பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் ‘பழைய பாதைகள்’

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு. ஒரிஜினல் பதிவு இங்கே.

hemachandranநான் வளர்ந்து வந்த காலத்தில் கம்யூனிசம் – குறைந்த பட்சம் சோஷலிசம் – கவர்ச்சிகரமான அரசியல் தத்துவம். ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்றால் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பதின்ம வயதுகளிலேயே இது வேலைக்காகாத அரசியல் தத்துவம் என்று தோன்றிவிட்டது. தனி மனித உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையைக் காக்காத எந்த சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் பழைய பாதைகள் போன்ற கதைகளைப் படிக்கும்போது சொத்துரிமையை தூக்கிப் பிடிப்பதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. என் இளமைப் பருவத்தில் கம்யூனிசத்துக்கு இருந்த கவர்ச்சியும் என்னவென்று புரிகிறது. காந்தீய வழி, அகிம்சை எல்லா நேரத்திலும் சரிப்படாது என்பதும் தெரிகிறது.

பழைய பாதைகள் அறம் சிறுகதைகளோடு தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. ஹேமசந்திரன் போன்ற ஆளுமைகள் நம்மூர் அரசியலில் அருகிக் கொண்டே போகிறார்கள்.

கதை மிகவும் எளிமையானது. ஊரின் (பழைய) பெருந்தலையின் வயல்களை கொஞ்சமாவது அழித்துத்தான் ரோடு போட முடியும். பெருந்தலை தடுக்கிறார். ஹேமசந்திரன் மண்வெட்டியை எடுத்து வந்து வயலை வெட்டி பாதை உருவாக்குகிறார். அவ்வளவுதான் கதை.

ஹேமசந்திரன் பாதை அமைப்பதற்காக ஊருக்கு வரும் காட்சி அருமையானது. சகாவு பஸ்ஸில் வந்து இறங்குகிறார். பீடி பிடிக்கிறார். பிறகு டீ. ஒரு மண்வெட்டியை இரவல் வாங்கிக் கொண்டு நடக்கிறார். அவர் பின்னால் பலதரப்பட்ட ஜாதியினரின் கூட்டம் மெதுமெதுவாக சேர்கிறது. எந்தத் தயக்கமும் இல்லாமல் வயலை வெட்டுகிறார். ஓடி வந்து அவரை மிரட்டும் பெருந்தலையிடம் பாதை இங்கேதான், என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் பாதை மேல் கை வைத்தால் தலை இருக்காது என்கிறார்.

ஜெ.எச். உரக்கக் கூவினார் ‘டேய்….டேய் தம்பி…இதோ இந்த ரோடு இங்கதான் கிடக்கும். உனக்கு சங்கிலே ஊற்றம் இருந்தா இதிலே மண்வெட்டியாலே ஒரு வெட்டு வெட்டிப்பாரு…டேய், எந்தப்போலீஸும் பட்டாளமும் காவல் நின்றாலும் உன்னை தேடிவந்து வெட்டுவோம். உன் வீட்டு முற்றத்திலே உன்னை வெட்டிப் போடுவேன்…இந்தா நூறுபேரு கேக்கத்தான் இதைச் சொல்லுதேன்…’

தம்பிசார் விழுந்துவிடுவார் போலிருந்தது. நல்லவேளையாக ஊன்றிநடக்கும் குடை வைத்திருந்தார். தள்ளாடியபடி அவர் போய் மறைந்தார். சிலநிமிடங்கள் வரை அனைவரும் வாய் பிளந்து பார்த்து நின்றார்கள். சட்டென்று பொன்னுமணிக்கிழவர் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கூச்சலிட்டார். மொத்தக்கூட்டமும் ‘ஜே’ என்று கூச்சலிட்டது.

உன்னை வெட்டிப் போடுவேன் என்றவரை வாழ்த்த காந்திக்கு ஜே போடுவது கவிதை. இதில் எந்த முரணும் இல்லை என்பது இந்தியர்களுக்குத்தான் புரியும்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி: பழைய பாதைகள் சிறுகதை

சிறுகதை பரிந்துரை: ம்ருகமோக்ஷம்

வல்லினம் இதழில் படித்த சிறுகதை.

படிக்கப் படிக்க இந்தக் கதை எங்கே போகிறது என ஆர்வத்தை பெருக வைத்து கதை. கொஞ்சம் புதிரான கதைதான். தத்துவ விசாரத்தில் எல்லாம் எனக்கு பெரிதாக ஆர்வமில்லைதான், ஆனால் பிடித்து நிறுத்தி படிக்க வைத்த கதை.

மிருகங்களின் மனதில் என்ன ஓடுகிறது? எங்கள் வீட்டு செல்லப் பிராணியான தோருக்கு இறந்த காலம் பற்றி ஏதாவது பிரக்ஞை உண்டா? அவன் எங்களை எல்லாம் சற்று பெரிய நாய்கள் என்றுதான் நினைக்கிறானா? படிக்கப் போயிருக்கும் என் பெண்கள் ஆறு மாதம் கழித்து திரும்பி வந்தால் அவர்களை நினைவிருக்குமா? ஆறு மாதம் அவர்கள் இல்லை என்பது தெரியுமா?

இறப்புக்கு அருகே சென்ற அனுபவங்கள் (Near Death Experience) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உடலுக்கு வெளியே இருப்பது, இருட்டு, வெளிச்சம், மீண்டும் உடலுக்குள் நுழைதல் என்று பல வித உணர்வுகளை அப்படி அனுபவப்பட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கருக்களையும் கலந்து ஒரு அருமையான கதையை உருவாக்கி இருக்கிறார். சில பல பிராணிகளுடன் ஏதோ உறவு கொண்ட மனிதன் (எஜமானன்) இறக்கும்போது எப்படியோ அவர்கள் மனதைத் தொட்டுவிடுகிறான், அவர்களின் உலகம் விரிவடைகிறது. திடீரென்று மனித மனம், அதன் விசாலம் பற்றி அவற்றுக்கு பிரக்ஞை ஏற்படுகிறது. அதற்குப் பின் நாயும் பன்றியும் குதிரையும் குரங்கும் பிராணியாகவும் இருக்க முடியவில்லை, மனிதனாகவும் இருக்க முடியவில்லை. இடைவிடாத தேடல். மோட்சம், பிரம்மம் எல்லாம் கோடி காட்டப்படுகின்றன.

அந்தத் தேடலை சித்தரிப்பதில்தான் இந்த சிறுகதை வெற்றி பெறுகிறது. எழுதிய விஜயகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

அசோகமித்ரன் காப்பி அடித்த சிறுகதை – மீள்பதிவு

அசோகமித்ரனின் புனைவுகளில் பிரயாணம் என்ற சிறுகதை ஒரு உச்சம். அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. அதைப் பற்றி இன்று ஜெயமோகனும் குறிப்பிட்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த சிறுகதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள்.

