சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்டவை. (தமிழாசிரியர், திமலாவைத் தவிர). ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தான். அவருடைய கதைகளில் பெரும் கேள்விகள் எழுவதே இல்லை. அவர் புதிதாக எந்த கருவையும் உருவாக்கிவிடவும் இல்லை. சின்னச் சின்ன நகாசு வேலைகள், (உதாரணம் – கவிதை படிக்கும் ரோபோ) மெல்லிய நகைச்சுவை ஆகியவைதான் அவற்றின் பலம். ஒரு ரோபோ உயிர் பெறும் கருவை அலுப்புத் தட்டும் வரையில் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அறிவியல் புனைவுகள் எனக்கு அறிமுகம் ஆனதே சுஜாதா மூலம்தான். 1976 வாக்கில் கல்கி பத்திரிகையில் ஏழெட்டு சிறுகதைகளை எழுதினார். காலப்பயணம், நடப்பதை முன் கூட்டியே சொல்லும் கம்ப்யூட்டர், அணு ஆயுதப் போரில் அழிந்த உலகம் என்று பல கருக்களை வைத்து எழுதினார். அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. அறிவியல் புனைவுகளின் சாத்தியங்கள் புரிந்தன. ஒரு அதிசயம் நடந்துவிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தன. குறிப்பாக கால எந்திரம் சிறுகதையில் இறந்த காலத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் வரலாற்றை முழுமையாக மாற்றிவிடலாம் என்ற கருத்தை முதல் முறையாகப் படித்தேன். ஆங்கிலத்தில் SF படித்தவர்களுக்கு அது தேய்வழக்காகக் கூட இருக்கலாம். ஒன்பது பத்து வயது சிறுவனுக்கு அது கண்திறப்பு.

அந்த கல்கி சிறுகதைகளின் தொகுப்பு கிடைத்தது, அதைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். பிறகு பிற அறிவியல் சிறுகதைகளையும் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன்.

கல்கி சிறுகதைகளில் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை தமிழாசிரியர். இன்று படித்ததைப் போலவே நினைவிருக்கிறது. இன்றும் புத்திசாலித்தனமான கரு என்றே கருதுகிறேன்.

என்ன கதை? பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன, தமிழ்தான் உலகத்தின் பொதுமொழி. ஆனால் தமிழ் எக்கச்சக்கமாக மாறிவிட்டது. சங்கத தமிழை இன்று நாம் புரிந்து கொள்ள கஷ்டப்படுவது போல நமது தமிழை அன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அது பழந்தமிழ், வழக்கொழிந்துவிட்டது. தமிழ் சுருங்கிவிட்டது – “உனக்குப் புரிகிறதா?” என்பது “புரி?” என்று மாறுகிறது. புரியவில்லை என்று சொல்ல வேண்டுமா? “அபுரி!” பழந்தமிழை கற்ற ஒரே ஒருவர்தான் இன்னும் இருக்கிறார் – அவர்தான் தமிழாசிரியர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பல வருஷங்களாக ஒரு மாணவனும் பழந்தமிழைப் படிக்க வரவில்லை. அவரது வேலை அபாயத்தில். திடீரென்று 2 பேர் வருகிறார்கள். மாணவர்கள் கிடைத்துவிட்டார்கள், வேலைக்கு இருந்த அபாயம் போயிற்று என்று இவருக்கு சந்தோஷம். பல்கலைக்கழகத் தலைவர் மாணவர்களை பார்வையிட வருகிறார், யாரையும் காணவில்லை. தமிழாசிரியர் அவர்களைத் தேடுகிறார். கடைசியில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து படையெடுத்து வருபவர்கள், தங்கள் தொடர்பு மொழியாக பழந்தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தக் கம்ப்யூட்டராலும் உடைக்க முடியாது இல்லையா? தமிழாசிரியருக்கு இப்போது அசதித் துறையில் வேலை. (சதியின் எதிர்ச்சொல் அசதி!)

மொழி எப்படி மாறக் கூடும், எப்படி குறைவான ஒலிகளைக் கொண்டு அதே கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் என்பதெல்லாம் அப்போது (இப்போதும்) உற்சாகமூட்டிய கருத்துக்கள். சதி-அசதி வார்த்தை விளையாட்டெல்லாம் இத்தனை வருஷம் கழித்தும் மறக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது நவாஹோ இந்தியர்களின் மொழியை ரகசிய தொடர்பு மொழியாக பயன்படுத்தினார்களாம். சுஜாதா எங்காவது இந்தச் செய்தியைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

கல்கி சிறுகதைகளில் தேவன் வருகை அவருக்கு பிடித்தமானது என்று தெரிகிறது. ஆனால் ஓ. ஹென்றி ட்விஸ்ட் மட்டுமே உள்ள, கடைசி வரிக்காகவே எழுதப்பட்ட சிறுகதை. கடவுள் ஆறு மணிக்கு தரிசனம் தருகிறேன் என்கிறார். பிறகு என்ன? சூரியன் சிறுகதை அவ்வப்போது anthology-களில் இடம் பெறுகிறது. அணுகுண்டுப் போரால் நிலப்பரப்பு முழுதும் கதிர்வீச்சு, மனிதர்கள் பூமிக்கடியே வாழ்கிறார்கள். ஒரு சிறுவனுக்கு சூரியனைப் பார்க்க விருப்பம். காலமானவர் சிறுகதையில் பத்திரிகையின் ஜீவநாடியான கம்ப்யூட்டர் நாளை பத்திரிகை ஆசிரியர் இறக்கப் போவதை இன்றைய செய்தியாக பிரசுரிக்கிறது. நகர்வலம் சிறுகதையில் மூழ்கிவிட்ட சென்னை சுற்றுலாத் தலமாக மாறி இருக்கிறது. வாசல் சிறுகதையில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மக்களைக் கொல்லும் நாட்டின் தலைவர் நரகத்துக்கு செல்கிறார். யயாதி சிறுகதையில் 25 வயதுக்கு திரும்ப மருந்து சாப்பிடும் அறுபது வயதுக்காரர் கொஞ்சம் அதிகமாக மருந்தை சாப்பிட்டுவிடுகிறார். ரூல் நம்பர் 17-இல் அரசு குழந்தை பிறப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் வேளையில் ஒரு clerical error-ஆல் அனுமதி இருக்கிறது என்று நினைக்கும் அப்பா. கால எந்திரம் அந்த வயதில் கொஞ்சம் சிந்திக்க வைத்த கதை. 2020களின் மனிதன் தொல்காப்பியரை சந்திக்கிறான்.

பிற சிறுகதைகளில் திமலா சிறப்பானது. அவரது திறமை வெளிப்படும் அபூர்வ SF. இன்னும் 500 வருஷம் கழித்து கோவில், சடங்கு எல்லாம் எப்படி நடக்கும்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பார்களா? பல தளங்களில் யோசிக்க வைக்கும் சிறுகதை. விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டே போனால் சடங்குகள் சார்ந்த ஆன்மீகம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அறிவியல் சிறுகதைகள் என்று சொன்னாலும் இவற்றில் அறிவியல் சிறுகதைகள், அமானுஷ்ய சிறுகதைகள் எல்லாவற்றையும் பற்றியும் கலந்து கட்டி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, சொர்க்கத்தீவு, சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் ஆகியவற்றை அறிவியல் புனைவுகள் என்று வகைப்படுத்தலாம்தான், ஆனால் நாவல்களை தவிர்த்திருக்கிறேன்.

ஒரு நாள் போன்ற சிறுகதைகளில் அவர் முனைந்திருந்தால் நல்ல சிறுகதைகள் கிடைத்திருக்கலாம். நல்ல கரு. திமலாவின் பாதிப்பு உள்ள சிறுகதை. கனவு வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவனை விவரிக்கிறது. தலைதீபாவளி கொண்டாட்டம். ஆனால் அன்றைய முன்னேறிய நாகரீகத்தில் தலைதீபாவளி என்ற பேச்சே கிடையாது. ஆசைப்படும் எஞ்சினியருக்காக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார்கள்.

சோம்னா (1971) நல்ல அறிவியல் சிறுகதை என்பதை விட நல்ல சிறுகதை. கொஞ்சம் போரடித்துக் கொண்டே போயிற்று, கடைசி வரியில் மாற்றிவிடுகிறார்.

