சாஹித்ய அகடமி விருது பெற்ற காஷ்மீர எழுத்தாளர்: அக்தர் மொஹியுதின்

அக்தர் மொஹியுதின் காஷ்மீரி மொழியின் முதல் நாவலை – தோட் டாக் – எழுதியவர். 1958-இல் சாஹித்ய அகடமி விருதை வென்றிருக்கிறார். 1968-இல் பத்மஸ்ரீ விருது.

அவருடைய சில சிறுகதைகள் இணையத்தில் கிடைத்தன. நாலு கதையை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் என் கண்ணில் சுமாரான எழுத்தாளரே. விருது எல்லாம் அதிகப்படிதான். ஆனால் ஒரு சிறுகதை – சிறுகதை கூட அல்ல, அதன் முதல் பகுதி எனக்குப் பிடித்திருந்தது. 1958-இல் ஷேக் அப்துல்லா சிறைப்படுத்தப்பட்டு காஷ்மீரில் அரசு அடக்குமுறை ஆரம்பித்திருக்கிறது. இவர் நேரில் பார்த்த அல்லது கேட்ட சம்பவம் என்று நினைக்கிறேன், அதை சிறப்பாக வடித்திருக்கிறார். அந்தப் பகுதியை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் முழுக் கதையையும் படியுங்கள்…


I Can’t Tell (Wannun Ma Banym)

9th March 1958

It was four o’clock in the evening.

A couple of government vehicles came to Lal Chowk and stopped near the lane leading to the Court complex.

About four dozen persons wearing the uniform of Kashmir Additional Police descended from them.

The reader need not bother as to whether it was the Bihar Police, Punjab Police, Central Reserve Police(CRP), Madhya Pardesh Police, Kashmir Reserve Police, Special Police or some other Sensitive Police. Those days every Indian State had sent its forces to Kashmir to teach a lesson to the anti-national elements. Then Kashmir had its own police forces under six different names and wearing six different uniforms. That is why I only specified the uniform that the persons who descended from the vehicles were wearing.

The commuters in the Lal Chowk, the pedestrians, the cyclists, the tongawalas all started moving rapidly. The shopkeepers hurriedly disposed of the shoppers and the vendors on the pavements wrapped up their wares. The policemen on beat duty looked apathetically at the personnel of the Kashmir Additional Police (KAP).

The men of the KAP grasped their batons. Half a dozen had launchers for tear gas shells and boxes of shells slung from their shoulders. They too readied themselves. Next they arranged themselves in a file on one side of the road. They stared at the people, the shopkeepers, and the row of mynahs sitting on the gables of the  Ismail Building. The birds became more and more excited as they saw their swarthy faces and started cawing and chattering loudly as ifthey were saying: “Hey. Those in this uniform are not what they pretend to be. The commuters did not understand this shrill warning uttered by the birds and they did not reflect that the men wearing the uniform of the KAP in reality belonged to the CRP. Even if they would have understood it, they would not have realized the reason for this impersonation. The Indian rulers had resorted to this stratagem so that if per chance some news reporter saw them and wrote a report it would be the Kashmiri government which would get a bad name. The Centre would remain blameless. The people were incapable of understanding this intricate reasoning and anyway did not bother  about the warning that the mynahs gave so shrilly on their part.

The CRP men (in KAP uniform) standing in a file on one side of the road did not fit in with the peaceful condition prevailing in the market but everyone understood that something was brewing. No one could guess exactly what was brewing and how I twould pan out.

It was then that Qadir Chaan (Qadir the Carpenter) appeared from somewhere. He was the government strong-man. He had freshly shaved his head and face. He was dead drunk and his face was red. The officer in charge of the police contingent came forward and shook hands with him. Qadir Chaan staggered forward and sat down in front of the police. He gave a few puffs to a half burnt cigarette he held in his hands and then suddenly threw the cigarette bit at a pedestrian. The man looked angrily at him reddening but said nothing. He understood that it was a deeper conspiracy.

As the pedestrian took a few steps forward Qadir Chaan shouted “Bastard! Am I your father’s servant?”

The pedestrian stopped, looked back and said “What have I done? I am walking straight ahead.”

“Bastard! I threw a cigarette bit at you. Why did you not react?” shouted Qadir Chan.

“Why are you abusing me?” the pedestrian asked as the color drained out of his face. “Have you no decency?”

“The fool will talk nonsense” Qadir Chan said and suddenly grasping the pedestrian by the collar butted him with his head. The pedestrian was not hurt but his clothes were dirtied in the mud. He again tried to pacify Qadir Chan but Qadir Chan was adamant. Letting him go, Qadir Chan ran to a policeman and taking his baton from him started beating the pedestrian. A crowd assembled round them and being unable to see anything from outside I too joined the crowd of onlookers. I saw the pedestrian lying on the ground. Qadir Chan was pressing his chest with his knees and butting him like a mad bull. The pedestrian was bleeding profusely from his nose. The crowd watched silently but two women stepped forward from the pavement and tried to remove Qadir Chaan and release the pedestrian but Qadir Chaan was refusing to let him go.

The onlookers could now no longer restrain themselves. They caught hold of Qadir Chan and started pulling him away. As he refused a hot tempered person said angrily “Hey do you want to kill him?” Then he took off his pheran and caught hold of Qadir Chan.

The other onlookers surged forward to help and suddenly there was a shout “Charge”. The CRP (in KAP uniform) swung into action and started baton charging the assembled people. A scuffle ensued between the police and the crowd. The policemen beat the people with batons but the people came back and attacked the police.

The shopkeepers shut their shops, the cyclists and tongawalas moved away and Itoo came running back to the place from where I was originally watching the spectacle. The crowd remained engaged in the scuffle with the police and dispersed only after the police resorted to shelling them with tear gas.

The crowd dispersed. The shopkeepers started to reopen their shops. Some shoppers reappeared and the C R P again formed a line in front of which an officer was offering a cigarette to Qadir Chan. After some time a jeep came and Qadir Chan climbed into the jeep which drove away. The CRP too went away in the vehicles in which they had come.

Next day I again came to Lal Chowk. After aimlessly wandering around I entered a restaurant to have tea. As I seated myself my eye was arrested by a headline in an English daily which read “Blatant Hooliganism in Kashmir”

It reminded me of yesterday’s event and I picked up the paper hoping that the plight of Kashmiris had finally attracted attention.However my eyes filled with tears as I read the news item which is reproduced below:

Eyewitnesses say that a respectable person named Ghulam Qadir Chan was standing in Lal Chowk when he was attacked by some anti-national elements. He was seriously injured and has been admitted to a local hospital. But for timely action by the KAP which arrived at the scene in the nick of time and chased away the miscreants he could even have been martyred. We request the state government to take steps to exterminate these antinational elements so that the life and security of respectable law abiding citizens is ensured.

I then took up another English Daily and found the same news printed there. Four English and seven Urdu papers carried the same news. Even the editors of those papers had not thought it proper to change even a single sentence.

கதையை மொஹியுதின் மேலும் தொடர்கிறார். ஆனால் எனக்கு இரண்டு பாரா முன்னாலேயே – காதிர்சானும் காவல் துறையும் திரும்பும்போதே – கதை முடிந்துவிடுகிறது. அன்றைய சூழ்நிலையை புரிந்துக் கொள்ளத்தான் இன்னும் இரண்டு பாராவை பதித்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

ஹாரி கெமல்மன்: Nine Mile Walk

துப்பறியும் கதை வட்டாரங்களில் Nine Mile Walk ஓரளவு புகழ் பெற்ற சிறுகதை. 1947-இல் எழுதப்பட்டது.

A nine mile walk is no joke, especially in the rain

என்ற ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் ஊகிக்க முடியும்? அவ்வளவேதான் கதை.

நீங்களே யோசித்துப் பாருங்களேன் – especially என்று சொல்வதால் மழையை எதிர்பார்க்கவில்லை என்று யூகிக்கலாம். ஒன்பது மைல் ஏன் நடக்க வேண்டும்? கார், பஸ், ரயில் எதுவும் கிடையாதா? இரவு நேரத்தில் நடந்தார் என்று யூகிக்கலாம். (கதை 1947-இல் எழுதப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்) எதற்காக இரவு நேரத்தில் ஒன்பது மைல் நடக்க வேண்டும்? யோசித்துக் கொண்டே போகலாம் இல்லையா? அதுதான் இந்தக் கதையின் கவர்ச்சி.

ஹாரி கெமல்மன் ஆறேழு நிக்கி வெல்ட் கதைகளை எழுதி இருக்கிறார். துப்பறியும் கதை விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

சுஜாதா ஒரு விபத்தின் அனாடமி என்று ஒரு கணேஷ்-வசந்த் கதை எழுதி இருக்கிறார், அதுவும் இதே போல ஊகங்களால் கட்டப்பட்ட, சுவாரசியமான கதை.

கதை கீழே…


The Nine Mile Walk

by Harry Kemelman (1947)

I HAD MADE an ass of myself in a speech I had given at the Good Government Association dinner, and Nicky Welt had cornered me at breakfast at the Blue Moon, where we both ate occasionally, for the pleasure of rubbing it in. I had made the mistake of departing from my prepared speech to criticize a statement my predecessor in the office of County Attorney had made to the press. I had drawn a number of inferences from his statement and had thus left myself open to a rebuttal which he had promptly made and which had the effect of making me appear intellectually dishonest. I was new to this political game, having but a few months before left the Law School faculty to become the Reform Party candidate for County Attorney. I said as much in extenuation, but Nicholas Welt, who could never drop his pedagogical manner (he was Snowdon Professor of English Language and Literature), replied in much the same tone that he would dismiss a request from a sophomore for an extension on a term paper, “That’s no excuse.”

Although he is only two or three years older than I, in his late forties, he always treats me like a schoolmaster hectoring a stupid pupil. And I, perhaps because he looks so much older with his white hair and lined, gnomelike face, suffer it.

“They were perfectly logical inferences” I pleaded.

“My dear boy,” he purred, “although human intercourse is well nigh impossible without inference, most inferences are usually wrong. The percentage of error is particularly high in the legal profession where the intention is not to discover what the speaker wishes to convey, but rather what he wishes to conceal.”

I picked up my check and eased out from behind the table.

“I suppose you are referring to cross examination of witnesses in court. Well, there’s always an opposing counsel who will object if the inference is illogical.”

“Who said anything about logic?” he retorted. “An inference can be logical and still not be true.”

He followed me down the aisle to the cashier’s booth. I paid my check and waited impatiently while he searched in an old-fashioned change purse, fishing out coins one by one and placing them on the counter beside his check, only to discover that the total was insufficient. He slid them back into his purse and with a tiny sigh extracted a bill from another compartment of the purse and handed it to the cashier.

“Give me any sentence of ten or twelve words,” he said, “and I’ll build you a logical chain of inferences that you never dreamed of when you framed the sentence.”

Other customers were coming in, and since the space in front of the cashier’s booth was small, I decided to wait outside until Nicky completed his transaction with the cashier. I remember being mildly amused at the idea that he probably thought I was still at his elbow and was going right ahead with his discourse.

When he joined me on the sidewalk I said, “A nine mile walk is no joke, especially in the rain.”

“No, I shouldn’t think it would be” he agreed absently. Then he stopped in his stride and looked at me sharply. “What the devil are you talking about?”

“It’s a sentence and it has eleven words” I insisted. And I repeated the sentence, ticking off the words on my fingers.

“What about it?”

“You said that given a sentence of ten or twelve words…”

“Oh, yes.” He looked at me suspiciously. “Where did you get it?”

“It just popped into my head. Come on now, build your inferences.”

“You’re serious about this?” he asked, his little blue eyes glittering with amusement. “You really want me to?”

It was just like him to issue a challenge and then to appear amused when I accepted it. And it made me angry.

“Put up or shut up” I said.

“All right,” he said mildly. “No need to be huffy. I’ll play. Hmm, let me see, how did the sentence go? ‘A nine mile walk is no joke, especially in the rain.’ Not much to go on there.”

“It’s more than ten words” I rejoined.

“Very well.” His voice became crisp as he mentally squared off to the problem. “First inference: the speaker is aggrieved.”

“I’ll grant that,” I said, “although it hardly seems to be an inference. It’s really implicit in the statement.”

He nodded impatiently. “Next inference: the rain was unforeseen, otherwise he would have said, ‘A nine mile walk in the rain is no joke,’ instead of using the ‘especially’ phrase as an afterthought.”

“I’ll allow that,” I said, “although it’s pretty obvious.”

“First inferences should be obvious” said Nicky tartly.

I let it go at that. He seemed to be floundering and I didn’t want to rub it in.

“Next inference: the speaker is not an athlete or an outdoors man.”

“You’ll have to explain that one” I said.

“It’s the ‘especially’ phrase again” he said. “The speaker does not say that a nine mile walk in the rain is no joke, but merely the walk — just the distance, mind you — is no joke. Now, nine miles is not such a terribly long distance. You walk more than half that in eighteen holes of golf and golf is an old man’s game,” he added slyly. I play golf.

“Well, that would be all right under ordinary circumstances,” I said, “but there are other possibilities. The speaker might be a soldier in the jungle, in which case nine miles would be a pretty good hike, rain or no rain.”

“Yes,” and Nicky was sarcastic, “and the speaker might be one-legged. For that matter, the speaker might be a graduate student writing a Ph.D. thesis on humor and starting by listing all the things that are not funny. See here, I’ll have to make a couple of assumptions before I continue.”

“How do you mean?” I asked, suspiciously.

“Remember, I’m taking this sentence in vacuo, as it were. I don’t know who said it or what the occasion was. Normally a sentence belongs in the framework of a situation.”

“I see. What assumptions do you want to make?”

“For one thing, I want to assume that the intention was not frivolous, that the speaker is referring to a walk that was actually taken, and that the purpose of the walk was not to win a bet or something of that sort.”

“That seems reasonable enough” I said.

“And I also want to assume that the locale of the walk is here.”

“You mean here in Fairfield?”

“Not necessarily. I mean in this general section of the country.”

“Fair enough.”

“Then, if you grant those assumptions, you’ll have to accept my last inference that the speaker is no athlete or outdoors man.”

“Well, all right, go on.”

“Then my next inference is that the walk was taken very late at night or very early in the morning—say, between midnight and five or six in the morning.”

“How do you figure that one?” I asked.

“Consider the distance, nine miles. We’re in a fairly well-populated section. Take any road and you’ll find a community of some sort in less than nine miles. Hadley is five miles away, Hadley Falls is seven and a half, Goreton is eleven, but East Goreton is only eight and you strike East Goreton before you come to Goreton. There is local train service along the Goreton road and bus service along the others. All the highways are pretty well traveled. Would anyone have to walk nine miles in a rain unless it were late at night when no buses or trains were running and when the few automobiles that were out would hesitate to pick up a stranger on the highway?”

“He might not have wanted to be seen” I suggested.

Nicky smiled pityingly. “You think he would be less noticeable trudging along the highway than he would be riding in a public conveyance where everyone is usually absorbed in his newspaper?”

“Well, I won’t press the point” I said brusquely.

“Then try this one: he was walking toward a town rather than away from one.”

I nodded. “It is more likely, I suppose. If he were in a town, he could probably arrange for some sort of transportation. Is that the basis for your inference?”

“Partly that,” said Nicky,”“but there is also an inference to be drawn from the distance. Remember, it’s a nine mile walk and nine is one of the exact numbers.”

“I’m afraid I don’t understand.”

That exasperated schoolteacher-look appeared on Nicky’s face again. “Suppose you say, ‘I took a ten mile walk’ or ‘a hundred mile drive’; I would assume that you actually walked anywhere from eight to a dozen miles, or that you rode between ninety and a hundred and ten miles. In other words, ten and hundred are round numbers. You might have walked exactly ten miles or just as likely you might have walked approximately ten miles. But when you speak of walking nine miles, I have a right to assume that you have named an exact figure. Now, we are far more likely to know the distance of the city from a given point than we are to know the distance of a given point from the city. That is, ask anyone in the city how far out Farmer Brown lives, and if he knows him, he will say, ‘Three or four miles.’ But ask Farmer Brown how far he lives from the city and he will tell you ‘Three and six-tenths miles—measured it on my speedometer many a time.'”

“It’s weak, Nicky” I said.

“But in conjunction with your own suggestion that he could have arranged transportation if he had been in a city…”

“Yes, that would do it,” I said. “I’ll pass it. Any more?”

“I’ve just begun to hit my stride” he boasted. “My next inference is that he was going to a definite destination and that he had to be there at a particular time. It was not a case of going off to get help because his car broke down or his wife was going to have a baby or somebody was trying to break into his house.”

“Oh, come now,” I said, “the car breaking down is really the most likely situation. He could have known the exact distance from having checked the mileage just as he was leaving the town.”

Nicky shook his head. “Rather than walk nine miles in the rain, he would have curled up on the back seat and gone to sleep, or at least stayed by his car and tried to flag another motorist. Remember, it’s nine miles. What would be the least it would take him to hike it?”

“Four hours” I offered.

He nodded. “Certainly no less, considering the rain. We’ve agreed that it happened very late at night or very early in the morning. Suppose he had his breakdown at one o’clock in the morning. It would be five o’clock before he would arrive. That’s daybreak. You begin to see a lot of cars on the road. The buses start just a little later. In fact, the first buses hit Fairfield around five-thirty. Besides, if he were going for help, he would not have to go all the way to town—only as far as the nearest telephone. No, he had a definite appointment, and it was in a town, and it was for some time before five-thirty.”

“Then why couldn’t he have got there earlier and waited?” I asked. “He could have taken the last bus, arrived around one o’clock, and waited until his appointment. He walks nine miles in the rain instead, and you said he was no athlete.”

We had arrived at the Municipal Building where my office is. Normally, any arguments begun at the Blue Moon ended at the entrance to the Municipal Building. But I was interested in Nicky’s demonstration and I suggested that he come up for a few minutes.

When we were seated I said, “How about it, Nicky, why couldn’t he have arrived early and waited?”

“He could have,” Nicky retorted. “But since he did not, we must assume that he was either detained until after the last bus left, or that he had to wait where he was for a signal of some sort, perhaps a telephone call.”

“Then according to you, he had an appointment some time between midnight and five-thirty.”

“We can draw it much finer than that. Remember, it takes him four hours to walk the distance. The last bus stops at twelve-thirty A.M. If he doesn’t take that, but starts at the same time, he won’t arrive at his destination until four-thirty. On the other hand, if he takes the first bus in the morning, he will arrive around five-thirty. That would mean that his appointment was for some time between four-thirty and five-thirty.”

“You mean that if his appointment was earlier than four-thirty, he would have taken the last night bus, and if it was later than five-thirty, he would have taken the first morning bus?”

“Precisely. And another thing: if he was waiting for a signal or a phone call, it must have come not much later than one o’clock.”

“Yes, I see that,” I said. “If his appointment is around five o’clock and it takes him four hours to walk the distance, he’d have to start around one.” He nodded, silent and thoughtful. For some queer reason I could not explain, I did not feel like interrupting his thoughts. On the wall was a large
map of the county and I walked over to it and began to study it.

“You’re right, Nicky,” I remarked over my shoulder, “there’s no place as far as nine miles away from Fairfield that doesn’t hit another town first. Fairfield is right in the middle of a bunch of smaller towns.”

He joined me at the map. “It doesn’t have to be Fairfield, you know,” he said quietly. “It was probably one of the outlying towns he had to reach. Try Hadley.”

“Why Hadley? What would anyone want in Hadley at five o’clock in the morning?”

“The Washington Flyer stops there to take on water about that time” he said quietly.

“That’s right, too,” I said. “I’ve heard that train many a night when I couldn’t sleep. I’d hear it pulling in and then a minute or two later I’d hear the clock on the Methodist Church banging out five.”

I went back to my desk for a timetable. “The Flyer leaves Washington at twelve forty-seven A.M. and gets into Boston at eight A.M.”

Nicky was still at the map measuring distances with a pencil.

“Exactly nine miles from Hadley is the Old Sumter Inn” he announced.

“Old Sumter Inn,” I echoed. “But that upsets the whole theory. You can arrange for transportation there as easily as you can in a town.”

He shook his head. “The cars are kept in an enclosure and you have to get an attendant to check you through the gate. The attendant would remember anyone taking out his car at a strange hour. It’s a pretty conservative place. He could have waited in his room until he got a call from Washington about someone on the Flyer. Maybe the number of the car and the berth. Then he could just slip out of the hotel and walk to Hadley.”

I stared at him, hypnotized.

“It wouldn’t be difficult to slip aboard while the train was taking on water, and then if he knew the car number and the berth…”

“Nicky,” I said portentously, “as the Reform District Attorney who campaigned on an economy program, I am going to waste the taxpayers’ money and call Boston long distance. It’s ridiculous, it’s insane—but I’m going to do it!”

His little blue eyes glittered and he moistened his lips with the tip of his tongue. “Go ahead,” he said hoarsely.

I replaced the telephone in its cradle.

“Nicky,” I said, “this is probably the most remarkable coincidence in the history of criminal investigation: a man was found murdered in his berth on last night’s twelve-forty-seven from Washington! He’d been dead about three hours, which would make it exactly right for Hadley.”

“I thought it was something like that,” said Nicky. “But you’re wrong about its being a coincidence. It can’t be. Where did you get that sentence?”

“It was just a sentence. It simply popped into my head.”

“It couldn’t have! It’s not the sort of sentence that pops into one’s head. If you had taught composition as long as I have, you’d know that when you ask someone for a sentence of ten words or so, you get an ordinary statement such as ‘I like milk’ — with the other words made up by a modifying clause like, ‘because it is good for my health.’ The sentence you offered related to a particular situation.”

“But I tell you I talked to no one this morning. And I was alone with you at the Blue Moon.”

“You weren’t with me all the time I paid my check” he said sharply. “Did you meet anyone while you were waiting on the sidewalk for me to come out of the Blue Moon?”

I shook my head. “I was outside for less than a minute before you joined me. You see, a couple of men came in while you were digging out your change and one of them bumped me, so I thought I’d wait…”

“Did you ever see them before?”

“Who?”

“The two men who came in” he said, the note of exasperation creeping into his voice again.

“Why, no. They weren’t anyone I knew.”

“Were they talking?”

“I guess so. Yes, they were. Quite absorbed in their conversation, as a matter of fact. Otherwise, they would have noticed me and I would not have been bumped.”

“Not many strangers come into the Blue Moon” he remarked.

“Do you think it was they?” I asked eagerly. “I think I’d know them again if I saw them.”

Nicky’s eyes narrowed. “It’s possible. There had to be two—one to trail the victim in Washington and ascertain his berth number, the other to wait here and do the job. The Washington man would be likely to come down here afterwards. If there was theft as well as murder, it would be to divide the spoils. If it was just murder, he would probably have to come down to pay off his confederate.”

I reached for the telephone.

