பதின்ம வயதினருக்கான 100 சிறந்த நாவல்கள்

NPRஇன்னும் ஒரு பட்டியல். NPR (அமெரிக்காவின் பிரபல ரேடியோ) நடத்திய தேர்வில் எல்லாரும் ஓட்டளித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முதல் இடம் ஹாரி பாட்டருக்கு. இரண்டாம் இடம் ஹங்கர் கேம்ஸ் சீரிசுக்கு. மூன்றாவது இடம்? என் ஃபேவரிட் நாவலான To Kill a Mockingbird-க்கு.

வசதிக்காக டாப் டென் புத்தகங்களின் பட்டியல் கீழே:

  1. J.K. Rowling’s Harry Potter Series
  2. Suzanne Collins’ Hunger Games Series
  3. Harper Lee’s To Kill a Mockingbird
  4. John Green’s The Fault in Our Stars
  5. J.R.R. Tolkien’s Hobbit
  6. J.S. Salinger’s Catcher in the Rye
  7. J.R.R. Tolkien’s Lord of the Rings Series
  8. Ray Bradbury’s Fahrenheit 451
  9. John Green’s Looking for Alaska
  10. Markus Zusak’s Book Thief

முழு பட்டியல் இங்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஹங்கர் கேம்ஸ்
டு கில் எ மாக்கிங்பர்ட்

லக்ஷ்மி

லக்ஷ்மி ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று ஃபார்முலாவை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் அவை எல்லாமே வீண்தான். அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா அவுட். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: (1946) ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

மிதிலாவிலாஸ்: மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, பிறகென்ன, சுபம்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை ஃபார்மட்டுக்கு பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை ஃபார்மட்டுக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்: வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: ஹீரோவை ஏமாற்றும் ஹீரோயினின் அப்பா. ஹீரோ-ஹீரோயினுக்கும் தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க ஹீரோயினை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த வேஸ்ட்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: வேஸ்ட். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. வேஸ்ட்.

ரோஜா வைரம்: வேஸ்ட் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் வேஸ்ட். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு வேஸ்ட். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி (1940). பெண் மனம் (1946), மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு

லிண்டன் ஜான்சன் – மாஸ்டர் ஆஃப் தி செனட்

Lyndon_JohnsonPassage to Power படித்த பிறகு ஜான்சனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. ஒரே பிரச்சினை, காரோவின் ஒவ்வொரு வால்யூமும் தடித்தடியாக தலையணை சைசில் இருக்கிறது. Master of the Senate-ஐ தம் கட்டித்தான் படித்தேன்.

ஜான்சனின் ஆளுமை அவரது சிறு வயதிலேயே உருவாகிவிட்டது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா டெக்சஸ் மாநில காங்கிரஸ்மானாக இருந்தவர். (நம்மூர் எம்.எல்.ஏ. மாதிரி) அகலக்கால் வைத்து பணம் எல்லாம் போய் பயங்கரக் கஷ்டம். சின்ன ஊரில் பல அவமானங்களை ஜான்சன் சந்தித்திருக்கிறார். அது அவரிடம் வெற்றி பெறுவதற்கான வெறியை உருவாக்கி இருக்கிறது. காலம் முழுவதும் அவர் தேடியது அதிகாரம், அங்கீகாரம், பணம், வெற்றி. அவற்றுக்காக, காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த லெவலுக்கும் ஜான்சன் இறங்குவார். சிறு வயதிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார்.

robert_a_caroMaster of the Senate புத்தகம் அவரது செனட்டராக இருந்த 1948-1960 காலகட்டத்தை விலாவாரியாக அலசுகிறது. எப்படியோ தகிடுதத்தம் செய்து உள்ளே நுழைந்துவிட்டார். ஜனாதிபதி ஆகும் முயற்சியில் முதல் படி. ஆனால் ஜான்சன் டெக்சஸ்காரர். அமெரிக்க சிவில் போரில் டெக்சஸ் பிரிந்து போன தென் மாகாணங்களில் ஒன்று. போரில் தோற்று அமெரிக்கா மீண்டும் ஒன்றானது என்னவோ உண்மைதான். ஆனால் எண்பது வருஷங்களில் எந்த தென் மாகாணக்காரரும் அதற்குப் பிறகு ஜனாதிபதி ஆனதில்லை. தெற்கு மாநிலத்தவர்கள் நிற வெறியர்கள், கறுப்பர்களை ஒடுக்கி வைத்திருப்பவர்கள் என்ற (நியாயமான) கடுப்பு வட மாநிலத்தவருக்கு இருந்தது. மக்கள் தொகை வட மாநிலங்களில் அதிகம். ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கே பலம் அதிகம். அதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடக்கூட ரிபப்ளிகன் கட்சியும் டெமாக்ரடிக் கட்சியும் தென்னகத்தினரை தேர்ந்தெடுப்பதில்லை.

அன்றைய தென்னக செனட்டர்கள் ஒரு powerful minority. தென்னகக் கறுப்பர்களுக்கு அன்று எந்த உரிமையும் இல்லை. நூற்றில் ஒரு கறுப்பருக்கு ஓட்டுரிமை இருந்தால் அதிகம். Segregation என்ற பேரில் கன்னாபின்னா என்று ஒடுக்கப்பட்டார்கள். படிப்பு, வேலை வாய்ப்பு, தொழில், அரசியல் – எந்தத் தளத்திலும் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வது கஷ்டம். அவர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சட்டமும் இந்த தென்னக செனட்டர்களால் தடுக்கப்பட்டது.

Richard_Brevard_Russellஜான்சன் முதலில் செனட்டராக தன் அதிகாரத்தைப் பெருக்கும் வேலையில் ஈடுபடுகிறார். தான் அது வரை சொல்லிக்கொண்டிருந்த கொள்கைகளுக்கு எதிராக லேலண்ட் ஓல்ட்ஸ் என்ற நல்ல நிர்வாகிக்கு ஆப்படிக்கிறார். அது அவருக்கு டெக்சசின் எண்ணெய் மில்லியனர்களின் ஆதரவை – குறிப்பாக பணத்தைப் பெற்றுத் தருகிறது. தென் மாநில செனட்டர்களின் அறிவிக்கப்படாத தலைவரான டிக் ரஸ்ஸலுக்கு ஜால்ரா அடித்து அவருடன் நெருக்கமாகிறார். கறுப்பர்களுக்காக கொண்டு வரப்படும் சட்டங்களை எதிர்க்கிறார். ரஸ்ஸல் இவர் நம்ம ஆளு என்று நினைக்கிறார். ரஸ்ஸலின் ஆதரவு ஜான்சனுக்கு பத்திரிகையில் பேர் வரக் கூடிய சில வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது. அவரது ஆதரவால் டெமாக்ரடிக் செனட்டர்களின் துணைத்தலைவர் ஆகிறார்.

