எம்எஸ்வி அஞ்சலி – ராணிமைந்தன் எழுதிய “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.”

எம்எஸ்வி என் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர். அவருக்கு கொஞ்சம் தாமதமான அஞ்சலியாக இந்த பழைய பதிவை மீள்பதிக்கிறேன்.

எனக்குத் தெரிந்த இசை சினிமாப் பாட்டுதான். அதுவும் பழைய தமிழ் பாட்டு என்றால் உயிர். என் பதின்ம வயதுகளில் தனியாக மொட்டை மாடியில் ஒரு நாப்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னை ஒன்று ரேடியோ ஸ்டேஷனில் இரவு பத்திலிருந்து பதினொன்று வரைக்கும் பழைய தமிழ் சினிமா பாட்டு கேட்டது இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம், அப்போது உச்சிக்குப் போய்க் கொண்டிருந்த இளையராஜா எல்லாரையும் ரசித்துக் கேட்டாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்பினேஷன்தான் எனக்கு first among several equals. அதிலும் எம்எஸ்விதான் ட்யூன், ஆர்க்கெஸ்ட்ரேஷன் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று தெரியவந்தபோது எம்எஸ்வி ரொம்பவும் பிடித்துவிட்டது. சின்ன வயதில் ஒன்று மனதில் அழுந்திப் பதிந்துவிட்டால் அது மாறுவது கஷ்டம். இளையராஜா, பின்னால் ரஹ்மான் எல்லாரும் மேதைகள்தான், ஆனால் என் மனதில் எம்எஸ்விக்குத்தான் முதல் இடம். ராணிமைந்தன் இந்தப் புத்தகத்தில் அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை, அவர் பட்ட கஷ்டங்கள், அவருக்கு பாடல் எழுதும் கவிஞர்கள், நடிப்புலக ஸ்டார்கள், இயக்குனர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருடனும் இருந்த உறவு, சுவையான சம்பவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். இசையைப் பற்றிய டெக்னிகல் விஷயங்களோ, இல்லை குறை நிறை இரண்டையும் பார்க்கக் கூடிய வாழ்க்கை வரலாறோ இல்லை. எம்எஸ்வி இசைப் பாரம்பரியம் எதுவும் இல்லாதவர். ஆனால் சின்ன வயதிலேயே இசைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சினிமாப் பாட்டு கேட்பதற்காக டெண்டு கோட்டையில் முறுக்கு விற்றிருக்கிறார். சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வித்வானிடம் எடுபிடி வேலை பார்த்திருக்கிறார். சினிமாவில் சேர படாத பாடு பட்டிருக்கிறார். சுப்பையா நாயுடு இவரது மெட்டுக்களை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதே நாயுடுதான் இவருக்கு சிபார்சு செய்து சான்சும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கண்ணதாசனோடு ஒரு ஸ்பெஷல் பந்தம் இருந்திருக்கிறது. வாலியைக் கை தூக்கி விட்டிருக்கிறார். எம்ஜிஆர் சினிமா ஃபார்முலாவின் முக்கிய பங்களிப்பாளர். சிவாஜி, இயக்குனர் ஸ்ரீதரோடு நல்ல உறவில் இருந்திருக்கிறார். ஹிந்தி இசை அமைப்பாளர் நௌஷத்தின் பாராட்டுக்காக ஏங்கி இருக்கிறார். ராணிமைந்தன் சுவாரசியமான பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வாழ்க்கை வரலாறு இல்லை. இது எம்எஸ்வியின் புகழ் பாடும் புத்தகம். ஆனாலும் அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது. ஒரு சிம்பிளான, நன்றி உணர்வு மிகுந்த, இசை மட்டுமே தெரிந்த, அதை மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பியவர் என்பது புரிகிறது. சினிமா பிரியர்களுக்கு மட்டும்தான்.