“We’ve been gone less than half an hour,” Nicky went on. “They were just coming in and service is slow at the Blue Moon. The one who walked all the way to Hadley must certainly be hungry and the other probably drove all night from Washington.”

“Call me immediately if you make an arrest” I said into the phone and hung up.

Neither of us spoke a word while we waited. We paced the floor, avoiding each other almost as though we had done something we were ashamed of. The telephone rang at last. I picked it up and listened. Then I said, “OK” and turned to Nicky.

“One of them tried to escape through the kitchen but Winn had someone stationed at the back and they got him.”

“That would seem to prove it” said Nicky with a frosty little smile.

I nodded agreement.

He glanced at his watch. “Gracious,” he exclaimed, “I wanted to make an early start on my work this morning, and here I’ve already wasted all this time talking with you.”

I let him get to the door. “Oh, Nicky,” I called, “what was it you set out to prove?”

“That a chain of inferences could be logical and still not be true” he said.

“Oh.”

“What are you laughing at?” he asked snappishly. And then he laughed too.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

சார்பட்டா பரம்பரை

மாறுதலுக்காக இன்று ஒரு திரைப்படத்தைப் பற்றி.

சார்பட்டா பரம்பரை சமீப காலத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் ஒன்று. விளையாட்டை பின்புலமாகக் கொண்ட நல்ல திரைப்படங்களில் ஒன்று.

படத்தின் பலம் திரைக்கதை; பின்புலம்; நடிப்பு; புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகள்; ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள்.

குத்துமதிப்பாக 1975-1977 காலத்தை பெரிய செட் எல்லாம் போடாமல் (ஒரே ஒரு மணிக்கூண்டு செட்), சிகை அமைப்பு, மீசை, ஆடைகள், சிறு திண்ணைகள் உள்ள கூரை வீடுகள் என்று திறமையாகக் கொண்டு வந்துவிட்டார்கள். குத்துச்சண்டை அரங்க செட்டும் நன்றாக இருக்கிறது.

விளையாட்டு திரைப்படங்களுக்கு அடிப்படைக் கதை ஒன்றேதான். நாயகன்/நாயகி பலவீனங்கள் உள்ள, அனேகமாக அனுபவம் இல்லாத ஒரு போட்டியாளன் – underdog. அவனு(ளு)க்கு எதிராக மிக வலுவான, உச்சியில் இருக்கும் போட்டியாளன். ஜெயிக்க வாய்ப்பே இல்லை. இதில் நாயகன்/நாயகிக்கு போட்டியிடுவதில் பல இன்னல்கள் வரும். எப்படியோ கடைசியில் நாயகன்/நாயகிக்கு வெற்றி. இதே கதையைத்தான் Rocky, Bend It Like Beckham, Tin Cup, ஜோ ஜீத்தா வொஹி சிக்கந்தர், லகான் மாதிரி எல்லா படங்களிலும் வேறு வேறு திரைக்கதைகளாகக் காட்டுகிறார்கள். பலமுள்ள கரு. தன்மீட்பு (redemption), போராட்டம் எல்லாவற்றையும் சுலபமாகக் கொண்டு வந்துவிடலாம்.

சார்பட்டா பரம்பரைக்கும் அதே மூலக்கதைதான். வடசென்னை பின்புலம். குத்துமதிப்பாக 1975-1977 காலம். நெருக்கடி நிலை இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் தி.மு.க. ஆட்சி. குத்துச்சண்டை வீரர்கள் பல குழுக்களாக – சார்பட்டா, இடியாப்பம் என்று பல பரம்பரைகள் – தீவிர போட்டியில் இருக்கிறார்கள். குத்துச்சண்டை தெரிந்தவர்கள் சுலப்மாக ரௌடிகளாக மாறமுடிகிறது. குத்துச்சண்டையில் ஆர்வம் உள்ள, ஆனால் குத்துச்சண்டையில் ஈடுபடக் கூடாது என்று அம்மாவால் தடுக்கப்பட்டிருக்கும் நாயகன் கபிலன். சார்பட்டா பரம்பரையோது தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்பவன். தி.மு.க. சார்புடைய ரங்கன் வாத்தியாருக்கு ஏகலைவன். இடியாப்ப பரம்பரையின் வேம்புலியை யாராலும் வெல்ல முடியவில்லை. வாத்தியார் கேவலப்படக் கூடாது என்று கபிலன் குத்துச்சண்டையில் இறங்குகிறான். இயற்கையாகவே நன்றாக ஆடமுடிகிறது. யாரும் எதிர்பார்க்காத முறையில் சார்பட்டா பரம்பரையின் அன்றைய முதல் வீரனான ராமனை அடித்து நொறுக்குகிறான். ரங்கன் வாத்தியார் அவனை போட்டியில் இறக்குகிறார். இடியாப்ப பரம்பரையின் முக்கிய வீரனான ரோஸை வென்றுவிடுகிறான். வேம்புலியோடு போட்டியில் வேம்புலியின் தோல்வி உறுதி என்ற நிலையில் ராமனின் சித்தப்பா ஒருவனே கலவரத்தை உண்டாக்கி போட்டியை நிறுத்துகிறான். ரங்கன் வாத்தியார் மிசாவில் சிறை செல்கிறார். ஒரு கைகலப்பில் கபிலன், ரங்கன் வாத்தியாரின் மகன் வெற்றி சிறையில். வெளியே வந்ததும் கள்ளச் சாராயம், ரௌடித்தனம், குடி என்று கபிலன் வாழ்க்கை மாறுகிறது. வேம்புலி மீண்டும் வெற்றிகளை அடைந்தாலும் கபிலனிடம் தோற்கும் நிலையில் இருந்த அவமானம் நீங்கவில்லை. மீண்டும் சவால் விடுகிறான். ஆனால் கபிலன் இன்று தொப்பையோடு குத்துச்சண்டை போடும் நிலையில் இல்லை. பழைய போட்டியாளன் ராமனே அவனை அடித்து நொறுக்குகிறான். ரங்கன் வாத்தியார் அவனுக்கு பயிற்சி தர மறுக்கிறார். எப்படியோ மீண்டும் உடல்நிலை தேறி, கடும் சண்டையில் வென்று, தன்மீட்பு (redemption)!

மூலக்கருவை கெடுப்பது சுலபம். அதுவும் இடைவேளை சமயத்திலேயே நாயகன் வெல்லும் காட்சி. அப்புறம் படத்தை எப்படித் தொடர்வது? தன்மீட்பு என்ற கருவை எப்படிக் கொண்டு வருவது? திறமையாக நெருக்கடி நிலை, கபிலனைக் கட்டுப்படுத்தக் கூடிய வாத்தியார் மிசாவில் சிறை செல்வது, கபிலன் திசை மாறுவது, நாயகனுக்கு தொப்பை விழுவது, அப்பாவின் பழைய நண்பர் பயிற்சி அளிப்பது, ஆக்ரோஷமான இறுதி சண்டை காட்சி என்று கதையை கொண்டு போயிருக்கிறார்கள். முதல் பாதியோ இரண்டாம் பாதியை விட விறுவிறுப்பானது. பாக்சிங் பக்கம் போகக் கூடாது என்று தடுக்கும் அம்மா, தற்செயலாக நடக்கும் சண்டை, மாமா மகளோடு திருமணம், டான்சிங் ரோஸ் பாத்திரம், ரோசின் உடல்மொழி, குத்துச்சண்டை பாணி, ரோசுடன் நடக்கும் சண்டை, வேம்புலியுடன் முதல் சண்டை,சார்பட்டா உள்ளிட்ட பரம்பரைகளில் வரலாறு எல்லாவற்றையும் பின்னி இருக்கிறார்கள்.

ஆர்யா தான் இனி எதற்கும் லாயக்கில்லையா என்று உடைந்து அழும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் சஞ்சனா கல்க்கிவிட்டார். அம்மாவாக வருபவரும். பசுபதி விறைப்பான உடல்மொழி, இஸ்திரி கலையாத ஜிப்பா, கரைவேட்டி, துண்டு வைத்தே சிறப்பாக நடிக்கிறார். டான்சிங் ரோசின் உடல்மொழி அபாரம். கலையரசனின் பாத்திரப் படைப்பு அருமை. அப்பாவே தனக்கு வாய்ப்பை மீண்டும் மீண்டும் மறுப்பதில் ஏற்படும் ஆங்காரம்; கள்ளச் சாராயம் என்று வாழ்க்கை திரும்பும்போது ஆர்யா தனக்கு கட்டுப்படுவதில் ஏற்படும் சிறு மகிழ்ச்சி; ஆனால் அப்பாவே மறுத்தாலும் ஆர்யாவுக்கு துணை நிற்பது என்று பல வித shades of grey உள்ள பாத்திரம். வேம்புலியின் குரு துரைக்கண்ணு வாத்தியார், போட்டிகளை நடத்தும் காளி வெங்கட், நேர்முக வர்ணனை தரும் தங்கதுரை என்று பலரும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக துரைக்கண்ணு வாத்தியாராக வருபவர்.

ஆனால் எல்லாரையும் தூக்கி சாப்பிடுபவர் ஜான் விஜய். அவரது ஆங்கிலமும் உச்சரிக்கும் விதமும் அபாரம். அடுத்தபடியாக சொல்ல வேண்டியவர் ஆர்யாவின் மனைவி சஞ்சனா; ஆர்யாவின் அம்மா; டான்சிங் ரோஸ்; பசுபதி.

பசுபதி இரண்டாம் பகுதியில் குறைந்த நேரமே வருகிறார். அதை அதிகபப்டுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்கள் என்னை பெரிதாகக் கவரவில்லை. சில சமயம் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். அந்த ரகமோ என்னவோ.

பா. ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களில் அட்டக்கத்தி திரைப்படம் அளவுக்கு வேறு எந்தப் படமும் வரவில்லை என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இதில் அதை மிஞ்சிவிட்டார்.

ரஞ்சித் தனது படங்களில் அம்பேத்கார் படம், மாட்டுக்கறி பற்றி ஒரு வரி ஆகியவற்றை குறியீடுகளாக அடிக்கடி பயன்படுத்துவார். அதை ஏன் இப்படி சின்ன குறியீட்டுக் காட்சியாக பயன்படுத்த வேண்டும், பெரிதுபடுத்தினால் படம் போரடிக்கும் என்று நினைக்கிறாரா என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. இதிலும் ஓரிரு நொடிகளே வரும் குறியீட்டுக் காட்சிகள்தான்.

ஹாலிவுட்டில் சில சமயம் திரைப்படம் வந்த பிறகு அதை நாவலாக வெளியிடுவார்கள். ரஞ்சித் இந்தத் திரைப்படத்துக்கும் அப்படி செய்யலாம். (ஆனால் ஒரிஜினல் புத்தகங்களே தமிழ் நாட்டில் விற்பது கஷ்டம்தான்…)

நல்ல திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

டி.எஸ்.எஸ். ராஜன்

வரவர எனக்கு சுதந்திரப் போராட்ட கால வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுவும் காந்தி, நேரு, படேல், போஸ், ராஜாஜி போன்ற பெருந்தலைகளை விட இரண்டாம் நிலை தலைவர்ககள் – சத்தியமூர்த்தி, ஸ்ரீனிவாச ஐயங்கார், நாரிமன், கிச்லூ, மாளவியா போன்றவர்களின் பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறையவே வந்திருக்கிறது.