செனட்டர்களின் தலைவர், துணைத்தலைவர் எல்லாம் அப்போது அலங்காரப் பதவிகள் மட்டுமே. ஜான்சன் மெதுமெதுவாக தன் பதவியை பலமுள்ளதாக மாற்றுகிறார். அவர் செய்வதெல்லாம் ஏறக்குறைய ஒரு பி.ஏ. செய்யும் வேலைகள். ஆனால் எந்தக் கேள்வி வந்தாலும் ஜான்சனிடம் பதில் இருக்கிறது. அது அவரது செல்வாக்கை உயர்த்துகிறது. டெக்சஸ் மில்லியனர்களின் பணத்தை மற்ற செனட்டர்கள் பெற வழி ஏற்படுத்தித் தருகிறார்.

அடுத்த தேர்தலில் டெமாக்ரடிக் செனட்டர்களின் தலைவர் தோற்றுப் போகிறார். ஜான்சன் இப்போது தலைவர். தன் co-ordination வேலைகளை விரிவுபடுத்துகிறார். அடுத்த தேர்தலில் டெமாக்ரடிக் கட்சிக்கு ஒரு வோட்டு வித்தியாசத்தில் செனட்டில் மெஜாரிடி கிடைக்கிறது. ஜான்சனின் தாக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

செனட்டர்களுக்கு முக்கிய விஷயம் கமிட்டிகள். அதில் மூக்கை நுழைக்கிறார். யார் யார் எந்த கமிட்டியில் அங்கம் பெறுவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார். அன்றிலிருந்து செனட்டில் அவர் ராஜ்யம்தான்.

ஜான்சனைப் பற்றி நமக்கு இந்தப் புத்தகத்தில் தெரிவது அதிகார வெறி பிடித்த, அதற்காக எதையும் செய்யக் கூடிய ஒரு சராசரி அரசியல்வாதி. ஒரு கருணாநிதி என்றே சொல்லலாம். அதிகாரம் கிடைத்த பிறகு தன்னுடன் ஒத்துழைக்காத செனட்டர்களைப் பழி வாங்குகிறார். செனட்டின் விதிகளை வளைக்கிறார். அவரை மீறிய செனட் இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்.

தென் மாகாண செனட்டர்களின் ஆதரவு அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது. அது இருக்கும் வரையில் செனட் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்பது தெளிவு.

ஆனால் 1956-இல் ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்ரடிக் வேட்பாளராக முயலும்போது தென் மாகாணத்தவர், கறுப்பர்களுக்கு எதிரானவர் போன்றவை எத்தனை பெரிய பலவீனம் என்று அவருக்குப் புரிய வருகிறது. அப்போதுதான் ஜான்சனின் மறுபுறம் நமக்குத் தெரிகிறது. ஜான்சனின் ஒரு பக்கம் அதிகார வெறி என்றால் இன்னொரு பக்கம் ஏழைகளிடம் கனிவு. தான் ஏழையாக இருந்து அவமானப்பட்ட நாட்களை அவர் மறந்ததே இல்லை. வெள்ளை, கறுப்பு போன்றவை அவருக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதைச் சொன்னால் டெக்சாசில் ஜெயிக்க முடியாது. அவரது power base ஆன தென்னக செனட்டர்களின் ஆதரவு போய்விடும்.

கறுப்பர்களின் எதிரி என்ற பிம்பம் போக வேண்டும். அதற்கு ஒரே வழி civil rights சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் தென்னக செனட்டர்கள் விடமாட்டார்கள். இந்த நிலையில் விடாமல் முயற்சி செய்து கிடைக்கும் சிறு வாப்புகளைப் பயன்படுத்தி தொண்ணூறு வருஷங்களுக்குப் பிறகு கருப்பர்களுக்கான ஓட்டுரிமை சட்டம் ஒன்றை ஜான்சன் நிறைவேற்றுகிறார். இந்த சட்டத்தால் பெரிய பயன் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு symbolic வெற்றி. அவரே சொன்ன மாதிரி கன்னிப் பெண்ணுடன் ஒரு முறை உறவு கொண்டுவிட்டால் அடுத்த முறை சுலபமாக இருக்கும். பின்னாளில் இன்னும் சட்டங்களைக் கொண்டு வரலாம்.

ஜான்சன் ஜனாதிபதி ஆன பிறகு பல civil rights சட்டங்களை நிறைவேற்றினார் என்பது வரலாறு.

ஒரு சராசரி, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதி. கொள்கை கிள்கை எதுவும் கிடையாது. வெற்றி மட்டும்தான் முக்கியம். ஆனால் லிங்கனுக்கு அடுத்தபடியாக கறுப்பர்களுக்காக உருப்படியாக உதவி செய்தவர் அவர்தான். அவரது ஆளுமை fascinating ஆக இருக்கிறது.

நான் பரிந்துரைப்பது Passage to Power வால்யூமைத்தான். ஆனால் இது ஒரு அருமையான ஆராய்ச்சி. இந்தியத் தலைவர்களைப் பற்றி இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்
தொடர்புடைய சுட்டிகள்: Passage to Power

மோ யான் (2012 நோபல்) எழுதிய “ஷிஃபு, யூ வில் டூ எனிதிங் ஃபார் எ லாஃப்”

mo_yan2012-க்கான நோபல் பரிசு எல்லாம் அறிவித்து இரண்டு மூன்று மாதங்கள் போய்விட்டன. மோ யான் என்ற சீன எழுத்தாளர் பரிசை வென்றது மறந்தே போயிருக்கலாம். நூலகத்தில் கிடைத்த ஒரே ஒரு புத்தகத்தை – Shifu, You Will Do Anything for a Laugh (சிறுகதைத் தொகுப்பு) – படித்து முடித்து எழுதுவதற்கு இத்தனை நாளாகிவிட்டது…

