டோரதி சேயர்ஸ் எழுதிய Murder Must Advertise

சேயர்ஸ் துப்பறியும் கதை எழுத்தாளர்களில் குறிப்பிட வேண்டியவர். எனக்குப் பிடித்த துப்பறியும் கதை எழுத்தாளர்களில் ஒருவர். Golden Age of Detective Fiction என்று அறியப்படும் காலகட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளர்.

சேயர்ஸின் படைப்புலகம் இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்டது. பிரபு குடும்பத்தைச் சேர்ந்த, பணக்கார பீட்டர் விம்சி அனேகக் கதைகளில் துப்பறிபவராக வருவார். கதைகள் எப்போதும் விறுவிறுப்பாக இருந்துவிடாது. ஆனால் அனேகக் கதைகளில் முடிச்சு நன்றாக இருக்கும், விம்சி அதை அருமையாக அவிழ்ப்பார். ஆனால் சேயர்சின் கதைகள் எனக்குப் பிடிக்க முக்கியமான காரணம் மர்மங்கள் அல்ல; எப்படியோ இரண்டு உலகப் போர்களுக்கு நடுவேயான காலகட்டத்தை, அன்றைய பணக்காரர்கள், முக்கியத்துவத்தை, பணத்தை, சொத்து சுகம் சௌகரியங்களை, மதிப்பை இழந்து கொண்டிருக்கும் பிரபு குடும்பத்தவர்கள், போருக்குப் பிறகான வெறுமையை உணரும் அன்றைய ஜென்டில்மென் வர்க்கம், விடுதலையை உணரத் தொடங்கி இருக்கும் பெண்கள் என்று சித்தரிப்பது உண்மையாக இருப்பதால்தான்.

Murder Must Advertise (1933) நல்ல உதாரணம். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் விக்டர் டீன் மாடிப்படிகளில் விழுந்து இறந்து போகிறார். விபத்து என்று தீர்ப்பு வந்துவிட்டாலும் முதலாளிக்கு சின்ன உறுத்தல். விம்சி வேறு பெயரில் விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். போதை மருந்து வியாபாரத்துக்கான ஒரு சரடும் சென்று கொண்டிருக்கிறது. விம்சி எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்கிறார்.

நாவலை உயர்த்துவது விளம்பரக் கம்பெனியின் சித்தரிப்புதான். இன்றும் காலாவதி ஆகிவிடாத சித்தரிப்பு. காப்பிரைட்டர்கள், ஓவியர்கள், பத்திரிகைகளின் காலக் கெடுபிடிகள், விளம்பரம் கொடுக்கும் கம்பெனிகள், அவர்களுக்கு நடுவே உள்ள போட்டிகள் எல்லாம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. என் கண்ணில் இது மர்ம நாவல் அல்ல; இலக்கியமே. என்ன, இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம்.

பத்திரிகையில் விளம்பரம் வெளிவருவதற்கு முன் அதைப் பற்றிய குறிப்பு ஒன்றை பெற்றுக் கொண்டு அதை வைத்து போதை மருந்து வியாபாரம் நடைபெறுகிறது என்பதுதான் முடிச்சு. இது அந்த போதை மருந்து கூட்டத்துக்கு மட்டும்தான் புரியும் குறிப்பு. இரண்டு நாள் கழித்து பத்திரிகை வெளிவந்த பிறகு அதே குறிப்பை வைத்து அதே வியாபாரத்தை செய்யலாமே, முன்னாலேயே பெறுவதால் என்ன லாபம்? வேறு யாருக்கும் புரியப் போவதில்லையே? படிக்கும்போது இந்த மாதிரி கேள்வி எதுவும் மனதில் எழாததுதான் இந்த நாவலின் வெற்றி.

சேயர்ஸ் இந்த நாவலை எழுதும்போது விளம்பர நிறுவன உலகம் மற்றும் அன்றைய வெறுமையால் பார்ட்டி, குடி, போதை என்று அலையும் பணக்கார இளைஞர்/இளைஞிகளின் உலகம் இரண்டையும் விவரிக்க நினைத்தாராம். ஒன்றில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அவரே அதை ஒத்துக் கொண்டாராம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

ஜெயமோகனின் “நாவல்” புத்தகம்

ஜெயமோகனிடம் வியக்க வைக்கும் ஒரு குணம் உண்டு. எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி கேட்டாலும் உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, முன்முடிவுகள் இல்லாமல் கேட்டால் பொறுமையாக, எரிச்சலின் சாயலே இல்லாமல் பதில் சொல்வார்.

அவருடைய நாவல் என்ற புத்தகத்தை நான் சில வருஷங்கள் முன்னால் படித்தேன். அதில் ஒரு நல்ல நாவலின் இலக்கணம் என்ன, சிறுகதை, குறுநாவல், நாவலுக்கு என்ன வித்தியாசம், தமிழில் நாவல்கள் என்று பொதுவாக சொல்லப்படுபவை நீண்ட சிறுகதைகள்/குறுநாவல்களே, அவற்றை நீள்கதை என்றே சொல்ல வேண்டும் என்று அவர் ஸ்டைலில் அடர்த்தியாக, நீளமாக நிறைய இருந்தது. என்னடா இப்படி அறுக்கிறாரே, இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன பயன் என்று நினைத்துக் கொண்டேன். நானெல்லாம் படிப்பது பிடிக்கிறதா இல்லையா என்ற சிம்பிள் இலக்கணத்தைத் தாண்டுவதில்லை. எது சிறுகதை, எது நாவல் என்பதை எத்தனை பக்கம் இருக்கிறது என்பதை வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம், அதற்கு மேல் சிக்கலான விதிகள் தேவையில்லை என்று நினைப்பவன். இலக்கணம் என்பது எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும், எல்லாருக்கும் யோசிக்காமல் சுலபமாக இலக்கணத்தை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணம் உண்டு. அதுவும் மானேஜ்மென்ட் புத்தகங்கள் பலவும் விதிகள் சிக்கலாக ஆக அவற்றை apply செய்வது கடினம் என்று சொல்கின்றன, அது நம்ம நினைப்பது சரிதான் என்று என் கருத்தை மேலும் மேலும் பலப்படுத்தியது.

