எனக்கு மிகவும் பிடித்த காதல் பாட்டு

(மீள்பதிவு)

இன்று (மீண்டும்) எங்கள் மணநாள். ஹேமாவுக்காக மீண்டும் அதே பாட்டு. பதின்ம வயதிலேயே பிடித்துப் போய்விட்ட பாட்டு. பீட்டில்ஸ் எனக்குப் பிடித்த இசைக்குழுவாக இருப்பதற்கு இந்தப் பாடல் ஒரு முக்கியக் காரணம். ஹேமாவுக்கும் பிடித்த பாட்டு. ஒரே ஒரு வருத்தம், அறுபத்துநாலில் அல்ல, நாற்பத்துநாலிலேயே வழுக்கை!

பாடல் வரிகள்:

When I get older, losing my hair
Many years from now
Will you still be sending me a valentine
Birthday greetings, bottle of wine?

If I’d been out till quarter to three
Would you lock the door?
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?

You’ll be older too
And if you say the word
I could stay with you

I could be handy, mending a fuse
When your lights have gone
You can knit a sweater by the fireside
Sunday mornings go for a ride

Doing the garden, digging the weeds
Who could ask for more?
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?

Every summer we can rent a cottage in the Isle of Wight
If it’s not too dear
We shall scrimp and save
Grandchildren on your knee
Vera, Chuck and Dave

Send me a postcard, drop me a line
Stating point of view
Indicate precisely what you mean to say
Yours sincerely, wasting away

Give me your answer, fill in a form
Mine for evermore
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?
Ho!

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் அண்ணாமலை

பாஜகவின் தமிழகத் தலைவரான அண்ணாமலை சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதிக்கு வந்திருந்தார், போன ஞாயிறு (அக்டோபர் 9, 2022) அன்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

எங்கோ தொலைதூரத்தில் வாழ்ந்தாலும், இந்தியாவில் ஓட்டுரிமை இல்லாவிட்டாலும் எனது வேர்கள் இன்றும் என்றும் இந்தியாவில்தான். அதனால் இந்திய அரசியல் களம் என் பிரகஞையில் இருக்கத்தான் செய்கிறது. அண்ணாமலை இது வரையில் இருந்த எந்தத் தமிழக பாஜக தலைவரை விட சிறப்பாக செயலபடுகிறார் என்று தெரிகிறது. என் பாஜக எதிர்ப்பு நிலையும் கொஞ்சம் நீர்த்துவிட்டதுதான். அதனால் நானும் போயிருந்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பேயே பைசா வசூல் ஆகிவிட்டது, அதாவது மனத்திருப்தி. முத்துகிருஷ்ணன் (முகின்), பாலாஜி இருவரும் வந்திருந்தார்கள். பகவதி பெருமாளும் நானும் ஒன்றாகப் போயிருந்தோம். நண்பர்களைப் பார்த்ததே மகிழ்ச்சி.

அண்ணாமலை நன்றாகப் பேசினார்.

கூட்டம் பாஜக/மோடி ஆதரவுக் கூட்டம். அதனால் கூட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு தீனி போட்டார். நிறைய மோடி புகழ். திமுக பற்றி நிறைய கிண்டல். ஆனால் தரம் தாழ்ந்து ஒரு இடத்தில் கூட பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் கூட்டம் அதற்கும் கை தட்டி இருக்கும், அது அவருக்கும் தெரிந்துதான் இருக்கும்.

மோடி அரசின் சாதனைகளாக அவர் பட்டியல் இட்டவற்றில் என் நினைவில் இருப்பவை:

  • கோவிடை கையாண்ட விதம்: என் கண்ணிலும் இது சாதனையே. இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமான ஒரு நாட்டில், அதுவும் நெருக்கடி நிறைந்த பெருநகரங்கள் அதிகம் உள்ள நாட்டில் இது போன்ற ஒரு தொற்று நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதை எத்தனை பாராட்டினாலும் தகும். அதுவும் இந்தியாவிலேயே மருந்துகள், கருவிகள் உற்பத்தி, அவற்றை ஏற்றுமதி செய்யும் நிலையில் இருப்பது – மோடி அரசுக்கு ஒரு ஜே!
  • காஷ்மீருக்கு மட்டும் அதிகப்படி உரிமைகளை வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது: இதற்கு முதுகெலும்பு வேண்டும். நீக்கியதற்கான பின்விளைவுகளும் எதுவும் இல்லை
  • UPI: அனேக இந்தியர்க்ளுக்கு இன்று வங்கிக் கணக்கு இருக்கிறது, பணப் பரிமாற்றம் இன்டர்நெட் வழியாக நடக்கிறது. அது ஒவ்வொரு கட்டத்திலும் ஊழலைக் குறைக்கிறது.
  • உக்ரெய்னிலிருந்து இந்தியர்களை பத்திரமாக கூட்டி வந்தது. இரு பக்கமும் பேசி 7 மணி நேர ஜன்னலை உருவாக்கி இந்தியர்களை உக்ரெயினிலிருந்து வெளியே கொண்டு வந்தார்களாம்.