மோ யானுக்கு ஒரு wicked sense of humor இருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்று. “Abandoned Child” என்று ஒரு சிறுகதை. சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான் என்ற விதி கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்தால் அபராதம் கட்ட வேண்டுமாம். மூன்றாவது குழந்தைக்கு இன்னும் அதிக அபராதம். ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அதுவும் கிராமப்பகுதிகளில் மிக அதிகம். அதனால் பெண் பிறந்தால் கொன்றுவிடுவது, இல்லை எங்காவது விட்டுவிடுவது, இல்லை அபராதம் கட்டிக் கொள்ளலாம் என்று தொடர்ந்து முயல்வது போன்றவை நடக்கின்றன. இந்தக் கதையின் நாயகன் விடுமுறைக்கு வீடு திரும்புகிறார். வரும் வழியில் கரும்பு வயலில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. இப்போதுதான் பிறந்த பெண் குழந்தை. மனம் கேட்காமல் வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார். அவருக்கு நாலைந்து வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை. மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை கட்டாயம் வேண்டும். இந்தக் குழந்தையை வளர்பபதா என்று எதிர்க்கிறாள். இவர் ஊரின் அரசு அதிகாரியிடம் குழந்தையை ஒப்படைக்கப் போகிறார். அவர் குழந்தையை எங்காவது அநாதை இல்லத்துக்கெல்லாம் அனுப்ப தனக்கு வசதிப்படாது என்கிறார். நான் வளர்ப்பதற்கில்லை, குழந்தையை வேண்டுமானால் திருப்பி கரும்பு வயலிலேயே விட்டுவிடட்டுமா என்று நாயகன் கத்த, அப்படி செய்தால் நாயகன் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும் என்கிறார் அதிகாரி. வெறுத்துப் போய் நாயகன் திரும்பும்போது அதிகாரி அபராதம் கட்ட வேண்டியதை நினைவுபடுத்துகிறார்!

மூடப்படும் தொழிற்சாலைகள், தன் போக்கில் இயங்கும் அரசு எந்திரம், பொருந்தாத நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் என்று மோ யானின் கதைகளின் பின்புலங்கள் இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. இன்னும் சொல்லப் போனால் அறுபதுகளின் திரைப்படங்களின் பின்புலம் போல இருக்கிறது. என்ன இங்கே தொழிலாளர்களைப் பற்றி கவலையே இல்லாத முதலாளியாக வருவது அரசுதான். கம்யூனிஸ்ட் சீன அரசு இந்த மாதிரி அரசைக் குறை சொல்லும் கதைகளை அனுமதிக்காது என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. மோ யான் என்றால் “வாயைத் திறக்காதே” என்றுதான் அர்த்தமாம். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் வாயைத் திறக்காதே என்று அவரது பெற்றோர்கள் பல முறை அறிவுறுத்தினார்களாம். அதையே புனைபெயராக வைத்துக் கொண்டாராம். மாவோ காலத்துக்கு இப்போது பரவாயில்லை போலிருக்கிறது.

“Abandoned Child” தவிர இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகள் “Shifu, You Will Do Anything for a Laugh” மற்றும் “Man and the Beast“. பல வருஷம் உண்மையாக உழைத்தபின் அரசு கம்பெனியில் layoff. ஷிஃபுவுக்கு வேலை போய்விடுகிறது. ஒரு ஓடாத பஸ்ஸை காட்டில் மணிக்கணக்கில் காதலர்களுக்கு வாடகைக்கு விடுகிறார். இது சட்ட விரோதம். ஒரு நாள் வந்த காதலர்கள் பஸ்ஸில் இறந்து கிடக்கிறார்கள். பிறகு? Man and the Beast சிறுகதையில் உலகப்போர் சமயத்தில் ஜப்பானில் ஒரு சீனக் கைதி. தப்பிவிடுகிறான். காட்டில் ஒரு குகையில் மாதக் கணக்கில். ஏறக்குறைய மிருக வாழ்வு. நரிகளோடு உயிர்ப் போராட்டம். அப்போது ஒரு பெண்ணைப் பார்க்கிறான், அவளைக் கற்பழிக்கப் போகிறான். பிறகு?

சில சமயம் magical ரியலிசம், சரியலிசம் – சரி எனக்கு சரியாகப் புரியாத ஒரு இசம் – கதைகள். ஒரு கதையில் (Soaring) பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அழகான பெண். கணவனைப் பார்த்ததும் பறந்துபோய் மரத்தில் உட்கார்ந்து கொள்கிறாள். அவளைக் கீழே இறக்க ஊரே முயல்கிறது. இன்னொரு கதையில் (Iron Child) இரும்பைத் தின்னும் குழந்தைகள். இன்னொரு கதையில் (The Cure) அம்மாவைக் குணப்படுத்த மரண தண்டனை அடைந்த கைதியின் உடலில் இருந்து பித்த நீர் சுரப்பியைக் கொண்டு வரும் மகன்.

மற்ற இரு கதைகளும் (Love Story, Shen Garden) படிக்கலாம்.

மோ யான் நிச்சயமாக நல்ல எழுத்தாளர். இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைப்பேன். ஒரு விதத்தில் பஷீரை நினைவுபடுத்தினார். ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவு செய்துவிட முடியாதுதான், ஆனால் இவரை விட சிறந்த பல இந்திய எழுத்தாளர்களை நான் படித்திருக்கிறேன். என் கண்ணில் பஷீரின் தரம் இவரை விட உயர்ந்தது.


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டி: மோ யானைப் பற்றி நோபல் கமிட்டி

பெருமாள் முருகனின் புத்தகப் பைத்தியம்

perumal_muruganபெ. முருகனின் இந்தக் கட்டுரை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. எனக்கும் இப்படித்தான் புத்தகப் பைத்தியம் இருந்தது. (என் மனைவி பின்னாலிருந்து இப்ப மட்டும் என்ன தெளிஞ்சிருச்சா என்கிறாள்) ஆனால் பெருமாள் முருகனைப் போல் இல்லாமல் என் அம்மாதான் என்னை ஏழு வயதில் கிராம நூலகத்தை அறிமுகம் செய்து வைத்தாள். சிறு வயதில் படிக்க ஊக்கம் தந்ததும் அம்மாதான். அப்போதெல்லாம் நானும் வேர்க்கடலை சுற்றிய காகிதத்தைக் கூட விடமாட்டேன்.