அவர் இங்கே வந்திருந்தபோது அவருடன் ஒரு டிரைவ் போயிருந்தோம். எனக்கு இந்த சபை நாகரீகம் என்பது கொஞ்சம் குறைவு. நான் சார் இப்படி என்னவோ வகைப்படுத்தறீங்களே, என்ன பயன், பிடிக்குது/பிடிக்கலை போதாதா, தி.ஜா. எழுதியது நீள்கதையா நாவலா என்று தெரிந்து கொள்வது மோகமுள்ளை நான் வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை, அனுபவத்தை மாற்றவா போகிறது, இது எதற்கு வெட்டி ஆராய்ச்சி என்று கேட்டேன். அப்போதெல்லாம் அது கொஞ்சம் நாகரீகக் குறைவு என்பதே தெரியாது. ஜெயமோகன் சொல்வதை வைத்துப் பார்த்தால் நான் இந்த மாதிரி சுந்தர ராமசாமியை கேட்டிருந்தால் அவர் வீட்டில டிவி எத்தனை இன்ச் என்று பேச்சை மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். 🙂 அவர் உனக்கு பயன் இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு பயன்படலாம் என்று சொன்னார்.

அவர் எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். நானெல்லாம் பிடிக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத் தாண்டுவது அபூர்வமே. அவர் ஆஹா இது பிடித்திருக்கிறது, இதுவும் பிடித்திருக்கிறது, இதெல்லாம் ஏன் பிடித்திருக்கிறது, இப்படி எனக்குப் பிடித்திருக்கும் நாவல்களின் பொதுவான குணாதிசயம் என்ன என்று யோசித்து ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொள்கிறார், அதை முன் வைக்கிறார், அதைப் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறார் – எத்தனை சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்டாலும் சரி.

ஆனால் அவரது எண்ணங்களில் – வேறு பல உரையாடல்கள், கட்டுரைகள் மூலமாக நான் உணர்ந்து கொண்டது – எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. இலக்கணத்தை புரிந்து கொண்ட பின்னரே இலக்கியத்தை முழுமையாக உள்வாங்க முடியும், ரமணி சந்திரனை மட்டுமே படித்து வளர்பவன் நேராக அசோகமித்திரனுக்கு போய்விட முடியாது, நவீனத்துவம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் மட்டுமே அது இயலும் என்று அவர் கருதுகிறார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்பத்ற்கு நான் உட்பட பல உதாரணங்கள் உண்டு. அதுவும் அசோகமித்திரனின் புனைவையே படிக்க முடியாத ஒருவன் அதன் பின் இருக்கும் தியரியைப் படிப்பான் என்பது வீண் கனவு. அசோகமித்திரன் புனைவுகளைப் படித்த பின்னர் அந்த தியரியில் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது, படிப்பதற்கு முன்னால் அல்ல. அந்த தியரியைப் படித்த பின் அவனுடைய படிப்பு இன்னும் கூர்மை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். வகைப்படுத்துதல் சில சமயம் நமது எதிர்பார்ப்புகளை வழிநடத்தலாம். அவை மட்டுமே இந்த மாதிரி தியரிகளின் பயன் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு பொதுவாக தியரிகளை விட நேராக படித்துக் கொள்வதுதான் வொர்க் அவுட் ஆகிறது.

பல முறை சொன்னதுதான் – அவருடைய முறை அவருக்கு…

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

(குவளைக்) கண்ணன் என் சேவகன் – பாரதியார் கவிதை

கண்ணன் என் சேவகன் கவிதை பாரதியின் அணுக்கர் குவளைக்கண்ணனை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டது என்கிறார்கள். ஏழெட்டு வயதில் பாரதியார் கவிதைகளைப் படித்தபோது மனம் கவர்ந்த கவிதைகளில் ஒன்று. “பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பான்” என்ற வரிக்கு விழுந்து விழுந்து சிரித்தது நினைவிருக்கிறது. “எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார்’ என்ற வரியும் கவர்ந்தது.

கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கிங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு, கண்டீர்
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும்
இரவிற் பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்
கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே!
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்

கட்டுறுதி உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல் ஈங்கிவற்றால்
தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய்? கூறு என்றேன் ஐயனே!
தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை
நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்
ஆன வயதிற்களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை என்றான்

பண்டைக் காலத்துப் பைத்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு
பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
தாதியர் செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி
பண்டமெலாம் சேர்த்து வைத்து பால் வாங்கி மோர் வாங்கி
பெண்டுகளைத் தாய் போல பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்
செல்வம் இளமாண்பு சீர்ச சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாம் கொள்ளக் காரணமும் உள்ளனவே!


படிக்காத மேதை திரைப்படத்தில் இந்தக் கவிதையிலிருந்து நாலு வரிகளை எடுத்து பயன்படுத்தி இருப்பார்கள்.


குவளைக்கண்ணன் பாரதியாரின் அணுக்கர். மரியாதையாகச் சொல்ல வேண்டுமென்றால் தோழர். ஏறக்குறைய அல்லக்கைதான். பாரதிக்கு பாதுகாவலர் போல இருந்திருக்கிறாராம். அவரைத் தாண்டித்தான் பாரதியை அணுக முடியுமாம். பாரதியை யானை தாக்கியபோது இவர்தான் போய் பாரதியை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆசாரமான பிராமணர் குடும்பத்தில் பிறந்தவராம். தயக்கங்கள் இருந்தும் பாரதி சொன்னதால் அந்தக் காலத்தில் முதலியார் வீட்டில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறாராம். குவளைக்கண்ணன்தான் புதுவையில் பாரதிக்கு பல சாமியார்களை அறிமுகம் செய்து வைத்தாராம். குவளைக்கண்ணனுக்கு ஏதோ கம்பெனியில் வேலை கிடைத்தபோது பாரதி நீ போகக்கூடாது, போனால் எனக்குத் துணையில்லை என்று தடுத்துவிட்டாராம்.

