பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் ‘பழைய பாதைகள்’

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு. ஒரிஜினல் பதிவு இங்கே.

hemachandranநான் வளர்ந்து வந்த காலத்தில் கம்யூனிசம் – குறைந்த பட்சம் சோஷலிசம் – கவர்ச்சிகரமான அரசியல் தத்துவம். ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்றால் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பதின்ம வயதுகளிலேயே இது வேலைக்காகாத அரசியல் தத்துவம் என்று தோன்றிவிட்டது. தனி மனித உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையைக் காக்காத எந்த சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் பழைய பாதைகள் போன்ற கதைகளைப் படிக்கும்போது சொத்துரிமையை தூக்கிப் பிடிப்பதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. என் இளமைப் பருவத்தில் கம்யூனிசத்துக்கு இருந்த கவர்ச்சியும் என்னவென்று புரிகிறது. காந்தீய வழி, அகிம்சை எல்லா நேரத்திலும் சரிப்படாது என்பதும் தெரிகிறது.

பழைய பாதைகள் அறம் சிறுகதைகளோடு தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. ஹேமசந்திரன் போன்ற ஆளுமைகள் நம்மூர் அரசியலில் அருகிக் கொண்டே போகிறார்கள்.

கதை மிகவும் எளிமையானது. ஊரின் (பழைய) பெருந்தலையின் வயல்களை கொஞ்சமாவது அழித்துத்தான் ரோடு போட முடியும். பெருந்தலை தடுக்கிறார். ஹேமசந்திரன் மண்வெட்டியை எடுத்து வந்து வயலை வெட்டி பாதை உருவாக்குகிறார். அவ்வளவுதான் கதை.

ஹேமசந்திரன் பாதை அமைப்பதற்காக ஊருக்கு வரும் காட்சி அருமையானது. சகாவு பஸ்ஸில் வந்து இறங்குகிறார். பீடி பிடிக்கிறார். பிறகு டீ. ஒரு மண்வெட்டியை இரவல் வாங்கிக் கொண்டு நடக்கிறார். அவர் பின்னால் பலதரப்பட்ட ஜாதியினரின் கூட்டம் மெதுமெதுவாக சேர்கிறது. எந்தத் தயக்கமும் இல்லாமல் வயலை வெட்டுகிறார். ஓடி வந்து அவரை மிரட்டும் பெருந்தலையிடம் பாதை இங்கேதான், என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் பாதை மேல் கை வைத்தால் தலை இருக்காது என்கிறார்.

ஜெ.எச். உரக்கக் கூவினார் ‘டேய்….டேய் தம்பி…இதோ இந்த ரோடு இங்கதான் கிடக்கும். உனக்கு சங்கிலே ஊற்றம் இருந்தா இதிலே மண்வெட்டியாலே ஒரு வெட்டு வெட்டிப்பாரு…டேய், எந்தப்போலீஸும் பட்டாளமும் காவல் நின்றாலும் உன்னை தேடிவந்து வெட்டுவோம். உன் வீட்டு முற்றத்திலே உன்னை வெட்டிப் போடுவேன்…இந்தா நூறுபேரு கேக்கத்தான் இதைச் சொல்லுதேன்…’

தம்பிசார் விழுந்துவிடுவார் போலிருந்தது. நல்லவேளையாக ஊன்றிநடக்கும் குடை வைத்திருந்தார். தள்ளாடியபடி அவர் போய் மறைந்தார். சிலநிமிடங்கள் வரை அனைவரும் வாய் பிளந்து பார்த்து நின்றார்கள். சட்டென்று பொன்னுமணிக்கிழவர் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கூச்சலிட்டார். மொத்தக்கூட்டமும் ‘ஜே’ என்று கூச்சலிட்டது.

உன்னை வெட்டிப் போடுவேன் என்றவரை வாழ்த்த காந்திக்கு ஜே போடுவது கவிதை. இதில் எந்த முரணும் இல்லை என்பது இந்தியர்களுக்குத்தான் புரியும்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி: பழைய பாதைகள் சிறுகதை

பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் ‘பழைய பாதைகள்’

hemachandranநான் வளர்ந்து வந்த காலத்தில் கம்யூனிசம் – குறைந்த பட்சம் சோஷலிசம் – கவர்ச்சிகரமான அரசியல் தத்துவம். ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்றால் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பதின்ம வயதுகளிலேயே இது வேலைக்காகாத அரசியல் தத்துவம் என்று தோன்றிவிட்டது. தனி மனித உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையைக் காக்காத எந்த சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இது போன்ற கதைகளைப் படிக்கும்போது சொத்துரிமையை தூக்கிப் பிடிப்பதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. என் இளமைப் பருவத்தில் கம்யூனிசத்துக்கு இருந்த கவர்ச்சியும் என்னவென்று புரிகிறது. காந்தீய வழி, அகிம்சை எல்லா நேரத்திலும் சரிப்படாது என்பதும் தெரிகிறது.

பழைய பாதைகள் அறம் சிறுகதைகளோடு தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. ஹேமசந்திரன் போன்ற ஆளுமைகள் நம்மூர் அரசியலில் அருகிக் கொண்டே போகிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

ஜெயமோகன் சிறுகதை – “பழைய பாதைகள்”

சகாவு ஹேமசந்திரன் பற்றி ஒரு பிரமாதமான சிறுகதை. சின்ன கோட்டுச்சித்திரத்தின் மூலம் ஒரு பெரிய ஆளுமையை புலப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரி நிஜ ஆளுமைகளை வைத்து எழுதுவதில் ஜெயமோகனை மிஞ்ச ஆளில்லை. அறம் சீரிஸ் சிறுகதைகள், இரு கலைஞர்கள் சிறுகதை என்று சொல்லிக் கொண்டே போகலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்