பெ. முருகன் மொடாவில் புத்தகம் வைத்திருந்தது மாதிரி எனக்கும் ஒரு காலம் இருந்தது. திருமணம் ஆவதற்கு முன்னால் நண்பர்களுடன் ஒரு வீடு/அபார்ட்மெண்டில் சேர்ந்து வசிப்பது வழக்கம். என் அறையில் ஒரு சின்ன மெத்தை தரை மீது விரித்திருப்பேன்.நான்கு சுவர்களிலும் புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைத்திருப்பேன். தூங்கி எழுந்து கையை நீட்டினால் தட்டுப்படும் புத்தகத்தைப் படிப்பேன். இன்று அலமாரிகள் நிறைந்து வழிகின்றன, ஆனால் தேட வேண்டி இருக்கிறதே!

கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: பெருமாள் முருகனின் தளம்

அந்தக் கால எழுத்தாளர்கள் – மு.வ.

இதை அனுப்பிய டாக்டர் கைலாசத்துக்கு நன்றி! மு.வ. நூற்றாண்டு தருணத்தில் இதை டாக்டர் கைலாசம் அனுப்பி இருப்பது மிகவும் பொருத்தமானது. இது கலைமகள் இதழில் பிரசுரமானது. கலைமகளுக்கும் நன்றி!

டாக்டர் கைலாசம் மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம் உட்பட்ட சில சரித்திர நாவல்களை எழுதி உள்ளார். இன்னும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஓவர் டு டாக்டர் கைலாசம்!

mu_ varadarajanஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஊருக்கு உலகுக்கு குற்றம் இல்லா உரைதனை உரைப்பவராகவும், எல்லோருக்கும் பொதுவானவராகவும், சத்தியத்தின் வழிதனில் வாழ்பவராகவும், சமத்துவத்தை ஊணில் கலந்து ஊட்டும் நெறி தவறாதவராகவும் இருக்க வேண்டும் அல்லவா? இந்தக் குணங்கள் அனைத்தும் கொண்டு, இந்த புவிதனில் அழியா இடம் பெற்ற எழுத்தாளராகவும் விளங்கியவர் மு. வரதராசனார் அவர்கள். மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கையும் கொண்ட பண்பாளர்; அறிவுத் தந்தையாய், அன்புள்ளமும் கொண்ட தாயுள்ளமும் கொண்டு கொள்கைப் பிடிவாதமும், நெறியுடன் வாழ்ந்த பெருந்தகையாளர் வரதராசனார் அவர்களின் வாழ்வும் எழுத்தும் பற்றிப் பார்ப்போம்.

ஆறுகாடுகளை கொண்ட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்த திருப்பத்தூரின் அருகில் அமைந்த வேலம் என்ற சிறிய ஊரில் முனுசாமி முதலியார் அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் துணைவியார் அம்மாக்கண்ணுவுக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி 1912 ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு திருவேங்கடம் என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்து வந்தார்கள். முனுசாமி அவர்களின் தகப்பனார் பெயர் வரதராசனார். தனது தந்தையின் பெயரையே தனது மகனுக்கும் இட்டு வரதராசனார் என்று அழைத்து வந்தார். வேலம் கிராமத்தில் அமைந்த தொடக்ககல்வி நிலயத்தில் வரதராசனாரை கல்வி பயிலச் சேர்த்தார்.. அதன்பிறகு உயர்நிலைக் கல்விக்காக வரதராசனார் திருப்பத்தூர் சென்று ஆழ்ந்து படித்தார். தனது பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அந்த சிறிய வயதிலேயே திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக வரதராசனார் பணியாற்றினார்.

தாலுகா அலுவலகத்தில் எழுத்து வேலை மிகவும் அதிகம். விடாது வேலை செய்ததால் வரதராசனாரின் உடல் நலம் குன்றியது. வேறு வழியில்லாமல் ஓய்வு எடுக்க வேண்டி வந்தது. தனது சொந்த ஊரான வேலம் கிராமத்துக்குச் சென்று சிறிது நாள் ஓய்வு எடுத்தார். அந்த சமயங்களில் தமிழ் பண்டிதரான முருகையா முதலியாரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு வரதராசனாரின் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. முருகையா முதலியாரின் தமிழ் ஆர்வம் வரதராசனாரையும் தொற்றிக் கொண்டது. அவரிடம் ஆழ்ந்து தமிழ் கற்றார். தனது பத்தொன்பதாவது வயதில் வித்வான் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழ் வரதராசனாரின் இரத்தத்தில் ஓட ஆரம்பித்தது. தானாகவே பயின்று தனது இருபத்து மூன்றாவது வயதில் வித்வான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்று திருப்பனந்தாள் மடத்தின் மிக உயரிய பரிசனான ஆயிரம் ரூபாய் பரிசினைப் பெற்றார். இந்த சமயத்தில் வரதராசனாருக்கு திருமணப் பேச்சு நடந்தது. தனது மாமன் மகளான ராதா அம்மையாரை 1935ஆம் ஆண்டு மணம் செய்து கொண்டார். ராதா அம்மையாரை திருமணம் செய்ததும், அவரது வாழ்வில் பெரும் மகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டது. அந்த ஆண்டே திருப்பத்தூர் தமிழ் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். தனது மனம் விரும்பியபடியே தமிழ் அமுதத்தை மாணவர்களுக்கும் ஊட்ட முடியும் என்பதே அவருக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியராக வேலை பார்த்தாலும் அவர் தனது படிப்பை விடவில்லை. பி.ஓ.எல். தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.

நான்கு ஆண்டு ஆசிரியப் பணிக்கு பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் அவருக்கு விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்’ என்ற அந்த பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட வரதராசனார், ‘தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்‘ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். ஆனாலும் அவர் தமிழாராய்ச்சியை விடவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தனது முப்பதாறாவது வயதில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் பெரும் ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை சென்னைப் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்தார். சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது (1948). சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் வரதராசனார் அவர்களேயாவர்.

பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் போதும் சரி, சென்னைப் பல்கலைகழகத்தில் பணியாற்றும் போது வரதராசனார் அவர்கள் மாணவர்களிடத்தில் மிகுந்த அன்புடன் பழகுவார். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவர் கவனம் செலுத்த தவறியதில்லை. சீடர்களின் எண்ணங்களை சீர்படுத்தி அவர்களை தெளிவடையச் செய்வதில் அவரைப் போல சிறந்தவர் யாரும் இல்லை. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அவர் முழுக்கவனமாக இருப்பார். விடுமுறையில் கூட அடுத்த தேர்வுக்கு உரிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்லுவார். தேர்வில் கடினமான பாடங்களை முதலிலேயே எழுதி தேர்வு பெற வேண்டும் என்று சொல்லுவார். கடினமான பாடங்கள் தேர்ச்சிக்கு இடையூராக இருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டு அதை மாணவர்களிடம் அன்பாக எடுத்துக் கூறி அவர்களை கவனமாகப் படிக்க வைப்பார். தேவையில்லாது நண்பர்களை மாணவ பருவத்தில் பெருக்கினால் அது படிப்புக்கு இடையூராக இருக்கும் என்பதை மாணவர்களுக்கு அன்பாக உணர்த்துவார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வசதியாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என்பதில் வரதராசனார் அவர்கள் மிகவும் முனைப்பாக இருப்பார். மாணவர் பருவம் நீங்கிய பின்னும் அந்தத் தொடர்பை விடாமல் குடும்பப் பாசத்தோடு அவர்களுடைய தேவைகளை அறிந்து, வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமாளிக்கும் சக்தியை அவர்களுக்கு சொல்லித் தருவார். அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருந்த தனது மாணவரின் அமெரிக்க சூழ்நிலையை அறிந்து, அவரது தேவையை அறிந்து அவருக்கு உதவியாக அவரின் தந்தையை அனுப்பாமல், தாயை அனுப்ப வேண்டிய நியாயத்தை அவரது குடும்பத்தாருக்கு புரிய வைத்து அனுப்பவும் செய்தார். மணமக்களைப் பிரிக்க வரதராசனார் என்றுமே தயங்குவார். உண்மையான காரணங்களை அறிந்து அதை சரி செய்ய முயற்சி செய்வார். மகாநாடு போன்று முன் அறிமுகம் இல்லாத பலரும் கூடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவர் மற்றவர்களுக்கும் புரிய வைப்பார். புத்தகங்களும், பண உதவியும் செய்ய அவர் என்றுமே தயங்கியது கிடையாது.

எழில் மிகு தோற்றம், கூரிய மூக்கு, சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள், அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, அகன்ற நெற்றி, புன்னகை பூத்த முகம், நீண்ட மெலிந்த கைகள், மிக அழகான பல் வரிசையுடன் பண்பட்ட நெஞ்சம் உடைய வரதராசனாரைப் போன்று இயற்கையை அனுபவிப்பதில் இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். தனது இல்லமான தாயகத்தில் பெரும் தொட்டியை கட்டி அதிலிருந்து அருவியில் இருந்து நீர் விழுவது போல அமைத்து இருந்தார். நீர்வீழ்ச்சி போன்ற இயற்கை காட்சிகள் அவரை குழந்தையாகவே மாற்றி விடும். ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சியில் யாரோ ஒருவர் கரித்துண்டில் எழுதிய ஆடிப் பதினாறு தங்கம் காவிரியில் கலந்த நாள் என்று சிறிய சொற்றொடர் கூட வரதராசனார் அவர்களை பெரிதும் பாதித்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் 1961ஆம் ஆண்டு அவரை தனது புகழ் பெற்ற தமிழ்துறை தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்படி அழைத்து அவருக்கு அந்த பெரும் பொறுப்பைக் கொடுத்தது. அந்தப் பொறுப்பை திறம்பட வகித்த வரதராசனாரை 1971 ஆண்டு மதுரைப் பல்கலைக்கழகம் துணை வேந்தராக பொறுப்பு ஏற்கும்படி கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட வரதராசனார், அந்தப் பொறுப்பு மிக்க பதவியை திறம்ப்பட நிர்வகித்தார். அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி வரதராசனாருக்கு 1972ஆம் இலக்கிய பேரறிஞர் என்ற பட்டத்தை கொடுத்து பெருமை படுத்தியது.

அன்னாருக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய மூன்று ஆண்மக்கள் பிறந்தார்கள். அவர்களை மிக நல்வழிப் படுத்தி இன்று அவர்கள் பெரும் மருத்துவர்களாக பணி புரிகின்றனர்.

வரதராசனார் பல மொழிப் பண்டிதராவார். அவருக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியும் தெரியும். சென்னை பல்கலை கழகத்தைத் தவிர திருப்பதி, அண்ணாமலைப் பல்ககலைக் கழங்களின் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். இதைத் தவிர கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திரா, தில்லி பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்தார்.

பல்கலைகழகங்களைத் தவிர, சாகித்ய அகாதெமி, பாரதிய ஞானபீடம், தேசிய புத்தக்குழு, இந்திய மொழிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ் அகராதிக் குழு, தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் மத்திய அரசு பணி தேர்வாணைக்குழு, தமிழ் நாட்டு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சி மொழிக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்று கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பல நிறுவனங்களிலும் அங்கம் வகித்து தனது அரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

புத்தகங்களை வரதராசனாரைப் போல பாதுகாப்பார் யாருமில்லை. தன்னிடம் இருக்கும் புத்தகங்களின் நடுவில் வேப்பிலை வைத்து இருப்பார். கரையான் பெரும் புத்தகப் பூச்சிகளை இந்த வேப்பிலை அண்ட விடாது. இந்த எளிமையான புத்தகப் பாதுகாப்பு முறையை தனது மாணாக்கர்களுக்கும் சொல்லி தருவார்.

வரதராசனார் அவர்கள் ஆறு மொழியியல் நூல்களும், கட்டுரை தொகுப்புகள் பதினொன்றும், பதிமூன்று புதினங்களும், சிந்தனைக் கதைகள் இரண்டும், ஆறு நாடகங்களும், இலக்கிய கட்டுரைகள் இருபத்து நான்கும், சிறுகதைகள் இரண்டும், நான்கு கடித இலக்கியங்களும், வாழ்க்கை வரலாறு நான்கும், ஆங்கில நூல்கள் இரண்டும் எழுதியுள்ளார். வரதராசனார் சிறுவர்களை என்றுமே மறந்ததில்லை. அவர்கள் நாளைய பாரத நாட்டு பெருமை மிகு குடிமக்கள் என்ற எண்ணம் அவருக்கு என்றும் இருந்தது. சிறுவர் இலக்கியத்துக்கு அவர் என்றும் முக்கியத்துவம் கொடுத்தார். சிறுவர்களுக்காக ஐந்து தொகுப்புகள் அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்பத்தைந்து. வரதராசனார் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை‘ பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. இந்த உரை சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டன.

