்று பெர்நார்கள்
பொ. கருணாகரமூர்த்தி (ஈழ எழுத்தாளர்) [கிழக்கு நோக்கிய சில மேகங்கள் – ஸ்நேகா, பொ. கருணாகரமூர்த்தி கதைகள் – உயிர்மை]
கிழக்கு நோக்கிய சில மேகங்கள்
கலைஞன்
பவா செல்லத்துரை [சத்ரு – வம்சி புக்ஸ்]
ஏழுமலை ஜமா
ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்
சு. வேணுகோபால் [கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் – தமிழினி]
மறைந்த சுவடுகள்
மீதமிருக்கும் கோதும் காற்று
களவு போகும் புரவிகள்
தங்கமணல்
உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி – தமிழினி, தொலைகடல் – தமிழினி]
மரணத்தடம்
மரப்பாச்சி
யூமா வாசுகி [தமிழினி]
வேட்டை
உயிர்த்திருத்தல்
ஜனனம்
வேல. ராமமூர்த்தி [இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் – அகரம்]
அன்னமயில்
இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும்
பெருமாள் முருகன்
நீர் விளையாட்டு
திருச்செங்கோடு
எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [பிறிதொரு நதிக்கரை, வைகறை]
ஒற்றைச்சிறகு
வலியின் நிறம்
கண்மணி குணசேகரன் [ஆதண்டார் கோயில் குதிரை, தமிழினி பதிப்பகம்]
வண்ணம்
ஆதண்டார் கோயில் குதிரை
அழகிய பெரியவன் [தீட்டு – தமிழினி]
விலங்கு
வனம்மாள்
லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம் – தமிழினி]
கதைசொல்லியின் கதை
நீதம்

ஜப்பானில் அருணா (ஒசாகா)

முதல் பகுதி இங்கே.

நானும் சாச்சிக்கோவும் ஒசாகா நகரத்திற்கு ரயிலில் சென்றோம். மித வேக ரயில் ஆதலால் 1 மணி நேரப் பயணத்தில் 30 கி. மீட்டர்கள் கடக்கலாம். இதே தூரத்திற்கு புல்லட் ரயிலில் ஆகும் நேரம் 15 நிமிடங்கள். ஞாயிறு முன்மாலையானாதால் நல்ல கூட்டம். ஒசாகா நகரனின் ஷின்சாய்பாஷி சந்து மற்றும் நாம்பா எனப்படும் வணிக மையங்கள் இத்தெருக்கள். சந்தென்று அழைக்கப்பட்டாலும் பல கிளை சந்துக்களால் ஒரு கண்ணியில் இணைக்கப்பட்ட நீண்ட தெருக்கள். ஜப்பானில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது வெறும் பிரமை என்று இத்தெருக்களில் அலையும் போது தோன்றும். எங்கு பார்த்தாலும் இளைஞர்/இளைஞிகள், ஆயிரக்கணக்கான கடைகளில் ஜப்பானின் பொருளாதாரத்தை காப்பாற்ற தங்களால் முடிந்ததை வாங்கி கொண்டிருந்தார்கள். நியான் விளம்பர பலகைக் காடு. சமீபத்திய சுனாமியின் விளைவாக மின்சக்தியை சேமிக்கும் ஊக்கம் ஜப்பானில் அதிகரித்திருப்பதால் விளம்பர பலகைகள் முன்பை விட நேரம் பிந்தியே எரியவிடப்படுகிறது. தெருக்களின் மையத்தில் தோதோன்போரி என்றழைக்கப்படும் ஒரு செயற்கை கால்வாயும், கால்வாய் வழியே ஒசாகாவை சுற்றி பார்க்க Water Taxi என அழைக்கப்படும் படகுகளும் உள்ளது. ஒசாகா உணவிற்கும், நடன பான விடுதிகளுக்கும் பெயர் போனவை. அசையும் நண்டு, ஆக்டோபஸ், மற்றும் மீன்களின் பிரம்மாண்ட பிளாஸ்டிக் உருவங்கள் உணவு விடுதிகளின் மேலிருந்து நம்மை கை அசைத்து சாப்பிட அழைக்கின்றது. எல்லா பெரு நகரையும் போல இரவாகியும் தூங்காத நகரமும், ஈசலைப் போல் அதன் வயிற்றிலிருந்து வெளியேறும் மனிதக் கூட்டமும்.

நாங்கள் ஷின்சாய்பாஷியில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு சந்தை மஞ்சள் டேப்பால் தடுத்து 7-8 போலிசார் பொதுமக்களை வேறு பாதையில் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்களும் சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தோம். வீட்டில் வந்து டி.வி யை போட்டால் அன்றைய பரபரப்பு செய்தி ஷின்சாய்பாஷியில் நடந்த இரட்டை கொலை. நாங்கள் கடந்து சென்ற 2 மணி நேரங்கள் முன்பு, இரு மாதங்கள் முன் ஜெயிலில் இருந்து விடுதலை ஆன ஒருவன் அத்தெருவிலேயே ஒரு கத்தியை வாங்கி, அவ்வழி சென்ற ஒரு ஆணையும் பெண்ணையும் எல்லோரும் பார்க்க பலமுறை குத்திக் கொன்றிருக்கிறான். வெளி உலகில் வாழ்வது எப்படி என்று தெரியவில்லை அதனால் மீண்டும் சிறை சென்றால் அரசாங்கமே தனக்கு தூக்கு தண்டனை விதிப்பார்கள் என எதிர்பார்த்து இச்செயலை செய்தேன் என்று வாக்குமூலமும் கொடுத்திருக்கிறான். ஏன் இவர்களை தேர்வு செய்தாய் என்ற கேள்விக்கு, காரணம் எல்லாம் ஒன்றும் கிடையாது நான் கொல்ல முடிவு செய்த பொழுது இவர்கள் கடந்து சென்றார்கள் அவ்வளவு தான் என்ற உறைய வைக்கும் பதில். நவீன உலகின் random violence 7000 மைல்கள் தாண்டி தோளுரசிச் செல்லும் வினோதம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பதிவுகள், பயணங்கள்