அசோகமித்ரன் ஒரு ஜீனியஸ். அவருடைய எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. (பாவம் டல்பதடோ கதையில் என்னதான் சொல்ல வருகிறார்? பதினெட்டாவது அட்சக்கோடு கதையின் பாயின்ட் என்ன?) ஆனால் புரியும்போது மண்டையில் விளக்கு எரிகிறது, டங்டங் என்று மணி அடிக்கிறது. இந்த பிரயாணம் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் வேக வேகமாக படிப்பேன், ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் படிப்பவன் அல்லன். கடைசி வரிகளை படிக்கும்போது, ஊம்ம்? வாட்? என்று கேள்வி, மீண்டும் அந்த வரிகளைப் படித்தேன். வாத்யாரே, நீ மேதை! என்று தோன்றியது.

ஆனால் இதே மாதிரி ஒரு கதையை ஆங்கிலத்தில் படித்த நினைவும் வந்தது. கதையின் பெயர் The Boarded Window. எழுதியவர் அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce). அசோகமித்ரன் காப்பி அடித்தாரா இல்லையா என்று தெரியாது. அவருக்கும் அதே கற்பனை வந்திருக்கலாம். இல்லை காப்பியே அடித்திருந்தாலும் அக்கறை லேது, ஏனென்றால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதி இருக்கிறார். At the worst, you can say Asokamithran “transcreated”. “மறுபடைப்பு” என்பது காப்பி இல்லை. (பின்னே தலைப்பு ஏன் அசோகமித்ரன் காப்பி அடித்த கதை என்று இருக்கிறது என்று கேட்கிறீர்களா? எல்லாம் உங்கள் கவனத்தைக் கவரத்தான். :-))

பொதுவாக இப்படிப்பட்ட காப்பி, இல்லை ஒரே மாதிரி கரு உள்ள புனைவுகள் தமிழில் சுட்டிக் காட்டப்படுவதில்லை. கல்கி பிரேம்சந்தின் ஒரு கதையை – சால்ட் இன்ஸ்பெக்டர் என்று நினைக்கிறேன் – அதை புது ஓவர்சியர் என்ற பேரில் அப்படியே இறக்குமதி செய்திருக்கிறார்; புதுமைப்பித்தன் கல்கி காப்பி அடித்த கதைகள் என்று ஒரு பட்டியலே போட்டிருக்கிறார். சுஜாதா நோபல் பரிசு வென்ற நக்யுப் மஃபூஜின் ஒரு கதையை ஸ்ரீரங்கத்து கதையாக மாற்றி இருக்கிறார். இவை சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் – அதுதான் நேர்மையான அணுகுமுறை என்பது மட்டுமல்ல; தழுவி எழுதப்பட்ட கதையிலும் எவ்வளவு ஒரிஜினாலிடி இருக்கிறது என்பதும் தெரியும்.

பியர்சின் கதையை (ஆங்கிலத்தில்) கீழே கொடுத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை கிடையாது என்று நினைக்கிறேன், பியர்ஸ் மறைந்து நூறு வருஷம் இருக்கும். (அதாவது அசோகமித்திரன் பிறப்பதற்கு முன்னாலேயே பியர்ஸ் மறைந்துவிட்டார்.)

The Boarded Window by Ambrose Bierce

In 1830, only a few miles away from what is now the great city of Cincinnati, Ohio, lay a huge and almost endless forest.

The area had a few settlements established by people of the frontier. Many of them had already left the area for settlements further to the west. But among those remaining was a man who had been one of the first people to arrive there.

He lived alone in a house of logs surrounded on all sides by the great forest. He seemed a part of the darkness and silence of the forest, for no one had ever known him to smile or speak an unnecessary word. His simple needs were supplied by selling or trading the skins of wild animals in the town.

His little log house had a single door. Directly opposite was a window. The window was boarded up. No one could remember a time when it was not. And no one knew why it had been closed. I imagine there are few people living today who ever knew the secret of that window. But I am one, as you shall see.

The man’s name was said to be Murlock. He appeared to be seventy years old, but he was really fifty. Something other than years had been the cause of his aging.

His hair and long, full beard were white. His gray, lifeless eyes were sunken. His face was wrinkled. He was tall and thin with drooping shoulders – like someone with many problems.

I never saw him. These details I learned from my grandfather. He told me the man’s story when I was a boy. He had known him when living nearby in that early day.

One day Murlock was found in his cabin, dead. It was not a time and place for medical examiners and newspapers. I suppose it was agreed that he had died from natural causes or I should have been told, and should remember.

I know only that the body was buried near the cabin, next to the burial place of his wife. She had died so many years before him that local tradition noted very little of her existence.

That closes the final part of this true story, except for the incident that followed many years later. With a fearless spirit I went to the place and got close enough to the ruined cabin to throw a stone against it. I ran away to avoid the ghost which every well-informed boy in the area knew haunted the spot.

But there is an earlier part to this story supplied by my grandfather.

When Murlock built his cabin he was young, strong and full of hope. He began the hard work of creating a farm. He kept a gun – a rifle – for hunting to support himself.

He had married a young woman, in all ways worthy of his honest love and loyalty. She shared the dangers of life with a willing spirit and a light heart. There is no known record of her name or details about her. They loved each other and were happy.

One day Murlock returned from hunting in a deep part of the forest. He found his wife sick with fever and confusion. There was no doctor or neighbor within miles. She was in no condition to be left alone while he went to find help. So Murlock tried to take care of his wife and return her to good health. But at the end of the third day she fell into unconsciousness and died.

From what we know about a man like Murlock, we may try to imagine some of the details of the story told by my grandfather.

When he was sure she was dead, Murlock had sense enough to remember that the dead must be prepared for burial. He made a mistake now and again while performing this special duty. He did certain things wrong. And others which he did correctly were done over and over again.

He was surprised that he did not cry — surprised and a little ashamed. Surely it is unkind not to cry for the dead.

“Tomorrow,” he said out loud, “I shall have to make the coffin and dig the grave; and then I shall miss her, when she is no longer in sight. But now — she is dead, of course, but it is all right — it must be all right, somehow. Things cannot be as bad as they seem.”

He stood over the body of his wife in the disappearing light. He fixed the hair and made finishing touches to the rest. He did all of this without thinking but with care. And still through his mind ran a feeling that all was right — that he should have her again as before, and everything would be explained.

Murlock had no experience in deep sadness. His heart could not contain it all. His imagination could not understand it. He did not know he was so hard struck. That knowledge would come later and never leave.

Deep sadness is an artist of powers that affects people in different ways. To one it comes like the stroke of an arrow, shocking all the emotions to a sharper life. To another, it comes as the blow of a crushing strike. We may believe Murlock to have been affected that way.

Soon after he had finished his work he sank into a chair by the side of the table upon which the body lay. He noted how white his wife’s face looked in the deepening darkness. He laid his arms upon the table’s edge and dropped his face into them, tearless and very sleepy.

At that moment a long, screaming sound came in through the open window. It was like the cry of a lost child in the far deep of the darkening forest! But the man did not move. He heard that unearthly cry upon his failing sense, again and nearer than before. Maybe it was a wild animal or maybe it was a dream. For Murlock was asleep.