டி.எஸ்.எஸ். ராஜனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தெரிந்தவர்கள் இன்று மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் முப்பது முப்பதைந்து வருஷம் முன்பு அவரது சுயசரிதையைப் பற்றி க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பார்த்தேன். பிறகு கல்கி அதற்கு எழுதிய முன்னுரையை – எப்படி அவர் இரவு முழுவதும் விழித்திருந்து படித்தார் – மட்டும் படித்தேன். அங்கும் இங்குமாகப் படித்ததில் ராஜன் லண்டனில் சவர்க்கார், வ.வே.சு. ஐயரோடு தங்கிப் படித்தவர், 1920களில் காங்கிரஸில் இரண்டாம் நிலை தலைவர், பிற்காலத்தில் ராஜாஜி மந்திரிசபையில் சுகாதார அமைச்சராக பணி புரிந்தார் என்பது மட்டும் தெரிந்தது.

இணையத்தில் அவரது சுயசரிதையின் – நினைவு அலைகள்மின்பிரதி கிடைத்தது.

ராஜன் ஏழைக்குடும்பத்தில் 1878-இல் பிறந்தவர். ராஜாஜிக்கு ஓரிரு வயது இளையவர். வ.வே.சு. ஐயரை விட ஓரிரு வயது மூத்தவர். உபகாரச் சம்பளம் வாங்கி மருத்துவப் படிப்பு படித்தார். அப்போதெல்லாம் அப்படி உபகாரச் சம்பளம் வாங்கினால் அரசு வேலை பார்த்து “கடனை” திருப்பி செலுத்த வேண்டும். ராஜன் பர்மாவில் பணியாற்றப் போயிருக்கிறார். அங்கே ஒரு வெள்ளைக்கார மேலதிகாரி இவரை அவமானப்படுத்த, உன்னை விட பெரிய படிப்பு படித்துக் காட்டுகிறேன் என்று ரோஷப்பட்டு லண்டனில் படிக்கப் போயிருக்கிறார். லண்டனில் இவரோடு தங்கி இருந்தவர்களில் வ.வே.சு. ஐயரும் சவர்க்காரும் உண்டு. ஒரு புறம் புரட்சியில் ஆர்வம், ஆனால் நடைமுறை வாழ்க்கையின் பிரச்சினைகள் இவரை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறது. இந்தியா திரும்பி மருத்துவராக வெற்றிகரமாக தொழில் நடத்தி இருக்கிறார். ஆனால் கடல் கடந்த பிராமணன் என்று ஜாதி விலக்கம், பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதில் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். வேண்டாவெறுப்பாக சில சடங்குகளை செய்து பிராமண ஜாதிக்கு “திரும்பி” இருக்கிறார். பிறகு காங்கிரஸ். ஈ.வெ.ரா.வும் இவரும் காங்கிரஸ் செயலாளர்களாக இருந்த காலம் காங்கிரஸின் பொற்காலம் என்கிறார் வ.ரா. ரௌலட் சட்ட எதிர்ப்பு, சிறை, கிலாஃபத் இயக்கம், உப்பு சத்தியாகிரகம், மீண்டும் சிறை. ராஜாஜியோடு நெருக்கம், பிறகு கொஞ்சம் விலக்கம். மத்திய சட்டசபை அங்கத்தினர். ராஜாஜி இவரை தனது மந்திரிசபையில் இழுத்துப் பிடித்து அமைச்சராக்கி இருக்கிறார். பின்னாளில் தங்குதூரி பிரகாசம் மந்திரிசபையிலும் அமைச்சர்.

உண்மையில் ராஜனின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து ராஜாஜியைப் பிரிக்க முடியாது. அத்தனை அணுக்க சீடர், அத்தனை நட்பு.

புத்தகத்தின் பலம் உண்மை. இளமைப் பருவத்து ஏழை வாழ்க்கையை மிகைப்படுத்தவும் இல்லை, romanticize செய்யவும் இல்லை. “வாத்தியார் சாகானா, வயிற்றெரிச்சல் தீராதா” என்றுதான் மாணவர்கள் பாடிக் கொண்டிருப்பார்களாம். அரசியல் செலவு பிடித்த விஷயம் என்பதை ஒத்துக் கொள்கிறார். ராஜாஜி மந்திரியாக வா என்று அழைத்தால் சம்பளம் பற்றாது என்று நழுவப் பார்த்திருக்கிறார். (1937-இல் மாதம் 500 ரூபாய் சம்பளம்.) நம்பகத்தன்மை நிறைந்த, சரளமான எழுத்து. மனதில் ஒன்று தோன்றிவிட்டால் நிறைவேற்றாமல் விடமாட்டார் போலிருக்கிறது. சுவாரசியமான ஆளுமை, வாழ்க்கை.

இளமைப் பருவத்தை மிக சுவாரசியமாக விவரிக்கிறார். ஸ்ரீரங்கம் கோவிலில் தோசையும் வடையும் பிரசாதமாக பெறுவதற்காக ஆழ்வார் சிலைகளைத் தூக்கி வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது, தனக்குத் திருமணம் என்றதும் தானே போய் ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தது, ஏழை கல்யாண ஊர்வலம் என்ற மனக்குறை எல்லாம் மனைவியை பந்தலில் பார்த்ததும் தீர்ந்தது எல்லாம் அருமை.

பர்மாவில் மேலதிகாரியோடு சிறிய கைகலப்பே ஏற்பட்டிருக்கிறது. பிறகு ஒரு நீதிபதி இவர் ஒரு “சின்ன” டாக்டர் என்று ஒரு வழக்கில் குறிப்பிட ரோஷப்பட்டு லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கப் போயிருக்கிறார். அவருக்கு உதவியவர் வ.வே.சு. ஐயரின் மைத்துனரான பசுபதி ஐயர்.

அவருடைய கப்பல் பயணப் பகுதி எனக்குப் பிடித்தமான ஒன்று. வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி மூலமாக முதலில் கொழும்பு. சுதேசிக் கப்பலில் வருபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று போகிறபோக்கில் சொல்கிறார். முற்றிலும் “அன்னியர்கள்” நிறைந்த கப்பலில், பழக்கவழக்கங்கள் தெரியாத இடத்தில் அற்ப விஷயங்கள் தெரியாமல் எத்தனையோ அவஸ்தைகள். அதிலும் சைவ உணவுப் பிரச்சினைகள்.

லண்டனில் ஏற்கனவே பழக்கமான வ.வே.சு. ஐயர் வரவேற்றிருக்கிறார். வந்த இரண்டாம் நாளே ஐயர் விடுதலை, புரட்சி, நான் பாரிஸ்டர் ஆவதும் நீ மருத்துவம் படிப்பதும் வீண் என்றெல்லாம் பேசி இருக்கிறார். ராஜன் ஐயர், சவர்க்காரோடு தங்கினாலும் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகளால் புரட்சி பக்கம் போகவில்லை. ஆனால் போலீஸ் கண்காணிப்பு இருந்திருக்கிறது. இந்தியா திரும்பியபோது தன் தொண்டை, மலத்துவாரம் வரைக்கும் சோதனை நடந்தது என்று குறிப்பிடுகிறார்.

ஜாதிப்பிரஷ்டம். வேண்டாவெறுப்பாக சில “பிராயச்சித்தங்களை” செய்திருக்கிறார். காலப்போக்கில் வைதீகத்தின் தூணாகவே இருந்தாராம். ஆனாலும் அவரை எப்போதும் கொஞ்சம் தாழ்வாகத்தான் பார்த்திருக்கிறார்கள்.அன்றைய பிராமணர்கள் பலருக்கும் வைதீகத்தை முழுவதும் விடவும் முடியாமல், அதே நேரத்தில் நியாயத்தின் அழுத்தத்தையும் சமாளிக்க முடியாத நிலை இருந்திருக்கும். அ.ச.ஞா. உள்ளிட்ட பல அபிராமணர்களுடன் தந்தை மாதிரி பழகிய வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியே ஹரிஜன ஆலயப் பிரவேச மசோதாவை எதிர்த்தாராம். இவர் வைதீகத்தை விட இந்த நிகழ்ச்சிகளின் கசப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஹரிஜன சேவா சங்கத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தும் அளவுக்கு பின்னாளில் மாறி இருக்கிறார்.

1914-இல் காங்கிரஸ் மாநாட்டுக்கு முதல் முறை போயிருக்கிறார். அப்போதெல்லாம் கோழைத்தனத்தால் நான் ஒருவன் தியாகம் செய்து என்ன பயன் என்று சப்பைக்கட்டு கட்டுவேன் என்கிறார். 1916 வாக்கில் காந்தி சென்னை வந்தபோது சந்தித்திருக்கிறார். ஏற்கனவே லண்டனில் சந்தித்திருந்தாலும் காந்தி அவரை மறந்துவிட்டாராம். ராஜாஜியோடு அப்போது பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

பிறகு தமிழில் சொற்பொழிவுகள் ஆற்ற ஆரம்பித்திருக்கிறார். அப்போதெல்லாம் பிரமுகர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்களாம். இவர் விடாக்கண்டர், தமிழில் நிறைய பேசி ஓரளவு பிரபலம் ஆகி இருக்கிறார், உள்ளூர் அளவிலாவது பிரமுகர் ஆகிவிட்டார்.

1916-இல் இன்று ராமஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்துக்கு போயிருக்கிறார். ஒரு மசூதி இருந்தது, அதற்குப் பின் பத்தடிக்கு பத்தடி சதுரமான இடத்தில் பூமிக்கு கீழே சின்ன தளத்தில் ராமர் சிலை இருந்தது என்கிறார்.

அவரது முதல் சிறை அனுபவத்தில் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். உயிர் போகும் நிலை இருந்திருக்கிறது. அவரோடு ஏற்கனவே நட்பாயிருந்த வெள்ளைக்கார டாக்டர் அவரை சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ரணசிகிச்சை நடந்து அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. கையை வெட்டிவிடும் நிலை இருந்திருக்கிறது. மருத்துவர்கள் கை போனால் இனி இவரால் ரணசிகிச்சை செய்ய முடியுமா என்று கவலைப்பட்டிருக்கிறார்கள். இவர் நான் சமாளித்துக் கொள்வேன், தேவை என்றால் வெட்டுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நல்ல வேளையாகப் பிழைத்துக் கொண்டார். 1920களிலேயே இத்தனை பிரச்சினை என்றால் வ.உ.சி.யும் சிவாவும் திலகரும் என்ன பாடு பட்டிருப்பார்கள்?

வெளியே வந்த பிறகு கையில் பணமில்லை. அரசியலை மறந்து டாக்டர் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். கறாராக பணம் வசூலித்துவிடுவாராம். காந்தி தமிழகம் வந்தால் அவ்வப்போது அவரோடு சுற்றுவாராம்.

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை. அப்புறம் 1934-இல் மத்திய சட்டசபை தேர்தலில் நின்றிருக்கிறார். 22000 ரூபாய் செலவாயிற்றாம். அதற்கப்புறம் தொழிலை விட்டுவிட்டு சிம்லா, டெல்லி என்று அலைந்தேன், சம்பாதித்த பணம் எல்லாம் போயிற்று என்கிறார். சத்தியமூர்த்தி சட்டசபை பிஸ்தா, அவர்தான் இந்த விஷயத்தில் என் குரு என்கிறார்.

சில்லறை அரசியல் தகராறு ஒன்றில் – திருச்சி நகராட்சி தேர்தல் – ஒன்றில் ராஜாஜியோடு பிரச்சினை. தன் மீதுதான் தவறு, ராஜாஜியின் மனதைப் புண்படுத்தினேன், என் முரட்டு சுபாவம்தான் காரணம் என்கிறார். நேரு தன்னை நேரடியாக சந்தித்து காங்கிரசுக்கு திரும்பும்போது கேட்டுக் கொண்டும் மறுத்தாராம். காங்கிரசில் இருந்து விலகினாலும் காந்தியின் ராடாரில் இருந்திருக்கிறார். நீ காங்கிரசில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உன் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதே என்று காந்தி அவரிடம் சொல்லி இருக்கிறார்.

