பைரப்பா நிகழ்ச்சி பற்றி ராஜன்

S.L.Bhyrappaடாக்டர் எஸ்.எல். பைரப்பா பிரபலமான கன்னட மொழி எழுத்தாளரும், சிந்தனையாளரும் தத்துவவாதியும் ஆவார். அவரது படைப்புகள் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுக்கக் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளன. சாகித்ய அகடமி உட்பட ஏராளமான இலக்கிய விருதுகளைப் பெற்ற பைரப்பா இந்தியாவின் முக்கியமான இலக்கியவாதிகளில், தத்துவவாதிகளில் ஒருவர் ஆவார்.

எழுத்தாளர் பைரப்பா அவர்கள் சான் ஓசேயில் நடைபெற்ற அக்கா எனப்படும் அமெரிக்க கன்னட மொழி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் இந்திய இலக்கியத்திற்கும் இந்திய தத்துவங்களுக்கும் ஆற்றிய மாபெரும் இலக்கியப் பணிகள் தமிழ் வாசகர்களையும் மொழி பெயர்ப்பு நூல்கள் மூலமாக சென்றடைந்துள்ளன.

வேதங்களே அடிப்படை, அவற்றின் சாரமாக உபநிஷதங்கள், அவற்றின் சாரமாக போதாயணரின் பிரம்ம சூத்திரம், அவற்றுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற பல ஆசார்யர்களின் வியாக்கியானங்கள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்கள் அனைத்திலும் மிகுந்த அறிவும் அவற்றின் சாரங்களை தனது எழுத்துக்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்றவர் பைரப்பா அவர்கள். ஆனால் அந்தத் தத்துவங்கள் இலக்கியம் மூலமாக ராமாயணமும் மகாபாரதமும் விளக்குவதே மனதில் படிகிறது, தன் வழியும் இலக்கியத்தின் மூலம், கதைகளின் மூலம் தத்துவ சாரத்தை காட்டுவதே என்று உணர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவர் கன்னட மொழியில் எழுதினாலும் கூட அவரது அனைத்து படைப்புகளும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டு பெரும் வரவேற்பையும் வாசகர்கள் வட்டத்தையும் உருவாக்கியுள்ளன.

தனது உரையின் பொழுது வம்சவிருக்‌ஷாவை (1965) தன் முதல் முக்கிய நாவலாகக் குறிப்பிட்டார். க்ருஹபங்கா, பர்வா, அன்வேஷனே, தப்பலியு நீனடே மகனே போன்ற நாவல்களைக் குறிப்பிட்டார். ஆவரணா குறித்து நீண்ட நேரம் பேசினார். ஹிந்து மதத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடும் சுதந்திரம் இருக்கிறது, தனக்கு சரி என்று பட்டதை எழுத தயங்கியது கிடையாது என்றும் அதற்காக தனது உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டேன் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். (ஸிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி.சுப்ரமணியன் குறிப்பில் இருந்து).அவரது பருவம், ஆவரணா, ஒரு குடும்பம் சிதைகிறது போன்ற நாவல்கள் தமிழ் வாசகர்களிடத்தும் பெரும் வரவேற்பு பெற்றவை. அவரது வம்ச விருக்‌ஷா போன்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப் பட்டுள்ளன.

bhyrappa_nithyaஇந்தியாவின் முக்கியமான அறிவுப் பொக்கிஷங்களில், இந்தியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்ற முறையிலும் அவரது படைப்புகள் அனைத்தும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு எண்ணற்ற தமிழ் வாசகர்களையும் சென்றடைந்திருக்கின்றன என்ற முறையிலும் இந்தியாவின் இலக்கியச் செல்வராகிய பைரப்பா அவர்களை பாரதி தமிழ்ச் சங்கமும் அவரது வாசகர்களும் இணைந்து அந்த மாநாட்டு மேடையில் கவுரவித்தார்கள். அவரது படைப்புகளுக்கு பாரதி தமிழ்ச் சங்கம் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து ஒரு நினைவுப் பரிசை வழங்கியது. அவரது வாசகர்களான ஆர் வி சுப்ரமணியன், சுந்தரேஷ் மற்றும் நித்தியவதி சுந்தரேஷ் ஆகியோர் தயார் செய்திருந்த உரைகள் அவரிடம் அளிக்கப் பட்டன. பாரதி தமிழ்ச் சஙகத்தின் உறுப்பினர்கள் பலரும் பைரப்பாவின் தமிழ் வாசகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் அவர் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவத்தை Nithyavathy Sundaresh கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து அளித்தவுடன் இடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

தொடர்புடைய சுட்டி: பைரப்பாவை சந்தித்தது பற்றி ஆர்வி

பைரப்பாவும் நானும்

bhyrappa_at_akka_2

பைரப்பா சமீபத்தில் ஒரு கன்னட மாநாட்டுக்காக அமெரிக்கா வந்திருந்தார். நண்பர் ராஜன் என்னை எதற்கும் ஒரு உரை தயாரித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். நேரப் பிரச்சினையால் மாநாட்டில் அந்த உரையை ஆற்ற முடியவில்லை. அது கீழே.

என் மீது அவரது நாவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரது நாவல்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.

I think I read my first Bhyrappa book around 10 years back – Daatu. I have seen a Tamil translation in the local library for a while. But I have not heard of Bhyrappa then. One day I just picked it up despite reservations about its thickness. I started reading it in the evening, and didn’t put it down until I finished it.

When I closed the book, two thoughts were uppermost in my mind. One was that I am unlucky that I am not a Kannadiga. I wished – wish – that I could read the book in the original Kannada instead of a translation; I wished that I had read this genius before. The second was that I am lucky that I am not a Kannadiga. If I were one, I would have read his books long back instead of looking forward to reading more books by this genius. As one gets older, it gets harder and harder to be impressed by a “new” author, but Bhyrappa is one of those forces that would come clear through at any age.

Daatu was just amazing for me. I am middle-aged, I have lived in villages and cities, and I have observed casteism firsthand, I have been a victim of casteism, I have made casteist remarks myself, what new insight can anyone provide me about caste? That too with such simple characters; the Gowda who thinks that his caste is best; the brahmin who has a semi-hidden relationship with the dalit; the illegitimate dalit son, the brahmin daughter who marries the Gowda’s son; stereotypes, cliches, actually. But behind that simplicity lies elegance and brilliant craftsmanship. Here is a master, who by drawing just a few lines, tells you all about the caste phenomenon that has been an integral part of our lives for thousands of years. The ancient prejudices; the reinforcement of such prejudices in our times; the difficulty of breaking such prejudices and stepping out.

Then I came to know that Bhyrappa wrote the stories for two of my all time favorite movies – Vamsa Vriksha & Tabbaliyu Neenade Magane. Srothri has always been one of my favorite characters. When I first saw Vamsa Vriksha, I kept asking myself what I would have done if I had faced a similar situation. Again, such a simple question – what do you do if the principles you have lived by are not “complete”? If they cannot help you solve the current, burning problem? I leave it as an exercise to the reader to compare the approach of Praneshacharya of Samskara vs Srothri.

I have always been obsessed with Mahabharatha. Bhishma, Drona, Karna, Bhima, Krishna are not just legends to me, they are real. What can such an obsessed person say about Parva? It is one of the best retellings of Mahabharatha, and my words cannot do justice to this magnificent work. I would just make one tangential point – I think Pavannan’s translation in Tamil  did justice to Bhyrappa’s genius. There is only one question I would like to ask of Bhyrappa. What have you got against Kripa? Why did you make him such a laughingstock?

And there is Saakshi. The scene where the money is burnt has few equals in literature.

Bhyrappa does have an eye for humor – Gangamma in Gruhabhanga is a great example.  All of have met Gangammas in various garbs in our lives. But next time I meet one, I am sure, I would be able to laugh a little more. The Kandi vaidhya who can walk through forests in the middle of the night – is he truly brave or a coward who cannot face consequences of his actions?

I recognize that literary critics may point out that Bhyrappa adapts a straightforward way of writing and is not a subtle story-teller and put forward this as a weakness. I completely disagree. You don’t criticize Michaelangelo and Da Vinci for not using impressionist techniques. The true connoisseur takes their works and figures out what makes them great. It is the critic who has to adapt to the geniuses, and not the other way round.

I have heard from my Kannadiga friends that Bhyrappa is an extremely popular author in Kannada and his books sell like hot cakes. I am told that it is hard to sell even 1000 copies of a work of fiction in Tamil.  Clearly, the Kannadigas have good taste!

I hope that Gyanpeeth Award committee, The Padma Vibushan/Padhmabhushan committees, and the Nobel prize committee honor themselves by honoring Bhyrappa soon.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

உலக கன்னட மாநாட்டில் பைரப்பா

bhyrappa_at_akka_2இன்று எஸ்.எல். பைரப்பாவை சந்திக்கும், அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உலக கன்னட மாநாட்டுக்கு வந்திருந்தார். கன்னடத்தில்தான் பேசினார், ஆனால் முக்கால்வாசி புரிந்தது. அப்படிப்பட்ட எளிமையான கன்னடத்தில்தான் பேச வேண்டும் என்று முந்தைய நாள் ஒரு உரையில் சொன்னாராம். எங்கள் கூட்டத்தில் கன்னடம் தெரிந்த ஒரே மனிதர் நித்யவதி, முழுமையான மொழிபெயர்ப்பை எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது வரைக்கு இதை ட்ரெய்லர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில் முடி கொட்டிவிட்டாலும் எனக்கு இருப்பதை விட அதிகமாகவே இருக்கிறது.

அவருடன் கலந்துரையாட ஒரு நானூறு பேராவது வந்திருப்பார்கள். இது வரையில் ஜெயமோகன் போன்ற சிறந்த பேச்சாளரின் கூட்டத்திற்குக் கூட நூறு பேர் வந்திருந்தால் ஜாஸ்தி என்று நினைக்கும்போது கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்தது.

எனக்கு புரிந்த வரையில் கீழே.

பைரப்பா சிறுவனாக இருக்கும்போது அவரது அண்ணா, மற்றும் அக்கா இருவரும் ஒரே நாளில் ப்ளேக் நோயால் இறந்திருக்கிறார்கள். அவருடைய அம்மாவும் ப்ளேகில் அடுத்த இரண்டு வருஷத்தில் இறந்துவிட்டார். அந்த பாதிப்பினால்தானோ என்னவோ பைரப்பாவை சிறு வயதிலேயே கடோபநிஷத் கவர்ந்திருக்கிறது. கடோபநிஷத்தில்தான் நசிகேதன் யமனிடம் சாவு என்றால் என்ன என்று கேட்கிறான். அவரது மனம் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இண்டர்மீடியட்டில் நல்ல மதிப்பெண் பெற்று தத்துவக் கல்வியில் பி.ஏ. பயில விரும்பி இருக்கிறார். அவரது மதிப்பெண்களைப் பார்த்த கல்லூரி முதல்வர் “Philosophy bakes no bread, வேறு ஏதாவது படி” என்று அறிவுறுத்தி இருக்கிறார். இவர் விடாப்பிடியாக “If philosophy bakes no bread, I will open a bakery and earn my bread!” என்று பிடிவாதமாக தத்துவம் படித்திருக்கிறார். பிறகு எம்.ஏ., பிஹெச்.டி என்று போயிருக்கிறார். வேதங்களே அடிப்படை, அவற்றின் சாரமாக உபநிஷதங்கள், அவற்றின் சாரமாக போதாயணரின் பிரம்ம சூத்திரம், அவற்றுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற பல ஆசார்யர்களின் வியாக்கியானங்கள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்களில் மூழ்கி எழுந்திருக்கிறார். ஆனால் அந்தத் தத்துவங்கள் இலக்கியம் மூலமாக ராமாயணமும் மகாபாரதமும் விளக்குவதே மனதில் படிகிறது, தன் வழியும் இலக்கியத்தின் மூலம், கதைகளின் மூலம் தத்துவ சாரத்தை காட்டுவதே என்று உணர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

aavaranaaவம்சவிருக்‌ஷாவை (1965) தன் முதல் முக்கிய நாவலாகக் குறிப்பிட்டார். க்ருஹபங்கா, பர்வா, அன்வேஷனே, தப்பலியு நீனடே மகனே போன்ற நாவல்களைக் குறிப்பிட்டார். ஆவரணா குறித்து நீண்ட நேரம் பேசினார். ஹிந்து மதத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடும் சுதந்திரம் இருக்கிறது, “அன்னிய” மதங்களில் – குறிப்பாக இஸ்லாமில் கடவுளை முஹம்மது காட்டும் வழியில் மட்டுமே வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு fanaticism-த்துக்கு கொண்டு செல்கிறது/செல்லக் கூடியது என்றார். ஆவரணாவில் எந்தத் தவறான தகவலும் இருப்பதாக இது வரை எந்த விமர்சகரும் குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். தான் ஹிந்து மதத்தில் உள்ள பிரச்சினைகளைப் பல நாவல்களில் பேசி இருப்பதாகவும் அப்போதெல்லாம் அவரை மத விரோதி என்று எவரும் சொன்னதில்லை என்பதை உணர்த்தினார். தனக்கு சரி என்று பட்டதை எழுத குண்டுகள் தாக்கி சாகவும் தயார் என்று குறிப்பிட்டார். தான் பா.ஜ.க.காரன் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.

பிறகு கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார். பல இடங்களில் சிரிக்க வைத்தார். சரித்திரம் என்பது உண்மையைச் சொல்ல வேண்டும், ஔரங்கசீப் கோவிலை இடித்தான் என்றால் அதை மறைக்கக் கூடாது, இதை இந்திரா காந்தி அரசில் ஒரு பாடப் புத்தகக் கமிட்டியில் தான் வற்புறுத்தியதற்காக தன்னை கமிட்டியிலிருந்தே தூக்கிவிட்டார்கள் என்று சொன்னபோது கூட்டம் கை தட்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

பைரப்பாவின் “ஆவரணா” – படிக்க விரும்பும் புத்தகம்

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பா. அவரது எழுத்துகள் இன்னும் முழுமையாக ஆங்கிலம்/தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அதுவும் ஆவரணாவைப் பற்றி ஒரு நண்பன் அடிக்கடி பேசுவான், மொழிபெயர்ப்பு இல்லையே என்று வயிறு எரியும்.

நண்பர் உப்பிலி ஸ்ரீனிவாஸ் மூலமாக இந்தப் புத்தகம் தமிழில் வந்திருப்பது தெரிய வந்தது. அவர் எழுதிய அல்லது கட்-பேஸ்ட் செய்த சிறு கீழே உள்ள அறிமுகம் கல்கியில் வந்தது என்று ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். அவருக்கும் கல்கிக்கும் நன்றி! நூலைப் பதித்திருப்பது விஜயபாரதம் (இது பா.ஜ.க.வின் அமைப்பா?), மதிப்புரையை எழுதியவர் “திராவிட மாயை” சுப்பு என்று ரமணன் தகவல் தந்திருக்கிறார்.

ஜெயமோகன் இது வெறும் பிரச்சார நாவல், பைரப்பாவுக்கு இழுக்கு என்று மதிப்பிடுகிறார். அது ஒரு பெரிய ஏமாற்றம்!

எஸ்.எல்.பைரப்பா – கன்னட இலக்கியத்தின் இன்றைய சூப்பர் ஸ்டார். ‘ஆவரணா’ என்ற பெயரில் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நாவல், முதல் பத்து மாதங்களில் பதினான்கு பதிப்புகளைக் கண்டது. இப்போது முப்பது பதிப்புகளைக் கடந்து அசுர சாதனை செய்துள்ளது.

இவர் எழுதியுள்ள 24 நாவல்களில், சில திரைப்படங்களாகவும் வந்துள்ளன; ‘பர்வா’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தமிழர்களுக்கு அறிமுகமான பைரப்பா இப்போது மீண்டும் தமிழ்ப் புத்தகமாக வந்திருக்கிறார். இவரது ‘ஆவரணாவை’ ஜெயா வெங்கட்ராமன் தமிழாக்கி ‘திரை’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்.

திரையின் கதாநாயகி லக்ஷ்மி, காந்தியவாதி நரசிம்ம கௌடா மகள். பெங்களூருவில் மேல்தட்டு முற்போக்குவாதியான லக்ஷ்மி, காதல் வயப்பட்டு சகமுற்போக்குவாதி அமீரைத் திருமணம் செய்து கொண்டு ரஸியா-வாகிறாள். இடதுசாரிகளின் கவனிப்போடும் அரசாங்கத்தின் கருணையோடும் ஆவணப் படங்களையும் எடுக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு அமீர் இஸ்லாமியச் சட்டத்துக்குள் ரஸியாவை அடைக்க முயற்சி செய்கிறான். ரஸியாவுக்கு அதிர்ச்சி. கணவன்-மனைவி மோதல் என்பதைக் களமாக வைத்துக் கொண்டு பைரப்பா வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே போகிறார்.

நரசிம்ம கௌடா மறைவுக்குப் பிறகு அஸ்தியை எடுத்துக்கொண்டு ரஸியா, காசிக்குப் போகிறாள். அந்த இடத்தில் காசியை ‘நகரங்களின் வளாகம்’ என்று பெருமைப்படுத்துகிறார் பைரப்பா. அவருடைய இந்தப் படைப்பை, கதைகளின் வளாகம் என்று சொல்லலாம்.

எத்தனை கதைகள்? அமீர், ரஸியாவின் காதலில் உள்ள இனிப்பு; கடுப்பு கதைகள். பேராசிரியர் சாஸ்திரியின் சபலக் கதைகள்; எலிசபெத்தின் கத்தோலிக்கக்கதை; அருணா என்பவள் சல்மாவாகி சவூதிக்குப் போன கதை; நரசபுரத்தின் வீட்டு நூலகத்தில் மறைந்திருக்கும் கதைகள் என்று கலைடாஸ்கோபிக் கதைகள்.

தந்தையின் குறிப்புகளைப் படிக்கும்போது ரஸியாவின் கண்முன்னே விரிகிறது ஒரு சரித்திரக் கதை. அது மொகலாயர் காலத்தை முன்னுக்கு வந்து நடப்புலகைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. பைரப்பாவின் எழுத்தில் வெளிப்படும் சம்பவங்கள் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“நம்முடைய பாடத் திட்டம் முற்போக்கு வாதிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது” என்று வாதம் செய்தார் ஒரு நண்பர்.

மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியில், 1989-ல் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, “இஸ்லாமிய அரசர்கள் கோயில்களை இடித்தது பற்றிய செய்திகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறக்கூடாது” என்று சொன்னதை நினைவுபடுத்தினார் அந்த நண்பர் சொன்னதற்கு வலு கூட்டுகிறது நாவல்.

திரை – கன்னட மூலம் எஸ். எல். பைரப்பா, தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.

விலை ரூ. 250.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்
தொடர்புடைய சுட்டி: எஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா

எஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா (ஒரு குடும்பம் சிதைகிறது)

இன்றைக்கு கொஞ்சம் தமிழ் நாட்டை விட்டு வெளியே போய்ப் பார்க்கலாம்.