அவருக்கு இரண்டு கருக்களில் ஓரளவு விருப்பம் இருந்திருக்கிறது. ரோபோ உயிர் பெறுவது, பல நூறாண்டுகளுக்குப் பின் பெண்களின் நிலை. இவற்றை வைத்து பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பிற்காலத்தில் அவர் எழுதிய மீண்டும் ஜீனோ போன்றவை ரோபோ உயிர் பெறும் கருவை வேறு விதமாக யோசித்ததுதான்.

ரோபோ உயிர் பெறும் கருவை வைத்து எழுதியவற்றில் திவாவில் உயிர் பெற்ற ரோபோ தன்னை உருவாக்கியவனைக் கொல்கிறது.

பெண்களின் நிலை கருவை வைத்து எழுதியவற்றில் வாசனை சிறுகதையில் பெண்கள் அருகிவிட்டனர், உலகிலேயே பத்து பெண்கள்தான் இருக்கின்றனர், அவர்களை கண்காட்சியில் வைத்து காட்டுகிறார்கள். வெளியில் இருக்கும் சில பெண்கள் காட்சிப் பொருளாக மாற விரும்பாமல் ஒளிந்து வாழ வேண்டிய நிலை. ஒன்பதாவது பெண் சிறுகதையில் பெண்கள் குழந்தை பெற விரும்புவதில்லை. ஏமாற்றி தாயாக்குபவர்களுக்கு அரசு ஊக்கப் பரிசு தருகிறது. முன்னால் சொன்ன கல்கி சிறுகதைகளில் ஒன்று. மஞ்சள் ரத்தம் சிறுகதையில் அறைக்கு வரும் பெண் ரோபோவோ என்று சந்தேகித்தால் அவள் பூமியின் மனுஷி.

டாக்டர் ராகவானந்தம் வரும் சிறுகதைகள் அனேகமாக அறுபதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் சுஜாதா உத்தேசித்தது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே. ராகவானந்தம் விஞ்ஞானி. எதையாவது கண்டுபிடிப்பார், அது வேலைக்காகாது. இந்தக் கருவை வைத்து சின்னதாக தமாஷ் செய்வார். ராகவேனியும் 277 சிறுகதையில் உலகை அழித்துவிடக் கூடிய புதிய element ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டு அதை ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள். 1000 வருஷங்கள் வாழ்வது எப்படி சிறுகதையில் காயகல்பம் சாப்பிட்டுவிட்டு 300 வருஷம் உயிரோடு இருக்கும் ஒருவரை சந்திக்கிறார்கள். வாட்டர் கார் விவகாரத்தில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை வைத்து காரை ஓட்டுகிறார்கள்.

ராகினி என் வசமாக அமானுஷ்ய சிறுகதை என்றுதான் வகைப்படுத்த வேண்டும். பெரியவர் என்னவெல்லாமோ வித்தை காட்டுகிறார். அஷ்டமாசித்தி தெரிந்தவர் போலிருக்கிறது. முடிவு வரிக்காகவே எழுதி இருக்கிறார். நல்ல வரிதான் – “நான் எழுந்து சென்று அந்தக் கூட்டத்தில் மறைவதை நானே பார்த்தேன்”. ஆனால் அது மட்டும் பத்தாது.

அனாமிகா போன்ற சிறுகதைகள் SFதானா என்பதே சந்தேகம்தான். சுனாமியில் இறந்த ஒரு பெண்ணின் கையில் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகம் இருந்ததாம். அதைக் கேட்ட நெகிழ்வில் இறந்து போன பெண் சுஜாதாவிடமே பீச்சில் வந்து பேசுவதாக ஒரு கதை. ராகினி என் வசமாக சிறுகதையை கொஞ்சம் உல்டா செய்தது போல இருக்கிறது.

ஜில்லு சிறுகதை கல்கி சிறுகதையான சூரியனை நினைவுபடுத்தியது. கதிரியக்க மழை பெய்யப் போகிறது. அரசு ஊரையே காலி செய்கிறது. நாய்க்கு இடமில்லை. சிறுவன் தன் நாயோடு ஓடிவிடுகிறான்.

சில சமயம் அவர் படித்த கதைகளை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1 (1969) Flowers for Algernon-இன் தமிழ் வடிவம்.

இன்னும் இருக்கின்றன, ஆனால் நினைவில் வந்தது, சமீபத்தில் படித்தது இவ்வளவுதான்.

பொதுவாக அறிவியல் புனைவுகளில் அறிவியல் plausible ஆக இருந்தால் நல்லது. இன்று நடக்காவிட்டாலும் இன்னும் ஆயிரம் வருஷங்கள் கழித்து நடக்கும் சாத்தியக்கூறு இருந்தால் நல்லது. ஆனால் சுஜாதா இந்த சிறுகதைகளில் பொதுவாக உத்தேசிப்பது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே.பல கதைகளில் சின்னதாக தமாஷ் பண்ணவே எழுதி இருக்கிறார். அதுவும் டாக்டர் ராகவானந்தம் கதைகளில் இது மிகத் தெளிவாகத் தெரியும்.

விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக இன்று படிக்கும்போது அவரது அறிவியல் சிறுகதைகள் பெரிதாக கவர்வதில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களைக் கவரும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. இன்று அவரது தீவிர ரசிகர்கள், அல்லது முன்னோடி முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. உங்கள் பதின்ம வயது மகனோ மருமகளோ nephew-ஓ niece-ஓ தமிழில் என்ன படிக்கலாம் என்று கேட்டால் இவற்றை பரிந்துரைத்துவிடாதீர்கள். திமலா கூட உலகமகா தரிசனம் என்று சொல்லிவிட முடியாது. தமிழாசிரியர் புத்திசாலித்தனமான சிறுகதை, அவ்வளவுதான்.

அதற்காக அவரது முன்னோடி முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் இல்லை. கால்குலேட்டர்கள் வந்துவிட்டதால் பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மேல் மரியாதை போய்விடுகிறதா என்ன? ஆனால் அவருக்கு நன்றி சொல்ல இந்த பதிவு. இன்றும் அவரே தமிழின் முதன்மை அறிவியல் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். (ஜெயமோகனின் முயற்சிகளை நான் gothic fiction என்றே வகைப்படுத்துவேன்.)

அவரது அறிவியல் அபுனைவுகளைப் பற்றியும் ஒரு வார்த்தை. இன்று இவற்றால் பெரிய பயன் இல்லை. அவற்றின் தாக்கத்தை இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உணர்வது கஷ்டம். ஆனால் ஒரு காலத்தில் அவற்றுக்கு இருந்த மவுசு மிக அதிகம். ஒரு தலைமுறைக்கே அறிவியலில் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். கடவுள் இருக்கிறாரா இன்றும் படிக்கக் கூடிய அறிமுகப் புத்தகம். ஏன் எதற்கு எப்படி, ஜீனோம், ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து போன்ற புத்தகங்களை இன்று நாஸ்டால்ஜியாவுக்காகத்தான் படிக்க வேண்டும். அவற்றைப் பற்றி எழுத பெரிதாக எதுவும் இல்லை.

படிக்க வேண்டுமென்றால் தமிழாசிரியர், திமலா இரண்டை மட்டுமே பரிந்துரைப்பேன். முன்னோடி மட்டுமே. இன்றும் தமிழில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதுதான் வருத்தம். எனக்கு அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற கனவு உண்டு…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதா: பிரிவோம் சந்திப்போம்

பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

30-35 வருஷங்களுக்கு முன் விகடனில் பிரிவோம் சந்திப்போம் தொடர்கதையாக வந்தது. அப்போதெல்லாம் சுஜாதாவின் சாகசக் கதைகள்தான் எனக்கு comfort-food ஆக இருந்தது. இதுவோ காதல் கதை. அப்போதெல்லாம் காதல் கதைகள் என்றால் பிடிக்காது. ஒரு வாரம் படித்தால் அடுத்த வாரம் விட்டுவிடுவேன்.

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் comfort-food ஆக சுஜாதா நாவல் ஒன்றைத் தேடினேன். இது கண்ணில் பட்டதும் சரி முழுவதுமாகப் படித்துப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன்.