அப்துல் கலாம் – அஞ்சலி

abdul_kalamஅப்துல் கலாம் என்ற பேரை நான் முதன்முதலாக கேட்டபோது அவர் ஹைதராபாத் DRDO-வில் மூத்த அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருந்தார். அங்கே வேலை செய்த நண்பர்கள் கலாமைப் புகழ்ந்து பேசி கேட்டிருக்கிறேன். அவர் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே, பெரிய விஞ்ஞானி எல்லாம் இல்லை என்ற விமர்சனத்தையும் கேட்டிருக்கிறேன். ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்திருந்த காலம் அது. அது முக்கியமான அம்சம் என்று நண்பர்களிடம் வாதாடி இருக்கிறேன். ஆனால் அவர் ஜனாதிபதி எல்லாம் ஆவார் என்று நாங்கள் யாரும் கனவு கூட கண்டதில்லை.

ஒரு முன்னுதாரணமாக, மரியாதைக்குரிய மூத்தவராக, சாதனையாளராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் vision எவ்வளவு முக்கியமானது என்பதை நன்றாக உணர்ந்திருந்தார், அதை மற்றவர்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு – உணர்த்தவும் செய்தார். அதுவே அவரது மாபெரும் சாதனை என்று நான் கருதுகிறேன்.

பி.ஏ. கிருஷ்ணன் என்னை விட சிறப்பாக சொல்லி இருக்கிறார் – அவரது வார்த்தைகளோடு நான் நூறு சதவிகிதம் உடன்படுகிறேன்.

Yes, he was not a great scientist. Yes, he was not even an ordinary thinker. Yes, he supported a strong and armed India. Yes, he supported Kudankulam and the neutrino projects. Yes, he wrote excruciatingly bad poetry.Yes, he advocated fancy schemes and dreamy projects which had no chance of success in the real world. But to the ordinary people of our country (and not just the middle class, as some ‘wise’ persons would like us to believe), who were in search of reliable icons, he was a pleasant,incorruptible, icon. A far, far better icon than the ones whose flags are being held aloft by some of the intellectuals of Tamil Nadu who could never be accused of having a strong sense of proportion, but who, today, appear more feeble minded than they ever did – if that is possible.


நண்பர் முத்துகிருஷ்ணனிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி:

அரசியல் செய்திகளில் அம்மாவிற்கும் தங்கைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் பல நாட்களாகின்றன. அம்மாவிற்கு இவையெல்லாம் எப்போதும் இப்படி தான் நடக்கிறது என தோன்றிவிட்டது, தங்கையை பொறுத்த வரை பெத்த ரெண்டு வானர கூட்டத்த மேய்ச்சு, ஸ்கூலுக்கு அனுப்புறதே தினந்தோறும் நடக்கும் ஒரு நுண்ணரசியல் சதிராட்டம் என்ற நிலையில் யார் வந்தா என்ன, யார் வராட்டா என்ன என்ற ஒரு நினைப்புதான்.

கடந்த வருடம் லோக் சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கையில் வீட்டில் தான் இருந்தேன். எதிர்பாராத அரசியல் திருப்பத்தை முகநூல் நண்பர்களிடன் ஆன்லைனில் பேசி ஆர்வத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் வீட்டில் ஒரு சலனமும் இல்லை, முதல் ஆச்சரியத்திற்க்கு பிறகு. மல்லி பொடி அரைக்கணும், தேங்காய் உரிக்கணும், உங்க அப்பா காலைல 11 மணிக்கு முன்னாடி வந்து சாப்பிட்டா எனக்கு அடுத்த வேலய பாக்கலாம் என வேலை போய்கொண்டிருந்தது. அதற்கு மேல் அரசியலுக்கும், சமூக நிகழ்வுகளுக்கும் ஒரு சராசரி வீட்டில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைத்துக் கொண்டேன். அப்பா தினமும் நியூஸ் பார்ப்பதால் தினசரி செய்திதாள் வாங்குவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிவிட்டது. நான் ஊருக்கு போகும் போது எனக்காக வாங்கி வருவார். அவர் மேலோட்டமாக வாசித்து வைத்துவிடுவார்.
வாட்ஸ் ஆஃப் தங்கை என்னிடம் பிள்ளைகளுக்கு பல்லு விழுந்த போட்டோ, அவர்கள் legoவில் செய்த பொம்மைகள் செய்த படம், தினசரி அழுத்தத்தை போக்க என்னை வம்பிற்கிழுத்து நக்கல் emoticons அனுப்புவதற்கான ஒரு சேவை மட்டுமே என உபயோகித்து வருகிறாள், கடந்த இரு வருடங்களாக.

