செந்தூரம் ஜெகதீஷ் எழுத்தாளர் பட்டியல்

செந்தூரம் ஜெகதீஷ் கிடங்குத்தெரு என்ற சிறந்த நாவலை எழுதியவர். புத்தகப் பிரியர். (என்னை எல்லாம் புத்தகப் பிரியன் என்று சொல்பவர்கள் இவரைப் பார்க்க வேண்டும், இவர் வேற லெவல்).

ஃபேஸ்புக்கில் சிறந்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார், பிறகு சிறந்த (மறைந்த) எழுத்தாளர் வரிசை என்று தெளிவுபடுத்தினார். ஆனால் வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், மாதவையா, தேவன் ஆகியோரை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

அவரது தேர்வுகளில் இலக்கிய எழுத்தாளர்கள் என்று நான் கருதுபவர்களில் எனக்கு அனேகமாக இசைவுதான். ஆனால் வணிக நாவல்களைப் பொறுத்த வரையில் நிறையவே கருத்து வேறுபாடு இருக்கிறது, வணிக எழுத்தாளர் தேர்வுகளில் கணிசமானவை எனக்கு தேறாது.

நான் கேள்வியே பட்டிராத சில எழுத்தாளர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இதயன், கோ. கேசவன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, அஃக். பரந்தாமன் ஆகிய பேர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

ஓவர் டு செ. ஜெகதீஷ்!


And Finally. தமிழின் சிறந்த எழுத்தாளர் வரிசை.

  1. பாரதியார்
  2. புதுமைப்பித்தன்
  3. மௌனி
  4. கு.ப.ரா.
  5. ந. பிச்சமூர்த்தி
  6. எம்.வி. வெங்கட்ராம்
  7. சி.சு. செல்லப்பா
  8. க.நா.சு.
  9. பி.எஸ். ராமையா
  10. ந. சிதம்பரசுப்பிரமணியன்
  11. கரிச்சான் குஞ்சு
  12. வ.ரா.
  13. வ.வே.சு. அய்யர்
  14. தொ.மு.சி. ரகுநாதன்
  15. சம்பத்
  16. பிரமிள்
  17. அசோகமித்திரன்
  18. சுந்தர ராமசாமி
  19. ஜெயகாந்தன்
  20. நா. பார்த்தசாரதி
  21. கி. ராஜநாராயணன்
  22. ஜி. நாகராஜன்
  23. கிருஷ்ணன் நம்பி
  24. ஆ. மாதவன்
  25. அரு. ராமனாதன்
  26. கு. அழகிரிசாமி
  27. ஆதவன்
  28. சார்வாகன்
  29. சாண்டில்யன்
  30. கல்கி
  31. மு. தளையசிங்கம்
  32. கிருத்திகா
  33. ஹெப்சிபா ஜேசுதாசன்
  34. ரஸவாதி
  35. தி. ஜானகிராமன்
  36. ஜாவர் சீதாராமன்
  37. ஜெகசிற்பியன்
  38. மஞ்சேரி ஈஸ்வரன்
  39. மயிலை சீனி. வேங்கடசாமி
  40. வெ. சாமிநாத சர்மா
  41. பி.ஸ்ரீ.
  42. த.நா. குமாரசாமி
  43. த.நா. சேதுபதி (த.நா. சேனாபதியை சொல்கிறார்)
  44. தி.ஜ.ர.
  45. ப. சிங்காரம்
  46. லா.ச. ராமாமிர்தம்
  47. சுஜாதா
  48. பிரபஞ்சன்
  49. ரசிகமணி டி.கே.சி
  50. ஸ்வாமிநாத ஆத்ரேயன்
  51. கி.அ. சச்சிதானந்தன்
  52. தமிழ்வாணன்
  53. தஞ்சை ப்ரகாஷ்
  54. தோப்பில் முகமது மீரான்
  55. வல்லிக்கண்ணன்
  56. கோவை ஞானி
  57. விந்தன்
  58. வெங்கட் சுவாமிநாதன்
  59. செ. கணேசலிங்கன்
  60. அறந்தை நாராயணன்
  61. அஃக் பரந்தாமன்
  62. பாலகுமாரன்
  63. சுப்ரமண்ய ராஜு
  64. ஸ்டெல்லா புரூஸ்
  65. கைலாசபதி
  66. டேனியல் கே.
  67. கோபி கிருஷ்ணன்
  68. இதயன்
  69. சா. கந்தசாமி
  70. ஆர். சூடாமணி
  71. மகரிஷி
  72. எஸ். பொன்னுதுரை
  73. அ.கா. பெருமாள்
  74. சிட்டி
  75. ஆர். ஷண்முகசுந்தரம்
  76. திரிலோக சீதாராம்
  77. தி.சா. ராஜு
  78. வேதசகாயகுமார்
  79. வெங்கடேஷ் சக்கரவர்த்தி
  80. செ. யோகநாதன்
  81. தனுஷ்கோடி ராமசாமி
  82. ஐராவதம் மகாதேவன்
  83. சங்கர்ராம்
  84. ந. முத்துசாமி
  85. ஸ்ரீவேணுகோபாலன்
  86. வை. கோவிந்தன்
  87. சிலம்பொலி செல்லப்பன்
  88. சாவி
  89. சோ
  90. கோமல் சுவாமிநாதன்
  91. சுப்புடு
  92. பி.வி.ஆர்.
  93. ராஜேந்திரகுமார்
  94. சி.என். அண்ணாதுரை
  95. கலைஞர்
  96. ம.வே. சிவகுமார்
  97. தெளிவத்தை ஜோசஃப்
  98. கௌதம நீலாம்பரன்
  99. அகிலன்
  100. கோ. கேசவன்
  101. பா. ஜெயப்பிரகாசம்
  102. ஜெயந்தன்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