பாரதி புதுவைக்கு வந்தபோது இவர் மூலமாக சுந்தரேச ஐயர் என்ற வாசகர்/அன்பரை சந்தித்தாராம். இவருக்கும் பாரதி, இந்தியா பத்திரிகை மேல் ஈர்ப்பு இருந்தாலும் இவர்தான் பாரதி என்று தெரிந்து கொள்ள நாளாயிற்றாம்.

பாரதிக்கு எப்படி இந்த மாதிரி ஒரு “சீடர்” குழு அமைந்தது என்று வியப்பாகத்தான் இருக்கிறது. வேலை வெட்டி இல்லாமல் இவரோடு சுற்றிக் கொண்டிருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? குவளைக்கண்ணனே கி.வா.ஜ.விடம் சொன்னாராம்.

நான் ஏழை; அறிவில்லாதவன். அவர் எனக்கு தன் செய்யுட்களில் ஒரு ஸ்தானம் கொடுத்திருக்கிறார். “கிருஷ்ணா, பொருட்செல்வம் அழிந்துவிடுமடா; கவிச்செல்வம் தருகிறேன் உனக்கு”

கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று கி.வா.ஜ. சொல்கிறார். பாரதி மாதிரி அபூர்வ ஆளுமைகளிடம் இந்த மாதிரி ஒரு ஸ்தானம் கிடைத்தால் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் போலிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
கி.வா.ஜ. குவளைக்கண்ணனின் கடைசி காலத்தை நினைவு கூர்கிறார்.
பாரதி-குவளைக்கண்ணன் முதல் சந்திப்பு

சுஜாதாவின் “என்றாவது ஒரு நாள்”

திறமையாக எழுதப்பட்ட கதை.

யோசித்தால் சுஜாதாவும் சில cliche-க்களை பயன்படுத்தி இருப்பது தெரிகிறது. குறிப்பாக புண்ணியகோடி/திலகத்தின் முன்கதை. ஆனால் அந்த cliche-க்களை வைத்து திறமையாக கதையை முன் நகர்த்தி இருக்கிறார்.

புண்ணியகோடி/நாராயணன் திருடன். சிறையிலிருந்து தப்பிக்க அவனுக்கு ஒரு யுக்தி இருக்கிறது. தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். வேலை செய்யும் இடத்தில் திலகத்தின் மீது ஒரு கண். அவனைத் தேடும் போலீஸ். திலகம் பாதுகாப்புக்காக ஆண் துணையைத் தேடுகிறாள். நாராயணனோடு தங்குகிறாள். நாராயணனுக்கு சிக்னல் கொடுத்தாலும் அவளுக்கு நாராயணனை மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறது, ஆனால் ஜெயிலில். போலீஸ் நாராயணனை நெருங்குகிறது. நாராயணன் என்ன செய்யப் போகிறான்?

நாராயணனின் தலைமறைவு வாழ்க்கை; போலீஸ் அவனை நெருங்கும் விதம்; திலகம் வந்ததும் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்; denouement – எல்லாமே சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கதையை உயர்த்துபவை அவைதான்.

கதை சுவாரசியமாகச் செல்கிறது. Cliche எல்லாம் படிக்கும்போது தெரிவதே இல்லை. சுஜாதாவின் சாதனை என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் அவருடைய டச் தெரிகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

கந்தசஷ்டி கவசம்

என் அம்மாவுக்கு பக்தி அதிகம். கோவிலுக்குப் போனால் ஆஹா அம்பாள் என்ன அழகு, முருகன் என்ன தேஜஸ் என்று கோவிலிலேயே உட்கார்ந்திருப்பாள், லேசில் கிளம்பமாட்டாள். பதின்ம வயதில் பிள்ளைகள் மூவரும் அய்யோ அய்யய்யோ என்று அலுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.

தன் பக்திப் பரவசத்தை பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று என் அம்மா எவ்வளவோ முயன்றாள். என் பதின்ம வயதில் எல்லாம் கந்தசஷ்டி கவசம் சொன்னால்தான் காலையில் காபி கிடைக்கும். கந்தர் அனுபூதி, விநாயகர் அகவல், சுப்ரமணிய புஜங்கம் என்று சொன்னால் போனஸ் புன்னகை நிச்சயமாக உண்டு. இன்றும் நினைவிருப்பது ஓரளவு நீண்ட பிரார்த்தனை கந்தசஷ்டி கவசம் ஒன்றே. (கவனிக்க, பிராமணக் குடும்பம், ஆனால் தமிழ் வழிபாட்டுப் பாடல்களுக்குத்தான் முக்கியத்துவம். நான் பார்த்த வரையில் என் உறவினர் குடும்பங்களிலும் அப்படித்தான்.)

ஆனால் பதின்மூன்று பதினான்கு வயதுப் பையனுக்கு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து முருகவேள் விந்து

என்று பாராயணம் செய்யும்போது என்னவெல்லாம் தோன்றக்கூடும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். டிபிகல் பதின்ம வயதினன், அப்பா அம்மாவின் நம்பிக்கைகளை கேள்வி கேட்டு தன் சுய அடையாளத்தை காட்ட, புரட்சி செய்ய விரும்பும் வயது. சஷ்டி கவசமோ பட்டியல்தான்; வல்ல பூதம் வலாஷ்டிக பேய்கள் என்று பட்டியல் போடும்போது ஆண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசிகளைக் குறிப்பிட மறந்துவிட்டாரே, என்னை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் விதண்டாவாதக் கேள்விகள் தோன்றத்தான் செய்தன. வட்டக் குதத்தைக் கூட விட்டுவைக்கவில்லையே என்று இளக்காரச் சிரிப்பு எழத்தான் செய்தது.