கதையில் அங்கங்கே ஓட்டைகள் தெரிந்தாலும் நாயகன் ரகுவின் முதல் காதல், காதல் முறிந்ததால் ஏற்பட்ட காயம், அடி வாங்கியதாலேயே முழுவதும் மறக்க முடியாமல் – not able to completely move on – தவிப்பது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது “காதலி” ரத்னாவின் பாத்திரம், திருமணத்துக்கு முந்தைய மதுவின் சித்திரம், ரகுவின் அப்பாவின் அறிவுபூர்வமான அணுகுமுறை எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

ஆனால் ரகுவின் அப்பா சரியாக ரகுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்போது இன்னொரு பெண்ணை “வைத்துக் கொள்வது” என்னடா சினிமாத்தனமாக இருக்கிறதே என்று தோன்ற வைக்கிறது. ராதாகிருஷ்ணன் மனைவியை முன்னாள் காதலனோடு ஊர் சுற்ற அனுப்புவது என்னடா தெலுகு சினிமாத்தனமாக இருக்கிறதேன் என்று நினைக்க வைக்கிறது. எதற்காக அனுப்ப வேண்டும்? ரத்னாவோடு நிச்சயதார்த்தம் என்றால் சரியாக அங்கே மது வந்து காரியத்தைக் கெடுக்கிறாள்.

ரகுவின் இளிச்சவாய்த்தனம் நிச்சயமாக அந்தக் கால இளைஞர்களால் அவன் பாத்திரத்தில் தன்னை கொஞ்சமாவது காண வைத்திருக்கும். (தொடர்கதை வந்தது இதயம் திரைப்பட முரளி காலம்…)

அமெரிக்காவின் சித்தரிப்பு சில சமயங்களில் புன்னகைக்க வைக்கிறது. குறிப்பாக இந்தியாவை மறக்க முடியாத முதல் தலைமுறையின் கலாசாரத் தடுமாறல்கள்.

வாரப்பத்திரிகை தொடர்கதையில் not able to completely move on என்பதை அருமையாக, உண்மையாக சித்தரிப்பது சுஜாதாவின் திறமையை உணர வைக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்பதால் சேர்க்கப்பட்டிருக்கும் சினிமாத்தனமான நிகழ்ச்சிகள் எத்தனை திறமை வாய்ந்த எழுத்தாளரையும் நீர்த்துப் போக வைக்கும் என்பதை புரிய வைக்கிறது. சுஜாதா வாரப் பத்திரிகை பிராபல்யம் என்ற மாயைக்குள் சிக்காமல் இருந்தால்… என்று பெருமூச்சு விட வைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதா: செப்டம்பர் பலி

செப்டம்பர் பலி எழுபது-எண்பதுகளில் வாரப் பத்திரிகை தொடர்கதையாக வந்தது என்று நினைவு. அப்போது அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன்.

இன்று முழுமையாகப் படிக்கும்போது வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் அவ்வப்போது ஏற்படும் கச்சிதக் குலைவு இல்லாமல் சீராகச் செல்வது தெரிகிறது. சினிமாத்தனமான நிகழ்ச்சிகளிலும் நம்பகத்தன்மை இருக்கிறது. அங்கங்கே சுஜாதாவின் டச் தெரிகிறது. ஆனால் எளிமையான வணிக நாவல் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

என்ன கதை? பெங்களூர். எளிய மனிதன் தங்கசாமி மீது கொலைக்குற்றம் ஜோடிக்கப்படுகிறது. மூன்று வருஷம் சிறை. பணக்காரப் பெண் வினோதினியோடு தற்செயலாக பழக்கம். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நிழலான முதலாளியைத் தேடுகிறான். வினோதினி உதவுகிறாள். காதல். அவளது அப்பாவும் சம்மதிக்கிறார். முடிவில் வழக்கமாக தமிழ்ப்படங்களில் வருவது போல வில்லன் யார் என்று ஒரு திடுக்கிடும் திருப்பம். தங்கசாமியால் ஒன்றும் செய்யமுடியாது. வில்லன் கோஷ்டியோடு கைகோர்ப்போம், செப்டம்பருக்குள் அவர்களை பலி கொடுப்போம் என்று வினோதினி அவனுக்கு தைரியம் தருகிறாள்.

ஓட்டைகள் இல்லாமல் இல்லை. முதலாளியைத் தேடும் தங்கசாமி தனக்குத் தெரிந்த சின்ன லெவல் வில்லன் கோஷ்டி ஆசாமிகள் – பட்டர், வக்கீல் – மூலம் அடுத்த நிலை வில்லன்கள் பக்கம் போக முயற்சியே எடுப்பதில்லை. இன்னொரு ஓட்டையை விவரித்தால் வில்லன் யார் என்று தெரிந்துவிடும், அதனால் வாயைப் பொத்திக் கொண்டுவிடுகிறேன்.

சுஜாதாவின் டச் சில இடங்களில் தெரிகிறது. பெண் பாத்திரங்கள் – வினோதினி, கிருஷ்ணவேணி – நன்றாக வந்திருக்கின்றன. நடைமுறையில் நடக்காதுதான், ஆனாலும் வினோதினி-தங்கசாமி ஈர்ப்பு இயல்பாக இருக்கிறது. சிறையில் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரி, போலீஸ் விசாரணைகள் இயல்பாக இருக்கின்றன(ர்).

இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றிய எண்ணம் இதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை என்பதுதான். இது நல்ல மூலக்கதை. விஜய் போன்றவர்களை நாயகனாக வைத்து மாஸ் திரைப்படமாக எடுக்கலாம். தனுஷ் போன்றவர்களை நாயகனாகப் போட்டு நடிக்கவும் வைக்கலாம். யாராவது உதவி இயக்குனர்கள் இந்தப் பக்கம் வந்தால் யோசிங்கப்பா!

படிக்கலாம். ஆனால் எளிய வணிக நாவல்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் “நிர்வாண நகரம்” – மீள்பதிவு

பத்து வருஷங்கள் முன்னால் எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாகி இருக்கின்றன.

நிர்வாண நகரம் போன்ற (சில) நாவல்களில் சுஜாதா சாகச நாவல், வணிக நாவல், வாரப் பத்திரிகை தொடர்கதை ஆகியவற்றின் எல்லைகளைத் (constraints) தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். அதிலும் அனாயாசமாகத் தாண்டி இருக்கிறார். வீரேந்தர் செவாக்கும் நிறைய செஞ்சுரி அடித்திருக்கிறார். ராஹுல் திராவிடும். ஆனால் திராவிட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் அவரது உழைப்பு தெரியும். செவாக் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் ஒரு அலட்சியம், இதெல்லாம் என்ன ஜுஜுபி என்ற ஒரு attitude தெரியும். அதே போலத்தான் வாரப் பத்திரிகையில் எழுதினால் என்ன, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை வாராவாரம் ஒரு முடிச்சு போட்டு கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தால் என்ன, சாகசங்களை வைத்து பக்கத்தை நிரப்ப வேண்டிய தேவை இருந்தால் என்ன, இதை எல்லாம் மீறி இலக்கியம் படைப்பது பிஸ்கோத் வேலை என்ற மாதிரி ஒரு attitude தெரிகிறது.

இந்த நாவலைப் பற்றி எழுதுபவர்கள் இதன் குறும்புத்தனத்தைத்தான் பெரிதும் சிலாகிக்கிறார்கள். ஆனால் அந்த குறும்புத்தனத்திலேயே ஆழ்ந்துபோய் அவை நகர வாழ்வின் வெறுமையையும் சிறப்பாகக் காட்டுவதை தவற விட்டுவிடுகிறார்கள். எனக்கு அந்த சித்தரிப்பால்தான் இது இலக்கியமாக உயர்கிறது.

இலக்கியம்தான், ஆனால் இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம். இது வாழ்வின் பெரிய தரிசனங்களைக் காட்டிவிடவில்லை. உங்களைப் பெரிதாக சிந்திக்க வைத்துவிடாது. விஷ்ணுபுரம் மைக்கேலாஞ்சலோவின் Sistine Chapel என்றால் இது ரெட்டைவால் ரங்குடு கார்ட்டூன். (நானும் குறும்புத்தனத்தை மட்டும்தான் இங்கே முன்வைக்கிறேனோ?)

அன்று எழுதியது கீழே.


நான் சுஜாதாவின் பரம விசிறி ஆனது இந்தப் புத்தகத்தைப் படித்துதான். அந்த phase ஒரு பத்து வருஷமாவது நீடித்தது. இந்தக் கதை குங்குமத்தில் தொடராக வந்தபோது படித்தேன். சமீபத்தில் மீண்டும் படித்தேன்.

