தமிழறிஞர் வரிசை: வ.சுப. மாணிக்கம்

மாணிக்கம் பேராசிரியர், துணைவேந்தராக இருந்தவர். பல ஆய்வுப் புத்தகங்களை எழுதி இருக்கிறார். கவிஞரும் கூட. பல நாடகங்களையும் எழுதி இருக்கிறாராம். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். 2007-இல் இவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன். அப்படி நாட்டுடமை ஆக்கப்படவில்லை என்றால் நான் இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டேன்.

சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் எனக்கானவை இல்லை. நாட்டுடமை எல்லாம் அனாவசியம் என்றுதான் தோன்றுகிறது. பெரிய பதவிகளில் இருந்தவர், என்பதனால் நாட்டுடமை ஆக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவரின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் அவரது சில புத்தகங்களையாவது, புரட்டியாவது பார்த்துவிட வேண்டும், ஏதாவது குறிப்பு எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை, அதனால்தான் இந்தப் பதிவு.

ஆனால் தமிழ் கற்றவர் என்பது தெளிவு. இவர் போன்றவர்களின் பங்களிப்பு பேச்சுகளில்தான், கற்பிப்பதில்தான் வெளிப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: