தலைசிறந்த 10 புத்தகங்களை பட்டியல் இடுங்களேன்?
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- புறநானூறு
- சிலப்பதிகாரம்
- பெரியார் ஈவேரா சிந்தனைகள்
- அண்ணா எழுதிய பணத்தோட்டம்
- கார்க்கியின் தாய்
- நேருவின் உலக வரலாறு
- அண்ணல் காந்தியின் சத்திய சோதனை
- ராகுல் சாங்கிருத்தியாவின் வால்கா முதல் கங்கை வரை
திருக்குறளும் தொல்காப்பியமும் புறநானூறும் சிலப்பதிகாரமும் ஈவேரா சிந்தனைகளும் சரிதான்; ஆனால் பணத்தோட்டம்! அது வடஇந்தியர், இல்லை இல்லை பனியா வெறுப்பைத் தவிர வேறு எதையும் முன்வைக்கவில்லை. அண்ணாவிடம் இவருக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? நேருவை காலம் முழுவதும் எதிர்த்தவர், நேருவின் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது வியப்புதான். சத்தியசோதனையே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது…
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
- வால்கா முதல் கங்கை வரை
- வால்கா முதல் கங்கை வரையில் ஒரு சிறுகதை – பிரவாஹன்