அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேராசிரியர் பசுபதி மறைந்த செய்தி கொஞ்சம் திடுக்கிட வைத்தது. பைபாஸ் சர்ஜரி என்று சொல்லி இருந்தார், ஆனால் பதிவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. இதோ வந்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

பார்த்ததில்லை, பேசியதில்லை, இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனாலும் மிகவும் வருத்தம் தந்த செய்தி. சஹிருதயர் என்றே உணர்ந்திருந்தேன். இருபது வருஷம் முன்னால் பிறந்திருந்தால் என் ரசனை ஏறக்குறைய அவரைப் போலத்தான் இருந்திருக்கும். இருபது வருஷம் பிந்திப் பிறந்திருந்தால் அவர் ரசனை என்னைப் போலத்தான் இருந்திருக்கும்.

அவரது தளத்தைப் படிப்பது எப்போதும் ஆர்வம் ஊட்டும் ஒன்று. பழைய பத்திரிகைகளின் சிறந்த ஆவணம். எங்கிருந்துதான் இத்தனை பத்திரிகைகளை பிடிக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன்.

கவிதை இயற்றிக் கலக்கு, சங்கச் சுரங்கம் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

என் போன்றவர்களுக்கு இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனால் அவருக்கு வேறு ஒரு பக்கமும் உண்டு. பசுபதி கிண்டி பொறியியல் கல்லூரி ஆரம்பித்து பிறகு சென்னை ஐஐடி, பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர். பிறகு டோரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். Professor Emeritus என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இந்த இழப்பிலிருந்து மீள ஆண்டவன் அவர் குடும்பத்துக்கு பலத்தை அருளட்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.