இன்று வயதாகிவிட்டது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று தெரிகிறது. பாலன் தேவராயன் பகர விரும்பியது என்ன என்று ஓரளவு புரிகிறது. அதே நேரத்தில் இந்தக் கறுப்பர் கூட்டத்தின் மனநிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இன்னும் விடலைப் பருவத்திலேயே இருக்கிறார்கள். அவர்களின் வெட்டிப் பேச்சை நான் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இதனால் உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டவர்களும் முட்டாள்தனம் தடை செய்யப்பட வேண்டியதல்ல என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது வெறும் bad taste மட்டுமே. Bad taste by definition is bad, but it is not a crime.

அடுத்தவர் மனம் புண்படுகிறது என்பதால் நீங்கள் அடக்கி வாசிப்பது நல்ல விஷயம். அது உங்கள் நற்பண்பைக் காட்டுகிறது. ஆனால் கறாராகப் பார்த்தால் அது வெறும் சபை நாகரீகம் மட்டுமே. ஆனால் அப்படி என் மனம் புண்படுவது உங்களை சட்டப்படி கட்டுப்படுத்த முடியாது. சஷ்டி கவசத்தைப் பற்றி இப்படி பேசுவதால் உங்கள் மனம் புண்படுகிறது, அதைத் தடை செய்ய வேண்டும் என்றால் தி.க.வினர் பிராமணர் பூணூல் அணிவது என் மனதைப் புண்படுத்துகிறது என்று கிளம்புவதை எப்படி எதிர்ப்பீர்கள்? அட தலித்கள் எங்கள் வீதிகளில் செருப்பணிந்து நடப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது என்று யாராவது உளறினால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? இது எங்கேதான் நிற்கும்? Where do you draw the line?

உங்கள் மனம் இளம் பெண்கள் தொப்புளில் வளையம் போட்டால் புண்படலாம்; பெண்கள் மதுச்சாலைகளுக்குச் சென்று மது அருந்துவது உங்களுக்கு கலாச்சார சீரழிவு என்று தோன்றலாம், மனம் புண்படலாம். குட்டைப் பாவாடை அணிந்து சானியா மிர்சா டென்னிஸ் விளையாடுவது ஒரு முல்லாவின் மனதைப் புண்படுத்தலாம். பெருமாள் முருகனின் புத்தகம், எம்.எஃப். ஹுசேனின் ஓவியங்கள், சார்லி ஹெப்டோவின் கார்ட்டூன் எது வேண்டுமானாலும் நம் மனதைப் புண்படுத்தலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒருவர் மனதைக் கூட புண்படுத்த்தாது என்று எப்படி உறுதிப்படுத்த முடியும்? மனம் புண்படுவது என்பது ஒரு subjective criterion, அது சட்டத்தின் அடிப்படையாக இருக்க முடியாது.

கவனியுங்கள், கறுப்பர் கூட்டத்தின் முட்டாள்தனமான பேச்சுகளை நீங்கள் ஏற்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களின் முதிராத்தன்மையை (immaturity), மூர்க்கத்தனத்தை கண்டிப்பது உங்கள் உரிமை. நமக்குப் பிடிக்காத விஷயத்தை, நமக்குத் தவறாகத் தெரியும் விஷயத்தைக் கண்டிப்பது வேறு, எனக்குப் பிடிக்காததை நீ பேசுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது வேறு. வால்டேரோ யாரோ சொன்னது மாதிரி a demoracy should defend the right of people to say disagreeable things – you don’t have to accept them!

அதிலும் உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்ட பக்தர்கள் பொங்குவதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. சல்மான் ரஷ்டிக்கு ஃபட்வா விதித்தது குற்றம், டாவின்சி கோடை தடை செய்யக் கூடாது, தஸ்லிமா நஸ் ரீனுக்கு அநீதி என்றெல்லாம் பொங்கிவிட்டு, சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசும் பாதகர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கொந்தளிப்பது கயமை. குறிப்பாக, இதைப் பற்றி குமுறும் ஹிந்துத்துவர்களுக்கு; மனம் புண்படுகிறது என்று போராடும், ஃபட்வா விதிக்கும், முல்லாக்களை உங்கள் ஆதர்சமாகக் கொள்ளாதீர்கள்! முல்லாக்களின் குறுகிய மனப்பான்மையை எதிர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டே அவர்கள் போட்ட ரோடிலேயே நடப்பது உங்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா?

நாலைந்து வருஷத்துக்கு முன் இதெல்லாம் நடந்திருந்தால் நான் வணங்கும் முருகனை இந்தக் கேனையன்களா கேவலப்படுத்த முடியும், முருகனை சாதாரண மனிதர்கள் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று நினைப்பவர்கள் முருகனைக் கடவுளாக வழிபடுபவர்களாக இருக்க முடியாது என்றெல்லாம் எழுதி இருப்பேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, இல்லை வெறும் பழக்கதோஷத்தால் ஆண்டவா பிள்ளையாரே என்கிறேனா என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை.

மீண்டும் சொல்கிறேன் – Bad taste is not a crime.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

ஐந்து வார்த்தைகள்

ஜாலிக்காக ஐந்து வார்த்தைகள் – interdigitate, titular, cockloft, cuntline, cummingtonite. பொருள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இங்கே பாருங்கள். எதையாவது நினைத்து ஏமாந்து போனீர்கள் என்றால் நான் பொறுப்பல்ல!

மேலே இருப்பவற்றை முதலில் பார்க்கவில்லை, கீழே இருக்கும் வார்த்தைகள்தான் கண்ணில் பட்டன. நான் ஒரு bibliotaph என்று தெரிந்து கொண்டேன், ஆனால் bibliolater என்று சொல்லிவிட முடியாது. இந்தத் தளத்தைப் பார்க்கும் பலருக்கும் bouquinist கடைகளுக்குப் போகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகப் பிடிக்கும். எனக்கு florilegium-களைப் படிக்கவும் பிடிக்கும். ஆனால் pandect-களை முழுதாகப் படிக்கும் பொறுமை இல்லை!

