பின் தொடரும் நிழலின் குரல் நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. நாவல் conceive செய்யப்பட விதம் பல புனைவு வடிவங்களை – நாடகம், சிறுகதை etc . – கதையில் புகுத்த ஏதுவாக அமைந்திருக்கும். அந்த கான்செப்ட், அது செயல்படுத்தப்பட்டிருக்கும் விதம் இரண்டுமே ஜெயமோகனின் ஜீனியசை காட்டுகின்றன.
நாவலில் கேகேஎம் என்று லோகல் கம்யூனிஸ்ட்/தொழிற்சங்கத் தலைவர். நிரந்தரப் போராளி. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும்போது இந்தப் போராளி எதை எதிர்த்துப் போராடுவது என்று தெரியாமல் விழிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அவரது சிஷ்யனான அருணாச்சலமே அவரைப் பதவியிலிருந்து இறக்கும் சதியில் பங்கேற்கிறான். தோழர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை ஒரு ஆன்மீகவாதியாக கழிக்கிறார். அற்புதமான கதாபாத்திரம்.
கேகேஎம்மின் ஒரிஜினல் யார் என்று என்ற கேள்வி ரொம்ப நாளாக மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது. ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரையே கேட்டேன், அவர் பிடி கொடுத்துப் பேசவில்லை.
கே.பி.ஆர். கோபாலன் என்ற கேரளா கம்யூனிஸ்ட் தலைவரைப் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் ஒரு பதிவு ஒன்றைக் கண்டேன். யார் கேகேஎம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடின் அரசு கோவில் நிலங்களைத்தான் மறுவிநியோகம் செய்தது என்று கேகேஎம் நாவலிலும் குறைப்படுவார் என்று நினைவு. கேகேஎம்மும் நீண்ட காலம் கழித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.
கே.பி.ஆர். போன்ற ஆளுமைகள் எப்போதுமே ஆச்சரியப்படுத்துகின்றன. இவர் போன்றவர்கள் நான் எண்ணி இருந்த அளவு அபூர்வம் இல்லை என்பது நம்பிக்கை அளிக்கும் விஷயம். கே.பி.ஆர். முன்னாள் கேரளா முதல்வர் ஈ.கே. நாயனாரின் அங்கிள் (மாமாவா, பெரியப்பாவா, சித்தப்பாவா என்று தெரியவில்லை), நாயனாருக்கு ஒரு inspiration என்றும் எங்கோ படித்தேன்.
இணையத்தில் தேடியதில் கே.பி.ஆரின் ஃபோட்டோ எதுவும் சரியாக கிடைக்கவில்லை. கே.பி.ஆரும் நாயனாரும் சேர்ந்து இருக்கும் ஒரு இத்துனூண்டு ஃபோட்டோதான் கிடைத்தது. எலும்பும் தோலுமாக கே.பி.ஆர். இருப்பதும் கொஞ்சம் வளப்பமாக நாயனார் இருப்பதும் என் மனதில் இருந்த பிம்பத்துக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகன் பதிவு
கே.பி.ஆர். பற்றிய விக்கி குறிப்பு