மராத்தி எழுத்தாளருக்கு ஞானபீடம்

bhalchandra_nemadeமராத்திய எழுத்தாளர் பாலசந்திர நெமடே 2014க்கான ஞானபீடம் பரிசை வென்றிருக்கிறார்.

நெமடே தன் முதல் நாவலான கோசலாவை 1963-இல் எழுதினார். தனது சுயசரிதையையே புனைவாக எழுதி இருக்கிறாராம். பிறகு பிதர் (1975), ஹூல், ஜரிலா, ஜூல் (1979), ஹிந்து ஜக்ன்யாசி சம்ருத்த அட்கல் (2010) போன்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.

இதற்கு முன் சாஹித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். 2011-இல் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

நான் நெமடே என்ற பேரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்கள் யாருக்காவது ஏதாவது தெரியுமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: நெமடே பேட்டி