 

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழி

அ .கா. பெருமாளின் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு சொல்லகராதி

அ .கா. பெருமாளின் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு சொல்லகராதி குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரது உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதுவும் உதவித் தொகை எதுவும் பெறாமல் சொந்தச் செலவில் அலைந்து திரிந்து 3000த்துக்கும் மேற்பட்ட சொற்களை சேகரித்திருக்கிறார். ஆனால் முன்னுரையில் சில சொற்றொடர்கள் ஏதோ ஒரு ஜாதியோடு அடையாளப்படுத்தப்படுகின்றன, அதனால் அவற்றை சேர்த்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன் என்று அவர் எழுதி இருப்பது கொஞ்சம் சோகப்படுத்தியது. எதில்தான் ஜாதி என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போகிறது. வையாபுரிப் பிள்ளை அகராதியைத் தொகுத்தபோதும் இதே மாதிரி பிரச்சினைகளை எதிர்கொண்டார், ‘பார்ப்பனச்சேரி’, ‘சான்று’ (கள் என்று அர்த்தமாம்), ‘கும்பகோணம்’ (பித்தலாட்டம் என்று ஒரு அர்த்தம் இருப்பதாக வின்ஸ்லோ அகராதி சொல்கிறதாம்!) போன்ற வார்த்தைகள் அவருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தினவாம்.

அகராதியைப் படிக்க முடியாது. 🙂 ஆனால் அங்கங்கே கண்ணில் பட்ட சில வார்த்தைகள் வியப்பூட்டின. ‘அக்கடா’ (அக்கடான்னு நாங்க உடை போட்டா என்று பிரபல பாட்டு வேறு இருக்கிறது), ‘அக்கி’ (அம்மை நோயில் உடலில் எழும் கொப்புளங்கள்), அசத்து (பிராமணர்கள் அசடு என்பதை இப்படியும் சொல்வார்கள்), ‘இளவட்டம்’, ‘உண்டாயிருத்தல்’ (கர்ப்பமாக இருப்பது – காசேதான் கடவுளடா திரைப்படத்தில் சென்னைத் தமிழ் பேசும் போலி சாமியார் தேங்காய் “மங்களம் உண்டாகட்டும்” என்று ஆசீர்வதிக்க, நாயகி லட்சுமி பக்கத்து வீட்டு மங்களம் கர்ப்பமா என்று கேட்பார்), ‘லங்கோடு’, ‘உண்டியல்’ எல்லாம் ஹிந்தியிலிருந்து வந்தவை, என்ன நாஞ்சில் நாட்டுக்கு மட்டும்தான் வந்தவையா? ‘உதிரிப்பூ’, ‘எலிப்பொறி’, ‘ஓட்டை’, ‘கண்மூடித்தனம்’, ‘கணிசம்’, ‘காக்காய்வலிப்பு’, ‘கும்பி’, ‘கெட்டிக்காரன்’, ‘சம்மணம்’, ‘மட சாம்பிராணி’, ‘சீம்பால்’ ‘டம்ளர்’, ‘பட்டாளம்’, ‘பப்படம்’, ‘பருக்கை’, ‘மத்தியானம்’, ‘மயிராண்டி’, ‘மல்மல்’, ‘மொக்குதல்’, ‘ரேக்ளா’, ‘ருசுப்படுத்தல்’, ‘வக்கணை’, ‘வயசுக்கு வருதல்’, ‘வழுக்கை’ (இளநீரின் தேங்காய் பருப்பு) எல்லாம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கா? சென்னையில் பிறந்து செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களிலும் சென்னையிலும் வளர்ந்து சேலத்தில் படித்த நானும் என் குடும்பத்தினரும் சரளமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை…

அ.கா. பெருமாள் நாட்டார் தெய்வங்கள் பற்றி எழுதிய சில கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

அன்னை மாயம்மா கன்யாகுமரியில் ஒரு பெண் ‘சாமியாரை’ பற்றி எழுதப்பட்டது. இதெல்லாம் அந்த சாமியாரின் பக்தர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

ராட்சசனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

வெண்முரசு முடிந்துவிட்டது. 7-8 வருஷம். இடைவிடாத எழுத்து. மகாபாரதத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் கற்பனையை ஓடவிட்டிருக்கிறார். ஏழெட்டு வருஷம் கை சலிக்காது எழுதுவதே பெரிய விஷயம். என்னென்னமோ மன உளைச்சல்களில் மனம் சலித்துப் போய் என்னால் முழுவதுமாக படிக்கக் கூட முடியவில்லை. இவர் மனம் சலிக்காது எழுதி இருக்கிறார். Quantity ஒன்றை மட்டுமே வைத்து இது அவருடைய சாதனை என்று சொல்லிவிடலாம். இந்த ராட்சசனைப் பற்றி பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

Quality-யும் உயர்தரத்தில்தான் இருக்கிறது (நான் படித்த வரையில்). குறிப்பாக – தமிழ் எழுத்தாளர்களில் 3 பேர் மேதைகள், அதில் ஜெயமோகன் ஒருவர் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவராலேயே இனிமேல் அவர் நீலம் பகுதியில் தொட்ட உச்சத்தை மீண்டும் தொட முடியுமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் நீலம் பகுதியை நான் முழுவதாகப் புரிந்து கொண்டுவிட்டேன் என்று சொல்லமுடியாது. நீரில் மூழ்கி இருக்கும் பனிப்பாறை, எனக்குத் தெரிவது நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் பகுதிதான். அடியில் பெரும்பாறை இருக்கிறது என்று தெரியும், ஆனால் எவ்வளவு பெரிது என்று சரியாகத் தெரியாது.

என் கண்ணில் முதற்கனல் ஒரு சாதனை. அதை மழைப்பாடலில் மிஞ்சினார். வண்ணக்கடல் அதையும் தாண்டியது. நீலம் இன்னொரு படி மேலேறி வேறு லெவலுக்குப் போனது. அதற்குப் பிறகு அந்த உச்சத்தை அவராலேயே மீண்டும் அடையமுடியவில்லை என்றுதான் கருதுகிறேன்.

நான் மீண்டும் மீண்டும் படிப்பது வண்ணக்கடல். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது மீள்வதற்காக ஏதாவது ஒரு அத்தியாயத்தை படிப்பேன்.