வரதராசனாரின் புதினங்கள் எளிதில் புரியும்படி எழுதப்பட்டிருக்கும். பண்பாட்டுச் சிக்கல்களை கதை மாந்தர்களின் வாயிலாக முன் வைப்பதில் வரதராசனாரைப் போலச் சிறந்தவர் யாரும் இல்லை எனலாம். வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கையைப் பல நாவல்களில் காட்டியுள்ளார். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களை வரதராசனார் விளக்கியுள்ளார்.

தனது ‘எது குற்றம்?‘ சிறு கதையில் வரதராசனார் அவர்கள் “வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இது வரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும் போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன். போகும் போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன். இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக் கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது” என்று அவர் காதலில் ஏமாந்தவரைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லி தன்னுடன் வரத் தயங்கி வெகுதூரம் சென்று விட்டவளை எண்ணி வாடாமல் தனக்கு அருகில் இருப்பவளை ஏற்றுக் கொண்டு வாழ்வதின் அர்த்தத்தை அவர் இந்த சிறுகதையின் மூலம் அனைவருக்கும் சொல்கிறார். இது போன்று தனது தேங்காய் துண்டுகள், வாய்திறக்க மாட்டேன், எதையோ பேசினார், கட்டாயம் வேண்டும், விடுதலையா போன்ற சிறுகதைகளில் வாழ்வின் எதார்த்தத்தை அவர் சொல்லியுள்ளார்.

வரதராசனார் எழுதிய புதினங்களில் சாகித்திய அகடெமி பரிசு பெற்றது ‘அகல் விளக்கு‘ இந்தப் புதினத்தை வாசிக்கும் பொழுது நற்பண்புகள் பலவற்றையும் குணங்களையும் சொல்லித் தருவது போலிருக்கும். ஆழ்ந்து படிக்கும் பொழுது மனித மாந்தர்களுக்கு வேண்டிய ஆளுமை தன்மைகளை இந்தப் புதினம் சொல்லித்தரும். அகல்விளக்கில் வரும் கதாபாத்திரங்களான வேலுவும், சந்திரனும் வாழ்வின் எதிர் துருவங்களின் குறியீடுகள். அவர்களின் இயல்புகளைச் சொல்லும் பொழுது சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல் ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு மற்றொரு புறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடிக்கு அழகிய மலர்கள் இல்லை, வேருக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும் இலையும் தண்டும் வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது என்கிறார். வேலய்யனிடம் சந்திரன் கதையின் கருப்பொருளை “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவியயும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள், பராட்டினார்கள் என்ன பயன்? வரவர எண்ணெயும் கெட்டது திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கி விட்டேன். நீதான் நேராக்ச் சுடர் விட்டு அமைதியாக எரியும் ஒளிவிளக்கு” என்று சொல்வதாக மிக அழகாக அமைத்துள்ளார். சந்திரனின் சின்னம்மா பாத்திரத்தின் மூலம் பெண் விடுதலையைப் பற்றி மிக அழகாக சொல்கிறார். பெண்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தும் தங்கள் சிந்தனையை நடைமுறை படுத்த முடியாதபடி முடக்கப்படுவதால் குடும்பத்துடன் தாங்களும் அழிந்து போகிறார்கள். வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்கள்யும் கெடுக்கும் என்றும், விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் தெரியுமா? நீயே அரசர் என்று எண்ணிக்கொண்டு உன் விருப்பம் போல் ஆடமுடியாது என்றும் பல வாழ்க்கைக்கு உதவும் யோசனைகளை-கருத்துகளை இந்த புதினத்தில் பதிந்துள்ளார்.

தமிழ் காப்பியங்களைப் பற்றி கதையின் நடுவில் அவர் சொல்ல தவறுவதில்லை. கோவலனுடைய தவறு நன்றாக தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட அந்த தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகிக்கு இருந்தது. அதனால்தான் பொருள் இழந்து வருந்திய கணவனுக்கு தன் கால்சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும் அந்த வாழ்வுக்கு துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்கு கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் தூண்டும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்! எவ்வளவு தியாகம் வேண்டும் என்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளை எல்லாம் இந்தப் புதினத்தில் சொல்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் பொழுது இது வெறும் பொழுதுபோக்குக்கு படிப்பதன்று வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அதை சீர்படுத்த உதவும் கருத்துகள் என்று புரிகின்றது.

கரித்துண்டு‘ புதினத்தில், ஓவியக் கலையில் சிறந்த கணவன் முடமானதால் அவரை விட்டு விலகி பேராசிரியருடன் சேர்ந்து வாழும் ஓவியரின் மனைவியைப் பற்றியும், மனைவி விலகியதாலும், முடமானதாலும் ஏழ்மை அடைந்த ஓவியரைப் பற்றியும் அந்த நிலையிலும் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை அவர் ஏற்றுக்கொள்வதையும் வரதராசனார் மிக அருமையாகச் சொல்லியுள்ளார். இது தவிர ஆந்திர தமிழக எல்லை தகராறு, அமெரிக்க தனமான வாழ்க்கையின் சாதக பாதகங்கள், தேர்தல் முறையில் உள்ள பலவீனங்கள் போன்ற பல விவரங்களையும் அவர் தனது கதையில் சொல்லத் தவறுவதில்லை. நெஞ்சில் ஒரு முள் நவீனம் வறுமைக்காக தன் உடலை ஒரு பெண் விற்பதாக காட்டுகிறது. கயமை என்ற கதையில் பகட்டான வாழ்வை விரும்பி அதற்காகவே பலரையும் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக வசீகரம் என்ற பெண் கற்பை விற்பதாகச் சொல்கிறார்.

அவர் எழுதிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு, பெற்ற மனம், நெஞ்சில் ஒரு முள்,அகல் விளக்கு, மண் குடிசை, செந்தாமரை ஆகிய அனைத்துப் புதினங்களும் படிப்பவர்களைக் கவர்ந்தன.