நேற்று காலை வேலைக்கு வந்தவுடன் அவளிடமிருந்து தொலைக்காட்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தியை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பினாள். அந்த படத்தை பார்த்தவுடன் இனம் புரியாத தனிமை கொஞ்ச நேரம் மனதை அப்பிக் கொண்டது. பிறகு தான் அதைக் குறித்து அவள் எதுவும் பேசவில்லை என்றும் உறைத்தது. அந்த படம் மட்டும் தான், வேறு ஒரு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை. ஒரு அவசர பகிர்தல், பிறகு மௌனம் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் அப்படி ஒரு அதீதமான நோக்கத்தை அவளின் செய்கைக்கு கொடுத்தேனா என தெரியவில்லை. ஆனால் இது முதல் முறை என என்னால் சொல்ல முடியும்.

அன்றைய தினம் வேலையில் ஓடி, இரவு அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். அந்த நேரத்தில் திரு கலாம் மனதில் ஓரத்தில் போய்விட்டார். முகநூலை திறக்கும் போது பார்க்கும் நண்பர்களின் பதிவுகளின் மூலம் நியாபகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் விலகிக் கொண்டும் இருந்தார். அம்மாவிற்கு உடல்நிலை தற்காலிகமாக சரியில்லை. இப்போ எப்படி இருக்கு உடம்பு என நான் கேட்டவுடன் அவரிடமிருந்து வந்த பதில், “பெரியவர் போயிட்டாருடா”. எனக்கு அந்த வார்த்தையிலிருந்து நூலை பிடித்து புரிந்து கொள்ள ஒரு கணம் எடுத்தது. இதுவரை அரசியல் செய்திகளை, தலைவர்களை குறிக்கையில் ஒரு அக்கறையின்மை இன்றி அம்மா பேசியதில்லை (ராஜீவ் காந்தியை தவிர, அது என்றும் நிலைத்திருக்கும் குற்றவுணர்வு என தோன்றுவதுண்டு…) திரு. கலாம் எப்படி காலமானார் என எனக்கு தெரியாததை சொல்லி கொடுப்பதை போல செய்திகளை சொன்னார்கள். சமீபத்தில் குடும்பத்தின் மூத்த பெரியவர் ஒருவர் இறந்து விட்டார். தலை சீவிக் கொண்டிருக்கும் போது அப்படியே உட்கார்ந்து உயிர் பிரிந்துவிட்டது. அம்மாவிற்கு அவர் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்தவர் எனலாம். அவருடைய இறப்பையும், திரு. அப்துல் கலாமின் இறப்பையும் ஒன்றின் அடுத்து ஒன்றாக வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அளவில் நல்ல விதத்தில் இருவரும் போய் சேர்ந்த்தார்கள். தான் நம்பும் ஒரு தெய்வம் தன் இருப்பை நிறுவிச் சென்றது போன்ற ஒரு நிகழ்தல். பெரியவர் வழியாக இன்னொரு பெரியவரிடம் மனதளவில் அணுகி சென்ற ஒரு தருணம்.

திரு. அப்துல் கலாம் ஜனாதிபதியாக பத்விக்காலத்தை முடித்த பிறகு அவரைக் குறித்த எந்த செய்தியும், வீட்டின் தினசரி அவசரகதியின் திரையை கிழித்து உள்ளே வந்ததாக எனக்கு தினைவில்லை. மேன்மக்களை குறித்து செய்திகள் வந்தாலும் சரி, பேசப்படாவிட்டாலும் சரி ஏதோ ஒரு வழியில் அவர்களை மனிதர்கள் உணர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் இழப்பை தங்களுடைய இழப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

அம்மா இன்னொன்றும் சொன்னார்கள். அப்பா இன்று காலை கடைக்கு சென்று செய்திதாளை வாங்கி முழுவதும் வாசித்துக் கொண்டிருந்தார்.