ராஜாஜி திருச்சிக்கு வந்தால் ராஜன் வீட்டில்தான் தங்குவாராம். ஓரிரு வருஷம் கழித்து ராஜாஜி 1937 தேர்தலுக்காக திருச்சி வந்தபோது ராஜன் தன் காரை அனுப்பினாராம். ராஜாஜி தங்க வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் ராஜாஜி காரில் ஏறி நேராக ராஜன் வீடு வந்து சேர்ந்தாராம். கடந்த கால கசப்புகள் பற்றி எதுவுமே கேட்கவில்லையாம். அரசியல் பற்றியே பேசவில்லையாம். அதுதான் அவரது பெருந்தன்மை என்கிறார் ராஜன். ராஜன் முரடர், ஆனால் சாதாரணமாக ராஜாஜிக்குக் கட்டுப்படுவார் என்கிறார் வ.ரா. ஏன் கட்டுப்படுகிறார் என்பது புரிகிறது…

ராஜன் 1937 தேர்தலில் இருந்து விலகியே இருந்தார். ஆனால் ராஜாஜி முதல்வர் ஆனதும் அவரை மேல்சபை உறுப்பினர் ஆக்கி சுகாதார அமைச்சர் ஆக்கி இருக்கிறார். ராஜன் படாடோப வாழ்க்கை வாழ்பவர் போலிருக்கிறது. மாதம் 500 ரூபாய் சம்பளம் பற்றவில்லை, இரண்டு வருஷத்தில் கையிலிருந்து 15000 ரூபாய் செலவழித்தேன், டாக்டர் தொழிலின் வரவும் போயிற்று என்கிறார். அந்தக் காலத்திலேயே மாதம் ஆயிரம் ஆயிரத்து இருநூறு ரூபாய் செலவு இருந்திருக்கும் போலிருக்கிறது.

இதில் காந்தி வேறு நடுவில் குட்டையை குழப்பி இருக்கிறார். மாதம் 500 என்பதெல்லாம் ரொம்ப அதிகம், நான் மந்திரிசபை அமைத்தால் 75 ரூபாய்தான் தருவேன் என்றிருக்கிறார். ராஜனின் வார்த்தைகளில்:

சென்னை மாகாண மந்திரிகள் எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும் மாதம் 75 ரூபாய்க்குள் மந்திரியாக வேலை பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இம்மாதிரி ராஜாஜிக்கு காந்திஜியிடமிருந்தும் பார்லிமெண்டரி போர்டாரிடமிருந்தும் எண்ணற்ற தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. என் அபிப்ராயப்படி இதற்கு விமோசனம் ஒன்றேதான்; காந்திஜி அவர்களே ஒரு சிறிய மாகாணத்தை (ஒரிஸ்ஸா போன்றது) தாமே எடுத்துக் கொண்டு நடத்தினாலொழிய வேறு வழி இல்லை.

ராஜாஜிக்கு காந்தியால் தொல்லை என்று ராஜன் எழுதி இருப்பதை மிகவும் ரசித்தேன். கிழவர் தொல்லை பிடித்தவர்தான். மந்திரியாகி 75 ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தால் பத்து ரூபாய் மிச்சம் பிடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் உழைத்தது போல எப்போதும் உழைக்கவில்லை என்கிறார். குறிப்பாக தொற்றுநோய் பரவுவதை, தொற்ற்றுநோயை கட்டுப்படுத்த மிகவும் உழைத்திருக்கிறார். தானே மருத்துவர் என்பதால் அதிகாரிகளால் ஓபி அடிக்க முடியவில்லை. ராஜாஜிதான் நிதி மந்திரியாம், பணம் பெயர்வது மகா கஷ்டமாம். அதுவும் “என்ன ராஜன்! வைத்தியம் தேவை வைத்தியர்கள் தேவை, எதற்கு ஆஸ்பத்திரி கட்ட பணம் செலவழிக்க வேண்டும்?” என்பாராம். ராஜாஜி நோயைத் தடுப்பது வைத்தியம் பார்ப்பதை விட உத்தமம் என்பதை உணர்ந்தவராம். குடிநீர் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பை ராஜனிடம் தந்தாராம்.

1940-இல் மீண்டும் சிறை. ஆனால் அதற்கப்புறம் சிறை செல்லுவதில் ராஜாஜிக்கும் ராஜனுக்கும் விருப்பமில்லை. ஒதுங்கிக் கொண்டுவிட்டார்கள். அதற்கப்புறம் விவ்சாயம் செய்ய முயற்சித்திருக்கிறார். செலவுதான் என்று அலுத்துக் கொள்கிறார். ஆனால் செலவைக் கண்டு ஒதுங்கவில்லை, வருஷக்கணக்கில் முயன்று ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார்.

1944 வரைதான் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் பத்து வருஷம் வாழ்ந்திருக்கிறார். 1946-51 காலத்தில் மீண்டும் அமைச்சர். ராஜாஜி 1952-இல் முதல்வராக வந்தபோது ராஜனை மீண்டும் அமைச்சராக்கவில்லை.

ராஜன் வ.வே.சு. ஐயர் பற்றியும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு எழுதி இருக்கிறார்.

உண்மையை சுவாரசியமாக எழுதுவது சுலபமல்ல. ராஜன் அதை அனாயாசமாக செய்திருக்கிறார். புத்தகத்தைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: நினைவு அலைகள் மின்பிரதி

ம.பொ.சி.: விடுதலைப் போரில் தமிழகம்

ம.பொ.சி. விடுதலைப் போரில் நேரடியாகப் பங்கேற்றவர். வ.உ.சி., கட்டபொம்மன் இருவரையும் icon-களாக மாற்றியதில் அவருக்கும் முக்கியப் பங்குண்டு. தமிழகத்தின் பங்களிப்பு காங்கிரசின் அதிகாரபூர்வமான வரலாறுகளில் இருட்டடிக்கப்படுவதாகக் கருதி இருக்கிறார். (அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. விஷ்ணு பிரபாகர் எழுதி நேஷனல் புக் ட்ரஸ்ட் பதித்த ஸ்வராஜ்யா புத்தகம் ஒரு உதாரணம். அதைப் படித்தால் தென்னிந்தியா இந்தியாவில்தான் இருக்கிறதா இல்லை அண்டார்டிகாவில் இருக்கிறதா என்று சந்தேகம் எழலாம்.) அந்த ஆங்காரத்தில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 1929 லாகூர் காங்கிரஸ் வரை எழுதி இருக்கிறார்.

என் கண்ணில் பட்ட வரை முக்கியத் தகவல்கள்/வாதங்கள்.

  • இந்திய விடுதலைப் போராட்டம் 1857 கிளர்ச்சியோடு தொடங்குகிறது என்றுதான் பொதுவாக வடநாட்டில் சொல்லப்படுகிறது. தவறு, அது கட்டபொம்மனோடு தொடங்குகிறது.
  • கட்டபொம்மனுக்கு முன் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள் ஆங்கிலேயரோடு போரிட்டாலும் வரி கொடுக்க மாட்டேன், என் நிலத்தின் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நான் சுதந்திரமானவன் என்று போரிட்டது கட்டபொம்மனே. அதாவது ஹைதரும் திப்புவும் போரிட்டது அரசுகளுக்கு இடையேயான போர், ஒருவர் அதிகாரத்துக்கு கீழ் அடுத்தவரை கொண்டு வர நடந்த போர். கட்டபொம்மன் நான் உனக்கு அடங்கினவன் அல்லன் என்று போரிட்டார்.
  • கட்டபொம்மன், பிறகு ஊமைத்துரை, பிறகு மருது சகோதரர்கள், வேலூர்க் கலகம், பிறகு தளவாய் வேலுத்தம்பி, பிறகு கர்நாடகத்தின் கிட்டூர் ராணி சென்னம்மா என்று வரிசைப்படுத்துகிறார்.
  • தீரன் சின்னமலை என்று அவர் யாரையும் குறிப்பிடவில்லை. இப்படி ஒருவர் இருந்தாரா, என்ன ஆதாரம் என்று எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அடிக்கடி கேட்பார்.
  • முதல் காங்கிரஸில் – 1885-இல் – 21 பேர் சென்னை மாகாணத்திலிருந்து சென்றார்களாம். ஹிந்து பத்திரிகையை நிறுவிய ஜி. சுப்ரமணிய ஐயர் போயிருக்கிறார்.
  • மூன்றாவது காங்கிரஸ் – 1887 – சென்னையில் நடந்தது. அன்று அதற்கான செலவு 30000 ரூபாயாம். முதல் காங்கிரஸுக்கு 3000 ரூபாய்தான் ஆகி இருக்கிறது. விஜயராகவாச்சாரியார் (சேலம் விஜயராகவாச்சாரியர் அல்லர், இவர் வேறொருவர்)  எழுதிய ஒரு சிறு புத்தகத்தை – காங்கிரஸ்: கேள்வி பதில் –  அன்றைய வைஸ்ராய் டஃபரின் பிரபுவே விமர்சித்திருக்கிறார்.
  • கும்பகோணம் சங்கர மடம் – கவனிக்கவும் காஞ்சி மடம் அல்ல – இந்த மாநாட்டுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி இருக்கிறது. பின்னாளில் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடங்கிய பிட்டி தியாகராய செட்டியாரும் ஒரு பிரதிநிதி.
  • முதல் முறையாக ஆங்கிலத்தை தவிர்த்து இந்திய மொழிகளிலும் உரைகள் நடந்திருக்கின்றன.
  • வ.உ.சி. சகாப்தம். அவரது செல்வாக்கு சில வருஷங்களுக்காவது அரசு எந்திரத்தை அஞ்ச வைத்திருக்கிறது. பாரதி, சிவா அவரது ஆப்தர்கள். அவருக்கு கிடைத்த தண்டனை சுதேசி இயக்கத்தை மொத்தமாக அமுக்கிவிட்டது. அவருக்கு எதிராக சென்னை மிதவாதிகளுக்கு தலைவராக இருந்தவர் வி. கிருஷ்ணசாமி ஐயர். 1908-இல் சென்னையில் இவர் முன்னின்று காங்கிரஸ் மாநாட்டை நடத்தி இருக்கிறார்.
  • ஐரோப்பாவில் வ.வே.சு. ஐயர், டி.எஸ்.எஸ். ராஜன், செண்பகராமன் பிள்ளை ஆகியோர் செயல்பட்டிருக்கிறார்கள். செண்பகராமன் சிறைப்பட்ட இந்திய சிப்பாய்களை வைத்து ஒரு சிறு சைனியத்தை – அதன் பெயரும் Indian National Army-தான் – உருவாக்க முயற்சித்திருக்கிறார். ஆஃப்கானிஸ்தான் goverment-in-exile உருவானபோது அவர்தான் வெளிநாட்டுத் துறை அமைச்சர். ம.பொ.சி. அவர் எம்டன் கப்பலில் இருந்தாரா என்பதைத் தெளிவாக எழுதவில்லை, ஆனால் எம்டன் சென்னையைத் தாக்க வேண்டும் என்பது அவர் ஆலோசனைதான் என்கிறார்.
  • தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு பல தமிழர்கள் – நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை – துணை நின்றிருக்கிறார்கள். நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை மூவரும் 17-18 வயதில் இறந்து போனார்களாம். பின்னாளில் வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியை தென்னாப்பிரிக்க தமிழர் பிரச்சினைகளை தீர்க்க பிரிட்டிஷ் அரசே அனுப்பியது.
  • 1914-18 காலத்தில் அன்னி பெசண்ட் காங்கிரஸின் முடிசூடா தலைவியாக இருந்தாராம்.
  • ரௌலட் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த குழுவில் குப்புசாமி சாஸ்திரி என்று ஒரு தமிழர் இருந்திருக்கிறார். இவரை ரௌலட சாஸ்திரி என்றே ஹிந்து பத்திரிகை விமர்சித்திருக்கிறது.
  • காந்தி சகாப்தத்தின் ஆரம்பத்தில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, ஈ.வெ.ரா., வரதராஜுலு நாயுடு, திரு.வி.க., எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார், ஜார்ஜ் ஜோசஃப் என்று ஒரு புதிய தலைமுறையின் தலைவர்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள்.
  • சட்டமறுப்பு இயக்கம் என்ற எண்ணம் காந்திக்கு சென்னையில்தான் உதித்ததாம். வ.உ.சி.யும் அதை ஆதரித்தாராம்.
  • ஆரம்ப கால காங்கிரஸில் இருந்த சங்கரன் நாயர் பின்னாளில் அரசு ஆதரவாளராக மாறினார். வைஸ்ராயின் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார். Gandhiji and Anarchy என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். ஜாலியன்வாலாபாக் படுகொலையின் காலத்தில் பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ’ட்வயர் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்து நாயர் மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கும்படி தீர்ப்பாயிற்றாம்!
  • ராஜாஜி தமிழக காங்கிரஸின் “தலையாக” பரிணமித்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து – ஜலகண்டபுரம் கண்ணன்