சூழ்நிலை பொருந்தி வந்திருந்தால் இவற்றை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திந்தாலும் செய்திருக்கும். ஒரு ராஜீவ் காந்தியோ, நரசிம்ம ராவோ, மன்மோகன் சிங்கோ இவற்றை செய்யும் திறமை, ஆகிருதி உள்ளவர்கள்தான். ஆனால் 370-ஆம் பிரிவை நீக்கும் தைரியம் பாஜக/மோடிக்கு மட்டுமே உண்டு.

அண்ணாமலை நிச்சயமாக மிகைப்படுத்தி இருப்பார்தான். ஆனால் அனைத்திற்கும் அடியில் உண்மை இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. Demonetization போன்றவற்றை அவர் குறிப்பிடவே இல்லை.

நிறைய spin-உம் இருக்கத்தான் செய்தது. எட்கர் தர்ஸ்டன்தான் ஜாதியைக் கண்டுபிடித்தார், அதற்கு முன் இந்தியாவில் ஜாதிப் பிரச்சினையே கிடையாது என்பதுதான் மிகச் சிறப்பான spin. மதச் சார்பற்ற, ஹிந்து சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்தியாவை தனது vision ஆகச் சொன்னார், அதில் உள்ள முரண்பாடு அவருக்கு, கூட்டத்தினருக்கோ புரிந்ததாகத் தெரியவில்லை. நூபுர் ஷர்மா ஜாக்கிரதையாகப் பேசி இருக்க வேண்டும், அவர் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என்று சொன்னவர், ஸ்டாலின் ஜாக்கிரதையாப் பேசுங்கப்பா என்று சொல்வதை நிறையவே கிண்டலடித்தார்.

நொட்டை சொல்வது சுலபம். ஆனால் overall favorable impression-தான். இவரைப் போன்ற படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நிச்சயமாக திராவிடக் கட்சிகளுக்கு நல்ல மாற்றாக இருப்பார். நான் தமிழகத்தில் இருந்தால் இவருக்காகவே பாஜகவுக்கு ஓட்டு போடலாமா என்று ஒரு நிமிஷமாவது யோசிப்பேன்.

நான் இன்னும் பாஜகவை நம்பவில்லை என்பதை பதிவு செய்கிறேன். ஆனால் நான் நம்புகிறேனா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. குறைந்த பட்சம் நான் இந்தியக் குடிமகனாக இருந்தாலாவது என் நம்பிக்கைகளை இன்னும் கொஞ்சம் பொருட்படுத்தலாம். நானோ அமெரிக்கக் குடிமகன். பெரும்பான்மையான இந்தியர்கள் மோடி மீதும் பாஜக மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அதுதான் முக்கியம். எனக்கும் கூட மோடிக்கு சமமான ஆகிருதி உள்ள எந்தத் தலைவரும் இன்று இந்தியாவில் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. அண்ணாமலை போன்ற அடுத்த தலைமுறையினரை உருவாக்கிவிட்டால் பாஜக இன்னும் வலிமை பெறும், எதிர்க்கட்சிகள் இன்னும் பலவீனம் ஆகும்…