கலாமின் மதம் அவரது தனிப்பட்ட விஷயமாகவே இருந்தது ஒரு நல்ல முன்னுதாரணம். தீவிர ஹிந்துத்துவர்கள் கூட அவரைப் பற்றி குறை சொல்ல முடியவில்லை. அதிதீவிர ஹிந்துத்துவரான ராஜனின் அஞ்சலி கீழே.

அப்துல் கலாம் தனது எளிமையினாலும் இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது கனவுகளினாலும் அதை இந்தியாவின் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்த முயற்சிகளினாலுமே இன்று தேசம் முழுவதும் தங்கள் சொந்த உறவினர் ஒருவரின் இழப்பாகக் கருதி மக்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். இந்தியாவின் ராக்கெட் தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்களிலும், அணு சோதனைகளிலும் அவரது பங்களிப்புகளும் முக்கியமானவையே ஆனால் அவை பொது மக்களின் அறிவுக்கு எட்டாதவை. அவர் ஜனாதிபதியான பின்னர் அவர் காட்டிய அடக்கமும், எளிமையும், மக்களிடம் கொண்ட தொடர்புகளுமே அவருக்கு தேசம் முழுவதும் இவ்வளவு பெரிய பிராபல்யத்தையும் அன்பையும் பெற்றுத் தந்துள்ளன. இன்று அவர் இறந்த நாளிலும் கூட அவரைப் பற்றி குறையாக ஒரு வார்த்தை பேசிய பின்னரே இரங்கல் தெரிவிப்பதை நமது pseudo-secularவாந்திகள் மரபாகக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் பற்றி பாராட்டி பேசினால் அது அவர்களின் மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவித்து விடும் என்று நம்புகிறார்கள். இந்தியாவில் இவரைப் போன்ற தலைவர்கள் அதிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பப் பின்ணணியில் இருந்து வரும் தீர்க்கதரிசனம் கொண்ட தலைவர்கள் அபூர்வமாகவே தோன்றுகிறார்கள்.


செக்கு மாட்டை வண்டியில் கட்டினால் சுற்றி சுற்றித்தான் வரும் என்று ஒரு பழமொழி உண்டு. சிலிகான் ஷெல்ஃபில் என்னதான் அஞ்சலி கிஞ்சலி என்று ஆரம்பித்தாலும் புத்தகங்களில்தான் வந்து முடிகிறது. கலாமின் சுயசரிதையான அக்னிச் சிறகுகள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. கலாமின் சிறு வயதில் பலதரப்பட்ட மதத்தினர், ஜாதியினர் அவருக்கு உதவி இருக்கிறார்கள், இணக்கமாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி என்னை ஓரளவு கவர்ந்தது. மற்றபடி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. தவிர்த்துவிடலாம். கலாம் இளைஞர்களை ஊக்குவிக்க தன் எண்ணங்களை “இளைஞர் காலம்” என்ற பேரில் எழுதி இருப்பதும் தமிழகத்தில் ஓரளவு பிரபலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் ஓரளவாவது சுவாரசியம் உள்ள புத்தகம் “Turning Points“-தான். அவர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தை கொஞ்சம் ஆவணப்படுத்துகிறது. அவரது புத்தகங்களை ஒதுக்கிவிடலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
இன்னொரு அதிதீவிர ஹிந்துத்துவரான ஜடாயுவின் அஞ்சலி
ஜெயமோகனின் அஞ்சலி

ஜெயமோகனைப் படிக்கும் வரிசை

சமீபத்தில் ஜெயமோகனைப் பற்றியும் பி.ஏ. கிருஷ்ணனைப் பற்றியும் அறிமுகம் செய்து பேசினேன். பத்து நிமிஷத்தில் இவர்கள் இருவரையும் பற்றி என்ன அறிமுகம் செய்துவிட முடியும் என்று தெரியவில்லை. அதனால் jeyamohanஜெயமோகன் எழுத்துக்களை இது வரை படிக்காதவர்களுக்கு ஒரு வரிசையைப் பரிந்துரைத்தேன். அந்த வரிசை கீழே.

இது வரை படிக்காதவர்கள் சிறுகதைகளிலிருந்து ஆரம்பிப்பது உத்தமம். நான் பரிந்துரைக்கும் பத்து சிறுகதைகள்.