கண்ணனின் எழுத்து நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த கௌரவத்துக்கு அவர் தகுதியானவர் அல்லர். திராவிட இயக்கச் சார்புடையவர், அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்தவராக இருந்திருப்பார் என்பதுதான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

கண்ணன் அந்தக் கால திராவிட இயக்கத்தவர். முற்போக்கு எழுத்து என்று நினைத்துக் கொண்டு என்னத்தையோ எழுதி இருக்கிறார். பிராமண வெறுப்பு, பண்டைய தமிழ் நாகரீகம் மீது பெருமிதம் எல்லாம் அவரது படைப்புகளில் ஊடோடி இருக்கிறது. அண்ணன்மார்சாமி நாட்டார் தொன்மத்தை வைத்து அவர் எழுதிய குன்றுடையான் நாடகம் ஒன்றே கொஞ்சமாவது பொருட்படுத்தக் கூடிய படைப்பு.

அவரது சில நூல்கள் இங்கே கிடைக்கின்றன. எதுவும் படிக்க வேண்டியதல்ல. எனக்கு பழைய கால நாடகம் என்றால் இப்போதெல்லாம் படிக்கத் தோன்றுகிறது. மேலும் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகளை முடிந்த வரை படிக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் நான் படித்தேன், ஆனால் பரிந்துரைக்கமாட்டேன்.

நந்திவர்மன் நாடகம் அவரது எழுத்து முறையை பிரதிபலிக்கிறது. பல்லவ அரசன் நந்திவர்மனைக் கொல்ல அவனது தம்பி நந்திக் கலம்பகத்தை இயற்றினான் என்றும் அதில் அறம் பாடப்பட்டதால் – அதாவது நந்திவர்மன் உயிரோடு இருக்கும்போதே அய்யோ இறந்துவிட்டாயே என்று எழுதுவது – நந்திவர்மன் இறந்து போனான் என்று ஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு. அதை அப்படியே ஆரிய பிராமண சதி என்று மாற்றிவிட்டார். நாடகத்தில் நயமாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திராவிட இயக்க எழுத்தாளர்களில் அண்ணாதுரை ஒருவரே கொஞ்சமாவது பொருட்படுத்தக் கூடியவர் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறார்.

அந்தப் பாடல் நயம் உள்ளது. (என் அகராதிப்படி கவிதை இல்லைதான், ஏனென்றால் மொழிபெயர்த்தால் சுவை போய்விடும்.)

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயாபரனே!

அவருடைய நாடகங்களில் சிறந்தது குன்றுடையான். அண்ணன்மார்சாமி கதையின் நாடக வடிவம். அதை சிதைக்காமல் கொடுத்ததே பெரிய விஷயம். கலைஞர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் நாவலுக்கு எவ்வளவோ பரவாயில்லை.

பதினாறும் பெறுக நாடகத்தில் சிறு குடும்பத்தின் தேவையை – இரண்டு மூன்று குழந்தைகள், பதினாறு அல்ல – வற்புறுத்துகிறார். மின்னொளி என்று இன்னொரு “முற்போக்கு” நாடகம்.

இங்கே அவரது சிறுகதை ஒன்றைப் படிக்கலாம். படித்தால் அவரது தரம் என்ன என்று புரிந்துவிடும். சிந்தனைச் சித்திரம், காதல் மனம் என்ற பேரில் சில சிறுகதைகளை எழுதி இருக்கிறார்.

திரைப்படங்களில் பணி புரிந்திருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் கண்ணதாசனுக்கு ஆரம்ப காலத்தில் கண்ணன் பரிந்துரையில்தான் வேலை கொடுத்தாராம். அவர் எழுத்தைப் பார்த்துத்தான் திரைக்கதை எழுதக் கற்றுக் கொண்டேன் என்று கண்ணதாசன் எங்கோ சொல்லி இருக்கிறார்.

கண்ணனின் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து

பிடித்த SF சிறுகதை: ஃப்ரெடெரிக் ப்ரௌன் எழுதிய Arena

இந்தச் சிறுகதையை என் பதின்ம வயதுகளில் முதல் முறையாகப் படித்தேன்.

நேரான, சிம்பிளான கரு/கதை. பூமிக்கும் இன்னொரு கிரகத்துக்கும் போர். மனிதர்களின் பிரதிநிதியாக ஒருவன், வேற்று கிரகத்து பிரதிநிதியாக பல வளையும் கரங்கள் (tenatcles) கொண்ட உருண்டு செல்லும் கோளம் இருவருக்கும் நடுவில் துவந்த யுத்தம். அவ்வளவுதான் கதை.

அப்போதெல்லாம் மாபெரும் வீரனாக உலகை வெல்ல வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்னால் பிறக்காமல் போய்விட்டோமே என்று கொஞ்சம் வருத்தம். இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்ததில் என்ன வியப்பு!

1944-இல் எழுதப்பட்ட சிறுகதை. பின்னாளில் ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடர் இந்தச் சிறுகதையை ஒரு அத்தியாயத்துக்கு (episode) பயன்படுத்திக் கொண்டது. 1965-க்கு முற்பட்ட 20 சிறந்த SF சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இன்றும் பிடித்துத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ப்ரெடெரிக் ப்ரௌனின் ஒரு இரண்டு வரி சிறுகதை – Knock – மிகவும் புகழ் பெற்றது.

Imagine all human beings swept off the face of the earth, excepting one man. Imagine this man in some vast city, New York or London. Imagine him on the third or fourth day of his solitude sitting in a house and hearing a ring at the door-bell!

அவ்வளவுதான் கதை!

இந்தப் பதிவை எழுதும்போது Dark Interlude என்ற சிறுகதையையும் படித்தேன். நல்ல கரு. எதிர்காலத்திலிருந்து வரும் ஒருவன் இன்றைய அமெரிக்காவில் ஒரு பெண்ணை மணக்கிறான். அவன் கால்பகுதி கறுப்பன், மணந்தது வெள்ளை இனப் பெண். அவன் உடலில் நீக்ரோ ரத்தம் ஓடுவது தெரியும்போது வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்ற மனநிலை உள்ளவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆனால் என் கண்ணில் நன்றாக எழுதப்படவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

இந்த வருஷ சாஹித்ய அகடமி விருது – இமையம் எழுதிய “செல்லாத பணம்”

இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்காக 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது . தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

செல்லாத பணம் நாவலின் கரு பல முறை பார்த்ததுதான். குடும்பத்தின் ஆட்சேபணையை மீறி தன்னை விட குறைவான படிப்பு, பணம், “ஜாதி”த் தகுதி உள்ள “ரௌடி” ஆட்டோக்காரனை மணக்கும் ரேவதி. திருமணம் ஆன பிறகு பணப் பற்றாக்குறை, அவமானங்கள், மனைவியை அடித்து உதைக்கும் கணவன். அப்பாவும் அண்ணனும் ஒதுக்கிவிட, அம்மா மட்டும் பண உதவி செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நாள் ரேவதி தீக்குளித்துவிடுகிறாள்.

இந்தக் கருவை திறமையற்ற எழுத்தாளர் கையாண்டிருந்தால் வெறும் மிகை உணர்ச்சி எழுத்தாகப் போயிருக்கும். இமையம் சிறப்பாக எழுதி இருக்கிறார். ஓரளவு மரத்துப் போன உள்ளம் கொண்ட எனக்கே அய்யோ அய்யோ என்றுதான் இருந்தது. தீக்குளித்தபின் மருத்துவமனையில் இருக்கும் நாலைந்து நாட்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. அப்பாவும் அண்ணனும் அண்ணியும் புலம்புவதுதான் கதை. மருத்துவமனைதான் பின்புலம்.

என் அப்பா மருத்துவமனையில் ICU-இல் வாரக்கணக்கில் இருக்க, வெளியே காத்திருந்த அனுபவம் எனக்குண்டு. மருத்துவமனை சித்தரிப்பு மெய்நிகர் அனுபவம். வெளியில் காத்திருப்பவர்களின் தத்தளிப்பு, கொஞ்சம் அடுத்த நிலை உறவினர்/நண்பர்களின் நல்லெண்ணம் உள்ள நச்சரிப்பு உரையாடல்கள், புலம்பல்கள் எல்லாவற்றையும் உண்மையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அப்பா, அண்ணன், அண்ணி, அம்மா, சித்தி எல்லாருடைய பாத்திரங்களும் அருமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அப்பா, அண்ணனுக்கு ஏற்பட்ட தலைகுனிவு, ஒழுங்காக இல்லாத கணவனால் இன்னும் அதிகரிக்கும் அவமானம் எல்லாம் மருத்துவமனையில் அர்த்தம் இல்லாத உணர்வுகளாக மாறிவிடுவது உண்மையான சித்திரம்.

தங்கையை மனதார திட்ட வேண்டும் என்று நினைத்திருக்கும் அண்ணன் எரிந்து கிடக்கும் தங்கை மன்னிக்கும்படி கேட்டதும் எல்லாவற்றையும் மறந்து கதறுவதும், தங்கை என்னை ஒரு முறை ரேவதி என்று கூப்பிடு என்று சொல்வது மனதில் பதியாமல் வெளியே வந்த பிறகு நினைவு வந்து மீண்டும் உள்ளே சென்று அவளை பேர் சொல்லி கூப்பிடத் துடிப்பதும், அதற்கு அனுமதி கிடைக்காமல் தவிப்பதும் மிக நல்ல காட்சி. இதே போல போலீஸ்கார ஆனந்த்குமார் கண் கலங்கும் காட்சி, அப்பா நடேசன் காவல் நிலையத்தில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் திணறும் காட்சி, கணவன் ரவி தன் பக்கத்து நியாயங்களை எடுத்து வைக்கும் காட்சி ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

ஆனால் என் கண்ணில் இந்த நாவல் இரண்டாம் மூன்றாம் வரிசை நாவலே. வெறும் அனுபவச் சித்தரிப்பு மட்டுமே நல்ல நாவல் ஆகிவிடாது என்றெல்லாம் இப்போது தோன்றுகிறது. (நாளை என் மனம் மாறினாலும் மாறலாம்.)