ஆர்வம் இருப்பவர்கள் முழுபேச்சையும் இங்கே கேட்கலாம்

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு பரிசளித்த புத்தகங்கள்

சமீபத்தில் சென்னை வந்த ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் 6 புத்தகங்களைப் பரிசளித்திருக்கிறார். பொன்னாடை போர்த்துவார்கள், சந்தன மாலை போடுவார்கள். ஸ்டாலின் புத்தகங்களைப் பரிசளித்தது நல்ல மாற்றம். அதுவும் திருக்குறள், சிலப்பதிகார ஆய்வுகள், தொல்காப்பியப் பூங்கா என்று நிறுத்திக் கொள்ளாமல் நவீன தமிழ் இலக்கியவாதிகளின் புத்தகங்களைப் பரிசளித்திருப்பது மிக நல்ல மாற்றம். கி.ரா. மறைவுக்கு அஞ்சலி, அவருக்கு சிலையோ மணிமண்டபமோ ஏதோ கட்டப் போகிறோம் என்ற அறிவிப்பு, இப்போது புத்தகங்கள். அவருக்கு ஒரு ஜே! புத்தகங்களைத் தேர்ந்தெடுத்த அந்த முகம் தெரியாத செயலாளருக்கு ஒரு ஜே! என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அவர் பரிசளித்த புத்தகங்கள்:

  1. திருக்குறள் – பேராசிரியர் பி.எஸ். சுந்தரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு
  2. கி.ரா. எழுதிய கரிசல் கதைகள்
  3. சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல்
  4. தி.ஜா. எழுதிய செம்பருத்தி
  5. ராஜம் கிருஷ்ணன் எழுதிய சுழலில் மிதக்கும் தீபங்கள்
  6. நீல. பத்மநாபன் எழுதிய தலைமுறைகள்

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

வளைகுடா பகுதியில் வெண்முரசு திரைப்படம்

விசுவிடமிருந்து வந்த செய்தி: வாருங்களேன், எல்லாரையும் பல நாள் கழித்து பார்த்த மாதிரியும் இருக்கும்…

We are organizing the screening of a 90 minute documentary to celebrate Venmurasu on Saturday, Jun 19, 2021 at 3:00 PM in Fremont. If you are interested, please register: https://tinyurl.com/venmurasu-BayArea

Eventbrite
Venmurasu Tribute – Bay Area Screening

Where
43917 Pacific Commons Boulevard, Fremont, CA 94538
When
Sat, Jun 19, 2021 at 3:00 PM
Ticket: $20
Payment: Venmo / Paypal @ visumrs@gmail.com or we can collect cash in the event.

We will be following covid guidelines issued by Alameda county and request everyone to follow the safety protocols.
Teaser: https://youtu.be/Wc7G3j-4YV4

About Venmurasu:

Tamil writer Jeyamohan has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum) on July 16, 2020. The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over roughly 6.5 years. The author serialised the novels, a chapter a day, since 2014. Venmurasu is based on the Indian epic, the Vyasa-Mahabharatham.

Broadly, what Venmurasu does to the Mahabharatham is what Shakespeare did with the story of Donwald to create Macbeth, or what Wagner did with the Norse myths to create the Ring cycle. It refashions the original with artistic purpose to create a greater whole, a parallel, modern epic.

Venmurasu is a modern literary text, a novel series or roman fleuve like Romain Rolland’s Jean Cristophe or Emilie Zola’s Les Rougon-Macquart. However Venmurasu differs in that each novel in the series has its own aesthetic, narrative form and vision. There are Tolstoyan multigenerational epics, romantic comedies, poetic novels in versified prose, philosophical novels, fantasies, travel and war novels The entire series traverses a whole gamut of characters, major, minor, mythical and invented, running into several hundreds. They abound with all the delight of novelistic detail – landscapes, histories, mythologies and genealogies, recipes and rituals, technical descriptions of iron-age ships, war implements and Chinese telescopes, forays into various philosophical, religious and artistic schools.

Familiar tales are told and retold and subverted in a variety of voices, juxtaposed against each other to create new readings. Folk and subaltern tales, orthodox narratives, modern and ancient myths, women’s stories, children’s stories and animal stories in a single tapestry. They are layered with the main narrative, resulting in astonishing interpretations and insights into the original epic, that’s still living fabric in India. Then, this insight swings the reader’s gaze back into contemporary society, where much of the same tensions still exist.

Venmurasu Tribute Documentary: https://www.jeyamohan.in/147966/

Readers of Venmurasu have created a 90 minutes documentary as a tribute to Venmurasu, to celebrate the astonishing achievement of writer Jeyamohan. Actor Kamal Hassan, Maestro Ilayaraja, Director Vasantha Balan, Tamil Writers – A.Muthulingam, Nanjil Nadan, Su.Venugopal, Paavannan and readers of Venmurasu have shared their views on Venmurasu. The documentary also includes an operatic poem composed by Musician Rajan Somasundaram of North Carolina using verses from “Neelam” novel of Venmurasu sung by Kamal Hassan, Saindavi, Sriram Parthasarathy in collaboration with North Carolina Symphony.