என் மன உளைச்சல்களாலோ, இல்லை மகாபாரதப் பாத்திரங்களைப் பற்றி என் பிம்பங்களிலிருந்து அவர் அவ்வப்போது சற்று விலகுவதாலோ, இல்லை எனக்கு தர்க்கரீதியான முரண்பாடுகள் சில அவ்வப்போது தெரிந்ததனாலோ நீலத்துக்குப் பிறகு நான் அவ்வப்போதுதான் படித்தேன். என் காக்காய்கடி படிப்பில் குறிப்பாக துரோணரை தேவையில்லாமல் குறைக்கிறார், கர்ணனுக்கு அளவுக்கு அதிகமான பில்டப் கொடுக்கிறார், இருமை/ஆடிப்பாவை என்ற கருத்தை எல்லா இடங்களிலும் வலிந்து புகுத்துகிறார் (அர்ஜுனன் கர்ணன், பீமன் துரியோதனன் என்றால் சரிதான், கண்ணன் கணிகர், சாத்யகி கிருதவர்மன் என்று பல…) என்று தோன்றியது. சில சமயம் எனக்கு மெகாசீரியல் போல இழுக்கிறார் என்றும் தோன்றத்தான் செய்தது. தினமும் படிக்காமல் ஒரே மூச்சில் படித்தால் இழுக்கிறார் என்று தோன்றாது என்று நினைக்கிறேன்.

ஆனால் மனிதன் கரப்பான் பூச்சியாக எப்படி மாறமுடியும், Metamorphosis-ஐ சிறுகதையாக எழுதி இருந்தால் போதாதா, நாவலாக இழுக்க வேண்டுமா என்றும் கேட்கலாம். Guernica ஓவியத்தில் இடது மூலையில் இரண்டு விரலை வரைந்தால் போதாதா, ஐந்தும் வேண்டுமா மாதிரி எண்ணம்தான் அது. மேதைகளின் படைப்பில் நாம் கண்டுபிடிக்கும் குறைகள் நம்மைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

குறைகளே அற்ற படைப்பு, விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்று நான் சொல்ல வரவில்லை. இத்தனை பெரிய நாவலில் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் பொருட்படுத்தக் கூடிய குறைகள் இருக்கும் என்று தோன்றவில்லை. ஜெயமோகன் எழுதுவதில் சிறு உறுத்தல் இருந்தாலும் எனக்கு பூதாகாரமாகத் தெரியும் என்பதும் உண்மைதான்.

படிப்பதற்கு நிறைய இருக்கிறது. அது ஒரு சின்ன சந்தோஷம்…

ராட்சசனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வெண்முரசு பக்கம்

ஜே.ஆர். ரங்கராஜு

ரங்கராஜுவை இன்று படிப்பது கஷ்டம். உத்தம நாயகிகள், அவர்களின் கற்பை சூறையாட நினைக்கும் அயோக்கியர்கள், அயோக்கியர்களுக்கு உதவும் பிற பெண்கள், அப்பாவி நாயகர்கள், லட்சாதிபதி ஜமீந்தார்கள், சோரம் போகும் பெண்கள், பெண்ணுக்கு அலையும் கிழவர்கள், தாசிகள், துப்பறியும் கோவிந்தன் என்று சில டெம்ப்ளேட் பாத்திரங்களை வைத்து சுலபமாக ஊகிக்கக்கூடிய திடுக்கிடும் திருப்பங்களோடு கதை புனைவார். அதையும் வளவளவளவள்வளவளவளவள என்று நீட்டி முழக்கி எழுதுவார். பல நாவல்களில் துப்பறியும் கோவிந்தன் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார்.

இந்த நாவல்களின் பலம் சரளமான நடை ஒன்றே.  புத்தகங்கள் போரடிக்காமல் காப்பாற்றுவது அந்த நடைதான். ஆனால் curiosity value-க்காகத்தான் படிக்க வேண்டி இருக்கிறது. இவரது நாவல்களின் முக்கியத்துவம் அன்று படிப்பை வளர்ப்பதில் உதவி செய்திருக்கும் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

க.நா.சு. ரங்கராஜுவின் தாக்கம் பற்றி இலக்கிய சாதனையாளர்கள் புத்தகத்தில் எழுதியது –

(ஆயிரத்து தொளாயிரத்து) இருபதுகளில் ஒரு தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் இருவரென்று ஜே. ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தாரென்றும், இவர்களிருவரும் தங்களையறியாமலேயே காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

ஜே.ஆர்.ஆரின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை வெளி வந்தன.பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு மொத்தம் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு பத்து பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது வாசகர்கள் மிகவும் பரபரப்பாக வாங்கிப் படித்தனர்.

வரதராஜன் என்ற நாவல் இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. அந்த நாவலின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என்ற ஒரு வழக்குப் பதிவான பின், மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அவருக்குத் தண்டனை விதிக்கப் பட்டதாக எண்ணுகின்றேன்.

ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. நாற்பதுகளின் ஆரம்பத்தில் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும் (அவர் வைஷ்ணவ நாயுடு என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார்.

இவரது படைப்புகள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

ரங்கராஜுவின் நாவல்களுக்கு பாய்ஸ் கம்பெனி நாடக உலகில் நிறைய மவுசு இருந்திருக்கிறது. ரங்கராஜு ரொம்பவும் கெடுபிடியானவராம். நாடகங்களின் ஒத்திகையைப் பார்த்துத்தான் அனுமதி தருவாராம். ராஜாம்பாள் நாடகத்துக்கு 25 ரூபாய் ராயல்டியாம்; ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம் மூன்றுக்கும் முப்பது ரூபாயாம். இதெல்லாம் ஒரு சீசனுக்கா, அல்லது ஒரு காட்சிக்கா என்று தெரியவில்லை. டி.கே. ஷண்முகம் தன் குழுவினர் பத்தாண்டுகள் அவரது நாடகங்களை நடித்ததில் பல ஆயிரங்கள் ராயல்டி கொடுத்தோம் என்று எழுதுகிறார். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்கு அப்போது பத்து ரூபாய்தான் ராயல்டியாம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு கறாராக மறுத்துவிட்டாராம். மனஸ்தாபம் ஆகி ஷண்முகம் குழுவினர் ரங்கராஜுவின் நாடகங்களைப் போடுவதை நிறுத்திவிட்டார்களாம், வசூல் குறைந்தது என்று எழுதுகிறார்.