  1. மாடன் மோட்சம்
  2. ஊமைச்செந்நாய்
  3. படுகை
  4. திசைகளின் நடுவே
  5. வணங்கான் (பகுதி 1, பகுதி 2)
  6. அறம்
  7. யானை டாக்டர்(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)
  8. பித்தம்
  9. அவதாரம்
  10. லங்காதகனம்

இவைதான் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் என்று நான் சொல்ல வரவில்லை. இவை அவரது வீச்சை – பல தளங்களில் எழுதி இருப்பதை – பட்டியல் போடும் முயற்சி.

ஜெயமோகனின் நாவல்களில் ஏழாம் உலகத்திலிருந்தோ வெள்ளை யானையிலிருந்தோ ஆரம்பிக்கலாம். அங்கிருந்து நான் பரிந்துரைக்கும் வரிசை: காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை. எனக்கு பர்சனலாக கஷ்டமாக இருந்த, ஆனால் உயர்ந்த படைப்பு – வெண்முரசு வரிசையில் வந்த நீலம்.

அபுனைவுகள்:

பட்டியல்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், பரிந்துரைகள்

பி.ஏ.கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’

p_a_krishnanசிலிகன் பள்ளத்தாக்கு பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் பி.ஏ. கிருஷ்ணனையும் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நண்பர் பாலாஜி ஆற்றிய உரை கீழே.

தன்னுடைய புத்தகத்தில் திரு. பி.ஏ. கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்: ஐம்பது வருடங்களுக்கு முன்னால் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு டாக்டரின் வரவேற்பு அறையில் ஒரு படம் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்த ஓவியத்தில் ஒருவனின் உடல் மேஜை மேல் கிடத்தப்பட்டிருந்தது. இடக்கை அறுக்கப்பட்டு உள்ளே இருக்கும் சதை தெளிவாகத் தெரிந்தது. மருத்துவர் ஒருவர் கையில் கூர்மையான உலோகக் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் படம் பி.ஏ.கேவை ஈர்த்திருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஹேக்கில் மாரிட்ஸ்ஹ்யூஸ் மியூஸியத்தில் அந்த ஓவியத்தை பிஏகே பார்க்கிறார், பழைய நினைவுகள் வெள்ளமிடுகின்றன. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அந்த பிம்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

rembrandt_anatomy_lesson_of_dr_tulp

அந்த ஓவியம் “Anatomy lesson of Dr. Tulp” ரெம்ப்ராண்ட்டுடையது.

நான் அந்த ஓவியத்தை முதன் முதலில் பார்த்தது, ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் டிரிவியாவை படிக்கும்போது. அதில் ஒரு பானல் அப்படியே அனாடமி லெசனைப் போலவே அமைந்திருக்கும்.
asterix_obelix_anatomy_lesson_of_dr_tulp

எத்தனையோ ஓவியங்கள் நம்முன் பல வடிவங்களில் வந்து போகின்றன. சில மனதுக்குள் தங்கிவிடுகின்றன. மகத்தான ஓவியங்கள் பல வகைகளில் நம் சிந்தனைகளை, நம் கற்பனையை தூண்டிவிடுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். இங்குள்ள பல ஆபீஸ் வரவேற்பறைகளில் இருக்கும் வான் கோவின் Sunflowers, இல்லை மோனேவின் வாட்டல் லில்லீஸ். திரும்பத் திரும்ப பாப்புலர் கல்ச்சரில் தன் தடங்களை பதித்துக்கொண்டே செல்கின்றன இவ்வோவியங்கள். திரு. ஜெயமோகன் அடிக்கடி கூறும் செவ்விலக்கியத்தின் பாதிப்பு இதைப் போலத்தான். சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலைப் பற்றி. ஆர்.கே நகரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் பெரிய அலையில் அடித்து செல்லப்படுவதாக ஒரு கார்ட்டூன். கார்ட்டூன் முக்கியமில்லை. ஆனால், அதில் அந்த அலை… அப்படியே ஹொகுசாயின் Great wave off Kanagawaவை நகல் எடுத்திருந்தது. அலை என்றாலே அந்த ஓவியம் ஞாபகத்துக்கு வருதே, அது தான் ஓவியத்தின் மகத்துவம்.
great_wave_off_kanagawa