முதல் அத்தியாயத்திலேயே தூள் கிளப்பினார். தற்காலிக கிளார்க்காக இருக்கும் சிவராஜுக்கு மெடர்னிடி லீவில் போன பெண் திரும்பி வருவதால் நாளையிலிருந்து வேலை இல்லை. விஷயம் தெரிந்ததும் சிவராஜ் கேட்கும் கேள்வி: வேற யாராவது கிளார்க்குகள் கர்ப்பமா இருக்காங்களா சார்?” ஹோட்டலில் டேபிளுக்கு காத்திருக்கும் சிவராஜ் நினைக்கிறான் – “சினிமா இன்டர்வல்லில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்” சென்னை என்ற நகரம் தன் தனித்தன்மையை அழிப்பதைப் பொறுக்க முடியாமல் சிவராஜ் சென்னையைப் பழி வாங்க தீர்மானிக்கிறான். அப்புறம் ஒரு ஜட்ஜ் கொலை, சிவராஜ் அடுத்தபடி ஒரு டாக்டரை கொல்லப் போகிறேன் என்று போலீசுக்கு ஜீவராசி என்ற பெயரில் லெட்டர் எழுதுவது, போஸ்டர் அடித்து கமிஷனர் ஆஃபீசுக்கு முன்னாலே ஓட்டுவது, டாக்டர் கொலை, ஒரு எம்.எல்.ஏ.க்கு மிரட்டல், வனஜா தன்னை கல்யாணம் செய்து கொள் என்று சிவராஜை கேட்பது, திருமணத்தால் சிவராஜுக்கு வாழ்க்கை நிலையாக அமையப் போவது, கணேஷ்-வசந்த் வருகை, எம்.எல்.ஏ. மரணம், கணேஷ் வசந்த் சிவராஜை கண்டுபிடிப்பது என்று கதை போகிறது.

மிகவும் கலக்கலான கதை. வசனம் பிரமாதம். ஒரு பம்மாத்து இன்டர்வ்யூவில் சிவராஜை கேட்கிறார்கள் – “நீங்கள் எதற்காக இந்த வேலையை விரும்புகிறீர்கள்?” “என் வாழ்நாளின் ஆதர்சம் உங்கள் கம்பெனியில் ஒரு டெஸ்பாட்ச் கிளார்க்காக சேர வேண்டும் என்பதுதான்”. ஒரு டாக்டரை சிவராஜ் பார்க்கிறான். அவர் சொல்கிறார் – “சுவாமி நான் ஒரு ஜி.பி. மனசு சரியில்லைனா சைக்காட்ரிஸ்டிடம் போங்கோ.” சிவராஜின் பதில் “எனக்கு ரெண்டு கொட்டையும் வலிக்கிறது டாக்டர்.”

இத்தனை வருஷம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். சுவாரசியம் குன்றவே இல்லை. சின்ன சின்ன விஷயங்களில் ஒரு காட்சியை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். உதாரணமாக டாக்டரை சிவராஜ் பார்ப்பதற்கு முன்னால் ஒரு அம்மாள் பச்சையா வெளிக்குப் போறான் டாக்டர் என்று குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கவலையோடு சொல்லிக் கொண்டிருப்பார். கமிஷனர் பேட்டியில் ஹிந்து நிருபர் யோசித்து கேள்வி கேட்பதற்குள் கமிஷனர் போய்விடுவார். பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கும். சிவராஜின் தனிமை, கையாலாகாத்தனம் எல்லாம் சிறப்பாக வந்திருக்கும். வனஜா, எம்.எல்.ஏ., சந்தடி சாக்கில் பெண் ரோசலினுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போலீஸ் அதிகாரி, எல்லாவற்றையும் சிறப்பாக எழுதி இருப்பார்.

உடுமலை பதிப்பகத்தில் (இன்றும்) கிடைக்கிறது. விலை எழுபது நூறு ரூபாய். வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இது விஷ்ணுபுரமோ, கரைந்த நிழல்களோ இல்லை. ஆனால் என் கண்ணில் இது இலக்கியமே. ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை பொருட்படுத்துவதில்லை. இது ரசனை வேறுபாடா, இல்லை என் படிப்பு முறையின் குறைபாடா தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். சுஜாதா existential angst பற்றி ஒரு கதை எழுதி இருந்தால் தூள் கிளப்பி இருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்” (மீள்பதிவு)

சுஜாதாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று, ஆனால் பெரிதாக கவனம் பெறவில்லை.

கச்சிதமான கதை.

எங்கோ ஒரு மலையடிவாரத்தில் வைரங்கள் இருக்கின்றன. தற்செயலாக தெரிந்து கொள்ளும் ஒரு பணக்கார சேட்டுப் பையன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறான். இதில் ஒரு கிளீனர் சிறுவன், ஒரு ஊமைச் சிறுமி என்று பாத்திரங்கள்.

கிளீனராக வரும் சிறுவன் கலக்கலான பாத்திரப் படைப்பு. சுஜாதாவுக்கு எப்போதும் இந்த மாதிரி உழைக்கும் வர்க்க சிறுவர்களை படைப்பது பைன் ஹாத் கா கேல். அவர்கள் மேல் அழுத்தும் வறுமையும், அதே நேரத்தில் அந்த வயதுக்கே உரிய ததும்பி நிற்கும் உற்சாகமும் நன்றாக சித்தரிப்பார். அவன் ஊமைச்சிறுமியுடன் விளையாடுவதும், அக்காவை காப்பாற்றுவதும் எல்லாமே நன்றாக வந்திருக்கும். சேட்டு பையனின் பணத்திமிர், ஜியாலஜி ஃப்ரொஃபசரின் ஜம்பம், டீக்கடைக்காரனின் தோற்கப்போகும் தன்னம்பிக்கை என்று ஒரு கை தேர்ந்த ஓவியனின் லாகவத்தோடு ஓரிரண்டு வரிகளில் ஒரு நல்ல சித்திரத்தை நமக்கு காட்டுகிறார்.

சுஜாதாவின் பலங்களில் ஒன்று அவர் உபதேசங்களை கவனமாகத் தவிர்ப்பது. இதெல்லாம் ஒரு பலமா, எந்த நல்ல எழுத்தாளனும் உபதேசம் செய்வதில்லையே, அசோகமித்திரன் உபதேசம் செய்வாரா என்ன என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் நா.பா., அகிலன் மாதிரி எழுத்தாளர்களைப் படித்ததில்லை என்று பொருள். அப்படி கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து வளர்ந்த ஒரு கூட்டத்துக்கு சுஜாதா ஒரு revelation என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு சமூக அவலத்தை, அறச்சீற்றம் உருவாக்கும் ஒரு நிகழ்ச்சியை, வெகு கவனமாக ஃபோட்டோ பிடிப்பது போல எடுத்துக் காட்டுவார். அறச்சீற்றம் என்பது அவர் எழுத்தில் இருக்கவே இருக்காது. இந்தப் புத்தகமும் அப்படித்தான். நகரம், ஒரு லட்சம் புத்தகங்கள், ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், ஒரு மெக்கானிக் செட்டில் இரு சிறுவர்கள் ஒரு நடிகையின் மகளுக்கு நண்பர்களாவது (கதை பேர் நினைவு வரவில்லை) என்று பல புனைவுகளை சொல்லலாம்.

சுஜாதாவின் சிறந்த புனைவுகளில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம் (மீள்பதிவு)

பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு எழுத்தை மாற்றாமல் மீள்பதித்திருக்கிறேன்.

தமிழின் சிறந்த நாடகங்களுள் ஒன்று.

பொதுவாகவே தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. ஷேக்ஸ்பியரும், இப்சனும், பெர்னார்ட் ஷாவும், பெர்டோல்ட் ப்ரெக்டும், ஆர்தர் மில்லரும் இன்னும் தமிழில் இல்லை. அந்த விதத்தில் சுஜாதா ஒரு முன்னோடி. நல்ல நாடகங்கள் எழுத முயற்சி செய்திருக்கிறார். ஊஞ்சலில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஏறக்குறைய டென்னசி வில்லியம்சின் நாடகங்களை நினைவுபடுத்துமாறு அவர் இன்னும் சில நாடகங்களை – டாக்டர் நரேந்திரன், சரளா இப்போது நினைவு வருகிறது – எழுதி இருக்கிறார். குப்பைகளும் உண்டு. உதாரணமாக சிங்கமய்யங்கார் பேரன் எனக்கு தேறவில்லை.