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இமையம் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு

நா. வானமாமலை எழுதிய “உரைநடை வளர்ச்சி”

உரைநடை வளர்ச்சி நல்ல புத்தகம். கல்வெட்டு காலத்திலிருந்து தமிழ் உரைநடை வரலாற்றை விவரிக்கிறது. சுருக்கமாக.

  • கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் உள்ள கல்வெட்டுகள் பிராமி வரி வடிவத்தில் இருந்தாலும் தமிழ் கல்வெட்டுகளே என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு ஒன்று கூறுகிறதாம்.
  • அனேகமானவை சமணத் துறவிகளுக்கு படுகை, உணவு ஏற்பாடு நான் செய்தேன் என்று இருக்குமாம்.
  • எடுத்துக்காட்டாக “இ படுகை செய்விதான் பிட்டன் கொற்றன்“, “கணைகால் இறும்பொறை மகன் பொறைய இ அறை அறுத்தான்
  • அதனால் தமிழ் உரைநடை கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலாவது ஆரம்பித்திருக்க வேண்டும்.
  • கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் கழித்து தமிழ் செய்யுள்களின் விளக்கங்கள் செய்யுளின் அடியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை கி.பி. 200-600 காலகட்டத்து உரைநடை.
  • உதாரணம்: நற்றிணை 157க்கான விளக்கம் – “பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது
  • இதே காலத்தில் ஆரம்ப கால பல்லவர் சாசனங்களின் உரைநடை எளிதாக, பேச்சுத்தமிழில் இருக்கிறதாம்.
  • அதாவது இலக்கிய வழக்கு உரைநடை, உலகியல் வழக்கு உரைநடை இரண்டும் இந்தக் காலகட்டத்திலாவது ஆரம்பித்திருக்க வேண்டும்.
  • சோழர் கல்வெட்டுகளில் புதிய வரி வடிவம் பயன்படுத்தப்பட்டதாம்.
  • சோழர் கால இறுதியில் சங்க நூல்கள், குறள், சிந்தாமணிக்கு சிறந்த உரைகள் எழுதப்பட்டன. பரிமேலழகர், மணக்குடவர், பேராசிரியர், இளம்பூரணர் ஆகிய பேர்களைக் கேள்விப்பட்டிருப்போம்.
  • மணிப்பிரவாள நடையை சமணர்கள் உருவாக்கினார்கள். பின்னாளில் வைணவர்கள் இதைப் பின்பற்றினார்கள்.
  • ஹென்ரிகே ஹென்ரிகஸ் தம்பிரான் விளக்கம் என்ற முதல் தமிழ் அச்சு நூலை பதினாறாம் நூற்றாண்டில் வெளியிட்டார். வீரமாமுனிவர் எழுத்துக்களை நவீனப்படுத்தினார்.
  • ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு முக்கியமான உரைநடை நிகழ்வு.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விக்ரமாதித்தன், மதனகாமராஜன், மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகள் அச்சில் வந்தன.
  • ஆறுமுக நாவலர், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், ராமலிங்க அடிகள் ஆகியோரை உரைநடை முன்னோடிகள் என்று சொல்லலாம். தெளிவாக புரியக் கூடிய வகையில் எழுதினார்கள்.
  • வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், மாதவையா முதல் நாவல்களை எழுதினார்கள்.
  • பாரதியையே நவீன தமிழ் உரைநடையின் தந்தை என்று சொல்ல வேண்டும்.
  • ஈ.வெ.ரா.வின் பேச்சிலும் எழுத்திலும் வேகம் இருந்தது, ஆனால் செறிவு குறைவுதான்.
  • திரு.வி.க.வின் நடை எளிமைப்படுத்தப்பட்ட பண்டித நடை.
  • மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் முக்கிய முன்னோடி.
  • மணிக்கொடி காலம் தமிழ் உரைநடை வளம் பெற முக்கிய காரணி.
  • திராவிட இயக்கத்தினர் அலங்கார, அடுக்குமொழி தமிழை பிரபலமாக்கினர். விஷயத்தை விட ஓசை நயமே காலப்போக்கில் முக்கியமாகிவிட்டது. இப்போது இந்த நடை காலாவதி ஆகிவிட்டது.

வேறு சில புத்தகங்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

வ.உ.சி.: முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி புத்தகத்தில் வ.உ.சி.யின் வாழ்க்கையைப் பற்றி புதிதாக விவரங்கள் எதுவுமில்லை. ஆனால் அனுபந்தமாக கப்பல் நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் நோக்கங்களை இணைத்திருக்கிறார், ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம்.

பாரதியும் தொழிலாளரும் என்ற புத்தகத்தைப் பற்றி பெரிதாகப் பேச ஒன்றுமில்லை. அதனால் தனியாக எழுதப்போவதில்லை. பாரதி எகிப்தில் வேலை நிறுத்தம் பற்றியும், ரஷியாவில் புரட்சி பற்றியும் எழுதிய சில கட்டுரைகளை, கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கங்கள். ஆனால் பாரதியைப் பற்றி இப்படி எத்தனை புத்தகங்கள், பாரதியின் தாக்கம் எத்தனை பெரிது என்று யோசிக்க வைத்தது.

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் நாத்திகம் வேத காலத்திலிருந்தே இந்தியாவில் பழக்கத்தில் இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தமிழகத்தில் மகாபாரத நாட்டார் கதைகள்

நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது.

எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மாயாபஜார் (1957) திரைப்படத்தின் மூலம் சசிரேகா பரிணயம்/அபிமன்யு சுந்தரி கதை. அத்தை மகன்/மகள் முறைப்பையன்/முறைப்பெண் என்ற பழக்கம் உள்ள தமிழக/ஆந்திரப் பகுதிகளில்தான் இந்தக் கதை உருவாக முடியும். (சுபத்திரை அர்ஜுனனின் மாமன் மகள்தான் என்றாலும் முறை வைத்து உரிமை கொண்டாடுவதாக வியாசபாரதத்தில் இல்லை.) இது ஒரு கலை வடிவமாக, கற்பனை நாடகமாக, நடனமாக சோழர் காலத்தில் ஆரம்பித்திருக்கலாம். எப்படி ஆரம்பித்ததோ, ஜாவா வரை பரவி ககவின் என்ற காவிய வடிவம் எடுத்திருக்கிறது. இன்றும்   இந்தக் கதை ஆந்திரத்தில் பிரபலமாக இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன.

கலை மரபு என்பதில் நான் நாடகம், திரைப்படம், கூத்து, பிரசங்கம்/கதாகாலட்சேபம், கதைப்பாடல் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன். கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை.

காலட்சேபத்தை அந்தக் காலத்தில் எல்லா ஜாதியினரும் கேட்க முடிந்ததா என்று தெரியவில்லை. காலட்சேபம் கோவிலுக்குள்தான் நடைபெறும், கோவிலுக்குள் பிரவேசிக்க “கீழ்ஜாதியினர்” பல போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது தெரிந்த விஷயம். ஆனால் பிரசங்கங்கள் (நான் பார்த்த வரையில்) கோவிலுக்கு வெளியே நடக்கும். எல்லாரும் கேட்கலாம் என்று நினைக்கிறேன். நாடகத்துக்கே கூட “தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு” அனுமதி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிடையாதாம் என்று எங்கேயோ படித்தேன். அவர்கள் தங்களுக்கென்று தனியாக அரங்கங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருந்ததாம்.

அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.

மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம் (குறவஞ்சி) ஆகியவற்றின் அடிப்படை வடிவம் மலைக்குறத்தி ஆருடம் சொல்வது. மின்னொளியாள் தன் கணவன் அர்ஜுனன் வருவானா என்று குறத்தியிடம் ஆருடம் கேட்கிறாள். மின்னொளியாள் என்ற பேரைக் கூட நான் கேட்டதில்லை. அர்ஜுனனோடு மணம் நடந்த கதையும் என்ன என்று தெரியவில்லை. மின்னொளியாள் குறம் 1874-இல் பதிக்கப்பட்டதாம். இப்போது சென்னை அரசு நூலகத்தில் கையெழுத்துப்படியாக மட்டுமே கிடைக்கிறதாம். அல்லி குறம் பாடலுக்கு வித்வான் குறம் என்ற பெயரும் இருக்கிறதாம். திரௌபதி குறம் மிகச் சிறப்பான இசைப்பாடல்.

துகிலுரிகாதை, பஞ்சபாண்டவர் வனவாசம், கண்ணன் தூது, திரௌபதி கண்ணி, தருமர் அஸ்வமேத யாகம் என்ற கதைப்பாடல்களும் இருக்கின்றனவாம். இவை புகழேந்திப் புலவர் எழுதியதாகத் தெரியவில்லை, ஆனால் எழுதியவர் யாரென்றும் தெரியவில்லை.

கர்ணமோட்சம், கர்ண மகாராஜா சண்டை போன்ற தெருக்கூத்துகள் பிரபலமாக இருக்கின்றன. கூவாகத்தில் திருநங்கைகள் திருவிழாவில் அரவான் கூத்து ஒன்று பாரம்பரியமாக நடிக்கப்படுகிறாதாம்.

இவற்றைத் தவிர ஆரவல்லி-சூரவல்லி இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பிரபலமாக இருந்தது. சின்ன அர்ஜுனன் சண்டை, விஸ்வகேது திருமணம், திரௌபதி கண்ணி, மணிமாலன் சண்டை போன்றவற்றைப் பற்றியும் இந்தப் பதிவை எழுதும்போது தெரிந்துகொண்டேன். ஆரவல்லி திரைப்படம் இன்றும் மக்கள் நினைவில் கொஞ்சம் இருக்கிறது – சின்னக்குட்டி நாத்தனா பாடலால்.

புலந்திரன், பவளக்கொடி, ஆரவல்லி-சூரவல்லி, பொன்னருவி மசக்கை, திரௌபதி குறம் போன்ற நாட்டார் கதைகள் தமிழகத்தில் மட்டும்தான் காணக் கிடைக்கின்றன. இந்தக் கதைப்பாடல்களின் சாரத்தை இங்கே படிக்கலாம். அல்லி, பவளக்கொடி, பொன்னருவி கதைப்பாடல்கள் பெண்கள் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் கதைகள் அதனால் அவற்றை பெண்கள் படிக்கக் கூடாது என்று நீலாம்பிகை (மறைமலை அடிகளின் மகள்) எழுதி இருக்கிறார்!

இவற்றில் மிக சுவாரசியமான வேறுபாடுகள் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக திரௌபதி குறம் என்ற பாடலில் திரௌபதி குறத்தியாக மாறுவேடம் அணிந்து அஸ்தினபுரத்துக்கு வந்து துரியோதனன் மனைவி, காந்தாரி, துரியோதனனுக்கு குறி சொல்கிறாள். குறத்தி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருவது அபூர்வம். அதனால் கொண்டை போட்டு பூ முடித்து வருகிறாள்! பாஞ்சாலி சபதம் போயே போச்!

புகழேந்திப் புலவரின் கதைப்பாடல்களில் கர்ணன் பாத்திரப் படைப்பு சுவாரசியமானது. கர்ணன் வீரன் மட்டுமல்ல, விவேகியும் கூட.  துரியோதனன் வில்லத்தனம் செய்யும்போது அவனைத் திருத்த முயற்சிக்கிறான், சரியான ஆலோசனைகள் தருகிறான். இதை பல பாடல்களில் காண முடிகிறது. ஏணியேற்றம் பாடலில் துரியோதனனை அல்லி விடுவிப்பது கர்ணன் வேண்டுகோளினால்தான், கர்ணன் மீதுள்ள மரியாதையால்தான்.