வெளி ரங்கராஜன் தேர்வுகள்

வெளி ரங்கராஜனைத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக; நாடகத் துறையில் பெரிய கை. எழுத்தாளரும் கூட. அவர் புத்தகக் கண்காட்சியில் வாங்க விரும்பும் புத்தகங்கள் என்று ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அனேகமாக எதையுமே நான் கேள்விப்பட்டதில்லைதான்.

பின் எதற்காக இதைப் பகிர்கிறேன்? அவர் புத்தகங்களை வாங்கிக் குவிப்பது பற்றி சொல்லி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அட்சரலட்சம் பெறும் என்பதால்தான். நானும் அப்படியேதான் உணர்கிறேன் என்பதால்தான். இப்படி உணர்பவர் சஹிருதயர் என்பதால்தான். என் மனதில் இருப்பதை எனக்கே தெளிவாக்கி இருக்கிறார், அவருக்கு ஒரு ஜே!

அன்றாட வாழ்க்கைப் போக்கில் படிப்பதற்கான நேரம் குறைந்துவிட்டாலும் நேரமும், மனநிலையும் இருக்கும்போது புத்தகங்கள் அருகில் இருப்பதையே விரும்புகிறேன். எந்த நேரத்திலும் ஏதாவது புத்தகத்திலிருந்து என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் உத்வேகம் பெற முடியும்.

வாங்க விரும்பும் புத்தகங்கள் என்று அவர் போட்டிருக்கும் பட்டியல் வசதிக்காக கீழே:


  1. நொய்யல் – தேவிபாரதி
  2. சொல்லக்கூடாத உறவுகள் – சூசன் ஹாதோர்ன் (தமிழில்:சசிகலா பாபு)
  3. எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – அனுராதா ஆனந்த்
  4. கடவுள்,பிசாசு,நிலம் – அகர முதல்வன்
  5. ஆக்காண்டி – வாசு முருகவேல்
  6. தேரிக்காதை – பெளத்த பிக்குணிகளின் பாடல்கள் (அ.மங்கை)
  7. திரை இசையில் தமிழிசை – நிழல் திருநாவுக்கரசு
  8. கழுமரம் – முத்துராசா குமார்
  9. இருட்டியபின் ஒரு கிராமம் – ஜி.குப்புசாமி
  10. பெருமைக்குரிய கடிகாரம் – ஜே.பி.சாணக்யா
  11. ஸ்ரீனிவாச ராமானுஜம் கட்டுரைகள் – எதிர்
  12. அல்லங்காடிச் சந்தைகள் – யவனிகா ஸ்ரீராம்
  13. வேட்டை (நாவல்) -லஷ்மி சரவணகுமார்
  14. அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது – பெருந்தேவி

இவை நான் படிக்க விரும்புபவை.வாங்கி படிக்காமல் இருப்பவை அதிகம் இருந்தாலும் இவை உடன் இருப்பதை நான் விரும்புகிறேன்.எந்த நேரத்திலும் இவைகளை நான் படிக்க இயலும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

செந்தூரம் ஜெகதீஷ் பரிந்துரைகள்

தமிழில் இலக்கியத் தரம் உள்ள புனைவுகளைப் படிப்பவர்களுக்கு செந்தூரம் ஜெகதீஷ் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. கிடங்குத் தெரு என்ற நல்ல நாவலை எழுதியவர். புத்தகப் பிரியர், அதனாலேயே சஹிருதயர். ஃபேஸ்புக்கில் சமீபத்தில் தன் தமிழ் நாவல் பரிந்துரைகளை தொகுத்திருந்தார். 70 நாவல்கள் இருக்கின்றன, ஆனால் வரிசை மாறலாம் என்று அவரே சொல்லி இருக்கிறார்.

போலித் தன்னடக்கம் எதுவும் இல்லாமல் கிடங்குத்தெருவை தனது பட்டியலில் சேர்த்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு என் பாராட்டுகள்!