கதை என்ன பிரமாதக் கதை? அப்பா வரதராஜன் ஒரு காலத்தில் பெரிய எஞ்சினியரிங் பிஸ்தா, கவர்னரே இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வருகிறார். இன்று பெண்ணின் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதனின் வீழ்ச்சியை, அப்பா ஒரு anachronism ஆக மாறிவிட்டதை, அருமையாக சித்தரித்திருக்கிறார். ஐயோ, திறமையான, பல வெற்றிகளை அடைந்த மனிதன் இன்று இப்படி சொதப்புகிறானே என்று நமக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்துவதில் சுஜாதா வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மாதிரி பெருங்காயம் வைத்த டப்பாக்களை அவரே நிறைய பார்த்திருப்பார். அதை அற்புதமாக கொணடு வந்திருக்கிறார்.

சுஜாதாவுக்கு நன்றாகத் தெரிந்த பிராமண milieu. வசனங்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன. அது இந்த நாடகத்தின் பெரிய பலம். அப்பா பாத்திரம் மட்டுமில்லை, ஒரு காலத்தில் அப்பாவின் உதவியாளனாக இருந்து இன்று பெரிய தொழிலதிபராக இருக்கும் மதி, பெண் கல்யாணி, அம்மா பாத்திரம், பெண்ணின் காதலனாக வருபவர் எல்லாமே ரத்தமும் சதையும் உள்ள நிஜ மனிதர்கள். சில காட்சிகள் – கல்யாணி பணத்தை அப்பாவுக்கு தருகிறேன் என்பது, வரதராஜன் பஸ் கம்பெனியில் ட்ரிப் ஷீட் எழுதப் போகும் சீன், மதியின் கம்பெனிக்கு சென்று அவனை சந்திக்கும் சீன், மதியின் உதவியாளர்கள் இவரது ப்ராஜெக்ட் தேறாது என்று மதியிடம் சொல்வது எல்லாம் மிக அருமையாக வந்திருக்கும்.

இந்த நாடகத்தை நான் வீடியோவில் பார்த்தேன். ஒரு நல்ல நடிகனுக்கு இந்த நாடகம் ஒரு பிரமாதமான வாய்ப்பு. பூர்ணம் விஸ்வநாதன் இந்த ரோலுக்கு பொருத்தமானவர்தான், ஆனால் ஓவர்ஆக்டிங் செய்து கொலை செய்துவிட்டார். உண்மையை சொல்லப்போனால் அவரது மிகை நடிப்பில் ஏற்பட்ட கடுப்பு எழுத்தின் திறமையையே மறைத்துவிட்டது. கடுப்பேற்றும் மிகை நடிப்புக்கும் இதற்குத் தேவையான ஆர்ப்பாட்டமான நடிப்புக்கும் ஒரு மயிரிழைதான் இடைவெளி, அந்த இடைவெளியை பூர்ணம் தவறவிட்டுவிட்டார். இதை இன்றைய நடிகர்கள் – பிரகாஷ் ராஜ் மாதிரி யாராவது நடித்தால் நன்றாக வரும். பூர்ணமே கூட இன்னொரு நாளில் அருமையாக நடித்திருக்கலாம். என் துரதிருஷ்டம், வீடியோ எடுக்கப்பட்ட அன்று அவர் சொதப்பிவிட்டார்.

ஊஞ்சல் நாடகத்தைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் சிலாகித்திருக்கிறார். உண்மையில் நான் தமிழில் நல்ல நாடகம் இல்லை என்று சொன்னபோது சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி அவர்தான் நினைவுபடுத்தினார். அதற்குப் பிறகுதான் நான் ஊஞ்சல் நாடகத்தை தேடிப் பிடித்து படித்தேன் – பூர்ணத்தின் மிகை நடிப்பால் இந்த நாடகத்தை ஒதுக்கிய நான் மறுவாசிப்பு செய்ய அவரே காரணம். இதைப் பற்றி எங்காவது எழுதி இருக்கிறாரா என்று நெட்டில் தேடிப் பார்த்தேன், தென்படவில்லை. இந்த பதிவு அவர் கண்ணில் பட்டால் ஏதாவது சொல்வார் என்று நம்பிக்கை…

ஜெயமோகன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார், எனக்குத்தான் தேடத் தெரியவில்லை. 🙂 அவரது விளிம்புகளில் ரத்தம் கசிய – சுஜாதா நாடகங்கள் பதிவிலிருந்து ஒரு excerpt:

அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள்.

சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று காலாவதியாகும் ஒரு தலைமுறையை தன் கதைக்கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, அன்புள்ள அப்பா , ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக் கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்ல மெல்ல சமாதானம் செய்து கொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதை விட அந்த சமரசத்தின் பரிதாபம். அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.

சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்க வைக்கும் தன்மை கொண்டவை.

ஜெயமோகனின் மறுமொழியையும் இங்கே இணைத்திருக்கிறேன். ஜெயமோகன் இந்த தளத்தை அனேகமாக தினமும் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. (குறிப்பாக இந்த பதிவை ஜெயமோகனின் கவனத்துக்கு கொண்டு போன உத்தம் நாராயணனுக்கு நன்றி!)

சுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல்ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்.

சுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வர்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவர்ச்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச் சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது.

இந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல.

அருமையான தீம், பாத்திரப் படைப்பு, வசனங்கள், powerful காட்சி அமைப்பு எல்லாமே இந்த நாடகத்தின் பெரிய பலங்கள். கட்டாயமாகப் படியுங்கள், முடிந்தால் (பூர்ணம் சொதப்பிய வீடியோவாக இருந்தாலும் சரி) பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி:
சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி ஜெயமோகன் – விளிம்புகளில் ரத்தம் கசிய
சிமுலேஷனின் விமர்சனம்

சுஜாதாவின் “என்றாவது ஒரு நாள்”

திறமையாக எழுதப்பட்ட கதை.

யோசித்தால் சுஜாதாவும் சில cliche-க்களை பயன்படுத்தி இருப்பது தெரிகிறது. குறிப்பாக புண்ணியகோடி/திலகத்தின் முன்கதை. ஆனால் அந்த cliche-க்களை வைத்து திறமையாக கதையை முன் நகர்த்தி இருக்கிறார்.

புண்ணியகோடி/நாராயணன் திருடன். சிறையிலிருந்து தப்பிக்க அவனுக்கு ஒரு யுக்தி இருக்கிறது. தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். வேலை செய்யும் இடத்தில் திலகத்தின் மீது ஒரு கண். அவனைத் தேடும் போலீஸ். திலகம் பாதுகாப்புக்காக ஆண் துணையைத் தேடுகிறாள். நாராயணனோடு தங்குகிறாள். நாராயணனுக்கு சிக்னல் கொடுத்தாலும் அவளுக்கு நாராயணனை மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறது, ஆனால் ஜெயிலில். போலீஸ் நாராயணனை நெருங்குகிறது. நாராயணன் என்ன செய்யப் போகிறான்?

நாராயணனின் தலைமறைவு வாழ்க்கை; போலீஸ் அவனை நெருங்கும் விதம்; திலகம் வந்ததும் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்; denouement – எல்லாமே சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கதையை உயர்த்துபவை அவைதான்.

கதை சுவாரசியமாகச் செல்கிறது. Cliche எல்லாம் படிக்கும்போது தெரிவதே இல்லை. சுஜாதாவின் சாதனை என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் அவருடைய டச் தெரிகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவின் அரதப்பழசு பேட்டி ஒன்று கண்ணில் பட்டது. 1993-க்கு முந்தைய பேட்டி. உயிரே திரைப்படம் கூட வெளியாகவில்லை. எஞ்சினியர் என்று ஒரு திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடுகிறார், வந்ததா என்று தெரியவில்லை.

Sujatha … has worked with top directors K. Balachandar in Ninaithale Inikkum, Maniratnam in Roja, Shankar in Indian and Bharathiraja in Nadodi Thendral. He has been closely associated with Kamalahasan right from Raj Kamal International’s maiden venture Vikram. And it was he who ignited the spark in Kamal for Marudhanaayagam.’ He is now working with Maniratnam for Dil Se, starring Shah Rukh Khan and Manisha Koirala.

Are you happy with the way your stories have been filmed?

To be frank, no. Not only I, no writer has ever been happy with the way his/her stories have been converted into films. Asked to give his reaction after his novels were filmed, Hemingway put it succinctly: “Take the money and run.Satyajit Ray‘s Pather Panchali is a great film, but the original writer was not happy with it. Hitchcock once said that he would just read the novel he wanted to film, throw away and would never get back to it again during the making of the film.

I am certainly not blaming the directors. It is just that the medium is different. Compared to those who see the film, the readers are a minuscule percentage. Probably my novels would have been read by 30­-40 lakh people, but the films were seen by crores. In a medium like cinema where the stakes are high, compromises are unavoidable. They don’t affect me. People who have read my novels are unhappy with the film versions, but those who have not read them are happy with the films. That in itself explains the differencein audience tastes.