மேற்கத்திய ஓவியங்கள் பி.ஏ.கே எழுதி சென்ற வருடம் வெளியான புத்தகம். இது முதல் பாகம். குகை ஓவியங்களிலிருந்து ஃபெரெஞ்சு புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை. இதை ஒரு எளிய அறிமுகம் என்றோ, நமக்கு புரிய வேண்டும் என்று அச்சுப்பிச்சு நகைச்சுவையோ இல்லாமல், ஒரு ஆத்மார்த்தமான கலாரசிகனால், வரலாற்று மாணவனால் எழுதப்பட்ட புத்தகம். இதையெல்லாம் ரசிக்கணும், ஏன்னா இந்த ஓவியங்களில் இன்னின்ன சூட்சுமங்கள் இருக்கின்றனன்னு ஒரு கோடு போட்டு காண்பிக்கிறார்.

இது போல பல அறிமுகப் புத்தகங்கள் இங்கிலீஷில் வந்திருந்தாலும், அவற்றை விட இது ஒரு படி மேலே இருக்கிறது. முதல் காரணம், ஒவ்வொரு ஓவியத்தையும் பி.ஏ.கே பல வருடங்களாக பார்த்து, படித்து, அனுபவித்து எழுதியிருக்கிறது. வெர்மியரின் girl with the pearl earring பார்க்கும்போது அவர் சொல்கிறார் “நம்மாழ்வார் சொல்லும் அடங்கெழில் சம்பத்து என்ற செல்வ சமுத்திரத்தின் ஒரு திவலை இந்த ஓவியம்”. ஒரு தேர்ந்த ரசிகரின், தன் பயணங்களின் மூலம் பல ஓவியங்களைப் பார்த்தவரின் அனுபவம் நமக்கு இந்தப் புத்தகம் மூலம் கிடைக்கிறது.
vermeer_girl_with_a_pearl_earring

இன்னொன்று, அறிமுகப் புத்தகங்கள் ஒரே சீரான ஸ்ட்ரக்சர் கொண்டவை. எல்லா ஓவியர்களைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு, அவர்களுடைய படைப்புகளின் ஒன்று இரண்டு எடுத்து அவற்றை விவரித்தல் என்று. பி.ஏ.கேக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால், அவருக்கு பிடித்த ஓவியர்களைப் பற்றி விரிவாக எழுத முடிகிறது. டியூரரைப் பற்றி ஒரு முழு சாப்டர். ஓவியர்களிலேயே மிகவும் கலகக்காரனான, சுவாரஸ்யமான வாழ்க்கை வாழ்ந்த காரவாஜ்ஜியோ வாழ்க்கையைப் பற்றி சில பக்கங்களுக்கு வர்ணனை. எனக்குப் பிடித்த டச்சு ஓவியர்கள் ஹல்ஸ், வெர்மியர், ரெம்ப்ராண்ட் பற்றி ஒரு சாப்டர் என்று. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எதை ஓரிரு வாக்கியங்களில் கடந்து போகிறார் என்பதை வைத்தே அவரது ரசனையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

merkatthiya_oviyangalசுமார் 160 ஓவியங்களை விவரிக்கிறது இந்த புத்தகம். ஹார்ட் கவர், முற்றிலும் வண்ணப் பக்கங்கள் என்று எதிலும் காம்பிரமைஸ் செய்துக்கொள்ளாமல் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல், தமிழில் இப்போது தான் நாவல் இலக்கியம் என்றால் கல்கி, மு.வ, அகிலன், நா. பா, லக்ஷ்மி என்று அவர்களை கடந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதே போல், ஓவியத்தைப் பொறுத்த வரையில் தமிழனின் புரிதல்கள் மணியம் செல்வன், மணியம், கோபுலுவோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி எழதி பயமுறுத்த வேண்டுமா என்பதற்கு பதில் சொல்கிறார், நல்ல ஓவியங்கள் திறனாய்வாளர்களுக்குப் புதிராக இருக்கும், பல கேள்விகளை எழுப்பும், ஆனால் சாதாரணப் பார்வையாளர்களுக்குச் சொற்களால் விளக்க முடியாத அளவுக்கு பேருவகையை கொடுக்கும், கேட்காமலே பதில்களையும் அளிக்கும் என்கிறார். இதற்கு மேல் இந்தப் புத்தகத்தின் மதிப்பை, இது பட்டியலிடும் ஓவியங்களப் பற்றி கூற முடியுமா என்பது சந்தேகமே.