அவருடைய தேர்வுகளில் சில எனக்கு உறுத்துகின்றன என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன். சங்கர்லால் நாவல்களை எல்லாம் நான் ஏழு வயது சிறுவர்களுக்குக் கூட பரிந்துரைக்க மாட்டேன்.

இவை நான் படித்தது நினைவில் நின்ற படைப்புகள்தான். லா.ச.ரா., பூமணி, சோ. தருமன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, ஷோபா சக்தி, ம.வே. சிவகுமார், ரமேஷ் பிரேம், ஜீ. முருகன் உட்பட ஏராளமான பலர் எழுதிய நாவல்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவற்றை இப்பட்டியலில் நண்பர்கள் சேர்த்து கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு உட்பட்ட படைப்பாளர்கள், ஈழத்து எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் பற்றியும் அவசியம் குறிப்பிட வேண்டும். இது எனது சமையல் பருக்கைதான். புதிய வாசகர்களுக்குப் பயன்படலாம். கண்ட குப்பைகளை படித்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். விரைவில் எல்லா நாவல்களைப் பற்றிய தனி புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆசை

என்று சொல்லி இருக்கிறார். புத்தகத்தை வாங்க ஒரு வாசகன் ரெடி!

வசதிக்காக அவரது பட்டியலை இங்கே மீள்பதித்திருக்கிறேன்.


சிறந்த தமிழ் நாவல்கள் எனது பரிந்துரை. (வரிசை மாறலாம்.)

  1. சுந்தர ராமசாமி – ஜே.ஜே. சில குறிப்புகள்
  2. சம்பத் – இடைவெளி
  3. அசோகமித்திரன் – கரைந்த நிழல்கள்
  4. நா. பார்த்தசாரதி – குறிஞ்சி மலர்
  5. நா. பார்த்தசாரதி – நெற்றிக்கண்
  6. ஜெயகாந்தன் – பாரீசுக்குப் போ
  7. ஜெயகாந்தன் – ரிஷிமூலம்
  8. தி. ஜானகிராமன் – மோகமுள்
  9. அசோகமித்திரன் – தண்ணீர்
  10. ஜி. நாகராஜன் – நாளை மற்றும் ஒரு நாளே
  11. தஞ்சை பிரகாஷ் – கள்ளம்
  12. சுஜாதா – என் இனிய இயந்திரா
  13. சுஜாதா – மீண்டும் ஜீனோ
  14. பிரபஞ்சன்மானுடம் வெல்லும்
  15. பிரபஞ்சன் – வானம் வசப்படும்
  16. ஆதவன் – என் பெயர் ராமசேஷன்
  17. ஆதவன் – காகித மலர்கள் ஆதவன்
  18. எம்.வி.வெங்கட்ராம் – காதுகள்
  19. எம்.வி. வெங்கட்ராம் – அரும்புகள்
  20. எம்.வி. வெங்கட்ராம் – நித்யகன்னி
  21. சி.சு. செல்லப்பா – சுதந்திர தாகம் மூன்று பாகங்கள்
  22. பாலகுமாரன் – புருஷ விரதம்
  23. பாலகுமாரன் – மெர்க்குரிப் பூக்கள்
  24. ஜெயமோகன்விஷ்ணுபுரம்
  25. ஜெயமோகன் – பின் தொடரும் நிழலின் குரல்
  26. ஜெயமோகன் – கொற்றவை
  27. சாரு நிவேதிதா – ராஸலீலா
  28. சாரு நிவேதிதா – எக்ஸைல் சாரு நிவேதிதா
  29. பா. ராகவன் – இறவான்
  30. நாஞ்சில் நாடன் – எட்டுத் திக்கும் மதயானை
  31. நீல. பத்மனாபன் – பள்ளிகொண்டபுரம்
  32. நீல. பத்மனாபன் – உறவுகள்
  33. தமிழ்நதி – பார்த்தீனியம்
  34. செ. கணேசலிங்கன் – அந்நிய மனிதர்கள்
  35. சா. கந்தசாமிசாயாவனம்
  36. ஃபிரான்சிஸ் கிருபா – கன்னி
  37. நகுலன்- வாக்குமூலம்
  38. விட்டல் ராவ் – போக்கிடம்
  39. க.நா.சு.பொய்த்தேவு
  40. க.நா.சு. – பித்தப்பூ
  41. க.நா.சு – அவதூதர்
  42. ஆ. மாதவன் – கிருஷ்ணப்பருந்து
  43. ந. சிதம்பர சுப்பிரமணியன் – மண்ணில் தெரியுது வானம்
  44. இதயன் – நடைபாதை
  45. இந்திரா பார்த்தசாரதிகுருதிப்புனல்
  46. இந்திரா பார்த்தசாரதி – ஏசுவின் தோழர்கள்
  47. கரிச்சான் குஞ்சு – பசித்த மானிடம்
  48. ர.சு. நல்ல பெருமாள் – குருஷேத்திரம்
  49. கி. ராஜநாராயணன் – கோபல்ல கிராமம்
  50. சி.ஆர். ரவீந்திரன் – ஈரம் கசிந்த நிலம்
  51. ஸ்ரீவேணுகோபாலன் – திருவரங்கன் உலா 4 பாகங்கள்
  52. ப. சிங்காரம் – புயலிலே ஒரு தோணி
  53. ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மாள்
  54. தமிழ்வாணன் – சங்கர்லால் நாவல்கள்
  55. தோப்பில் முகமது மீரான் – துறைமுகம்
  56. தோப்பில் முகமது மீரான் – ஒரு கடலோர கிராமத்தின் கதை
  57. வண்ணநிலவன் – கடல்புரத்தில்
  58. பா. வெங்கடேசன் – வாரணாசி
  59. ரா. கணபதி – காற்றினிலே வரும் கீதம்
  60. பட்டுக்கோட்டை பிரபாகர் – தொட்டால் தொடரும்
  61. விந்தன் – பாலும் பாவையும்
  62. கிருத்திகாவாசவேஸ்வரம்
  63. ஹெப்சிபா ஜேசுதாசன் – புத்தம்வீடு
  64. சுந்தர ராமசாமி – ஒரு புளிய மரத்தின் கதை
  65. ராஜ சுந்தரராஜன் – நாடோடித் தடம்
  66. சுஜாதா – கனவுத் தொழிற்சாலை
  67. சுஜாதா – கரையெல்லாம் செண்பகப்பூ
  68. தி. ஜானகிராமன் – அம்மா வந்தாள்
  69. தி. ஜானகிராமன் – மரப்பசு
  70. இமையம் – கோவேறு கழுதைகள்
  71. தொ.மு.சி. ரகுநாதன் – பஞ்சும் பசியும்
  72. செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