The two stories you wrote exclusively for films for two top directors, K Balachandar and Bharathiraja, flopped. What do you say?

Ninaithale Inikkum for Balachandar was the first script I wrote for a film. Before that, my stories had been filmed, but I had not played any role in writing the screenplay or dialogue. For Ninaithale Inikkum, I had written a totally different kind of screenplay. Unfortunately, owing to constraints like star dates, Balachandar did not follow my script exactly. He made several changes and looked at the film as an opera on the lines of ABBA. My original script was lively and if it had been faithfully followed,it would have been a model screenplay. Anyway, no regrets and I enjoyed working with Balachandar, his assistant Ananthu, Kamal and Rajini.

The same was the case with Bharathiraja’s Nadodi Thendral. The original story I gave was about the assassination of a collector and I had put in a lot of effort. But Bharathiraja changed it into an ordinary triangular love story set in the pre-independence backdrop.

I don’t blame the directors for these failed projects. As I told you. the target audiences are different and the directors know the medium better.

My most satisfying efforts were Maniratnam’s Roja and Shankar’s Indian, though I wrote only the dialogue for these films. Roja especially was a gratifying experience because I participated in all the discussions during its making. For Indian, the director did the thinking , gave me the sequence order and after I wrote the dialogue, Shankar would choose what he wanted.

Was it you who suggested the Marudhanayagam story to Kamal?

In a way, yes. For the last 7 or 8 years Kamal had been searching for the right story to make a historical. He even had plans of doing a historical musical on the lines of Ambikapathi and toyed with the idea of making a film which had only verses for dialogue. While he was examining so many ideas, I suggested why not we go into immediate past history instead of going to ancient period.

It was around that time I came across a folk ballad edited by Tamil scholar Vanamamalai and published by Madurai Kamaraj University. Impressed by the ballad, I showed it to Kamal to find out if it has the potential of a good film. Kamal was initially reluctant, but agreed to go through the ballad.

In the elaborate and excellent introduction was a footnote which said, “This Yousuf Khan was originally a Hindu Vellala called Marudhanayagam.” Kamal immediately jumped at it and felt that the story had all the potential of a good historical film. Kamal felt that the religious conversion could be owing to some social oppression and that would form a good subject for filming.

The story of Marudhanayagam is relatively unknown…

We chose the life of Marudhanayagam for its substantial story element and episodic content. His is not a conventional story of a king. Starting his life as a supplier to the French Army, he sneaks through enemy lines with messages effortlessly. The French train him and the British, spotting his talent, elevate him to the position of a tax collector of Madurai district, only to hang him for disobedience to the British Raj just one year after his rise to the top. It is this stunning elevation from the lowest level and again touching the nadir, this graph of Marudhanayagam’s life, that interested Kamal to make it into a film.

As for deviations, nearly 80% of the film will faithfully adapt Hills’ biography of Marudhanayagam. Only on certain aspects, where no solid or substantial information is available, have we used our imagination.

For instance, no reason is available for Marudhanayagam’s conversion to Islam. Here Kamal has worked back on the character and has imagined the reasons for his conversion beautifully.

Don’t you foresee the danger of ‘Marudha Naayagam’ being compared to Sivaji Ganesan‘s Veerapandiya Kattabomman?

Kamal can stand the comparison easily because he is not going to follow Sivaji Ganesan’s style. Knowing well about Kamal’s yen for perfection and precision, we can be sure that the level of realism in Marudhanayagam will be high. There is no question of any Indian actor playing a foreigner as Javar Sitaraman did in Veerapandiya Kattabomman and spoke his lines in broken Tamil. In Marudhanayagam wherever the British or French officers speak, Kamal, I think, is planning to use dubbing to give it an authentic touch.

Do you think Marudhanayagam, a film with a distinct native flavour, can have a national or an international audience?

Why not? Marudhanayagam may be a historical character, but he is not a larger than life character. It is a story which depicts a man with all his strengths and weaknesses. ‘The rise and fall of a man’ is the one line story of Marudhanayagam, a plot that will interest anyone in any part of the world. When films like Jurassic Park can run for its grandeur and technical brilliance, the same can be said of Marudhanayagam which will be made using state of the art techniques. Kamal is adopting the linear narrative style where through off screen narration a person tells the background of Marudhanayagam, the historical context of the story and so on.

Kamal is supposed to be following the Hollywood style in writing the screenplay of the film. Could you explain that?

I think for the first time in India, a computer has been used in screenplay writing, a method usually adopted by Hollywood film makers. Various software are available for this and Kamal is using a particular software called Movie Magic. All the information about the movie can be accessed with it.

What is you actual input in Marudhanayagam?

I created the Tamil fonts for Movie Magic. I am also overseeing the screenplay written by Kamal. In Hollywood films, you have a screenplay doctor and that is the role I’m playing.

What are your other assignments?

I am working for Maniratnam’s Dil Se. For this film, Maniratnam has given me the plot and has asked me to make it into a story. He has told me not to bother about its conversion into film which he would take care of. He just wants to see how I visualise this story. We are planning to release the book and movie simultaneously. Already one schedule is over.

Shankar’s Assistant A.R. Gandhikrishna is making a film called Engineer with Madhuri Dixit and Arvind Samy in Tamil, Telugu and Hindi. Its also an interesting film I’m working.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், திரைப்படங்கள்

சுஜாதா சிறுகதைகள்

மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு ஸ்ரீரங்கத்துக் கதைகள் மற்றும் அறிவியல் சிறுகதைகளைத் தவிர்க்கிறேன். (முடிந்த மட்டும்).

அவரது பலம் ஒன்றிரண்டு கோடு போட்டு ஒரு தளத்தை தத்ரூபமாகக் கொண்டுவந்துவிடுவது. ஜன்னல் சிறுகதையில் டாக்டரிடம் தாய் “பச்சையா போறான்” என்று தன் மகனைப் பற்றீ விவரிக்கும் அந்த ஒரு வரி காத்திருக்க ஒரு அறை, டாக்டருக்கு ஒரு அறை, ஐந்து பத்து ரூபாய் ஃபீஸ் வாங்கும் டாக்டர், ஜுரம் அல்லது வயிற்றுவலி அல்லது கட்டி என்று அவரைப் பார்க்க வரும் மத்திய வர்க்கக் குடும்பங்கள் எல்லாவற்றையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. அவருக்கே உரிய நடை. பலவீனம்? சில முறை முடிவை நோக்கி வலிந்து தள்ளுவது போல இருக்கிறது. அவரது புகழ் பெற்ற நகரம் சிறுகதையில் அப்போது தெரியவில்லை, இப்போது அப்படித்தான் உணர்கிறேன். என்ன கொடுமை இது சரவணன் என்று அவர் வெளிப்படையாக எழுதாவிட்டாலும் அதைத்தான் சொல்ல முயற்சிக்கிறார் என்று தெரிகிறது – உதாரணமாக அரிசி. பல முறை வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விழைவு தெரிகிறது. இது தொடர்கதைகளில்தான் அதிகம் என்றாலும் சிறுகதைகளிலும் தெரிகிறது. அவர் முயற்சியே செய்யவில்லை என்று நான் உணரும் சிறுகதைகளே எனக்கு இன்றும் அப்பீல் ஆகின்றன.

ஸ்ரீரங்கத்துக் கதைகளில் பல மாணிக்கங்கள் உண்டு. என்னுடைய பர்சனல் ஃபேவரிட் பாம்பு. நான் விவரிக்கப் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்! அவர் காப்பி அடித்த சிறுகதை ஒன்றும் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் உண்டு – இரண்டணா.

அவரது அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்ட முன்னோடி முயற்சிகள் மட்டுமே. அவற்றுள் திமலா மட்டும் ஒரு ரத்தினம்.


எனக்கு சில பர்சனல் ஃபேவரிட்கள் உண்டு. அதில் ஒன்று பேப்பரில் பேர். இதை விட ஜாலியான கிரிக்கெட் கதை அபூர்வம்! அப்புறம் நிஜத்தைத் தேடி. எனக்கே இதே மாதிரி ஒன்று நடந்திருக்கிறது. அதை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள். படித்த அன்று எப்படி அறை விழுந்தது போல் உணர்ந்தேனோ இன்றும் அப்படியேதான் உணர்கிறேன். காகிதக் கொடிகள் இன்னொரு நல்ல சிறுகதை. ஹை கிளாஸ் ஸ்கூலில் கொடி கட்டும் சிறுவனுக்கு அநியாயமாக அறை விழுகிறது. அவனுடைய ரோஷம் எப்படி வெளிப்படுகிறது?