Some hours later, he awoke, lifted his head from his arms and listened closely. He knew not why. There in the black darkness by the side of the body, he remembered everything without a shock. He strained his eyes to see — he knew not what.

His senses were all alert. His breath was suspended. His blood was still as if to assist the silence. Who — what had awakened him and where was it!

Suddenly the table shook under his arms. At the same time he heard, or imagined he heard, a light, soft step and then another. The sounds were as bare feet walking upon the floor!

He was afraid beyond the power to cry out or move. He waited—waited there in the darkness through what seemed like centuries of such fear. Fear as one may know, but yet live to tell. He tried but failed to speak the dead woman’s name. He tried but failed to stretch his hand across the table to learn if she was there. His throat was powerless. His arms and hands were like lead.

Then something most frightful happened. It seemed as if a heavy body was thrown against the table with a force that pushed against his chest. At the same time he heard and felt the fall of something upon the floor. It was so violent a crash that the whole house shook. A fight followed and a confusion of sounds impossible to describe.

Murlock had risen to his feet. Extreme fear had caused him to lose control of his senses. He threw his hands upon the table. Nothing was there!

There is a point at which fear may turn to insanity; and insanity incites to action. With no definite plan and acting like a madman, Murlock ran quickly to the wall. He seized his loaded rifle and without aim fired it.

The flash from the rifle lit the room with a clear brightness. He saw a huge fierce panther dragging the dead woman toward the window. The wild animal’s teeth were fixed on her throat! Then there was darkness blacker than before, and silence.

When he returned to consciousness the sun was high and the forest was filled with the sounds of singing birds. The body lay near the window, where the animal had left it when frightened away by the light and sound of the rifle.

The clothing was ruined. The long hair was in disorder. The arms and legs lay in a careless way. And a pool of blood flowed from the horribly torn throat. The ribbon he had used to tie the wrists was broken. The hands were tightly closed.

And between the teeth was a piece of the animal’s ear.

பியர்சின் கதை நான் எழுதும் கதை மாதிரி இருக்கிறது. கடைசி வரிகள் கிடைத்துவிட்டன, அந்த வரிகளை நோக்கி போகிறார், பில்டப் எல்லாம் அவ்வளவு சரியாக வரவில்லை. ஆனால் அசோகமித்ரன் கனகச்சிதமாக, ஒரு வரி அதிகம் இல்லாமல், ஒரு வரி குறைவாகவும் இல்லாமல் கதையை செதுக்கி இருக்கிறார். கதையின் இறுதியில் அய்யய்யோ என்று மனம் பதறுவது அவர் கதையில்தான் நடந்தது. பியர்சின் கதையில் அட, நல்ல முடிவு என்று தோன்றியது, அவ்வளவுதான்.

இரண்டையும் படித்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் கதைகளை எப்படி ஒப்பிடுவீர்கள்?

பிற்சேர்க்கை: உங்களுக்கு நினைவு வரும் காப்பிகளைப் பற்றி சொல்லுங்களேன்! (காப்பியும் படிக்கிற மாதிரி இருக்க வேண்டும். :-))

அசோகமித்திரன் இந்தக் கதையைப் பற்றி சொல்வது:

கதை மூலம் நான் என்ன சொல்ல முயற்சி செய்திருக்கிறேன் என்று அன்று விளங்கவில்லை. இன்று புரிகிறது: எவ்வளவு உயரிய குரு கிடைத்தாலும், சீடன் எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் வாழ்க்கை சில தருணங்களில் அவனுக்கு முழுப்பயனை அளிக்க மறுத்துவிடுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன், தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் (மீள்பதிவு)

எம்.வி. வெங்கட்ராமின் இந்த கதையை அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அற்புதமான, மிகவும் powerful கதை. மன அழுத்தத்தை, அப்படி மன அழுத்தம் தரும் சூழ்நிலையை சித்தரிப்பதில் இதை விட அருமையான சிறுகதையை நான் படித்ததில்லை. நான் கதையைப் பற்றி எதையும் எழுதி உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. நேராக கதைக்கே போய்விடுங்கள்!

ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த கதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், எம்விவி பக்கம்

தமிழின் முதல் சிறுகதை – வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்

குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் சிறுகதையாக கருதப்படுகிறது. இதை மறுக்கலாம், பரமார்த்த குரு கதைகளைக் கூட அப்படி சொல்லலாம். ஆனால் சிறுகதை என்ற வடிவம் இந்தக் கதையோடுதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. சிம்பிளான, மிகை உணர்ச்சிக் கதை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய கதைதான். தாகூரின் சிறுகதை ஒன்றின் தழுவி அல்லது அந்த சிறுகதையின் கருவையே வேறு மாதிரி படைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தாகூரின் சிறுகதை – காடேர் கதா (Ghater Katha) – எனக்கு படிக்கக் கிடைக்கவில்லை, ஆனால் அதன் கதைச்சுருக்கத்தைப் பார்த்தால் வேறாகத்தான் தெரிகிறது. அதிலும் தாகூரின் கதையில் ஆற்றின் படித்துறை கதை சொல்வதும் ஐயரின் கதையில் குளத்தங்கரை அரசமரம் கதை சொல்வதும்தான் ஒற்றுமை என்றால் இதை ஒரிஜினல் படைப்பாகத்தான் கருத வேண்டும். ஆனால் இந்தக் கதையின் ஒரு முன்னோடி வங்காள சிறுகதையின் சாயல் தெரிகிறதுதான்.

ஐயர் முன்னோடி. எழுத்து, பத்திரிகைகள், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம் என்று பல துறைகளில் ஈடுபட்டிருக்கிறார். சேரன்மாதேவி குருகுலத்தைப் பற்றி என் எண்ணங்களை என்றாவாது எழுத வேண்டும். அவரைப் பற்றி பெ.சு. மணி, டி.எஸ்.எஸ். ராஜன் எழுதிய புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்.

மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதைத் தொகுப்பில்தான் இந்தச் சிறுகதை இடம் பெற்றதாம். அந்த சிறுகதைத் தொகுப்பை க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் பரிந்துரைத்த நினைவிருக்கிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையும் மெலோட்ராமா என்றாலும் இன்னும் படிக்கக் கூடியதுதான். தொகுப்பு 1917-இல் வெளிவந்ததாம், ஆனால் இந்தச் சிறுகதை அதற்கு முன்பே ஏதோ ஒரு பத்திரிகையில் – 1915-இல் வெளிவந்திருக்கிறது.

புதுமைப்பித்தன் இந்தச் சிறுகதையோடு வ.வே.சு.ஐயர் யுகம் பிறக்கிறது என்கிறார். இதைவிட என்ன சொல்லிவிட முடியும்?

ஐயர் ஒரு fascinating ஆளுமை. அவரைப் பற்றி பல புத்தகங்கள் வந்திருந்தாலும் பெ.சு. மணியின் வ.வே.சு. ஐயர்: அரசியல்-இலக்கியப் பணிகள் புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

நான் கதையை விவரிக்க எல்லாம் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்! ஓவர் டு ஐயர்!


பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த அயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்து மரம். இப்போ தொண்ணூறு நூறு வருஷமிருக்கும். உங்கள் கொள்ளுப்பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்தங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூடக் கூட்டிக் கொண்டு வருவார்கள். பட்டுப் பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளைக் கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக் கொண்டு அழகாக ஸ்நாநம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்து கொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளைப் பார்த்துச் சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்து குளத்தங்கரை, யெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லால் பட்டுப் போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன் புஷ்பங்களைப் பொறுக்கி ஆசையுடன் மோந்துப் பார்க்கும்… ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் என்ன ஆசையாயிருக்கிறது!

ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாகயிருக்கும் போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்றுப் போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் நெத்தியில் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும்காலும் தாமரைத்தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள்அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விலாசம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமத்த நீல ஆகாசம் ஞாபத்துக்கு வரும். அவள் நீரோடையைப் பார்ப்பது போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோம வார அமாவாசைகளில் பரமாத்வைப் பூஜிக்கிறதற்காக என்னைப் பிரதஷிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தையை?

அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுதான் போவார். நம்மூர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக் கண்டதும் உடனே முரட்டுத் தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும்.

குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுமே ஆசை. ஆனால் அவள் வந்துவிட்டால் போதும். மெய்மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்குக் குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தைக் காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான். ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா? ஊரிலுள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிருந்தது அவளிடத்தில்.

அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் ‘நம்ம ருக்மிணி அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்’ என்று உடனே வாங்கிக் கொண்டு வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கு அவளுடைய அலங்காரத்துக்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! என்ன ஏர்வை! கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது எனக்கு! அவள் குரலைப் பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக்கம்பி போல இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ரைகளின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடனும் நயத்துடனும் என் மனசில் கேட்கிறது.

அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும் போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான்வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லாத் தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில்விட அதிகமான பக்ஷம் பாராட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள் கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலே அவள் கண்ணில் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகுவதை எத்தனை தடவைகளில் எட்டிப் பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதைவிட அதிகமாகவே பிச்சை போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது.

இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்துவந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வைச்ச ஆசை பழுதாய்ப் போகணுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு?

ருக்மணிக்குப் பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்மூர் மணியம் ராமஸ்வாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்குக் கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் ஸர்வாலங்காரத்துடனும் கிராமப் பிரதஷிணம் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும். அத்தனை அழகாயிருந்தது! அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததைப் பார்க்கும்போது மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே. அந்த மாதிரியே தான் இருந்தது.

காமேசுவரையர் ருக்மிணிக்குக் கல்யாணப் பந்தலில் நிறையச் சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்பத் திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டு போய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்குத் தலை பின்னிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப்போகும்போது அவளை அழைச்சுக்கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகலவிதமாகவும் ஜானகி, (அதுதான் ருக்மணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபினமாத்தைக் காட்டி வந்தாள். மாப்பிளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும் ருக்மணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில் அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செல்வத்திலும் சரியான இணை என்று நினைக்காதவர், பேசிக் கொள்ளாதவர் கிடையாது.

இப்படி மூணு வருஷ காலம் சென்றது. அந்த மூணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சிப் போய்விட்டது. ரொக்க ஐவேஜியெல்லாம் ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம். அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்மூர்ப் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள் தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துத்தான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்க்க வேண்டியாதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க்காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே. இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. “ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக்கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மணியும் ஆயுஸோடு இருக்கிற வரையில் எனக்கு ஒரு குறைச்சலுமில்லை. இந்தத் தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக் கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக் கொண்டே எங்கள் காலத்தைக் கழித்து விடுகிறோம்” என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்?

காமேசுவரையர் ஐவேஜியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டது ராமஸ்வாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமேசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக் கண்டால் பத்து நிமிஷம் நின்று பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதைக் கண்டுவிட்டால், ஏதோ அவசர காரியமாகப் போகிறது போல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாகப் போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலே நீங்கள் நினைத்துக் கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெருங்குவதை நிறுத்திவிட்டாள். ஆனாள் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது, உறவு கொண்டாடுகிறது. அது போய் விட்டபோது வேத்து மனுஷாள் போலப் போய் விடுகிறது. இதெல்லாம் ஒரு சிநேகத்தோடு சேர்த்தியா?

ஆனால் அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்து நாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிடானதும், ருக்மணியை அழைத்துக்கொண்டு வரும்படி வேலைக்காரியை அனுப்பி விடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலை பின்னி, மைச்சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக் கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால் அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்ட பிறகு வந்த முதல் வெள்ளிக் கிழமையன்னைக்கே, “எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்” என்றாள். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக் கூட நிறுத்திவிட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கம் மிகுந்த துக்கத்தைத் தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா நம்ப மாமியார் கூட என்று மிகவும் வருத்தப்பட்டாள்.

இப்படி கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் குசுகுசு என்று பேசிக் கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலேதான். ஆனால் அரை வார்த்தையுங் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயொழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை. எனக்கு மனசு குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. என்னவோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு, என்ன, என்று மாத்திரம் தெரியவில்லை.

கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்ததையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய்ச் சமாசாரம் என் மனசுக்கு அத்துப்படியாச்சு. ராமஸ்வாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சு போய்விட்டது. குழந்தை ருக்மிணியைத் தள்ளிவைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதைக் கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும் விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்திலே ஈ ஆடாது, எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பானாருக்குக் கேட்கணுமா?

இனிமேல் நாகராஜனைப் பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விட்டது. தாயார் தகப்பனார் அவன் மனதைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங் கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கதி அதோகதிதான் என்று நினைத்துவிட்டேன்.

தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்திப் பெண்ணாம். தகப்பானருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்தப் பெண்ணைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். காலாக்கிரமத்தில் ராமஸ்வாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்துச் சேர்த்துவிடுமாம். இதெல்லாம் எனக்குக் கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.

இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருகிறதில்லை. சூரியோதயத்து முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டுத் தீர்த்தம் எடுத்துக் கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்றாவியாயிருக்கம். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோ என்று வாழ்ந்துவிட்டு, இந்தக் கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடுவாசல் போய்விட்டதே என்றாவது, நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக் கொண்டிருக்கும் படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளி போல் குழந்தை அகத்திலிருக்க, ஜானகி அதன்பேரில் கொஞ்சமேனும் இரக்கம் வைக்கமால் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணி வைக்க நினைத்துவிட்டாள் பார்த்தாயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்!

அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந் தெரியாது. அறியாத குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒருவேளை மாமியார் நம்மைக் கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்ன நினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்கமாட்டான் என்று நினைத்தாளோ? இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளத்தங்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகும் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்! அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள்.

ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜன் மனதில் மாத்திரம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காலம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவு கூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாயிருப்பான்.