2022

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2022-இல் – குறிப்பாக ஆண்டின் பின்பகுதியில் – மனச்சோர்வு எல்லாம் ஒரு வழியாக குறைய ஆரம்பித்திருக்கிறது. வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் நூலகத்துக்கு ஐந்து வருஷங்கள் கழித்து முதல் முறையாகச் சென்றேன். 🙂 அங்கே போனால் நான் வாங்கிக் கொடுத்த தமிழ்ப் புத்தகங்களைக் காணோம், தூக்கிக் கடாசிவிட்டார்கள் போலிருக்கிறது. இரண்டு மூன்று வருஷம் கழித்து ஒரு (மகாபாரதச்) சிறுகதை – பிரதிபிம்பம் – எழுதினேன், அது சொல்வனம் இதழில் பதிவாயிற்று.

ஆனால் படிப்பும் குறைந்துவிட்டது. சிறிய எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை, வரவர அச்சுப் புத்தகங்களைப் படிக்க இது ஒரு மனத்தடையாக இருக்கிறது.

இந்த வருஷம் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம் அல்பேர் காம்யூ எழுதிய Stranger (1942). என் கண்ணில் மியூர்சால்ட் நாயகத் தன்மை உடையவன் அவன் வாழ்க்கையின் என்னென்னவோ நடக்கிறது, அவ்வளவுதான். ஏன் நடக்கிறது, எதற்காக கொலை செய்தான் என்று கேள்விக்கெல்லாம் அர்த்தமே இல்லை. வெறுமையான வாழ்க்கை போல சித்தரித்துவிட்டு அப்படி வாழ்பவன் நாயகன் என்று உணர வைப்பதில்தான் கம்யூவின் திறமை இருக்கிறது. மியூர்சால்ட் ஏன் கொலை செய்கிறான்? கோபத்தால் அல்ல. பகையால் அல்ல. பின் எதற்காக? கடுமையான வெயிலால்தான்; கண்ணைக் கூச வைக்கும் பிரகாசமான சூரிய ஒளியால்தான்; வியர்வை ஓடுவதால்தான். இதை நீங்களே உணர்ந்தால்தான் உண்டு, வார்த்தைகளில் சொல்லி மாளாது.

இந்த வருஷம் மிகவும் ரசித்துப் படித்த படைப்பு டம்பாச்சாரி விலாசம் (1847). கண்ணும் கொஞ்சம் பிரச்சினை, மின்பிரதியின் தரமும் கொஞ்சம் குறைவு, அதனால் தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருந்தது. நாடகத்தின் நடையும், மொழியும், முன்னோடித் தன்மையும், அன்றைய சமுதாயத்தைப் பற்றிய குறுக்குவெட்டுப் பார்வையும் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தன. இலக்கியம், நாடகம், தமிழின் வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

பிடித்துப் படித்த இன்னொரு பழைய நாவல் பொற்றொடி (1911). பெண் கல்வியை வலியுறுத்தும் முன்னோடி நாவல். எனக்குப் பிடித்த அம்சம் கொஞ்சம் கூட லாஜிக் பற்றி கவலைப்படாமல் பெருசு கதை சொல்வது போல எழுதப்பட்டிருப்பதுதான். உதாரணமாக “கொலை” நடந்த பத்து நாட்களுக்குள் புலன்விசாரணை, வழக்கு, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு, மேல் கோர்ட்டில் அப்பீல், அங்கும் தீர்ப்பு, எல்லா “குற்றவாளிகளுக்கும்” சிறை. பத்து நாட்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டவன் திரும்பி வந்தும் விடுகிறான்!