சுஜாதாவே தான் எழுதியவற்றில் தனக்குப் பிடித்த சிறுகதையாக மஹாபலி சிறுகதையை எங்கோ குறிப்பிட்டிருக்கிறார். நல்ல சிறுகதை. ஏன் என்பது மிகச் சரியான கேள்வி.

தன்னை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகதைகளாக அவர் குறிப்பிடுபவை:

  • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
  • ஜன்னல் (கசடதபற): நல்ல சிறுகதை. குறிப்பாக டாக்டரிடம் வரும் இதர நோயாளிகளின் சித்தரிப்பு.
  • காணிக்கை (கல்கி) – ஸ்ரீரங்கத்துக் கதை – படித்துக் கொள்ளுங்கள், விவரிப்பது கஷ்டம்.
  • செல்வம் (கலைமகள்)
  • முரண் (சுதேசமித்திரன்) – பாவண்ணனின் அலசல்
  • நகரம் (தினமணிக்கதிர்)
  • எதிர்வீடு (கணையாழி) – ஸ்ரீரங்கத்துக் கதை
  • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
  • வீடு (தினமணிக்கதிர்)
  • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
  • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்) – சுமார்தான்
  • பார்வை (தினமணிக்கதிர்)

தான் எழுதியவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை என்று அரிசியை சுஜாதா குறிப்பிடுகிறார். திடீரென்று கோணத்தை மாற்றுவதில் அவரது எழுத்துத்திறமை – craft – வெளிப்படுகிறது, ஆனால் இதை விட நல்ல சிறுகதைகளை சுஜாதா எழுதி இருக்கிறார்.


சுஜாதாவின் ஏழு சிறுகதைகளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சிறுகதைப் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவற்றில் இரண்டு ஸ்ரீரங்கத்துக் கதைகள்தான். குதிரை, மாஞ்சு, எல்டோராடோ ஆகியவற்றை நானும் மிகச் சிறந்த சிறுகதைகளாகக் கருதுகிறேன்.

நகரம் சிறுகதை அனேகமாக எல்லாராலும் சுஜாதாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் நானும் இதை விதந்தோதி இருக்கிறேன். கிராமத்து பெண்மணி நகர மருத்துவமனையில் சாதாரணமாக பேசுவது புரியாமல் படும் அவதி மிகப் பிரமாதமாக வந்திருந்தது என்று கருதினேன், இன்னமும் கருதுகிறேன். ஆனால் இந்தப் பதிவுக்காக மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் மிகை உணர்ச்சிக் கதையாகத் தெரிந்தது. சுஜாதா நிகழ்வின் pathos-ஐ வலிந்து அடக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று தேர்ந்தெடுத்தால் அதில் வராது.

குதிரை சிறுகதையும் புகழ் பெற்றது. என் கண்ணிலும் அற்புதமான சிறுகதைதான். வாழ்வின் அபத்தத்தை மிகப் பிரமாதமாக காட்டிவிடுகிறது.

மாஞ்சுதான் ஜெயமோகனுக்கு மிகவும் பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன். நான் இந்தச் சிறுகதையில் என்னை பாச்சாவின் நிலையில்தான் வைத்துப் படித்தேன். என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்த உறவினர் ஒருவருக்கு நான் பொருட்டே இல்லை என்று நான் உணர்ந்த தருணம் ஒன்றுண்டு. பாச்சாவின் குமுறலைப் படிக்கும்போது அதைத்தான் நான் உணர்ந்தேன். ஆண்டாளுக்கு முதலில் மாஞ்சு; அப்புறம் ஆராவமுது. அப்போது அவள் மனதில் பாச்சாவுக்கு என்னதான் இடம்? தன் உறவும் உதவியும் இல்லாமல் மாஞ்சுவால் வாழமுடியாது என்று மாஞ்சுவோடு பிணைப்பு, பாச்சா அவனே சமாளித்துக் கொள்வான் என்று புறக்கணிப்பா? சின்ன வயதில் என் தங்கைக்கு பஜ்ஜி பிடிக்காது. அதனால் என் அம்மா பஜ்ஜி போடும்போதெல்லாம் எங்களுக்கு அதைக் கொடுத்துவிட்டு அவளுக்கு தனியாக பக்கோடா போட்டுக் கொடுப்பாள். ஆனால் எனக்கு பஜ்ஜியை விட பக்கோடாதான் பிடிக்கும், எனக்கு கிடைக்காது. அப்போதெல்லாம் எனக்கு ஆங்காரம் பொத்துக் கொண்டு வரும். அதையேதான் இந்த சிறுகதையிலும் உணர்கிறேன். இந்தச் சிறுகதையை சுஜாதாவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

ஓர் உத்தம தினம் நல்ல சிறுகதைதான். நுண்விவரங்கள்தான் – சாக்கில் தூங்கும் தேவதைக் குழந்தை – இந்தச் சிறுகதையை உயர்த்துகின்றன. ஆனால் என் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வராது. இதே கருவை வைத்து சுஜாதா இன்னொரு சிறுகதை எழுதி இருக்கிறார் – புதிதாக கல்யாணம் ஆகி மகிழ்ச்சி ஆரம்பித்திருப்பவர்கள், கணவன் காவேரியில்? நீந்தச் செல்கிறான் – கதையின் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது ஒரே ஒரு மாலை.

நிபந்தனை இந்த சிறுகதை எனக்கு ஏனோ காதரின் மான்ஸ்ஃபீல்டின் Cup of Tea சிறுகதையை நினைவுபடுத்துகிறது. சுஜாதா அப்படி நினைத்துதான் இதை எழுதினாரா, இல்லை உண்மையிலேயே கருணைக்கு சில எல்லைகள் உண்டு, மனைவியின் எல்லை “களங்கமில்லாத” ஏழைக்கு மட்டுமே உதவி செய்வது, கணவனின் எல்லை மனைவி என்று மட்டுமே நினைத்து எழுதினாரா என்று தெரியாது. மனைவிக்கு அடிமனதில் ஏதாவது பயம் இருந்ததோ?

விலையை நான் நகரம் சிறுகதையை விட ஒரு மாற்று அதிகமாக எடை போடுவேன். இரண்டிலும் தான் பழகிய உலகத்துக்கு வெளியே உள்ள உலகத்தை புரிந்து கொள்ளாமல் பெரும் துயரத்துக்கு ஆளாகும் கருதான். ஆனால் இது எனக்கு இன்னும் இயற்கையாக இருக்கிறது.

எல்டொரோடா என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சிறுகதை. என் அப்பாவை என்னை நினைவு கூர வைக்கும் சிறுகதை. என் வாழ்க்கையின் முதல் நாயகனான என் அப்பாவோடு நெருக்கமாக உணர்ந்த தருணங்கள், அவரை பலவீனங்கள் நிறைந்த மனிதராகவே கண்டு அவரோடு எப்போதும் முரண்டிய பதின்ம வயதுக் காலம், நாயகன் என்ற பெரும் பாரம் நீங்கி அவரை பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனாக புரிந்து கொண்ட காலம், அவரது பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவரது பலவீனங்கள் பெரிதாகத் தெரியாமல் அவரை மீண்டும் நாயகனாகவே பார்த்த காலம். அன்பான வார்த்தைக்காக, பேச்சுத் துணைக்காக ஏங்கிய, தன் பிரச்சினைகள், குடும்பம் என்று விலகிச் சென்றுவிட்டாலும் அந்தப் பிள்ளைகள் வாழ்வின் மூலமே வாழ்ந்த காலம் எல்லாவற்றையும் நினைவு கூர வைக்கிறது.


எஸ்ரா நகரம் மற்றும் ஃபில்மோத்ஸவ் இரண்டு சிறுகதைகளையும் தன் பட்டியலில் சேர்க்கிறார். ஃபில்மோத்ஸவை பதின்ம வயதில் படித்தபோது நிஜப் பெண்ணை விட்டு போர்னோ படம் பார்க்கவும் ஒருவன் போவானா என்றுதான் தோன்றியது. ஏதோ perversion-ஐ வைத்து கிளுகிளுப்பு கதை எழுத முயற்சி என்று புறம் தள்ளிவிட்டேன். வயதான பிறகுதான் அதன் உண்மை புரிந்தது. கதையில் அவரது தொழில் திறமை தெரிகிறது, ஆனால் என் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வராது.