கி.பி.2000 (சிந்தனைக் கதை) என்ற அன்னாரின் புதினத்தில் அவரின் கனவுகள் பதிவாகியுள்ளன. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. அவரின் ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சி கழகத்தின் பராட்டு பெற்றவை. அவரின் பல நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பலரின் பாராட்டையும் பெற்றது.

கலை என்பது நெஞ்சத்தில் இருந்து பொங்கி வரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். கலைஞர்கள அதை வெளிப்படுத்துகிறார்களைத் தவிர அதை உற்பத்தி செய்வதில்லை. கவிஞர்கள், போன்ற கலைஞர்களைப் பற்றி வரதராசனார் அவர்கள்

பூனையின் கண்கள் மனிதன் கண்களைவிட ஆற்றல் மிகுந்தது. ஆதலால் நள்ளிருளில் மனிதருடைய கண்ணுக்கு தெரியாதவையெல்லாம் பூனையின் கண்ணுக்குப் புலனாகின்றன. நாயின் மூக்கு ஆற்றல் மிகுந்தது. அதனால் மனிதனைவிட முகர்ந்தறியும் திறன் மிகுந்ததாக மோப்பத்தாலேயே பலவற்றை அறியவல்லதாக உள்ளது. இவ்வாறே கவிஞனுடைய உள்ளமும் மற்ற மக்களின் உள்ளத்தைவிட உணர்ச்சி மிக்கதாக இருக்கிறது. அதனால் மற்றவர்கள் உணர்கின்றவற்றையும் அவர்களை விட ஆழ்ந்து உணர முடிகிறது. கவிஞனுடைய அகக்கண்ணும் மிக வளர்ந்து பண்பட்டதாகையில் கற்பனையில் பலவற்றையும் படைத்து காக்கவும் அவனால் முடிகின்றது. இத்தகைய கற்பனை உலகில் உணர்ச்சி மிக்கவனாக கவிஞன் இருக்கும் நேரமே மிக மிகச் சிறந்த நேரம். அந்நிலையில் அவன் மனிதனாக வாழவில்லை. படைக்கும் கடவுள் போன்றவனாக அந்த நேரத்தில் வாழ்கிறான். அவனுடைய சாதாரண வாழ்க்கை வேறு. கற்பனை உலகில் திளைக்கும் அந்தப் பொழுது சிறிது நேரமே ஆயினும் அவன் உயர்ந்த கலைச் செல்வத்தைப் படைக்கும் நேரம் அது. அவன் தன்னை இழந்து தன்னை மறந்து கலையின் கருவியால் ஏய்த்து அமைந்துள்ள நேரம் அது. புல்லாங்குழலில் நுழையும் காற்று தானகாவே இசையைப் பிறப்பித்தல் போல அவனுடைய உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள் அவனை அறியாமலேயே பாட்டுகளைப் படைத்துக் கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்களில் ஒரு பிரிவினராக எழுத்தாளர்களைப் பற்றி வரதராசனார் அவர்கள் சொல்லும் பொழுது திருவள்ளுவர், இளங்கோ போன்ற கவிஞர்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு காலம் நம்மைப் பிரித்து வைத்த போதிலும் அவர்களின் நூல்கள் அந்த அரிய தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன. திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் பயின்றவர்கள் வேண்டும் இடத்தில் வேண்டும் காலத்தில் அந்த பெருமக்களின் திருவுள்ளங்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது என்றவர் ஆங்கில அறிஞர் ரஸ்கின் சொன்னதான அரசர், அமைச்சர் முதலானவர்களைக் காண்பதற்கு நாம் காத்திருக்கும் நிலை போல் அல்லாமல் நாம் எளிதில் கண்டு மகிழுமாறு நமக்காக அந்தப் புலவர் பெருமக்கள் என்றும் எங்கும் கருணை கொண்டு நூல் வடிவில் காத்திருக்கின்றனர். ஆகவே நல்ல நூல் என்பது எழுத்துச் சொற்பொருள்களால் ஆன ஏடுகள் அடங்கிய ஒன்று அன்று; நமக்காக காத்திருக்கின்ற பெருந்தகையின் திருவுருவம் எனலாம் என்று சொல்லி முடிக்கிறார்.

இன்றும் அன்னாரின் நூல்களைப் படிக்கும் போது அவரே நேரில் வந்து நம்மிடம் சொல்வது போல்தான் இருக்கிறது. அன்னாருக்கு அறுபத்திரண்டு அகவை ஆகும் போது அவரின் உடல் நலம் குன்றியது. அக்டோபர் மாதம் 10ஆம் தேதி 1974ஆம் ஆண்டு தமது கருத்துகளை நூல் வடிவில் நமக்கு தந்து விட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மு.வ. நூற்றாண்டு
அகல் விளக்கு பற்றி பக்ஸ்
கரித்துண்டு

அமெரிக்காவை செதுக்கிய புத்தகங்கள்

library_of_congressலைப்ரரி ஆஃப் காங்கிரஸ் இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. சுவாரசியமான பட்டியல். புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், சிறுவர் புத்தகங்கள் எல்லாம் இருக்கின்றன. இப்படி ஜெயமோகன் பட்டியலையும் அழகுபடுத்தி வெளியிட்டால்!

இந்தப் பட்டியலில் நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள்:

  1. Herman Melville’s Moby Dick (1851)
  2. Thoreau’s Walden (1854)
  3. Mark Twain’s Adventures of Huckleberry Finn (1884)
  4. Jack London’s Call of the Wild (1903)
  5. Margaret Mitchell’s Gone with the Wind (1936)
  6. Tennessee Williams’ A Streetcar Named Desire (1947)
  7. J.D. Salinger’s Catcher in the Rye (1951)
  8. Ray Bradbury’s Farenheit 451 (1953)
  9. Ayn Rand’s Atlas Shrugged (1957)
  10. Harper Lee’s To Kill a Mockingbird (1960)
  11. Rachel Carson’s Silent Spring (1962)
  12. Malcolm X & Alex Haley – Autobiography of Malcolm X (1965)
  13. James Watson’s Double Helix (1968)

  14. தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

நோபல் பரிசு பெற்ற வில்லியம் ஃபாக்னர் எழுதிய துப்பறியும் கதைகள்

william_faulknerபுத்தகம்: Knight’s Gambit – ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல்

