ஜெயமோகன் உண்மை ஆளுமைகளின் வாழ்க்கையை கருவாக வைத்து எழுதும் சிறுகதைகள் பல சமயம் மிகச் சிறப்பாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக அறம் சிறுகதைகள்.
அந்த வரிசையில் இன்னுமொரு சிறுகதை இச்சாமதி. இந்த முறை பிபூதிபூஷன் பந்தோபாத்யாய். கதை பெரிதாக சுவாரசியப்படவில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன், கடைசி இரண்டு மூன்று பாராவில் அட அப்படியா என்று தோன்ற வைத்தார், பிபூதிபூஷனின் வாழ்வைப் பற்றி விக்கிபீடியாவில் தேட வைத்துவிட்டார். அறம் சிறுகதைகளை விட என் கண்ணில் ஓரிரு மாற்று குறைவுதான், இருந்தாலும் நல்ல சிறுகதை.
படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: இச்சாமதி சிறுகதை