இன்று என் பிறந்த நாள். என்ன வயது என்று சொல்லப் போவதில்லை. பிறந்த நாள் அன்று ஏதாவது தத்துவம், பொன்மொழி எதையாவது உதிர்க்க வேண்டும். எங்கே போவது?
ஆர்கடி ரென்கோ நாவல்கள் எனக்கு பிடித்தமானவை. இந்த சீரிசில் சமீபத்தில் வெளிவந்த ரென்கோ நாவலான Siberian Dilemma (2019) நாவலைப் படித்தேன். சோகம் என்னவென்றால் நாவல் பெரிதாக சுகப்படவில்லை. ஆனால் Dilemma-வின் விளக்கம் மிக நன்றாக இருந்தது, வாழ்க்கைக்கு சரியான ஒன்று. கைகொடுத்த மார்டின் க்ரஸ் ஸ்மித் வாழ்க!
என் paraphrasing:
சைபீரியாவின் உறைந்த ஏரிகளில் ஐஸ் மீது நடந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதுண்டு. சில சமயம் ஐஸ் உடைந்துவிடும், தண்ணீரில் விழுந்துவிடுவார்கள். தண்ணீரிலிருந்து வெளியே வந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நிமிஷத்திற்குள்ளாக உடல் உறைந்துவிடும், thermal shock-இல் இறந்துவிடுவார்கள். தண்ணீருக்குள் இருந்தால் ஐந்து நிமிஷத்தில் hypothermia-வில் இறப்பார்கள். எது பெட்டர்?
The question really is this: is it better to live with the status quo even if the situation is horrible, or is it better to try something, howsoever hopeless the situation is? In my younger days, I would have definitely said given that both situations are hopeless, choose the one that gives you a longer time. I now think that action, howsoever hopeless it is, is a much better option.
அதாவது வெளியே வருவதுதான் பெட்டர். ஏதாவது நடக்கலாம் ஒரு சின்ன வாய்ப்பாவது இருக்கிறது. ஒரு வேளை அவர்கள் ஓடினாலோ அல்லது வேறுவிதமாக உடலை இயக்கினாலோ அல்லது மருத்துவ வசதிகள் இருந்தாலோ பிழைக்க ஒரு minuscule வாய்ப்பிருக்கிறது. தண்ணீருக்குள் இருந்தால் மரணத்தை தடுக்க எந்த வாய்ப்புமில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒரிஜினல் பதிவு கீழே…
Martin Cruz Smith உருவாக்கிய ஆர்கடி ரென்கோ (Arkady Renko) எனக்கு பிடித்த காரக்டர்களில் ஒருவர். கம்யூனிஸ்ட் ரஷியாவில் உயர்மட்ட ஜெனரலின் மகன். சீரிஸ் ஆரம்பிக்கும்போது அவர் மாஸ்கோ போலீசில் முக்கிய அதிகாரி. நேர்மையானவர், யாருக்கும் வளைந்து கொடுக்கமாட்டார். வளைந்து கொடுப்பது என்று இல்லை, வேண்டுமென்றே அதிகாரத்தில் உள்ளவர்களை தான் துப்பறியும் கேசுக்காக எதிர்த்துக் கொள்வார். அதாவது ஜெயலலிதா மேல் கேஸ், இவர் துப்பறிகிறார் என்றால் சரியான சமயத்தில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள மாட்டார், வேண்டுமென்றே குடைச்சல் கொடுப்பார்.
ஆர்க்கடியின் பாத்திரப் படைப்பு சில cliche-க்கள் உள்ளது. இருந்தாலும் ரசிக்கக் கூடியது. அவருக்கு ரஷியா மேல் இருக்கும் உண்மையான பற்று, அவருடைய உயர்ந்த மனிதத்தன்மை (noble nature), முக்கியமாக விடாக்கண்டனாக இருப்பது இந்தக் கதைகளை உயர்த்துகிறது. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் போலார் ஸ்டார் கதையை சிபாரிசு செய்வேன். இரண்டு கதைகள் என்றால் கார்க்கி பார்க் மற்றும் போலார் ஸ்டார்.
இந்த சீரிஸில் வந்த நாவல்களைப் பற்றி கீழே.