கடைசியாக நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிகையும் வாசித்துவிட்டுப் போய்விட்டார்கள். ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேசுவர ஐயருக்கு எப்படி இருந்திருக்குமோ! மீனாட்சிக்கு மனசு எப்படித் துடித்ததோ! ருக்மிணி எப்படிச் சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குத்தான் தெரியும்.

நாகராஜனுக்குக் கூட துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது, பார்த்தையா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானா என்று கூடச் சொல்லிவிடுவேன். இப்படி என் மனசு தளும்பித் தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தாப்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூடப் படித்துக் கொண்டு இருந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனைப் பார்க்கிறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே? நம்ம குளத்தங்கரைதானே?

ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்டாட்டி இருக்க, வேறு பெண்ணை கல்யாணம் பண்ணக் கொள்ளப் போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதி விட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்து விட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி இதெல்லாம் வாஸ்தவம்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், “அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்ட போது நான் மாட்டேன் என்று சொன்னால்தான் தீரப் போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார், லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்ச ரூபாய் சொத்துச் சேருமாம். இப்படி தானே வருகிற சீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?” என்று சொன்னான்.

இந்த வார்த்தையெல்லாம் சொல்லும்போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்லுவது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு, “எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?” என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லும் கரையும்படியாக ருக்மிணிகாகப் பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும். க்ஷேமமாக இருக்க வேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன்.

ஆனால் அவன் பேசியானதும் நாகராஜன் அவனைப் பார்த்து, “ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாகப் போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியமால் வைத்துக் கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குத் தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம் இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது, இவர்களெல்லாம் ஆரியத்தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியதென்று நிச்சயித்துவிட்டேன். நான் எத்தனை மறுத்தும் அப்பாவும் அம்மாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள. ஆகையால் மன்னார்கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப்படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமங்கலியத்தில் நான்தானே முடிச்சப் போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்த சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சி தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா?” என்று சொல்லி முடித்தான்.

“ஆனால் நீ விவாகத்துக்கென்று போகும் காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?” என்று ஸ்ரீவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், “யோசித்தேன். ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்கனையெல்லாம் மணப் பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன் என்று நான் சொல்லும் காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப் பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான்.

“அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக் கொண்டிருக்கும்? நினைத்துப் பார்” என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், “இன்னும் ஐந்து நாளில்லை. இன்று வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப் போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்த நாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா?” என்றான். “என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது” என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை.

அன்னைக்கு ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. பார்த்தையா, நாகராஜனை வையக்கூட செய்தேனே பாவி, “அவனைப் போலே ஸத்புத்திரன் உண்டா உலகத்திலே” என்று சொல்லிக்கொண்டேன். இனிமேல் பயமில்லை. அஞ்சு நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன். சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லையென்று பூரித்துப் போய்விட்டேன்.

ஞாயிற்றுக்கிழமை. இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது. ஆனால் அவர்களைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுவதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுகிறவர்களும் இல்லை.

அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங் கொஞ்சம் வயித்தெரிச்சல் தானே அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையாரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள் தான் துணை.

சனிக்கிழமை ராத்திரியாச்சு. ஊரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாகக் குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங்கரைப் பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொரு தடவை பின்பக்கம் பார்த்துக்கொண்டே வந்து, கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும்போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சு கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாய்க் கவனிக்கலானேன்.

ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

எதேச்சையாய் நாகராஜன் தலையைத் தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக் கொண்டு, “ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமோ நீ?” என்று கேட்டான். “நீங்கள் இருக்கிற இடத்தில தனியாக நான் இருக்க வேண்டிய நாள் இன்னும் வரவில்லையே!” என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

கடைசியில் நாகராஜன், “இந்த வேளையில் நாம் இங்கேயிருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள். வா, அகத்துக்குப் போய்விடலாம்” என்றான். அதற்கு ருக்மிணி, “உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று இந்த ஒரு மாதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னைக்குத்தான் நேர்ந்திருக்கிறது. அதைச் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்” என்றாள். “சொல்லேன்” என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள். “எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த மூணு மாசமாய் மனசு படுகிற பாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே ஒழிய மனுஷியாளுக்குத் தெரியாது. நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரை அழித்துவிட ஆரம்பித்தால் பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது. நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான், அதில் சந்தேகமில்லை.”

இந்த வார்த்தையைப் பேசும் போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, “நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே, நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன் “ஆமாம், போகலாம் என்றுதான் இருக்கிறேன்” என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மணிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடுகிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் “அப்படியானால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்தானே?” என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், “உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? அதற்காகத்தான் அவர் பேச்சைத் தட்டாமல் புறப்படுகிறேன். ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒருநாளும் தள்ளிவிட மாட்டேன்” என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. “நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டுவிடுகிறது! நான் கவலைப்படாமலிருக்கிறது! என்னை ஒரு நாளும் கை விடமாட்டீர்கள்! ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள்! நான் சொல்லக் கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்!” என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன் என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேத்தலாம்? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையினால் மாத்திரம் அவளுக்கு ஒரு மாதிரி காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டி கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், “என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே, இப்படித்தானா பண்ணிக் கொள்ளுகிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே, உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே! என் கண்ணே இப்படி இருக்காதே, உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதயபூர்வமாகச் சொல்லுகிறேன். எனக்குப் பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க, சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது. இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது” என்று சொல்லி முடித்தான்.

ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. அவனுடைய விளையாட்டுத்தான் பெரிதாய்ப் பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும், இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே, அந்தச் சமயத்திலே, அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது குழந்தைக்கு?

அப்படி நினைத்துப்போய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப் போலே தூக்கி மார்போடே அணைத்துக் கொண்டு, “என்ன ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி. நான் என்ன செய்யட்டும்?” என்ற கருணையோடு இரங்கிச் சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்லுவேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப் போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போலே தென்பட, அவனும் பதைபதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக் கொண்டு போய், அப்பா பிழைத்தோம்டான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும்? அவன் முகம் எப்படியாகிவிடும்? அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் பிரதிபிம்பித்துக் காட்டிய அவள் மனசும்.

எல்லையில்லாத துன்பம், எல்லையில்லாத கஷ்டம், அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு “நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒண்ணுமில்லை. மன்னார்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்குச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள். இன்றோடு என தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத் துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதை நம்பிக் கொண்டு யாருக்காக உயிரை வைத்துக் கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம், உங்களை இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறது. இனி மேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள். அவள் நம் பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோது கூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக் கேட்டுக் கொள்வது” என்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். நாகராஜன் உடனே அவளைத் தரையிலிருந்து தூக்கியெடுத்து, “பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணி வைத்துவிடாதே, நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுங்கும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்றுப்போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது. வா அகத்துக்குப் போகலாம்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான்.

ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம் ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிற போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடு என்ற நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக் கொண்டிருந்தது.