அன்புள்ள நண்பர்களுக்கு,

ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.

வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி ஃப்ரீமாண்ட் நகரில் திரையிடப்பட உள்ளது. எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும் ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும் பேசியிருக்கிறார்கள்.

கமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி, ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme) உண்டு.

திரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள். திரைஅரங்க விதிமுறைகளின் படி திரையரங்கில் 55 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

வெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu
வெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/

Thanks,
https://visu.me/

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

எனக்கு மிகவும் பிடித்த காதல் பாட்டு

(மீள்பதிவு)

இன்று எங்கள் மணநாள். ஹேமாவுக்காக ஒரு பாட்டு. பதின்ம வயதிலேயே பிடித்துப் போய்விட்ட பாட்டு. பீட்டீல்ஸ் எனக்குப் பிடித்த இசைக்குழுவாக இருப்பதற்கு இந்தப் பாடல் ஒரு முக்கியக் காரணம். ஹேமாவுக்கும் பிடித்த பாட்டு. ஒரே ஒரு வருத்தம், அறுபத்துநாலில் அல்ல, நாற்பத்துநாலிலேயே வழுக்கை!

பாடல் வரிகள்:

When I get older, losing my hair
Many years from now
Will you still be sending me a valentine
Birthday greetings, bottle of wine?

If I’d been out till quarter to three
Would you lock the door?
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?

You’ll be older too
And if you say the word
I could stay with you

I could be handy, mending a fuse
When your lights have gone
You can knit a sweater by the fireside
Sunday mornings go for a ride

Doing the garden, digging the weeds
Who could ask for more?
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?

Every summer we can rent a cottage in the Isle of Wight
If it’s not too dear
We shall scrimp and save
Grandchildren on your knee
Vera, Chuck & Dave

Send me a postcard, drop me a line
Stating point of view
Indicate precisely what you mean to say
Yours sincerely, wasting away
Give me your answer, fill in a form
Mine for evermore
Will you still need me, will you still feed me
When I’m sixty-four?
Ho!

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

இன்று என் பிறந்த நாள். இன்றோடு எனக்கு வயது – சரி ரகசியத்தை வெளியே சொல்வானேன், இன்றோடு எனக்கு நாலு கழுதை வயதாகிறது. அதற்காக ஒரு பாட்டு.

பர்பாதியோன் கா ஜஷ்ன் மனானா சலாகயா‘ – எனக்குப் பிடித்த வரி, இன்றைக்கு கொஞ்சம் பொருந்தும் வரி கூட. குத்துமதிப்பாக ‘துயரங்களைக் கொண்டாடக் கிளம்பிவிட்டேன்’ என்று மொழிபெயர்க்கலாம். (ஆனால் பர்பாதியோன் என்பதில் இருக்கும் அழுத்தம் துயரம் என்பதில் வரவில்லை) ஜிந்தகி சாத் நிபாத்தித்தான் பார்க்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

ஜனகணமன பாடலின் முழு வடிவம்

ஜனகணமன நாம் எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் நாம் பாடுவது அதில் ஒரு பகுதியை மட்டுமே. குடியரசு தினம் அன்று அதன் முழு வடிவத்தையும் கேட்டுப் பாருங்களேன்!

பிமல் ராய் இயக்கிய வங்காளப் படமான உதயர் பாதே (1944) திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். இந்தத் திரைப்படம் ஹிந்தியிலும் ஹம்ராஹி (1945) என்று வந்ததாம். ராய்சந்த் போரல் இசை அமைத்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே இருந்த மெட்டைப் பயன்படுத்தினாரா இல்லை இவரே போட்ட மெட்டா என்று தெரியவில்லை. தாகூர் இந்தப் பாடலை 1911-இல் எழுதினார் என்று நினைவு, அதனால் அனேகமாக ஏற்கனவே இருந்த மெட்டாகத்தான் இருக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்வுகள்

அமெரிக்காவில் அரவிந்தன் நீலகண்டன்

aravindhan_neelakandan_invite
aravindan_neelakandanஅரவிந்தன் நீலகண்டன் இப்போது அமெரிக்கா வந்திருக்கிறார். பாரதி தமிழ் சங்கம் ஏற்பாட்டில் இந்த வார இறுதியில் சான் ஹோஸேயில் பேசப் போகிறார். தவறாமல் வாருங்கள், அவர் பேச்சைக் கேளுங்கள் என்று அழைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.