Gorky Park, 1981: ஆர்க்கடி ஏற்கனவே ஒரு கேஜிபி கர்னலை முறைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது மாஸ்கோவில் நல்ல பனிக்காலத்தில் ஒரு பார்க்கில் மூன்று பிணங்கள். ஏதோ கேஜிபியோடு தொடர்பு இருப்பது தெரிகிறது. விடாக்கண்டன் போலத் துப்பறிகிறார். திருமணம் முறிகிறது. காதல் ஏற்படுகிறது. ஒரு powerful அமெரிக்கனை எதிர்க்கிறார். அவரது திமிர்+நேர்மை அவருக்கு எதிரியாக இருந்த கேஜிபி கர்னலையே அவருக்காக வாதிட வைக்கிறது. நல்ல த்ரில்லர். வில்லியம் ஹர்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.
Polar Star, 1989: எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். ரென்கோவை போலீசிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவர் இப்போது ஆர்க்டிக் கடலில் மீன் பிடிக்கும் கப்பல் ஒன்றில் மீனை சுத்தம் செய்யும் வேலை. கப்பலில் ஒரு கொலை, ரென்கோ துப்பறிய வேண்டி இருக்கிறது. மனிதர் கலக்குகிறார்! கொஞ்சம் கூட அதிகாரமே இல்லாத நிலை, ஆனால் எப்போதும் தான் கண்ட்ரோலில் இருப்பது போலவே நடந்து கொள்கிறார்.
Red Square, 1992: சோவியத் யூனியன் கவிழ்ந்துவிட்டது. ஆர்க்கடிக்கு மீண்டும் மாஸ்கோ போலீசில் வேலை. ஒரு கறுப்பு மார்க்கெட் ஆளைத் தேடும்போது மலேவிச் வரைந்த ரெட் ஸ்க்வேர் என்ற ஓவியத்தைப் பற்றி க்ளூ கிடைக்கிறது. தன் காதலியோடு இணைகிறார். ஆனால் ட்ராஜடியாக கதை முடிகிறது.
Havana Bay, 1999: இந்தக் கதை நடப்பது க்யூபாவில். பெரிதாக விவரிக்க முடியவில்லை, படித்துக் கொள்ளுங்கள்.
Wolves Eat Dogs, 2004: இந்தக் கதை நடப்பது அணு உலை வெடித்த செர்னோபிலில். ரஷியாவின் புதிய பில்லியனர்களில் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அதற்கான விடை செர்னோபில் அணு உலை விபத்தில் இருக்கிறது.
Stalin’s Ghost, 2005: ஸ்டாலின் ஆவி மாஸ்கோ ரயில் நிலையங்களில் தோன்றுகிறது! துப்பறியப் போகும் ஆர்க்டி செசன்யா போரில் சண்டை போட்டவர்கள், பல கொலைகள் எல்லாவற்றுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கிறார்.
3 Stations, 2010: சுமார்தான். ஆர்கடிக்கு பேருக்கு மட்டும் மாஸ்கோ போலீசில் வேலை. அவரது மேலதிகாரி எப்படி இந்த ஆளை வேலையை விட்டு தூக்கலாம் என்று பார்க்கிறார். ஒரு 15 வயதுப் பெண், விபசார விடுதியிலிருந்து தன் 3 வார குழந்தையோடு தப்பி வருகிறாள். மாஸ்கோவுக்கு வரும்போது அவள் குழந்தை திருட்டுப் போய்விடுகிறது. அவளுக்கு துணையாக ஜென்யா. குரூரமான ஒரு கொலை நடந்திருக்கிறது. கேசை மூடுங்கப்பா என்று எல்லாரும் சொன்னாலும் ஆர்கடி அதை விடாமல் துப்பறிகிறார். ஒரு பில்லியனர் சூதாட்ட விடுதி முதலாளி தர்ம ஸ்தாபனம் என்று சொல்லி பணத்தை திருடிக் கொண்டிருக்கிறான். ஆர்கடி எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறார்.
Tatiana, 2013:சுமார்தான். இந்த முறை மாஃபியா கும்பல் தலைவன் இறக்கிறான்; ஒரு மொழிபெயர்ப்பாளன் இறக்கிறான்; ஒரு crusading பத்திரிகையாளர் “இறக்கிறாள்”. எல்லாவற்றுக்கும் என்ன தொடர்பு என்று ஆர்கடி கண்டுபிடிக்கிறார்.
தொகுக்கப்பட்டம் பக்கம்: த்ரில்லர்கள்
37.523851
-122.047324
Like this:
Like ஏற்றப்படுகின்றது...