தொடர்புள்ள சுட்டிகள்: முதல் பகுதி

அருணாவின் ஜப்பான் பயணம் பகுதி 1

பொதுவாக புத்தகங்களைப் பற்றித்தான் இந்தத் தளத்தில். ஆனால் அருணாவின் ஜப்பானிய பயண அனுபவம் ஒரு நல்ல அறிமுகமாக இருப்பதால், பயண இலக்கியம் என்று இங்கே பதித்திருக்கிறேன். அருணா அனுப்பி நிறைய நாளாயிற்று. அது என்னவோ ஃபோட்டோக்களை தரவிறக்க முடியவே இல்லை. அருணாவும் நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டோம், ஒன்றும் நடக்கவில்லை. பிகாசா தளத்திலேயே பார்த்துக் கொள்ளுங்கள். ஓவர் டு அருணா!

ஜென் கவிதை, சூஷி உணவு, அதி வேக புல்லட் ரயில், புத்த மதம் என ஜப்பானை பற்றி பேசினாலே ஒரு பிம்பம் மனதில் தோன்றுவதுண்டு. என் நண்பர் ஒருவர் 3 வருடங்களாக அங்கு வசித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்த பொழுது 3 வார விடுமுறை ஒவ்வொரு முறையும் இந்தியா வந்து போவதிலேயே தீர்ந்து விடும். இந்தியா வந்த பின் இப்பிரச்சனை இல்லை. நண்பர் வேறு வருட கடைசியில் தாய்வான் போய் விடுவதாக பயமுறுத்தியதால் ஜப்பான் போக ஒரு திட்டம். மே மாதம் போக முடிவு செய்து விட்டு ஜெயமோகனின் ஊட்டி முகாம் அந்த நேரத்தில் வந்ததால் பின் ஜூன் முதல் வாரம் என முடிவானது. பெங்களூரில் இருந்து ஹாங்காங் சென்று பின் ஒசாகா. கதே பசிபிக்கில் மொத்தம் 13 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம். கோபேயில் வசிக்கும் நண்பர் கிரனும் அவருடைய மனைவி சாச்சிகோவும் விமான நிலையம் வந்ததிருந்தனர். நண்பரின் அம்மாவும் என்னுடன் வந்திருந்தார்.

கோபேவிற்கும் ஒசாக்காவிற்குமான தூரம் 30 கி.மீ தான் என்றாலும், ஒசாகாவின் விமான நிலையம் ஒரு செயற்கை தீவில் இருப்பதால் சுற்றிக் கொண்டு வருவதற்கு காரில் 45 நிமிடம் பிடித்தது. இந்த தீவு ஹோன்ஷு தீவின் கரையில் உள்ளது. ஹோன்ஷு தீவை சுற்றி பாலம் அமைத்து எக்கச்சக்கமான தொழிற்சாலைகள் அமைத்து இருக்கிறார்கள். அமெசானின் ராட்சச கிடங்கு கூட இதில் உள்ளது.

பத்து வருடத்திற்கும் மேலாக பொருளாதார வீழ்சியில் (stagflation) உள்ளது ஜப்பான். மொத்த உள்னாட்டு உற்பத்தியை விட 230% சதவீதம் அதிகம் உள்ளது ஜப்பானின் மொத்த கடன். இச்சதவீதம் மிக அதிகமான நாடு உலகிலேயே ஜப்பான்தான் எனலாம். ஒரு ஒப்பு நோக்கிற்கு வேண்டுமானால், இந்தியாவில் இச்சதவீதம் 60%. ஜப்பான் நாட்டு பணமான யென்னின் ஆரோக்கியம் வேறு ஏற்றுமதியை பாதிக்கிறது என சொல்லிக் கொண்டு வந்தார் நண்பர். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒரே நிரந்தர வேலை போன்ற கடந்த கால சாத்தியங்கள் தற்போது கனவாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஜப்பான் கடல் சூழ்ந்த தீவானதால் வசிப்பதற்கான இடம் மிக குறைவு. நண்பர் அமெரிக்க கம்பெனியில் ex-pat ஆகியதால் கோபேயின் (Steak என அழைக்கப்படும் ஒரு விதமான மாட்டு கறிக்கு உலகிலேயே மிக புகழ் பெற்ற நகரம்) மத்திய பகுதியில் ஒரு அதி நவீன அடுக்கு மாடி கட்டிடத்தின் 27ஆம் மாடியில் வசிக்கிறார். ஜப்பானின் தீப்பெட்டி வீடுகளில் வளர்ந்த அவர் மனைவி மிக மகிழ்ச்சியுடன் வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டை சுற்றி உள்ள பால்கனியில் உட்கார்ந்தால் டச்சுகாரர்கள் விரும்பி வசித்த மலை தூரத்தில் தெரிந்தது. சாச்சிக்கோ இரவெல்லாம் அமர்ந்து தங்கப் போகும் ஹோட்டல்களுக்கான பதிவுகள் செய்தார். அங்கு பெரும்பாலும் ஜப்பானிய மொழியே அதிகம் பேசப்படுவதால், அவர்தான் இந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது.