சல்லியன் கௌரவரோடு சேர்ந்தது பாரதப் போருக்கு சற்று முன்தான். ஆனால் இந்தப் பாடல்களில் வனவாச காலத்திலேயே சல்லியன் கௌரவர் பக்கம் என்றுதான் வருகிறது. சகுனி என்று ஒரு வரி ஆரம்பித்தால் அதன் இரண்டாவது பகுதி சல்லியன் என்றுதான் ஆரம்பிக்கும். எதுகை மோனைக்காகத்தான் இப்படி என்று நினைக்கிறேன்.

அல்லியும் மகாபாரதத்தில் சித்ராங்கதா என்று குறிப்பிடப்படும் அரசியும் ஒன்றுதான் என்பது தெளிவு. ஆனால் சித்ராங்கதா மகன் பப்ருவாஹனன் அர்ஜுனனை பாரதப் போருக்குப் பிறகு தோற்கடிப்பது என்று எல்லாம் இந்தக் கதைகளில் வருவதில்லை. மாறாக அல்லி மகன் புலந்திரன் பவளத்தேர் வேண்டுமென்று அழுது அல்லி மாதிரியே அல்லி ராஜ்யம் நடத்தும் பவளக்கொடியை அர்ஜுனன் மணக்க மூலகாரணமாக இருக்கிறான். புலந்திரன் களவு கதையில் துரியோதனனின் தங்கை மகள் கலந்தாரியை மணக்கிறான். புலந்திரன் தூது கதையில் பாரதப் போருக்கு முன் தூது போகிறான். சின்ன அர்ஜுனன் சண்டை என்ற கதையிலோ துரியோதனனால் வளர்க்கப்படும் புலந்திரன்-கலந்தாரியின் மகன் சின்ன அர்ஜுனன் அப்படி அவன் தூது வரும்போது அவனுடன் போரிடுகிறான்!

அபிமன்னன் சுந்தரி மாலையின் மின்பிரதி தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது. சங்கரதாஸ் ஸ்வாமிகள் அபிமன்யு சுந்தரி என்ற பேரில் 1921-இல் நாடகமாகவும் எழுதினார்.சசிரேகா பரிணயம் என்ற பெயரில் ஆந்திராவில் இதே கதை பிரபலம். சுந்தரியின் பெயர் மட்டும் சசிரேகா என்று மாறிவிடுகிறது. மாயாபஜார் (1957) திரைப்படத்தின் மூலக்கருவும் இதுவே. இந்தோனேஷியாவிலும் இதைப் பற்றிய கதைப்பாடல் – ககவின் – பிரபலமாம்.கடோத்கஜன்-அரவான் உதவியுடன் அபிமன்யு பலராமரின் மகள் சுந்தரியை மணக்கிறான்.

அல்லி அரசாணி மாலையில் ஆண்களை வெறுக்கும் அல்லி ராணியை அர்ஜுனன் மணமுடிக்கிறான். அல்லி வியாசபாரதத்தின் சித்ராங்கதாதான் என்பது தெளிவு. மேலே சொன்ன மாதிரி அல்லியைச் சுற்றி வேறு கதைகளும் எழுந்திருக்கின்றன.

ஏணியேற்றம் அல்லி தொன்மத்தின் இன்னொரு பகுதி. துரியோதனன் அல்லியை அடைய விரும்பி அவமானப்படுகிறான்.

பவளக்கொடி மாலையை சங்கரதாஸ் ஸ்வாமிகள் பவளக்கொடி என்ற பேரில் பிற்காலத்தில் நாடகமாகவும் எழுதினார். அல்லி மகன் புலந்திரனுக்கு பவளத்தேரை பரிசாகத் தருவதற்காக ஆண்களை வெறுக்கும் பவளக்கொடியின் மனதை வென்று அர்ஜுனன அவளை மணக்கிறான்.

புலந்திரன் களவு மாலையும் அல்லி தொன்மத்தின் தொடர்ச்சி. பிற்காலத்தில் நாடகமாகவும் வந்தது. புலந்திரன் துரியோதனனின் தங்கை துச்சலையின் மகள் கலந்தாரியை மணக்கிறான். துரியோதனன் கலந்தாரியைப் பிரித்து கர்ணனின் பொறுப்பில் சிறை வைக்க, கர்ணன் எங்கோ போயிருக்கும்போது புலந்திரன் இரவில் மட்டும் வந்து கலந்தாரி கர்ப்பம். துரியோதனன் கர்ணனைக் கடிந்து கொள்கிறான். துச்சாதனன் திரௌபதியை நினைவுபடுத்தும் வகையில் கலந்தாரியை இழுத்து வருகிறான். கர்ணனின் மகன் விஸ்வகேது துச்சாதனனை எதிர்க்கிறான். துச்சாதனன் அண்ணன் குணம் தெரிந்ததுதானே என்று அவனை சமாதானப்படுத்துகிறேன். கலந்தாரியை நெருப்பில் தள்ள ஆயத்தங்கள் நடக்கின்றன. அல்லி போர் தொடுத்து கலந்தாரியை மீட்டுக் கொள்கிறாள்.

புலந்திரன் தூதும் பிற்காலத்தில் நாடகமாகவும் வந்தது. புலந்திரன் கௌரவர்களிடம் தூது செல்கிறான்.

சின்ன அர்ஜுனன் சண்டை என்று ஒரு மகா குழப்பமான நாடகம் ஒன்றைப் படித்தேன். இதில் புலந்திரன் தூது போகிறான்; அஸ்தினாபுரத்தில் ஹனுமான் லங்கையில் நந்தவனத்தை அழித்தது போல ஒரு நந்தவனத்தை அழிக்கிறான். வந்தது பலந்திரன் என்று அஸ்தினாபுரத்தில் தெரியவில்லை. யார் என்று கண்டுபிடித்து அவனை எதிர்க்க கர்ணன் ஆலோசனையில் புலந்திரன்-கலந்தாரியின் மகன் சின்ன அர்ஜுனன் (துச்சளையின் பேரன்) போகிறான். போகிற வழியில் துரியோதனன் மனைவி, துச்சாதனன் மனைவி, மற்ற கௌரவர்களின் மனைவிகள் எல்லாரும் திரௌபதியைப் பற்றி இழிவாகப் பாடி கும்மி அடிப்பதைக் கேட்கிறான். உடனே அவர்கள் சேலைகளை உருவி நிர்வாணமாக ஓட விடுகிறான். இதைக் கேட்டு அவனோடு போரிட வந்து துச்சாதனனை நாகாஸ்திரத்தால் கட்டிவிடுகிறான். பிறகு தான் நந்தவனத்தை அழித்தவனோடு சண்டை போட வேண்டும் என்பது நினைவு வந்து புலந்திரனோடு சண்டை. அப்பா-மகன் என்று தெரிந்து சமாதானம் ஆகிறார்கள். நாடகம் முடியப் போவதால் புலந்திரன்   அஸ்தினாபுரத்தில் பாண்டவர் கட்சியை எடுத்துச் சொல்ல, துரியோதனன் மறுக்க, புலந்திரன் திரும்புகிறான். ஒரு நாடகம் பார்க்கப் போனால் நாலு நாடகத்தை அரைகுறையாகக் காட்டுவார்கள் போலிருக்கிறது.

பொன்னருவி மசக்கை கர்ணனுக்கும் அவன் மனைவி பொன்னருவிக்கும் நடக்கும் குடும்ப சண்டை.

திரௌபதி குறம் சிறப்பான இசைப்பாடல். வனவாச காலத்தில் திரௌபதி குறத்தி வேடமிட்டு துரியோதனன் மனைவியிடம் பாண்டவர் வெற்றி அடைவார்கள் என்று குறி சொல்கிறாள். துரியோதனன் இது திரௌபதி என உணர்ந்து அவளை சிறைப்படுத்துகிறான். அர்ஜுனன் வந்து அவளை மீட்கிறான். 1880-இல் பதிக்கப்பட்டதாம். சென்னை அரசு நூலகத்தில் கையெழுத்துப்படியாக மட்டுமே இருந்ததாம். இணையத்தில் ஒரு மின்பிரதி கிடைத்தது.

கர்ணமோட்சம், கர்ண மகாராஜா சண்டை போன்ற தெருக்கூத்துகள் பிரபலமாக இருக்கின்றன. விஸ்வகேது திருமணம் என்ற கூத்து கர்ணனின் மகன் விருஷகேதுவின்  திருமணத்தைப் பற்றியாம். மணிமாலன் சண்டை பீமன் கல்யாண சௌகந்திக மலரைத் தேடிச்செல்லும்போது குபேரனின் படைத்தலைவன் மணிமாலனோடு நடத்தும் போரைப் பற்றியது.

மெலட்டூரைச் சேர்ந்த வையாபுரிச் சித்தர் என்பவர் அரவான் களப்பலி என்ற இசை நாடகத்தை எழுதி இருக்கிறார். இது இன்னும் மெலட்டூர் பகுதிகளில் நடிக்கப்படுகிறதாம். கண்ணன் ஐந்து பாண்டவர்கள், திரௌபதி எல்லாரிடம் அரவானை பலி இட வேண்டும் என்றும் சொல்ல, ஒவ்வொருவரும் ராஜ்யமே வேண்டாம் என்று மறுக்க, பிறகு அரவானே ஒவ்வொருவரிடம் சென்று விடை பெற்று வர என்று போகிறது.

பாரத அம்மானையை எழுதியவர் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியக் கவிஞர்! கவிஞர் கா.மு. ஷெரீஃப் அண்ணாவியாரின் சொந்த ஊரான அதிராம்பட்டினம், சுற்றுவட்டாரங்களில் பாடப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறாராம்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் மழை பெய்யாவிட்டால் வில்லிபாரதத்திலிருந்து விராடபர்வம் படிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் ஒரு கலை வடிவே – ஏறக்குறைய காலட்சேபம் மாதிரி. முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பே இப்பழக்கம் அருகிக் கொண்டிருந்தது.

திரௌபதி வழிபாடு தமிழ் பாரம்பரியத்தில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் மட்டும் திரௌபதிக்கு 300 கோவில்கள் இருக்கின்றனவாம். வடதமிழகத்தில்தான் அதிகம் என்று நினைக்கிறேன். திரௌபதி விழா என்று சிறு வயதில் நானே பார்த்திருக்கிறேன். தமிழ் வம்சாவளியினர் வாழும் ஃபிஜி, மற்றும் ரீயூனியன் தீவுகளில் காந்தாரி வழிபாடும் உள்ளதாம். திரௌபதி வழிபாட்டு சடங்குகளில் மகாபாரத பாராயணம், தெருக்கூத்து, தீமிதி, கூத்தாண்டவர் திருவிழா எல்லாம் உண்டு.

பேராசிரியர் சீனிவாசன் எழுதிய தமிழகத்தில் பாரதம் – வரலாறு-கதையாடல் (2011) சுவாரசியமான புத்தகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் விரிவாக எழுதி இருப்பார் என்று யூகிக்கிறேன்.

பின்குறிப்பு: புகழேந்திப் புலவர் இந்தப் பதிவில் இருக்கும் படத்தைப் போலத்தான் இருந்தாரா என்று கேட்பவர்களுக்கு பிடிசாபம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மஹாபாரதம்