புதுமைப்பித்தன் ஒரு மேதை என்பதை நான் என் பதின்ம வயதிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். அவரது பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். என் அம்மாவோடு பதின்ம வயதுகளில் உட்கார்ந்து அலசி இருக்கிறேன். அவரது சிறுகதைகளில் எனக்குத் தெரியாத நுட்பமா என்று என் ஆழ்மனதில் சின்ன கர்வம் இருந்தது. அ. முத்துலிங்கம் அதை நான்கு வரிகளில் உடைத்துவிட்டார். அவர் பரிந்துரைத்த பொய்க்குதிரை சிறுகதையை நான் எளிமையான சிறுகதை என்றுதான் கருதி இருந்தேன். அந்தக் கதையில் தெரியும் உண்மையான சோகம் முத்துலிங்கம் எடுத்துச் சொன்ன பிறகுதான் எனக்குப் புலப்பட்டது. அது சரி, முத்துலிங்கம் போன்ற ஜாம்பவானுக்கே பத்து முறை படித்த பிறகுதான் அது தெரிந்ததாம், என்னைப் போன்ற அரை வேக்காட்டுக்கு அது தெரியாமல் போனதில் என்ன வியப்பு? வியப்பு ஒன்றுதான் – இலக்கியத்தைப் பற்றி எனக்கு யாராவது எடுத்துச் சொல்லி புரிந்துவிடுவது அபூர்வம், இவர் எழுதிய நாலு வரி படித்தவுடன் மீண்டும் சிறுததையைத் தேடிப் படிக்கவும் வைத்தது, புரியவும் புரிந்துவிட்டது.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு கேள்வி உண்டு. எங்கோ தமிழகத்துக்கு வடகிழக்கு மூலையில் இருக்கும் திருப்பதி போன்ற ஒரு சிறு ஊர் எப்படி தமிழகத்தின் வட எல்லையாக இருக்க முடியும்? திருப்பதிக்கு நூறு கிலோமீட்டர் கிழக்கே எது வட எல்லை? மேற்கே? பழவேற்காடுதான் தமிழகத்தின் வட எல்லை, அல்லது மதனபள்ளிதான் தமிழகத்தில் வட எல்லை, அல்லது உடுப்பிதான் தமிழகத்தின் வட எல்லை என்றால் எப்படி உணர்வோம்? இதே கேள்வியை சுப்பு ரெட்டியார் வடவேங்கடமும் திருவேங்கடமும் புத்தகத்தில் எழுப்பி இருப்பதைப் படிக்கும்போது சரி நாம் முழுமுட்டாள் இல்லை என்று உணர்ந்தேன். ரெட்டியார் இன்றைய திருப்பதி வேறு, வட எல்லையாக சொல்லப்பட்ட திருவேங்கடம் வேறு என்று நிறுவுகிறார்.

இந்த வருஷம் படைப்புகளில் எனக்கே பிடித்திருந்தவை, முக்கியமானவை என்று நான் கருதுவன:

சிங்காரவேலு பாலசுப்ரமணியம் பல ஜாம்பவான்களின் சிறுகதைகள் யூட்யூபில் பதிவேற்றுகிறார். என் சிறுகதைகளைக் கூட விடவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றி!

இந்த வருஷம் மகிழ்ச்சி தந்த செய்திகள் – பாவண்ணனுக்குக் கிடைத்த இயல் விருது, கி.ரா.வுக்கு ஸ்டாலின் அரசு சிலை வைத்திருப்பது.

இந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி புத்தகத்துக்கு கிடைத்திருக்கிறது. சுப்ரபாரதிமணியன் இன்னும் இந்த விருதைப் பெறவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. விஷ்ணுபுரம் விருது சாரு நிவேதிதாவுக்கு.

பா. செயப்பிரகாசம், தெளிவத்தை ஜோசஃப், பீட்டர் ப்ரூக், ஜாக் ஹிக்கின்ஸ், நாகசாமி ஆகியோரை இந்த ஆண்டு இழந்தோம்.