தூரத்தில் பிரமாதமாக மழை பெய்து கொண்டிருந்த இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது ருக்மிணி வீட்டுக்குப் போக மனமில்லாமல் பின் வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வது மாத்திரம் கண்ணுக்குத் தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. “…பிராணன் நிற்காது… அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி… வெள்ளிக்கிழமை காலமே… ஸ்திரீகளின்… உடைந்துவிடும்… சொல்லாதே… கொடுத்து வைத்துதானே… அந்தப் பெண்ணையாவது நன்றாய் வைத்துக் கொள்ளுங்கள்… மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்… அன்றைக்குத் தெரிந்து கொள்ளுவாய்… கடைசி நமஸ்காரம்… வரையில் பொறுத்துக் கொள்…” இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும் காற்றின் அமலையிலும் மழை இரைச்சலிலும் எனக்குக் கேட்டது. மழை தாரைதாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் என் கண்ணுக்கு மறைந்து போய்விட்டார்கள்.

ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது, மழை நின்றுவிட்டது.

ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை. மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷியாள் இல்லாத குழந்தை போல ஓயாமல் கதறிக்கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது. எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டுவருகிறது.

காரணம் ஒண்ணும் தெரியவில்லையே என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும் போது மீனா, “என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது?” என்று கத்தினாள். உடனே பதட்டம் பதட்டமாய் அந்தப் பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு என்னவோ காதோடு காதாய் ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்குப் பஞ்சப் பிராணனும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா அப்பா தலையிலே கல்லைக் தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன். அதுதான் தெரியும். அப்படியே மூர்ச்சை போய்விட்டேன்.

அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்ஞை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன, வையாதே போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய்விட்டாளே என் ருக்மிணி! கீழே அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள் அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிறபோது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடா மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழைய துக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது!

இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப்போது இருந்தது. அதற்குள்ளே, “நாகராஜன் வரான், நாகராஜன் வரான்” என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம் நிஜந்தான். அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்து கொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகைச் செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், “ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!” என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம் கப் என்று அடங்கிப்போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் மூர்ச்சை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து, விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்ஞை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்திலே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தைப் பார்த்து, “என்னுடைய எண்ணமத்தனையும் பாழாக்கிவிட்டு ஜூலியெத் மாதிரி பறந்தோடிப் போய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய்ப் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலை செய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகசியம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்தக் கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசன்… ஸத்ய: பாதி ப்ரணயி ஹருதயம் என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி! நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!” என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்தரீயத்தையும் அப்படியே தாறாய்க் கிழித்துவிட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்.

இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டு விடும் என்று யாரால் சொல்ல முடியும்?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், எழுத்துக்கள்

பவா செல்லதுரை சிறுகதைகள்

என் பள்ளி நாட்களில் நான் வசித்த கிராமம் மானாம்பதி. உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில் இருக்கிறது. அந்தக் காலத்தில் நெசவாளர் கிராமம். நிறைய பேர் வீட்டில் தறி இருக்கும். வறண்ட கிராமம்தான். வீடுகளில் கிடைக்கும் கிணற்றுத் தண்ணீர் கொஞ்சம் உப்பாக இருக்கும். ஏரி உண்டு, ஆனால் அனேகமாக தண்ணீர் இருக்காது. அருகில் ஓடும் செய்யாறு நதியிலும் தண்ணீரைப் பார்த்ததில்லை. ஊரிலிருந்து காஞ்சிபுரம் போகும் சாலையிலேயே இரண்டு மைல் நடந்தால் அது வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை சந்திக்கும். அந்த சந்திப்பை – கூட்ரோடு என்று சொல்லுவோம் – தாண்டினால் இன்னும் வறண்ட குன்றுகள் இருக்கும். நெடுங்கல் என்று பேர். ஓணானும் அரணையும் சில சமயம் ஓரிரு உடும்புகளும்தான் தென்படும். ஒரு குகை இருந்தது, அதற்குள் ஒரு முறை போயிருக்கிறோம். கூட வந்த தெய்வசிகாமணி குகையின் கூரையில் ஒரு மலைப்பாம்பைப் பார்த்ததாக சொன்னதால் அடுத்த முறை உள்ளே போக யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.

பவா செல்லதுரை பல வருஷங்களுக்குப் பிறகு அந்த வறண்ட நிலப்பரப்பை நினைவு கூர வைக்கிறார். இவர் வாழும் திருவண்ணாமலையும் இப்படிப்பட்ட நிலப்பரப்புதானோ என்னவோ. எனக்குத் தெரிந்து இந்த நிலப்பரப்பை, இந்த கிராமங்களை எழுதும் ஒரே எழுத்தாளர் இவர்தான். அதற்காகவே இவரைக் கொண்டாட வேண்டும். கண்மணி குணசேகரனும் எக்பர்ட் சச்சிதானந்தமும் இந்த உலகத்தை – ஆனால் வேறு வகைகளில் காட்டுகிறார்கள். அவர்கள் எழுத்தில் தெரிவது சமூகநிலை. இவர் எழுத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் தெரிவது அந்த நிலம்.

பவாவின் பெயர் அவ்வப்போது இலக்கிய நண்பர்கள் பற்றி எழுத்தாளர்கள் பேசும்போது அடிபடும். பல எழுத்தாளர்களோடு அவருக்கு உள்ள நட்பு, இலக்கிய வாசிப்பை ஊக்குவிக்க அவர் எடுக்கும் முயற்சிகள், (எழுத்தாளர் சந்திப்புகள், உரைகள் ஏற்பாடு செய்வது) அவரது விருந்தோம்பல், வம்சி பதிப்பகம், அவரது மனைவி ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகள் என்று பலதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் அவரது எழுத்துக்களை ஓரளவு மங்கவைத்துவிட்டனவோ என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

பவாவின் இரண்டு கதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன – ஏழுமலை ஜமா மற்றும் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள். எஸ்.ரா.வின் பட்டியலில் இவர் கதைகள் இடம் பெறவில்லை.

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். வேட்டை, பச்சை இருளன், சத்ரு கதைகளுக்காகத்தான் இவரை கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

மற்றவற்றில் ஏழுமலை ஜமா நல்ல சிறுகதை. கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது.

ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் எனக்கு புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்ற கதைகளைப் படிக்கலாம். படித்தே ஆக வேண்டியவை அல்ல.

பவாவின் சில சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: பவாவின் தளம்

துப்பறியும் சாம்பு

(மீள்பதிவு)

கிளாசிக். தேவனின் புத்தகங்களில் இதுதான் மிகவும் பிரபலமானது. ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஆகிய மூன்றும் தேவன் புத்தகங்களில் கட்டாயமாக படிக்க வேண்டியவை.

