வெளி ரங்கராஜனைத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக; நாடகத் துறையில் பெரிய கை. எழுத்தாளரும் கூட. அவர் புத்தகக் கண்காட்சியில் வாங்க விரும்பும் புத்தகங்கள் என்று ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அனேகமாக எதையுமே நான் கேள்விப்பட்டதில்லைதான்.
பின் எதற்காக இதைப் பகிர்கிறேன்? அவர் புத்தகங்களை வாங்கிக் குவிப்பது பற்றி சொல்லி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அட்சரலட்சம் பெறும் என்பதால்தான். நானும் அப்படியேதான் உணர்கிறேன் என்பதால்தான். இப்படி உணர்பவர் சஹிருதயர் என்பதால்தான். என் மனதில் இருப்பதை எனக்கே தெளிவாக்கி இருக்கிறார், அவருக்கு ஒரு ஜே!
அன்றாட வாழ்க்கைப் போக்கில் படிப்பதற்கான நேரம் குறைந்துவிட்டாலும் நேரமும், மனநிலையும் இருக்கும்போது புத்தகங்கள் அருகில் இருப்பதையே விரும்புகிறேன். எந்த நேரத்திலும் ஏதாவது புத்தகத்திலிருந்து என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் உத்வேகம் பெற முடியும்.
வாங்க விரும்பும் புத்தகங்கள் என்று அவர் போட்டிருக்கும் பட்டியல் வசதிக்காக கீழே:
- நொய்யல் – தேவிபாரதி
- சொல்லக்கூடாத உறவுகள் – சூசன் ஹாதோர்ன் (தமிழில்:சசிகலா பாபு)
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – அனுராதா ஆனந்த்
- கடவுள்,பிசாசு,நிலம் – அகர முதல்வன்
- ஆக்காண்டி – வாசு முருகவேல்
- தேரிக்காதை – பெளத்த பிக்குணிகளின் பாடல்கள் (அ.மங்கை)
- திரை இசையில் தமிழிசை – நிழல் திருநாவுக்கரசு
- கழுமரம் – முத்துராசா குமார்
- இருட்டியபின் ஒரு கிராமம் – ஜி.குப்புசாமி
- பெருமைக்குரிய கடிகாரம் – ஜே.பி.சாணக்யா
- ஸ்ரீனிவாச ராமானுஜம் கட்டுரைகள் – எதிர்
- அல்லங்காடிச் சந்தைகள் – யவனிகா ஸ்ரீராம்
- வேட்டை (நாவல்) -லஷ்மி சரவணகுமார்
- அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது – பெருந்தேவி
இவை நான் படிக்க விரும்புபவை.வாங்கி படிக்காமல் இருப்பவை அதிகம் இருந்தாலும் இவை உடன் இருப்பதை நான் விரும்புகிறேன்.எந்த நேரத்திலும் இவைகளை நான் படிக்க இயலும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்