பாரதி தமிழ் சங்க பொறுப்பாளர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலிலிருந்து:

பாரதி தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டு இலக்கிய நிகழ்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளது. அரவிந்தன் தமிழின் முக்கியமான சிந்தனையாளரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும் ஆவார். அவரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை ஆராய்ச்சியாளர் சாந்தினி ராமசாமி இணைந்து எழுதியுள்ள இந்திய அறிதல் முறைகள் என்ற நூல் குறித்து அரவிந்தன் உரையாற்றவுள்ளார். உரையினைத் தொடர்ந்து இந்திய கலை, மரபுகள், பண்பாடு, மதம், தொன்மை, வரலாறு குறித்து அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். அனைவரும் வருக. உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு – இந்திய அறிதல் முறைகள்
நாள்: செப் 24 சனிக்கிழமைம் நேரம் : மாலை 6 முதல் 9 வரை
இடம்: ராஜேஸ்வரி கோவில் அரங்கம், பாரகன் ட்ரைவ், சான் ஓசே

அ.நீ. யாரென்று தெரியாதவர்களுக்காக: இணையத்தில் வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் போல சிரிப்பு புரட்சியாளர்கள், சிரிப்பு முற்போக்குவாதிகள், சிரிப்பு ஹிந்துத்துவவாதிகள் என்று பல சிரிப்பு கொள்கையாளர்கள் உலவுகிறார்கள். அபூர்வமாகவே தர்க்க முரண் இல்லாமல் தன் சிந்தனைகளை கோர்வையாக முன்வைக்கக் கூடியவர்களை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அபூர்வப் பிறவிகளில் அரவிந்தன் நீலகண்டனும் ஒருவர்.

அரவிந்தன் நீலகண்டனின் அரசியல் நிலை எனக்கு உவப்பானது அல்ல. அவருடைய கோணங்களை – குறிப்பாக ஹிந்துத்துவ வாதங்களை – நான் பல முறை எதிர்த்து வாதிட்டிருக்கிறேன். சில சமயம் அவரும் என்னை பொருட்படுத்தி என்னுடன் வாதிட்டிருக்கிறார். ஆனால் அவரது ஆய்வுகள், கோணங்கள், வாதங்கள் எல்லாம் நேரதிர் அரசியல் நிலை உள்ளவர்கள் கூட அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. அவரது கூர்மையான சிந்தனைகள் என்னை சில சமயமாவது நான் நினைப்பது சரிதானா என்று யோசிக்க வைத்திருக்கின்றன.

வளர்த்துவானேன்! வெகு சிலரையே அறிவுஜீவி என்று சொல்ல முடிகிறது. அவர்களில் அ.நீ.யும் ஒருவர்.

சிலிகன் ஷெல்ஃபில் புத்தகங்களைப் பற்றி எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யம் அடையாது. அ.நீ. மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா இணைந்து Breaking India என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். இந்திய அறிதல் முறைகள் என்ற புத்தகத்தை சாந்தினி தேவியுடன் இணைந்து எழுதி இருக்கிறார். நம்பக்கூடாத கடவுள் என்ற கட்டுரைத் தொகுப்பை தனியாக எழுதி இருக்கிறார். ஸ்வராஜ்யா பத்திரிகை, தினமணி பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக ‘ஆலந்தூர் மள்ளன்‘ என்ற புனைபெயரில் அவர் எழுதிய சில சிறுகதைகள் சிறப்பானவை, என் மனதைத் தொட்டவை. குறிப்பாக சுமைதாங்கி என்ற சிறுகதையைப் பரிந்துரைக்கிறேன்.

தவற விடாதீர்கள், கட்டாயம் வாருங்கள் என்று அழைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகன் பரிந்துரை
ஆலந்தூர் மள்ளன் சிறுகதைகள் பற்றி ரெங்கசுப்ரமணி

சொல்வனம்-விருட்சம் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நடந்தது ஜனவரி 2 அன்று. 2/1/2016 என்ற தேதியை அமெரிக்க வழக்கப்படி ஃபெப்ரவரி 1 என்று புரிந்து கொண்டதால் இந்த அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியாகியது. குளறுபடிக்கு மன்னிக்க வேண்டும்.