balaji_srinviasanஇது முதல் பாகம்தான். இரண்டாம் பாகத்தில், இம்பெரஷனிஸத்தையும், மற்ற புதிய மாடர்னிஸ்ட் பெயின்டிங்களையும் பி.ஏ.கே எப்படி கொண்டுவரப் போகிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்படி ஒரு முயற்சி வெளியே வர வேண்டுமானால், முன்பதிவு செலுத்தி வாங்க ஆர்வலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்ததை முதல் பாகத்துக்கு அனுப்பினோம். இங்கு வந்துள்ளவர்கள் இரண்டாம் பாகத்துக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கத்திய ஓவியங்கள். காலச்சுவடு பதிப்பகம். 2014 வெளியீடு.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: இதே புத்தகத்தைப் பற்றி ஆர்வி

மார்க் ஹாடன் எழுதிய “Curious Incident in the Dog at the Nighttime”

mark_haddonஇன்னும் விடுமுறைதான்; இன்று என் மகள் எழுதிய பதிவு. Curious Incident of the Dog at the Night Time என்பது புகழ் பெற்ற ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் பஞ்ச் டயலாக் என்பது நினைவிருக்கலாம்.

ஓவர் டு ஸ்ரேயா!

It wasn’t until I realized it was a mandatory assignment for an AP Psychology class that I started reading “The Curious Incident of the Dog in the Night-time” this summer. To be honest, I wasn’t expecting much out of it. I thought it was just one of those things I had to do and be done with.

I was pleasantly surprised to find that the book was actually a pretty entertaining read. It wasn’t exactly the kind I couldn’t put down, but it was definitely a page-turner.

The story circulates around the protagonist, Christopher Boone, and his investigation of a local murder in his neighborhood. The murder of Mrs. Shears’ dog, Wellington. Though never explicitly mentioned, Christopher probably registers somewhere on the autism spectrum, due to his inability to empathize or properly communicate with other people as well his exceptional cognitive ability in math and science. The plot of this novel is easy to follow and certainly predictable, however, I found it interesting to watch the investigation unfold in the way Christopher witnessed it.

The prevalent themes in the novel were definitely the struggle for independence, as well as the subjectivity of the entire story. This novel is similar to other coming-of-age stories such as The Catcher in the Rye in the sense that Christopher, like virtually all fictional teenagers, desires self-sufficiency and independence. What makes this interesting, however, is that Christopher can never be fully independent due to his condition. He strives for autonomy in subtle ways such as lying to/disobeying his overprotective father, planning for college, and most significantly, investigating Wellington’s murder.

The murder investigation serves purposes other than discovering truth and bringing justice, it allows Christopher to overcome the obstacles of his condition. The biggest way in which Christopher demonstrates his new found yearning for self-sufficiency and independence is when he survives a solo trip to London to meet the mother he previously thought deceased. This is a journey of symbolic as well as literal significance as it teaches Christopher how to battle the adversities he faces, and how to overcome his struggles despite the restraints of his life. In that sense, I thought this book was a lot more interesting once I read between the lines, rather than merely taking it at surface level.

I would definitely recommend this book to other people, and I’d hope they would enjoy it as much as I did.

புத்தகத்தை நானும் பரிந்துரைக்கிறேன். Autism உள்ள ஒரு பதின்ம வயதினன் கண் வழியாகவே நிகழ்ச்சிகள் நமக்கு காட்டப்படுகின்றன, அப்படி காட்டப்படும் விதம் மிகவும் consistent ஆக இருக்கிறது, தப்பித் தவறிக் கூட “சாதாரண” மனிதர்களின் கண்ணோட்டம் தெரிவதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: விக்கி குறிப்பு