பைரப்பா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். பர்வா, தாட்டு, வம்ச விருட்சா போன்ற அற்புதமான புத்தகங்களை படித்திருக்கிறேன். கன்னட எழுத்தாளர்களில் இவர்தான் மிகவும் பாப்புலர் என்றும் இவரது புத்தகங்கள் விற்பனையில் டாப் என்றும் என் கன்னட நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.

ஆனால் க்ருஹபங்கா எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. அதில் நான் காணும் குறை அங்கே துன்பங்களும் துயரங்களும் ஒரு for loop மாதிரி போகின்றன.
for (பக்கம் = 1; பக்கம் < கடைசி பக்கம்; பக்கம்++) {
    குடும்பம் முழம் சறுக்கும்
    சாண் ஏறும்
}
ஒரு நூறு பக்கம் படித்த பிறகு கதை எப்படி போகும் என்ன ஆகும் என்று தெளிவாக தெரிந்துவிடுகிறது.

இப்படி இருக்கும்போது கதை சிம்பிளாகத்தானே இருக்க முடியும்? 1920-40-களில் மைசூர் சமஸ்தானத்தில் நடக்கும் கதை. மூர்க்கத்தனமும் முட்டாள்தனமும் நிறைந்த ஒரு பிராமண விதவை குடும்பம். இரண்டு பையன்கள். முதல் பையன் கிராம கணக்குப் பிள்ளை ஆகும் உரிமை உள்ளவன், ஆனால் படிப்பு கொஞ்சம் ஏனோதானோதான். கொஞ்சம் அசடு. இரண்டாமவன் வெறும் முரடன். நஞ்சம்மா முதல்வனை மணக்கிறாள். அவள் ஒரு கிளாசிகல் "இந்தியத் தாய்." கணவனுக்காக தானே கணக்கு வழக்குகளை பார்க்கிறாள். பிள்ளைகளை படிக்க வைக்கிறாள். குடும்பத்தை உயர்த்த அவள் செய்யும் எல்லா முயற்சிகளும் தோல்வியில்தான் முடிகின்றன. மாமியாரின் மூர்க்கத்தனத்தையும், புருஷனின் வேலை செய்யமாட்டேன், தனக்கு சாப்பாடு இருந்தால் போதும் என்ற சுயநலத்தையும் அவளால் வெல்ல முடியவில்லை.

நாவலின் பலம் பாத்திர சித்தரிப்பு. அந்த மூர்க்கமான அம்மாவும் சரி; அசமஞ்ச புருஷனும் சரி; நஞ்சம்மாவின் பிடிவாதக்கார, வீர தீர அப்பாவும் சரி; நஞ்சம்மாவும் சரி. மிக அருமையாக வந்திருக்கின்றன. சில காட்சிகள் – நஞ்சம்மாவின் அப்பா வினை வைக்கப்பட்டிருக்கும் சிலையை உடைத்து பணத்தை எடுப்பது, பஞ்ச காலத்தில் நஞ்சம்மாவின் மகன் காயை திருடி நஞ்சம்மாவிடம் கொடுப்பது, நஞ்சம்மாவின் மாமியார் மாவை கொண்டு வந்து அவள் மீது கொட்டுவது போன்றவை அபாரம். அந்த காலத்து கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பிளேக் நோயால் கிராமங்கள் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அவர் எழுதி இருப்பது வியப்பாக இருந்தது.

இது ஜெயமோகனுக்கு பிடித்த நாவல்களில் ஒன்று. அவர் எழுதிய விமர்சனம் இங்கே.

புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் எச்.வி. சுப்ரமணியன். பெயரை மறந்துவிட்டேன், நினைவிருப்பவர்கள் சொல்லலாம். தகவல் தந்த பாஸ்கருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: பிற இந்திய மொழி நாவல்கள்

தொடர்புடைய சுட்டி:
பைரப்பா – விக்கி குறிப்பு
ஜெயமோகன் க்ருஹபங்காவை அலசுகிறார்