குவிகம் இலக்கியவாசல் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு

பங்கேற்பவர்கள்: ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன், சொல்வனம் ரவிசங்கர், விருட்சம் அழகியசிங்கர்

இடம்: பனுவல் விற்பனை நிலையம், 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041

தேதி: 02.01.2016 (சனிக்கிழமை), நேரம் மாலை 5.30 மணிக்கு

பேசுவோர் குறிப்பு:

ஜெயந்தி சங்கர்: சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் தன் ஆளுமையைப் பதித்தவர்.

சத்தியானந்தன்: சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம் என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்

அனைவரும் வருக,

அன்புடன்
ரவிசங்கர் – அழகியசிங்கர்

குவிகம் இலக்கிய வாசல் அனைவரையும் வரவேற்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் – அறிமுக உரை

காலில் அடிபட்டு எங்கும் நகரமுடியாத நிலை. பழைய பஞ்சாங்கங்களைக் கிளறிக் கொண்டிருக்கிறேன். அப்போது கண்ணில் பட்டது – சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன்/பி.ஏ. கிருஷ்ணனை பாரதி தமிழ் சங்க விழாவில் அறிமுகப்படுத்தி பேசிய பேச்சு.

இரண்டு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். ராஜன் எங்களிடம் சொல்லி இருந்தார் – இரண்டு மணிக்கு நிகழ்ச்சி என்றால் நம் மக்கள் எல்லாரும் இரண்டரைக்குத்தான் வருவார்கள், அது வரை நேரத்தை நிரப்ப முப்பத்தெட்டாவது வட்டச் செயலாளர் போல எதையாவது பேசி வை என்று சொல்லி இருந்தார். அன்று காலையில் இருவரையும் அறிமுகப்படுத்தி பேசு என்று சொன்னார். ஏற்கனவே தயார் செய்தது எனக்கே திருப்தியாக இல்லை. சரி இவரே ஐடியா கொடுக்கிறாரே என்று கிடுகிடுவென்று ஒரு அறிமுகத்தை தயார் செய்தேன்.

என் பேச்சுதான் முதலில். 2:10 வாக்கில் நான் மேடையேற வேண்டும். கஷ்ட காலம், ராஜன் தொகுப்பாளினி நித்யாவிடமும் அறிமுகப்படுத்தி பேச சொல்லி இருக்கிறார். 2:00 மணியிலிருந்து 2:10 வரை நான் எழுதி வைத்திருந்ததை எல்லாம் நித்யா பேசிக் கொண்டிருந்தார், நான் பேச நினைத்ததெல்லாம் நித்யா பேசிவிட்டதால் என்னத்தை பேசுவது என்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தேன்.

சம்பிரதாயமான அறிமுகம் என்றில்லாமல் என் தனிப்பட்ட அனுபவங்களை, நான் உணர்ந்தவற்றை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்தேன். பிரிண்ட் செய்து வைத்திருந்த பேப்பரில் சில நோட்ஸ்களை கிறுக்கிக் கொண்டேன். தயார் செய்து வைத்திருந்ததில் என் பரிந்துரைகளின் பட்டியல் ஒன்று இருந்தது, அதை மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்.

காகிதக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தபோது அந்த நோட்ஸ் கண்ணில் பட்டது. அதைத்தான் தட்டச்சி இருக்கிறேன்…

நண்பர்களே,

இது இலக்கியக் கூட்டம். இன்றைய முக்கிய நிகழ்ச்சி – ஒரே நிகழ்ச்சி – ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் இருவர் பேசுவது மட்டும்தான். அவர்கள் பேசுவதை கேட்க வந்திருக்கும் வாசகர்களிடம் இந்த அறிமுகம் எல்லாம் தேவையா, அவர்கள் எழுத்தைப் படிக்காமலா இங்கே ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. இந்த அறிமுகம் எல்லாம் வெற்று சம்பிரதாயம்தான் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர்கள் எழுத்தைப் பற்றிய என்னுடைய பர்சனல் கருத்துகளை, விமர்சனங்களைத்தான் முன்வைக்கப் போகிறேன்.

பிஏகே வயதில் மூத்தவராக இருந்தாலும் ஜெயமோகன்தான் மூத்த எழுத்தாளர். அதனால் ஜெயமோகனிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்.

தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் என் கருத்தில் பிரதாப முதலியார் சரித்திரம் இலக்கியம் இல்லை, முன்னோடி முயற்சி மட்டுமே. என்னைப் பொறுத்த வரை தமிழில் புனைவு இலக்கியம் என்பது 1893-ஆம் ஆண்டு வெளிவந்த ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்திலிருந்துதான் தொடங்குகிறது. கிட்டத்தட்ட நூற்று இருபது ஆண்டுகள் நீண்ட இந்த புனைவிலக்கிய வரலாறு புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், ஜெயகாந்தன், பூமணி, சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், நாஞ்சில், பிஏகே என்று பல சாதனையாளர்களை சந்தித்திருக்கிறது. இந்த நீண்ட வரிசையில் புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும்தான் நான் மேதைகள் என்று வகைப்படுத்துவேன்.

jeyamohanவிஷ்ணுபுரத்தைப் பற்றி பேசாமல் ஜெயமோகன் என்ற எழுத்தாளரைப் பற்றி பேச முடியாது. ஆனால் ஆயிரம் பக்கம் உள்ள விஷ்ணுபுரத்தைப் பற்றி அரை நிமிஷத்தில் எப்படிப் பேச? என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். இந்திய தத்துவ மரபில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. உலகே மாயம் என்றால் சரி இருந்துவிட்டுப் போகட்டும் லஞ்சுக்கு என்ன என்று கேட்கும் ஆசாமி நான். விஷ்ணுபுரத்தின் இரண்டாம் பகுதி தத்துவப் பகுதி என்றே சொல்லலாம். என்னைக் கட்டிப்போட்ட பகுதி அது. புத்தகத்தை கீழே வைக்காமல் வாசித்தேன்.

விஷ்ணுபுரத்தையே ஜெயமோகனின் நாவல்களில் தலை சிறந்ததாகக் கருதுகிறேன். தமிழ் நாவல்களிலேயே அதைத்தான் சிறந்த நாவல் என்று கருதுகிறேன்.

பின் தொடரும் நிழலின் குரல், காடு, வெள்ளை யானை நாவல்களையும் நான் தமிழ் நாவல்களின் முதல் வரிசையில் வைப்பேன். நான் இன்னும் கொற்றவையைப் படித்து முடிக்கவில்லை. ஜெயமோகன் இன்னும் வெண்முரசை எழுதி முடிக்கவில்லை. அனேகமாக இவை இரண்டும் முதல் வரிசையில்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக நீலம் பகுதி. இதற்கு முன் இது போன்ற முயற்சி நிச்சயமாகத் தமிழில் வந்ததில்லை. உலக இலக்கியத்திலும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை.

நாவல்களில் மட்டுமல்ல, ஜெயமோகன் சிறுகதைகளிலும் சாதனையாளர்தான். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை உலகத் தரத்தில் எழுதப்பட்டவை. எனக்குப் பிடித்த 10 சிறுகதைகளை பின்னால் பட்டியலாகத் தருகிறேன்.

ஜெயமோகனின் இன்னொரு முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது காந்தியின் சிந்தனைகளை என் போன்றவர்களுக்கு “மொழிபெயர்ப்பது”. காந்தி என்ன செய்தார் என்பது நம் அனைவருக்கும் அனேகமாகத் தெரியும். ஆனால் அவரது சிந்தனைகள், அவை எப்படி பரிணாமம் அடைந்தன என்பதை பல கட்டுரைகளில் அற்புதமாக விளக்கி இருக்கிறார். இன்றைய காந்தி புத்தகத்தை நான் பலமாக பரிந்துரைக்கிறேன். அயோத்திதாசர் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை.

ஜெயமோகனின் மற்றொரு முக்கிய பங்களிப்பு இலக்கிய விமர்சனம். சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள் என்று அவர் போட்டிருக்கும் பட்டியல்கள் தமிழ் சூழ்நிலையில் seminal பங்களிப்புகள். குறிப்பாக வணிக இலக்கியத்துக்கு அவர் தந்திருக்கும் அங்கீகாரம் மிக முக்கியமானது.