ஆட்டோ சின்மயா நகர் வருமா என்று கேட்டாலே புழுவை போல் பார்த்து நம் மீது வசவெறியும் நம் மக்களுக்கு நேர் எதிர் ஜப்பானியர்கள். அனுமதி சீட்டை கொடுத்தால் கூட சொத்தெழுதி வைத்தது போல் கால் மடக்கி வணங்கி சிறிய கண்கள் காதெட்டும் வரை சிரித்து அரிகாத்தோ ஓசைமாஸ் என்கிறார்கள். ஆனால் மிக அதிகமான மன நோயையும் தற்கொலையையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயம் இது. மனிதர்களிடம் இவ்வளவு பண்புடன் பழகிவிட்டு பின் நேர்த்தியாக உடுத்தி ரயிலின் முன்னால் போய் விழும் முரண். முதல் சில நாட்களுக்கு இந்தத் தன்மை என்னை லேசாக பயமுறுத்தியது.

அடுத்த நாள் நாங்கள் ஜப்பானின் முன்னாள் தலைநகரான நாராவிற்கு ஹான்ஷின் என்ற தனியார் ரயில் பிடித்து சென்றோம். போகும் வழி எல்லாம் வித விதமான வண்ணங்களில் தானியங்கி இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். தண்ணீர், குளிர்பானம், சிகரெட், மதுபானம் என எல்லாம் கிடைக்கிறது. அதன் மேல் உள்ள விளம்பர பலகைகளில் பெரும்பாலும் அமெரிக்க நடிகர்கள் எதையாவது வாங்க சொல்லி ஜப்பானியர்களை வற்புறுத்துகிறார்கள். அன்று சனிக்கிழமை ஆதலால் பேஸ்பால் மாட்ச் பார்க்க மக்கள் உற்சாகமாக குடும்பத்துடன் போய் கொண்டிருந்தார்கள். நம்மூரில் கிரிக்கெட் போல் ஜப்பானியர்களுக்கு பேஸ்பால் பைத்தியம். அவர்கள்தாம் தற்போதைய உலக சாம்பியன்களும். ரயிலில் திரையில் அடுத்த நிறுத்தம் எது என்பதை ஆங்கிலத்திலும் காண்பிக்கிறது.

டாக்ஸி ஒன்று பிடித்து தோடைஜி (Todaiji) என்கிற புத்த மதத்தின் கேகான் பிரிவின் தலைமை ஆலயத்திற்கு சென்றோம். தோடைஜி என்றால் கிழக்கு நோக்கிய பெரிய ஆலயம் என பொருள். இவ்வாலயம் அமைந்திருக்கும் மரக் கட்டிடமும் அதில் உள்ள வெங்கல புத்தரும் உலகிலேயே மிக பெரியது. ஆலய தெற்கு வெளி வாசலில் இரு புறமும் உங்யோ, அக்யோ என்றழைக்கப்படுகிற இரு வாயில்காப்போன் சிலைகள். ஆலய வாசலில் கை கழுவ நீர் தொட்டியும் மரக் கரண்டிகளும் வைத்திருக்கிறார்கள். நிறைய பள்ளிக் குழந்தைகள். வருட இறுதி ஆனதால் கலாச்சார சுற்று பயணத்தில் வந்திருக்கிறார்கள். நான் பார்த்த எல்லா ஆலயங்களிலும் கொத்து கொத்தாக சிதறி கிடந்தார்கள். ஆலய முகப்பில் குண்டத்தில் ஊதுபத்திகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. வலது புறம் பிண்டோலா பாரத்வாஜா என்கின்ற புத்த அர்ஹதரின் 8 அடி உயர மரச்சிலை. இவர் புத்தரால் உலகில் இருக்கும்படி பணிக்கப்பட்ட 4 அர்ஹதரில் ஒருவர் என்றறியப்படுகிறார். ஜப்பானில் இவரை பின்சுரு என்கிறார்கள். இவரின் ஒரு பாகத்தை தொட்டு பின் நம் உடலில் அதே இடத்தை தொட்டால் அவ்வுறுப்பு சம்பந்தமான வியாதிகள் வராது என நம்புகிறார்கள்.

743-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் 2 முறை தீக்கிரையாகி தற்போதுள்ள ஆலயம் 1709ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஒரு World Heritage Site. ஆலயத்தில் உள்ள புத்தர் வைரோசனா என்றும் ஜப்பானியர்களால் டைபுட்சு என்றும் அழைக்கப்படுகிறார். 49 அடி உயரமும் 500 டன் எடையும் கொண்ட கருப்பு புத்தர். அவரை சுற்றி 16 போதி சத்வர்களும் அவரின் இரு புறத்தும் சிறு புத்தர்கள். போதிசத்வர்கள் தாமரை இதழ்களில் அமர்ந்து இருப்பது போல் பொரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனம் சிலையின் காலடியில்.
பிஷமோதேன், கொமுகூதேன் என்ற காவலர்கள் புத்தரின் பின்பக்கத்தில் நின்று ஆலயத்தை காக்கிறார்கள். இவர்களை இடிக்கும், காற்றுக்குமான கடவுளராக கருதுகிறார்கள்.

ஆலயத்தின் முன் இருமருங்கிலும் பச்சை புல்வெளி. நடுவில் ஒரு மரம் கூட கிடையாது. சதுர வடிவிலான ஒரே நிறத்துப் பச்சை திறந்த வெளி. ஆலயத்தின் வெளிவாசலில் ஒரு பெரிய குளம். நீர் நிலையும், திறந்த வெளியும் எல்லா ஆலயங்களிக்கும் உள்ள பொதுத்தன்மை. புத்த, ஷிண்டோ என எல்லா மத ஆலயங்களிலும் அவை உள்ளது.