கதை தெரிந்ததுதான். ஒரு சாதாரண டெம்ப்ளேட் – காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்கள். அந்த மாதிரி அடி முட்டாள் சாம்பு முட்டாள்தனமாக எதையாவது செய்ய, அது ஒவ்வொரு முறையும் வொர்க் அவுட் ஆகிவிடுகிறது. இந்த டெம்ப்ளேட்டை ஐம்பது முறை போரடிக்காமல் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். ஒவ்வொரு கதையிலும் சாம்புவின் முட்டாள்தனத்தையும், அது எப்படியோ குற்றவாளியை கண்டுபிடிப்பதையும் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். இன்றைக்கும், இந்த ஜெனரேஷனுக்கும் கூட கதைகள் அப்பீல் ஆகின்றன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, பாப் இசை கேட்கும், அமெரிக்க டீனேஜர்கள் பற்றிய புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படிக்கும் என் (அப்போதைய) 12 வயதுப் பெண்ணுக்கு “இஷ்டம் போல் பிரயாணம்” என்ற கதையை சொன்னேன் – அவள் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்! அதுதான் தேவனின் வெற்றி.

என்னுடைய ஃபேவரிட் கதைகள்:

  1. தேடி வருகிறது கவுரவம்
  2. மைசூர் யானை
  3. தலைக்கு வந்தது
  4. வேஷம் பலித்தது
  5. குறட்டையும் கொட்டாவியும்
  6. தேடி வந்த தனம்
  7. மடையன் செய்கிற காரியம்
  8. தலைக்கு மேல் வெள்ளம்
  9. சிங்காரம் ஐ.சி.எஸ்.
  10. அதிர்ஷ்டம் துரத்துகிறது
  11. இஷ்டம் போல் பிரயாணம்
  12. பச்சை வைரம்
  13. சங்கராபுரம் மகாராஜா
  14. கோட்டையூர் கோமளம்
  15. காணமற்போன கணவன்
  16. சுந்துவின் சிறுகதை

காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது. அவருக்கு முன்னால் நடராஜன் என்று ஒருவர் நடித்ததாகவும் அவர் சாம்பு நடராஜன் என்றே புகழ் பெற்று விளங்கியதாகவும் தெரிகிறது.

ஒய்.ஜி. மகேந்திரன் சாம்புவாக டிவி சீரியலில் நடித்திருக்கிறாராம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். ஆனால் தேவனின் கதைகள் எதுவும் அதில் பயன்படுத்தப்படவில்லை.

நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே.

தேவனின் பரம ரசிகரான பசுபதி சாம்புவைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். சில கதைகளை ராஜு ஆகியோர் வரைந்த சித்திரங்களுடனேயே ஸ்கான் செய்து பதித்திருக்கிறார். திரை எழும்புகிறது, சித்ரசேனா நாடக சபை ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.

மேலும் தென்றல் பத்திரிகையில் பங்களா மர்மம் என்ற சிறுகதையைப் படிக்கலாம்.

ஒரே ஒரு வருத்தம்தான். ஐம்பதோடு நிறுத்திவிட்டாரே, இன்னும் எழுதி இருக்கலாமே!

கட்டாயமாக படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன்

தொடர்புடைய பதிவுகள்:
தேவன் மரணம் – விகடன் தலையங்கம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை விமர்சனம்

பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் ‘பழைய பாதைகள்’

hemachandranநான் வளர்ந்து வந்த காலத்தில் கம்யூனிசம் – குறைந்த பட்சம் சோஷலிசம் – கவர்ச்சிகரமான அரசியல் தத்துவம். ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்றால் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பதின்ம வயதுகளிலேயே இது வேலைக்காகாத அரசியல் தத்துவம் என்று தோன்றிவிட்டது. தனி மனித உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையைக் காக்காத எந்த சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இது போன்ற கதைகளைப் படிக்கும்போது சொத்துரிமையை தூக்கிப் பிடிப்பதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. என் இளமைப் பருவத்தில் கம்யூனிசத்துக்கு இருந்த கவர்ச்சியும் என்னவென்று புரிகிறது. காந்தீய வழி, அகிம்சை எல்லா நேரத்திலும் சரிப்படாது என்பதும் தெரிகிறது.

பழைய பாதைகள் அறம் சிறுகதைகளோடு தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. ஹேமசந்திரன் போன்ற ஆளுமைகள் நம்மூர் அரசியலில் அருகிக் கொண்டே போகிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

நேஷனல் புக் ட்ரஸ்டுக்காக அசோகமித்ரன் 1960-80 காலகட்டத்தில் எழுதப்பட்ட 16 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார். இது ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல்:

  1. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  2. அம்பை – மிலேச்சன்
  3. ஆதவன் – நிழல்கள்
  4. வண்ணநிலவன் – எஸ்தர்
  5. சார்வாகன் – உத்தியோக ரேகை
  6. இந்திரா பார்த்தசாரதி – தொலைவு
  7. நீல. பத்மநாபன் – சண்டையும் சமாதானமும்
  8. ஆ. மாதவன் – நாயனம்
  9. சுஜாதா – நகரம்
  10. சா. கந்தசாமி – ஒரு வருடம் சென்றது
  11. நாஞ்சில் நாடன் – ஒரு இந்நாட்டு மன்னர்
  12. வண்ணதாசன் – தனுமை
  13. கி. ராஜநாராயணன் – நாற்காலி
  14. ஆர். சூடாமணி – அந்நியர்கள்
  15. ஜெயந்தன் – பகல் உறவுகள்
  16. அசோகமித்ரன் – காலமும் ஐந்து குழந்தைகளும்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், அசோகமித்ரன் பக்கம்

பா.ராகவனின் ஓரினச்சேர்க்கை பின்புலச் சிறுகதை

pa_raghavanசமீபத்தில் பா.ரா. எழுதிய சிறுகதை ஒன்றைப் பற்றி – இறுதிச் சடங்கு – நண்பர்களுக்குள் காரசாரமான விவாதம் நடந்தது.

வழக்கம் போல பாலாஜிதான் ஆரம்பித்தார். சுட்டி கொடுத்துவிட்டு பா.ரா. என்ன சொல்ல வராருன்னு ஒண்ணும் தெரியாத சின்னப்பிள்ளை மாதிரி எங்கள் எல்லாரையும் கேட்டார். முத்துகிருஷ்ணனின் பதில்:

there is no “reveal” in the story due to the last line. Pun not intended. 🙂 Actually I thought “Ramachandran” unzipped his pants…I was super confused. Then understood “he” un zipped. So I was back to normal confused.

பாலாஜி: ஓரினச் சேர்க்கையாளர்கள் செக்ஸ் வெறியர்கள், துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் என்கிறார் பா.ரா. இது சுத்த மடத்தனம்.

முகின்: இது அவனுடைய முதல் இரவும் கூட.

பாலாஜி: என்னது? சுய இன்பத்தில் ஈடுபடுவது முதலிரவா?

முகின்: கதையில் உடல் ரீதியான பந்தம் மனதுக்கும் வந்தது என்று வருகிறது, இது அவன் மனதளவில் முதலிரவாக இருக்கக் கூடும்.