ராஜாம்பாள், ராஜேந்திரன், ஜெயரங்கன் ஆகிய மூன்று நாவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

ரங்கராஜுவின் படைப்புகளில் சிறந்ததாக நான் கருதுவது ராஜாம்பாள். (1906). 1906-க்கு அது மிகச் சிறந்த புத்தகம். அந்த காலகட்டத்தில் படித்திருந்தால் என் மனதைக் கவர்ந்த நாவல்களில் ஒன்றாக நிச்சயமாக இருந்திருக்கும். கல்கி அதை இரவு பகல் கண்விழித்துப் படித்தாராம். சிறப்பாக ஒரு மதிப்புரை எழுதி இருக்கிறார். க.நா.சு.வின் மனதையும் கவர்ந்திருக்கிறது. அதுதான் மிகவும் பிரபலமானதும் போலிருக்கிறது, 26 வருஷங்களில் 26 பதிப்புகள் வந்தன. அதைப் பற்றி விரிவாக இங்கே.

ராஜாம்பாளைத் தவிர மோகனசுந்தரம் (1911), ஆனந்தகிருஷ்ணன் (1921), வரதராஜன் (1925), சந்திரகாந்தா (1936), ராஜேந்திரன், பத்மராஜு, ஜெயரங்கன் ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார்.  ராஜாம்பாள், மோகனசுந்தரம், சந்திரகாந்தா (சவுக்கடி சந்திரகாந்தா என்ற பேரில்) திரைப்படமாக வந்திருக்கின்றன. சவுக்கடி சந்திரகாந்தா அந்த காலத்தில் புகழ் பெற்ற திரைப்படம். காளி என். ரத்னம் போலி சாமியாராக வருவார் போலிருக்கிறது. சாமிகள் யோகத்தில் இருக்கிறார் என்றால் சிஷ்ய கோடிகள் புரிந்துகொண்ட அந்த பக்கம் போக மாட்டார்களாம். இதில் பி.யூ. சின்னப்பா நாயகன். ராஜாம்பாளில் ஆர்.எஸ். மனோகர் நாயகன். மோகனசுந்தரத்தில் டி.ஆர். மஹாலிங்கம்.

ராஜேந்திரன் அவரது டிபிகல் நாவல் என்று நினைக்கிறேன். பல திடுக்கிடும் திருப்பங்கள். ருக்மிணிக்கும் ராஜேந்திரனுக்கும் பால்ய விவாகம். இன்று அடையாளம் தெரியாது. வரதட்சிணை பிரச்சினையால் ருக்மிணி இன்னும் கணவன் வீட்டுக்குப் போக முடியவில்லை. சித்தி வீட்டுக்குப் போகும் ருக்மிணியைக் காணும் கல்லூரி மாணவன் ராஜு அவளை ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறான். வில்லன் கோபண்ணா அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து ராஜுவிடம் சேர்க்கிறான். ருக்மிணியைக் கெடுத்த பிறகு ராஜு திருந்திவிடுகிறான். இது வரைக்கும் ராஜுதான் ருக்மிணி கணவன் ராஜேந்திரன் இன்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் தமிழரே அல்லர். மாமனார் வீட்டுக்குப் போகும் ருக்மிணி ராஜேந்திரனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். ராஜேந்திரன் பாங்க் வைத்து நடத்துகிறான். ருக்மிணியின் மகன் என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீனிவாசன் ராஜேந்திரனிடம் வந்து சேர்கிறான். பாங்கில் பல லட்சம் கொள்ளை போகிறது. காஷியர் ரங்கநாதன் மீது சந்தேகம் விழுகிறது. ஸ்ரீனிவாசன் அறையில் ஒரு பிணம், அடையாளம் தெரியவில்லை. காஷியர் ரங்கநாதன் மீது பழி. துப்பறியும் கோவிந்தன் எல்லா மர்மங்களையும் கண்டுபிடிக்கிறார்.

ஜெயரங்கன் நாவல் ஜேம்ஸ் பாண்ட் படங்களையே விஞ்சிவிடுகிறது. சுந்தரராஜு சத்தமே போடாத ஆகாயவிமானத்தில் அங்குமிங்கும் பறக்கிறார். சமயத்தில் விமானம் காராகவும் மாறுகிறது. எல்லாரும் லட்சங்களில் புரள்கிறார்கள். மகா சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. எனக்கு சுவாரசியப்பட்டது அவர் சுயமரியாதை கட்சியைத் தூற்றுவதும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதும்தான்.

ரங்கராஜூ காலாவதி ஆகிவிட்ட வணிக எழுத்து முன்னோடி. வணிக எழுத்து எப்படி பரிணமித்தது என்பதில் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடுவது உத்தமம். ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ராஜாம்பாளை படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவின் அரதப்பழசு பேட்டி ஒன்று கண்ணில் பட்டது. 1993-க்கு முந்தைய பேட்டி. உயிரே திரைப்படம் கூட வெளியாகவில்லை. எஞ்சினியர் என்று ஒரு திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடுகிறார், வந்ததா என்று தெரியவில்லை.

Sujatha … has worked with top directors K. Balachandar in Ninaithale Inikkum, Maniratnam in Roja, Shankar in Indian and Bharathiraja in Nadodi Thendral. He has been closely associated with Kamalahasan right from Raj Kamal International’s maiden venture Vikram. And it was he who ignited the spark in Kamal for Marudhanaayagam.’ He is now working with Maniratnam for Dil Se, starring Shah Rukh Khan and Manisha Koirala.

Are you happy with the way your stories have been filmed?