ஆலயத்தின் வெளியே உள்ள இடங்களில் எல்லாம் சிகா வகையை சார்ந்த மான்கள் உலவுகின்றது. அவை புனிதமாக கருதப்படுவதால் அவை வேட்டை ஆடப்படுவதில்லை. மான்களுக்கு உணவளித்து, துரத்தி விளையாடும், கலர் ஐஸ் வாங்கி சாப்பிடும் குழந்தைகளும், பெரியவர்களுமான ஒரு மனித சிதறல்.

பின்னர் நாங்கள் கோப்கூஜி (Kokukuji) என்ற 7ஆம் நூற்றாண்டு கோவிலுக்கு சென்றோம். இக்கோவிலும் ஒரு World Heritage Site ஆக பாதுகாக்கப்படுகிறது. 669-ஆம் ஆண்டு புஜிவாரா குடும்பத்தின் தோற்றுனரும், அரசியல்வாதியுமான புஜிவாரா நோ கமடாரியின் மனைவி ககாமியால் அவர் கணவர் உடல் நலம் குன்றியிருந்த போது கட்டப்பட்டது. இக் கோவிலின் சிறப்பம்சம் இவ்வளாகத்தில் உள்ள 5 அடுக்கு பகோடா தான். தீக்கிரையான இந்த பகோடா மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. இவ்வளாகத்தின் உள்ளே பகோடாவும், ஒரு தங்க மண்டபமும் அதன் உள்ளே யகூஷி புத்தாவின் மரச்சிலையும், ஒரு எண்கோண முக கோவிலும் (இப்பொழுது புழக்கத்தில் இல்லை) தற்பொழுது ஆலயமாக செயலாற்றி வரும் சிறிய எண்கோண கோவிலும் உள்ளது. ஆலய முகப்பில் ஒரு இளம் புத்த பிக்கு ஒரு பிரார்த்தனையை வழி நடத்திக் கொண்டிருந்தார். இக்கோவிலில் உள்ள புத்தரிடம் ஏதேனும் ஒரு வேண்டுகோளை மட்டுமே கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். இரண்டாவது வேண்டுதல் இருந்தால், கோவிலை விட்டு வெளியேறி பின் மீண்டும் செல்ல வேண்டும். சிறிய கோவிலின் உள்ளே தரை மெத்தைகள் வைத்திருக்கிறார்கள். நாம் அமர்ந்து, முன்னே இருக்கும் காங் (gong) என்ற மணியை பிரார்த்தனையின் ஆரம்பத்தை குறிக்க ஒரு முறை ஒலித்து விட்டு, பிரார்தித்து மெழுகுதிரி ஏத்தி விட்டு பின் ஒரு முறை மணியை வழிபாடு முடிந்ததை குறிக்க ஒலித்து விட்டு வெளியேற வேண்டும்.

நாரா ரயில் நிலைய வாசலில் ஒருவர் ஜெபமாலையுடன், எளிய ஆடைகள் அணிந்து கையில் பிச்சைப் பாத்திரத்துடன் நின்றிருந்தார். அவர் பிக்கு ஆவதற்கான பயிற்சியின் ஒரு பகுதியாக இரந்து உண்கிறார் என்றார் நண்பர்.

பல நூற்றாண்டுகள் பழமையான ஆலயம் அதே சூழலில் பேணப்பட்டு காலத்தில் உறைந்தது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. நவீன உலகத்தின் நிழல் கூட படாமல் பாதுகாக்கப்படும் தனிமை. ஆனால் நூறே அடி நடந்து வந்தால் பாதாள ரயிலுக்கான பாதை. இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கண் கூசும் நியான் விளம்பர பலகைகள், விற்கும் உணவை தத்ரூபமாக மெழுகில் செய்து வைத்திருக்கும் உணவகங்கள், உலகின் எல்லா உயர் பிராண்டுகளும் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் இவைகளை கடந்து உள்ளே சென்றால் அதி வேக ரயில்கள். 100 அடி வித்தியாசத்தில் ஒரு அதி நவீன உலகம். ஒரே புனைவில் வரும் இரு வேறு தொடர்பில்லா உலகங்கள் நடுவே பயணிப்பது போன்ற உணர்வு.

பிகாசா தளத்தில் புகைப்படங்கள் பகுதி 1(ஒசாகா), பகுதி 2 (நாரா)

(தொடரும்)


தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பதிவுகள், பயணங்கள்

பெருமாள் முருகனின் “கங்கணம்”

அருணாவின் இன்னொரு புத்தக அறிமுகம். புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 235 ரூபாய்.

பெருமாள் முருகனின் ஏறுவெயில் மற்றும் மாதொருபாகன் படித்திருக்கிறேன். இப்போது கங்கணம். அவர் நாவல்கள் வாழ்க்கையைப் பற்றிய மாபெரும் தரிசனம் எல்லாம் அளிக்க முற்படுவதில்லை. சமுதாய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தனி மனித வாழ்வில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, அதனால் விளையும் குடும்ப/சமுதாய அமைப்பின் சிதிலங்களை, கொங்கு நாட்டு பின்புலத்தில், நுட்பமான நுண்விவரணைகளோடு சொல்கிறார். மாற்றத்தின் நடுவே இருக்கும் ஒரு சமுதாயத்தின் snapshot என சொல்லலாம்.