சுஜாதாவின் மத்யமர் தொகுதி என் கண்ணில் நல்ல, ஆனால் வெற்றி பெறாத முயற்சி. அந்தத் தொகுப்பில் பரிசு, மற்றும் சாட்சி என்ற இரண்டு சிறுகதைகளைப் பரிந்துரைக்கிறேன். முன்னது எண்பதுகளில், ஏன் இன்று கூட நடக்கக் கூடிய ஒன்றுதான். பின்னது, அன்றும் சரி, இன்றும் சரி அபூர்வமாகத்தான் இருக்க வேண்டும்.

ஓர் அரேபிய இரவு சிறுகதை மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது, அதிலும் நானும் இந்த மாதிரி எல்லாம் ஒரு காலத்தில் பகல் கனவு கண்டிருக்கிறேன். அரங்கேற்றம் சிறுகதையில் எனக்கு ஒரு காலத்தில் ஒன்றுமில்லை. இன்று நான் படிக்க விரும்பியவற்றை என் பெண்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியது அம்மா பாத்திரத்தில் தெரிகிறது. மாதர்தம்மை சிறுகதை கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

அனுமதி அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. காலமெல்லாம் நேர்மையாக நடந்த அரசு அலுவலர். மகனுக்காக தவறுகிறார், மகன் அதை எப்படி எதிர்கொள்கிறான்? சில வித்தியாசங்கள் சிறுகதை மாதச் சம்பளக்காரனின் பணப் பற்றாக்குறையை நன்றாக விவரிக்கிறது.

வேறு சில சிறுகதைகளைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஆட்டக்காரன் – பெண்டாட்டியை பணயம் வைக்கும் நவீன யுதிஷ்டிரன், நேற்று வருவேன் – வேறு கிரகத்திலிருந்து விசிட் அடிக்கும் “பெண்”, மோதிரம் – இன்னொரு வேற்று கிரக “தாத்தா” விசிட் கதை ஆகியவை ஆட்டக்காரன் என்ற தொகுதியில் உள்ள படிக்கக் கூடிய, சுமாரான சிறுகதைகள். நயாகரா, கால்கள், இளநீர், கொல்லாமலே போன்றவை டைம்பாஸ். ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி பற்றி இங்கே. 55 வார்த்தை சிறுகதைகள் வெறும் gimmicks. 1973-இல் எழுதிய காரணம் என்ற சிறுகதையில் ஓரினச்சேர்க்கை பற்றி குறிப்பிடுகிறார்!

அவரது ஒரு சிறுகதை – பொறுப்பு – இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

அப்பா அன்புள்ள அப்பா

(திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

என் அப்பா இறந்துபோய் மூன்று வாரம் ஆயிற்று.

யுதிஷ்டிரனை நச்சுப் பொய்கையில் யக்‌ஷன் கேட்கும் கேள்விகளில் ஒன்று – எது பெரிய விந்தை, அதிசயம்? அதற்கு யுதிஷ்டிரன் தினமும் மனிதர்கள் இறந்துபோவதைப் பார்த்தாலும் தானும் இறப்பேன் என்று யாருக்கும் நினைப்பு வராததுதான் பெரிய விந்தை என்று பதில் சொல்வான். பனிரண்டு பதின்மூன்று வயதில் படித்தபோது, அட! என்று தோன்ற வைத்தது. அதே நிலைதான். தானும் தன்னவர்களும் இறப்பார்கள் என்று தோன்றுவதே இல்லை, இன்னும் கொஞ்ச நாள் இருப்பார்கள் என்றேதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் அவர் போன வருஷம் பெரிய விபத்தில் அடிபட்டு எங்களை பயப்படுத்தி எப்படியோ தப்பித்தார். நாற்பது வருஷமாக உயர் ரத்த அழுத்தம். இதய அறுவை சிகிச்சை எல்லாம் நடந்திருக்கிறது. ஸ்ட்ரோக் வந்திருக்கிறது. இருந்தாலும் சின்னச் சின்ன உடல் உபாதைகளோடு இன்னும் நாலு வருஷம் இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். டக்கென்று போய்விட்டார்.

சின்ன வயதில் எல்லா மகன்களுக்கும் அப்பா ஹீரோதான். பதின்ம வயதில் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது என்று நிச்சயமாகத் தெரிகிறது. கல்யாணம் எல்லாம் ஆகி, குழந்தைகள் பிறந்து வாழ்க்கையில் அடிபட்டு வெற்றிகள் அடைந்து அனுபவம் வந்த பிறகுதான் அப்பாக்களின் குறைநிறைகள், அவர்கள் பட்ட கஷ்டங்கள், அவர்களின் வெற்றி தோல்விகள் எல்லாம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. ஆனால் அவற்றைப் பற்றி அவரிடம் பேச முடிந்ததில்லை.

பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது. நான் சௌக்கியம் நீ சௌக்கியமா, உன் உடல்நிலை என் உடல்நிலை, பேரன்கள் பேத்திகள் என்ன செய்கிறார்கள், அண்ணன்களும் தங்கைகளும் அத்தைகளும் மாமாக்களும் அவர்கள் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய ஸ்டேடஸ் ரிப்போர்ட் மட்டும்தான் பேச்சு. பேச ஒரு பொதுவான புள்ளியே இல்லாமல் போய்விடுகிறது. இன்று அதுதான் குறையாக நிற்கிறது.

கீழே உள்ள கட்டுரையை சில சமயம் பதித்திருக்கிறேன். இப்படி மீள்பதிக்கும் நிலை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. யுதிஷ்டிரனின் புத்திசாலித்தனத்தை மெச்சத்தான் வேண்டும்.


சுஜாதாவின் இந்தக் கட்டுரைக்கு என் மனதில் ஒரு தனி இடம் உண்டு. உன்னதமான கட்டுரை. இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றிய அற்புதமான கட்டுரை. பல இடங்களில் சுஜாதாவை வெறும் வணிக எழுத்து என்று புறம் தள்ளும் ஜெயமோகனே இது இலக்கியம்தான் என்கிறார். (பின்னூட்டங்களைப் பாருங்கள்)

ஏன் எனக்கு இது இவ்வளவு பிடித்திருக்கிறது? சுஜாதாவின் அப்பா என் அப்பாவை நினைவுபடுத்துவதாலா? அவர் ஒரு காலத்தின் படித்து அரசு வேலைக்குப் போன, ஒரு பைசா லஞ்சம் வாங்காத, விதிகளை எப்போதும் கடைப்பிடித்த, எனக்கு மிகவும் பரிச்சயமான பிராமணக் குடும்பத்து அப்பாக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாலா? அப்பாவிடம் ஆயிரம் அன்பும் பந்தமும் இருந்தாலும் ஒரு கட்டத்தில் பேச விஷயமே இல்லாமல் போய்விடுவதைக் சொல்லாமல் சொல்வதாலா? எல்லாம்தாம் என்று தோன்றுகிறது…

கட்டாயம் படியுங்கள். ஆர்வக் கோளாறில் முழு கட்டுரையையும் கீழே தந்திருக்கிறேன். (காப்பிரைட் பிரச்சினை என்று ஏதாவது வந்தால் எடுத்துவிடுவேன்.) சுஜாதாவின் வாரிசுகளுக்கு நன்றி! அதை விட முக்கியமாக சுஜாதாவின் எழுத்துத் திறமைக்கு நன்றி!

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”

“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.

“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!

இந்தக் கட்டுரை சுஜாதாவின் அவ்வளவாகத் தெரியாத, ஆனால் அருமையான கட்டுரைத் தொகுப்பான ‘அப்பா அன்புள்ள அப்பா’வில் இடம் பெறுகிறது. முடிந்தால் புத்தகத்தையே படித்துப் பாருங்கள். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், பெங்களூர் கமிஷனர் கார்த்திகேயன், கன்னட நாட்டுப் பாடல்கள் பற்றி சில நல்ல கட்டுரைகள்.

எனக்கு கவிதை அலர்ஜி உண்டு. ஆனால்

அழுதால் அழட்டும் இப்பிள்ளை
எனக்கிருக்கட்டும்
வீட்டு வேலை கெட்டால்
கெடட்டும் – இவன் போல
மனை நிறைய மக்களிருக்கட்டும்

என்பது கவிதை! இது கன்னட நாட்டுப் பாடல்கள் பற்றிய கட்டுரையில் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்