To be frank, no. Not only I, no writer has ever been happy with the way his/her stories have been converted into films. Asked to give his reaction after his novels were filmed, Hemingway put it succinctly: “Take the money and run.Satyajit Ray‘s Pather Panchali is a great film, but the original writer was not happy with it. Hitchcock once said that he would just read the novel he wanted to film, throw away and would never get back to it again during the making of the film.

I am certainly not blaming the directors. It is just that the medium is different. Compared to those who see the film, the readers are a minuscule percentage. Probably my novels would have been read by 30­-40 lakh people, but the films were seen by crores. In a medium like cinema where the stakes are high, compromises are unavoidable. They don’t affect me. People who have read my novels are unhappy with the film versions, but those who have not read them are happy with the films. That in itself explains the differencein audience tastes.

The two stories you wrote exclusively for films for two top directors, K Balachandar and Bharathiraja, flopped. What do you say?

Ninaithale Inikkum for Balachandar was the first script I wrote for a film. Before that, my stories had been filmed, but I had not played any role in writing the screenplay or dialogue. For Ninaithale Inikkum, I had written a totally different kind of screenplay. Unfortunately, owing to constraints like star dates, Balachandar did not follow my script exactly. He made several changes and looked at the film as an opera on the lines of ABBA. My original script was lively and if it had been faithfully followed,it would have been a model screenplay. Anyway, no regrets and I enjoyed working with Balachandar, his assistant Ananthu, Kamal and Rajini.

The same was the case with Bharathiraja’s Nadodi Thendral. The original story I gave was about the assassination of a collector and I had put in a lot of effort. But Bharathiraja changed it into an ordinary triangular love story set in the pre-independence backdrop.

I don’t blame the directors for these failed projects. As I told you. the target audiences are different and the directors know the medium better.

My most satisfying efforts were Maniratnam’s Roja and Shankar’s Indian, though I wrote only the dialogue for these films. Roja especially was a gratifying experience because I participated in all the discussions during its making. For Indian, the director did the thinking , gave me the sequence order and after I wrote the dialogue, Shankar would choose what he wanted.

Was it you who suggested the Marudhanayagam story to Kamal?

In a way, yes. For the last 7 or 8 years Kamal had been searching for the right story to make a historical. He even had plans of doing a historical musical on the lines of Ambikapathi and toyed with the idea of making a film which had only verses for dialogue. While he was examining so many ideas, I suggested why not we go into immediate past history instead of going to ancient period.

It was around that time I came across a folk ballad edited by Tamil scholar Vanamamalai and published by Madurai Kamaraj University. Impressed by the ballad, I showed it to Kamal to find out if it has the potential of a good film. Kamal was initially reluctant, but agreed to go through the ballad.

In the elaborate and excellent introduction was a footnote which said, “This Yousuf Khan was originally a Hindu Vellala called Marudhanayagam.” Kamal immediately jumped at it and felt that the story had all the potential of a good historical film. Kamal felt that the religious conversion could be owing to some social oppression and that would form a good subject for filming.

The story of Marudhanayagam is relatively unknown…

We chose the life of Marudhanayagam for its substantial story element and episodic content. His is not a conventional story of a king. Starting his life as a supplier to the French Army, he sneaks through enemy lines with messages effortlessly. The French train him and the British, spotting his talent, elevate him to the position of a tax collector of Madurai district, only to hang him for disobedience to the British Raj just one year after his rise to the top. It is this stunning elevation from the lowest level and again touching the nadir, this graph of Marudhanayagam’s life, that interested Kamal to make it into a film.

As for deviations, nearly 80% of the film will faithfully adapt Hills’ biography of Marudhanayagam. Only on certain aspects, where no solid or substantial information is available, have we used our imagination.

For instance, no reason is available for Marudhanayagam’s conversion to Islam. Here Kamal has worked back on the character and has imagined the reasons for his conversion beautifully.

Don’t you foresee the danger of ‘Marudha Naayagam’ being compared to Sivaji Ganesan‘s Veerapandiya Kattabomman?

Kamal can stand the comparison easily because he is not going to follow Sivaji Ganesan’s style. Knowing well about Kamal’s yen for perfection and precision, we can be sure that the level of realism in Marudhanayagam will be high. There is no question of any Indian actor playing a foreigner as Javar Sitaraman did in Veerapandiya Kattabomman and spoke his lines in broken Tamil. In Marudhanayagam wherever the British or French officers speak, Kamal, I think, is planning to use dubbing to give it an authentic touch.

Do you think Marudhanayagam, a film with a distinct native flavour, can have a national or an international audience?

Why not? Marudhanayagam may be a historical character, but he is not a larger than life character. It is a story which depicts a man with all his strengths and weaknesses. ‘The rise and fall of a man’ is the one line story of Marudhanayagam, a plot that will interest anyone in any part of the world. When films like Jurassic Park can run for its grandeur and technical brilliance, the same can be said of Marudhanayagam which will be made using state of the art techniques. Kamal is adopting the linear narrative style where through off screen narration a person tells the background of Marudhanayagam, the historical context of the story and so on.

Kamal is supposed to be following the Hollywood style in writing the screenplay of the film. Could you explain that?

I think for the first time in India, a computer has been used in screenplay writing, a method usually adopted by Hollywood film makers. Various software are available for this and Kamal is using a particular software called Movie Magic. All the information about the movie can be accessed with it.

What is you actual input in Marudhanayagam?

I created the Tamil fonts for Movie Magic. I am also overseeing the screenplay written by Kamal. In Hollywood films, you have a screenplay doctor and that is the role I’m playing.

What are your other assignments?

I am working for Maniratnam’s Dil Se. For this film, Maniratnam has given me the plot and has asked me to make it into a story. He has told me not to bother about its conversion into film which he would take care of. He just wants to see how I visualise this story. We are planning to release the book and movie simultaneously. Already one schedule is over.

Shankar’s Assistant A.R. Gandhikrishna is making a film called Engineer with Madhuri Dixit and Arvind Samy in Tamil, Telugu and Hindi. Its also an interesting film I’m working.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், திரைப்படங்கள்