ஆர்வி: நீங்கள் இருவரும் ஏன் ஓரினச் சேர்க்கையாளர்களின் செக்ஸ் வெறி துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் சுய இன்பத்தில் ஈடுபட வைக்கும் என்று பா.ரா. சொல்கிறார் என்ற முடிவுக்கு வருகிறீர்கள்? பிரியமான மனைவி/கணவன்/அம்மா/அப்பா/மகன்/மகள் பிணம் எரிக்கப்படவில்லை, ஆனால் இந்த பாழும் வயிறுக்கு பசிக்குதே என்ற அழுகையை நான் சில முறை நேராகவே கேட்டிருக்கிறேன், அந்த அழுகுரலைப் பற்றி நிறைய முறை எழுதப்பட்டு அது ஒரு தேய்வழக்காகவே (cliche) ஆகிவிட்டது. பா.ரா. அந்த கருவை இன்னும் நீட்டுகிறார், அவ்வளவுதான். ஜெயகாந்தன் கணவன் பிரியமான மனைவி இறந்த சில நாட்களுக்குள்ளேயே மறுமணம் செய்து கொள்வதாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார், கதை பேர் நினைவு வரவில்லை…

முகின்: ஆனால் பசியும் காமமும் வேறுவேறு.

ஆர்வி: வேறு என்றால் வேறுதான்; காமம் வாழ்வின் அடிப்படை உந்துவிசை என்று பார்க்கும்போது ஒன்றேதான். இது வாழ்க்கையின் சாதாரண சம்பவமாகக் கூட இருக்கலாம். நெருக்கமானவர் பிணம் கிடக்கும்போதும் – நல்ல காஃபியின் மணம் எச்சிலை ஊற வைக்கலாம்; கிரிக்கெட்/டென்னிஸ்/ஃபுட்பால் மாட்சில் என்ன நடக்கிறது என்று நாம் நின்று பார்க்கலாம்; ஃபேஸ்புக்கில் ஏதாவது அப்டேட் வந்திருக்கிறதா என்று செக் செய்யலாம். பா.ரா. அப்படிப்பட்ட செயல்களின் முரண்பாட்டை (irony) காட்டவும் இதை எழுதி இருக்கலாம். எதை நினைத்து எழுதினார் என்பது வாசகன் தேர்வு. இது ஓரினச்சேர்க்கையாளர்களின் குணம் என்று அவர் சொல்ல வரவில்லை என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.

பாலாஜி: ஆர்வி, இந்தக் கதையில் உங்களுக்கு ஹோமோஃபோபியா தெரியவில்லையா? ஆண்-பெண் உறவு என்றால் அது உடலுறவிலிருந்து மனரீதியான பந்தத்துக்கு சென்றது என்று எழுதுவாரா? இதையே ஏன் ஒரு கணவன் மனைவி இறந்துகிடக்கும்போது சுயஇன்பம் காண்பதாக எழுதி இருக்கக்கூடாது? ஓரினச்சேர்க்கை பின்புலத்தை எதற்காக கொண்டு வந்திருக்கிறார்? ஓரினச்சேர்க்கை உறவு என்பது உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லாமல் சொல்லத்தானே?

ஆர்வி: இதையே நான் வேறு விதமாகக் கேட்கிறேன். இது அப்படியே மாற்றி ஒரு கணவன் சுயஇன்பம் காண்கிறான் என்று எழுதப்பட்டிருந்தால் நீங்கள் ஆண்-பெண் உறவு என்பது உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் ஓரினச்சேர்க்கை அப்படி அல்ல என்று உணர்ந்திருப்பீர்களா?

அருணகிரி: ஆண்-பெண் என்றால் அந்தக் கணவன் ஒரு pervert என்று நினைத்திருப்போம். ஓரினச்சேர்க்கையும் ஆண்-பெண் உறவும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது சமூகத்தால் ஏற்கப்படவில்லை. பா.ரா.வின் முந்தைய எழுத்துக்களை வைத்தும் அப்படி சொல்ல முடியாது. அப்படி இல்லாதபோது இந்தச் சிறுகதை ஓரினச்சேர்க்கையாளர்களை தாழ்த்துவதாகத்தான் பொருள் கொள்ள முடியும்.

முகின்: முரண்பாடு (irony) என்று வைத்துக் கொள்ள முடியவில்லை, அந்தக் கோணம் வலுவாக வெளிப்படவில்லை.

அருணகிரி: அமெச்சூர்தனமான எழுத்து வேறு.

ஆர்வி: அருணகிரி, நம் கோணங்களில் உள்ள அடிப்படை வித்தியாசம் – இந்த நிலையில் சுயஇன்பம் என்பதை நான் perversion ஆகக் கருதவில்லை, நீங்கள் கருதுகிறீர்கள். இது அபூர்வமாக இருக்கலாம், ஆனால் மனித இயல்பே. மேலும் இது புனைவுலகம். பா.ரா. முன்னால் என்ன எழுதினார் என்பதைப் பற்றி நமக்கென்ன? அவர் ஓரினச்சேர்க்கையாளர்களை தாழ்த்தி வேறு ஒரு சிறுகதை எழுதி இருக்கலாம். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு கதையையும் அதன் தனி உலகத்துக்குள்தான் படிக்க வேண்டும்.

அருணகிரி: எதையுமே மனித இயல்பு என்று சொல்லிவிடலாம்.

பாலாஜி: பா.ரா. மறைமுகமாக ஓரினச்சேர்க்கையாளர்களைத் தாக்குகிறார். ஓரினச்சேர்க்கை உடல் ஆசைகளால் மட்டுமே ஏற்படுவது, அதனால்தான் துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் இவனால் சுயஇன்பத்தில் ஈடுபடமுடிகிறது என்று எழுதுகிறார். இப்படி ஆண்-பெண் உறவைப் பற்றி அவர் எழுதமாட்டார். இது obvious ஆகத்தானே இருக்கிறது, உங்களுக்குப் புரியவில்லையா ஆர்வி?

ஆர்வி: எனக்கு obvious ஆக இல்லை, அவர் எழுத்தில் இல்லாததை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

பாலாஜி: வரிகளுக்குள் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ஆர்வி!

இசைவு வரப்போவதில்லை என்று இங்கே நிறுத்திக் கொண்டோம். இந்தக் கதையைப் படித்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாலாஜியைப் போல மறைமுகத் தாக்குதல் என்றா? இல்லை என்னைப் போல அடிப்படை மனித விழைவைப் பற்றி என்றா? யாருடைய கோணம் பொதுவாக அப்பீல் ஆகிறது என்று பார்க்க ஆவல்…

பிற்சேர்க்கை: நவம்பர் 22 வரை 18 பேர் தாழ்த்துகிறார்கள், 14 பேர் அப்படி இல்லை, 12 பேர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை என்கிறார்கள். இரண்டு கோணமும் ஏறக்குறைய சமமாக பாப்புலராக இருக்கிறது. ஆனால்:

பா.ரா. இரண்டுமில்லை, இது அவன் தன் துணைவனுக்காக நடத்தும் இறுதிச் சடங்கு என்கிறார். எழுத்தாளன் முக்கியமே இல்லை, வாசகன் அவன்(ள்) இஷ்டத்துக்குப் படித்துக் கொள்கிறான்(ள்) என்ற என் எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்