என் மாமாவின் பையன் 37 வயதாகியும் கல்யாணமாகாமல் இருக்கிறான். தில்லியில் ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் காலேஜில் பி.ஏ ஹானர்ஸ் படித்த, மாடர்னான, விளம்பர நிறுவனம் ஒன்றில் காபிரைட்டராக, குடும்ப சொத்து எதுவும் இல்லாத நல்ல பையன். இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது சொன்னான், கடைசியாக பார்த்த சென்னை பெண் சொந்த வீடு கூட இல்லாமல் கல்யாணம் என்ன தைரியத்தில் பண்ணிக் கொள்ள நினைக்கிறாய் என்று கேட்டதாக. சிறு நகர, கிராமத்து பெண்களுக்கு தனக்கு ஒத்து வராது என சொல்லிக்கொண்டிருந்தவன் இப்போது அதற்கும் தயார். ஆனால் சொந்த வீடில்லாத காபிரைட்டர் என்பதோடு 2 வருடங்களும் அதிகரித்து விட்டது.

கொங்கு நாட்டு கவுண்டர்கள் மத்தியில் சில தலைமுறைகளாக இருக்கும் பெண் சிசுக் கொலை வழக்கம் அச்சமூகத்தில் சம காலத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, 35 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் தத்தளிக்கும், வசதியான நிலவுடமையாளனான மாரியப்ப கவுண்டரின் பார்வையில் சொல்கிறது கங்கணம். பெண் குழந்தையை கவுத்து போட்டு கொல்லும் வழக்கம் கவுண்டர் குடும்பங்களில் பல தலமுறைகளாக இருந்ததை பற்றி பாட்டி, “பின்ன, இல்லாதயா? நம்ம கவண்டமூட்டு வைராவல பாரு. ரண்டு மூணுக்கு மேல எப்பவும் பிள்ளைங்க இருக்காது. பலவரட்ட சாதிலயெல்லாம் பத்துப் பதினஞ்சுன்னு கூட வெச்சிருப்பாங்க. நாம அப்படி வெச்சிருந்தா ஒவ்வொருத்தனுக்கும் காடு ஒரு வெலாகூட வராது பாத்துக்க” என படு காஷுவலாக அத்தரப்பு நியாயத்தை சொல்கிறாள். இன்று இருபது ஆண்களுக்கு மூன்று பெண்களே இச்சமூகத்தில் உள்ளனர் என பெருமாள் முருகன் பதிவு செய்கிறார்.

மாரியப்பன் என்னேரமும் தான் பார்த்து தனக்கு அமையாத பெண்களைப் பற்றி, தனக்கு காலாகாலத்தில் ஆகியிருக்க வேண்டிய கல்யாணம், குடும்பம் பற்றி யோசித்துக் கொண்டே தனது காடுகளில் சுற்றி வருகிறான். தனக்கு கல்யாணம் ஆனால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறான். தானாவதி தாத்தா, பூடுதி, முன்னாள் வாத்தியார் மற்றும் இன்னாள் modern கல்யாணத்தரகர், பண்ணையாள் ராமன் என யார் கல்யாண யோசனைகள் கொண்டு வந்தாலும் விடாமல் பின் தொடர்ந்து ஒன்றும் நடக்காமல் விரக்தியின் விளிம்பில் நிற்கிறான். ஒரு நேர்ச்சை/பரிகாரம் விடாமல் செய்கிறான். வயலில் படுத்து தூங்கி பொறுப்பில்லாமல் அலையும் குப்பனின் 17 வயது மகனிற்கு ஒரு சிரமமும் இல்லாமல் கல்யாணம் நிச்சயிக்கப்படும்போது அவனுக்குள் வெறி ஏறுகிறது. அம்மாயியை வீட்டை விட்டே வெளியேற வைக்கக் கூடிய வார்த்தைகளை அவ்வன்மம் கூறுகிறது.

பாட்டி அச்சமுதாயத்தின் கடந்த தலைமுறையின் பிரதிபலிப்பாக வருகிறாள். எவ்வளவு காசிருந்தாலும் நல்ல புடவைகளையும், காசையும் பொந்தில் ஒளித்து வைத்து விட்டு கந்தல் உடுத்தி காட்டு வேலைக்குப் போகும் கடும் உழைப்பாளி. கடைசி வரை தனியாக குடிசையில் வாழ்ந்து, முதுகொடிய தென்னை ஓலையைக் கூட விடாமல் கீறி வாரியலாக விற்று பணம் சேர்க்கும் உழைப்பும், சிக்கனமும், தைரியமும் உள்ள கிழவி. சின்னத்தாத்தாவின் பேரன் செல்வராசு மாறி வரும் சமூகத்தின் பிரதிநிதி. ரிக்ஷா வண்டி ஓட்டி காட்டில் வேலை பார்க்கும் கடினமில்லாமல் காசு சேர்த்து, அதை நுகர்தலுக்கு செலவழிக்கும் தலைமுறை. கூடவே கீழ் சாதி பெண்ணை தைரியமாக காதலித்து, தன் சமுதாயம் அதை எதிர்க்கும், தன் குடும்பம் தனக்கு சொத்து கொடுக்காமல் நிராகரிப்பார்கள் என்ற நிதர்சனம் உணர்ந்து, தன் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள, இரண்டு தலைமுறை சண்டையை பொருட்படுத்தாமல் மாரியப்பனிடம் நன்றி பாராட்டி தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும், அவனுக்கு பதிலுக்கு உதவும் சாமர்த்தியசாலி.