ஜெயமோகன் அதீதங்களின் எழுத்தாளர். அசோகமித்ரனுக்கு நேர் எதிர். எதிர்மறை விமர்சனம் என்று சொன்னால் சில சமயம் அதீதத்தின் மீது அதீதம் என்பது திகட்டிவிடுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை அவரிடமே ஒரு முறை சொல்லி இருக்கிறேன், அவர் சாதாரணத்தைப் பற்றி என்ன எழுதுவது என்று என்னைத் திருப்பிக் கேட்டார். அப்படி எழுதுவது அவருக்கு கஷ்டமாக இருக்காது, ஆனால் மனம் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

பேசிக் கொண்டே போகலாம், ஆனால் இளையவருக்கு தாவிவிடப் போகிறேன்.

p_a_krishnanபிஏகேவின் பங்களிப்பை எண்ணிக்கையால் அளவிட முடியாது. அவர் இரண்டு நாவல்கள், இரண்டு மூன்று அபுனைவுகளை மட்டும்தான் எழுதி இருக்கிறார். ஆனால் அவர் தமிழின் முதல் வரிசை எழுத்தாளர் என்று கூரை மேல் ஏறிக் கூவவும் நான் தயங்க மாட்டேன்.

புலிநகக் கொன்றை தமிழின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு குடும்பத்தின் கதையை சட்டகமாக வைத்து 1870களிலிருந்து 1970கள் வரை தமிழக அரசியலில் வெவ்வேறு கட்டங்களில் ஓங்கி நின்ற சித்தாந்தங்களை விவரிக்கும் அரசியல் நாவல் இது. அதிலும் நெருக்கடி நிலை காலத்தில் போலீசிடம் சிக்கி இறக்கும் நம்பி பாத்திரம் மறக்க முடியாதது.

கலங்கிய நதி நாவலில் காந்தி ஒரு பாத்திரமாக இல்லை. ஆனால் அது காந்தியைப் பற்றிய நாவல்தான். காந்திக்கு மிக அருகே நம்மை கொண்டு செல்கிறார்.

மேற்கத்திய ஓவியங்கள் அவருடைய முக்கியமான அபுனைவு. பாலாஜி அதைப் பற்றி விவரமாகப் பேசப் போகிறார்.

இருவரையும் படித்திருப்பீர்கள் என்று முன்னால் சொன்னேன். அப்படிப் படிக்கவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இனிமேல்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் இப்படி அணுகுவது உங்களுக்கு சுலபமாக இருக்கலாம்.

ஜெயமோகனின் நாவல்களில் ஏழாம் உலகத்திலிருந்தோ வெள்ளை யானையிலிருந்தோ ஆரம்பிக்கலாம். அங்கிருந்து நான் பரிந்துரைக்கும் வரிசை: காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை. எனக்கு பர்சனலாக கஷ்டமாக இருந்த, ஆனால் உயர்ந்த படைப்பு – வெண்முரசு வரிசையில் வந்த நீலம்.

நான் பரிந்துரைக்கும் பத்து சிறுகதைகள்.
<

  1. மாடன் மோட்சம்
  2. ஊமைச்செந்நாய்
  3. படுகை
  4. திசைகளின் நடுவே
  5. வணங்கான் (பகுதி 1, பகுதி 2)
  6. அறம்
  7. யானை டாக்டர்(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)
  8. பித்தம்
  9. அவதாரம்
  10. லங்காதகனம்

அபுனைவுகள்
இன்றைய காந்தி
அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகள் (புத்தகமாக வந்ததா என்று தெரியவில்லை)

பட்டியல்கள்:
சிறந்த தமிழ் நாவல்கள்
சிறந்த தமிழ் சிறுகதைகள்
ஜெயமோகன் இந்தப் பட்டியல்களைப் போட்டு பதினைந்து வருஷம் ஆகிவிட்டது, நீங்கள் இவற்றை update செய்ய வேண்டும்.

பிஏகே
புலிநகக் கொன்றை
கலங்கிய நதி
மேற்கத்திய ஓவியங்கள்

தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கு காடு, புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகியவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

இந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள். இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தை ஆழ்ந்து அனுபவிப்பவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். மிக சுவாரசியமான பேச்சாளர்கள்

ஜெயமோகன் தன் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் ஊர் சுற்றுவதும் மட்டுமே என்று வாழ்பவர். பிஏகே இவற்றில்தான் மும்முரமாக இருக்கிறார், ஆனால் இதுதான் என் வாழ்வின் குறிக்கோள் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்