தமிழ் விக்கி இந்த ஆண்டின் சாதனைகளில் ஒன்று. நானும் கொஞ்சம் பங்களிக்க முயன்றேன், ஆனால் ஜெயமோகனின் வேகத்தில் பத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கில்லை என்பது கொஞ்சம் மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கொஞ்சம் பிரச்சினைகள். இந்த ஆண்டாவது பங்களிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

என் பெண்ணுக்காக குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்தேன், 8 பாடல்களோடு நிற்கிறது. இந்த வருஷமாவது…

குறைவாக இருந்தாலும் 2022-இல் படித்த, மீண்டும் படித்த நல்ல/சுவாரசியமான படைப்புகளின் பட்டியல்.

வகை படைப்பாளி படைப்பு குறிப்புகள்
நாவல் லூயி லமூர் Sackett Brand Western
காலின் டெக்ஸ்டர் Last Bus to Woodstock Mystery
தேவன் ஸ்ரீமான் சுதர்சனம்
அல்பேர் காம்யூ Stranger இந்த வருஷம் படித்த மிகச் சிறந்த படைப்பு
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் There is a Hippie on the Highway நான் படித்த முதல் ஆங்கில நாவல்
ஜெயகாந்தன் பிரம்மோபதேசம்
ராஜாஜி திக்கற்ற பார்வதி
ஜாக் ஹிக்கின்ஸ் Eagle Has Landed
தமிழ்பிரபா பேட்டை
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை பொற்றொடி
அபுனைவு க.நா.சு. படித்திருக்கிறீர்களா? அழிசி பதிப்பகம் மீள்பதித்திருக்கிறது
அரவிந்தன் நீலகண்டன் கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
ராம்நாராயண் Third Man கிரிக்கெட் புத்தகம்
ராஜாஜி திண்ணை ரசாயனம்
நாகசாமி Art of Tamil Nadu, மாமல்லை
நாடகம் ஷேக்ஸ்பியர் Richard III
சிறுகதை புதுமைப்பித்தன் பொய்க்குதிரை
ஜெயமோகன் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)
ம.ந. ராமசாமி கதை உலகில் ஒரு மேதை
சுஜாதா திமலா அறிவியல் சிறுகதை
சுஜாதா தமிழாசிரியர் அறிவியல் சிறுகதை
பா. செயப்பிரகாசம் நிஜமான பாடல்கள்
பா. செயப்பிரகாசம் வளரும் நிறங்கள்
தெளிவத்தை ஜோசஃப் மீன்கள்
தெளிவத்தை ஜோசஃப் மழலை
தெளிவத்தை ஜோசஃப் அம்மா
கவிதை ஆலங்குடி வங்கனார் கழனி மாஅத்து குறுந்தொகை 8

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பில் கேட்ஸ் டாப் 5 புத்தகங்கள்

பில் கேட்ஸ் வருஷாவருஷம் அந்த வருஷத்தின் சிறந்த புத்தகங்கள் என்று ஒரு புத்தகப் பட்டியலைப் பதிப்பார். இந்த முறை மாறுதலுக்காக தனது ஆல்டைம் ஃபேவரிட் புத்தகங்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டிருக்கிறார். ஒவ்வொரு genre-க்கும் ஒன்று.

வசதிக்காக பட்டியல் மட்டும் கீழே:

இவற்றில் Stranger in a Strange Land, மற்றும் Team of Rivals ஆகியவற்றைப் படித்திருக்கிறேன், பரிந்துரைக்கிறேன். அதிலும் Team of Rivals ஒரு கிளாசிக்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே. அதுவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்ததுதான். மீள்பதிக்க காரணம் அழிசி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருவதுதான். அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஒரு ஜே!

ஃபேஸ்புக்கிலிருந்து:

புதிய வெளியீடு
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளியான கட்டுரைத் தொடர் ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இது முதல் தொகுதியின் மறுபதிப்பு. இரண்டாவது தொகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளியாகும்.
*
‘தமிழ் விக்கி’ இணையக் கலைக்களஞ்சியத்திலிருந்து…
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர் களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாட்களில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர் களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப் படுத்தப்பட்ட ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப. சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர் களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க. நா. சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது.
*
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
விலை ரூ.170
தொடர்புக்கு: 70194-26274


(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

லே மாண்டே தேர்வுகள்

1999-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சு பத்திரிகையான லே மாண்டே (இதுதான் சரியான உச்சரிப்பா? Le Monde) சுவாரசியமான கேள்வி ஒன்றைக் கேட்டு நூறு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தது. நீங்கள் படித்தவற்றில் உங்களுக்கு நன்றாக நினைவிருப்பது எந்தப் புத்தகம்?

தமிழில் என் தலைமுறைக்காரர்களுக்கு பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு விஷ்ணுபுரம்?

வசதிக்காக டாப் டென் கீழே. முழு பட்டியலும் இங்கே

  1. ஆல்பர்ட் காமு, Stranger (1942)
  2. மார்சல் ப்ரௌஸ்ட், Remembrance of Things Past (1913–27)
  3. ஃப்ரான்ஸ் காஃப்கா, Trial (1925)
  4. அன்டோயின் டி செயிண்ட்-எக்சூபரி, Little Prince (1943)
  5. ஆண்ட்ரே மால்ரா, Man’s Fate (1933)
  6. லூயி-ஃபெர்டினாண்ட் செலின், Journey to the End of the Night (1932)
  7. ஜான் ஸ்டைன்பெக், Grapes of Wrath (1939)
  8. ஹெமிங்வே, For Whom the Bell Tolls (1940)
  9. அலைன் ஃபோர்னியே, Le Grand Meaulnes (1913)
  10. போரிஸ் வியன், Froth on the Daydream (1947)

நான் இவற்றில் 16 புத்தகங்களைத்தான் படித்திருக்கிறேன். இப்போதுதான் காமுவின் Stranger நாவலை ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் படித்தவற்றைப் பற்றி சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

நூறு சிறந்த நாவல்கள்

இன்னும் ஒரு பட்டியல்.

worldcat.org என்பது உலகில் உள்ள அத்தனை புத்தகங்களையும் பட்டியல் போடும் முயற்சி. பல நூலகங்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களின் விவரங்களை இந்த தளத்தின் மூலம் தொகுத்திருக்கின்றன. http://www.oclc.org என்பது இந்த நூலகங்களின் கூட்டுறவு இயக்கம்.

இப்படி நூலகங்கள் தங்கள் விவரங்களைக் கொடுத்தால் எந்தப் புத்தகங்கள் பல காலமாக பிரபலமாக இருக்கின்றன, எவை classics என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா? அப்படி போடப்பட்ட பட்டியல்தான் இது.

டாப் டென் புத்தகங்கள்:

  1. Don Quixote (Cervantes, 1605-1615)
  2. Alice’s Adventures in Wonderland (Lewis Caroll, 1865)
  3. Adventures of Huckleberry Finn (Mark Twain, 1884)
  4. Adventures of Tom Sawyer (Mark Twain, 1876)
  5. Treasure Island (R.L. Stevenson, 1883)
  6. Pride and Prejudice (Jane Austen, 1813)
  7. Wuthering Heights (Emily Bronte, 1847)
  8. Jane Eyre (Charlotte Bronte, 1847)
  9. Moby Dick (Herman Melville, 1851)
  10. Scarlet Letter (Nathaniel Hawthorne, 1850)

மற்றவை:

  1. Gulliver’s Travels, Jonathan Swift
  2. Pilgrim’s Progress, John Bunyan
  3. A Christmas Carol, Charles Dickens
  4. David Copperfield, Charles Dickens
  5. A Tale of Two Cities, Charles Dickens
  6. Little Women, Louisa May Alcott
  7. Great Expectations, Charles Dickens
  8. Hobbit, J. R. R. Tolkien
  9. Frankenstein, or, the Modern Prometheus, Mary Shelley
  10. Oliver Twist, Charles Dickens
  11. Uncle Tom’s Cabin, Harriet Beecher Stowe
  12. Crime and Punishment, Fyodor Dostoyevsky
  13. Madame Bovary, Gustave Flaubert
  14. The Return of the King, J. R. R. Tolkien
  15. Dracula, Bram Stoker
  16. Three Musketeers, Alexandre Dumas
  17. Brave New World, Aldous Huxley
  18. War and Peace, Leo Tolstoy
  19. To Kill a Mockingbird, Harper Lee
  20. Wizard of Oz, L. Frank Baum
  21. Les Misérables, Victor Hugo
  22. Secret Garden, Frances Hodgson Burnett
  23. Animal Farm, George Orwell
  24. Great Gatsby, F. Scott Fitzgerald
  25. Little Prince, Antoine de Saint-Exupéry
  26. Call of the Wild, Jack London
  27. 20,000 Leagues Under the Sea, Jules Verne
  28. Anna Karenina, Leo Tolstoy
  29. Wind in the Willows, Kenneth Grahame
  30. Picture of Dorian Gray, Oscar Wilde
  31. Grapes of Wrath, John Steinbeck
  32. Sense and Sensibility, Jane Austen
  33. Last of the Mohicans, James Fenimore Cooper
  34. Tess of the d’Urbervilles, Thomas Hardy
  35. Harry Potter and the Sorcerer’s Stone, J. K. Rowling
  36. Heidi, Johanna Spyri
  37. Ulysses, James Joyce
  38. Complete Sherlock Holmes, Arthur Conan Doyle
  39. Count of Monte Cristo, Alexandre Dumas
  40. Old Man and the Sea, Ernest Hemingway
  41. The Lion, the Witch, and the Wardrobe, C. S. Lewis
  42. Hunchback of Notre Dame, Victor Hugo
  43. Pinocchio, Carlo Collodi
  44. One Hundred Years of Solitude, Gabriel García Márquez
  45. Ivanhoe, Walter Scott
  46. Red Badge of Courage, Stephen Crane
  47. Anne of Green Gables, L. M. Montgomery
  48. Black Beauty, Anna Sewell
  49. Peter Pan, J. M. Barrie
  50. A Farewell to Arms, Ernest Hemingway
  51. House of the Seven Gables, Nathaniel Hawthorne
  52. Lord of the Flies, William Golding
  53. The Prince and the Pauper, Mark Twain
  54. A Portrait of the Artist as a Young Man, James Joyce
  55. Lord Jim, Joseph Conrad
  56. Harry Potter and the Chamber of Secrets, J. K. Rowling
  57. Red and Black, Stendhal The Stranger, Albert Camus
  58. Stranger, Albert Camus
  59. Trial, Franz Kafka
  60. Lady Chatterley’s Lover, D. H. Lawrence
  61. Kidnapped: The Adventures of David Balfour, Robert Louis Stevenson
  62. Catcher in the Rye, J. D. Salinger
  63. Fahrenheit 451, Ray Bradbury
  64. A Journey to the Centre of the Earth, Jules Verne
  65. Vanity Fair, William Makepeace Thackeray
  66. All Quiet on the Western Front, Erich Maria Remarque
  67. Gone with the Wind, Margaret Mitchell
  68. My Ántonia, Willa Cather
  69. Of Mice and Men, John Steinbeck
  70. Vicar of Wakefield, Oliver Goldsmith
  71. A Connecticut Yankee in King Arthur’s Court, Mark Twain
  72. White Fang, Jack London
  73. Fathers and Sons, Ivan Sergeevich Turgenev
  74. Doctor Zhivago, Boris Leonidovich Pasternak
  75. Decameron, Giovanni Boccaccio
  76. Nineteen Eighty-Four, George Orwell
  77. Jungle, Upton Sinclair
  78. Da Vinci Code, Dan Brown
  79. Persuasion, Jane Austen
  80. Mansfield Park, Jane Austen
  81. Candide, Voltaire
  82. For Whom the Bell Tolls, Ernest Hemingway
  83. Far from the Madding Crowd, Thomas Hardy
  84. Fellowship of the Ring, J. R. R. Tolkien
  85. Return of the Native, Thomas Hardy
  86. Sons and Lovers, D. H. Lawrence
  87. Charlotte’s Web, E. B. White
  88. Swiss Family Robinson, Johann David Wyss
  89. Bleak House, Charles Dickens
  90. Père Goriot, Honoré de Balzac

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

எம்.டி. முத்துகுமாரசாமி பட்டியல்கள்

முத்துகுமாரசாமி நாட்டுப்புறவியல் அறிஞர். சிறந்த நவீனத்துவ/பின்நவீனத்துவ சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டிருந்தார். வசதிக்காக கீழே.

நவீனத்துவ கட்டுமானத்தை உருவாக்கிய சிறுகதைகள்:


பின்நவீனத்துவ கதையாடல்களை சட்டகப்படுத்திய சிறுகதைகள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ஒபாமாவின் 2021 பரிந்துரைகள்

புத்தகம், இசை, திரைப்படப் பரிந்துரைகள். புத்தகப் பட்டியல் மட்டும் கீழே வசதிக்காக.

நான் இவற்றில் ஒன்றைக் கூட படித்ததில்லை. முக்கால்வாசி எழுத்தாளர்களைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. நீங்கள் யாராவது எதையாவது படித்திருக்கிறீர்களா?

  • Matrix — Lauren Groff
  • How the Word Is Passed — Clint Smith
  • The Final Revival of Opal & Nev — Dawnie Walton
  • The Lincoln Highway — Amor Towles
  • Invisible Child: Poverty, Survival & Hope in an American City — Andrea Elliott
  • Harlem Shuffle — Colson Whitehead
  • Cloud Cuckoo Land — Anthony Doerr
  • These Precious Days — Ann Patchett
  • Crying in H Mart — Michelle Zauner
  • Aftershocks — Nadia Owusu
  • Crossroads — Jonathan Franzen
  • The Love Songs of W.E.B. Du Bois — Honorée Fanonne Jeffers
  • Beautiful Country — Qian Julie Wang
  • At Night All Blood Is Black — David Diop
  • Land of Big Numbers — Te-Ping Chen
  • Empire of Pain — Patrick Radden Keefe
  • Project Hail Mary — Andy Weir
  • When We Cease to Understand the World — Benjamín Labatut
  • Under a White Sky: The Nature of the Future — Elizabeth Kolbert
  • Things We Lost to the Water — Eric Nguyen
  • Leave The World Behind — Rumaan Alam
  • Klara and the Sun — Kazuo Ishiguro
  • The Sweetness of Water — Nathan Harris
  • Intimacies — Katie Kitamura

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்