சாதி பற்றிய பேச்சுகள் நாவல் நெடுகிலும். கிராம வாழ்வில் இன்றும் சாதி அழிவில்லாமல் இருப்பதை காட்டிக் கொண்டு. பொருளாத ரீதியாக மாறி வரும் உலகில், ரிக்ஷா வண்டி ஓட்டி, மற்ற விதங்களில் சம்பாதிப்பதற்கான சாத்தியங்களால், விவசாயக் கூலி வேலையில் நாட்டமில்லாத சக்கிலியர்கள், இம்மாற்றங்கள் தம் வாழ்க்கையை மிகச் சீக்கிரமே பாதிக்கும் என உணர்ந்த நிலவுடமையாளர்கள் என்ற மற்றொரு சமுதாய மாற்றத்தையும் இன்னொரு இழையில் பதிவு செய்கிறார். ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் ஒரு கறுப்பர் கதாபாத்திரம் திரும்பத் திரும்ப வரும். வெள்ளைக் கதாபாத்திரங்களின் வாழ்வியல் சிக்கல்களை அகற்ற, அவர்களுக்கு தகுந்த ஆலோசனயை சமயோசிதமாக வழங்கும், அவர்களை விட சமுதாய பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் ஆனால் ஆன்மீகமாக தேறிய பாத்திரங்கள். இக்கதையில் வரும் சக்கிலியர்களான வத்தனும், ராமனும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

குடும்ப அமைப்பின் வன்முறையை பற்றிய சித்திரங்களை நன்றாக அளிக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உறவும் காரியம், காசு சார்ந்ததாகவே இருக்கிறது. பாசம், பகிர்தல் எல்லாம் ஒன்றும் கிடையாது. சொற்களில், செயல்களில் கொப்பளித்து வரும் வன்மம். தாத்தாவின் தலைமுறையில் சொத்துக்காக உக்கிரமாக போடப்படும் பங்காளி சண்டைகள். தன் கல்யாணம் நடப்பதற்கு இதுவே பெரும்பாலும் கடைசி சந்தர்ப்பம் என மாரியப்பன் உணர்ந்து தன் தாய் தந்தையிடம் அதைப் பற்றி பேசப் போகும் போது கூட உச்சபட்ச வன்முறையை கையாண்டே அச்சம்மதம் வாங்கப்படுகிறது. உரையாடலே சாத்தியமில்லாத, நிதானமாக தம்மிடையே பேசுவதெப்படி என்றே அறியாத ஒரு சமுதாயக் குடும்ப அமைப்பு. காத்திருந்து அமைந்த கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கிப் போட்ட பிறகும், அவள் விலை உயர்ந்த கூறைப்புடவை எடுக்கும் போது, கல்யாணம் ஆகி ஒரு மாதம் அனுபவித்து விட்டு உன்னைக் கந்தலுடன் பனங்காட்டில் நிற்க வைக்கிறேன் பார் என கறுவும் வன்மம். மாரிமுத்துவிற்கும் அவன் தாய்க்குமான உறவு நாம் வழக்கமாக பார்த்துப் படித்துப் பழகிய லட்சிய உறவெல்லாம் கிடையாது. அவன் கல்யாண ஆசையை அவள் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூர்க்கமாக சீண்டுகிறாள். சமுதாய அமைப்பில் இருந்த, கல்யாணம் என்ற அமைப்பை மீறிய பாலியல் உறவுகளை, பாட்டிக்கு வேலைகாரனுடன் அவள் கணவர் அறிந்தே இருந்திருக்கக் கூடிய உறவை போகிற போக்கில் அரைப் பக்கத்தில் சொல்லிவிட்டு போகிறார்.

மாரியப்பன் தனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என என்னென்னவோ செய்கிறான். கல்யாணம் நிற்பதற்க்கு காரணமாக இருந்தது என அவன் நினைக்கும் பழைய மாடல் பைக்கை, கள்குடியலை, கோவணம் கட்டி தென்னை ஏறும் வழக்கத்தை அனைத்தையும் விடுகிறான். வீட்டில் டி.வி வாங்கி வைக்கிறான். தன்னை முற்றிலும் ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொள்கிறான். படித்து முடிக்கையில் திருமணம் என்ற அமைப்பே எவ்வளவு அபத்தம் என தோன்ற வைக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: பெருமாள் முருகன் பக்கம், அருணா பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: பெருமாள் முருகனின் தளம்

தோப்பில் முகமது மீரானின் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”

அருணாவின் இன்னொரு புத்தக அறிமுகம். காலச்சுவடு வெளியீடு. விலை நூறு ரூபாய். ஜே போட்டு ரொம்ப நாளாச்சு, தோப்பிலுக்காக ஒரு தளம் நடத்தும் சுல்தானுக்கு ஒரு ஜே!

ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். அவரது வார்த்தைகளில்:

மீரான் கி.ரா வகையிலான ஆர்ப்பாட்டமான கிராமியக் கதை சொல்லி. அவருடைய கூரிய பார்வையில் வரும் கிராமத்தின் அகமானது புறச்சித்தரிப்புகளுக்கு அகப்படாதது. அறியாமையும், அடிமைத்தனமும், சுரண்டலும் ஒரு பக்கம் சுயமரியாதைக்கான போராட்டம், களங்கமற்ற ஆர்வம், பிரியம் நிரம்பிய உறவுகள் என்று இன்னொரு பக்கம். இவற்றுக்கு இடையேயான ஓயாத போராட்டம்— மீரானின் கிராமம் இதுதான். அவருடைய எல்லா நாவல்களும் கடலோர கிராமத்தின் கதைகளே.

எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் வைக்கிறார்.

புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 150 ரூபாய்.

ஓவர் டு அருணா!