நோபல் பரிசை வென்றவர் துப்பறியும் கதைகளும் எழுதினார் என்பது ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் இவை ஃபாக்னரின் பாணி கதைகளே. இவற்றில் உள்ள மர்மம் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் போலவோ அகதா கிரிஸ்டி கதைகள் போலவோ நம்மை என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யூகிக்க வைப்பதில்லை. கதாபாத்திரங்கள், சூழல் போன்றவற்றுக்குத்தான் முக்கியத்துவம். மெல்வில் டேவிசன் போஸ்ட் எழுதிய அங்கிள் ஏப்னர் கதைகளைப் போன்ற நடை. மாற்றிச் சொல்கிறேனோ – துப்பறியும் கதை விரும்பிகளைத் தவிர வேறு யாருக்கும் போஸ்ட் யாரென்று தெரியப் போவதில்லை! அங்கிள் ஏப்னர் கதைகள் காலத்தால் முற்பட்டவை. அதனால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

knights_gambitகதைகளின் நாயகன், துப்பறிபவர், காவின் ஸ்டீவன்ஸ் என்ற அரசு வக்கீல் (Prosecutor). கொஞ்சம் அத்தைப்பாட்டி ஸ்டைலில், விவிலிய ஸ்டைலில்தான் பேசுவார். ஃபாக்னரின் நடையே கொஞ்சம் விவிலிய ஸ்டைல்தான். கதைகள் அவரது மருமகனும் பதின்ம வயதினனும் ஆன சக் மாலிசனின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன.

ஏற்கனவே மேலோட்டமாகத்தான் எழுதுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். 🙂 ஏன், எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது. வாசிப்பு அனுபவம் ஒவ்வொருவருக்கும் பர்சனல், அதை அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியாது என்று எனக்கு இப்போதெல்லாம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. மர்மக் கதைகளுக்கோ கதைச்சுருக்கம் கூட எழுதுவதற்கில்லை. கதைகளை ட்விட்டர் ஸ்டைலில் அறிமுகம் செய்ய வேண்டியதுதான்!

இந்தக் கதைகளில் நான் தலை சிறந்ததாகக் கருதுவது Monk என்ற சிறுகதைதான். அதை மர்மக் கதை என்றெல்லாம் சொல்வது அதை குறைத்து மதிப்பிடுவது. மர்மமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் முட்டாள் பயல் – சிறையிலிருந்து விடுதலை ஆகும் சமயத்தில் ஒரு கொலை செய்கிறான். ஏன் என்று மெதுவாகப் புரிகிறது.

Tomorrow என்ற சிறுகதையையும் குறிப்பிடலாம். குற்றவாளி என்று எல்லாருக்கும் தெரிகிறது ஆனால் ஜூரி அவனை விடுவிக்கிறது. ஏன்? இது 1971-இல் ராபர்ட் டுவால் நடித்து திரைப்படமாகவும் வந்தது

Smoke மற்றும் An Error in Chemistry என்ற இரண்டு சிறுகதைகளும் சிறந்த துப்பறியும் சிறுகதைத் தொகுப்புகளில் சேர்க்கப்படுகின்றன. படிக்கலாம்.

மற்ற கதைகளை – Hand upon the Waters மற்றும் Knight’s Gambit ஆகியவற்றை நான் பெரிதாக ரசிக்கவில்லை.

படியுங்கள் என்று நான் பரிந்துரைப்பேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், துப்பறியும் கதைகள்

Thus Spoke Zarathustra (Part E – Final)

Aniruddha Brahmarayar

Epilogue

Zarathustra and his animals along with pupils now again started to climb the mountains. Zarathustra was not immensely satisfied. The only thing he could do is keep walking in that wilderness for now.

He reached a city where he saw a lot of his old friends and hermits. He was ashamed to tell that he hadn’t met his father yet. But he told them what he saw – quite metaphorically. The hermits were pleasantly smiling at his attempt.

His old friends started scolding him,  as they didn’t understand. His animals had a vile smile on their faces. Zarathustra became extremely angry.

“Then don’t go into the wilderness”

Also sprach Zarathustra. Yes. Zarathustra III.

(முற்றும்)
மீண்டும் சொல்கிறேன். இந்த புத்தகம் மிகவும் கடினமானது. குறைந்த பட்சம் எனக்கு. ஆனால் இதை வாசித்தவுடன் பிற புத்தகங்கள் இதைவிட எளிதாகவே இருக்கவேண்டும் என்ற ஒரு திருப்தி. வாசித்து இன்பமடைய வாழ்த்துக்கள்! ஜெயமோகன் இது பற்றி ஒரு விளக்கமளித்தால் உதவியாக இருக்கும். அவர் உபர்மன்ச் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தேடமுடியவில்லை.

Thus Spoke Zarathustra (Part D)

Aniruddha Brahmarayar

Ecce Homo!

It became a bright morning. They were in a plain on the top of mountain. The pupils were very tired because of the long walk they undertook the night. But when they looked at Zarathustra, they were stunned.

“Ecce Homo!”

He was naked and dancing.

Zarathustra’s zeal was overflowing.

“Behold! The fantasy around you! The rainbow that is encompassed by its spectrum! Can you separate the colors of it? The blossoming flowers and the water dripping from them! Feel its ice. Sprinkle it over you! Drink it.

“Behold! The Violets. The yellows. The magnificence of the trees. The blues in the horizon! Mountains and valleys. The order of nature is the nature of the order of this plateau. Can you feel the zephyr in this valley? The one that deposits the jasmine and roses for your olfactory’s pleasure.

“Behold! The whites on top of the blues! The melting whites! Yes, the melting whites into sparkles! The sparkle sparkles.”

Then they reached a river.

“Behold! The river running near you! Icy glassy water sparkles. What do you see? The purity that sparkles! The eternity of our quest needs the “sparkles”.

“Behold! You know some say “Stop not till the goal is reached” I say stop not even if the goal is reached. That what the “sparkles” do.

“Behold! The glittering butterflies and the “unfathom-ables” that fly! The yellow round light that is hanging in the sky! A circle of yellow between the two summits of the big blues! Who is dropping it between those! The nature’s order in a perfect lattice! Yes. The perfection and the perfection of nature!”

In great excitement, thus spoke Zarathustra.