Thoppil Mohammad Meeranநாம் அறியாத உலகை, மொழியை, வாழ்க்கை முறையை ஒரு கதையில் படிக்கும் போது எனக்கு ஏற்படும் அலாதி மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. உலகம் திடீரென சிறிதே பெரிதாகியது போன்ற உணர்வு. ஆலிஸ் கண்ட அற்புத உலகை நானும் கண்டதைப் போன்ற பிரமிப்பு. ஆனால் அக்கதையின் உள்ளே செல்லும் போது நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சியமானவர்களாக இருக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி, அதன் பொதுமைதன்மை ஏற்படுத்தும் பச்சாதாபம் இவற்றை உருவாக்கும் படைப்புக்களை நான் மிக விரும்புகிறேன்.

தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை அத்தகைய ஒரு படைப்பு. நான் அறிந்திராத நாஞ்சில் நாட்டு கடலோர கிராமத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் நிகழும் கதை. நாவலில் பயன்படுத்தப்படும் இஸ்லாமிய கடலோர கிராமத்தைச் சேர்ந்த வழக்கு மொழியை புரிந்து கொள்வது சிறிது கடினமாக இருந்தாலும் படிக்கப் படிக்க நமக்கே இயல்பாக வழக்குச் சொற்கள் பிடி கிடைக்கிறது.

மதம் மற்றும் நில உடமையாளர்களின் இறுகிய பிடியில் இருக்கும் ஒரு கிராமத்தின் கதை. மதத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள், பாலியல் அத்துமீறல்கள், சுரண்டல்கள், நிலவுடமைக்காரர்களின் அதிகாரம், தொழுகையில் கூட நீளும் அந்த அதிகாரத்தின் கைகள், அந்த முதலாளியையே ஒரு நேரம் வரும் போது தன் வளர்ச்சிக்காக சுரண்டும் லெப்பை என தன் சுயநலத்தை மட்டுமே நினைத்து வாழும் கதைமாந்தர்கள். வறட்டு குடும்ப கெளவரத்தை காப்பாற்ற, ஊரையே சுரண்டி சேர்த்த சொத்தை அழித்து பின் பைத்தியமாகும் வடக்கு வீட்டு முதலாளி மேல் கடைசியில் பச்சாதாபம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சிதிலமடையும் இக்குடும்பத்தில் தலைமுறைகளாக எந்தவிதமான தேர்வுரிமையும் இல்லாத பெண்கள், பின்கட்டில் தன் காதல் சொல்லி பின் தன் வாழ்வை இழக்கிறார்கள்.

சுறாப்பீலி விற்கும் மஹ்முதும், பள்ளி ஆசிரியராக வரும் மெஹ்பூப்கானும் மட்டும் சுரண்டும், சுரண்டப்படும் இச்சமூகம் மாறும், மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் அச்சமூகத்தின் மன ஓட்டத்தை மீறி செயல்படுகிறார்கள். இயல்பான, உண்மையான மனித சித்தரிப்புக்கள். மர்கஸ்போஸ்டிற்க்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில் மஹ்மது தனது உப்பா (தாத்தை)வின் ஆளுமையின் நீட்சி என்பதை தோப்பில் மீரான் பதிவு செய்கிறார். அந்த பேட்டியை படித்த பின் நாவல் இன்னும் மனதுக்கு பிரியமாக ஆகிறது.

தோப்பில் பற்றிய ஒரு கட்டுரையில் ஜெயமோகன் சொல்கிறார் – 20 வருடம் முன்பு சுந்தர ராமசாமி தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ யைப் படித்துவிட்டு சொன்னார், ‘இவரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய் படிஞ்சுடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்கு மேலே இவருக்கு அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம்”. துல்லியமான நிர்ணயம்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அருணா பதிவுகள், தோப்பில் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
கதை உருவான கதை – தோப்பிலின் பேட்டி
தோப்பிலுக்கு ஒரு தளம்

“ஒரு பார்வையில் சென்னை நகரம்” – அசோகமித்திரன்

தோழி அருணாவின் மதிப்புரை. இந்த நொடி அவருடைய சடசடவென்ற பேச்சை மிஸ் செய்கிறேன். புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது, விலை அறுபது ரூபாய்.

அசோகமித்ரன் 1998-ஆம் ஆண்டு ஆறாம் திணை என்ற இணைய தளத்திற்காக சென்னையை பற்றிய கட்டுரைகள் எழுதும் பொழுது அவர் சென்னையில் ஏற்கனவே 50 வருடங்கள் வசித்திருக்கிறார். பின்னர் இக்கட்டுரைகள் ஒரு பார்வையில் சென்னை நகரம் என்று தொகுக்கப்பட்டு மனோகர் தேவதாஸின் கோட்டோவியங்களுடன் 2002-இல் புத்தகமாகவெளிவந்திருக்கிறது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகள், பூங்காக்கள், உணவகங்களைப் பற்றிய சுவையான பல தகவல்களை அவருக்கே உரிய தனி பாணி மற்றும் அங்கதத்துடன் சொல்கிறார். ஒரு தகவல் சார்ந்த கட்டுரையை கூட படு சுவாரசியமாக எழுதுவது எப்படி என்று நாமெல்லாம் கற்று கொள்ள முயற்சி செய்யலாம். ஒரு 100 வருட பயிற்சிக்கு பிறகு கொஞ்சம் பக்கத்தில் வரலாம்.

குரோம்பேட்டையில் ஷூக்களின் அடிப்பாகத்திற்கு உபயோகப்படுத்தப்படும் ஸோல்களுக்கான குரோம் தோல்கள் தயாரிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது; பார்க் டவுன் மெமோரியல் ஹால் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடந்த 1857-ஆம் ஆண்டு கட்டப்பட்டது போன்ற அறிய தகவல்கள்; சைதாப்பேட்டையில் நிலவிய யானைக்கால் நோய், சென்னையில் அன்றைய பஸ்/ரயில் வசதி இல்லாமை ஆகியவற்றை தன் சுய குடும்ப சங்கடங்களுக்கு நடுவே வவரிக்கிறார்.

”தேனாம்பேட்டை நடனப் பெண்கள் சாத்தனூரிலும் மாமல்லபுரத்திலும் ஆடாத நாட்களில் ஸ்டூடியோக்களில் நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய சிரிப்புக்கும் உற்சாகத்திற்கும் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது. ஒவ்வொருவருக்கும் கலைமாமணி பரிசு கொடுத்தால் தகும்” போன்ற அன்றாட வாழ்க்கையின் அபத்தங்கள்; குரோம்பேட்டையில் என் நெருங்கிய உறவினர்கள் வீடு கட்டிக்கொண்டு போனபோது நான் மிகவும் அச்சப்பட்டேன். காரணம் அவர்கள் வீட்டில் எல்லோருக்குமே நீரிழிவு வியாதி. இவர்கள் எப்படி வைத்தியரிடம் போவார்கள்? உடல் நிலை நெருக்கடிகள் அவசியம் நேர்ந்திருக்கும். ஆனால் வெளியுலகத்தோடு இருந்த ஒரே தொடர்பான இரயில் நிலையத்துக்குத் தினம் நான்குமுறை நான்கு மைல் ஒற்றையடி பாதையில் நடந்து அல்லது சைக்கிளில் சென்று அவர்களுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது. கவலைப்பட்ட நான் மாதத்தில் பாதி நாட்கள் படுக்கையில் கிடக்கிறேன் போன்ற அங்கதங்கள் விரவிக்கிடக்கும் கட்டுரைகள்.

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் வசித்த லா.ச.ரா.வைப் பற்றி தேவி, அம்பாள், பாம்பு, புலி என இவர் எழுத்து பயமுறுத்தினாலும் அதே நேரத்தில் மனதைக் கிறங்க வைப்பவை. ஒரு பாராட்டு கூட்டத்தில் ஒரு வீட்டில் அவர் ருசியறிந்து காய்ந்த நார்த்தாங்காய் படைத்ததைக் கூறி அவர் கண் கலங்கினார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் கண் கலங்கியது. ஆழ்வார்பேட்டையில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி இருவரும் எதிரும் புதிருமான வீடுகளில் வசிப்பவர்கள். இருவர் மகன்களும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள். இரு தந்தையரும் வீட்டில் இல்லை என்றால் அமெரிக்காதான் போயிருப்பார்கள் போன்ற சக எழுத்தாளர்கள் பற்றிய மெலிதான கிண்டல்கள்.

நான் சென்னையில் 15 வருடங்கள் வசித்திருக்கிறேன், அந்நகரின் சுவாரசிய சரித்திரத்தின் சில பகுதிகளை கூட அறியாமல். இக்கட்டுரைகள் எழுதிய கடந்த 14 ஆண்டுகளில், அதன் முந்தைய 50 ஆண்டுகளையும் விட நகரம் அசுர வேகத்தில் மாறி இருக்கிறது. அசோகமித்திரன் இப்போது அம்மாற்றத்தை பற்றி எழுதினால் எப்படி இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. மிக சுவாரசியமான புத்தகம். படியுங்கள். சென்னையின் வெயிலும், தற்போதைய குப்பையும், போக்குவரத்து நெரிசலும் எரிச்சல் படுத்தும் போது, அதன் கடந்த கால வரலாறு அந்த எரிச்சலை சமன் செய்யக்கூடும்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அருணா பதிவுகள், அசோகமித்திரன் பக்கம், தமிழ் அபுனைவுகள்

அனைவரும் படிக்க வேண்டிய நூறு நாவல்கள் – டெலிக்ராஃப் பத்திரிகையின் லிஸ்ட்

இந்த லிஸ்டை எனக்கு அனுப்பியது அருணா. பல புத்தகங்கள் என் லிஸ்டிலும் வரும், ஆனால் இந்தத் தரவரிசைப்படுத்துதலில் எனக்கு கடுமையான ஆட்சேபணைகள் உண்டு. டோஸ்டோவெஸ்கிக்கு 66-ஆவது இடம், ஜார்ஜ் எலியட்டுக்கு முதல் இடம் கொடுப்பதை நான் இது வரை பார்த்ததே இல்லை. (ஆனால் நானும் ஹார்ப்பர் லீக்கு முதல் இடம் கொடுக்கிறேன். 🙂 ) இருந்தாலும் இன்று ஒரு அமெரிக்க/ஆங்கிலேய பல்கலைக்கழகத்தில் (ஆங்கில) இலக்கியப் பட்டப் படிப்பில் இந்த மாதிரி ஒரு லிஸ்டைப் படிக்கச் சொன்னால் ஆச்சரியமில்லை.

இதில் மூன்றில் ஒரு பகுதியைப் படித்திருக்கிறேன்.

டாப் டென் புத்தகங்கள் வசதிக்காக:

  1. Middlemarch by George Eliot
  2. Moby Dick by Herman Melville
  3. Anna Karenina by Leo Tolstoy
  4. The Portrait of a Lady by Henry James
  5. Heart of Darkness by Joseph Conrad
  6. In Search of Lost Time by Marcel Proust
  7. Jane Eyre by Charlotte Brontë
  8. Disgrace by JM Coetzee
  9. Mrs Dalloway by Virginia Woolf
  10. Don Quixote by Miguel de Cervantes